Professional Documents
Culture Documents
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி வரலாறு
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி வரலாறு
ஒருநாள் தர்மம் கேட்டு, அவர்கள் இல்லம் வந்த ஒரு துறவி, “நீ செட்டியாபத்து சென்று அங்கு
ஐந்து வட்டு
ீ சாமியைத் தரிசனம் செய்து வா. உனக்கு ஆண் மகன் பிறப்பான்” என்று கூறினார்.
(ஏரலில் இருந்து 28 கி.மீ . தொலைவில் உள்ளது செட்டியாபத்து.) அதன்படி தம்பதிகள்
செட்டியாபத்து கோயிலுக்குச் சென்று தரிசித்தனர். அன்றிரவு ராமசாமி கனவில் தர்மம்
கேட்டுவந்த துறவி தோன்றி, ‘உனக்கு ஆண் குழந்தை பிறக்கும், அதற்கு அருணாசலம் என்று
பெயரிடு. அவன் தெய்வ நிலை கொண்டவனாக வளருவான்’ என்று கூறினார். சில நாட்களில்
சிவனைந்தம்மாள் கர்ப்பமுற்றாள். விக்கிரம ஆண்டு புரட்டாசி திங்கள் பதினெட்டாம் நாள்
உத்திர நட்சத்திரத்தில், 2.10.1880 அன்று அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
குழந்தைக்கு அருணாசலம் என்று பெயரிட்டனர். உடனே ராமசாமி நாடார் வேண்டுதல்
நிறைவேறிய சந்தோஷத்தில் செட்டியாபத்து கோயிலில் அழகிய மண்டபம் கட்டினார்.
அவருக்கு திருமணம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். ஆனால், அவரோ ‘28 வயது ஆகட்டும்.
அப்ப பார்த்துக்கலாம்’ என்று கூறிவிட்டார். அப்பழுக்கற்ற பிரம்மச்சாரியாக வாழ்ந்த இவரை
கவனித்துவந்த அப்போதைய மாவட்ட கலெக்டர்கள் பிஷப்வெஸ்டன், பிஷப்ஸ்டோன்
இருவரின் பரிந்துரைப்படி ஏரல் பஞ்சாயத்துக்கு சேர்மனாக (தலைவராக) அவரை
நியமித்தார்கள். சேர்மன் அருணாசலம், ஏரலில் பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார்.
எண்ணெயால் எரியும் தெருவிளக்குகளை அமைத்தார். இரவு நேரங்களில் அணைந்து விடாமல்
இருக்க பணியாளர்களை நியமித்தார். ஊருக்குள் கழிவு நீர் தங்காமல் இருக்க வடிகால் வசதி
செய்தார். ஊராட்சி எல்லைக்குள் மரக்கன்றுகள் நட்டார். அனைத்து மக்களிடமும் அன்போடு
பழகினார். அதிகம் பேசாமல் அமைதியுடன் திகழ்ந்த அருணாசலம், தனது ஆன்மிக சக்தியால்,
பின் நடப்பதை முன் அறியும் திறன் பெற்றார். ஒருநாள் அப்பகுதியைச் சேர்ந்த பால்நாடார்
என்பவரை பாம்பு கடித்து விட்டது. அவரைக் கடித்த பாம்பையே திரும்ப வரவழைத்து அந்த
விஷத்தினை உறியச் செய்தார்.
அவர் கூறிய நாள் வந்தது. நிறைந்த அமாவாசை தினம். முன்னரே கருத்தபாண்டி நாடார் மூலம்
தகவல் அறிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், நகர மக்கள் என பலரும் அவரது இல்லம் முன்பு
கூடினர். பகல் 11 மணிக்கு சேர்மன் அருணாசலம் சுவாமி ‘வருகிறேன்’ என்று கூடியிருந்த
அனைவரையும் புன்னகை முகத்துடன் பார்த்துச் சொல்லி கையசைத்தபடி தனது அறைக்குள்
சென்றார். கட்டிலில் படுத்தார். கண்களை மூடினார். உச்சிப் பொழுது வந்தது.(பகல் 12 மணி)
உறங்கிய நிலையிலேயே சிவனடி அடைந்தார். சுவாமி கூறியபடி தென்மேற்கில் உள்ள
தாமிரபரணி நதிக்கரையில் படர்ந்த ஆலமரத்தின் அடியில் சுவாமியின் உடலை அமர்ந்த
கோலத்தில் வைத்தனர். உரிய சடங்குகள் நடத்தப்பட்டன. கருடன் சங்கொலியுடன் சுவாமியை
வலம் வந்தது. கருடன் நிழல் சுவாமி உடலில் பட்டது. சுவாமிகள் படித்த நூல்கள், பயன்படுத்திய
விலை மதிப்பு மிக்க பொருட்கள், உயர்ந்த அணிகலன்கள் ஆகியவற்றை சுவாமியின் காலடியில்
வைத்து சுவாமியை மலர்களாலும், மண்ணாலும் மூடினார்கள்.
சேர்மன் அருணாசல நாடாரின் சமாதி, தாமிரபரணி கரையில் உள்ளது. தற்போது நாள் தோறும்
அங்கு பூஜை நடந்து வருகிறது. அங்கு சேர்மனின் போட்டோ க் ஃபிரேம் செய்து
வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளி அமாவாசை பௌர்ணமி தினங்களில் இவரை தரிசிக்க
சாதி, மதம் பாராமல் வரும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தாமிரபரணி கரையில் கூடுகிறார்கள்.
பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள புற்று மண்ணை மருந்தாக
உண்ணுகிறார்கள். உடம்பிலும், கை, கால்களிலும் பூசிக்கொள்கின்றனர், அவர்களுக்கு உடனே
குணம் தெரிகிறது என்று ஆங்கிலேய கலெக்டர் பேட்துரை திருநெல்வேலி கெஜட்டர் என்ற
நூலில் எழுதியுள்ளார். மனிதனாக வாழ்ந்து தெய்வமாக வணங்கப்படும் சேர்மன் சுவாமி சமாதி,
இருக்கும் இடத்தில் சுவாமியின் தந்தை தனது கைகளால் சிறிது மண்ணை எடுத்து லிங்கம்
போல் பிடித்து வைத்துள்ளார். அந்த லிங்கம் இன்று இரண்டு அடிக்கு மேல் வளர்ந்து உள்ளது.
தாமிரபரணி ஆற்று நீரில் லிங்கத்தினை பல ஆண்டுகளாக அபிஷேகம் செய்தும் அந்த லிங்கம்
கரையாமல் உள்ளது. அந்த லிங்க அபிஷேக தீர்த்தத்தினால் வலிப்பு நோய்,
மனநோய், அரிப்பு, கட்டி என பல நோய்கள் தீருகிறது.