Professional Documents
Culture Documents
Sec 3 4 Compo RED Book)
Sec 3 4 Compo RED Book)
பொருளடக்கம் - கட்டுரை
தொகுதி 1
தொகுதி 2
தொகுதி 3
1
7 ஒரு மாணவர் வாழ்க்கையில் வெற்றியடையத் தேவையான பண்புகள் யாவை 17-19
என்பதை விளக்கி எழுதுக.
8 இக்காலத் தகவல் தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மை, தீமைகளை விளக்கி 20-22
எழுதுக.
9 தொலைக்காட்சியில் நீ விரும்பிப் பார்த்த ஒரு நிகழ்ச்சியும், அது உன்னைக் 23-24
தொகுதி 4
10 உமது பள்ளி ஏற்பாடு செய்த விடுமுறை முகாமில் கலந்துகொண்டு நீவிர் அடைந்த 25-27
பயன்களையும், அதன்மூலம் நீ எவ்வாறு உம்மை மேம்படுத்திக் கொண்டாய்
என்பதையும் விளக்கி எழுதுக.
தொகுதி 5
தொகுதி 6
2
சவால்களையும் விவரித்து எழுதுக.
தொகுதி 7
தொகுதி 8
தொகுதி 9
3
27 உன் நீண்ட நாள் பழக்கமொன்று மாறுவதற்குக் காரணமாக அமைந்த 70-71
சம்பவத்தையும், அதன்மூலம் நீ கண்ட மாற்றத்தையும் விவரித்து எழுதுக.
தொகுதி 10
29 நீ செய்யாத ஒரு குற்றத்திற்காக உன் மீது பழி சுமத்தப்பட்டது. அது எவ்வாறு 75-77
நடந்தது என்றும், அதன்மூலம் நீ எவ்வாறு பாதிக்கப்பட்டாய் என்றும் விவரித்து
எழுதுக.
30 “தோல்வியே வெற்றிக்கு முதல் படி” என்பதை உணர்ந்து நீ வாழ்வில் வெற்றி 78-79
கண்ட சம்பவத்தையும், அதன்மூலம் நீ பெற்ற அனுபவத்தையும் விளக்கி எழுதுக.
தொகுதி 11
தொகுதி 12
தொகுதி 13
4
37 சாதிக்க இயலாதது எதுவுமில்லை என்று உம்முடைய நம்பிக்கையை 96-98
உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த சம்பவம் ஒன்றினை விளக்கி எழுதுக.
தொகுதி 14
தொகுதி 15
43 நட்பின் சிறப்பை உனக்கு உணர வைத்த ஒரு சம்பவம் பற்றி விளக்கி எழுதவும். 111-113
தொகுதி 16
5
கொள்வாயா? ஏன்?
தொகுதி 17
தொகுதி 18
தொகுதி 19
6
வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்கள் அவன் பேசுவதைக் கிண்டல் செய்து
அவனை மனவருத்தம் அடையச் செய்கின்றனர். இதனைக் கண்ட நீ, அயல்நாட்டு
மாணவனுக்கு ஆறுதல் கூறுவதோடு, மற்ற மாணவர்கள் தங்கள் தவற்றை
உணரும்படிச் செய்கிறாய். இச்சம்பவத்தை விவரித்து எழுதுவதோடு, அதன்மூலம் நீ
மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்த படிப்பினையையும் எழுதுக.
தொகுதி 20
7
பொருளடக்கம் – மின்னஞ்சல்
8
a. அலுவலக மின்னஞ்சல் முறையிடுதல் - வினா 169-169
10
b. உறவுமுறை மின்னஞ்சல் விளக்கம் கேட்டல் - வினா 169-169
9
தொகுதி 1
‘ஒரு விதைக்குத் தாய் என்பது மண்’ என்றால், 'தந்தை என்பது நீர்’ என்றால், அந்த விதையானது தாயால்
உயிர் பெறும், தந்தையால் வளம் பெறும். ஆனால் செழித்து வளராது. அதற்குத் தேவை நல்ல உரம். அந்த உரமாய்
இருந்து ஒரு சிறுவிதையை மாபெரும் விருட்சமாய் உருவாக்குபவர்கள்தாம் நல்ல ஆசிரியர்கள். எனவேதான்,
‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என நம் பழந்தமிழ்ப் பெரியோர்கள் ஆசிரியர்களைக் கடவுள் நிலைக்கு
உயர்த்திப் போற்றினார்கள். நமது சமூகத்தில் ஆசிரியர்களுக்கு அன்றும் இன்றும் நல்ல புகழும், நீடித்த பெயரும்
நிலைபெற்றுள்ளது. ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையும், கண்ணியம் மிக்க கல்விப் பணியுமே இதற்குக்
காரணங்கள். எனக்கு ஆசிரியர்கள் மீது எப்போதும் மிகுந்த மரியாதையும், நிறைந்த அன்பும் உண்டு. அந்த வகையில்
எனது நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த ஆசிரியர்கள் வரிசையில் என் தமிழாசிரியர் திரு தங்கபாண்டியனும் ஒருவர்.
அவர் எவ்வாறு எனது உள்ளத்தைக் கவர்ந்தார் என்பதையும், அவர் கற்பித்த பாடங்கள் எவ்வாறு எனது
உள்ளத்தைக் கவர்ந்து எனக்குச் சுவையளித்தன என்பதையும் கீழே விவரிக்க உள்ளேன்.
1
ஆசிரியர் திரு. தங்கபாண்டியன், தமிழ் இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர் என்றால் அது மிகையாகாது.
அந்தக்காலச் சங்க இலக்கியங்கள் முதல் இந்தக் கால “ஹைக்கூ” கவிதை வரை அவருக்கு அத்துப்படி.. அவரிடம்
பாடங்களில் எந்தச் சந்தேகத்தையும் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். “நாளை சொல்கிறேன்” என்னும்
வார்த்தை அவர் வாயிலிருந்து வரவே வராது. கேட்கும் ஐயங்களுக்குத் தெளிவான பதில் அளித்துச் சந்தேகங்களை
உடனுக்குடன் போக்குவார். ‘பெண்ணாசையால் விளைந்தது இராமாயணம், மண்ணாசையால் விளைந்தது மகாபாரதம்’
எனத் தமிழின் இரண்டு பெரிய காப்பியங்களை ஆசிரியர் ஒரே வரியில் சுருங்கச் சொல்லி விளக்கிடுவார். ‘பால்
நகையாள், வெண்முத்துப் பல்நகையாள், கண்ணகியாள் தன் கால் நகையால் கழுத்து நகை இழந்த கதை’ எனச்
சிலப்பதிகாரத்தைப் புதுக்கவிதை மூலம் அவர் விளக்கிய விதம் இன்னும் எனது நெஞ்சில் நிழலாடுகின்றது. அவர்,
தமிழிலக்கியப் பாடங்களை நடத்தும்போது மாணவர்களை அந்தக்காலச் சூழலுக்கே அழைத்துச் செல்வார். கதை
மாந்தர்களின் உணர்வுகளோடு மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிணையச் செய்வார். கதைகளில் அவர்கள்
சிரிக்கும்போது மாணவர்களும் சிரிப்பர், அவர்கள் சோகத்தில் அழும்போது மாணவர்களும் அழுவர். தமிழ்மொழி
மிக உயர்ந்தச் செம்மொழி என்பதையும், காலத்தைக் கடந்து இன்றும் வாழும்மொழியாக அது இருக்கிறது
என்பதையும், எனக்கு உணர்த்தியவர் அவரே! தமிழ்மொழி மீது பற்றும், மேலும் மேலும் தமிழைக் கற்கவேண்டும்
என்னும் தாளாத ஆர்வமும், அவர் மூலமே எனக்கு வந்தது என்பது உண்மையிலும் உண்மை.
என் ஆசிரியர் கல்வியில் எவ்வளவு தூரம் கரை கண்டவரோ அவ்வளவு தூரம் கனிவான உள்ளத்திலும்
கங்குகரை காணாதவர் ஆவார். என் வகுப்புத்தோழன் இரமணன் வசதி குறைந்த குடும்பத்தைச் சார்ந்தவன்.
பெரும்பாலும் காலை உணவு சாப்பிடாமலேயே பள்ளிக்கு வருவான். பள்ளி உணவகத்திலும் வாங்கிச் சாப்பிட
அவனுக்கு வசதி இருக்காது. இது யாருக்கும் தெரியாது. ஆனால், இதை அறிந்த என் ஆசிரியர் பள்ளி உணவகத்தில்
தமது செலவில் தினமும் உணவு வழங்க ஏற்பாடு செய்தார். அதனோடு நின்று விடாமல், ‘சிண்டா’ மூலம் நிரந்தர
உதவி கிடைக்க வழி வகை செய்தார். ஊனமுற்ற தம் தந்தையாருக்காக அவர் திருமணம் செய்துகொள்ளாமல்
அவர்களோடு அவர் சேர்ந்து வாழ்கின்றார். இதனை என் நண்பன் மூலம் அறிந்த நான் இந்தக் காலத்திலும் இப்படி
‘ஒரு மனிதரா?’ என வியந்து போனேன்.
திரு தங்கபாண்டியன் ஆசிரியர், சிறந்த கல்விமான், உயர்ந்த குணவான். அவர் மிகுந்த கண்டிப்பும்
நிறைந்தவர் என்பதையும் நான் குறிப்பிட விரும்புகின்றேன். அரையாண்டுத் தேர்வில் கணிதப்பாடத்தில் இன்னொரு
மாணவனைப் பார்த்து எழுத முயற்சி செய்த என் வகுப்புத் தோழி மாதவிக்கு எந்தப் பரிவும் காட்டாமல் பள்ளித்
தேர்வுக் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைத்துத் தண்டனை வாங்கித் தந்தார். மாதவி, அவருக்குப் பிடித்த
மாணவியருள் ஒருத்தி. ஆனாலும், ஒழுங்கீனத்தையும் தவறான நடத்தையையும் யார் கொண்டிருந்தாலும் அது
அவருக்கு அறவே பிடிக்காது என்பதால், அவளிடம் அவர் சிறிதும் இரக்கம் காட்டவில்லை.
ஒழுக்கக்கோட்பாடுகளையும் உயர்ந்த பண்புகளையும் மாணவர்கள் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும்
விட்டுவிடக்கூடாது என்பது, அவர் எங்களுக்குப் போதித்த முக்கிய அறிவுரைகளுள் ஒன்றாகும்.
2
பாடங்களில் மட்டுமல்லாது, இணைப்பாட நடவடிக்கைகளிலும் அவர் மாணவர்களுக்குத் தூணாக இருந்து
தோள் கொடுப்பார். நாடகம், நடனம், பாட்டு, விவாதப்போட்டி முதலிய எல்லாப் போட்டிகளிலும் மாணவர்கள்
பங்கெடுக்க அவர் ஊக்குவிப்பார். தாமே, குறிப்புகளும் பயிற்சிகளும் கொடுத்து மாணவர்களைப் பயிற்றுவிப்பார்.
பாடங்கள் முடிந்து வீடு திரும்பாமல் மாலை நேரங்களில் மாணவர்களுடன் இருந்து அவர்கள் போட்டிகளில்
வெற்றிபெற உதவி செய்வார். நாங்கள் வெறும் ஏட்டுச்சுரைக்காயாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்பதில் முழு
அக்கறை கொண்ட எங்கள் ஆசிரியர், விளையாட்டுகளிலும் நாங்கள் இமயத்தைத் தொட வேண்டும் என்பதிலும்
கண்ணும் கருத்துமாக இருந்தார் என்றால் அது மிகையாகாது.
‘தோல்வி என்பது வெற்றியின் முதல்படி’ இதுதான் ஆசிரியர் தங்கபாண்டியன் எங்களுக்கு அடிக்கடி கூறும்
பொன்மொழி. நாங்கள் தேர்விலோ அல்லது விளையாட்டுப் போட்டியிலோ, எதில் தோல்வி கண்டாலும் அதற்கான
காரணத்தை ஆராய வேண்டுமே தவிர, மூலையில் உட்கார்ந்து அழக்கூடாது என்னும் அவரது வாசகம் ஒவ்வொரு
முறையும் நாங்கள் தோல்வி காணும்போது எங்கள் காதுகளில் ஒலிக்கும். ‘முயற்சியை விடாதவன் ஒருநாள்
ஜெயிப்பான், முயற்சி செய்யாதவன் என்றுமே தோற்பான்’ என்று கூறி அவர் எங்களைத் தட்டிக்கொடுப்பார். அவர்
கூறியதைப் பின்பற்றியதால் இன்று எங்களில் பலர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். எங்கள் ஆசிரியரைக்
காணும்போது,
அருஞ்சொற்பொருள்
3
விருட்சமாய் மரமாய் நிரந்தர நிலையான
அனைத்தும் அறிந்த
அத்துப்படி கோட்பாடுகளையும் கொள்கைகளையும்
நிலை
நினைவுக்கு
நிழலாடுகின்றது இமயத்தை உயர்நிலையை
வருகின்றது
முன்னுரை விளக்கம்
4
ஏற்படவும் தமிழ்மொழி விழாக்கள் அவசியம் தேவை
கருத்து 1
கருத்து 2
கருத்து 3
கருத்து 4
5
கொண்டவர்களாக இருப்பதால், இணையம் மூலம் தமிழுக்காகத்
தகவல்களைச் சேர்ப்பது அவர்களை வெகுவாகக் கவரும்
● தமிழ்த் தட்டச்சுச் செய்யும் வாய்ப்பும் தமிழ் இணையப் பக்கங்களைத்
தெரிந்து கொள்ளும் வாய்ப்பு
● போட்டிகளைப் பள்ளி, கல்லூரி சார்பாக நடத்தும்போது தமிழிலேயே
அறிவிப்பு, பேச்சு முதலியனவற்றைச் செய்வதால் ஏற்படும் மொழிப்
புழக்கம்
முடிவுரை
● ‘தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ - பாரதிதாசன்
● ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ - பாரதியார்
● ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ - பாரதியார்
● ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு’ - பாரதிதாசன்
● ‘எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!’ - மனோன்மணியம் சுந்தரனார்
● ‘தமிழன் என்றோர் இனம் உண்டு! தனியே அவர்க்கு ஒரு குணம் உண்டு!
அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்’ – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்
பிள்ளை
● ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
அருஞ்சொற்பொருள்
புழக்கம் பயன்பாடு
6
முரைசாரா முறையான மதீப்பீட்டைச் சாராத
அகண்ட விரிந்த
மாண்பு சிறப்பு
தரவுகளை தகவல்களை
முன்னுரை
➢ இரத்தத் தானம் நடவடிக்கை, நிதி திரட்டும் நடவடிக்கை போன்ற தன்னலம் பாராத செயல்களில் அதிகமான
இளையர்கள் ஈடுபடுகிறார்கள்
7
அஞ்சலியின்போது மழை வெயில் என்றும் பாராது காவல் படையினரும், தொண்டூழியர்களும் நாள்கணக்கில்
பணிபுரிந்தனர்)
முடிவுரை
➢ ‘தனிமரம் தோப்பாகாது’
➢ ‘உலகில் எல்லையற்றது ஒன்று உண்டு என்றால், அது பிறரிடம் அன்பு செலுத்துவதே ஆகும்’
அருஞ்சொற்பொருள்
மூப்படைந்து வயதாகி
பேணி காக்க
பணி வேலை
தொகுதி 2
9
பெற்றோர்கள், தமது தளராத முயற்சியால் தம் பிள்ளைகளை நல்லவர்களாகவும் சமூகத்தின் உயர்தரக்
குடிமக்களாகவும் உருவாக்க வேண்டும். இக்கடமை, முழுக்க முழுக்கப் பெற்றோர்களையே சார்ந்துள்ளது.
பத்து மாதம் சுமந்த தாயால் மட்டுமே, தாய்ப்பாலுடன் பாசத்தையும் பரிவையும் நற்பண்புகளையும் ஒருசேர
ஊட்டமுடியும். ஒரு தந்தையால் மட்டுமே, குழந்தைக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் பாசத்தோடு
அளிக்க முடியும். இந்த உண்மையைப் புரிந்து கொண்ட பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகளே வாழ்வில்
உயர்நிலையை அடைகின்றனர்.
என்று திருவள்ளுவர் கூறியது போல், ஒழுக்கமே ஒரு மனிதனின் உயிராக இருக்கிறது. எனவே, ஒழுக்கத்தில் சிறந்த
குழந்தைகளை உருவாக்கக் கட்டுப்பாடுகள் அவசியமாகின்றன. பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே
கட்டுப்பாடுகளையும், நல்ல கோட்பாடுகளையும் வலியுறுத்திக் குழந்தைகளைத் தங்களின் நேரடிக் கண்காணிப்பில்
கண்டிப்புடன் வளர்க்க வேண்டும். இப்படிப்பட்ட பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகளே, வளர்ந்து
பெரியவர்கள் ஆகும்போது மாபெரும் சாதனைகள் புரிகின்றனர். மாபெரும் சபைகளில் மாலைகள்
அணிவிக்கப்பெற்று மாற்றுக் குறையாத தங்கங்கள் என்று போற்றப்படுகின்றனர். இவ்வாறு நல்லொழுக்கம்,
நற்பண்புகள் முதலியன யாவற்றிற்கும் பெற்றோர்களே காரணமாக அமைகின்றனர்.
10
அதிகமான சுதந்திரமும், அதிகமான கட்டுப்பாடுகளும் பிள்ளைகளை மிகவும் பாதிக்கின்றன என்பதைப்
பெற்றோர்கள் உணர வேண்டும். பெற்றோர்கள் அதிகக் கண்டிப்புக் காட்டும்போது பிள்ளைகள் தத்தம் வேலைகளை
வெறும் கடமைக்காகவே செய்வர். அவற்றில் முழுமையும் முழு ஈடுபாடும் இருக்காது. சிறு பிள்ளைகளாக
இருக்கும்போது தாய்தந்தையர் கண்டிப்புக்குப் பயந்து அவர்கள் சொல்லைத் தலைமேற் கொண்டிருக்கலாம். ஆனால்,
அவர்களே பெரியவர்களாக வளர்ந்த பிறகு, வேலை பார்த்துத் தமது சொந்தக் கால்களில் நிற்கும்போது
பெற்றோர்களை அலட்சியப்படுத்துவர். தங்களின் திருமணம், வேலை, எதிர்காலம் முதலியவற்றில் பெற்றோர்களை
மதிக்காமல் அவர்களே முடிவெடுப்பர். ஓர் அணையில் அளவுக்கு அதிகமாகத் தண்ணீரைத் தேக்கி வைத்தால்
எவ்வாறு அணை கடந்த வெள்ளமாக அது அணையை உடைத்துக்கொண்டு வெளியேறுகிறதோ, அவ்வாறே சில
பிள்ளைகள் பெற்றோர்களின் அதிகமான கட்டுப்பாடுகளைத் தாங்க முடியாமல் தீய வழிகளில் சென்று தங்கள்
வாழ்க்கையையே அழித்துக் கொள்கின்றனர்.
நமது மூத்த தலைமுறையினருக்கு ஐந்து, ஆறு, ஏன் பத்து, பன்னிரெண்டு பிள்ளைகள் வரை
இருந்திருக்கிறார்கள். ஆனால், இக்காலப் பெற்றோர்களோ ‘ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு’ என்று வீட்டுக்கு ஒரு
பிள்ளையையோ அல்லது இரண்டு பிள்ளைகளையோ வைத்திருக்கிறார்கள். இக்குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டி
வளர்க்கும் பெற்றோர்கள், அவர்களுக்குச் செல்லம் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாகவே சுதந்திரம்
கொடுக்கிறார்கள். குறிப்பாக, அவர்களின் இணையப்பயன்பாடு, இணைய உரையாடல், கைத்தொலைபேசியின்
பயன்பாடு ஆகியவற்றைக் கண்காணிக்காமல் இருக்கிறார்கள். இதனைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ளும்
பிள்ளைகள் இணையத்தின் வழி தகாத உறவுகளை வளர்த்துக்கொண்டு, இறுதியில் பேராபத்தில் சிக்கிக்கொண்டோ,
மீளமுடியாத துன்ப வலையில் மாட்டிக்கொண்டோ பரிதவிக்கிறார்கள். பெற்றோர்கள் ஓரளவுக்குத் தங்கள்
பிள்ளைகளுக்கு இடங்கொடுக்கலாம். ஆனால், அது கட்டுப்படுத்தப்பட்ட, கண்காணிப்புள்ள சுதந்திரமாக இருப்பது
பாதுகாப்பானது.
பிறர் சொல்லிக் கற்பதைவிட, தாங்கள் சுயமாகப் பார்த்துக் கற்பதே பிள்ளைகளின் மனத்தில் ஆழமாகப்
பதிகிறது என்று உளவியலாளர்கள் இயம்பியுள்ளனர். எனவே, பிள்ளைகளின் கல்வியின் மீது அக்கறை, ஒழுக்கக்
கோட்பாடுகளை ஊட்டி வளர்ப்பது, அன்பும் அரவணைப்பும் காட்டுவது, கட்டுப்பாட்டையும் சுதந்திரத்தையும் சமமாக
அளிப்பது என்றெல்லாம் திட்டமிட்டுப் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பது மட்டும் போதாது. அவர்கள்
குடும்பத்தில் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும். கல்வி, ஒழுக்கம், பண்புகள்
முதலியனவற்றில் பெற்றோர்கள் சிறந்து விளங்க வேண்டும். கடமை உணர்வோடு அவர்கள் குடும்பத்தின் மூத்த
உறுப்பினர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். பெற்றோர் குழந்தைகள் முன் சண்டையிட்டுக் கொள்ளாமல்
புரிந்துணர்வுடன் நடந்து கொண்டு குடும்பப் பண்புகளைக் காக்க வேண்டும். ‘அவர்’ மாதிரி தான் ஆகவேண்டும்,
‘இவர்’ மாதிரி தான் ஆகவேண்டும் என்றெல்லாம் பிள்ளைகள் கனவுகாணாமல் எதிர்காலத்தில் தாங்கள், தம் தாய்
11
தந்தையர் போல ஆகவேண்டும் என்று பிள்ளைகளைக் கனவு காண வைக்கவேண்டும். இப்படிப் பெற்றோர்கள்
வாழ்ந்தால்தான் பிள்ளைகளின் வாழ்க்கை இலட்சிய வாழ்க்கையாக இருக்கும்.
அருஞ்சொற்பொருள்
12
பயிற்சி வினா 5 மற்றும் 6
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.
5. அண்மையில் நடந்த இயற்கைப் பேரிடர்க்காக உன் பள்ளி ஏற்பாடு செய்திருந்த நிதி திரட்டும்
நிகழ்ச்சியில் நீ கலந்து கொண்டதன் மூலம் உனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்கவும்.
முன்னுரை விளக்கம்
கருத்து 1 விரிவாக்கம்
கருத்து 2 விரிவாக்கம்
13
● சிலர் முகம் சுளித்தார்கள்
● பெரும்பாலானோர் உதவினார்கள்
கருத்து 3 விரிவாக்கம்
கருத்து 4 விரிவாக்கம்
14
● தனக்குத் தனக்கு என்று ஒதுக்காதே
செய்த தர்மம் தலைகாக்கும் மறக்காதே
● அறம் செய விரும்பு
● ஐயம் இட்டு உண்
● தர்மம் தலைகாக்கும்
● உப்பிட்டவரை உள்ளளவும் நினை
● எடுப்பார் மழுவைத் தடுப்பார் புலியை கொடுப்பார் அருமை
● அணைகடந்த வெள்ளம் போல்
● காட்டில் நிலவாய்க் கடலில் மழையாய் - பிறந்தால் யாருக்கு லாபம்
பகையில் துணையாய்ப் பசியில் உணவாய் - இருந்தால் ஊருக்கு லாபம்
● மழைபெய்வது பொதுநலம் - குடை பிடிப்பது சுயநலம்
● வலது கை கொடுப்பதை இடது கை அறியாது
அருஞ்சொற்பொருள்
சீர்ப்படுத்த சரிப்படுத்த
நிவாரண சரிசெய்ய/குணப்படுத்த
அனலில் நெருப்பில்
ஜகத்தினை உலகத்தினை
மழு கோடாரி
15
6. வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் உள்ள உன் நண்பனுக்கு நீ செய்த உதவி.
முன்னுரை
இடையுரை
முடிவுரை
16
➢ நண்பன் சிந்தித்தான்
➢ தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தினான்
➢ வாழ்வில் தன்னை மேம்படுத்திக்கொள்ளப் போவதாக உறுதி அளித்தான்
➢ வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்தான்
➢ நன்றி கூறினான்
இனிய தொடர்கள்
அருஞ்சொற்பொருள்
சரித்திரம் வரலாறு
17
மேம்படுத்தி உயர்த்தி
இடுக்கண் துன்பம்
தொகுதி 3
என்று கவிஞர் கண்ணதாசன் மனித வாழ்வின் இலக்கு பற்றித் தமது கவிதையில் கூறுவார். ‘பிறந்தோம் வாழ்ந்தோம்
இறந்தோம்’ என்றில்லாமல் ‘சிறந்தோம்’ என்று வாழ்வதே மனித வாழ்வின் குறிக்கோள் ஆகும். உலகில்
எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள்; எத்தனையோ மனிதர்கள் இறக்கிறார்கள். ஆனால், அத்தனை மனிதர்களும்
வெற்றி பெற்ற மனிதர்களாக வாழ்ந்ததில்லை. அகிலத்தில் நல்ல மனிதனாக வாழ்பவன் வானகத்தில் உள்ள
தெய்வத்தின் வரிசையில் வைக்கப்படுவான் என்றார் வள்ளுவர்.
18
பெரும்பாலோர் அதை அடைவதற்கு எவ்வித முயற்சியும் செய்வதில்லை. ஏனென்றால், மந்திரத்தால் மாங்காய்
விழுந்துவிடும் என்னும் குருட்டு நம்பிக்கை அவர்களுக்கு!
இளமைப் பருவம் நமக்கு இனிய பருவம். இந்தப் பருவத்தில் நாம் திசை மாறிச் சென்றுவிட இன்று
எத்தனையோ புறச்சூழல்கள் நமது வாழ்வை அழிக்கக் காத்துக் கிடப்பதால் நாம் விளக்கில் விழும் விட்டில்
பூச்சிகளைப் போல நம்மை அழித்துக் கொள்ளக்கூடாது. அதிலும், மாணவப்பருவம் நமக்கு மிக முக்கியமானது.
இப்பருவம்தான் நமக்கு எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைகின்றது. எனவே, இப்பருவத்தை வீணாக்காது
கடமையும் கண்ணியமும் கொண்டு வாழ்க்கையில் வெற்றியடையத் தேவையான பண்புகளைக் கைக்கொள்ள
வேண்டும். அப்பண்புகள் மூலம் வாழ்வில் வெற்றியடைந்து கலங்கரை விளக்காய் ஒளி வீச வேண்டும்.
என்னும் குறளில், தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த வேண்டும் என விரும்புவோர், சோம்பலை
ஒழித்து உழைக்க முயல வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். எதனையும் நாளை செய்யலாம் என்பது இன்று
மாணவர்கள் பலரின் ‘தாரக மந்திரமாக’ உள்ளது. இது மிகவும் தவறு. எதனையும் ஆறப்போடாமல் அன்றன்றைய
பாடங்களை, வேலைகளை அன்றன்றே செய்தால் ஆண்டிறுதியில் அல்லல்படாமல் அமைதியான முறையில்
தேர்வுகளை எழுதி, அதிக மதிப்பெண்கள் பெறலாம். இந்தத் தளராத உழைப்பு அவர்களின் எதிர்கால வாழ்க்கையை
ஒளிமயமாக்கும். ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’?
‘கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு’ என்ற பழமொழியை நாம் நம் பாலர் பருவத்தில்
கற்றிருப்போம். இப்பழமொழி கல்விக்கு எல்லையே இல்லை என்னும் உண்மையை நமக்கு உணர்த்துகிறது.
அதனுடன், நாம் வாழும் இந்தக் காலம் சவால்களும் போட்டிகளும் நிறைந்த காலமாக விளங்குகின்றது.
போட்டித்திறன்களில் வெல்பவர்கள் மட்டுமே வாழ்க்கைப் பயணத்தில் வெல்ல முடியும், எனவே, மாணவர்கள்
தாங்கள் கற்ற கல்வியும், பெற்ற திறன்களும் போதும் என்று வாளா இருந்து விடக்கூடாது. ‘வாழ்நாள் கல்வி’
என்னும் சிங்கப்பூரின் கொள்கைக்கு ஏற்ப, மாறிவரும் சூழலுக்கேற்ப, மாணவர்கள் மேலும்மேலும் புதிதாகக் கற்க
வேண்டும். சலிப்பின்றிப் புதிய திறன்களைக் கற்று, அதற்கேற்பத் தங்களைத் தயார்செய்து கொள்ள வேண்டும்.
இன்றைய தொழில்நுட்பம் நாளை இருப்பதில்லை. அப்படியிருக்கும்போது மாணவர்கள் புதிய விஷயங்களைப்
படித்து, தங்களை ஒவ்வொரு நாளும் மேம்படுத்திக்கொண்டால்தான் காலத்திற்கு ஏற்ற மனிதர்களாக அவர்களால்
வாழ முடியும், வாழ்க்கையில் உயர்நிலையை அடைய முடியும்.
‘வெற்றி என்பது எட்டாத கனியன்று, அதைப் பார்த்து ஏங்குவதற்கு.’ அது கிடைக்கக்கூடிய ஒன்றுதான்.
ஆனால், அது கிட்ட வேண்டுமென்றால் அதற்குத் தேவையான பண்புகளை மாணவர்களாகிய நாம் பெற்றிருக்க
வேண்டும். ‘படித்தவனைவிடப் பண்புள்ளவனையே இந்த உலகம் போற்றும்’ என்பது பொன்மொழி. இந்தப்
பொன்மொழிக்கேற்ப வாழ்க்கைக்கு வளமூட்டும் பண்புகளைப் பெற்றிருப்பவன் எந்நாளும் துவண்டுபோகமாட்டான்.
அப்பண்புகளை நாம் பெற்றுவிட்டால் மாணவர் பருவத்தில் மட்டுமல்ல, என்றுமே வெற்றி நம் பக்கம்தான்!
அருஞ்சொற்பொருள்
நீராட்டில் குளிப்பாட்டுதலில்
அகிலத்தில் உலகத்தில்
20
பழுதுபோய் வீணாகி
விளிம்புவரை இறுதிவரை
மடியை சோம்பலை
புகுத்துகிறது செலுத்துகிறது
முன்னுரை விளக்கம்
● வாழ்க்கையைச் சுலபமாக்குகிறது
● ஆதிக்கம் செய்கிறது
கருத்து 1 விரிவாக்கம்
கருத்து 2 விரிவாக்கம்
கருத்து 3 விரிவாக்கம்
கருத்து 4 விரிவாக்கம்
22
முடிவுரை ● தகவல் தொழில்நுட்பம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது
● குடும்பப் பிணைப்பு குறைகிறது
● இரண்டுக்கும் வகைசெய்தல் அவசியம்
● பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும்
அருஞ்சொற்பொருள்
அலுவல் வேலை
23
கண்காணிப்புப்
Surveillance camera
புகைப்படக் கருவிகள்
இணையத்தில் மக்களை
சமூக வலைத்தளம் இணைக்கும் வலைப்பக்கங்கள்
(social network)
நம்பகத்தன்மை நம்பிக்கை
கழிதலும் நீக்குதலும்
கோலம் வேடம்
24
9. தொலைக்காட்சியில் நீ விரும்பிப் பார்த்த ஒரு நிகழ்ச்சியும், அது உன்னைக் கவர்ந்ததற்கான
காரணங்களையும் விளக்கி எழுதுக.
முன்னுரை
இடையுரை
25
➢ பள்ளிப் பாடங்களுக்கு உதவும்
➢ கட்டுரைகளைச் சிறப்பாக எழுதலாம்
➢ வாய்மொழிப் பாடங்களில் வளமூட்டும் கருத்துகளைப் பேசலாம்
➢ நேரத்தைப் பயனுள்ள வழியில் செலவிடலாம்
➢ குடும்பத்தோடு இணைந்து தொலைக்காட்சி பார்த்தல்
➢ நிகழ்ச்சியைப் பற்றிப் பெற்றோருடன் கலந்துரையாடி, குடும்பப் பிணைப்பை இறுக்கமாக்கலாம்
முடிவுரை
இனிய தொடர்கள்
26
அருஞ்சொற்பொருள்
கானல் பொய்
அரங்கம் மேடை
இமைகொட்டாமல் கண்மூடாமல்
தொகுதி 4
10. உமது பள்ளி ஏற்பாடு செய்த விடுமுறை முகாமில் கலந்துகொண்டு நீவிர் அடைந்த
பயன்களையும் அதன்மூலம், நீ எவ்வாறு உம்மை மேம்படுத்திக் கொண்டாய் என்பதையும்
விளக்கி எழுதுக.
விடுமுறை நாட்கள் என்பன இப்போதெல்லாம் நேரம் காலம் தெரியாமல் நீண்ட நேரம் உறங்கும் நாட்கள்
என்றாகிவிட்டன. நானும் முன்பெல்லாம் இப்படியே, நல்ல பொழுதை எல்லாம் நாளும் உறங்கியே கழித்தேன்.
ஆனால், இந்த ஆண்டு ஜூன் விடுமுறையில் எனது பள்ளி ஏற்பாடு செய்திருந்த தமிழ்மொழி முகாம் எனது அறிவுக்
கண்களைத் திறந்து விட்டது. விடுமுறை நாட்கள் நமக்கு விடுதலை நாட்கள் அல்ல என்பதையும், ‘காலம் பொன்
27
போன்றது’ என்பது எவ்வாறு என்பதையும், ஒவ்வொரு மனிதரிடமும் மறைந்து கிடக்கும் மாபெரும் திறன்களை
எவ்வாறு உணர்ந்து அவர்கள், அதை மேம்படுத்தலாம் என்பதையும் அந்த மொழி முகாம் எனக்குக் கற்பித்தது.
‘இறைவனைப் பற்றிப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!’ என்றார் ஓர் அடியவர். அதைப்போலப் பயனுள்ள
வழிகளில் பொழுதைக் கழிக்காத ஒவ்வொரு நாளும் நமக்குப் பிறவா நாளே என்பதை நாம் உணர வேண்டும்.
எனது பள்ளியின் தமிழ்மன்றம், சென்ற ஜூன் விடுமுறையில் இரண்டு நாட்கள் தொடர் நடவடிக்கைகள்
நிறைந்த மொழி முகாம் ஒன்றைப் பள்ளியில் நடத்தியது. எனது பள்ளித் தமிழாசிரியர்கள் கண்காணிப்பில், தமிழ்
மன்ற நிர்வாகக் குழு மாணவர்கள் இதை நடத்தினர். விடுமுறை நாட்களில் இரண்டு நாட்கள் வீணாகிப்
போகின்றனவே என்று வேண்டா வெறுப்பாகத்தான் நான் அம்முகாமில் கலந்து கொண்டேன். ஆனால், நான்
அம்முகாமில் கலந்து கொண்ட பிறகே அது எத்தகைய பயனுள்ள முகாம் என்பதைப் புரிந்துகொண்டேன்.
தமிழ்மொழி முகாம் என்பதால் பங்கு பெற்ற மாணவர்கள் அனைவரும் தமிழ் பயிலும் இந்திய மாணவர்கள்
என்பதும், இந்திய மாணவர்களுடன் மட்டுமே இரண்டு நாட்கள் ஓர் இரவு உட்பட ஒன்றாக இருக்க வேண்டும்
என்பதும் எனக்குப் புது அனுபவமாக இருந்தது. அனைவரும் தமிழில்தான் உரையாட வேண்டும் என்பதும்,
தமிழ்மொழி சார்ந்த நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடவேண்டும் என்பதும் எனக்கு மலைப்பாக இருந்தது. ஆனால்,
நேரம் செல்லச் செல்ல, ‘தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று
பாவேந்தர் பாரதிதாசன் பாடிய பாடல் வரிகளின் உண்மை எனக்குப் புலப்பட்டது. ஆம்! தமிழ்மொழி முகாமின்
நடவடிக்கைகளும், மொழி விளையாட்டுகளும் என்னை வேறொரு உலகிற்கு இழுத்துச் சென்றுவிட்டன.
‘பணம் இல்லாமல் இந்த உலகம் இருக்கலாம், ஆனால், இணையம் இல்லாமல் இந்த உலகம் இல்லை’ என்ற
புதுமொழி இப்போது வந்துவிட்டது. இணையம் என்றால் ஆங்கிலம் மட்டுமே என்று நான் நினைத்திருந்தேன்.
ஆனால், இணையத்தில் ஏராளமான தமிழ் வலைப்பூக்கள், தமிழ் மின் புத்தகங்கள், வலைப்பக்கங்கள், தமிழ்
மின்னஞ்சல், தமிழ் இணைய உரையாடல், தமிழ் ஆய்வுச்செய்திகள் என ஏராளமானவை கொட்டிக் கிடக்கின்றன
என்பதை நான் அந்த முகாமில்தான் தெரிந்துகொண்டேன். எங்களுக்கு அந்தமொழி முகாமில் தமிழ் இணையப்
பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழில் தகவல் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வதற்கும் அதில் திறன் பெறுவதற்கும்
இந்த மொழிமுகாம் பெரும் உதவியாக இருந்தது. இணைய வகுப்புகள் மூலம் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள
பள்ளி ஒன்றின் வகுப்பறைப் பாடங்களை நான் பார்க்கும் வாய்ப்பும் அங்கு உள்ள மாணவர்களுடன் உரையாடும்
வாய்ப்பும் பெற்று நான் உலகை ஒரு புதிய கோணத்தில் பார்க்கும் பார்வையைப் பெற்றேன்.
28
அடுத்து ‘நீயா? நானா?’ என்னும் தலைப்பில் ஒரு விவாதப் போட்டி நடைபெற்றது. தமிழ் ஆசிரியர்
நடுவராகச் செயல்பட்டார். தமிழில் பேசுவதற்கு ஓடி ஒளியும் மாணவர்கள் கூட ஆர்வத்துடன் பங்கெடுத்ததைக்
கண்டு நான் வியப்பில் ஆழ்ந்தேன். செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். செந்தமிழில் சொந்தமாகவும் பைந்தமிழில்
சரளமாகவும் மேடை ஏறிப் பேச வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது, என்னுள் மறைந்து கிடந்த மாபெரும் ஆற்றல்
எனக்கு அப்போது தான் புரிந்தது.
‘கல்லெல்லாம் சிலை செய்தான் பல்லவ ராஜா’ என்று பாடப் புத்தகத்தில் பல்லவ மன்னர்களைப் பற்றியும்
அவர்களின் கைவண்ணத்தைப் பற்றியும் படித்திருக்கிறேன். அதனை நேரில் கண்டபோது மலைத்து நின்றேன். 7 ஆம்
நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் கட்டிய மாமல்லபுரத்திற்குச் செல்லும் வாய்ப்பு இந்த முகாமில் கிடைத்தது.
தொழில்நுட்பமும், மின்சாரமும், பெரிய இயந்திரங்களும் இல்லாத அக்காலத்திலேயே உயரமான சிற்பங்களையும்,
கோயில்களையும் எழுப்பி, அவற்றுக்குக் கலைவண்ணம் கொடுத்து, மக்கள் வியக்கும் அளவிற்குச் செய்துள்ளனர் நம்
மன்னர்கள். இவற்றையெல்லாம் படித்தபொழுது எவ்வித உணர்வும் எனக்கு ஏற்படவில்லை. ஆனால் நேரில்
கண்டபோது நம் தமிழர்களின் திறமையையும், அவர்களின் உழைப்பையும், விடாமுயற்சியையும், கற்பனைத்
திறனையும், கலையார்வத்தையும் என்னால் உணர முடிந்தது. கல்லிலே கலைவண்ணம் கண்டவர்கள் நம்
முன்னோர்கள். அவர்கள்வழிச் சென்று நானும் இனி என் கலையார்வத்தை வளர்த்துக்கொள்ள முடிவெடுத்தேன்.
இவ்வாறு, இரண்டு நாட்கள் சென்றதே தெரியாமல் தமிழ்மொழி முகாம் இனிமையாகக் கழிந்தது. தமிழ்
மொழியின் பெருமை, அதன் தொன்மை, குறையாத செழுமை முதலியவற்றை அறிந்ததோடு தமிழ் உணர்வு, தமிழில்
தொழில் நுட்ப அறிவு, தமிழ்க் கலை, கலாச்சாரம் குறித்த புதிய பார்வை, ஒற்றுமை உணர்வு, புத்தாக்கத் திறன்
ஆகியனவற்றையும் நான் அம்முகாமில் பெற்றேன். இனி, சிங்கப்பூர் திரும்பியதும் தமிழை வளர்ப்பதற்கு என்னால்
முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறேன். ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே
முழங்கு’ என்னும் பாவேந்தர் வரிகளின் உண்மை அனுபவத்தை உணர்ந்தேன்.
அருஞ்சொற்பொருள்
வேண்டா விருப்பம்
பாரம்பரியத்தை மரபினை
வெறுப்பாகத்தான் இல்லாமல்தான்
29
பொய்க்கால் குதிரை
நேர் சமம் புரவியாட்டம்
ஆட்டம்
முன்னுரை விளக்கம்
கருத்து 1 விரிவாக்கம்
30
● வகுப்பு முடிந்த பிறகு விளக்கு/மின்விசிறி ஆகியவற்றை
நிறுத்துதல்
கருத்து 2 விரிவாக்கம்
கருத்து 3 விரிவாக்கம்
கருத்து 4 விரிவாக்கம்
31
● வசதிகள் எல்லாருக்கும் பயனளிக்க வேண்டும்
● பழுதுபட்டுவிட்டால் யாருக்கும் பயன் அளிக்காது
● பொறுப்புள்ள மாணவர்களாக நடந்துகொள்ளுதல் அவசியம்
● நம்முடையது இல்லை என்ற மனப்பான்மையைப் போக்க
வேண்டும்
32
கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:
● கெடுப்பதூம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
● கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு
● புதியதோர் உலகைப் படைப்போம்
● நான் என்று சொல்லாதே, நாம் என்று சொல்
● பகிர்ந்துண்டு வாழ்
அருஞ்சொற்பொருள்
இன்றியமையாதது முக்கியம்
பழுதாக்க சீர்குலைக்க
33
12. இக்கால மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் உள்ள பிணைப்பை எவ்வாறு மேம்படுத்தலாம்
என்பதையும், அதனால் ஏற்படும் பயன்களையும் விவரித்து எழுதுக.
முன்னுரை
இடையுரை
முடிவுரை
இனிய தொடர்கள்
➢ எழுத்தறிவித்தவன் இறைவனாகும்
➢ மாதா, பிதா, குரு, தெய்வம்
➢ கையைப் பிடித்து, சிந்தனையை விரித்து, இதயத்தைத் தொடுபவரே நல்லாசிரியர்
➢ கல்விமுறை மாறலாம், ஆனால் கல்வி என்றும் மாறாது
➢ ஆசிரியர் என்பவர் இரத்த பந்தம் இல்லாத அன்னை
அருஞ்சொற்பொருள்
இடர்ப்பாடுகளை துன்பங்களை
அப்பாலும் தாண்டி
வைபவங்களில் விழாக்களில்
35
தொகுதி 5
சென்னை குடிசைப் பகுதி ஒன்றில் வசிக்கும் சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை ஆகிய இரு
சிறுவர்களுக்கும் பீட்சா சாப்பிடவேண்டும் என்பது நெடுநாளைய ஆசை. ஆனால், ஒரு பீட்சாவின் விலை ரூபாய்
முந்நூறு. ஏழைச் சிறுவர்கள் அவ்வளவு காசுக்கு எங்கே போவார்கள்? ரயில் பாதையில் சிந்தும் நிலக்கரியைச் சேர்த்து
எடைக்குப் போட்டுக் காசு சேர்க்கிறார்கள். சேர்த்த காசை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு அருகில் புதிதாக வந்துள்ள
பீட்சா கடைக்குப் போகிறார்கள். ஆனால், பரட்டைத் தலையும் அழுக்கு உடையும் கொண்ட இவர்களைப் பார்த்த
வாயில் காவலாளி இவர்களை விரட்டியடிக்கிறான். சரி, உடைதானே பிரச்சினை என்று அதற்கும் காசு சேர்த்துக்
கொண்டு இரண்டு புதிய உடைகள் வாங்கி அணிந்து கொண்டு பீட்சா சாப்பிடப் போகிறார்கள். ஆனால், காவலாளி
அவர்களை உள்ளே விட மறுத்து அடித்துத் துரத்துகின்றான். கடைசியில், அவர்களின் பீட்சா கனவு எப்படி
நனவாகியது என்பது தான் திரைப்படத்தின் உச்சக்கட்டமாகும்.
36
போனேன். விருந்து, உணவகம், வீடு முதலியனவற்றில் பரிமாறப்படும் உணவு வகைகளை அரைகுறையாக உண்டு
மீதியை நாம் குப்பைத்தொட்டியில் வீசி எறிகின்றோம். ஆனால், இந்தத் திரைப்படத்தில் இரண்டு சிறுவர்கள்
பீட்சாவுக்காகத் தங்கள் வாழ்வையே பணயம் வைக்கின்றனர். ‘வெயிலுக்கு வந்தால்தான் நிழலின் அருமை தெரியும்’
என்பார்கள். அதைப்போல, இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பிறகுதான் ஏழைகளின் வாழ்க்கைச் சூழலும்,
தினந்தோறும் ஒரு வேளை உணவிற்காக அவர்கள் படும் வேதனையும் எனக்கு நன்கு புரிந்தது.
‘கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்றார் ஔவையார்.
அதைப்போல, மிகச்சிறிய இளம் வயதில் இந்தப் படத்தின் இரு கதாநாயகச் சிறுவர்கள் வறுமையில் சிக்குண்டு
அல்லல்படும் காட்சிகள் எனது கண்களில் நீரை வரவழைத்தன. பெற்ற தந்தை சிறையில் வாட, தாயோ கூலி வேலை
செய்கிறார். பள்ளிக்குச் செல்லும் பருவத்தில் இந்தச் சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாகக் கூலி வேலை
செய்கின்றனர். அடிப்படை வசதிகள் சிறிதும் இல்லாத, குப்பை நிறைந்த கூவம் ஆற்றோரத்தில் வாழும்
அச்சிறுவர்களின் வாழ்க்கை இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான ஏழை மக்களின் மிக மோசமான வாழ்க்கைச்
சூழலுக்கு ஓர் உதாரணம் என்பதை உணர்ந்தேன். ஆனால், இத்தகைய மோசமான வாழ்க்கைச் சூழலிலும்
அவர்களுக்கிடையே நிலவும் குடும்பப் பிணைப்பும் பாச உணர்வும் என்னைப் பரவசத்தில் ஆழ்த்தின. பிள்ளைகள்
மீது உயிரையே வைத்திருக்கும் தாய், மகன்களைப் பார்க்கத் துடிக்கும் தந்தை, பீட்சாவைப்போல் தோசை சுட்டு
அதை ஊட்டும் பாட்டி, பிறருக்கு உதவும் அக்கம்பக்கம், சகோதர பாசம் என்று வாழ்க்கையின் உயர்பண்புகளை
இந்த ஓலைக் குடிசைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
37
திரைப்படம் என்பது மிக வலிமையான ஒரு சாதனம். படித்தவர் முதல் பாமரர் வரை இன்று
அனைவரையும் தனது வசத்தில் வைத்திருக்கும் மிகப் பெரிய ஊடகம் அது. ஆக்கத்திற்கு உருவாக்கிய அணுசக்தி
இன்று பெரும்பாலும் அழிவிற்கே பயன்படுத்தப்படுகின்றது. அதைப்போல், தமிழ்த்திரைப்படம் இளைஞர்களை
நாசப்படுத்தவே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது என்பது எனது எண்ணமாக இருந்தது. ஆனால், ‘காக்கா முட்டை’
என்னும் இந்தத் திரைப்படம் எனது மனப்போக்கை அடியோடு மாற்றிவிட்டது. மனிதர்கள் மீதும் வாழ்க்கையின்
மீதும் நம்பிக்கை தரும் திரைப்படமாக இது அமைந்து வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லும் ஒரு காவியமாக
எனது நினைவில் நின்று நிலவுகின்றது.
அருஞ்சொற்பொருள்
மிகையாகாது அதிகமாகாது
சோலைவனமாக பூங்காவனமாக
அதிர்ந்து நடுங்கி
பணயம் பந்தயம்
அதனினும் அதைவிட
சிக்குண்டு மாட்டிக்கொண்டு
பரவசத்தில் மகிழ்ச்சியில்
சித்தரிக்கின்றது விவரிக்கின்றது
சாதனம் கருவி
வசத்தில் பிடியில்
38
14. நீ முடிவெடுக்கச் சிரமப்பட்ட ஒரு பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்றும், அதற்காக நீ
மேற்கொண்ட செயல்களையும், சந்தித்த சவால்களையும் விவரித்து எழுதுக.
முன்னுரை விளக்கம்
கருத்து 1 விரிவாக்கம்
கருத்து 2 விரிவாக்கம்
கருத்து 3 விரிவாக்கம்
கருத்து 4 விரிவாக்கம்
அருஞ்சொற்பொருள்
தவிர்க்க விலக
சாட்டினர் கூறினர்
மாரி மழை
15. பள்ளிகள் ஏற்பாடு செய்யும் வெளிநாட்டுக் கற்றல் பயணங்கள் ஒரு மாணவனின் முழுமைக்
கல்விக்குத் துணைபுரிகின்றன - கருத்துரைக்க.
முன்னுரை
41
➢ வெளிநாட்டுப் பயணம் என்பது மற்ற நாடுகளில் கல்விச் சுற்றுலா அல்லது சமூகச் சேவை செய்வதைக்
குறிக்கிறது
➢ முழுமைக் கல்வி என்பது ஏட்டுக்கல்வி, விளையாட்டுத்திறன், சிந்திக்கும் ஆற்றல், மொழித் திறன்கள், பரந்த
நோக்கு, சவால்களை எதிர்கொள்ளும் திறன்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பதைக் குறிக்கும்
➢ கல்வி அமைச்சு பள்ளிகளில் வெளிநாட்டுக் கற்றல் பயணத்தைக் கட்டாயமாக்கி உள்ளது
➢ அதன் நோக்கம் - இருபத்தொன்றாம் திறன்களை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும்
➢ அவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பளிக்க வேண்டும்
➢ ஏட்டில் கற்றதை நேரில் காண வாய்ப்பளிக்க வேண்டும்
➢ எடுத்துக்காட்டுக்கு வியட்னாம், சீனா, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளுக்குக் கற்றல் பயணம்
இடையுரை
➢ மற்ற நாட்டினரின் மொழி, கலாச்சாரம், பழக்க வழக்கம், பாரம்பரியம், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பற்றித்
தெரிந்துகொள்ள வாய்ப்பு
➢ அவற்றை மதிக்கக் கற்றுக்கொள்வர்
➢ அறியாமை நீங்கி, புரிந்துணர்வு, விழிப்புணர்வு அதிகரிக்கும்
➢ சிங்கப்பூரையும் தாண்டி நட்புவட்டம் அதிகரிக்கும்
➢ அடிப்படை வசதி கூட இல்லாத சிறுவர்களைக் காணும் வாய்ப்பு
➢ அவர்களுக்கு உதவுவதற்கு ஒரு வாய்ப்பு
➢ வெளிநாட்டில் சமூக சேவை செய்ய வாய்ப்பு
(எ. கா - பள்ளிகளுக்கு வண்ணம் பூசுதல், பாலர் பள்ளியில் கதைகள் வாசித்தல், ஆதரவற்ற சிறுவர்
இல்லங்களுக்குச் சென்று சேவையாற்றுதல்)
➢ மலையேறும் நடவடிக்கைகள் (எ.கா - இமயமலை ஏறுதல்)
➢ இதன்மூலம் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி ஆகிய பண்புகள் வளரும்
➢ பிற நாட்டினரின் வசதியற்ற பாடசாலைகளைக் காணும் வாய்ப்பு
➢ நமக்குக் கிடைத்திருக்கும் வசதிகளைப் போற்றுதல்
➢ பிற நாட்டுக் கல்வி முறையினையைப் பற்றி அறிதல்
➢ பொது அறிவு அதிகரித்தல்
➢ சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு
➢ முகாம்களில் மற்றவர்களை நம்பியிருக்கக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளுதல்
➢ ஆபத்துக் காலம் / அவசரக் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளுதல்
42
➢ வீர விளையாட்டுகளில் ஈடுபடுதல் (எ. கா - சுவர்தாண்டுதல், கயிற்றில் நடத்தல், கயிற்றில் சரிந்து வருதல்
(flying fox), படகோட்டுதல், இரவு நடை)
முடிவுரை
இனிய தொடர்கள்
அருஞ்சொற்பொருள்
அடிப்படை அடித்தளம்
பாலர் சிறுவர்
பாடசாலை பள்ளிக்கூடம்
43
முகாம் camp
தொகுதி 6
16. உமது பள்ளியில் நீவிர் ஏற்படுத்த விரும்பும் மாற்றங்களைப் பற்றி விவரித்து எழுதுக.
‘மாற்றம் என்பது மானிடத் தத்துவம்! மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!’ என்றார் கவிஞர்
கண்ணதாசன். ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்று குடிமக்களை வியக்க வைக்கும் அளவு சிங்கப்பூர், தினம் தினம்
புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து உலகிற்கே முன் மாதிரியாகத் திகழ்கின்றது. ‘பழையன கழிதல் புதியன
புகுதல்’ என்பது சிங்கப்பூரர் அனைவருக்கும் மிகப் பிடித்தமான ஒன்று. சிங்கப்பூர்க் கல்வித்திட்டம் வெறும் வேலை
வாய்ப்பு என்னும் ஒன்றிற்காக உருவாக்கப்பட்டது அன்று. அது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் மானுடப்
பண்புகளின் உருவாக்கத்திற்கும் வாழ்க்கையின் விழுமியங்களை உணர வைப்பதற்கும் உருவாக்கப்பட்ட
முழுமையான ஒரு கல்வித்திட்டம் ஆகும். எனவே, பாடத்திட்டம், கல்விமுறை போன்றவற்றை விடுத்துப்
பள்ளிச்சூழல், நேரம், விடுமுறை போன்ற நிர்வாகப் போக்குகளில் சிற்சில மாற்றங்களைக் காண நான் மிகவும்
விழைகிறேன்.
மேலும், காலை உணவு என்பது இளம் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஆனால்,
அதிகாலையிலேயே மாணவர்கள் வீட்டை விட்டுப் பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய கட்டாயம் இருப்பதால்,
பெரும்பாலான மாணவர்கள் காலை உணவைத் தவிர்த்துவிடுகின்றனர். இதனால், நாள் முழுவதும் சோர்வு,
கவனமின்மை போன்றவை ஏற்பட்டுப் பாடங்களைக் கவனிக்க முடியாத சூழல் ஏற்படுகின்றது. எனவே, பள்ளி
ஆரம்பிக்கும் நேரம் காலை 9.00 மணியாக இருந்தால் இந்தப் பிரச்சினைகள் ஏற்படா என்று நான் எண்ணுகின்றேன்.
காலைக்கடன்களை ஆற அமரச் செய்வதற்கும், காலை உணவைச் சாப்பிடுவதற்கும் பள்ளிக்குப் பயணம்
செய்வதற்கும் போதுமான நேரம் கிடைக்கும் என்று நான் கருதுகின்றேன்.
44
அடுத்து, பாடநேரங்களில் மாற்றம் வேண்டும் என்பது நான் விரும்பும் மற்றொரு மாற்றம் ஆகும். தற்போது,
பாடவேளை 45 மணித்துளிகள்தாம். ஒரு வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பு மாறுவதற்குள் 10 முதல் 15 நிமிடங்கள்
ஓடிவிடுகின்றன. அடுத்து, ஆசிரியர் வந்து சில அறிவிப்புகள் செய்து பாடத்தைத் தொடங்குவதற்கு 5 நிமிடங்கள்
ஆகிவிடுகின்றன. மீதம் 25 நிமிடத்திற்குள் பாடங்களைச் சரியாக முடிக்கவும், பாடங்களைச் சரியாகக் கவனிக்கவும்
ஆசிரியராலும் மாணவராலும் முடிவதில்லை. மேலும், அரைநாள் பள்ளி என்று அவசரம் அவசரமாகப் பாடங்களைத்
தொடர்ந்து நடத்தி மதிய நேரமும் மாலை நேரமும் வீணாய்ப் போகின்றன. ஒரு பாட வேளை ஒரு மணி நேரம்
என்று அமைத்து மாலை 4.00 மணி வரை வகுப்புகள் நடத்தினால், மாணவர்கள் ஆழமாகக் கற்க வாய்ப்பு ஏற்படும்.
மதியம் ஒரு மணி நேரம் மதிய உணவு இடைவேளை என்று வைத்து அனைத்து மாணவர்களையும் ஒன்றாக உணவு
உண்ண வைக்கலாம். இதன் மூலம் நட்புணர்வு, புரிந்துணர்வு ஏற்படுவதுடன், மாணவர்கள் மன இறுக்கம் இன்றி
அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கல்வி கற்க முனைவர்.
மேலும், அரையாண்டுத் தேர்வு, ஆண்டிறுதித் தேர்வு ஆகியவற்றை அந்தப் பருவத்தில் ஒரு மாதத்திற்கு
முன்பே விரைவாக நடத்தி முடித்துவிட்டுப் பள்ளிகளில் ஏறக்குறைய ஒரு மாத காலம் முறையான பாடங்கள் ஏதும்
நடப்பதில்லை. எனவே, தேர்வுகளை விடுமுறைக்குச் சில நாட்கள் முன்புதான் நடத்த வேண்டும். இவ்வாறு செய்வதால்
அந்த அந்த ஆண்டுப் பாடங்களை நன்கு ஆழமாகக் கற்கவும் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். குடும்பப்
பிணைப்பு, ஓய்வுக் காலம் ஆகியனவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் விடுமுறைக் காலங்களில் பல்வேறு
காரணங்களுக்காக மாணவர்களைப் பள்ளிக்கு வருமாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
45
இத்தகைய மாற்றங்கள் பள்ளியில் ஏற்படுமானால் ‘கல்வி கற்பது கரும்பாக இனிக்கும்.’ ‘பள்ளிக்குச்
செல்வது என்றால் பாகாய்ச் சுவைக்கும்.’ நமது கல்வியமைச்சு நாளுக்கு நாள் பற்பல மாற்றங்களையும்
வசதிகளையும் பள்ளிகளுக்குச் செய்துகொண்டுதான் வருகின்றது. அவற்றுள் இவைகளும் அடங்கினால் பள்ளிக்கு
வரும் மாணவர்களுக்கு ஆர்வம் பெருகி, கற்பதில் ஈடுபாடும் தோன்றும். மேலும் அவர்களின் வாழ்வில் ஏற்றங்கள்
என்பது எளிதாய்ப் பிறக்கும் என்பது திண்ணம்.
அருஞ்சொற்பொருள்
தத்துவம் கோட்பாடு
ஆதங்கம் கவலை
தெளியாத கலையாத
மன இறுக்கம் மன உளைச்சல்
மனவெழுச்சியுடன் உற்சாகத்துடன்
தவிர்க்க விலக்க
தெரிவு தேர்ந்தெடுக்க
46
பயிற்சி வினா 17 மற்றும் 18
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.
முன்னுரை விளக்கம்
கருத்து 1 விரிவாக்கம்
47
விபரீதம் எவ்வாறு நடக்க ● கதவு தட்டப்பட்டது
விருந்தது ● கதவின் துவாரத்தின் வழி பார்க்காமல் கதவைப் பணிப்பெண்
திறந்தார்
● இரண்டு நபர்கள் வீட்டு வாசல்முன் நின்றுகொண்டிருந்தனர்
● வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திலிருந்து வந்திருப்பதாகக் கூறல்
● சன்னல்களைச் சரிபார்க்க வந்திருப்பதாகக் கூறல்
● வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்டல்
கருத்து 2 விரிவாக்கம்
கருத்து 3 விரிவாக்கம்
கருத்து 4 விரிவாக்கம்
48
● கொள்ளையடிப்பதற்கு நோட்டம் பார்க்க வந்திருப்பதை அறிதல்
அருஞ்சொற்பொருள்
போலி பொய்யானது
ஊகித்தல் உத்தேசமாக
நபர் மனிதர்
துரிதமாக விரைவாக
அரண்டவன் பயப்படுபவன்
49
இலேசு சுலபம்
தட்டுத்தடுமாறி நிலைத்தன்மை இல்லாமல்
முன்னுரை
இடையுரை
50
➢ கற்றவர்கள் குறைந்திருக்கும் நாடு வளர்ச்சி அடையாத நாடாகக் கருதப்படுகிறது
➢ கற்றவர்களுக்கு எக்காலமும் மதிப்பும் மரியாதையும் உண்டு
முடிவுரை
இனிய தொடர்கள்
அருஞ்சொற்பொருள்
அடங்காது கொள்ளாது
வகிக்கின்றனர் ஏற்றுள்ளனர்
ஒருக்காலும் எப்போதும்
51
கலங்கக்கூடாது வருத்தப்படக்கூடாது
தொகுதி 7
ஒரு நாட்டின், ஓர் இனத்தின் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் முதலிய யாவற்றையும் ஒரே நொடியில்
அழிக்க அவர்கள் கையாளும் கொடிய செயல் முறை இது. இதிலிருந்து, ஒரு நாட்டின் பண்பாட்டின் பெட்டகமாக,
வாழ்வின் விழுமியங்களைப் போதிக்கும் அமுதசுரபியாக, ஆணிவேராக இருப்பன நூல்கள்தாம் என்பது நமக்கு
விளங்கும். எனவே, திருவள்ளுவர் விரும்புவதுபோல் ‘மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து சிறக்க
வேண்டுமென்றால்’ அவன் முதலில் நூலறிவைப் பெற வேண்டும்; இடைவிடாமல் நூல்களை வாசிக்க வேண்டும்.
இதுவே அவனது முதல் கடமையாகும்.
52
ஒரு மொழியைப் பிழையறப் வேசுவதற்கும், எழுதுவதற்கும் நூல் வாசிப்பு மிகவும் அவசியமாகின்றது.
மொழியில் புலமை பெற, நூல் வாசிப்பு மிக இன்றியமையாதது. மொழிப்பாடங்களில் தொடக்கப்பள்ளி,
உயர்நிலைப்பள்ளி ஆகியனவற்றில் மாணவர்களின் எழுத்துப்பிழைகள், ஒலிப்பிழைகள், வாக்கியப்பிழைகள்,
தட்டுத்தடுமாறிப் பேசுதல் முதலிய குறைகள் யாவற்றிற்கும் நூல் வாசிப்பு இன்மையே முக்கியக் காரணம் ஆகும்.
கலிகாலம் என்பது இன்று கணினிக் காலம் என்றாகிவிட்டது. கணினியில் விளையாடுவதும் உரையாடுவதும் போன்ற
கணினி விளையாட்டையே மாணவர்கள் பெரிதும் விரும்புவதால், இன்று நூலகத்தில் நூல் வாசிப்பு பெரிதும்
அருகிவிட்டது.
அருஞ்சொற்பொருள்
பெட்டகங்கள் விலை உயர்ந்த காவியமாக மிக நீண்ட கதையைக்
பொருள்களைப் பாதுகாக்கும் கவிதைவடிவில், சொல்லும் நூலாக
பெட்டிகள்
54
பயிற்சி வினா 20 மற்றும் 21
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.
20. உமது ஆசிரியர் உம்மீது வைத்த நம்பிக்கையால் உம்மிடமிருந்த திறமை வெளிப்பட ஒரு
சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது நம்பிக்கையைப் பொய்யாக்காமல் உம்மை நிரூபித்துக் கொண்ட
அனுபவத்தை விளக்கி எழுதுக.
முன்னுரை விளக்கம்
● நம்பிக்கையே வாழ்க்கை
● நம்பிக்கை குலைந்துவிட்டால் யாரும் நம்பமாட்டார்கள்
● பிறரது நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்வது
முக்கியம்
● நம்பிக்கை நம்மை யாரென்று உலகிற்குக் காட்டும்
கருத்து 1 விரிவாக்கம்
கருத்து 2 விரிவாக்கம்
கருத்து 3 விரிவாக்கம்
55
தமிழாசிரியர் என்மீது ● என்மீது நம்பிக்கையை இழக்கவில்லை
கொண்டிருந்த நம்பிக்கை ● என்னால் படிக்க முடியும் என்று கூறினார்
● என்னை நம்பிப் பொறுப்புகளைக் கொடுத்தார்
● நான் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்ட மாட்டார்
● நான் செய்த சிறுசிறு நல்ல விஷயங்களைப் பெரிதுபடுத்திப்
பேசுவார்
● எதிர்காலத்தின் சவால்களை எனக்கு அன்பாக
எடுத்துரைத்தார்
● அவர்மட்டுமே எனக்கு ஊக்கப்பரிசுகள் கொடுப்பார்
கருத்து 4 விரிவாக்கம்
56
துணைவலியும் தூக்கிச் செயல்
அருஞ்சொற்பொருள்
பாத்திரமாக உகந்தவராக
ஆணிவேர் உறுதியான
அம்பலம் சபை
முளை பிஞ்சு
57
21. நல்ல நண்பர்களின் அவசியத்தையும், அவர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளும்
வழிவகைகளையும் விவரித்து எழுதுக.
முன்னுரை
இடையுரை
58
(எ.கா – காற்பந்து,மீன் பிடித்தல், புகைப்படம் எடுத்தல்)
➢ கற்றல் குழுவை அமைத்துக்கொண்டு படிக்கலாம்
➢ நூலகத்திற்கு நண்பர்களுடன் சென்றுவரலாம்
➢ நண்பர்களைத் தீபாவளி, கிறிஸ்துமஸ், நோன்புப் பெருநாள், பிறந்தநாள் விழா போன்ற விசேஷ நாட்களுக்கு
அழைக்கலாம்
➢ பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கலாம்
➢ பிறந்த நாளின் போது சிறு பரிசுப்பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம்
➢ இரண்டு குடும்பத்தாரும் இணைந்து உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளலாம்
➢ இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் வரும்போது அதை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்
முடிவுரை
இனிய தொடர்கள்
59
➢ கூடா நட்பு பாடாய் முடியும்
➢ நல்ல நண்பன் என்பவன் உடன்பிறவா சகோதரன்
➢ நண்பர்கள் இல்லாத வாழ்க்கை பூக்கள் இல்லாத பூந்தோட்டம்
➢ புத்தகங்களும் நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்
➢ தோள்கொடுப்பான் தோழன்
➢ தோளுக்குமேல் வளர்ந்துவிட்டால் அவன் தோழன்
➢ நட்புக் கொள்வதில் நிதானம் தேவை, கிடைத்தபின் உறுதி தேவை
➢ விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்
➢ இளமையில் கல்வி சிலையில் எழுத்து
➢ கற்காமல் இருப்பதைவிட, பிறக்காமல் இருப்பதே நன்று
➢ கற்காதவர் கண்ணில்லாதவருக்குச் சமம்
➢ கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு
அருஞ்சொற்பொருள்
ஆதிக்கம் செல்வாக்கு
நிரந்தரமற்றவர்கள் நிலையற்றவர்கள்
கைகழுவி ஒதுக்கி
உடுக்கை உடை
இடுக்கண் துன்பம்
கூடா வேண்டாத
கேடாய் துன்பத்தில்
நிதானம் அமைதி
60
தொகுதி 8
‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? சொல் எல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா?’ என்பார் கவியரசர்
கண்ணதாசன். அதனைப் போல், உலகில் எவ்வளவோ மாந்தர்கள் பிறக்கிறார்கள்; வாழ்கிறார்கள்; இறக்கிறார்கள்.
ஆனால், அவர்களுள் ஒரு சிலரே ‘உள்ளத்தால் பொய்யாது ஒழுகி உலகத்தார் உள்ளத்துள் எல்லாம்’ என்றும்
மறையாது வாழ்கிறார்கள். அத்தகைய மனிதருள் மாணிக்கம், நான் போற்றும் டாக்டர் அப்துல் கலாம் ஆவார்.
அண்மையில் அவர் மறைந்தபோது கற்றவர், கல்லாதவர், வறியவர், செல்வந்தர், இளையோர், முதியோர் என்னும்
வேறுபாடு சிறிதும் இன்றி அனைவரும் ஒருசேர வருந்தித் துடித்தனர். வரலாறு காணா அளவு அவரது இறுதி
ஊர்வலத்தில் கூடி அழுதனர்.
இதற்குக் காரணம் அவர் வகித்த உயர்பதவியோ, அவரது பணபலமோ, ஆள் பலமோ அல்ல! கடமை,
கண்ணியம், கட்டுப்பாடு மிகுந்த மனிதராக ஆடம்பரம் இல்லாத எளிய மனிதராக, இனம், மொழி, மதம் இவற்றைத்
தாண்டி அனைவரையும் நேசிக்கும் மனிதராக, கடும் உழைப்பாளியாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த
காரணத்தால் தான் இன்று அவர் எல்லாராலும் போற்றப்படுகின்றார்.
‘வறுமையிலும் செம்மை’ என்னும் பழமொழிக்கு இலக்கணமாகத் தமது வாழ்க்கையை வகுத்தவர் டாக்டர்
கலாம். இந்தியாவில், இராமேஸ்வரம் என்னும் சிறிய ஊரில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், குடும்பச்
சூழலால் எந்த நிலையிலும் அவர் தளர்ந்து போகவில்லை. பள்ளிக்கு ஒழுங்காகச் சென்று பாடங்களைப்
61
படித்ததோடு, குடும்பத் தொழிலான மீன் பிடிக்கும் தொழிலிலும் தந்தைக்கு உதவினார். அதிகாலையில் வீடுகளுக்குச்
சென்று செய்தித்தாள்கள் விநியோகம் செய்து தமது சொந்தக் காலில் நிற்கக் கற்றுக்கொண்டார்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா னுழை
தளர்வு இல்லாத முயற்சி உடையவனிடம் உயர்வு தானே வந்து சேரும் என்னும் குறளுக்கு இலக்கணமாய்
அமைந்த டாக்டர் கலாம், உயர்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என்று தமது கல்வியைத் தடையின்றித்
தொடர்ந்தார். ராக்கெட் விஞ்ஞானியாகப் பணியைத் தொடங்கிய அவர், பாரத நாட்டில் ஜனாதிபதியாக உயர்ந்தார்.
அவர் பதவிகளுக்காகப் பிறரைத் தேடிச் செல்லவில்லை; பதவிகள் அவரைத் தேடி வந்தன. பட்டங்களுக்காக அவர்
ஆலாய்ப் பறக்கவில்லை, பட்டங்கள் அவரிடம் வந்து தம்மைப் பெருமைப்படுத்திக் கொண்டன.
அவர், இந்திய ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோதும் மிக எளிய வாழ்க்கையே மேற்கொண்டார். பகட்டான
ஆடைகள் அணிவதையும் அரசாங்கச் செலவில் பல நாடுகளில் சுற்றுப்பயணங்கள் அடிக்கடி மேற்கொள்வதையும்
தவிர்த்தார். அலுவலக வேலைகளில் சுணக்கம் காட்டாது தயவு தாட்சண்யம் இன்றி உரிய முடிவுகளை நேரிய
வழியில் உடனுக்குடன் எடுத்தார். அவரைக் குடிமக்கள் முதல் உயர் பதவி வகிப்பவர்வரை எவரும் தடையின்றிச்
சந்திக்கும் வகையில் அவர் காட்சிக்கு எளியவராக வாழ்ந்தார். அவரது இறுதிக்காலம் வரை அவரது பூர்வீக வீடு
மிகச் சிறிய வீடாக இருந்தது என்பதும், அவர் விட்டுச் சென்றவை சில உடைகளும் சில புத்தகங்களும் தாம்
என்பதும் அவரது பற்றற்ற தூய வாழ்வினை நமக்குக் காட்டும் சான்றுகளாகும்.
போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மாற்றுத்திறனாளிகளும் நடப்பதற்கு உதவும் செயற்கைக்
கால்கள், இந்தியாவில் அப்போது 4.5 கிலோ எடையில் இருந்தன. இத்தகைய அதிக எடை கொண்ட கால்களை
மாட்டிக்கொண்டு அவர்கள் நடக்க மிகவும் சிரமப்பட்டனர். டாக்டர் கலாம் தமது ஆய்வின் மூலம் இதனை மாற்றி,
வெறும் 400 கிராம் எடை கொண்ட செயற்கைக் கால்களைத் தயாரிக்க வைத்து அவர்களைச் சிரமம் இல்லாமல்
நடக்க வைத்து மாபெரும் சாதனை புரிந்தார். அணுகுண்டு சோதனை செய்ததைவிட, ராக்கெட்டுகளை விண்ணில்
ஏவியதைவிட இச்செயலே தமக்கு மிகவும் மனநிறைவான ஒன்று என்று அவர் கூறியதிலிருந்து, மானுடத்தை
நேசிக்கும் மகத்தான அவரது உள்ளம் நமக்குப் புரிகின்றது.
அவருக்கு வயது என்றும் தடையாக இருந்ததில்லை. குழந்தைகளையும் இளையர்களையும் மிகவும் நேசித்த
அவர், தமது பதவிக்காலம் முடிந்தவுடன் வாளா இருந்துவிடவில்லை. இளைஞர்களின் ‘கனவு நாயகனாக’ அவர்
இளையர்கள் மத்தியில் வலம் வந்தார்.
‘கனவு காணுங்கள்’ அவற்றை நனவாக்கக் கடுமையாக உழையுங்கள்! என்னால் எதனையும் செய்ய முடியும்
என்று நம்புங்கள்!’ என்பன அவர் இளையர்களுக்குக் கூறிய முக்கிய அறிவுரைகள் ஆகும். மாணவர்கள்
தொடர்பான பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றுவதோடு நின்றுவிடாமல், அவர்களோடு உள்ளன்போடு
உரையாடியும் ஊக்கப்படுத்தினார். தன் மனைவி, தன் மக்கள், தன் குடும்பம் என்று வாழ்கின்ற சுயநலப்போக்கு
மிகுந்த இக்காலத்தில் திருமணம் கூடச் செய்து கொள்ளாமல் ஊருக்கே உழைத்த உத்தமர் டாக்டர் கலாம் ஆவார்.
மனிதர்களை மட்டுமன்றி, மரங்களையும் செடிகொடிகளையும் நேசித்த இம்மாமனிதர், இந்தியா முழுவதும் பல
லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் பெரும் இயக்கம் ஒன்றினை வெற்றிகரமாக
62
நடத்தினார். பிறப்பு என்பது ஒரு மனிதனுக்குச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால், அவனது இறப்பு ஒரு
சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்த இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்
கலாம் நான் போற்றும் ஒருவராக இருக்கின்றார்; நற்பண்புகளின் நாயகராக எனது இதயத்தில் வாழ்கின்றார்.
அருஞ்சொற்பொருள்
இலக்கணமாக விளக்கமாக
வகுத்தவர் அமைத்தவர்
சுணக்கம் தாமதம்
முன்னுரை விளக்கம்
கருத்து 1 விரிவாக்கம்
கருத்து 2 விரிவாக்கம்
கருத்து 3 விரிவாக்கம்
கருத்து 4 விரிவாக்கம்
64
நண்பனை மீண்டும் ● பத்து ஆண்டுகள் சென்றன
சந்திக்கும் சந்தர்ப்பம் ● மீண்டும் நண்பனைக் காணல்
● பழைய நினைவுகள் திரும்புதல்
● நண்பன் மன்னிப்புக் கேட்டல், செய்த தவறுக்காக வருந்துதல்
● வேறொரு சமயத்தில் தவறுக்கான தண்டனையை
அனுபவித்துவிட்டதாகக் கூறல்
● மன்னித்தல்
65
● துளியளவும் கலங்கவில்லை
● நினைவலைகள் பின்நோக்கி
● மனத்திரைமுன் நிழலாடியது
● மன்னிப்புக் கேட்டு மன்றாடினான்
● மன்னிப்போம் மறப்போம்
அருஞ்சொற்பொருள்
தழும்பு வடு
மரண இறப்பு
துளி சிறிதளவு
முன்னுரை
இடையுரை
66
➢ பள்ளி முடிந்து வீடு திரும்பும் வேளை
➢ எப்போதும் பேருந்தை எடுப்பதே வழக்கம்
➢ ஆனால் அன்று பெருவிரைவுப் போக்குவரத்து இரயிலில் செல்ல நேரிட்டது
➢ எறும்புகூடச் செல்ல முடியாத அளவு கூட்ட நெரிசல்
➢ கூட்டம் குறைந்தது
➢ சற்று நேரம் சென்று இடம் கிடைத்தது
➢ சில இளையர்கள் ஏறினார்கள்
➢ ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தார்கள்
➢ இசையைக் கேட்டுக்கொண்டு கொட்டமடித்தார்கள்
➢ ஒரு முதியவர் ஏறினார்
➢ இடம் இல்லை
➢ தள்ளாடி நின்றுகொண்டிருந்தார்
➢ ஒதுக்கப்பட்ட இடமும் காலி இல்லை
➢ இளையர் தூங்குவது போல் பாவனை செய்தார்
➢ பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஆடவர் எழுப்பி இடம் அளிக்கச் சொன்னார்
➢ இளையர் அவருடன் சண்டையிட்டார்
➢ பிரச்சினை பெரிதானது
➢ முதியவர் கீழே தள்ளிவிடப்பட்டார்
➢ அவரைத் தூக்கினேன்
➢ என் இருக்கையில் அமர செய்தேன்
➢ காயங்கள் இல்லை
➢ இளையர் கூட்டம் வெறுப்புடன் அடுத்த நிலையத்தில் இறங்கியது
முடிவுரை
இனிய தொடர்கள்
67
➢ நினைவலைகள் பின்நோக்கிச் சென்றன
➢ பசுமரத்தாணி போல் பதிந்திருந்தது
➢ கூட்ட நெரிசலாக இருந்தது
➢ மூச்சு விடக்கூட முடியவில்லை
➢ ஆட்டமும் பாட்டமும்
➢ கூச்சலும் கும்மாளமும்
➢ மற்றவர்களைக் கண்டும் காணாததைப்போல்
➢ தள்ளாடித் தள்ளாடி
➢ தூங்குபவனை எழுப்பலாம், தூங்குவதைப்போல் நடிப்பவனை எழுப்ப முடியாது
➢ கோபம் தலைக்குமேல் ஏறியது
➢ கைகளை முறுக்கிக்கொண்டு
➢ அடிபட்ட பூனைபோல் துவண்டு விழுந்தார்
➢ எகிறிக்கொண்டு வந்தார்கள்
➢ கைத்தாங்கலாகத் தூக்கி
➢ நெஞ்சம் குமுறியது
➢ புண் ஆறினாலும் வடு மறையாது
அருஞ்சொற்பொருள்
பாவனை நடிப்பு
தக்க சரியான
முறுக்கிக்கொண்டு மடக்கிக்கொண்டு
வடு தழும்பு
68
தொகுதி 9
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது காலங் காலமாகக் கூறப்பட்டு வரும் ஒரு பழமொழி.
ஆரோக்கியம் என்பது வெறும் உடல் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல, மனமும் அதில் அடங்கியிருக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் சராசரி ஆயுள் 20,000 நாட்கள் மட்டுமே என்று கூறுவர். நாம் வாழும் நாளில்
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் இறுதி மூச்சு வரை உறுதியான உடலோடும் மகிழ்ச்சியான
மனத்தோடும் வாழலாம். இக்கட்டுரையின் வழி ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியத்தைப் பற்றியும்,
அவற்றைக் கடைப்பிடிப்பதற்கான சில வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
வாழ்க்கை என்பது நமக்குக் கடவுள் அளித்த வரம். அந்த வாழ்க்கையைச் செம்மாந்து வாழ நமக்கு உடல்
மிகவும் அவசியம். அல்லவா? ‘சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்!’ ‘உடல் நன்றாக இருந்தால் தானே
நம்மால் வாழ்க்கை இலக்குகளை எட்ட முடியும்?’ பத்து அகவைக்குள் கண்ணாடியும், இருபதிற்குள் இருமல் நோயும்,
முப்பதில் மூச்சு முட்டுதலும், நாற்பதுக்குள் நரம்பு தளர்வதும், ஐம்பது வயதிற்குள் வாழ்க்கையே முடிந்து போவதும்
எதனால்? ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றாமல் இருப்பதால்தான். நல்ல உணவுப் பழக்க
வழக்கங்களை நாம் மேற்கொள்ள வேண்டுமானால், நாம் அதிகமான காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும்.
நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உண்ணும்போது நம் உடலில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவு குறைகிறது.
அரிசியின் அளவைக் குறைத்து உண்ணுவதோடு, விரைவு உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். ‘அமிர்தமே
ஆனாலும் அளவோடு உண்’ என்ற பெரியோரின் மொழிப்படி எவ்வளவு விருப்பமான உணவு என்றாலும் அதனை
அளவோடு உண்ண வேண்டும். நம் உழைப்புக்குத் தகுந்த கலோரிகள் தரும் உணவை உண்டு, அளவுக்கு அதிகமான
இனிப்பையும், எண்ணெயில் பொரித்த உணவுகளையும் தவிர்த்துச் சரிவிகித உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள
வேண்டும்.
நம் உடல் சீராக இயங்குவதற்கும், மூப்பு சீக்கிரம் வராமல் இருப்பதற்கும் மூன்று முறையாவது உடற்பயிற்சி
செய்ய வேண்டும். உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்ல முடியாதோர் மிதிவண்டி ஓட்டலாம், நடைப்பயிற்சி
மேற்கொள்ளலாம், நீச்சலில் ஈடுபடலாம். யோகாசனம் போன்றவை நம்மை இளமையாக வைத்துக் கொள்ள
உதவுவதோடு, உடலுறுப்புகள் சீராக இயங்குவதற்கும் துணை செய்யும். இரவு நேரத்தில் அதிகமாகக் கண்விழித்துத்
தொலைக்காட்சி பார்ப்பதோ, கணினித் திரையின் முன் அமர்ந்திருப்பதோ நம் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த
69
வகையிலும் உதவி செய்யாது. நம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிகமான தூக்கம் எவ்வாறு இடும்பை தருகிறதோ
அது போல மிகக் குறைவான தூக்கமும் துன்பத்தைத் தந்துவிடும். அதனால், உள்ளத்துக்கும் உடலுக்கும் மிதமான
ஓய்வைக் கொடுக்க வேண்டும்.
இயற்கை வளம் இல்லாது மனித வளத்தை மட்டுமே நம்பியுள்ள நம்நாட்டில் ஒவ்வொரு மனிதனின்
ஆரோக்கியமும் நாட்டுக்கு வளம் சேர்க்கும் மூலப்பொருள் என்பதை உணர்தல் வேண்டும். இதுவே நம் சிங்கப்பூரின்
உயிர்மூச்சாக இருப்பதனால் தம் மக்களை இளம் வயதிலில் இருந்தே காத்திட அது திட்டம் தீட்டி, செயற்பட்டும்
விட்டது. பாலர்பள்ளி முதல் உயர்கல்வி நிலையங்கள் வரை இருக்கும் சிற்றுண்டிச்சாலைகளில் ஆரோக்கியமான
உணவு வகைகளே விற்கிறார்கள். கொழுப்பு நிறைந்த உணவு, இனிப்புப் பலகாரங்கள், இனிப்புப் பானங்கள், பொரித்த
உணவுகள் போன்றவை விற்பதில்லை. அதனோடு மட்டுமில்லாமல், மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகள்
கட்டாயமாக நடத்தப்படுகின்றன. இதற்கும் மேலாக, ஆண்டுதோறும் மாணவர்களின் உடற்சோதனையும், பல்
சோதனைகளும் மருத்துவர்களால் நடத்தப்படுகின்றன. சுத்தமாகவும் சுகாதாரமாகவும் எவ்வாறு இருப்பது என்பதை
ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் பாடங்களோடு சேர்த்து மாணவர்களுக்கு ஊட்டுகிறார்கள்.
70
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
‘பணம் போனால் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் உடல் போனால் சம்பாதிக்க முடியாது’ என்று
கூறுவார் உண்டு. உண்மைதான். உடல்தான் பணம் சம்பாதிக்க மூலதனம். எனவே, அதைப் பத்திரமாகப்
பார்த்துக்கொள்ளுதல் நம் கடமையாகும். வந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்னும் மனப்பான்மையிலிருந்து
வெளியேறி, வருமுன் காப்போம் என்னும் கொள்கையுடன் ஒவ்வொருவரும் இருந்து, நம் உடலையும், மனத்தையும்
ஆரோக்கியமாக வைத்துக்கொள்வோமாக.
அருஞ்சொற்பொருள்
கட்டாக உறுதியாக
செம்மாந்து பெருமையுடன்
அகவைக்குள் வயதிற்குள்
மூப்பு முதுமை
இடும்பை துன்பம்
ஊறுபாடு துன்பம்
71
பயிற்சி வினா 26 மற்றும் 27
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.
முன்னுரை விளக்கம்
● அனுபவங்கள் பலவிதம்
● சில இனிப்பானவை, சில கசப்பானவை
● எல்லாம் நமக்குப் பாடம் கற்பிக்கத் தவறுவதில்லை
● அனுபவங்கள் நமது அறிவை ஆழமாக்குகின்றன
கருத்து 1 விரிவாக்கம்
கருத்து 2 விரிவாக்கம்
கருத்து 3 விரிவாக்கம்
72
● சிலர் சிரித்தனர்
● சிலர் அவதூறாகப் பேசுதல்
கருத்து 4 விரிவாக்கம்
அருஞ்சொற்பொருள்
73
கரிபூசினாற்போல் அவமானப்படுத்தியதுபோல்
நிராகரிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ளப்படவில்லை
முன்னுரை
இடையுரை
74
➢ அவர் அருகில் உள்ள மருந்தகத்திற்குப் பாட்டியை என்னை அழைத்துப்போகச் சொன்னார்
➢ பாட்டியை மருந்தகத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் புறப்பட்டேன்
➢ பாட்டியும் தயாராக இருந்தார்
➢ கதவைத் திறப்பதற்குச் சாவியை எடுக்கச் சென்றேன் – ஆனால், அதை வைக்கும் இடத்தில் அது இல்லை
➢ வீடெங்கும் தேடினேன் - காணவில்லை - கதிகலங்கிப் போனேன்
➢ பாட்டியின் நெஞ்சு வலி அதிகமாகிக்கொண்டே சென்றது
➢ பதற்றம் என்னை ஆட்டிப் படைத்தது
➢ தாயாரை அழைத்தேன் - அவர் உடனடியாக விரைந்துவந்தார்
➢ அவரிடம் இருந்த மற்றொரு வீட்டுச் சாவியைப் பயன்படுத்தி வீட்டைத் திறந்தார்
முடிவுரை
➢ தாயார் என்னைத் திட்டினார்
➢ என் தவற்றை நான் உணர்ந்தேன்
➢ என் கெட்ட பழக்கத்தை அன்றிலிருந்து மாற்றிக்கொண்டேன்
➢ இனிமேலும் எடுத்த பொருளைப் பயன்படுத்திய பிறகு அதன் இருப்பிடத்திலேயே வைப்பதென
உறுதிபூண்டேன்
இனிய தொடர்கள்
75
➢ மூலைமுடுக்குகளில் எல்லாம் தேடினேன்
➢ பட்டால்தான் தெரியும் கெட்டால்தான் புரியும்
அருஞ்சொற்பொருள்
தழுதழுத்தது திக்கியது
தொகுதி 10
76
என்று நண்பர்களுக்கான இலக்கணத்தைத் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளது திருக்குறள்.
வெளித்தோற்றத்தில் மட்டுமே சிரிக்காமல் அன்பால் அகமும் முகமும் மலரப் பழகுவதே சிறந்த நட்பு என்பது இதன்
பொருள். ‘உறவு தோற்கும்; பகைமை காட்டும்; நட்பு மட்டுமே பசுமை காட்டும்; ஏணிப்படியாய் என்றும் இருக்கும்’
என்றெல்லாம் புகழப்படுகின்ற நட்பு, ‘கூடா நட்பாக’ அமைந்துவிட்டால் கேடும் செய்துவிடும்.
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து ஒருவனை விலக்கி நல்ல வழியில் நடக்கச்செய்து, அழிவு வந்த
காலத்தில் உடனிருந்து துன்பப்படுவது சிறந்த நட்பு என்பது இக்குறளின் பொருள்.
கல்வியில் மிகச் சிறந்து விளங்கும் ஒரு நல்ல மாணவனை மோசமான நட்பு வீண் பொழுது போக்கிலும்,
திரைப்படத்திலும் ஈர்ப்புக் கொள்ள வைக்கிறது. நம் பலவீனத்தைப் புரிந்துகொண்டு பாதாளத்தைப் பஞ்சு
மெத்தைபோல் அலங்காரம் செய்து அதில் நம்மைத் தள்ளிவிடும். கொதிக்கும் எண்ணெயில் விழுந்ததுபோல் நாம்
சொல்லொண்ணாத் துன்பத்தில் பரிதவிக்கும்போது கைகொடுக்காமல் கைதட்டிச் சிரிக்கும். அப்போதுதான் தீய
நண்பர்களின் சுயரூபம் நமக்குத் தெரியும். உண்மையான நண்பன் நம்மை ஒருபோதும் அழிவுப்பாதைக்குச்
செல்லவிடமாட்டான். அப்படி அழைத்துச் செல்பவன் உண்மையான நண்பனாக இருக்க மாட்டான். ஒருவனை
மனம்போன பாதையில் போகவிட்டு மது, புகை இவற்றுக்கு அடிமைப்படுத்தும் ஒருவன் உங்களின்
அழிவுப்பாதையின் வழிகாட்டி ஆவான்.
‘அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்’ என்பது மூத்தோர் வாக்கு. நமக்குத் துன்பம் வரும்போதுதான்
பொய்யான நண்பர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம் என்று கிரேக்கத் தத்துவ ஞானியான
அரிஸ்டாட்டிலும் கூறியுள்ளார். நண்பனுக்குத் துன்பம் வரும்போது ‘உடுக்கை இழந்த கையைப்போல்’ விரைந்து
சென்று அவனுக்கு உதவ வேண்டும் என்று பொய்யாமொழியார் பகர்கிறார்.
மாறாக, நண்பனின் பிரச்சினைகளைக் கண்டு ‘துண்டைக் காணோம், துணியைக் காணோம்’ என்று ஓடுபவன்
எப்படி நம் வாழ்நாள் முழுவதும் நம்முடன் துணையிருப்பான்? நல்ல நண்பர்கள் யாரென்று தொடக்கத்திலேயே
தெரிந்துகொள்வது சிரமம்தான். ஆனால், அவர்களுடன் பழகும்போது நாம் எச்சரிக்கையாக இருந்து அவர்களின்
பழக்க வழக்கங்கள், நடத்தை ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டும். பொருத்தமில்லாத நண்பர்களைக்
கைகழுவிவிட்டு, உண்மையான நண்பர்களை மட்டுமே நம்முடன் இணைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில்,
அவர்களின் ஆதிக்கம் எல்லை மீறிவிட்டால் அதிலிருந்து விடுபடுவது முள்ளில் விழுந்த சேலையாகிவிடும்.
77
‘ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல’, நல்ல நட்பினால் வாழ்வில் முன்னேற்றம்
கண்டவர்களும் இப்பாரில் உண்டு. நட்பினால் முன்னேறியவர்களில் முக்கியமான ஒருவரைக் குறிப்பிட
வேண்டுமானால், நம் எல்லோருக்கும் தெரிந்த, கணினி உலகை ஆட்டிப் படைக்கும் பில்கேட்ஸ் அவர்களைக்
கூறலாம். விண்டோஸ் என்னும் செயலியை உருவாக்கிய பில்கேட்ஸ், உலகின் தலை சிறந்த முன்னணி நிறுவனத்தைத்
தாம் நிறுவியதற்குத் தம்முடைய நண்பனான பால் ஆலென் தொடக்கக் காலத்தில் செய்த உதவிகளே காரணம் எனக்
கூறியுள்ளார். இவ்வாறு, சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் தங்களின் நண்பனின் உதவியால் தான்
இந்த நிலையை அடைந்துள்ளோம் என்று நினைவு கூரும் போது நட்பின் வலிமையை நாம் நன்கு உணரலாம்.
‘உன் நண்பனைப் பற்றிக் கூறு. உன்னைப் பற்றி நான் கூறுகிறேன்’ என்னும் பொன்மொழி, நம்முடைய
குணநலன்கள், நடத்தை போன்றவற்றை நிர்ணயிப்பதே நாம் தேர்ந்தெடுக்கும் நட்புதான் என்பதை உள்ளங்கை
நெல்லிக்கனியாக விளக்குகின்றது. பெற்றோர்களைவிட நம்மோடு அதிக நேரம் செலவு செய்பவர்கள் நம் நண்பர்கள்
தாம். உளவியல்படி, நாம் யாருடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறோமோ, அவர்களின் பழக்க வழக்கங்களையும்,
போக்கையும் நாமும் நம்மை அறியாமல் உள்வாங்கிக் கொள்கிறோம். ஒரு திரைப்படத்தைப் பலமுறை
பார்க்கும்போது அதிலுள்ள வசனங்களை நாமும் பேச ஆரம்பித்துவிடுகிறோம். அதுபோல, நம் நண்பர்கள் செய்யும்
செயல்களைச் சில நாட்கள் கழித்து நாமும் செய்யத் தொடங்கிவிடுகிறோம். நற்செயல்களாக இருந்தால் பரவாயில்லை.
நம்மை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் செயல்களாக இருந்தால்? நினைத்துப் பார்த்தாலே குலை நடுங்குகிறது
அன்றோ?
கார்களை உற்பத்தி செய்த ஹென்றி போர்டு, ‘எவன் என்னுள் உள்ள சிறந்தவற்றை வெளியில் கொண்டு
வருகிறானோ அவனே என் சிறந்த நண்பன்’ என்று கூறினார் (My Best friend is the one who brings out the best in
me) ஏனென்றால், நம்மிடம் அத்தகைய பெரும் செல்வாக்கு நண்பனுக்கு இருக்கிறது. மகாபாரதத்தில் கூட கொடுஞ்
செயல்களைப் புரியும் துரியோதனனையும் நல்லவனாகக் காட்டியது அவன் கர்ணன் மீது கொண்ட உண்மையான
நட்புதான்.
அருஞ்சொற்பொருள்
அகமும் உள்ளமும்
கேடும் தீங்கும்
ஈர்ப்பு கவர்ச்சி
78
நினைவுகூரும்போது ஞாபகப்படுத்தும்போது
ஆதிக்கம் செல்வாக்கு
வெட்டவெளியில் வெளிப்புறத்தில்
79
பயிற்சி வினா 29 மற்றும் 30
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.
29. நீ செய்யாத ஒரு குற்றத்திற்காக உன் மீது பழி சுமத்தப்பட்டது. அது எவ்வாறு நடந்தது என்றும்,
அதன் மூலம் நீ எவ்வாறு பாதிக்கப்பட்டாய் என்றும் விவரித்து எழுதுக.
முன்னுரை விளக்கம்
கருத்து 1 விரிவாக்கம்
கருத்து 2 விரிவாக்கம்
கருத்து 3 விரிவாக்கம்
80
நீ எவ்வாறு பிடிபட்டாய்? ● விஷயம் கேள்விப்பட்டு நீ விரைந்தாய்
● தீய நண்பர்கள் உன்னையும் இழுத்துவிட்டனர்
● காவலர்கள் உன்னையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்
சென்றார்கள்
● எவ்வளவோ எடுத்துக்கூறியும் விடவில்லை
● யாரும் உனக்காகப் பேசவில்லை
கருத்து 4 விரிவாக்கம்
அருஞ்சொற்பொருள்
அகலாது நீங்காது
தீர முழுமையாக
கலவரம் குழப்பம்
கைகலப்பு கைச்சண்டை
துறந்துவிடல் விட்டுவிடுவது
சமுதாயம் மக்கள்
பட்டப்பகல் நடுப்பகல்
சுற்றம் சுற்றத்தார்
வாரா வராது
எய்தவன் விட்டவன்
82
30. ‘’தோல்வியே வெற்றிக்கு முதல் படி’’ என்பதை உணர்ந்து நீ வாழ்வில் வெற்றி கண்ட
சம்பவத்தையும், அதன்மூலம் நீ பெற்ற அனுபவத்தையும் விளக்கி எழுதுக.
முன்னுரை
இடையுரை
83
➢ முயற்சியைத் தொடர்ந்தேன்
➢ தோல்வி ஏற்படும்போதெல்லாம் காரணத்தை ஆராய்ந்து மீண்டும் முயன்றேன்
➢ தோல்வி படிப்படியாக என்னிடமிருந்து விலகிச் சென்றது
➢ தேசியத் தேர்வு வந்தது
➢ நான் நல்ல மதிப்பெண்களைப் பெற்றேன்
➢ ஆசிரியருக்கு நன்றி கூறினேன்
முடிவுரை
இனிய தொடர்கள்
மடு தரைமட்டம்
அல்லல் துன்பம்
85
தொகுதி 11
மனிதன் இயந்திரம் அல்ல. அவனுக்கென்று ஓர் எல்லையுண்டு. எவ்வளவுதான் உழைத்தாலும் அது அவனின்
சக்தியை மீறும்போது அவனுக்குப் பாரமாகிவிடுகிறது. பாரம் என்பது அதிகமான சுமையைக் குறிக்கிறது. புத்தகப்பை
முதுகுக்குப் பாரமாக இருந்தால் சற்று நேரம் கீழே இறக்கி வைத்துவிடலாம். கழுத்திற்குச் சங்கிலி பாரமாக இருந்தால்
அதனைக் கழற்றி வைத்துவிடலாம். ஆனால் குடும்பத்திற்குப் பாரம் ஏற்படும்போது அதை எவ்வாறு இறக்கி
வைப்பது? குடும்பத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் பகிர்ந்துகொண்டு ஆளுக்கொரு வேலையைச்
செய்தால் அதனைக் குறைத்துவிடலாம். இக்கட்டுரையில் குடும்பப் பாரத்தைக் குறைப்பதில் மாணவர்களாகிய நமது
பங்கு என்ன? அதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதனைப் பற்றி அலசி ஆராயப் போகிறோம்.
சேவல் எழும் முன்பே மாணவர்களாகிய நாம் வைகறையில் எழுந்து பள்ளிக்குப் புறப்படுகிறோம். பின்
பாடங்கள், இணைப்பாட நடவடிக்கைகள் என்று அனைத்தையும் முடித்துவிட்டு மாலையில் கதிரவன் மறைந்த பிறகே
நொந்து நூலாகி வீடு திரும்புகிறோம். பள்ளிக்குச் சென்றுவரும் நமக்கே இந்தக் கதி என்றால் அலுவலகத்திற்குச்
சென்று ஏறியிறங்கி வேலை பார்த்து, முதலாளியிடம் திட்டுகள் வாங்கி, மாலை இரயிலிலும், பேருந்திலும் இருக்கும்
கூட்டத்தில் நசுங்கிப் பிழியப்பட்டு வரும் பெற்றோர்களுக்குக் களைப்பு எந்த அளவு இருக்கும் என்று சற்று
யோசித்துப் பாருங்கள். அதனுடன் அவர்களின் பணி ஓய்ந்துவிடாது. வீட்டுப்பணிகள் வேறு. சமைப்பது, வீட்டைச்
சுத்தம் செய்வது, துணி துவைப்பது, அவற்றை மடிப்பது என்று நீண்டுகொண்டே போகும். இத்தகைய வேளைகளில்
மாணவர்களாகிய நாம் வீட்டுப்பணிகளில் நம் பெற்றோர்களுக்கு உதவிக்கரம் நீட்டலாம். வீட்டைச் சுத்தப்படுத்துவது,
நமக்குத் தேவையானதை நாமே செய்துகொள்வது போன்றவற்றை நாமே கவனித்துக்கொண்டால் பெற்றோர்களுக்கு
ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்கும். வீட்டுப் பொறுப்புகளை நாம் திட்டமிட்டுச் செய்தால் ‘பணிப்பெண்’ என்ற
86
அனாவசிய செலவிற்கு இடமே இருக்காது. பணிப்பெண்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தை மிச்சப்படுத்திச்
சேமித்தோமானால் அவசரக் காலங்களில் அது நமக்கு உதவும்.
என்ற குறளுக்கொப்ப, ஒவ்வொரு பெற்றோரின் கனவாக இருப்பது தன் பிள்ளை கற்றோர் போற்றும் சிறந்த
அறிஞனாக வேண்டும் என்பதே ஆகும். இக்கனவினை நிறைவேற்ற இரவுபகல் பாராது உழைத்துப் பிள்ளைகள்
படிப்பதற்கான எல்லா வசதிகளையும் செய்துகொடுக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தேர்வு முடிவுகள் வரும்போது
எந்தப் பாடத்தில் மதிப்பெண்கள் குறைந்திருக்கிறதோ அந்தப் பாடத்திற்கு உடனே துணைப்பாடம் ஏற்பாடு
செய்கிறார்கள். பணம் நம்முடைய படிப்புக்கு எந்த விதமான தடையாகவும் இருக்கக் கூடாது என்பதற்காகவே
இவ்வளவும் செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது, நாமும் நன்றாகப் படிக்க வேண்டும் அல்லவா?. நம்மால்
எவ்வளவு முயற்சி செய்ய முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள் கற்பிக்கும் பொழுது
கவனமாகக் கேட்க வேண்டும். படிக்கும் பருவத்தில் படிப்பு ஒன்றையே இலக்காக வைத்துப் பெற்றோர்களின்
மனப்பாரத்தைக் குறைத்து, நல்லதொரு வேலைக்குச் சென்று குடும்பப் பாரத்தையும் குறைக்க வேண்டும்.
குடும்பம் என்பது அன்னையும் பிதாவும் மட்டும் கொண்டது அல்ல. அக்கா, அண்ணன், தம்பி, தங்கை என்று
அனைவரையும் கொண்டது. எனவே, அது மகிழ்வுடன் திளைத்திருக்க எல்லாரும் தங்கள் பங்கினை ஆற்ற
வேண்டும். ஒவ்வோர் உறுப்பினரும் தோள்கொடுத்துக் குடும்பத்தினைத் தாங்கும்போது, அது எந்நாளும் பூமியை
நோக்கி விழாது.
அருஞ்சொற்பொருள்
87
பாரமாகிவிடும் சுமையாகிவிடும்
ஆசான் ஆசிரியர்
சௌகரியங்களையும் சுகங்களையும்
கரியாக்கக்கூடாது வீணாக்கக்கூடாது
வைகறையில் அதிகாலையில்
ஓய்ந்துவிடாது நின்றுவிடாது
88
பயிற்சி வினா 32 மற்றும் 33
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.
32. காலத்தின் அருமையைப் பற்றி உனக்கு உணர்த்திய ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதன்மூலம் நீ
கற்றுக்கொண்ட பாடத்தைப் பற்றியும் விவரித்து எழுதுக.
முன்னுரை விளக்கம்
கருத்து 1 விரிவாக்கம்
கருத்து 2 விரிவாக்கம்
89
கருத்து 3 விரிவாக்கம்
கருத்து 4 விரிவாக்கம்
90
கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:
அருஞ்சொற்பொருள்
சார்பில் பதிலாக
ஞாலம் உலகம்
பருவம் காலம்
நிற்கும் மறையாது
91
33. இன்றைய இளையர்கள் எதிர்நோக்கும் சவால்களையும், அவற்றை எவ்வாறு அவர்கள்
சமாளிக்கலாம் என்பதனையும் விளக்கி எழுதுக.
முன்னுரை
இடையுரை
92
➢ தேவையானால் நண்பர் வட்டத்தை மாற்றிக்கொள்ளலாம்
➢ தன்னம்பிக்கையையும் மனஉறுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்
➢ படிப்பில் கவனத்தை அதிகரித்தால் சிந்தனைச் சிதறல் ஏற்படாது
முடிவுரை
இனிய தொடர்கள்
அருஞ்சொற்பொருள்
93
கசந்துவிடும் வெறுப்படைந்துவிடும்
திட்பம் உறுதி
பிற மற்றவை
வாக்கினிலே சொல்லிலே
மடமையடா முட்டாள்தனமடா
தளும்பாது சிந்தாது
94
தொகுதி 12
நமது பண்பாட்டில் மிக இன்றியமையாத ஒன்று, மற்றவர்களை மதித்தும் அவர்களுடைய வயதிற்கு மரியாதை
செலுத்தியும் நடந்துகொள்வதே ஆகும். ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்பது தெய்வ வாக்கு. நம்மைப் பத்து மாதம்
வயிற்றில் சுமந்து எல்லையில்லா அன்பை அளித்து வளர்த்து வரும் நம்முடைய தாய்க்கு மரியாதை செலுத்துவது
முக்கியம் மட்டுமல்ல, அது நம்முடைய கடமை என்றே கூறலாம். ஆனால் அண்மையில் செய்தித்தாளில் வெளிவந்த
‘தாயைக் கொடுமைப்படுத்திய மகன்’, ‘அன்னையை அறைந்த மகள்’ போன்ற நெஞ்சை உலுக்கும் செய்திகளைப்
படித்தபொழுது என் மனம் கொதித்தெழுந்தது.
‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்று பெற்றோர்கள் தீயவனாக இருந்தாலும் என்றும் அவன்
மகன் தான் என்று நினைக்கிறார்கள். ஆனால் நன்றிகெட்ட சில பிள்ளைகளோ, தாயைக் காக்க வேண்டும் என்ற
பண்பாட்டினை மறந்து, பிள்ளையைச் சித்திரமாய் வளர்க்கும் தாயையே சிதைக்கிறார்கள்! ‘தாயிற் சிறந்ததொரு
கோவிலும் இல்லை என்றால், தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என்று நம் சான்றோர் தந்தை புகழ்
பாடியுள்ளனர். நம்மைப் பாராட்டிச் சீராட்டி வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நம்மை ஆளாக்குபவர்
நம் தந்தையே. அவருக்கு நாம் கண்டிப்பாக மரியாதை செலுத்திப் பணிவாக நடந்துகொள்ள வேண்டும். ஆனால்,
இக்கால இளையர்களோ, சூரியனும் சந்திரனும் போல் நமது வாழ்க்கைக்கு ஒளியூட்டிய தாயையும் தந்தையையும்
புறக்கணித்து, வயதான காலத்தில் அவர்களை முதியோர் இல்லத்தில் தள்ளிவிடுவதை நாம் கண்கூடாகப்
பார்க்கிறோம்.
உடை என்பது மேனியை மறைக்கவே தவிர, அதைக் காட்டுவதற்கு அல்ல. சேலை என்பது எந்தக்
கலாச்சாரத்திலும் இல்லாத ஓர் அற்புத உடையாகும். அது பெண்களின் முழு உடலையும் மறைத்து அவர்களுக்குப்
பூரண லட்சணத்தைக் கொடுக்கும். ஆனால், இக்கால இளம் பெண்களோ புடைவை என்ற பெயரில் மெல்லிய துணி
ஒன்றினைப் பாதி உடம்பு தெரியும்படி உடம்பில் சுற்றிக்கொள்கிறார்கள். தெய்வத்தைத் தரிசிக்கக் கோவிலுக்குச்
செல்லும்போதும் ‘ஜீன்ஸ், டீ-சர்ட்’ என்று மேற்கத்திய ஆடைகளை அணிந்து வருகிறார்கள். இதைக் காண்பதற்கு
மிகவும் வருத்தமாக இருக்கிறது.
‘குடும்பம் ஒரு கோயில், அதில் அன்னையும் தந்தையும் தெய்வங்கள்’ என்று பாடினார் ஒரு கவிஞர். இது
நமது பண்பாடு. குடும்பத்தை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். ஆனால், இக்கால இளைஞர்களுக்கோ
நண்பர்கள்தாம் முக்கியமாக இருக்கிறார்கள்.
என்ற பொன்மொழி பொய் என்று நான் கூறவில்லை. ஆனால், நண்பர்களால் எப்போதுமே நம் அருகில்
இருக்க முடியாது. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆனால், நம் குடும்ப
உறுப்பினர்கள் என்றுமே நம்முடன் இருப்பவர்கள். சிக்கலான தருணங்களிலும் நம்மைக்கைவிட மாட்டார்கள்.
அப்பொழுதும் ஒன்றாகக் கைகோர்த்தே நடப்பார்கள். ஆனால், இதைப் புரிந்துகொள்ளாத இளைஞர்கள்
தங்களுடைய பெற்றோர்களின் மதிப்பை அறியாமல் அவர்களை மதித்து நடந்துகொள்ள மறுக்கிறார்கள்.
முற்காலத்தில் பெற்றோர்களைக் கடவுள் போல் மதித்து மரியாதையுடன் பேசிய காலம் எல்லாம் மண்ணுக்கு அடியில்
புதைக்கப்பட்டுவிட்டது, நமது கலாச்சாரமும் பண்பாடும் அதே சமயத்தில் விரைவாக மறைந்துகொண்டே
செல்கின்றன.
சங்க காலத்தில் வீரமும் துணிச்சலும் நமது மறத்தமிழர்களின் இரு கண்களாக இருந்தன. ஆனால், அது
இப்போது மெதுவாக மறைந்துகொண்டே போகிறது. நம்முடைய மூத்தவர்கள் போரிலும் பூசலிலும் கலந்து
அவர்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதற்கு எழுந்து நின்றார்கள். ஆனால், இக்கால இளைஞர்களோ சமுதாயம்
நம்மைத் தவறாக எடைபோட்டு விடுமே, என் நண்பர்கள் என்னைத் தவறாக நினைப்பார்களே என்று
அவர்களுடைய கருத்தைப் பகிர்ந்து கொள்ளாமலே எல்லாவற்றிலும் விட்டுக் கொடுத்து அடங்கி
நடந்துகொள்கிறார்கள். அடங்கி ஒழுக்கமாக நடந்துகொள்வது தவறு என்று நான் கூறவில்லை. ஆனால்
துணிச்சலாகவும் தைரியத்துடனும் நடந்துகொள்ளாமல் போனால் நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரும் நம்மைத்
தலையாட்டும் பொம்மைகளாகக் கருதிக் கீழே தள்ள முயற்சி செய்வார்கள். அதனால் இளைஞர்கள்
இப்பண்பாட்டையும் பழக்கத்தையும் மறந்துவிடாமல் துணிச்சலுடன் வேலையைச் செய்ய வேண்டும்.
‘காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும்’ என்று பாடிச் சென்றார் ஒரு கவிஞர். இந்தக்
காலத்திற்கேற்ற கோலம் எதைக் குறிக்கிறது என்றால், மாறிவரும் தொழில்நுட்பம், நாடு கண்டுவரும் முன்னேற்றம்
இவற்றுக்கேற்ப நாமும் மாற வேண்டும் என்பதுதான். ஆனால், பண்பாடு, கலாச்சாரம் என்பது ஒரு மொழியின்
அடையாளம். அது எக்காலமும் மாறாது. ஆனால், இக்கால இளைஞர்கள் நமது பண்பாடு, கலாச்சாரம்
96
ஆகியவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகத் துறப்பதைப் பார்க்கும்போது அது அடியோடு மறைந்துவிடுமோ என்று
அச்சமாக இருக்கிறது.
அருஞ்சொற்பொருள்
97
பயிற்சி வினா 35 மற்றும் 36
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.
முன்னுரை விளக்கம்
● எதிர்பார்ப்புகள் பொய்யாகலாம்
● அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு
● நியாயமான எதிர்பார்ப்பு நடக்கக்கூடும்
● உழைப்புக்கு ஏற்ற எதிர்பார்ப்பு இருத்தல் அவசியம்
● அப்போது நாம் ஏமாற்றமடையமாட்டோம்
கருத்து 1 விரிவாக்கம்
கருத்து 2 விரிவாக்கம்
98
கருத்து 3 விரிவாக்கம்
கருத்து 4 விரிவாக்கம்
99
கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:
● நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்
● நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
● நினைப்பது ஒன்று நடந்தது ஒன்று
● எதிர்பார்ப்புகள் என்பது எதிர்பாராமலும் வரும்
● பிடிக்காத கஞ்சி பழங்கஞ்சி
● நினைத்தாலே இனித்தது
● தலைகால் புரியாத மகிழ்ச்சி
● பார்த்துப் பார்த்து வாங்கினேன்
● என் முகத்தில் இனம்புரியாத பரவசம்
● ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்தது
● வெட்கத்தால் முகம் சுருங்கியது
● தொட்டுக்கூடப் பாரக்கவில்லை
● எதிர்பார்ப்பு எரிமலையாய் வெடித்தது
● குழந்தைக்குப் பொம்மையை வாங்காமல் தங்கச் சங்கிலியை வாங்கியதுபோல்
அருஞ்சொற்பொருள்
மதி அறிவு
பரவசம் மகிழ்ச்சி
100
36. ‘சிங்கப்பூர் வாழ்வதற்கேற்ற வளமிக்க நாடு’ இக்கருத்தினை நீ ஏற்றுக்கொள்கிறாயா? ஏன்?
(ஏற்றுக்கொள்கிறேன் என்ற அடிப்படையில் அமைந்த கருத்துகள்)
முன்னுரை
இடையுரை
முடிவுரை
➢ மக்கள் நாடு
➢ குடிமகனாக இருப்பதற்குப் பெருமைப்பட வேண்டும்
➢ நாட்டின் முன்னேற்றத்திற்கு நமது பங்கை ஆற்ற வேண்டும்
➢ மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கட்டிக்காக்க வேண்டியது நமது கடமை
இனிய தொடர்கள்
அருஞ்சொற்பொருள்
தர பிரிவு
102
அங்கீகாரம் அடையாளம்
ஊதியம் சம்பளம்
நெருக்கடியான இக்கட்டான
தருணத்தில் நேரத்தில்
சலுகைகள் உரிமைகள்
நிதிப்பாதுகாப்புத் திட்டம்
காப்புறுதி
(insurance)
பிணி நோய்
103
தொகுதி 13
வியர்வைத் துளிகள் என்னுடைய முகத்தில் பளபள என்று மின்னின. “நான் இன்னும் வேகமாக ஓட
வேண்டும்” என்று என் மனது சொல்லச் சொல்ல என் கால்கள் அதற்கு ஈடுகொடுக்காமல் நகர மறுத்தன. தோல்வி
மீண்டும் என்னுடைய கண்களுக்கு எட்டிவிட்டது. இந்த முறையாவது நான் இதில் தேர்ச்சி பெறுவேன் என்று
எனக்கு அடி மனத்தில் உள்ளங் கையளவு ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்த நம்பிக்கையும் நீர்க்குமிழிபோல்
மறைந்து விட்டது.
நான் இந்த முறையும் வெற்றிக் கிண்ணத்தை என்னுடைய விழிகளால் காண இயலாது என்று
எண்ணும்பொழுது என்னுடைய மனம் சோகத்தில் மூழ்கியது. என்னால் மட்டும் ஏன் மற்றவர்களைப்போல்
ஓடமுடியவில்லை? வாழ்க்கை முழுவதும் நான் இவ்வாறு மற்றவர்கள் பின்னாடியே நிற்க வேண்டியதுதானா? நான்
இவ்வாறான கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்கும் தேடலில் செல்லும்போது தான் என்னுடைய பயிற்சியாளர்
திரு. ராமுவைச் சந்தித்தேன்.
“வணக்கம் மாணவர்களே! இன்று உங்களுக்கு நான் பள்ளியில் ஒரு மிக முக்கியமான நபரை
அறிமுகப்படுத்தப் போகிறேன். அவர் வேறு யாரும் இல்லை! நம் பள்ளியில் புதிதாகச் சேர்ந்த ஆசிரியர் ராமுவே
ஆவார்! வாருங்கள், அவரை நாம் அனைவரும் கைதட்டி வரவேற்கலாம்!” என்று எங்களுடைய தலைமையாசிரியர்
பூரிப்புடன் செப்பினார். அவர் கண்களில் தெரிந்த வெளிச்சம் மற்றும் முகத்தில் இருந்த தன்னம்பிக்கையும் என்
கவனத்தை அவர் மேல் சாய்த்தது. இவர் நமக்கு ஏதேனும் பாடத்தைக் கற்பிக்க மாட்டாரா என்று என் எண்ண
அலைகள் கரைமோதித் திரும்புவதற்குள் திரு.ராமு தான் எங்கள் வகுப்பின் விளையாட்டு ஆசிரியர் என்னும் செய்தி
என் காதுகளுக்கு எட்டியது. விசையைத் தட்டியவுடன் மின்னி மறையும் மின்விளக்குப்போல் அப்போது என்
மனத்தில் ஒரு வெளிச்சம் தோன்றி மறைந்தது.
என் மனம் ‘பக் பக்’ என்று இவ்வளவு விரைவாக அடித்ததிலிருந்து என் உடலால் அந்த ஓட்டப் பயிற்சியை
எடுத்துக்கொள்ள முடியவில்லை என்பது எனக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. நான் அருகில் இருந்த ஒரு
நீண்ட ‘பெஞ்சின்மீது’ அமர்ந்து இளைப்பாறினேன். என் நண்பர்களைத் தேடினேன். அவர்கள் அனைவரும்
இன்பத்துடன் ஓடி முடித்த பிறகு தங்கள் நேரத்தைப் பூப்பந்து விளையாட்டில் கழித்துக்கொண்டிருந்தனர்.
அவர்களைக் கண்டு நான் பொறாமைப்படவில்லை. ஆனால், அவர்களைப் போல என்னால் ஏன் விரைவாக ஓட
முடியவில்லை என்ற ஏக்கம் மட்டும் என் மனத்தில் ஒலித்துக்கொண்டே இருந்தது. நான் அப்படியொன்றும் உடல்
பருமனானவள் இல்லை. என்னைவிடப் பருமனான என் நண்பன் நவீன்கூட என்னை முந்திவிட்டானே!
104
திரு. ராமு என்னைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டேயிருந்தார். அவர் என் அருகில் வந்தார்.
“கவலைப்படாதே மாலா! கவலைப்படாதே! உன் நிலைமை எனக்கு நன்கு புரிகிறது. நான் திண்ணமாக உன்னால் ஓட
முடியாது என்று நீ வைத்திருக்கும் சிந்தனையை மாற்றப் போகிறேன். நாம் இருவரும் இன்றிலிருந்து சேர்ந்து
உழைப்போம் மாலா, கண்டிப்பாக வெற்றி நம்கையில்,” என்று கண்களில் நம்பிக்கையுடன் கூறினார். அவர்
வார்த்தையில் உண்மை இருப்பதை என்னால் உணர முடிந்தது. மங்கிய ஒளி என்முன் தென்பட்டது. அது பிரகாசமாக
ஒருநாள் எரியும் என்ற நம்பிக்கை தீபம் என்னுள் சுடர்விட்டது.
திரு.ராமுவும் நானும் அடுத்த நாளில் இருந்தே பள்ளியில் அதிகாலை நேரத்தில் சந்தித்தோம். என்னுடைய
கனவுகளுக்ககாக இவ்வளவு உழைப்பும் ஆர்வமும் இன்று வரை அவரைப் போல் யாரும் என்னிடம்
காட்டியதில்லை. அல்லும் பகலும் என் கால்கள் சோர்ந்து போகும் வரை நாங்கள் இருவரும் பயிற்சி செய்தோம்.
நான் இப்பயிற்சி நேரங்களின் போது என் உடல் பலத்தை மட்டும் வளர்க்கவில்லை. அதனுடன் சேர்ந்து என் மேல்
எனக்கு இருந்த நம்பிக்கையையும், விடாமுயற்சியுடன் இருந்தால் எதையுமே சாதிக்க முடியும் என்ற எண்ணத்தையும்
வளர்த்துக்கொண்டேன். பயிற்சியின் கடுமை தாங்க முடியாமல் துவண்டு விழும் போதெல்லாம் திரு.ராமு,
என்ற பாடல் வரிகளைப் பாடுவார். எனக்குச் சிரிப்பு வரும். நான் என் கனவுகளை விட்டுக் கொடுக்காமல்
மீண்டும் தொடர்வேன். இவ்வாறு திரு. ராமு ஒவ்வொரு முறையும் என்னைத் தூக்கிவிட்டு நான் உடைந்து போகாமல்
என்னைப் பாதுகாத்தார்.
என் வாழ்க்கையைத் திசை திருப்பிய அந்த நாள் வந்தது. ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்ற
பழமொழிக்கு உண்மைப் பரீட்சையாக அமைந்தது இந்நாள். என் வாழ்க்கையில் இதை மட்டும் சாதிக்க முடியாது
என்று நினைத்த அச்செயலையே நான் செய்து உலகத்துக்குக் கடின உழைப்பாளியான மாலாவைக் காட்ட
எண்ணினேன். ஆரம்ப வரியில் நின்றுகொண்டிருக்கும் பொழுது எனக்கு மனத்தில் இருந்த வெறி இன்றுவரை
அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இது தான் எனக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு. இந்த ஓட்டப்பந்தயமே
அனைத்தையும் தீர்மானிக்கும். துப்பாக்கி ஒலிச் சத்தம் ‘கணீர்’ என்று கேட்டது. என் கால்கள் தானாகவே ஓட
ஆரம்பித்தன. இல்லை இல்லை, பறந்து நான் ஓடினேன் ஓடினேன் ஓடினேன் மெதுவாக என் கனவை நோக்கி மெல்ல
மெல்ல ஓடினேன். ஓட்டப் பந்தயத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்க நெருங்க என் இதயம் இன்னும் விரைவாக
அடித்துக்கொண்டே இருந்தது. நான் ஓட்டப் பந்தயத்தை முடித்து வென்றேன். வெற்றி என் கையில்.
வாழ்க்கையில் நம்பிக்கையே இல்லாத என்னையும், என்னால் சாதிக்க இயலாது என்று எனக்கு இருந்த
எண்ணத்தையும் நான் மூட்டைக் கட்டிப் புதைத்து விட்டேன். திரு.ராமு என்னை மேலும் சிறந்த மனிதனாக
மாற்றியிருக்கிறார்.
‘யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில்’ என்று எனக்குப் புரிய வைத்த
அவருக்கு நான் வாழ்க்கை முழுவதும் கடமைப்பட்டுள்ளேன்.
105
அருஞ்சொற்பொருள்
நபரை மனிதரை
செப்பினார் சொன்னார்
திண்ணமாக உறுதியாக
சுடர்விட்டது எரிந்தது
106
பயிற்சி வினா 38 மற்றும் 39
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.
முன்னுரை விளக்கம்
கருத்து 1 விரிவாக்கம்
கருத்து 2 விரிவாக்கம்
107
கருத்து 3 விரிவாக்கம்
கருத்து 4 விரிவாக்கம்
108
கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:
● பிடித்தது கிடைக்காவிட்டால் கிடைத்ததைப் பிடித்ததாக மாற்றிக்கொள்
● செய்வன திருந்தச் செய்
● விரலுக்கேற்ற வீக்கம்
● மலையைத் தூக்கி என் முதுகில் வைத்ததுபோல்
● ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால்
● சொல்ல வந்தது தொண்டைக்குழிக்குள் நின்றது
● கால் நகரமாட்டேன் என்கிறது
● ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா?
● கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
● தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்
● சொல்வது எளிது செய்வது கடினம்
● யானையின் பாரத்தை எலி தாங்குமா?
● எதற்கும் ஓர் எல்லை உண்டு
● அளவுக்கு மீறிய ஆசை
● மனச்சுமையை இறக்கி வைத்தேன்
● நீண்ட பெருமூச்சு விட்டேன்
அருஞ்சொற்பொருள்
வற்புறுத்தி கட்டாயப்படுத்தி
மங்கியது இருளடைந்தது
பாரத்தை கனத்தை
110
39. சிங்கப்பூரர் பெரும்பாலோர் வெளிநாடுகளில் குடியேற விரும்புவதில்லை - கருத்துரைக்க.
முன்னுரை
இடையுரை
111
முடிவுரை
இனிய தொடர்கள்
அருஞ்சொற்பொருள்
ஊழல் இலஞ்சம்
பிணி நோய்
112
உறுபசியும் கடும் பசியும்
தொகுதி 14
40. நீ மிகவும் விரும்பும் ஒரு தலைவர் பற்றியும் அவர் உன்னைக் கவர்ந்த காரணத்தையும்
விவரித்து எழுதுக. (லீ குவான் இயூ)
‘வானமும் தொட்டுவிடும் தூரம்தான்’ என்றார் மகாகவி பாரதி, ஆம்! ‘நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும்’
மிகக்கொண்ட பாரதி ஒருவரால்தான் இப்படிப்பட்ட வைரவரிகளை வாரிக்கொட்ட முடியும். ‘நொந்தே போயினும்
வெந்தே மாயினும் எனது தேச விடுதலைக்குப் போராடுவேன்; எவர் தடுத்தாலும் அஞ்சாது வாதாடுவேன்’ என்று
அன்று அந்த அமரகவி முழங்கியமைக்கு அவரது உள்ளம் முழுவதும் குடி கொண்டிருந்த தன்னம்பிக்கையே
காரணம். இவ்வாறு, ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாக’ நின்று நிலைபெற்ற மாமனிதர்கள்
உலகில் பலர். அந்த வரிசையில் எனது தாய்நாடாம் சிங்கையை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்ற உன்னதத்
தலைவர் அமரர் லீ குவான் இயூ அவர்கள். இதை உணரும்போது உள்ளம் பூரிக்கின்றது; உடல் சிலிர்க்கின்றது;
கண்ணீர் துளிக்கின்றது; கரம் குவிகின்றது. உலகமே கண்டு வியந்த அந்த விந்தை மனிதர் எவ்வாறு எனது
உள்ளத்தைக் கொள்ளை கொண்டார் என்பதையும், ஓய்வறியா அந்த உத்தமர் மீன்பிடிக் கிராமமாக இருந்த
சிங்கையை எவ்வாறு மின் அணுச்சாதன முதல்தர தேசமாக மாற்றிக் காட்டினார் என்பதையும் விவரிக்க என்
உள்ளம் மிகவும் விழைகின்றது.
திரு லீ அவர்கள் எளிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்தான் என்றாலும் தமது இடைவிடா முயற்சியாலும்
தளராத உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்து பாரினில் தலை நிமிர்ந்தார்.
113
“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவில்லா
ஊக்கம் உடையான் உழை”
தளராத ஊக்கம் உடையவனிடம் செல்வம் தானே சென்று சேரும் என்று திருவள்ளுவர் சொன்னதைப்போல
அயராது உழைத்த திரு லீயிடம் எல்லாச் சிறப்பும் தானே வந்து சேர்ந்தன. திரு லீ அவர்கள், லண்டனில் சட்டம்
பயின்று சிங்கை வந்து வழக்கறிஞராகத் தமது வாழ்க்கைத் தொழிலைத் தொடர்ந்தார். அத்தொழிலையே தொடர்ந்து
செய்து அவர் ஒரு பெரும் பணக்காரராக ஆகியிருக்கக்கூடும். ஆனால், அவர் அவ்வாறு தமது தொழிலைத்
தொடரவில்லை. இயல்பிலேயே அவர் ஒரு போராளி என்பதனால் ஜப்பானியர், பிரிட்டிஷார் என எவருக்கும் தமது
நாட்டை ஆட்டிப் படைக்கும் அதிகாரம் இல்லை என்னும் உறுதி அவர் மனத்தினுள் ஆழமாகப் படிந்தது.
மாற்றாரின் ஆதிக்கக் காலத்தில் அவருக்குக் கிடைத்த வாழ்க்கை அனுபவங்கள் அவரது மனத்தில் மாறா
வடுக்களை ஏற்படுத்தின.
திரு லீ அவர்கள் இளம் தலைமுறையினருக்கு உலகத்தரம் வாய்ந்த உயர் கல்வி, மோதல்களும் வேலை
நிறுத்தங்களும் இல்லாத் தொழில் துறைகள், தடையில்லா வேலை வாய்ப்பு, அடுக்கு மாடிக் குடியிருப்புகள், மிக
நவீனப் போக்குவரத்து வசதிகள், புதிய தகவல் தொடர்புக் கருவிகள் என யாவும் அனைவருக்கும் கிடைக்கச்
செய்தார். ஊழலற்ற தூய்மையான அரசு நிர்வாகம், மக்களைப் பாதுகாக்கும் கடுமையான சட்ட திட்டங்கள்,
குற்றங்களுக்குப் பாரபட்சமற்ற தண்டனைகள், தூய்மையான சுற்றுப்புறங்கள் எனச் சிங்கப்பூர் மக்கள்
அனைவரையும் முதல்தரக் குடிமக்களாக நிலைபெறச் செய்தார்.
திரு லீ அவர்கள், ஆட்சித் திறமையும் அரசியல் நுணுக்கமும் மட்டுமே பெற்றவர் அல்லர்; தனிப்பட்ட
வாழ்க்கையில் மிக எளிமையானவர்; ஆடம்பரம் அற்றவர்; காட்சிக்கு எளியவர்; காலம் தவறாதவர்; பழைமையை
மதிப்பவர்; புதுமையை வரவேற்பவர். இவ்வாறு, எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். அதற்கு ஏடுகள் பல
தேவை. அவர், சிங்கைக்கு ஆற்றியது அரும் பெரும் சேவை.
‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடினார். அதைப் போல இன்றைய
நவீன சிங்கப்பூரின் ஒவ்வொரு சாதனையிலும், முன்னேற்றத்திலும், புகழிலும் சரித்திரத்திலும் அடிப்படையாய்ப்
பின்புலமாய் அமைந்து அவரே சிங்கை முழுதும் காட்சி தருகின்றார். சிங்கப்பூரைத் தமது நாடி, நரம்பு, குருதி,உயிர்
என எல்லாவற்றாலும் நேசித்த அப்பெருமகனாரே எனது உள்ளத்தை விட்டு அகலாத அரும் பெரும் மனிதராவார்.
வாராது வந்த மாமணியாம் அப்பெருமகனார் மீண்டும் பிறந்து சிங்கையின் தலைமையை ஏற்க வேண்டும்; அவரை
முன்னுதாரணமாகக் கொண்டு உலகம் மேலும் உயர வேண்டும்.
அருஞ்சொற்பொருள்
114
நொந்தே வருந்தியே கேளிர் உறவினர்
தருணம் நேரம்
சிதைவுகளை அழிவுகளை
41. விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தால் உன் மனம் வருத்தமடைந்தது. அது
என்ன சம்பவம் என்றும், அது உன்னை வருத்தமடையச் செய்ததற்கான காரணத்தையும்
விவரித்து எழுதுக.
முன்னுரை விளக்கம்
115
● தவறுமேல் தவறு செய்வது மன்னிக்க முடியாத தவறு
கருத்து 1 விரிவாக்கம்
கருத்து 2 விரிவாக்கம்
கருத்து 3 விரிவாக்கம்
கருத்து 4 விரிவாக்கம்
117
கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:
● தவறு என்பது தவறிச் செய்வது - தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் - தப்புச் செய்தவன் வருந்தியாகணும்
● தவறுகள் மனிதனின் பழக்கம் - அதை உணர்ந்தால் மன்னிப்புக் கிடைக்கும்
● உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் - தப்பைச் செய்தவன் தண்டனை பெறுவான்
● அலறல் சத்தம் எங்கும் எதிரொலித்தது
● சுருண்டு கீழே விழுந்தான்
● கல்மனம் படைத்தவன்
● நண்பன் என்று கூறிக்கொள்ளவே வெட்கப்பட்டேன்
● அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கேட்கும்
● தவறுகள் வருந்துவதற்காக அல்ல - திருந்துவதற்காக
● அடுத்தவர் சொல்லித் தெளிவது அறிவு
● அறிவுரை என்பது முட்டாளுக்குப் பயனற்றது
● குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்
● மனச்சாட்சியே சிறந்த நீதிபதி
● விரோதம் என்பது மறைந்திருக்கும் வியாதி
அருஞ்சொற்பொருள்
உடன்பாடில்லை ஒத்துக்கொள்ளவில்லை
குறுகுறுக்கும் அலைபாயும்
விரோதம் பகை
118
42. உதவும் மனப்பான்மையை எவ்வாறு சிங்கப்பூரர்களிடையே வளர்க்கலாம் என்பதற்கான
ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் விளக்கி எழுதுக.
முன்னுரை
இடையுரை
119
➢ அரசாங்கம் உதவும் மனப்பான்மையை மையமாகக்கொண்டு சாலைக்காட்சிகள் போன்றவற்றை நடத்தி
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்
➢ பேரிடர்களில் சிக்கித் தவிக்கும் அயல் நாடுகளைப் பற்றி எடுத்துரைத்து அதற்காக நிதிதிரட்டும்
நடவடிக்கைகளை அறிமுகம் செய்யலாம்
➢ பயன்படுத்திய புத்தகங்கள், பொம்மைகள், உடைகள் போன்றவற்றைக் குப்பையில் போடாமல் அதை
இல்லாதவருக்குக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கலாம்
➢ விரைவு உணவகங்களில் பணிபுரியும் முதியோருக்குச் சாப்பிட்டு முடித்த தட்டுகளைத் தானே அகற்றி,
உதவலாம்
முடிவுரை
இனிய தொடர்கள்
120
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
அருஞ்சொற்பொருள்
மையமாக நோக்கமாக
பேரிடர்களில் பெருந்துன்பங்களில்
ஒறுத்தல் தண்டித்தல்
வையகமும் பூலோகமும்
ஞாலத்தின் உலகத்தின்
உய்வு வாழ்வு
உபத்திரம் தொல்லை
தொகுதி 15
என்று நட்பிற்கு இலக்கணம் வகுத்தவர் வள்ளுவப் பெருந்தகை. நாம் பலருடன் பழகினாலும் அனைவருமே
நமக்கு உற்ற நண்பர்களாகி விடுவதில்லை. நண்பர்கள் இல்லாத வாழ்க்கை பூக்கள் இல்லாச் சோலை போன்றது. என்
தோட்டத்திலும் அப்படியொரு நண்பன் பூத்திருந்தான். பாலைவனமாக இருந்த என் வாழ்க்கையைப் பூத்துக்
குலுங்கும் சோலைவனமாக மாற்றினான்.
121
‘உன் நண்பனைப் பற்றிச் சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்றார் விவேகானந்தர். ஏனென்றால் நம்
வாழ்வில் பெரும் பங்கு வகிப்பவர்கள் நண்பர்களே. நான் என் பெற்றோருக்கு ஒற்றைப் பிள்ளை. என் பெயர்
பிரவீன். என் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் பள்ளி முடிந்ததும் நான் என்றுமே வீட்டிற்குச்
சென்றதில்லை. பல மணி நேரம் நண்பர்களுடன் செலவழித்த பின்னர் தான் வீட்டிற்குச் செல்வேன். நான் நன்றாகப்
படிக்கும் மாணவன் என்றாலும், புதிய நண்பர்களின் சேர்க்கையால் முதலில் படிப்பில் என் கவனம் சிதறத்
தொடங்கியது. வரிசையாகத் தீயபழக்கங்கள் என்னிடம் வந்துசேர்ந்தன. என் பெற்றோரின் அறிவுரைகளைச் சிறிதும்
மதிக்காமல் கண்மூடித்தனமாகத் திரிந்தேன். என் நண்பர்களில்லா வாழ்க்கை நரகம் என நினைத்து அவர்களுடன்
மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தேன். ‘கூடாநட்புக் கேடாய் முடியும்’ என்ற பழமொழியைக் கற்றறிந்தும் அதைப்
பற்றித் துச்சமும் எண்ணாமல் என் வாழ்க்கையைத் தீய நண்பர்களுடன் உல்லாசமாகக் கழித்திருந்தேன்.
அப்போதுதான் நவீன் என்னும் ஞான ஒளி என் வகுப்பறைக்குள் வீசியது. புன்முறுவல் நிறைந்த முகம்,
செந்நிற மேனி, கருஞ்சுருட்டைக் கேசம், அளவான உடற்கட்டு, அனைவரிடமும் கலகலப்பாகப் பழகும் இயல்பு
இவற்றுடன் எங்கள் வகுப்பில் புதிதாக வந்து சேர்ந்தான் நவீன். ஆனால், அதற்கும் மேலாக, “நேற்று நடந்த வகுப்புத்
தேர்வில் நவீன்தான் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறான்,’’ என்று ஆசிரியர் அறிவித்ததும், படிப்பிலும் அவன்
புலி என்பதை நான் அறிந்துகொண்டேன்.
எனக்கென்று ஒரு நண்பர் வட்டம் இருந்ததால் நவீனை நான் அதிகமாகக் கண்டுகொள்வதில்லை. ‘இலை
மேல் உள்ள பனித் துளி போலத்’ தான் அவனுடன் நான் பழகினேன். அவனும் அப்படித்தான். என்னுடன் அதிகம்
பேசுவதில்லை. ஆனால், என்னைக் கண்டபோதெல்லாம் அவனின் முகத்தில் புன்முறுவல் மலர்ந்திருக்கும். நாட்கள்
செல்லச் செல்லப் புன்முறுவல் இதழ்விட்டு எங்கள் நட்பும் விரிந்தது.
‘பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்’ என்பது போல நவீனுடன் நான் நெருக்கமடைய நெருக்கமடைய
என்னுடைய பாதையிலும் மணம் வீசத் தொடங்கியது. தீய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்துப் படிப்பில் கவனம்
செலுத்துமாறு நவீன் என்னைத் தொடர்ந்து வலியுறுத்த ஆரம்பித்தான். அது தொடக்கத்தில் எனக்குக் கோபத்தை
விளைவித்தாலும் ‘வாழைப் பழத்திற்குள் ஊசியை ஏற்றுவதுபோல’ நவீன் என் நல்லதுக்குத்தான் சொல்கிறான்
என்பதை உணர்ந்தேன். ‘உனக்கென்ன எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறாய், என்னைப் பார்! என் பெற்றோர்
என்னைக் கவனிப்பதே இல்லை, எனக்கு வீட்டிற்குச் செல்லவே பிடிக்கவில்லை. அதனால்தான் நண்பர்களுடன்
சுற்றுகிறேன்’ என்று ஒருமுறை நவீனுடன் சண்டை பிடித்தேன். அதற்கு அவன் கூறிய பதில் இன்றும் என் மனத்தில்
‘பசுமரத்தாணி போல’ உள்ளது.
“பிரவின், உனக்குத் தெரியுமா? எனக்கு அப்பா கிடையாது. என் அம்மா கஷ்டப்பட்டு இரண்டு வேலை
பார்த்து என்னைப் படிக்க வைக்கிறார். அவரும் நான் பள்ளி முடிந்து வரும்போது வீட்டில் இருப்பதில்லை,
வேலைக்குச் சென்றுவிடுவார். அவர் எனக்காகத்தான் உழைக்கிறார் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். என்
கடமை என்ன என்பதை நான் புரிந்துகொண்டேன். அவருக்கு நான் செய்யும் ஒரே கைம்மாறு நன்றாகப் படிப்பது
மட்டும்தான். மாறி வரும் நவீன காலத்தில் ஒருவருக்குக் கல்வி மிக அவசியம்.
122
என்பது வள்ளுவர் வாக்கு. இவ்வயதில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் நம்மைச் செதுக்கி நல்ல
பாதையில் இட்டுச் செல்ல வேண்டும். உன் பெற்றோர்கள் உன் வளமான எதிர்காலத்திற்குப் பொருள் ஈட்டுகிறார்கள்.
அதை முதலில் உணர்ந்துகொள். ஆனால், இறுதி வரை நம்முடன் வருவது கல்வி மட்டுமே. நீ நன்றாகப் படிக்கும்
மாணவன். உன் கவனத்தைச் சிதற விடாமல் படிப்பில் கவனம் செலுத்தி உன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்,”
என்று அக்கறையுடன் கூறினான்.
அன்று நவீன் எனக்குள் விதைத்த சிறு பொறி என் வாழ்க்கைப் போக்கையே மாற்றியது. ‘எரிகின்ற
விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்’ என்பது போல நான் நன்றாகப் படிக்கத் தொடங்கினேன். ஆனால்
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. எனக்குக் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் கலந்து
கொள்ள ஆர்வம் இருந்தாலும் தயக்கத்தினால் இதுவரை கலந்துகொண்டதே இல்லை.
ஆனால், நவீன் இதற்கு முன் உள்ள பள்ளியில் பலமுறை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள்
வாங்கியதைப் பற்றி என்னிடம் கூறியிருக்கிறான். அன்று பல பள்ளிகள் பங்கு பெறும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
நடைபெறப் போவதாகவும் மாணவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறும் ஆசிரியர் கூறியவுடன்,
முதல் மாணவனாக நவீன் தன் பெயரைக் கொடுத்தான். பின்னர் நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது
போட்டிகளில் ஆர்வம் இருந்தும் தயக்கம் காரணமாக நான் கலந்து கொள்ளாததைப் பற்றிக் கூறினேன். ஒவ்வொரு
வகுப்பிலும் ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதால், நவீன் தன் பெயரை எடுத்துவிட்டு என் பெயரைக்
கொடுத்துவிட்டான். அதை அறிந்து முதலில் நான் அவன் மீது கோபப்பட்டாலும், அவன் கூறிய சொற்கள் என்னை
நெகிழ வைத்தன. “பிரவீன் உன் திறமையை நிரூபிக்கும் நாள் வந்து விட்டது. அனைவருக்கும் அதை நீ உணரச்
செய்ய வேண்டும். இதன் மூலம் உன் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைக்கலாம்” என்று எனக்கு
நம்பிக்கையூட்டினான்.
ஒருவரின் முன்னேற்றத்திற்கு நட்பு உதவ வேண்டுமே ஒழிய, வீழ்ச்சிக்குக் காரணமாக அமையக் கூடாது.
ஔவையார் அதியமான் நட்பைப் பற்றி இவ்வுலகம் அறிந்ததே. ‘அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்’
என்பதற்கேற்ப, நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது நம் கைகளில்தாம் உள்ளது. ஒருவனுக்கு நல்ல நண்பர்கள்
அமைந்தால் அவன் வாழ்க்கை என்றுமே ‘குன்றின் மேலிட்ட விளக்கு’ போலப் பிரகாசமாக அமையும் என்பதில்
ஐயமில்லை.
அருஞ்சொற்பொருள்
கண்மூடித்தனமாக முட்டாள்தனமாக
துச்சமும் சிறிதும்
123
கேசம் தலைமுடி
கைம்மாறு உதவி
செதுக்கி செய்து
பொறி துகள் (spark)
நெகிழ உருக
மெருகேற்றி மேம்பட
124
பயிற்சி வினா 44 மற்றும் 45
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.
முன்னுரை விளக்கம்
கருத்து 1 விரிவாக்கம்
கருத்து 2 விரிவாக்கம்
125
கருத்து 3 விரிவாக்கம்
கருத்து 4 விரிவாக்கம்
126
கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:
● வாய்ப்பு ஒருமுறைதான் கதவைத் தட்டும்
● தேடும்போது வராது போகும்போது சொல்லாது
● பொது அறிவின் பெட்டகமாக
● மாணவர்கூட்டம் சூழ்ந்திருக்கும்
● தட்டுங்கள் திறக்கப்படும்
● நாட்டைப் பிரதிநிதிக்கும் உன்னத வாய்ப்பு
● சேறும் சகதியுமான
● கழிவறை வசதிகூட இல்லாத குடிசைகள்
● விரல் நுனியில் பதில்கள் இருந்தன
● கைநழுவிப் போனது
● எடுத்துவைத்திருந்தாலும் கொடுத்துவைத்திருக்க வேண்டும்
● வலிய வந்த சீதேவியை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டோமே
● மீண்டும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ?
அருஞ்சொற்பொருள்
பெட்டகமாக களஞ்சியமாக
127
45. சிங்கப்பூரர்கள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் - கருத்துரைக்க.
முன்னுரை
இடையுரை
128
➢ வீட்டைப் புதுப்பித்து அலங்கரிப்பதில் (renovation) அதிக ஆர்வம்
➢ கடன் அட்டை (credit card) பயன்படுத்திப் பொருள்கள் வாங்குதல்
➢ கடன் வாங்குதல்
➢ குறைந்த வருமானம்
➢ ஏட்டிக்குப் போட்டியான வாழ்க்கை முறை
முடிவுரை
இனிய தொடர்கள்
129
அருஞ்சொற்பொருள்
130
தொகுதி 16
மார்ச் பதினான்காம் தேதி, மற்றவர்களுக்கு இது இரண்டிலக்க எண்கள் கொண்ட ஒரு சாதாரணமான தினம்.
எனக்கோ, இன்று நான் இருபது வருடமாய்ச் சிறைத் தண்டனை அனுபவிக்கக் காரணமாய் இருந்த ஒரு தினம்.
அப்போது நான் ஓர் இளம் வயதுப் பெண்மணி. வாழ்க்கை என்னும் வாகனத்தில் உல்லாசப் பறவையாக நான்
வட்டமிட்டுக் கொண்டிருந்தேன். பிரச்சினை என்று கூறினால் கிலோ என்ன விலை என்று கேட்கும் வயது. எனக்குத்
தெரிந்த வார்த்தைகளெல்லாம் உல்லாசமும் நண்பர்களும்தான். ஆனால் அந்த இரண்டு வார்த்தைகள்தான் அன்று
என்னைச் சிறையில் தள்ளியது.
வாகனத்தின் வேகத்தை நான் கூட்டக் கூட்ட எனக்கு மகிழ்ச்சியும் கூடியது. எனக்குப் பின்னால் என்
நண்பர்களின் கைத்தட்லோசை முழங்க, வாகனத்தின் வேகம் கூட, தூக்கம் என் கண்ணை மறைத்தது. அப்போது என்
முன் ஓர் உருவம் தோன்றியது. வினாடிகள் அதிகரிக்க, அந்த உருவம் இன்னும் தெளிவாகத் தெரிந்தது. வாகனத்தை
நான் நிறுத்துவதற்கு முன், அது அந்த உருவத்தின் மீது மோதியது.
வாகனத்திலிருந்து இறங்கிய நாங்கள் உயிரில்லா அவ்வுடலைப் பார்த்தோம். நான் கொன்ற அந்த நபர்
யாரெனப் பார்த்தபோது, என் உயிர் நாடி ஒரு வினாடி நின்றது. அந்த நபர் என் உயிர்த் தோழி மாலா. எனக்காக
அவள் உயிரையும் கொடுப்பாள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அதற்கு அர்த்தம் இதுதான் என்று
131
நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அப்போது காவலர்களின் வாகன ஒலி எங்கள் செவிகளுக்கு எட்டியது. என்
மற்ற நண்பர்கள் அனைவரும் பயந்து ஓடத் தொடங்கினர். அதிர்ச்சியும் துக்கமும் என் கால்களைக் கட்டிப்
போட்டன. மறு நிமிடம் நான் சிறைச்சாலையில் இருந்தேன்.
நீதிமன்றத்தில் நீதிபதி எனக்குத் தூக்குத் தண்டனையை விதித்தார். மாலாவின் நினைவில் அணு அணுவாய்
இறப்பதைவிட, ஒரேயடியாய்த் தூக்கிலிட்டு இறப்பது எனக்குப் பெரும் பாக்கியமாய் இருந்தது. ஆனால், திடீரென
நீதிபதி என் தண்டனைக் காலத்தைக் குறைத்து எனக்கு இருபது வருடம் சிறைத் தண்டனையை விதித்துவிட்டார்.
நான் எவ்வளவு கெஞ்சியும் அவர் செவி சாய்க்கவில்லை.
சிறையில் இருந்த நான்கு சுவர்களும் என்னைக் கைகாட்டி அனுதினமும் குற்றம் சாட்டின. “பாதகி,
உனக்காக உயிரை விடுவேன் என்று கூறிய உயிர்த்தோழியின் உயிரைப் பறித்துவிட்டாயே. சுயலக்காரி. உன்
அத்துமீறிய சந்தோஷத்திற்காக உன் தோழியின் உயிரை அறுத்துவிட்டாயே! உன் தோழியின் குடும்பத்தாரைத் தீராத
துன்பத்தில் தள்ளிவிட்டுவிட்டாயே! இவற்றுக்கெல்லாம் நீ நிச்சயம் அனுபவிப்பாய். தூக்கில் போட்டுவிட்டால் ஒரே
நொடியில் இறந்துவிடலாம் என்று எண்ணுகிறாயா? கடவுள் உன்னை அணுஅணுவாகச் சித்திரவதை
செய்வதற்காகத்தான் தண்டனைக் காலத்தை நீட்டித்திருக்கிறான். அனுபவி!,” என்று என்னைக் கொல்லாமல்
கொன்றன.
‘சிறைக்கதவு திறந்து என்னை வெளியில் விட்டது. ஆனால், என் மனக்கதவு திறந்து என்னைக் குற்றமற்றவள்
என்று ஏற்க மறுத்தது.’ மாலாவின் இல்லம் நோக்கிச் சென்றேன். அவர்கள் இருந்த சுவடே அங்கில்லை. ஏதோ ஒரு
சீனக்குடும்பத்தினர் இப்போது அங்கிருக்கிறார்கள். அக்கம் பக்கம் விசாரித்துப் பார்த்ததில் மாலாவின் குடும்பத்தார்
எங்கு சென்றார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. அவளின் குடும்பத்திற்குச் சேவை செய்து நான் செய்த
பாவத்தைக் கழுவிக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால், அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.
‘காலம்தான் எந்தத் துன்பத்திற்கும் தக்க மருந்து’ என்று யாரோ ஒரு தத்துவ மேதை கூறியதைப்
படித்திருக்கிறேன். மாலாவின் பிரிவில் என் மனம் சற்று ஆறியிருந்தாலும், அது ‘நீறு பூத்த நெருப்பாகத்தான்’
இருந்தது. நான் மாலாவின் குடும்பத்தை இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்களிடம் மண்டியிட்டு
மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறேன். நான் அன்று சிந்தியாமல் வேடிக்கைக்காகச் செய்த
செயல் இன்று என்னையே, கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்கிறது.
132
அருஞ்சொற்பொருள்
பாமரனுக்கு படிக்காதவனுக்கு
குருட்டு நம்பிக்கை முட்டாள்தனமான நம்பிக்கை
நாடி துடிப்பு
அணுஅணுவாய் சிறிது சிறிதாய்
பாக்கியமாய் வாய்ப்பாய்
அத்துமீறிய அளவுக்குமீறிய
சித்திரவதை கொடுமை
மாய்த்துக்கொள்ள முடித்துக்கொள்ள
இன்னல் துன்பம்
ஜென்மம் பிறப்பு
சுவடே அடையாளமே
133
பயிற்சி வினா 47 மற்றும் 48
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.
முன்னுரை விளக்கம்
கருத்து 1 விரிவாக்கம்
கருத்து 2 விரிவாக்கம்
134
● சமுதாயம் ஏற்றுக்கொள்ளாமை
● வேலை இன்மை
● தற்கொலை முயற்சிகள்
கருத்து 3 விரிவாக்கம்
கருத்து 4 விரிவாக்கம்
135
● ஊக்கமது கைவிடேல்
● உயர்வுக்குவழி உழைப்பு மட்டுமே
● குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
● கூடா நட்பு, கேடாய் முடியும்
● குடிக்கிறது கூழாம் கொப்புளிக்கிறது பன்னீராம்
● ஆடம்பரம் ஆபத்தின் அடையாளம்
● ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
● கடன் வாங்க வாங்க கஷ்டம்தான்
● எண்ணிச் செய்கிறவன் செட்டி - எண்ணாமல் செய்கிறவன் மட்டி
● ஆடம்பரம் அழிவைத் தரும்
அருஞ்சொற்பொருள்
கைவிடேல் விட்டுவிடாதே
கொப்புளிக்கிறது துப்புவது
மட்டி முட்டாள்
136
48. துணைப்பாட வகுப்புகளினால் ஏற்படும் நன்மைத் தீமைகளைப் பற்றி விளக்கி எழுதுக.
முன்னுரை
இடையுரை
நன்மைகள்
➢ பாடங்களில் அதிக உதவி கிடைக்கிறது
➢ ஒவ்வொரு பாடத்திற்கும் தனிப்பட்ட கவனம் கிடைக்கிறது
➢ மாணவர்களுக்குப் பாடத்தில் ஏற்படும் ஐயங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ளலாம்
➢ வகுப்பறையில் ஐயங்களை ஆசிரியரிடம் கேட்கக் கூச்சப்படும் மாணவர்கள் துணைப்பாட ஆசிரியரிடம்
கேட்டுக்கொள்ளலாம்
➢ மாணவர்கள் வீட்டுக்கே துணைப்பாட ஆசிரியர்கள் வருவார்கள்
➢ எந்த நேரத்தில் பாடங்களில் ஐயங்கள் ஏற்பட்டாலும் துணைப்பாட ஆசிரியரைத் தொடர்புகொண்டு
கேட்கலாம்
➢ பெற்றோர்களின் தேவைக்கேற்பத் துணைப்பாட ஆசிரியர்கள் நடந்துகொள்வார்கள்
தீமைகள்
➢ அதிகமான பணம் செலவாகும்
➢ துணைப்பாட ஆசிரியர்கள் கொடுக்கும் பாடத்தையும் பள்ளிப்பாடத்தையும் சமாளிக்க முடியாமை
➢ எல்லாத் துணைப்பாட ஆசிரியர்களும் ஆசிரியர் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லர்
➢ பாட நேரம் மாணவர்களுக்கு ஓய்வின்மையை ஏற்படுத்தும் வாய்ப்பு
137
➢ சில துணைப்பாட ஆசிரியர்கள் பணத்தையே நோக்கமாகக் கொண்டிருப்பார்கள்
➢ பெற்றோர்கள் துணைப்பாட ஆசிரியர்களைக் கண்காணிக்க இயலாது
➢ பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியைப் பற்றித் துணைப்பாட ஆசிரியர்கள் முறையாகப் பெற்றோரிடம்
தெரிவிக்கமாட்டார்கள்
➢ சில துணைப்பாட ஆசிரியர்கள் பிள்ளைகளிடம் தவறாக நடந்துகொள்ள முற்படுவார்கள்
➢ துணைப்பாடம் கற்பித்தல் முறைக்கும், பள்ளியில் பயிலும் முறைக்கும் வேறுபாடு இருக்கும்
➢ சிலர் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை, அடிக்கடி நேரத்தில் மாற்றம் செய்வார்கள்
முடிவுரை
இனிய தொடர்கள்
முற்படுவார்கள் முயற்சிசெய்வார்கள்
நஞ்சு விஷம்
அகல விரிந்து
139
தொகுதி 17
‘மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு.’ அவன் தன் குடும்பம், நண்பர்கள், உற்றார் உறவினர்கள்,
அண்டைவீட்டார் ஆகியோரைச் சார்ந்தே வாழ்கிறான். இந்தச் சமூகத்தில் ஓர் உறுப்பினராக இருக்கும் மனிதர்களான
நாம் அதற்காக நம் சேவையை ஆற்றுவதில் கடமைப்பட்டிருக்கிறோம். இத்தகைய சேவையே சமூக சேவை
எனப்படுகிறது. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் திருநாவுக்கரசர்.
பிரதிபலன் எதிர்பாராது, சுயநலம் கருதாது பொதுநலம் ஒன்றை மட்டுமே மனத்தில் நிறுத்தி மற்றவர்களுக்காகச்
செய்யும் இந்த அரிய சேவையை மாணவர்களுக்குச் சிறுவயதிலிருந்தே ஊட்டி வளர்க்க வேண்டும். ‘இன்றைய
இளையர்கள் நாளைய தலைவர்களாக’ முன்னேற்றம் காணும்போது அவர்களிடம் சமூக சேவை என்னும் மக்கட்
பண்பு நிறைந்திருக்க வேண்டும்.
மனித வளம் ஒன்றை மட்டுமே நம்பியிருக்கும் நமது சிங்கப்பூர், அந்த மனிதர்களுக்கு வளமூட்ட என்றுமே
தவறுவதில்லை. சமூக சேவை ஒன்றே மக்களின் கண்களைத் திறந்து அவர்களை ‘மனிதர்களில் மாணிக்கத்தை’
உருவாக்கும். சமூக சேவை என்பது எல்லாவற்றிலும் உகந்த சிறந்த சேவை என்று அரசாங்கம் மாணவர்களுக்குப்
பற்பல வகைகளில் உணர வைக்கிறது. நிதி திரட்டும் நிகழ்ச்சி, இரத்த நன்கொடை போன்ற நடவடிக்கைகள் மூலம்
சமூக சேவை பற்றிய விழிப்புணர்வை அரசாங்கம் மாணவர்களுக்கு அளிக்கிறது. அதுமட்டுமன்றி, சமூக சேவையின்
பயன்களையும் விளைவுகளையும் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, வானொலி மூலம் அறிவிக்கும்போது
மாணவர்கள் செவிசாய்ப்பார்கள். சிண்டா என்னும் இந்திய மேம்பாட்டுச் சங்கம் பல இளம் தொண்டூழியர்களை
உருவாக்கிறது. வசதி குறைந்த பிள்ளைகளுக்குத் துணைப்பாடத் திட்டம், வாசிப்புத் திட்டம் போன்ற பற்பல சமூக
சேவைகளை இக்கழகங்கள் தொடங்கி, அதில் நூற்றுக்கணக்கான இளம் சமூக ஊழியர்களை உருவாக்கியுள்ளது.
இத்திட்டங்கள் மாணவர்களை மேன்மேலும் சமூக சேவை செய்யத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நாடு நமக்கு உண்ண உணவு, இருக்க இடம், குடிக்கத் தண்ணீர் என்று எல்லாவற்றையும்
கொடுக்கும்போது, நாம் ஏன் இந்த நாட்டுக்குச் சமூக சேவை செய்து நம்மால் ஆனதைத் திருப்பிக்
கொடுக்கக்கூடாது? ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும்’ என்றார் ஒரு கவிஞர். இந்த உலகை விட்டுச்
செல்லும்போது நாம் எதையும் உடன் எடுத்துச் செல்வதில்லை. இருக்கும்போதாவது ஏன் மற்றவர்களின் வாழ்வில்
மகிழ்வினை உண்டாக்கக் கூடாது? பணம், பொருள், வாகனம், வீடு இவையாவும் நமக்குத் தற்காலிக மகிழ்ச்சியை
மட்டுமே கொடுக்கும். ஆனால், மன திருப்தி ஒன்றினைக் கொடுப்பது சமூக சேவை மட்டுமே ஆகும்.
அருஞ்சொற்பொருள்
ஆற்றுவதில் செய்வதில்
அர்ப்பணித்தார் முழுமையாகக் கொடுப்பது
பிரதிபலன் கைம்மாறு
141
உந்துதலை தூண்டுதல்
கூறே பகுதியே
துளிர்விடும் தொடங்கும்
எழுதுகோல் பேனா, பென்சில்
தொண்டாற்றுவதற்காக சேவை செய்வதற்காக
திரட்டினார் சேர்த்தார்
142
பயிற்சி வினா 50 மற்றும் 51
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.
முன்னுரை விளக்கம்
● அத்தியாவசியப் பொருள்களுள் ஒன்று
● உயிர்வாழ முடியாது
● முக்கியத்துவத்தை அறிவதில்லை
● அதிகம் வீணாக்குகிறார்கள்
கருத்து 1 விரிவாக்கம்
143
கழிவறையைக் கழுவிவிடப் பயன்படுத்தலாம்
● மழைத் தண்ணீரைப் பிடித்துவைத்து வாகனத்தைக் கழுவலாம்
● செடிகொடிகளுக்கு நீர்பாய்ச்சுவதைத் தவிர்த்து, நீரைப் பிடித்து
ஊற்றலாம்
முடிவுரை ● தண்ணீர் சிங்கப்பூரில் கிடைக்கிறது என்பதற்காக அதை
வீணாக்கக்கூடாது
● முடிந்தவரை அதைச் சேமிக்க வேண்டும்
● சில ஊர்களில் குடிப்பதற்குத் தூய்மையான நீர் கிடைப்பதில்லை
● இருப்பதைப் போற்றிக் காக்க வேண்டும்
அருஞ்சொற்பொருள்
அத்தியாவசிய முக்கியமான
நீர்த்தேக்கம் குடிநீரைத் தேக்கிவைக்கும் இடம் (reservoir)
தடைபட்டு நிறுத்தப்பட்டு
பழித்தாலும் குறை சொன்னாலும்
அணை தடுப்பு
144
தவித்த தண்ணீர் இல்லாமல் வறண்டுபோன
முன்னுரை
இடையுரை
145
➢ நன்றாகப் பேசினேன் - என் ஆற்றலை நானே உணர்ந்தேன்
➢ என் பள்ளி அடுத்த சுற்றுக்குத் தேர்ச்சி பெற்றது
➢ எல்லாரும் என்னைப் பாராட்டினார்கள்
➢ தன்னம்பிக்கை பிறந்தது
➢ அடுத்த சுற்றில் நானும் பேசப் போவதாக உறுதியளித்தேன்
முடிவுரை
இனிய தொடர்கள்
அபிப்பிராயத்தை விருப்பத்தை
மிதப்பில் அலட்சியப்போக்கில்
விரயமாக வீணாக
மூடத்தனம் முட்டாள்தனம்
தொகுதி 18
147
இக்காலக் கட்டத்தில் குடும்பப் பிணைப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம், அண்டை
வீட்டாருடனும் பிணைப்புடன் இருப்பது. சிங்கப்பூர் ஒரு பல இனச் சமுதாயம் கொண்ட நாடு. அதனால், நாம் நம்
அண்டைவீட்டாருடன் நட்புடனும் ஒற்றுமையுடனும் பழகுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்தப் படிப்பினையை
எனக்கு உணர்த்தியது என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். அச்சம்பவத்தைப் பற்றி இக்கட்டுரையில் நான்
விளக்கப் போகிறேன்.
நாங்கள் அங் மோகியோ வட்டாரத்திலிருந்து பீஷான் நகருக்குப் புதிதாகக் குடி வந்தோம். புதிய வீடு, புதிய
வட்டாரம், புதிய கடைகள், புதிய அண்டை வீட்டார் என எல்லாமே புதிதாக இருந்தது. எங்கள் உற்றார்
உறவினர்களும் வெகு தூரத்தில் குடியிருந்தனர். அதனால் அவசரத்திற்குக்கூட எங்களுக்கு உதவிக்கு யாரும்
இல்லை. நாங்கள் எங்கள் பொருள்களை எடுத்து அடுக்கி வைத்துக்கொண்டிருக்கும்போது திடீரென கதவின் மணி
ஒலித்தது. ‘’நான் தான் அகமது. உங்கள் பக்கத்துவீட்டில் குடியிருக்கிறேன்,’’ என்று ஓர் உயரமான மலாய் ஆடவர்
தன்னை எங்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் பார்ப்பதற்கு நல்ல பண்புடையவராகத் தெரிந்தார்.
“உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தயங்காமல் எங்களைக் கேட்கலாம். எங்கள் குடும்பத்தில் நான்,
என் மனைவி சலீமா, இரண்டு பிள்ளைகள், பணிப்பெண் ஆகியோர்தான் இருக்கிறோம்,’’ என்றார். என் அப்பாவும்
எங்கள் குடும்பத்தைப் பற்றி கூறினார். சில வினாடிகளில் இருவரும் நல்ல நண்பர்களைப்போல் நாற்காலியில்
அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! நான், என் தம்பி இருவரும், அகமதுவின் இரு பிள்ளைகளுடன்
அடிக்கடி ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவோம், படிப்போம், நூலகத்திற்கும் செல்வோம். என் தாயாரும் அகமதுவின்
மனைவி சலீமாவும் நல்ல நண்பர்களானார்கள். நாளடைவில் எங்கள் குடும்பமும் திரு அகமதுவின் குடும்பமும்
நகமும் சதையுமானோம்.
அன்று திரு அகமதுவின் மகன் பாஷாவிற்குப் பிறந்தநாள். அதற்காக எங்களை அழைக்க திரு அகமதுவும்
அவரின் மனைவியும் வந்திருந்தனர். பிறந்த நாளன்று என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் வேறொரு முக்கியமான
வேலை இருந்ததால் அவர்களால் வர முடியாதென்றும், என்னையும் என் தம்பியையும் மட்டும் அனுப்பி வைப்பதாகக்
கூறினர். “மறவாதீர்கள், என் மகன், நித்யாவும் தீபனும் வந்தால்தான் கேக்கையே வெட்டுவான்,’’ என்று புன்னகை
பூத்த முகத்துடன் எச்சரிக்கை விடுத்துச் சென்றனர் திரு அகமதுவும் திருமதி சலீமாவும்.
பிறந்தநாளும் வந்தது. ஆனால் என் தம்பிக்கும் எனக்கும் கடுமையான காய்ச்சல், எங்களால் போக
இயலவில்லை. எங்கள் பெற்றோரும் எங்கள் அண்டைவீட்டார் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற
நினைப்பில் அவர்களிடம் காரணத்தைக் கூறவில்லை. ஆனால் அன்றுமுதல் எங்களின் நட்பு இரண்டுபட்டுவிடும்
என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை!
148
நாங்கள் அனைவரும் அகமதுவின் வீட்டிற்குச் சென்றோம். எங்களைப் பார்த்தவுடன் அவர் ‘விடுக்கென்று’
முகத்தைத் திருப்பிக்கொண்டார். பிறகு என் தாயார், “அண்ணா, எங்களை மன்னித்துவிடுங்கள். உண்மையிலேயே
நித்யாவிற்கும், தீபனுக்கும் அன்று கடுமையான காய்ச்சல். அதனால்தான் வர முடியவில்லை. இதோ பாருங்கள். இன்று
அவர்கள் குணமாகிவிட்டார்கள். இது பாஷாவிற்காக நாங்களே செய்த கேக்,’’ என்று கூறி, ஒரு பெரிய கேக்கை என்
தாயார் நீட்டினார். நாங்களும் பாஷாவிற்காகச் செய்த பெரிய வாழ்த்து அட்டையை அவரிடம் நீட்டினோம். இதைக்
கண்ட பாஷா ஓடிவந்து எங்களை அணைத்துக்கொண்டார். திரு.அகமதுவும் கண்கலங்கிவிட்டார். தன்
அவசரப்புத்திக்காக வருந்தினார். நாங்கள் மீண்டும் இன்னும் நெருக்கமான அண்டைவீட்டுக்காரர்களானோம்!
அருஞ்சொற்பொருள்
சமுதாயம் நாடு
ஊடல் மனக்கசப்பு
முன்னுரை விளக்கம்
149
● வேற்றுமையில் ஒற்றுமை
● மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு
● சண்டை சச்சரவுகள், போர் பூசல்கள் ஏற்படாது
கருத்து 1 விரிவாக்கம்
கருத்து 2 விரிவாக்கம்
கருத்து 3 விரிவாக்கம்
கருத்து 4 விரிவாக்கம்
150
ஏற்பாடு செய்தல்
● அனைவரும் சிங்கப்பூரர் என்ற உணர்வை ஏற்படுத்தும்
நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல்
151
● நாடு ஒப்பன செய்
● சீனர் தமிழர் மலாயர் முதலானோர் உறவினர் போல அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்
அருஞ்சொற்பொருள்
விமரிசை கோலாகலமாக
பேட்டை வட்டாரம்
அல்லற்படுத்தும் துன்பப்படுத்தும்
குடிகள் குடிமக்கள்
பிரியேல் பிரியாதே
ஒப்பன ஏற்றுக்கொண்டதை
முன்னுரை
இடையுரை
முடிவுரை
இனிய தொடர்கள்
153
➢ ஒட்டடைக்குச்சி ஓய்வு எடுத்துக்கொண்டால் சிலந்திப்பூச்சி சிம்மாசனம் ஏறிவிடும்
➢ அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது, அளந்து பேசுபவனை மதிக்கிறது, அதிகம் செயல்படுபவனைக்
கைகூப்பி வணங்குகிறது - Confucious
➢ கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காமல் உழைத்ததால்தான் என்னால் புதிய பொருள்களைக் கண்டுபிடிக்க
முடிந்தது - Thomas Alva Edison
➢ ஒருவனின் கருத்துகளைக் கேட்பதற்கு உலகம் தயாராக இருப்பதில்லை - உழைப்பைக் காண்பதற்கே
காத்திருக்கிறது –Mahatma Gandhi
➢ எதிர்ப்பும் தடையும் இருந்தால்தான் மனிதன் விரைந்து முன்னேறுவான் - Buddha
➢ வாழ்க்கை என்றால் அது துணிச்சல்மிகுந்த விடாமுயற்சி என்றுதான் பொருள்
➢ ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான், அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக்
காட்டினான், மற்றுமொருவன் மண்ணில் இறங்கிப் பொன்னைத் தேடினான்
➢ பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீனில் படகினைக் கண்டான் எதிரொலி கேட்டான்
வானொலி படைத்தான்
அருஞ்சொற்பொருள்
தொகுதி 19
அன்று எங்கள் பள்ளி மண்டபம். வண்ண வண்ணத் தோரணங்களாலும், மணம் கமழ் மலர்களாலும்
அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆண் ஆசிரியர்கள் மிடுக்காகக் கழுத்துச் சுருக்குகளை மாட்டிக்கொண்டு அமர்ந்திருக்க,
அவர்களுக்குச் சளைத்தவர் அல்லர் என்று பெண் ஆசிரியர்கள் அழகான உடைகளில் அமர்ந்திருந்தார்கள். மாணவ
மணிகள் வெளீரெனச் சீருடைகளில் காட்சியளித்தார்கள். பெற்றோர்களோ வைத்த கண் வாங்காமல் பரிசு பெறக்
காத்திருக்கும் தங்கள் பிள்ளைகளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் என் பெற்றோர்களும்
அமர்ந்திருந்தார்கள். என்னைப் பார்த்துப் புன்முறுவலிட்டபடி இருந்தார்கள். ஈன்ற பொழுதிலும் இல்லாத மகிழ்ச்சி
என் தாயின் முகத்தில் தெரிந்தது. என்னைத் தோளில் சுமந்த பாரமே என் தந்தையின் முகத்தில் இல்லை.
‘ஒரு மாற்றத்தை நீ பார்க்க வேண்டுமானால் , நீ முதலில் அந்த மாற்றமாக இருக்க வேண்டும்’ என்று என்
தமிழாசிரியர் அடிக்கடி கூறுவார். ஆனால் என்னால் என்னை மாற்றிக்கொள்ளவே முடியவில்லை. எதற்கெடுத்தாலும்
பயம், தயக்கம். ஆசிரியரிடம் சந்தேகம் கேட்கப் பயம், மேடையில் ஏறிப் பேசப் பயம், குழுவேலைகளின்போது
கருத்துகள், போட்டிகளில் பங்கெடுக்க விருப்பம் இருந்தாலும் ஆசிரியரிடம் சொல்லுவதற்குத் தயக்கம். இப்படி
எதற்கெடுத்தாலும் நான் பயந்தேன். தன்னம்பிக்கையே இல்லாமல் எப்போதும் ஒரு மூலையிலேயே முடங்கிக்
கிடந்தேன். என் வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்கள் ஆசிரியரிடம் சகஜமாகப் பேசுவார்கள். அவர்கள்போல்
நானும் இருக்க வேண்டும் என்று ஆசைகொண்டேன். ஆனால் அப்போதும் இந்தத் தீராத பயம் தொற்றுவியாதி
போல் என்னைக் கௌவிக்கொள்ளும். ‘அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே, உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு
மகாகவி பாரதியாரின் பாடலை முழங்குவேன். ஆனால், அது என் தனி அறையில் மட்டும்தான் நடக்கும். அதைத்
தாண்டி வெளியில் வராது. மனத்தில் கனவுகள் பல இருந்தும் அதை நிறைவேற்றுவதற்குப் பயம் எனக்கு ஒரு
நிரந்தரத் தடையாகிவிட்டது என்பதை நான் உணர்ந்தேன்.
போட்டிகள் நிறைந்த இந்த நாட்டிலே தன் மகன் மட்டும் ‘பெட்டிப் பாம்பாய்’ இருக்கிறானே என்று எண்ணி
என் பெற்றோர்கள் வருந்தாத நாளே இல்லை. “முரளி, உன்னைத் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகுப்புகளுக்கு
அனுப்பட்டுமா?’’ என்று என் தாயார் கேட்டார். அதற்கும் போனேன். ஆனால் அங்கும் அச்சமே என்னை ஆட்சி
செய்தது. அந்தப் பயிற்றுவிப்பாளர் எவ்வளவோ முயன்றும் என்னால் முடியவில்லை. அவரைப் பார்த்தாலே நான்
நடுங்கினேன். அவரும் என்னுடன் அன்பாகத்தான் பேசினார்.
155
ஆனால், என்னால் எழுந்து நின்று மற்ற மாணவர்களைப்போல் தைரியமாகப் பேச முடியவில்லையே! இந்த
பாழாய்ப்போன பயம் ஏன் என்னைப் பயமுறுத்துகிறது என்று யாருக்கும் கேட்காமல் புலம்பினேன். “என்னை
மன்னித்துவிடுங்கள், உங்கள் மகன் மனது வைத்தால்தான் மாற முடியும்,’’ என்று பயிற்றுவிப்பாளர் கைவிரித்து
விட்டார். இனி தனது வகுப்புக்கு வரவேண்டாம் என்றும் கூறிவிட்டார். என் தாயாரின் மனக்கோட்டை சுக்கு நூறாக
உடைந்ததை என்னால் உணர முடிந்தது. அவர் கண்கள் குளமாகின. அப்போது, “மாலா, மாலா, என் மகள் பேச்சுப்
போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறாள்,’’ என்று என் அண்டைவீட்டார் ஒரு வெற்றிக்கோப்பையுடன் என்
வீட்டிற்குள் நுழைந்தார். என் அன்னையின் துன்பம் இரட்டிப்பானது!
என்னை நினைத்தால் எனக்கே வெறுப்பாக இருந்தது. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று என்னையே
பலமுறை கேட்டிருக்கிறேன். சீராட்டிப் பாராட்டி வளர்த்த பெற்றோரைப் பெருமைப்படுத்த முடியவில்லையே.
நானெல்லாம் என்ன பிள்ளை? என்று என்னையே தனியாகத் திட்டிக்கொள்வதும் உண்டு. என் தாயின் கண்ணீரைத்
துடைக்க என்னால் முடியாதா? என்ற ஆதங்கத்துடன் கணினித் திரைமுன் அமர்ந்தேன். பிறர்முன் நேரடியாகப்
பேசத் தயங்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தச் சமூக வலைத்தளங்கள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூற
வேண்டும்.
ஒருநாள், முகப் புத்தகத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். சில நாட்கள் அவருடன் இணையத்தில்
பேசியபோது அவரின் போக்கு எனக்குப் பிடித்திருந்தது. அவர் மிகவும் தன்னம்பிக்கையுடன் பேசினார்.
தன்னம்பிக்கையை வளர்க்கும் பல வழிமுறைகளை என்னுடன் பகிர்ந்துகொண்டார். என்னை நிறைய ஊக்கமூட்டும்
புத்தகங்களைப் படிக்கச் சொன்னார். அவர் எழுதிப் பரிசுபெற்ற கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை என்னுடன்
பகிர்ந்துகொண்டார். அவரின் செயல்கள் என்னை மெல்ல மெல்லக் கவர்ந்தன, ஏன் மாற்றின என்றுகூடத்
தைரியமாகச் சொல்லலாம். அவர் எங்கள் பள்ளி நடத்தும் அனைத்துப் பள்ளிப் பேச்சுப்போட்டிகளிலும் என்னைக்
கலந்து கொள்ளும்படி கூறினார். நான் பதில் கூறுவதற்குமுன் என் பயம் ‘வேண்டாம்’ என்று பதிலளித்துவிட்டது.
ஆனால், அவர் தன்னை வந்து பார்க்கும்படி என்னிடம் கூறினார். என்னைப் பார்க்க விரும்புவதாகவும் கூறினார்.
நான் என் முகநூல் நண்பரின் இல்லம் தேடிச் சென்றேன். அங்கு எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. கதவு
திறக்கப்பட்டது. அங்கே என் நண்பர் இருந்தார். என்னைப்போல் அவரும் ஒரு மாணவர்தாம். ஆனால் அவர் சக்கர
நாற்காலியில் அமர்ந்திருந்தார்! அதைக் கண்டு நான் வியப்புற்றேன். “இரண்டு கால்களும் இல்லாத என்னால் சாதிக்க
முடியும் என்றால் ஆரோக்கியமாக இருக்கும் உன்னால் இருமடங்கு சாதிக்க முடியும்,” என்று கூறி என்னைத்
தட்டிக்கொடுத்தார். எனக்குள் ஓர் உத்வேகம் பிறந்தது. என்னைச் சுற்றியிருந்த பயம் எனும் போர்வையைக்
கிழித்தெறிந்தேன். என் பெற்றோருக்குப் பெருமை சேர்த்தேன்.
அருஞ்சொற்பொருள்
அமுதூட்டி உணவூட்டி
தலையாய முக்கியமான
கமழ் வீசும்
156
சளைத்தவர் தோற்றவர்
வெளீரென பிரகாசமாக
ஈன்ற பெற்ற
சகஜமாக சாதாரணமாக
கைவிரித்து கைவிட்டு
சுக்குநூறாக பல துண்டுகளாக
இரட்டிப்பானது இரு மடங்கானது
ஆதங்கத்துடன் பயத்துடன்
வரப்பிரசாதம் வரம்
உத்வேகம் மனத்திலிருந்து தோன்றும் ஒர்
உணர்வு
முன்னுரை விளக்கம்
கருத்து 1 விரிவாக்கம்
157
குற்றச்செயல்கள் நடக்கக் ● கவனக்குறைவு
காரணங்கள் ● சிங்கப்பூரில் குற்றங்கள் நடக்காது என்ற மனப்போக்கு
● அலட்சியப் போக்கு
● சரியாகப் பூட்டாத வீடுகள்
கருத்து 2 விரிவாக்கம்
கருத்து 3 விரிவாக்கம்
கருத்து 4 விரிவாக்கம்
158
● அக்கம் பக்கக் காவலர் நிலையங்களை உதவிக்கு நாடுதல்
● வருமுன் காத்தல்
● எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
அருஞ்சொற்பொருள்
துடிப்பான சுறுசுறுப்பான
அந்நியர் தெரியாதவர்
கள்ளாமை திருடாமை
விள்ளா முழுதும்
159
57. உன் வகுப்பில் அயல் நாட்டு மாணவன் ஒருவன் புதிதாக வந்து சேர்கிறான். வகுப்பில்
இருக்கும் மற்ற மாணவர்கள் அவன் பேசுவதைக் கிண்டல் செய்து அவனை மனவருத்தம்
அடையச் செய்கின்றனர். இதனைக் கண்ட நீ, அயல்நாட்டு மாணவனுக்கு ஆறுதல் கூறுவதோடு,
மற்ற மாணவர்கள் தங்கள் தவற்றை உணரும்படி செய்கிறாய். இச்சம்பவத்தை விவரித்து
எழுதுவதோடு, அதன்மூலம் நீ மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்த படிப்பினையையும் எழுதுக.
முன்னுரை
இடையுரை
160
➢ கணக்குப் பாடத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு அவன் கணக்குக் கற்பிக்க ஏற்பாடு செய்தேன்
➢ மற்ற மாணவர்கள் முதலில் தயங்கினர்
➢ பிறகு படிப்படியாக அவனை அணுகினர்
➢ அவன் செய்த உதவியைப் பாராட்டினர்
➢ தங்கள் தவற்றை உணர்ந்து அவனை நண்பனாக ஏற்றுக்கொண்டனர்
➢ முறையாக ஆங்கிலம், தமிழ் பேசுவதற்கு அவனுக்குக் கற்பித்தனர்
➢ அயல்நாட்டு மாணவன் மனமகிழ்ந்தான்
முடிவுரை
இனிய தொடர்கள்
161
➢ கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
➢ கொட்டிய பாலையும் சிந்திய வார்த்தையையும் அள்ள முடியாது
அருஞ்சொற்பொருள்
சேர்க்கை இணைதல்
புழக்கம் பயன்பாடு
தோரணையில் பாணியில்
அணுகினர் நெருங்கினர்
162
தொகுதி 20
‘சிங்கப்பூர்க் குடிமக்களாகிய நாம் இனம், மொழி, மதம் ஆகிய வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு
ஜனநாயகச் சமுதாயத்தை உருவாக்குவோம்’ என்ற வரியினை நாம் அனுதினமும் நம் உறுதிமொழியில்
கூறுகின்றோம். இவ்வரிகள் நமது இதழ்களிலிருந்து பிறப்பவை அல்ல, நெஞ்சினிலிருந்து தோன்றுபவை என்பதை
ஒவ்வொரு சிங்கப்பூரரும் அறிகின்றனர். நம் முன்னோர்கள் ஒன்றுபட்டுத் தங்கள் வியர்வைத் துளிகளைச்
சிந்தியதால்தான் இன்று நாம் பிற நாடுகள் ‘மூக்கின் மேல் விரலை வைக்கும்’ அளவிற்கு உயர்ந்திருக்கிறோம்.
தூய்மை என்றால் சிங்கப்பூர், பாதுகாப்பு என்றால் சிங்கப்பூர், நிலை குலையா அரசு என்றால் சிங்கப்பூர், கல்வி
என்றால் சிங்கப்பூர், இன நல்லிணக்கம் என்றால் சிங்கப்பூர் இப்படி அடுக்கடுக்காகப் பலவற்றிலும் முத்திரை
பதித்துள்ளோம். இவற்றுக்கெல்லாம் காரணம் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்னும் எளிய, ஆனால் வைரம்
பாய்ந்த பழமொழியை நம் அரசாங்கம் வலியுறுத்தியதே ஆகும்.
‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பது பழமொழி. அதிலும் பல இன மக்கள் கூடி வாழ்ந்தால் நன்மை
பல கோடி. இங்கு வாழும் சீனர், மலாய்க்காரர், தமிழர், ஆங்கிலேயர்கள் முறையே சீனப்புத்தாண்டு, நோன்புப்
பெருநாள், தீபாவளி, கிறிஸ்துமஸ் எனக் கொண்டாடுகிறார்கள். இப்பண்டிகைகளை நாம் கொண்டாடும்போது நாம்
அக்கம் பக்கத்திலுள்ள நம் அண்டைவீட்டார்களை அழைக்க மறப்பதில்லை. மற்றவர்களின் பண்டிகைகளை
அவர்களுடன் சேர்ந்து நாம் கொண்டாடும்போது, நாம் அவர்களின் கலாச்சாரம், பண்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி
மேலும் தெரிந்துகொள்கிறோம்.
இவ்விழாக் காலங்களில் சாலை அலங்காரக் காட்சிகளைக் காண்பதற்கு இரண்டு கண்கள் போதா. சீனப்
புத்தாண்டுக் காலத்தில் சைனா டவுன் வண்ண விளக்கொளியில் மூழ்க, நோன்புப் பெருநாள் சமயத்தில் கேலாங்
செராய் மின்னும் ஒளியில் பளிச்சிட, தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே சிராங்கூன் சாலையை வானவில்லின்
ஒளிகள் கீழ் இறங்கிவந்து சாலையையே வண்ணமயமாக்க, அப்பப்பா! இப்படியொரு விழாக்காலப் பிரமாண்டத்தை
நாம் வேறு எந்த நாட்டிலும் பார்த்திருக்க முடியாது.
163
ஒவ்வொரு தோரணமும் வெறும் அலங்காரமாக மட்டும் இல்லாமல், அந்தந்த விழாவின் பாரம்பரியத்தை
எடுத்துரைக்கும் பெட்டகமாக அமைந்துள்ளன. இவற்றைக் காணும்பொழுது, நாம் வேற்றுப் பாரம்பரியங்களை
மதிக்கக் கற்றுக்கொள்கிறோம். அவ்வாறு செய்யும்போது நம் அறியாமைகள் நீங்கிச் சிங்கப்பூரர்களாக நாம் இன்னும்
நெருக்கமடைகிறோம். மகிழ்ச்சி, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு மேலோங்கிப் பிறருடன் இணைந்து வாழக்
கற்றுக்கொள்கிறோம்.
அடுத்தபடியாக ‘Racial Harmony Day’ எனப்படும் இனநல்லிணக்க நாள். இந்த விழாவை நாம் ஏன்
கொண்டாடுகிறோம் என்று சிங்கப்பூர் வரலாற்றினைச் சற்றுத் திரும்பிப் பார்த்தோம் என்றால், அது நம் நான்கின
மக்களையும் ஒற்றுமையாக வாழ வைப்பதற்கே என்பதைச் சுட்டிக்காட்டும். இன நல்லிணக்க நாள் நம் இனம் மதம்
ஆகிய வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு ஒரு காம்பில் முளைத்த பூக்கள்போல் ஒன்றிணைந்து மணம் வீச
வேண்டும் என்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் நம் பள்ளிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
அடுத்தபடியாக நம் தேசியத் தினம். உலக நாடுகளை எடுத்துக்கொண்டோமானால் எந்த நாடும் இவ்வளவு
கோலாகலமாகவும் நாட்டுப்பற்றுடனும் தனது தேசிய நாளைக் கொண்டாடுவதில்லை என்று துணிச்சலுடன் கூறலாம்.
அவ்வளவு பிரமாண்டமாக நாம் நம் தேசிய தினத்தை இங்குக் கொண்டாடுகிறோம். இனம், மொழி, மதம் மறந்து
அனைத்துச் சிங்கப்பூரர்களும் ஒன்றிணைந்து நம் தேசத்திற்காகக் கரவொலி எழுப்பி இனிய பண் பாடுகிறோம். இது
எதைக் காட்டுகிறது? நமது ஒற்றுமை உணர்வைத்தானே! தேசிய தினம் ஒவ்வொரு சிங்கப்பூரர் மத்தியிலும் ஓர்
இணக்கத்தை உருவாக்கி, நான் என்ற சொல்லை நாம் என்று மாற்றுகிறது!
என்றார் வள்ளுவப் பெருந்தகை. நாடென்பது பசி, பிணி, போர் பகை, இவையனைத்தும் இல்லாமல் தம்
மக்களின் நல்வாழ்வு ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் பெற
வேண்டுமென்றால், அந்நாட்டில் ஒற்றுமை இழையோட வேண்டும். அந்த ஒற்றுமையை விழாக்கள் மூலம்
கட்டிக்காத்து, தம் மக்களுக்கு நல்வாழ்வு அளித்து வருகிறது நமது தேசம். இனத்தால், மொழியால், கலாச்சாரத்தால்
நாம் வேறுபட்டிருந்தாலும் உணர்வால் நாம் அனைவரும் சிங்கப்பூரர்கள் என்ற ஒற்றுமை உணர்வை நம் விழாக்கள்
நமக்கு அறிவுறுத்துகின்றன என்று கூறிக்கொள்வதிலும் எனக்கும் அதில் ஒரு பங்குண்டு என்று சொல்வதிலும் நான்
பெருமிதம் அடைகிறேன்.
164
அருஞ்சொற்பொருள்
ஜனநாயக மக்களாட்சி
கூப்பி இணைத்து
பெட்டகமாக களஞ்சியமாக
தேசத்திற்காக நாட்டிற்காக
பண் பாட்டு
இழையோட கலந்திருக்க
165
பயிற்சி வினா 59 மற்றும் 60
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.
முன்னுரை விளக்கம்
● பரபரப்பான சூழ்நிலை
● இரு பெற்றோரும் வேலை செய்யும் கட்டாயம்
● வாழ்க்கைச் சூழல்
● போட்டித்தன்மை
● தனிக்குடித்தனங்கள்
கருத்து 1 விரிவாக்கம்
கருத்து 2 விரிவாக்கம்
166
கருத்து 3 விரிவாக்கம்
கருத்து 4 விரிவாக்கம்
167
கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:
● ஏழை எளிய குடும்பத்தினர்
● பணிப்பெண் முகவர்கள் (Maid Agents)
● வேலையின்மைப் பிரச்சினைகள்
● வாரம் ஒருமுறை விடுப்பு
● அயல்நாடுகளிலிருந்து வருகை
● மனிதநேயம் இருக்க வேண்டும்
● உயர்ந்தவன் என்ன தாழ்ந்தவன் என்ன
உடல் மட்டுமே கறுப்பு அவன் உதிரம் என்றும் சிவப்பு
● மனிதரை மனிதராய் மதிப்பதே மனிதப்பண்பு
● வேண்டாத மருமகள் கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம்
● மனிதவள அமைச்சு (Ministry of Manpower)
● சட்ட திட்டங்கள்
● மருத்துவ வசதிகள்
அருஞ்சொற்பொருள்
அசதியாக களைப்பாக
சொகுசாக உல்லாசமாக
விடுப்பு விடுமுறை
உதிரம் இரத்தம்
168
60. தொழில்நுட்பம் இக்கால இளையர்களை அதிகச் சோம்பேறிகளாக்கி விட்டது - கருத்துரைக்க.
முன்னுரை
இடையுரை
169
➢ விமான நுழைவுச்சீட்டு - இணையம் மூலம் கிடைக்கிறது
➢ சில நாடுகளில் இயந்திர மனிதன் வந்துவிட்டான் (எ.கா - ஜப்பான்)
➢ வீட்டு வேலைகள் செய்யக்கூடத் தேவையில்லை
➢ தொழில்நுட்பத்தால் உடல் எடையைக் குறைக்கும் இயந்திரங்கள் - உடற்பயிற்சிக்கு அவசியமில்லை
➢ பொது இடங்களில் இருக்கும் மின்படிகள், மின்தூக்கிகள்
முடிவுரை
இனிய தொடர்கள்
அருஞ்சொற்பொருள்
170
அதிநவீன மிகவும் நாகரிகமான
சாதனமாக கருவியாக
திரியேல் திரியாதே
மின்னஞ்சல் பகுதி
171
மின்னஞ்சல் - வினாக்கள்
தொகுதி 1
1a. அலுவலக மின்னஞ்சல் - புகார் செய்தல்
வினா:
அனுப்புநர்: hari@outlook.com
பெறுநர்: npp@gov.sg
172
balu@outlook.com
mani@outlook.com
அறிவுரை தேவை
04/01/2016
வினா:
அன்புள்ள அண்ணனுக்கு,
உங்கள் அன்புத் தம்பி பாலுவின் வணக்கம். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? அங்கு நம் அம்மா,
அப்பாவிற்கு என் அன்பு வணக்கத்தைத் தெரிவிக்கவும். இங்கு ஆஸ்திரேலியாவில் இப்போது வெயில்
காலம். அதனால் மிகவும் சூடாக இருக்கிறது. சிங்கப்பூரின் வானிலை எப்படி இருக்கிறது?
அண்ணா, இங்குள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் நான், நன்றாகப் படித்து வருகிறேன். கடந்தமுறை
நடைபெற்ற தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். ஆனால், ஒருமுறை என் நண்பர்களின்
வற்புறுத்தலுக்கு இணங்கி கணினி விளையாடச் சென்றேன். அன்றிலிருந்து என் மனம் அதிகநேரம் கணினி
விளையாட்டில் ஈடுபடுவதையே விரும்புகின்றது. என்னால் இப்பழக்கத்தை விட முடியவில்லை. படிக்கும்
நேரம் குறைந்து இப்போது கணினியில் விளையாடும் நேரம்தான் கூடியிருக்கிறது. அதனால் வரும்தேர்வில்
தேர்ச்சியடைய முடியாமல் போய்விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. என்னால் இதிலிருந்து மீள
முடியுமா? நம் பெற்றோர்களுக்கு இது தெரிந்தால் மிகவும் வருத்தமடைவார்கள். எனவே, நான் இதிலிருந்து
மீண்டு, படிப்பில் மறுபடியும் கவனம் செலுத்த நீங்கள்தான் எனக்குத் தக்க அறிவுரையும்
ஆலோசனைகளையும் கூற வேண்டும்.
அன்புடன்
பாலு
தொகுதி 2
173
2a. அலுவலக மின்னஞ்சல் - விமர்சனம் செய்தல்
வினா:
மின்னஞ்சல் முகவரி
அனுப்புநர்: malar@outlook.com
பெறுநர்: news@outlook.com
வினா:
murali@outlook.com
mukunth@outlook.com
ஆலோசனை தேவை
04/01/2016
174
அன்புள்ள முகுந்த்,
நான் இங்கு நலம். நீ நலமாக இருப்பாய் என எண்ணுகிறேன். உன் நாய்க்குட்டி டாமி எவ்வாறு உள்ளது?
இந்த முறையும் விலங்குகள் ஓட்டப்போட்டியில் அதுதான் வெற்றி பெற்றதா? டாமி இதுவரை உனக்கு எத்தனை
கேடயங்களைப் பெற்று உனக்குப் பெருமை சேர்த்துள்ளது! எனக்கு இதுபோல் ஒரு செல்லப்பிராணி இல்லையே
என்று நினைக்கும்போது பொறாமையாக உள்ளது.
நண்பா, எங்கள் வீடமைப்புப் பேட்டையில் உள்ளவர்களில் பலர் ஏதாவது ஒரு செல்லப் பிராணியை
வளர்க்கின்றனர். என் அண்டைவீட்டுக்காரர்கூட ஒரு முயலை வளர்க்கிறார். அதன் குறுகுறு பார்வையை
நாள்முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எனக்கும் அவர்களைப் போல் ஏதேனும் ஒரு செல்லப் பிராணி
வளர்க்க மிகுந்த ஆவலாகத்தான் உள்ளது. ஆனால், ஒரு சிலர் அதெல்லாம் சிறிது கடினம் என்றும், அதற்காகத்
தனிப்பட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
அன்புடன்
முரளி
தொகுதி 3
3a. அலுவலக மின்னஞ்சல் - அனுமதி கேட்டல்
வினா:
மின்னஞ்சல் முகவரி:
அனுப்புநர்: jegan@outlook.com
பெறுநர்: towncouncil@gov.sg
அன்புள்ள சேகர்,
இங்கு நான் நலமாக உள்ளேன். உன் நலத்தினை அறிய ஆவல். உன்னுடன் இன்று நான் தொடர்பு
கொள்ள மகிழ்ச்சியாக உள்ளது.
சேகர், நான் உலக நாடுகள் பலவற்றில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் படித்தும், கேட்டும்
இருக்கிறேன். இதில் எனக்கு ஆர்வம் அதிகம் என்றுதான் உனக்குத் தெரியுமே. இருப்பினும், சிங்கப்பூரில் உள்ள
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தகவல்கள் கிடைக்கவில்லை. நீ சிங்கப்பூரிலேயே
பிறந்து வளர்ந்தவன் என்பதால் நிச்சயம் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பற்றிக் கரைத்துக்
குடித்திருப்பாய். எனவே, தயவுசெய்து அவற்றைப் பற்றி எனக்குத் தெரியப்படுத்தவேண்டும் என அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன். மேலும், அடுத்த மாதம் நான் அங்கு வர இருக்கிறேன். எனவே, அவற்றைப்பற்றிய தகவல்களை
முன்கூட்டியே தெரிவித்தால் நல்லது. உன்னையும் காண மிகுந்த ஆவலாக இருக்கிறேன்.
அன்புடன்
செல்வன்
176
தொகுதி 4
4a. அலுவலக மின்னஞ்சல் - விண்ணப்பித்தல்
வினா:
அனுப்புநர்: meenal@outlook.com
பெறுநர்: unique@outlook.com
வினா:
அங்கு நானும் என் நண்பர்களும். ஆடியும் பாடியும், கடலில் நீந்திக் களித்து மட்டுமே பெரும்பான்மையான
பொழுதைக் கழித்தோம். அதோடன்றி, ஆங்காங்கே உள்ள அங்காடிச் சாலைகளில் இஷ்டம் போலச் சுற்றி,
வேண்டிய பொருள்களை மிகவும் மகிழ்வுடன் வாங்கிக் களிப்படைவதிலேயே பெரும்பான்மையான நேரத்தைச்
செலவிட்டு அவரவர் இல்லங்களுக்கு திரும்பியிருக்கிறோம்.
177
ஆனால், சுற்றுலாப் பயணம் ஒரு சிறந்த கற்றல் பயணம் என்றும் மிகப் பயனுடையது என்றும், அனைவரும்
கூறுகின்றனர். தயவு செய்து எனக்கு அதைப்பற்றி விளக்கிக் கூறவேண்டும் என அன்புடன் வேண்டிக்
கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
ரவி
தொகுதி 5
5a. அலுவலக மின்னஞ்சல் - மன்னிப்புக் கேட்டல்
வினா:
அனுப்புநர்: balaji@outlook.com
பெறுநர்: principal@vanavilsec.com
அன்புடன்
உஷா
தொகுதி 6
6a. அலுவலக மின்னஞ்சல் - தகவல் கேட்டறிதல்
வினா:
நீ வசிக்கும் தெக் வாய் சாலை 23-ல் தொடர் திருட்டுகள் நடந்துவருகின்றன. மாலை நேரம்
முடிந்து இரவு தொடங்கியதும், திருட்டுகள் நடக்கின்றன. இதனால் மக்கள் வெளியே வரப்
பயப்படுகிறார்கள். இந்த நிலையில் அண்மையில் உன் வீட்டருகே நடந்த திருட்டுச் சம்பவத்தைப்பற்றி
காவல் நிலையத்திற்குத் தெரிவித்து ஒரு மின்னஞ்சல் எழுதுக
அனுப்புநர்: vasanthi@outlook.com
பெறுநர்: npp.gov.sg
வினா:
அன்புள்ள கோபுவிற்கு
இங்கு நான் நலம். அங்கு உன் நலத்தையும் உன் குடும்பத்தார் நலமும் அறிய ஆவல்.
179
பாபு! தற்சமயம் நான் தொடக்கக் கல்லூரியில் தேசிய அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
என்னுடைய மேற்படிப்பை அயல் நாட்டில் தொடர எண்ணுகிறேன். ஏனெனில் அங்கு பயின்றால் பிற்கால வசதி
வாய்ப்புகளுக்கு அது உறுதுணையாய் இருக்கும் என்று என் பெற்றோரும் ஆலோசனை கூறுகின்றனர். எனக்கும்
அவர்களின் ஆலோசனை ஏற்புடையதாய் இருந்தமையால் நான் அதற்குச் சம்மதித்துள்ளேன்.
அன்புடன்
பாபு
தொகுதி 7
7a. அலுவலக மின்னஞ்சல் – பரிந்துரைத்தல்
வினா:
அனுப்புநர்: lilly@outlook.com
பெறுநர்: nlb@gov.sg
வினா:
180
பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல் வழி எழுதுக.
நீயும் உடனடியாக அதனைப் பார்த்துக் கண்ணுற்று நம் நண்பனைப் பாராட்டு. அதன் பிறகு நம் நண்பர்கள்
குழு சார்பாக மாவீரனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தலாம்.
அன்புடன்
தமிழ்ச் செல்வன்
தொகுதி 8
8a. அலுவலக மின்னஞ்சல் - பாராட்டு தெரிவித்தல்
வினா:
அனுப்புநர்: ganga@outlook.com
பெறுநர்: sss@outlook.com
ஏனெனில்,
அன்புடன்
கோமளா
தொகுதி 9
9a. அலுவலக மின்னஞ்சல் - ஆலோசனை கூறுதல்
வினா:
எல்லாமே அவசரம். ஆற அமர ரசித்து ருசித்து, மென்று தின்று சுவைக்கக் கூட நேரம்
இல்லையென்று அவசர அவசரமாக நாலைந்து வாய் அள்ளிப் போட்டுக்கொண்டபடி ஓடுகின்ற இக்கால
மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவுபற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். அதுவும் தேர்வு
நெருங்கிவிட்டால் திடீர் உணவுகள்தான் அதிகம் உட்கொள்கின்றனர். எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை
முறையின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆலோசனைகளைப் பள்ளிகளுக்கு எவ்வாறு ஏற்படுத்தலாம்
என்பது குறித்த மின்னஞ்சல் ஒன்றை பள்ளி நிர்வாகத்திற்கு எழுதுக.
அனுப்புநர்: roja@outlook.com
பெறுநர்: schooladmin@outlook.com
182
9b. உறவுமுறை மின்னஞ்சல் - மன்னிப்புக் கேட்டல்
வினா:
பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல்வழி எழுதுக.
அன்புள்ள நண்பன் சபரிக்கு,
என்ன சபரி, நீயா இவ்வாறு செய்துவிட்டாய்? எனக்கு மிகுந்த வேதனையாக உள்ளது. நீயும், சந்தோஷும்
எப்படி இருப்பீர்கள். ஒரு சிறு விஷயத்திற்காக அவனிடம் உனக்கு இத்தனை கோபம் கூடாது தான். பாவம், அவன்
என்னிடம் சொல்லிச் சொல்லி எவ்வாறு கண்கலங்குகிறான் தெரியுமா?
தயவு செய்து நீ உடனடியாக அவனிடம் மன்னிப்புக் கேள். உங்கள் இருவரின் இடைவெளி என்னையே
கண்கலங்கச் செய்கிறது. இதற்காக என்னைத் தவறாகக் கருதிவிடாதே.
அன்புடன்
சரவணன்
தொகுதி 10
10a. அலுவலக மின்னஞ்சல் - முறையிடுதல்
வினா:
அனுப்புநர்: sunil@outlook.com
பெறுநர்: towncouncil@gov.com
183
10b. உறவுமுறை மின்னஞ்சல் - விளக்கம் கேட்டல்
வினா:
அன்பு நண்பா! நானும் உன் போன்று சிறப்படைய போதிய விளக்கம் தரும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
மனோகரன்
மின்னஞ்சல் விடைகள்
184
தொகுதி 1
1a. அலுவலக மின்னஞ்சல் - புகார் செய்தல்
ha@outlook.com
hari@outlook.com
npp@gov.sg
05/01/2016
வணக்கம்.
என் பெயர் ஹரி. நான் அங் மோ கியோ வட்டாரத்தில், கட்டிட எண் 214-ல் குடியிருக்கிறேன்.
எங்கள் அடுக்குமாடிக் கட்டடத்தின் கீழ் சில இளைஞர்கள், அனைவரும் அயர்ந்து உறங்கும் இரவின்
மடியில் தினமும் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் ஏற்படும் தொந்தரவுகளைப்
பொறுத்துக்கொண்டு இருக்க இயலவில்லை என்பதால் பெரியவர்கள் சிலர் அவர்களிடம் எடுத்துக்
கூறியும், இந்த இளைஞர்கள் பொருட்படுத்தவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்பொழுது திடீரென்று
இவர்களின் ஆரவாரத்தால் உறக்கம் கலைந்துபோகின்றது. குழந்தைகள் அழுகின்றன. மீண்டும் உறக்கம்வர
நெடுநேரம் ஆகின்றது. இதனால் கண் எரிச்சல், உடலில் சோர்வு, உணவு செரிமானம் இன்மை, தலைவலி
போன்றவற்றால் அவதிப்படுகிறோம்.
185
முடியும். உடலுக்கும், மனத்திற்கும், கண்களுக்கும் புத்துணர்ச்சி தருவது நல்ல உறக்கம்தான்.
அதுமட்டுமன்றி, உறக்கம் கெடுவது இளைஞர்களாகிய உங்களுக்கும் துன்பம்தானே என்றும் எடுத்துக்
கூறினேன். ஆனால் அவர்களோ ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம்’,
என்றிருக்கின்றனர்.
நன்றி
இப்படிக்கு
ஹரி
mani@outlook.com
balu@outlook.com
அறிவுரை கூறல்
04/01/2016
186
அன்புள்ள பாலு,
நான் நலமாக இருக்கிறேன். இங்கு நம் அம்மா, அப்பா அனைவரும் நலம். தம்பி, நீ நன்றாகப்
படிப்பது குறித்து மகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் கணினி விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டதாக
எழுதி இருக்கிறாய். அது எனக்கே உன்மீது சிறிது கோபத்தை ஏற்படுத்துகிறது.
விளையாட்டு ஒவ்வொருவருக்கும் அவசியமானதுதான். அது நம் உடலுக்குப் புத்துணர்ச்சியையும்,
மனதிற்கு மகிழ்ச்சியையும் தரவல்லது. தொடர்ந்து படித்தலிலிருந்து சற்றுநேரம் கணினி விளையாட்டுகளில்
ஈடுபடுவது தவறில்லை. அதற்காக எப்பொழுதும் அதிலேயே மூழ்கியிருப்பதுதான் தவறு. இக்கால
இளையர்களின் வாழ்க்கைமுறையில் கணினி விளையாட்டு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
எனவே, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. நானும் சில ஆண்டுகளுக்கு முன் அவ்வாறுதான் இருந்தேன்.
ஆனால், காலப்போக்கில் என்னை மாற்றிக்கொண்டேன். நான் கடைப்பிடித்த சில வழிமுறைகளை
உன்னிடம் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தம்பி, நான் என் நண்பன் ஒருவனின் ஆலோசனைப்படி, ஒரு கால அட்டவணையைத் தயார்
செய்துகொண்டேன். அதில் கணினி விளையாட்டுகளுக்குச் சற்று நேரத்தை ஒதுக்கிக்கொண்டேன்.
தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கும் வேளைகளில் கணினி விளையாட்டுகளின் நினைப்பு வந்ததென்றால்,
கணினியில் சில பயனுள்ள இணையதளங்களுக்குச் சென்று அவற்றிலிருக்கும் தகவல்களைப் படிப்பேன்.
இது மறைமுகமாக நம் கற்றலுக்கும் வழிவகுக்கும். நூலகம்.காம் போன்ற இணையதளங்களில் உன்
போன்ற இளையர்களுக்கென பற்பல தகவல்கள் குவிந்துகிடக்கின்றன.
மேலும், வேறுசில நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதன்மூலமும் கணினி
விளையாட்டுகளிலிருந்து உன் திசை திருப்பப்படும்.
ஆமாம்... உன் நண்பன் ரவி மிகச்சிறப்பாக ஓவியம் வரையக் கூடியவன் என்று என்னிடம்
கூறியிருந்தாயே. நீ ஏன் ஓவியத்தில் உன் கவனத்தைச் செலுத்தக் கூடாது? நம் தமிழாசிரியர்கூட,
“சித்திரமும் கைப்பழக்கம்” என்று கூறியிருந்தாரே, நினைவிருக்கிறதா அதனால் நீ கணினி விளையாட்டின்
நினைவு வரும்போதெல்லாம் ஓவியத்திலும் கவனம் செலுத்தலாம், அல்லது உன் பள்ளி நண்பர்களுடன்
வார்த்தை விளையாட்டு, சொற்களஞ்சிய உருவாக்கம் போன்ற விளையாட்டுகளையும் விளையாடலாம்.
அல்லது சிறந்த உடற்பயிற்சிகளிலும் ஈடுபடலாம்.
தம்பி! இதற்கெல்லாம் மேலாக, “மனதில் உறுதி வேண்டும்” என்று நம் மகாகவி பாரதியார்
கூறியுள்ளார். எனவே, மன உறுதியுடன் நாம் இருந்தோமானால், நிச்சயம் படிப்பில் தேர்ச்சி பெற்று நம்
பெற்றோருக்குப் பெருமை சேர்க்கலாம். நான் எழுதிய இந்த ஆலோசனைகள் உனக்குப்
பயனளித்திருக்கும் என நம்புகிறேன். உன் அடுத்த மின்னஞ்சலில் உன் பழக்கத்தை மாற்றிக்கொண்ட நல்ல
செய்தியை எதிர்பார்க்கிறேன்.
மீண்டும் உன் மின்னஞ்சலுக்காக காத்திருக்கிறேன்.
அன்புடன் உன் அண்ணன்
187
மணி
தொகுத 2
தொகுதி 2
2a. அலுவலக மின்னஞ்சல் - விமர்சனம் செய்தல்
மதிப்பிற்குரிய நிருபர் அவர்களுக்கு,
malar@outlook.com
news@outlook.com
05/01/2016
வணக்கம்.
என் பெயர் மலர். நான் வானவில் உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறேன். தங்களின் ‘தமிழ் மலர்’
செய்தித்தாளில் வரும் ‘மாணவர் பக்கம்’ பகுதியை மிகவும் விரும்பிப் படிப்பேன். அப்பகுதியில் உள்ள
புதிர்கள், விடுகதைகள், மாணவர்கள் கைவண்ணத்தில் அமைந்த ஓவியங்கள், உங்களுக்குத் தெரியுமா?,
சிந்தனைத்துளிகள், சிறு சிறு கட்டுரைகள், கதைகள், கவிதைகள், அறிவியல் உண்மைகள், வரலாற்றுக்
குறிப்புகள், கொஞ்சம் சிரியுங்கள் என அனைத்துப் பகுதிகளையும் ஒன்றுவிடாமல் படிப்பேன். அதிலும்
குறிப்பாக சிறுகதையும், அக்கதை உணர்த்தும் நீதியும் என் மனம் கவர்ந்த பகுதியாகும். ‘கடுகு சிறுத்தாலும்
காரம் போகாது’ என்பதற்கு ஏற்ப இப்பகுதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு பிறந்தநாளில், உங்கள் செய்தித்தாளில் நான் படித்த ‘மனிதாபிமானம்’ என்ற கதை என்
மனதுக்குள் ஆழப்பதிந்தது. சிந்தனையைத் தூண்டி ‘உண்மையின் உரைகல்லாக’ அமைந்துவிட்டது.
188
செல்வந்தர் ஒருவர் ஒரு கூடை நிறைய பழங்களைக் கோயிலில் செலுத்திவிடும்படி
வேலைக்காரனிடம் தந்து அனுப்பிவிட்டு, “இறைவா! இன்று ஒரு கூடைப் பழங்களை, நான்
வேண்டியபடியே அனுப்பிவைத்துவிட்டேன். நன்றி” என்று நினைத்தபடி உறங்கினார். ஆனால்
“செல்வந்தரே! நீ அனுப்பிய ஒரு பழம் எனக்குக் கிடைத்தது” என்று கனவில் கூறி இறைவன் மறைந்தார்.
மறுநாள் வேலைக்காரன் வந்ததும். “உண்மையைச் சொல்... இறைவனுக்குக் கூடைப் பழங்களைத் தந்தாயா
இல்லையா?” எனக் கேட்க, அவன் வழியில் ஏழை ஒருவன் ‘பசி’ என்றதால் மனம் இளகி ஒரே ஒரு பழம்
தந்துவிட்டு மற்றவை அனைத்தும் கோயிலுக்குத் தந்ததாகக் கூறினான். ‘ஏழை உண்ட பழமே இறைவன்
உண்ட பழம்’ என்று உணர்ந்தான் செல்வந்தன்.
பசுமரத்தாணி போல நல்ல கருத்துகள் மனதில் பதியச் செய்யும். இதுபோன்ற கதைகள் இன்னும்
மலரட்டும். இதுபோன்ற கதைகள் என்னைப் போன்ற இளையர்களுக்குக் கதைகள் படிக்கவும், எழுதவும்
மேலும் ஊக்குவிக்கும் என நம்புகிறேன். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். கதையாசிரியர் கவிக்கோவுக்கு
நன்றி. ‘மனிதனுக்கு மனிதன் உதவுவதே மனிதாபிமானம்.’ புத்தாண்டின் புதுமலரான கருத்துக்கு நன்றி.
இப்படிக்கு
மலர்
189
mukunth@outlook.com
murali@outlook.com
ஆலோசனை கூறல்
04/01/2016
அன்புள்ள முரளி,
உன் மின்னஞ்சலைக் கண்டேன். இங்கு நானும் என் டாமியும் மிக்க நலமாக உள்ளோம்.
அது சரி. செல்லப் பிராணி வளர்ப்புபற்றிக் கேட்டிருந்தாய். வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல்
பெரியவர்கள்வரை செல்லப்பிராணிகளை வளர்க்கலாம். அவை பொதுவாக உதவும் தன்மை, அன்பு போன்ற
குணங்களைப் பெற்றிருக்கும். அதை வளர்ப்பது குறித்து பயப்படத் தேவையில்லை. ஆனால், அவற்றை
வளர்ப்பதற்குத் தேவையானவற்றை முறைப்படி செய்யத் தவறக்கூடாது. அதாவது, அவற்றுக்கு வேளா வேளை
உணவளித்தல், அனுதினமும் குளிப்பாட்டித் தூய்மை செய்தல், அவை நோய்வாய்ப்பட்டால் கால்நடை மருத்துவரிடம்
அழைத்துச் செல்லுதல் முதலியனவற்றில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
புதிதாகப் பிறந்த நாய்களை வாங்கி வந்தால் அவற்றுக்கு ஒன்றரை மாதத்தில் தடுப்பு ஊசி போடவேண்டும்.
எலிக்காய்ச்சல் பாதிப்பு, ஹெபாடைட்டிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்ப்பதற்காகக் கலவை மருந்துகளின்
தடுப்பூசி போடவேண்டும். மேலும் மூன்றாவது மாதத்தில் ரேபீஸ் தடுப்பூசியும் போடவேண்டும். அதோடு
மட்டுமில்லாமல் அதற்கு வாந்தி, வயிற்றுப் போக்கு, மற்றும் அது சோர்ந்து படுத்திருத்தல் போன்ற அறிகுறிகள்
தென்பட்டால் உடனே மருத்துவரிடம் காட்ட வேண்டும்.
நாய்களைச் சின்ன சின்னக் கட்டளைக்கு உடன்பட வைப்பது முக்கியம். அதில் அவற்றுக்குப் பயிற்சியளிக்க
வேண்டும், அதற்குப் பிடித்தது எது? பிடிக்காதது எது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இவற்றை இணையத்தின்
மூலமோ, நாயை வாங்கிய கடைக்காரரிடமோ கேட்டுத் தெரிந்துகொள்வது முக்கியம்.
நாய் தன் உணவை உண்ணும் போதோ அல்லது குரைக்கும் போதோ அதன் அருகே செல்லக் கூடாது.
நாய் நம்மைத் துரத்தினால் உடனே ஓடக்கூடாது. மேலும் கையில் ஏதேனும் உணவுப் பொருள்களை
வைத்துக்கொண்டு அதற்குத் தராமல் ஏமாற்றக் கூடாது. தற்சமயம் கடைகளில் நாய் வளர்ப்பிற்கென்றே தரமான
உணவுப்பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அவற்றைத் தேர்ந்தெடுத்து நாய்களுக்கு வழங்கலாம்.
190
இவற்றுக்கும்மேல் உனக்குச் செல்லப்பிராணி வளர்ப்புபற்றித் தகவல் வேண்டுமென்றால் அவற்றையொட்டி
என்னிடம் நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. நேரம் இருந்தால் வீட்டிற்குவந்து பெற்றுக்கொள்ளவும். உன் அடுத்த
மின் மடலில் உன் செல்லப்பிராணியைப் பற்றி எழுத மறவாதே. சரி நண்பா! மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
முகுந்த்
தொகுதி 3
3a. அலுவலக மின்னஞ்சல் - அனுமதி கேட்டல்
jegan@outlook.com
towncouncil@gov.sg
பிறந்தநாள் கொண்டாட அனுமதி கேட்டல்
07/01/2016
191
மதிப்பிற்குரிய நகர மண்டப அதிகாரி அவர்களுக்கு,
வணக்கம்.
என் பெயர் ஜெகன். நான் சிராங்கூன் வட்டாரத்தில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிட எண் 248 ல்
குடியிருக்கிறேன். இந்தக் கட்டிடத்தில் வசிப்பவர்கள் அவர்களின் திருமண நாள், பிறந்தநாள். திருமண
வரவேற்பு போன்ற குடும்ப விழாக்களையும், தீபாவளி, கிறிஸ்துமஸ், கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி,
சீனப் பெருநாள் கொண்டாட்டம், ஹரி ராயா கொண்டாட்டங்கள் போன்ற கலாச்சார விழாக்களையும்
கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் கொண்டாட உரிய அனுமதி தங்களிடம் பெற்று, கொண்டாடி வருகின்றனர்.
உங்கள் அனுமதியில்லாமல் எந்த விழாக்களும் இங்கு நடத்தப்படுவதில்லை என்பதனைத்
தெரிவித்துக்கொள்கிறேன். இதன்வழி, என்னுடைய பிறந்தநாள் விழாவையும் என் கட்டிடத்தின் கீழ்
இருக்கும் வெற்றிடத்தில் கொண்டாட விழைகிறேன்.
நன்றி
இப்படிக்கு
ஜெகன்
sekar@outlook.com
selvan@outlook.com
தகவல் தெரிவித்தல்
12/01/2016
அன்புள்ள செல்வன்
இங்கு நான் நலமாக உள்ளேன். உன் நலத்தினை அறிய ஆவல். என்னுடன் இன்று நீ புதியதாகத்
தொடங்கியுள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொண்டதற்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நண்பா! நீ சிங்கப்பூருக்கு
வருவதாகக் கூறியுள்ளாய். எனக்கு இப்பொழுதே மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடு சிங்கப்பூர். சிங்கப்பூர் ஒரு சிறிய தீவு என்ற போதிலும்
இங்கு நிறைய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. மற்ற நாடுகள்போல் இல்லாமல் சிங்கப்பூர் பல இன
சமுதாயத்தைக் கொண்டுள்ளது. இங்கு சீனர், தமிழர், மலாய்க்காரர், ஆங்கிலேயர் எனப் பல இனத்தைச் சேர்ந்தவர்கள்
வாழ்கிறார்கள். ஒவ்வொரு இனத்தின் சிறப்பைக் கூறும் வண்ணம் இங்கு இடங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி
விவரிக்கிறேன்.
193
முதலில் சைனா டவுன் எனப்படும் சீன நகரம். இங்குதான் சீனர்கள் சீனாவிலிருந்து வந்து இறங்கினார்கள்.
பெரும்பாலான சீனர்கள் அப்போது சிறு வியாபாரங்களை இங்குத் தொடங்கினார்கள். காலப்போக்கில் அவை
வளர்ச்சி கண்டபோது அவர்களின் குடும்பத்தினரையும் அழைத்து வந்தனர். சீனப் பெண்கள் கட்டிட வேலைகளில்
ஈடுபட்டார்கள். ஆடவர்கள் பெரும்பாலும் வியாபாரிகளாக இருந்தார்கள். சீன பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும்
வண்ணம் இங்கு தற்போது நிறையக் கடைகளைப் பார்க்கலாம். சீனப் புத்தாண்டு சமயத்தில் இவ்விடம் சிறு
சீனாவைப் போலவே காட்சியளிக்கும்.
தமிழ்நாட்டிலிருந்து அப்போது நிறையப் பேர் சிங்கப்பூருக்குப் பிழைப்புத் தேடி வந்தார்கள். அவர்கள் சிராங்கூன்
சாலையில் தங்கி சிறு வியாபாரங்கள், கூலி வேலைகள் போன்றவற்றில் ஈடுபட்டார்கள். சிலர் வட்டிக்குக் கொடுக்கும்
செட்டியார்களாகவும் இருந்தார்கள். சிராங்கூன் சாலை சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்களின் ‘வாழ்க்கைக் கண்ணாடி’
என்றால் அது மிகையாகாது. இப்போது அது “தேக்கா” என்று அழைக்கப்படுகிறது. தீபாவளிக்குக் தேக்கா சாலை
களைகட்டியிருப்பதைப் பார்க்க கண்கள் இரண்டு போதா!
அடுத்து, சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் சிங்கப்பூர் நாட்டின் முக்கியமான விமான நிலையம் ஆகும்.
இவ்விமான நிலையம் தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாகும்.
அடுத்ததாக செயின்ட் ஜான்ஸ் தீவு திட்டுகள். இதற்கு படகு மூலம் செல்லலாம். நகரத்தின் மையத்தில்
இருந்து 15 நிமிடங்கள் ஆகும். இந்த இடம் பார்ப்பதற்கே மிகவும் கோலாகலமாக இருக்கும்.
இவ்வாறு மிகக் குறுகிய காலத்தில் மிகச்சிறப்பான வளர்ச்சிகண்ட நகரம் சிங்கப்பூர். இது ஒரு சிறிய தீவாக
இருப்பினும், இங்கு பார்ப்பதற்கு எண்ணற்ற இடங்கள் உள்ளன. தட்பவெப்ப நிலையிலும் இது இந்தியாவுடன்
பெரிதும் ஒத்துப் போவதால் இதனை அனைவரும் மிகவும் விரும்புகின்றனர்.
இப்படிக்கு
194
உன் அன்பு நண்பன்
சேகர்
195
தொகுதி 4
4a. அலுவலக மின்னஞ்சல் - விண்ணப்பித்தல்
meenal@outlook.com
unique@outlook.com
பகுதிநேர வேலைக்கு விண்ணப்பித்தல்
04/09/2016
வணக்கம்.
என் பெயர் மீனாள். எனக்குப் பள்ளி ஆண்டுத் தேர்வு முடிந்து பள்ளி விடுமுறை தொடங்க
இருக்கிறது. பெரும்பாலான மாணவர்கள் விடுமுறையை நண்பர்களுடன் சேர்ந்து வீண் அரட்டை
அடிப்பதிலும், கேளிக்கைக் கொண்டாட்டங்களிலும் பொன்னான நேரத்தைச் செலவழித்து வருகிறார்கள்.
ஆனால், நான் விடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவு செய்ய விருப்பப்படுகிறேன். ‘காலம் பொன்
போன்றது’ என்பதை நான் நன்கு அறிவேன்.
நன்றி
இப்படிக்கு
மீனாள்
mani@outlook.com
ravi@outlook.com
சுற்றுலா மற்றும் கற்றல் பயணம்
197
09/01/2016
அன்புள்ள நண்பன் ரவிக்கு,
நான் இங்கு நலமாக உள்ளேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உன் மின்னஞ்சலைக் கண்டதும் அளவற்ற
மகிழ்ச்சி அடைந்தேன். எங்கே என்னை மறந்துவிட்டாயோ எனக்கூட எண்ணினேன். ஆனால், அது பொய்யாயிற்று.
மிக்க மகிழ்ச்சி.
இருப்பினும், ஆண்டிற்கு ஒரு முறையாவது சுற்றுலாப் பயணம் செல்வதன் மூலம் நம்முடைய மனம்
அளவற்ற மகிழ்ச்சியடைகின்றது.
சிறுவர் முதல் பெரியோர் வரைக்கும் இன்பச் சுற்றுலா செல்கிறோம் என்ற எண்ணம் வந்தவுடனேயே குஷி
ஏற்பட்டுவிடுகிறது. உடனே பயணத்திற்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை, அதாவது உடைகள், ஸ்வட்டர்,
தேவைக்கேற்ப மருந்துகள், போன்றவற்றை எடுத்துக்கொண்டு இன்பப் பயணம் மேற்கொள்கிறோம். அதுவே கற்றல்
பயணமாக அமைந்துவிட்டால் பேரானந்தத்திற்கு அளவே இல்லை.
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் காணும் போது அந்த இடங்கள் நம் சிந்தனையைத் தூண்டுவதாகவும்
அமைகின்றன. “சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள்; அது உங்கள் சக்தியின் பிறப்பிடம்” என்றார் ஒரு மாமேதை.
அதோடு புறநானூற்றுக் கருத்துப்படி “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயரிய மனப்பான்மை நம்
உள்ளத்தில் மலர்கின்றது. அதுவரையில் ‘கிணற்றுத் தவளையாக’ வாழ்ந்தவர்கள் கூட, இத்தகைய பயணங்களின்
மூலம், “தன்பிள்ளை தன்பெண்டு சோறு வீடு”என்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து மீண்டு, பொதுநல எண்ணம்
பெறுகின்றனர்.
198
குறிப்பெடுத்துக்கொள்ளவேண்டும். அக்குறிப்புகள் நமக்கும், நம்மைச் சார்ந்தோர்க்கும் எக்காலங்களிலும் மிகவும்
பயனுடையதாய் விளங்கும்.
அதோடு ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பதற்கு ஏற்ப, நாம் சில அரிய பொருட்களை வாங்கி,
அவற்றினைப் பத்திரப்படுத்துவதன் மூலம், நாம் கண்டுகளித்த இடங்களின் நினைவுகள் ‘பசுமரத்தாணி போல’
என்றென்றும் நிலைத்து நிற்கும்.
அன்பு நண்பா! நான் உனக்குக் கூறியதைப் போல அடுத்த முறை நீ சுற்றுலா செல்லும் பொழுது
என்னென்ன தெரிந்துகொண்டாய் என்பது குறித்து எனக்கு விரிவாக எழுதவும்.
அன்புடன்
மணி
தொகுதி 5
5a. அலுவலக மின்னஞ்சல் - மன்னிப்புக் கேட்டல்
ம
த
ி
balaji@outlook.com ப
்
principal@vanavilsec.com ப
ி
தலைமை ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டல்
ற
10/10/2016 ்
க
ு
ர
ிய தலைமை ஆசிரியருக்கு.
வணக்கம்.
படிப்பில் நான் சுமார் மாணவன். ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கும் சமயங்களில் கவனிப்பது
இல்லை. அனைவரும் பாட ஏடுகளில் எழுதும்போது, நான் கேலிச்சித்திரங்கள் வரைந்து பக்கத்து
மாணவனுக்குக் காட்டி விளையாடுவேன். ஆசிரியர்கள் எச்சரித்தபோது அலட்சியம் செய்தேன். என்
வகுப்பு மாணவர்களின் தோற்றத்தையும் உருவத்தையும் பார்த்து அண்டங்காக்கா, எலும்புக் கூடு,
கத்தரிக்காய், ஆந்தைக் கண்ணன் என்று கேலி செய்தேன். வகுப்புத் தேர்வில் விடை தெரியாததால்
பக்கத்து மாணவனிடம் விடைகேட்டு தொல்லை கொடுத்தேன். அவன் கூற மறுத்ததால் அவனை
அடித்துவிட்டேன்.
“தவறு செய்வது மனித குணம் மன்னிப்பது தெய்வ குணம்” – என்பது தாங்கள் அறிந்ததே!
‘மறப்போம் மன்னிப்போம். உழைப்போம் உயர்வோம்’ என்பதுதானே நம் பள்ளியின் குறிக்கோள். என்னை
மன்னித்துவிடுங்கள். கவனத்துடன் படித்து உயர வழிகாட்டுங்கள்.
நன்றியுடன்
பாலாஜி
uma@outlook.com
usha@outlook.com
பகுதிநேர பணி
09/01/2016
200
அன்புள்ள தோழி உஷாவிற்கு,
நான் நலமாக இருக்கிறேன். உன் மின்னஞ்சலைக் கண்டேன். அதில் என்னிடம் பகுதிநேர பணிகுறித்துக்
கேட்டிருந்தாய்.
நாம் ஏற்கனவே பார்க்கக்கூடிய பணியோ, காலை முதல் மாலை வரை கடினமாக உழைத்து, அதனால்
ஏற்பட்ட களைப்பும். சலிப்பும் கொண்டு வீடு திரும்புவதாகவே பெரும்பான்மையான இடங்களில்
அமைந்துவிடுகின்றன. மேலும் ஊதியமும் போதுமானதாக அமையாத காரணத்தாலேயே பெரும்பான்மையானவர்
பகுதிநேர பணியை நாடுகின்றனர். அவ்வாறு கிடைக்கும் பணி சுலபமானதாகவும், சுமையற்றதாகவும், மகிழ்ச்சியைத்
தரவல்லதாகவும், வருமான வளமும், சென்றுவரும் தொலைவும் ஏற்புடையதாக அமைந்துவிடுமேயானால் அது
இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்திவிடும்.
இது போன்ற ஒரு நிறுவனம்தான் “காந்தி பல்துறை வளாகம்.” இங்கு நம் போன்று பணியில்
இருந்துகொண்டே பகுதி நேரப் பணியை நாடுபவர்களுக்கு ஏற்ற தொழிலகள் இருக்கின்றன. ஓய்வு நேரத்தைப்
பயனுள்ள வகையில் கழிப்பதற்காகப் பணிக்கு வரவேண்டும் என்பவர்களுக்கும், பள்ளியில் பயிலும் மாணவகளுக்கும்
6 மணி முதல் 7 மணி வரை பகுதிநேர பணியாற்றி, அவர்கள் தத்தம் தேவைகளைப் (அதாவது பாடநூல்கள்
வாங்குவதற்கு, பேருந்து செலவிற்கு, சேமித்தலுக்கு மற்றும் சுய செலவுக்கு என்ற வகையில் எல்லாம்) பூர்த்தி செய்து
கொள்வதற்கு ஏற்ற தொழில்கள். மேலும், ஆதரவற்றோர், முதியோர் போன்றோர்களுக்கும் கூட ஏற்ற பல்வேறு
பணிகள் அந்நிறுவனத்தின் கீழ் அமைந்துள்ளன. அங்கு பணியாற்றக்கூடிய ஒவ்வொருவரும் பணிச்சுமை சிறிதும்
தெரியாதவாறு, தாங்கள் ஒரு கூட்டுக் குடும்பத்தில் உள்ளதைப் போன்ற உணர்வுடன் செயலாற்றுகின்றனர்.
குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு அதுவும் வாரம் இரண்டு நாட்கள் மட்டும் பணியாற்றினாலேயே மாதம்
ஐந்நூறு வெள்ளி வரை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. தனக்கும், பிறருக்கும் பயன் நல்கும் பல பணிகளை
அந்நிறுவனத்தார் தங்களை நாடிவரும் அனைவருக்கும் நல்கி வருகின்றனர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை எட்டி
வெள்ளிவிழாக் காணக்கூடிய நிலையில் அந்நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.
அன்புடன்
201
உமா
தொகுதி 6
6a. அலுவலக மின்னஞ்சல் - தகவல் கேட்டறிதல்
ம
தி
vasanthi@outlook.com ப்
ப
npp.gov.sg ிற்
க
திருட்டுச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்தல்
ு
ரி
01/01/2016
ய
வணக்கம்.
என் பெயர் வசந்தி. நான் தெக் வாய் வட்டாரத்தில் குடியிருக்கிறேன். இங்கிருக்கும் சாலை 23 ல்,
ஒதுக்குப்புறமான பகுதியில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த ஒரு மாதமாகவே
நடைபெறும் தொடர் திருட்டுச் சம்பவங்களால் தூக்கத்தைத் தொலைத்து வருகிறோம். என் வீட்டை
அடுத்து பத்து வீடுகள் தள்ளியிருக்கும் வீட்டில் சேலைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இரண்டு நாட்கள்
கழித்து, வேறொரு வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு விழித்த அந்த வீட்டுப் பெண்மணி கூச்சல்
போட்டதால் திருடர்கள் தப்பி ஓடிவிட்டனர். திருடர்களின் திருட்டு முயற்சி இப்படித் தொடர்கதையாக
இருக்கிறது.
இப்படிக்கு
வசந்தி
gopu@outlook.com
babu@outlook.com
வெளிநாட்டுக் கல்வி
09/01/2016
அன்புள்ள பாபுவிற்கு,
203
நீ என்னிடம் அயலநாட்டுக் கல்விகுறித்துக் கேட்டிருந்தாய். பொதுவாக, வாய்ப்புகள் அதிகம் உள்ள
துறைகள் என்று சிந்திப்பவர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது பொறியியல், மருத்துவம், மேலாண்மை, சட்டம்
போன்ற துறைகள்தான். ஆனால் அறியப்படாத துறைகள் சிலவும் அயல்நாடுகளில் உள்ளன.
அது, பெட்ரோலியம் இன்ஜினீயரிங்.
தொடக்கக் கல்லூரியில் கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களைப் படித்தவர்கள்,
பெட்ரோலியம் இன்ஜினீயரிங் படிக்கலாம். அதற்கான பணி வாய்ப்புகள் சிங்கப்பூரிலும், வெளிநாடுகளிலும் அதிகம்
உள்ளன. ஊதியமும் அதிகமாகவே வழங்கப்படுகிறது.
அடுத்து, உணவுத் தொழில்நுட்பம்!
தொடக்கக் கல்லூரியில் அறிவியலை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்கள், பி உணவுத் தொழில்நுட்பத்தை
ஒரு பாடமாக எடுத்துப் படிக்கலாம். இந்தத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு, உணவைப்
பதப்படுத்துவது, விநியோகம், தரம் ஆராய்வது, பேக்கிங் போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்புகள் உண்டு.
இதனைப் படிப்பதன் மூலம், தனியார், உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுடன் உணவுப்
பாதுகாப்புத் துறை, பால்வளத் துறை போன்ற அரசுத் துறைப் பணியும் பெறலாம். ஆராய்ச்சித் துறையிலும்
செல்லலாம். மாதம் குறைந்தது மூவாயிரம் வெள்ளிகள் முதல் சம்பாதிக்கலாம்.
அதையடுத்து. கம்பெனி செக்ரட்டரி (சி.எஸ்)!
உயர் பொறுப்புகளுக்கு தகுதிப்படுத்தும் படிப்பு, கம்பெனி செக்ரட்டரி படித்துக்கொண்டே எக்ஸிகியூடிவ்,
ப்ரொபஷனல் தேர்வுகள் எழுதலாம். தொடக்கக் கல்லூரி முடித்தவர்கள் கூட அடிப்படைத் தேர்வுகள் எழுத முடியும்.
இதனைப் படிப்பதன் மூலம் ஆரம்பித்திலேயே மூவாயிரம் வெள்ளிகள் முதல் சம்பளம் இருக்கும். சி.ஏ.
போல் தான் இந்தப் படிப்பும். இதற்கென இருக்கும் தனியார் நிறுவனங்களில் படிக்க முடியும்.
இவ்வாறு ஏராளமான கற்றல் வாய்ப்புகள் நம் நாட்டைப் போன்றே அயல்நாடுகளிலும் உள்ளன.
நான், கம்பெனி செக்ரட்டரி (சி.எஸ்) கோர்ஸ் தான் பயின்றுகொண்டிருக்கிறேன். எனக்கு அது மிகவும்
பயனுடையதாக இருக்கின்றது.
நண்பா, இதுவரை நான் இங்கு அறிந்துகொண்ட பல கருத்துக்களை உனக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.
இதில் உனக்கு ஏற்புடைய கல்வியினைத் தேர்ந்தெடுத்துப் பயின்றால் நலம் பயக்கும் என எண்ணுகிறேன்.
உன்னுடைய அடுத்த மின்னஞ்சலில், நீ எந்தப் பிரிவினைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய் என்பது குறித்து
எனக்குத் தெரியப்படுத்தவும்.
அன்புடன்
கோபு
204
தொகுதி 7
7a. அலுவலக மின்னஞ்சல் – பரிந்துரைத்தல்
lilly@outlook.com
nlb@gov.sg
புதிய நூலகத்தில் தேவையான வசதிகள்
05/05/2016
வணக்கம்.
என் பெயர் லில்லி. நான் வசிக்கும் பீஷான் வட்டாரத்தில் புதிதாக நூலகம் ஒன்று கட்டப்
போவதை தமிழ்முரசு செய்தித்தாளின் வாயிலாக அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு வசிப்பவர்கள்
அனைவரும் நடுத்தரப் பிரிவைச் சார்ந்தவர்கள். ஓரளவு படித்தவர்கள். அறிவை வளர்த்துக்கொள்ள
வேண்டும் என்ற எண்ணமும் எழுச்சியும் உடையவர்கள். சொந்தமாக, புத்தகங்களையும்,
செய்தித்தாள்களையும்கூட வாங்கிப் படிப்பதற்குரிய பொருளாதார வசதியற்றவர்கள். மாணவர்கள்
அறிவைவளர்த்துக் கொள்ள ‘பழுத்த மரத்தை நாடிச்செல்லும் பறவைகளைப் போல’ அடுத்த ஊரைத்
தேடிச்செல்ல வேண்டியிருக்கிறது. இந்த வட்டாரத்தில் நூலகம் அமைவதால், இக்குறை நீங்கும் என்று
நம்புகிறேன்.
‘புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத வீடு’ போன்றது. நூல்கள் பொழுதைப் போக்க
மட்டுமல்ல; நம்மை நல்வழிப்படுத்தவும்தான். மலர்களைத் தேடி தேனீக்கள் வருவதைப் போல நூலகம்
தேடிவர ஆவலுடன் காத்திருக்கிறோம்.
நன்றி
இப்படிக்கு
லில்லி
kumaresan@outlook.com
maaveeran@outlook.com
பாராட்டு தெரிவித்தல்
12/01/2016
206
அன்புள்ள நண்பன் மாவீரனுக்கு,
ஆம். உன்னுடைய செயல் திறனை எண்ணி எண்ணி உன் அன்னை எத்தனை விதமாகப் பெருமிதம்
கொண்டிருப்பார் என்பதனை நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது. உன் போன்ற நண்பர்கள்
கிடைக்கப் பெற்றதால், ‘பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்’என்ற வகையில் எனக்கும் பேரும் புகழும் கிடைக்கத்தான்
செய்கின்றன.
நண்பா, நீ பள்ளிப் பருவத்தில் என்னோடு படிக்கும் போதே அரிய பல செயல்களைச் செய்து அதன்
மூலம் உன் வீட்டிற்கும், நம் பள்ளிக்கும். நம் ஊருக்கும் எத்தனை பெரும்புகழ் பெற்றுத் தந்திருக்கிறாய்.
விளையாட்டிலும் சரி, படிப்பிலும் சரி, பிற பண்புகளிலும் சரி.
ஆனால், அதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததைப் போன்று இன்றைய உன் செயல் விளங்கியதை நாங்கள்
செய்தித்தாளின் மூலம் அறிந்தோம்.
அப்பப்பா! என் உடல் குலுங்குகின்றது. உள்ளம் பதைபதைக்கின்றது. நெஞ்சோ “திக் திக்” என்று
அடித்துக்கொள்கிறது. எத்தனை பெரிய சிகரம் அது. ஒரு பிடி நழுவியிருந்தால், அய்யஹோ! எண்ணவே
கதிகலங்குகிறது. என் ஆருயிர் நண்பனான உன்னையும் அல்லவா நாங்கள் இழந்திருப்போம்.
207
நண்பா! உன் உடலில் ஏற்பட்ட காயங்கள் வடுக்களல்ல. விழுப்புண்கள். சாதனை படைக்கப் பிறந்தவனே!
சரித்திரம் படைக்கப் போகிறவனே! உன்னை வாழ்த்த எனக்குச் சொற்கள் எழவில்லை. என் நா தழுதழுக்கிறது.
உன்னை என் மனதாரப் பாராட்டுகிறேன். நான் மட்டுமல்ல, அனைவரும்தான்.
அன்புடன்
குமரேசன்
தொகுதி 8
8a. அலுவலக மின்னஞ்சல் - பாராட்டு தெரிவித்தல்
ganga@outlook.com
sss@outlook.com
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் பாராட்டு தெரிவித்தல்
11/02/2016
வணக்கம்.
என் பெயர் கங்கா. பெண்களைச் சிறப்பு செய்யும் நோக்கத்தில் வீராசாமி வீடமைப்பு வட்டாரத்தில்
‘இன்றையபெண்மணி’ என்னும் நிகழ்ச்சி பெண்களுக்காக முதன்முறையாக நடத்தப்பட்டது. இதனை
ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விழாவிற்கு
ஏராளமான பெண்கள் தங்கள் குடும்ப விழாபோல உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
நன்றி
இப்படிக்கு
கங்கா
209
kumutha@outlook.com
kunaseelan@outlook.com
நன்றி தெரிவித்தல்
12/01/2016
ஐயா, நான் இங்கு நலமாக இருக்கிறேன். தங்கள் நலத்தை அறிய ஆவலாக உள்ளேன். ஐயா! இன்று கூட
எங்கள் இல்லத்தில் உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். உங்களுக்குச் சிறிது உடல் நலக் குறைபாடு
ஏற்பட்டுள்ளதாக அம்மா கூறியிருந்தார்கள். தற்சமயம் எவ்வாறு உள்ளது?
ஐயா!
என்ற பாடல் புகலும் கருத்திற்கிணங்க, தங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அன்றுமுதல் இன்று
வரை ‘ஒல்லும் வகையால் உதவி செயல்’ என்பது போல் இன்றைய காலக்கட்டத்திலும்கூட பயன் கருதாது உதவி
புரிந்துவருவது பெரிதும் வியக்கத்தக்க ஒன்றாகும்.
ஏழைக் குடும்பத்தாராகிய நாங்கள், எங்கள் தந்தையாரையும் இழந்து, பிழைக்க வழிதேடி உங்கள் ஊருக்கு
வந்தோம். பட்டப் படிப்பு படித்த நான் பணி தேடி அலைந்தபொழுது, தெரிந்தவர் வாயிலாக என்னைப் பணியில்
அமர்த்தினீர். பழகிய சில நாட்களுக்குள்ளாகவே எங்களைப் பற்றி அறிந்து, தாங்களும் தங்கள் துணைவியாரும்
எவ்வாறெல்லாம் எங்களுக்கு உறுதுணை புரிந்தீர் என்பது அளப்பற்கரியது.
இது போன்று வேறு யார் செய்வார்கள்? நீங்கள் அனாதைகள் அல்ல. உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்
என்று கூறி, காலம் முழுவதும் உங்களுக்கு நன்றிக்கடன் பட வைத்த பெருந்தகையே!
உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன். நன்றி என்று ஒற்றை வரியில் கூறுவதாகவா
செய்திருக்கிறீர்! என் கண்ணீரையே, எங்கள் அன்பையே, உங்களுக்கு நன்றிக் காணிக்கையாக்கி, காலம் முழுவதும்
உங்களுக்குப் பணிசெய்வோம் என்று கூறிக் கொள்கிறேன்.
பணிவுடன்
குமுதா
211
தொகுதி 9
9a. அலுவலக மின்னஞ்சல் - ஆலோசனை கூறுதல்
roja@outlook.com
schooladmin@outlook.com
வணக்கம்.
212
ஆரோக்கியத்தைக் கண்காணிக்க பேருதவியாக இருக்கும். மேலும், மருத்துவ முகாம் அமைத்து
கண்பார்வை சோதனை செய்தல். பல், காது, மூக்கு தொண்டை ஆய்வு போன்றவற்றையும் செய்தால்
ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் நோய்களைக் கண்டறிந்து மாணவர்களின் பெற்றோருக்குத் தெரிவித்து
அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
“காலை மாலை உலவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன்
ஓடிப் போவானே” என்ற திருமொழிக்கேற்ப, மாணவர்கள் ஆரோக்கிய வாழ்க்கையின் முக்கியத்துவத்தை
உணர்ந்து செயல்பட்டால் அவர்களின் எதிர்காலமும் ஒளிமயமாக இருக்கும் என்பதைத் தாழ்மையுடன்
கூறிக்கொண்டு என் மின் மடலை முடித்துக்கொள்கிறேன். என்னுடைய இந்த ஆலோசனைகளைக் கருத்தில்
கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். பள்ளி மாணவர்கள் இதனைப் பின்பற்றப் பழக்கிக் கொண்டால்,
வாழ்க்கை வசந்தமாகும்.
நன்றி
இப்படிக்கு
ரோஜா
213
9b. உறவுமுறை மின்னஞ்சல் - மன்னிப்புக் கேட்டல்
sabari@outlook.com
santhosh@outlook.com
மன்னிப்புக் கேட்டல்
12/01/2016
அன்புள்ள நண்பன் சந்தோஷிற்கு,
நண்பா! நான் எத்தனை பெரிய தவறு செய்திருக்கிறேன் என்பது எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது.
என்னுடைய அவசரப்புத்தியினால், ஒரு நொடிப்பொழுதில் உன்னுடைய உயரிய நட்பை இழக்க இருந்ததை எண்ணி
நான் மிகவும் வெட்கப்படுகிறேன்.
நீ என்னிடம் காட்டிய அன்பு எத்தகையது என்பதை எவ்வாறு என்னால் மறக்க முடிந்தது என்பதனை
நினைக்கும் பொழுது எனக்கு என்மீதே மிகவும் வெறுப்பாக உள்ளது.
பள்ளிப் பருவம் முதல், இன்று பணியாற்றும் இடம் வரை நம்மைப் போன்ற சிறந்த நண்பர்கள் இல்லை
என்று அனைவரும் பாராட்டினரே! ‘கபிலர் பரணரைப் போல’, ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாரைப் போல’
என்று அனைவரும் நம்மை எப்படியெல்லாம் கேலி செய்திருக்கிறார்கள்.
அன்று ஒரு நாள் நம் அலுவலகத்தில் உள்ள ஒரு முக்கியமான கோப்பை(file) நீ அவசர அலுவலக
விஷயமாய் எடுத்துச் சென்றதை அறியாத நம் முதலாளி, அந்தக் கோப்பை நான்தான் எடுத்துச் சென்றுவிட்டதாகக்
கருதி, என்னை பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தார். பிறகு உன் மூலம் விஷயம் அறிந்து உடனே என்னை
மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டார். நான்தான் என் அவசரப் புத்தியினால், உன்னால்தான் எனக்கு வேலை
214
போய்விட்டது என்று கருதி. உன் மனம் மிகவும் புண்படும்படியாக ஒரு நொடிப்பொழுதில் என்னவெல்லாம்
பேசிவிட்டேன்.
இதனை உன்னிடம் நேரில் கூறமுடியாத நிலையில், உன் முன் குற்றவாளி போல் இதனை மின்னஞ்சல் வழி
அனுப்புகிறேன்.
என் ஆருயிர் நண்பா, என்னை மன்னித்து விடு. நாம் பழையபடியே நட்புடன் இருக்கலாம்.
அன்புடன்
சபரி
தொகுதி 10
10a. அலுவலக மின்னஞ்சல் - முறையிடுதல்
sunil@outlook.com
towncouncil@gov.com
13/01/2016
215
மதிப்பிற்குரிய நகர மண்டப சுகாதார அதிகாரி அவர்களுக்கு,
வணக்கம்.
என் பெயர் சுனில். நான் வசிக்கும் தெம்பனீஸ் வட்டாரத்தில் மழை பெய்யும் போதெல்லாம்
ஆங்காங்கே நீர் தேங்கியிருக்கின்றது. மழையின் வேகம் அதிகமாகும் சமயங்களில், எங்கள் பகுதி சிறிய
தீவுபோல் ஆகிவிடுகின்றது. இதனால் பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
நான்கு மரங்கள் சாய்ந்துகிடக்கின்றன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டடி ஆழத்திற்கு
நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் துர்நாற்றம் வீசுகின்றது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. அழையா
விருந்தாளியாகக் கொசுக்கள் பெருகிவிட்டன. மலேரியா, மஞ்சள் காய்ச்சல், டெங்கு, சிக்குன் குனியா
போன்ற நோய்கள் கொசுக்களின் மூலம்தான் பரவுகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்
மருத்துவமனை சென்று சோதித்துப் பார்த்தபோது, அவர்கள் டெங்கு காய்ச்சலினால் தாக்கப்பட்டுள்ளனர்
என்று தெரியவந்துள்ளது. ‘∴ப்ளூ’ எனப்படும் வைரஸ் காய்ச்சல் மழைக்காலத்தின் நோயாகும். இதனால்
தலைவலி, உடல்வலி, காய்ச்சல், தும்மல், சளி, இருமல் தொல்லை ஏற்படுகிறது. மாசடைந்த நீரிலிருந்து
வரும் ஈக்களாலும், எறும்புகளாலும் உணவு, குடிநீர் மூலம் கிருமிகள் பரவுவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி,
காலரா ஏற்படுகின்றது. இந்த நோய்களைத் தடுக்க சோப்புப் போட்டுக் கைகளை நன்றாகக் கழுவ
வேண்டும். தண்ணீரைக் கொதிக்க வைத்து. ஆறவைத்துக் குடிக்க வேண்டும் என்று அக்கம்பக்கத்தார்க்கு
எடுத்துக்கூறி வருகிறோம்.
மக்கள் நோயின்றி வாழ, சுற்றுப்புறத் தூய்மை, உணவுத் தூய்மை, குடிநீர்த் தூய்மை ஆகியவை மிக
அவசியம். கொசு மருந்துத் தெளிப்பு, நீரில் நோய்த்தடுப்பு மருந்துத் தெளிப்பு போன்றவை தொடர்ந்து
மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அது முழுமையாக மேற்கொள்ளப்படாததால் கொசுக்களின்
உற்பத்தி அதிகமாகிவிட்டது. விஷப்பூச்சிகள்கூட நாளடைவில் பெருகலாம். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற
செல்வம்’
வரும்முன் காப்பது அதனினும் நல்லது. – என்பது தாங்கள் அறிந்ததே. தேங்கி நிற்கும் நீரில்
குழந்தைகள் விளையாடுகின்றனர். வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
நன்றி
இப்படிக்கு
சுனில்
mathivaanan@outlook.com
manoharan@outlook.com
படிக்க நேரம் ஒதுக்குவது தொடர்பாக விளக்கம்
12/01/2016
ஆண்டுத் தொடக்கத்திலேயே, எவ்வாறு பயில வேண்டும் என்பதனைத் திட்டமிடுதல் மிக அவசியம். நாம்
ஒருபொழுதும் இழந்த காலத்தைத் திரும்பப் பெற இயலாது. எனவேதான், ‘காலம் பொன் போன்றது’என்ற
பொன்மொழிகூட நிலவி வருகின்றது.
திட்டமிட்டுச் செயல்படும் எச்செயலும் நிச்சயம் வெற்றிக் கனியை நல்கும் என்பதனை நாம் ஒருபோதும்
மறக்கக் கூடாது. இதனைத்தான் வள்ளுவப் பெருந்தகையும்,
படிப்பதைச் சுமையாகக் கருதாமல், ஒரு படம் பார்ப்பதைப் போல சுவையான அனுபவமாக எடுத்துக்
கொண்டால், படித்ததெல்லாம் உடனே மனதில் பதிந்துவிடும். அது பள்ளிப் பாடமாயினும் சரி. இணைப் பாடமாயினும்
சரி.
217
தற்காலத்தில் அனைவரும் எல்லாத் துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதனைக் கருத்தில்
கொண்டே, பாடநூல்களுடன் பல இணைப் பாடங்களையும் இணைத்துள்ளனர் என்பதனை நாம் முதலில் தெளிவாகப்
புரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு திரைப்படப் பாடல் காட்சிகள், படக் காட்சிகள் முதலியன எவ்வாறு நம் மனதில் உடனடியாக
பதிந்துவிடுகின்றது என்றால், முழுக் கவனமும் அதில் இருப்பதால்தான். அவ்வாறு நம் பாடத்திலும் கவனம்
இருக்குமேயானால், அதுவும் என்றும் நம் நெஞ்சினில் நீங்காமல் நிலைத்திருக்கும்.
ஒரு பகுதியைப் படிக்கும் பொழுது சிறிது சலிப்பு ஏற்பட்டால், சிறிது நேரம் வெளியில் நடந்து வரலாம்.
மேலும் படிக்கும் நேரத்தில் நம் கவனம் வேறு எதிலும் சிதறாதவாறு கட்டாயம் பார்த்துக்கொள்ளவேண்டும்.
குறிப்பாக எந்நேரமும் படித்துக் கொண்டிராமல், உடலுக்கும் மூளைக்கும் சற்று ஓய்வு தரவேண்டும். “சுவர்
இருந்தால் தானே சித்திரம் வரைய இயலும்”என்பதனை ஒருபோதும் மறக்கக் கூடாது.
அன்புடன்
மதிவாணன்
218