Professional Documents
Culture Documents
ராம நாம மஹிமை
ராம நாம மஹிமை
சூர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ
சர்வ கார்யேஷு சர்வதா
எனக்கு ஜோதிடம் கற்றுத்தந்த குரு திரு. பாஸ்கர் ஐயா அவர்களுக்கும், நமது நிறுவனர் மற்றும்
தலைமை குருஜி உயர்திரு. மீ னம் பட்டாச்சார்யர் அவர்களுக்கும், மற்றும் இங்குள்ள நமது
வித்யாலய மூத்த வித்யாபதிகளான குருமார்களுக்கும் எனது பணிவான நமஸ்காரங்கள்.மற்றும்
இந்த வாய்ஸ்சாட் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருக்கும் இளைய வித்யாபதிகளுக்கும், மாணவ
மணிகளுக்கும் வாழ்த்துக்கள்.
இன்று ராம நாம மஹிமை என்னும் தலைப்பில் சொற்ப்பொழிவு ஆற்ற நமது நிறுவனர்
எனக்கு ஒரு நல் வாய்ப்பை தந்துள்ளதற்கு மிகுந்த நன்றி. ராம நாமத்தின் பெருமையை
பற்றி பேசி முடிப்பதற்கு இந்த ஒரு ஜன்மம் போதாது. அது ஒரு மஹா சமுத்திரம். அவர்
பெருமை சொல்லவும் அரிதே என்று மஹரிஷிகளும், வைஷ்ணவ ஆச்சாரியர்களும்
கூறியுள்ளார்கள். எனவே எளியோனாகிய அடியேன் அந்த அமிர்தக் கடலில் ஒரு சில
துளிகளையேனும் உங்களுக்கு பிரசாதமாக அளிக்க வேண்டும் என்ற பிரயத்தனமே இந்த
முயற்சி.
கிருத யுகத்தில் ஞானநிலை வழிபாடும், த்ரேதா யுகத்தில் யோக நிலை வழிபாடும், துவாபரா
யுகத்தில் கிரியை நிலை வழிபாடும்,கலியுகத்தில் சரியை நிலை மற்றும் பக்தி நிலை வழிபாடும்
பின்பற்றப் படுகிறது. இதனாலேயே கலியுகத்தில் பல உயர்ந்த, சங்கரர், ராமானுஜர், மத்வச்சாரியார்,
தியாகய்யர், ராமதாசர் போன்ற ஆச்சாரியர்களும், குருமார்களும், ஆழ்வார்கள், நாயன்மார்களும்
தோன்றி முக்திக்கு பக்தி மார்க்கத்தை பிரதானமாக வலியுறுத்தினார்கள்.
இந்த பக்தி மார்க்கத்திலும், மிக எளிதாக எல்லொரும் பாவ விமோசனம் பெற ராம நாம
பஜனையை அனேக ஆச்சாரியர்கள் பிராதனமாகச் சொல்லியுள்ளார்கள். முக்திக்கு வழிகாட்டி ராம
நாமம் ஒன்றுக்கே “தாரக மந்திரம்” என்கிற சிறப்பு பெயர் உண்டு. தாரக என்ற சொல்லுக்கு
படகு(ஸம்சார சாகரத்தை கடக்க உதவுவதால் ) அல்லது மோட்சம் அளிக்க வல்லது என்று
பொருள். ராம நாமத்தின் துணையுடனே இந்த சம்சார சாகரத்தை கடந்து கரை சேர முடியும்
என்பதால் இது தாரக மந்திரம் என்று அழைக்கப் படுகிறது.
இந்த ராம நாமம் எப்படி சிறந்தது என்பதற்கு ஒரு சிறிய விளக்கம் அளிக்கலாம் என்றுள்ளேன்.
செம்மொழியாம் தமிழ் போலவே சமஸ்கிருதமும் உயரிய ஒரு மொழி என்பதை நாம் அறிவொம்..
நம் தமிழ் மொழியில் ஓரெழுத்து சொல் என்பது ஒரு சிறப்பு. அதாவது பொதுவாக ஒரு பொருளைக்
குறிக்கும் சொல் என்பது சில எழுதுக்களின் கூட்டே. ஆனால் நம் மொழியில் ஒரே ஒரு எழுத்தே
கூட சொல் போல செயல்பட்டு பொருள் தரும்..உதாரணமாக கோ என்ற ஒற்றை எழுத்து,
அரசன்,பசு,நீர்,திசை,மலை என்ற பல பொருளில் வரும். கா என்பது காட்டை குறிக்கும்.ஆ என்பது
பசுவைக் குறிக்கும்..இது போல் இன்னும் பல சொற்கள் உண்டு. இதைப் போல் சமஸ்கிருதத்திலும்
ஒரு எழுத்தெ பல பொருளைத் தரும் சொல்லாக வரும்.. இப்படி வரும் ஓரெழுத்து சொற்கள்
இணைந்து(fusion) ஒரு புதிய சொல்லாக வரும். அந்த இரு எழுத்துக்களின் பொருளை இன்னும்
விரிவாக்கி ஒரு பொருளைத் தரும்.
உதாரணமாக ரிஷி வியாசரின் குரு கிரந்தம் என்னும் நூலில் வரும் ஸ்லோகம் குரு என்ற
சொல்லின் பொருளை விளக்கும்..
குரு என்பது அறியாமையை அகற்றி அறிவு என்னும் ஒளியை கொடுப்பவர் என்ற பொருளைத்
தரும்.
வியாச மஹரிஷி யாத்த அக்னிபுராணம் என்னும் நூலில் அத்தியாயம் 348 ல் இந்த ஓற்றைச்
சொற்கள் பற்றீ மிக விரிவாக விளக்கியுள்ளார்.அதில் 10 &11 ஆம் ஸ்லோகங்களில் ராம என்ற
சொல்லின் ஆழமான அர்த்தத்தை சொல்லியுள்ளார்..
ரா என்ற எழுத்து நெருப்பு,(முடிவு, இறப்பு), ஞானம்,, வலிமை மற்றும் இந்திரன் என்ற பொருளைத்
தரும்.
மா என்ற எழுத்து லக்ஷ்மி, வளமை, மற்றும் மாதா(தாய்), (பிறப்பு) என்ற பொருளைத் தரும்..
இந்த வேர் சொற்கள் இணைந்து ராமா என்று வரும் போது ராம என்பது பிறப்பு, இறப்பு என்னும்
சுழலில் இருந்து விடுதலை தரும் தாரக மந்திரம் ஆகும். அதேபோல் ஸ்ரீ என்பது மாதா
லக்ஷ்மியைக் குறிக்கும். ஸ்ரீ ராம என்னும் போது, இங்கு சீதா மாதாவையும் ராமபிரானையும்
குறிக்கும்..
“நாராயணா” என்பதில் “ரா” என்பது முக்கியமான எழுத்து.அதை நீக்கி விட்டால் பொருள் வராது.
அதே போல் “நமசிவாய” என்பதில் “ம” என்பது முக்கியமான எழுத்து.அதை நீக்கி விட்டால் பொருள்
மாறிவிடும். இந்த இரண்டு உயிரான அக்ஷ்ரங்களும் சேர்ந்த சொல்லே “ராம” என்பதால் இதன்
மேன்மையை அறிந்து கொள்ளலாம்.
ஸ்ரீ பார்வத்யுவாச-
கேனோபாயேன லகுனா
விஷ்ணோர்நாம ஸஹஸ்ரகம்/
பட்யதே பண்டிதைர்நித்யம்|
ச்’ரோதுமிச்சாம்யஹம்ப்ரபோ ||26
மற்ற நாமங்களை காட்டிலும் ராம நாமம் சொல்லவும் எழுதவும் மிக எளிது. பக்தர்களில்
சிலர், ஜெபிப்பதை விட நாமத்தை எழுத விரும்புவார்கள். அவர்களுக்கு ராம நாமம்
அனைத்து மொழிகளிலும் எழுத லகுவாக இருக்கிறது. மேலும் குழந்தைகள் நாமங்களை
எழுதும் போது அவர்களின் கையெழுத்து மேம்பட்டு பிற குழந்தைகளுடன் ஒரு
ஆரோக்கியமான போட்டியும் உருவாகிறது.
*3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.' கிழக்கு நோக்கி
செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய கரைய
துக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.*
*4. ' ராம நாம' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல்
கூடாது. ஏனெனில் 'ராம நாமமே ' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே
பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.*
*8. 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'ராம
நாமா' சொல்ல மனம் மட்டும் போதும்.*
*இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள் .*
*11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜெபத்தால் பெற முடியும். 'ராம
நாமாவினால் வினைகள் எரிந்து, நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி
ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும்.*
ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராமா. ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராமா. ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராமா.