Professional Documents
Culture Documents
Upasana Devam
Upasana Devam
உபாசனை தெய்வம் 1
ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் உபாசனை தெய்வத்தைத் தியானிக்கவும். மனம்
அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து உங்கள் உபாசனை தெய்வத்திடம்
வைராக்கியத்துடன் நிறுத்தவும்.
பின்பு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை ஜபம் செய்யவும். குறைந்த பட்சம் 108
முறையாவது ஜபம் செய்ய வேண்டும். சிலர் அதிகமாக செய்ய விரும்பினால் அது 1008,
10008, 10008 ஆக இருக்கட்டும்.
எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் ஒரு லட்சம் முறை ஜபித்தால் தான் பலன் தர
ஆரம்பிக்கும் என்பதை மறக்க வேண்டாம். தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள்
அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழுங்கள்.
உபாசனை தெய்வம் 2
✔ வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்.
✔ மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்.
✔ புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்.
✔ வஸ்திர ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்தத
் ி. (வெள்ளை வஸ்திரம் சாந்தி.
சிவப்பு வஸ்திரம் வசியம்)
✔ கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.
இது சாத்வீக உபாசனை முறையாகும். இது மாந்திரீகம் அல்ல. எந்த ஒரு தவறான
நோக்கிலும் பயன்படுத்தக்கூடது. மற்றவர்க்குச் செய்கின்ற தீமை திரும்ப வந்து உங்களையே
தாக்கிவிடும். ஒரு சிலர் குரளி, எட்சினி, ஜின் போன்ற தேவதைகளை மந்திர உபாசனை மூலம்
வசியப்படுத்திக் கொண்டு அற்புதங்கள் செய்து காட்டுவார்கள். அவா்களால் ஒருவரை
ஆன்மிகத்தில் உயா்தத ் முடியாது. ஒருவரது ஊழ்வினையைக் கரைக்க முடியாது. தெய்வீக
அனுபவங்களைக் கொடுக்க முடியாது. ஆனாலும் அத்தகைய சிலா் மிகப் பெரிய மகான்கள்
போலவும், ஞானிகள் போலவும் தெய்வ அவதாரங்கள் போலும் தம்மைக் காட்டிக் கொண்டு
உலா வருவார்கள்.
உபாசனை தெய்வம் 3
நடக்கின்றன. மந்திர உரு இல்லாமல் அருள் சாதனங்கள் வேலை செய்யாது. சாதரமாண
விபூதியை விட முறைப்படி தயார் செய்த விபூதியில் நமது கை பட்டவுடன் உடனடி நற்பலன்கள்
கிடைக்கிறது.
உபாசனை தெய்வம் 4
ஒரு ஜாதகத்தில் 5-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும், 9-ஆம் இடம் பாக்கிய
ஸ்தானம் அல்லது தர்ம ஸ்தானம் எனவும் அழைக்கப்படுகிறது. ஒருவரது சிந்தனை, செயல்,
அதிர்ஷ்டம் மற்றும் பூர்வ ஜென்மத்தில் அவர் செய்த பாவ-புண்ணியம் போன்றவற்றை 5-ஆம்
பாவமும், அவரது ஆன்மிக ஈடுபாடு, ஒழுக்கம், செய்யப்போகும் நற்காரியம், பெறப்போகும்
பாக்கியங்கள், ஆலயப் பணிகள், அவரின் முன்னோர்களின் நற்செயல்கள் ஆகியவற்றை 9 ம்
பாவமும் குறிக்கின்றன.
ஒருவரது ஜாதகத்தில் சனி சுப பலமோ அல்லது சூட்சும வலுவோ பெற்று 5, 9-ஆம்
இடங்களைப் பார்க்காமல், வேறு வகையில் தொடர்பு கொள்ளும் நிலையில், மேலே நான்
சொன்ன பலன்களைச் செய்வார். மேலும் கூடு விட்டுக் கூடு பாய்தல், குண்டலினி சக்தி
போன்றவற்றிலும், சில வகையான முடிவற்ற ஆன்மிக தேடல்களில் ஆர்வத்தை அளிப்பவரும்
சனிபகவான் தான். குறிப்பாக, 'இறப்புக்குப் பின் மனிதனின் நிலை என்ன?’ என்பது போன்ற
சிந்தனைகளுக்கு சுப பலம் அல்லது சூட்சும வலு பெற்ற சனிபகவான் காரணமாக அமைவார்.
சனி தனது நட்பு வீடுகளான ரிஷபம் அல்லது கன்னியில் தனித்தோ, குரு அல்லது
கேதுவுடன் இணைந்தோ அல்லது குரு பகவானின் திரிகோணப் பார்வையில் இருப்பது இது
போன்ற அமைப்பைக் குறிக்கும்.
உபாசனை தெய்வம் 5