You are on page 1of 6

விநாயகர் பஜனைப் பாடல்கள்

கலைநிறை கணபதி சரணம் சரணம்


கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்

சிலைமலை யுடையவ சரணம் சரணம்

சிவசிவ சிவசிவ சரணம் சரணம்

உலைவறு மொருபரை சரணம் சரணம்

உமைசிவை அம்பிகை சரணம் சரணம்

அரஹர சிவசுத கணபதி சரணம்

அடியவர் வினைகெட அருள்பவ சரணம்

நினைபவர் பவமற நினைபவ சரணம்

நெடியவன் விழிதரு நெடியவ சரணம்

வலவையை மருவிய புயதர சரணம்

வடிவினி லுயரிய பெரியவ சரணம்

முறைதெரி மறையவ நிறையவ சரணம்

முடியடி தெரிவரு முதியவ சரணம்

சரணம் சரணம் கணபதி சரணம்

சரணம் சரணம் கஜமுக சரணம்

பிள்ளையார் பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ( X 2)

ஆற்றங்கரை ஓரத்திலே அரச மர நிழலிலே


வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்


பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

அவல் பொரி கடலையும் அரிசி கொழுக்கட்டையும்


கவலையின்றி தின்னுவார் கஷ்டங்களை போக்குவார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்


பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

ஆறுமுக வேலவனின் அண்ணன் பிள்ளையார்


நேரும் துன்பம் யாவுமே நீக்கி வைக்கும் பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்


பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

வேலவனின் அண்ணனாம் வேள்விக்கெல்லாம் முதல்வனாம்


வேண்டும் வரங்கள் யாவையுமே தந்தருளும் பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்


பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

வன்னி மரத்து நிழலிலே வரங்கள் தரும் பிள்ளையார்


வில்வ மரத்து நிழலிலே வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்


பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்


ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் ஆழ்த்தும் பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்


பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்.

முருகர் பஜனைப் பாடல்கள்


அம்மன் பாடல்
கற்பூர நாயகியே! கனகவல்லி!
கற்பூர நாயகியே! கனகவல்லி!
காளி மகமாயி! கருமாரி அம்மா!
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!
கற்பூர நாயகியே! கனகவல்லி!
காளி மகமாயி! கருமாரி அம்மா!

நெற்றியில் குங்குமமே நிறைய வேண்டும்!


நெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும்!
நெற்றியில் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும்!
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
பாடும் கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
கற்பூர நாயகியே! கனகவல்லி!
காளி மகமாயி! கருமாரி அம்மா!

காற்றாகி சணலாகிக் கடலாகினாய்!


கயிறாகி உயிராகி உடலாகினாய்!
காற்றாகி சணலாகிக் கடலாகினாய்!
கயிறாகி உயிராகி உடலாகினாய்!
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!
நிலமாகி பயிராகி உணவாகினாய்!
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!
போற்றாத நாளில்லை தாயே உன்னை!
போற்றாத நாளில்லை தாயே உன்னை!
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை!
கற்பூர நாயகியே! கனகவல்லி!
காளி மகமாயி! கருமாரி அம்மா!
கருமாரி அம்மா!
கருமாரி அம்மா!

தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி


தேவி கருமாரி துணை நீயே மகமாயி
தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி துணை நீயே மகமாயி

ஆயிரம் கண்கள் உடையவளே

ஆலயத்தின் தலைமகளே
ஆயிரம் கண்கள் உடையவளே
ஆலயத்தின் தலைமகளே
கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய்
காலமெல்லாம் காத்தருள்வாய்
கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய்
காலமெல்லாம் காத்தருள்வாய்

தாயே கருமாரி

எங்கள் தாயே கருமாரி

அன்னை உந்தன் சன்னதியில்


அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்
அன்னை உந்தன் சன்னதியில்
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்
அம்மா உந்தன் பொன்னடியில்
அனுதினமும் சரணடைவோம்
அம்மா உந்தன் பொன்னடியில்
அனுதினமும் சரணடைவோம்

தாயே கருமாரி

எங்கள் தாயே கருமாரி

சிங்கமுக வாகனத்தில்

சிங்கார மாரியம்மா
சிங்கமுக வாகனத்தில்
சிங்கார மாரியம்மா
வந்துவரம் தந்திடுவாய்
எங்கள் குலதெய்வம் அம்மா
வந்துவரம் தந்திடுவாய்
எங்கள் குலதெய்வம் அம்மா

தாயே கருமாரி

எங்கள் தாயே கருமாரி


தேவி கருமாரி
துணை நீயே மகமாயி
தாயே கருமாரி

எங்கள் தாயே கருமாரி

தேவி கருமாரி
துணை நீயே மகமாயி

செல்லாத்தா செல்ல மாரியாத்தா


எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா

கண்ணாத்தா உன்னைக் காணாட்டா


இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா


எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா

ஆசை தீர உன் அழகை பார்த்து மாரியாத்தா


அந்த பாசத்தோடு வந்தேன் அடி தாயே மாரியாத்தா

ஆசை தீர உன் அழகை பார்த்து மாரியாத்தா


அந்த பாசத்தோடு வந்தேன் அடி தாயே மாரியாத்தா

பொன்னும் பொருளும் தந்தருள்வாய் கருமாரியாத்தா


பொன்னும் பொருளும் தந்தருள்வாய் கருமாரியாத்தா
என்னை புகழோடு வைத்துடுவாய் ஆதி சக்தி மாதா
என்னை புகழோடு வைத்துடுவாய் ஆதி சக்தி மாதா

அம்மா… அம்மா…….

You might also like