Professional Documents
Culture Documents
ஆண்டு 4 - புத்திமான் பலவான் (பழமொழி)
ஆண்டு 4 - புத்திமான் பலவான் (பழமொழி)
ஒரு காட்டில் ஒரு புள்ளிமான், ஒரு சிறு முயல், ஒரு நரி மூன்றும் நண்பர்களாக இருந்தன.
ஒரு சமயம் புள்ளிமானைப் பார்ப்பதற்காக, அதன் உறவினரான புள்ளிமான் ஒன்று வேறு
காட்டிலிருந்து வந்து கொண்டிருந்தது.
அதைத் தற்செயலாகச் சிறுத்தை ஒன்று பார்த்தது. அதன் நாக்கில் நீர் ஊறியது. உடனே
அது புள்ளிமானுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து சென்று, அது எதிர்பாராத சமயத்தில்,
அதை அடித்து வீழ்த்தி சுவைத்துத் தின்றது. இதை அக்காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த
ஒரு மரங்கொத்திப் பறவை பார்த்தது. அது உடனே விரைந்து சென்று புள்ளிமானிடம்
தகவல் கூறியது.
மரங்கொத்திப் பறவை : உன்னுடைய உறவுக்காரப் புள்ளிமான் சாவதற்குக் கொஞ்ச
நேரம் முன்னால்தான் உன் பெயரை என்னிடம் கூறி, உன்
இருப்பிடத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று வழி
கேட்டது. நான் தான் சொல்லி அனுப்பினேன். ஆனால்,
உன்னுடைய எதிரியான அந்தச் சிறுத்தை இப்படிச் செய்யும்
என்று எதிர்பார்க்கவில்லை. அது உனக்கு மட்டுமல்ல,
இங்குள்ள ஏனைய சின்னச் சின்ன விலங்குகளுக்கும் கூட
தீமையே செய்து வருகிறது. அதை எப்படியாவது ஒழித்துக்
கட்டும் வேலையைப் பார். இல்லாவிட்டால் உன் குடும்பத்தைக்
கூட என்றாவது ஒரு நாள் கொன்று தின்று விடும்!
பின், மானின் காதோடு காதாக அந்த இரகசியத்தைக் கூறியது. மான் மகிழ்ந்தது. மறுநாள்
சிறுத்தையை நரி சந்தித்தது.
நரி : சிறுத்தை அவர்களே நலமா?
சிறுத்தை : நலத்துக்கு ஒரு குறையும் இல்லை. என்ன இந்தப் பக்கம்?
காட்டின் நடுவில் ஒரு சின்னக் குன்றும், குகைப் பகுதியும் இருந்தன. அதன் முன்னிலையில்
மைதானம் போன்ற மணல் பரப்பு இருந்தது. அந்தக் குகையின் வெளிப்பக்கம் பார்த்தவாறு
புள்ளிமானும், புள்ளிமான் குடும்பமும் பேசிக் கொண்டிருந்தன.
போதாதற்குச் சிறு முயலும், அதன் குடும்பமும் இருந்தன. குகை முழுக்க மிருகங்கள்
இருப்பது போன்ற சூழ்நிலை காணப்பட்டது.
நரி ஒரு ஓரத்தில் மறைந்து நின்று அக்காட்சியைக் காட்டியது.
சிறுத்தைக்கு நாவில் நீர் ஊறியது.