Professional Documents
Culture Documents
Thirukkural For Grade 3
Thirukkural For Grade 3
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம் (Thirukkural meaning):
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
2. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
விளக்கம் (Thirukkural meaning):
ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த
தீமையை அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்
3. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
விளக்கம் (Thirukkural meaning):
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும்,
நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
4. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
விளக்கம் (Thirukkural meaning):
இன்னா செய்தவரைத் தண்டித்தல், அவரே நாணும் படியாக
அவருக்கு நல்லுதவி செய்து விடுதலாகும்.
5. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
விளக்கம் (Thirukkural meaning):
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்றபிறகு, கற்ற கல்விக்குத்
தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
6. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
விளக்கம் (Thirukkural meaning):
உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல்
(நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக்
களைவது நட்பு.
7. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை.
விளக்கம் (Thirukkural meaning):
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு,
பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்
8. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
விளக்கம் (Thirukkural meaning):
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக்
காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப்
பெரிதும் மகிழ்வாள்.
9. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
விளக்கம் (Thirukkural meaning):
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ?
அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
10. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
விளக்கம் (Thirukkural meaning):
ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்விதான்.
அதைத்தவிர பிற உடைமைகள் எல்லாம் சிறந்தன அல்ல.
11. இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
பொருள்: மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும்
சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
பொருள்: தன் மனதிற்கும் மனசாட்சிக்கும் தெரிந்து ஒருவன் பொய் பேசினால் அவனது நெஞ்சே
அதாவது அவனுடைய மனசாட்சியே அவனை சுடும்
பொருள்; ஒரு பொருளை யார் யார் வழியாக கேட்டாலும் அப்பொருளின் உண்மை தன்மையை
உணர்வதே அறிவாகும்.
பொருள்: முகங்கள் மட்டும் மலரும்படி ஒருவருடன் நட்புக் கொள்வது என்பது உண்மையான நட்பு
ஆகாது அன்பால் உள்ளமும் மலரும் படி நட்புக் கொள்வதே உண்மையான நட்பு ஆகும்.