Professional Documents
Culture Documents
கதைக் கூறும் போட்டி
கதைக் கூறும் போட்டி
நன்றி வணக்கம்.
கதை 2
நன்றி வணக்கம்.
கதை 3
. நன்றி வணக்கம்.
அன்னை தமிழே அன்பின் முகவரி. உங்கள்
அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத்
தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நான் கூறப்போகும்
கதையின் தலைப்பு “காட்டு ராஜா”.
ஓர் அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது
காட்டு விலங்குகள் அனைத்துக்கும் தானே ராஜா என்று
அறிவித்தது. அச்சிங்கம் தனக்குப் பணிவிடை செய்யச்
சில விலங்குகளை நியமித்திருந்தது.
சிங்கத்தின் குகையை மயில் சுத்தம் செய்தது. சுண்டெலி
சிங்கத்தின் பற்களையும் பாதங்களையும் சுத்தம் செய்தது.
சிங்கத்திற்கு வேண்டிய உணவைப் புலி வேட்டையாடிக்
கொண்டு வந்தது.
ஒரு நாள் சிங்கத்திற்குப் பயங்கரமாகப் பசித்தது. தனக்கு
இரையை உடனே கொண்டுவரும்படி புலிக்குக்
கட்டளையிட்டது. புலி வெளியே சென்று வேட்டையாடத்
தொடங்கியது. அது மிக விரைவில் ஓர் ஆட்டைப் பிடித்துக்
கொண்டு வந்தது.
மறுநாள் சிங்கம், “இன்று எனக்கு மானைச் சாப்பிட
ஆசையாக உள்ளது. எனவே, நீ ஒரு மானைப் பிடித்துக்
கொண்டுவா,’’ எனப் புலிக்குக் கட்டளை இட்டது.புலி
வேட்டைக்குச் சென்றபோது மற்ற விலங்குகள் எல்லாம்
ஒளிந்து கொண்டன. புலியால் ஒரு விலங்கையும்
வேட்டையாட முடியவில்லை. இறுதியாக அது ஒரு
மான்குட்டியைக் கண்டது.
“எல்லா விலங்குகளும் எங்கே போய்த் தொலைந்தன?’’
என்று புலி மான்குட்டியிடம் கோபமாகக் கேட்டது.“நீங்கள்,
அவற்றைப் பிடித்துக் கொன்று விடுவீர்கள் எனும் பயத்தில்
ஓடி ஒளிந்து கொண்டன,’’ என மான்குட்டி கூறியது.
“அப்படியென்றால் எனக்கும் வேறுவழி தெரியவில்லை.
உன்னைத்தான் நான் சிங்கத்திற்காகப் பிடித்துக்கொண்டு
செல்ல வேண்டும்,’’ எனப் புலி கூறியது.புலி மான்குட்டியைப்
பிடித்துக்கொண்டு வருவதைக் கண்ட சிங்கம் கோபமாக,
“நீ ஏன் மிகவும் முட்டாளாக இருக்கின்றாய்? இந்த
மான்குட்டி மிகச் சிறியதாகவும் மெலிந்ததாகவும்
இருக்கின்றது. இதைப் புசித்தால் என் பசி போகுமா?’’ என
முழங்கியது.
உடனே புலி, “ மன்னிக்க வேண்டும் மாட்சிமை தங்கிய
மகாராஜாவே! இப்போதைக்கு என்னால் இதைத்தான்
கொண்டுவர முடிந்தது,’’ எனக் கூறியது.புலியும் சிங்கமும்
உரையாடிக் கொண்டிருக்கும்போது மான்குட்டி
இடைமறித்து “ ராஜாவே! தங்களிடம் ஒரு தகவல்
கூறுவதற்கு வரும்போதுதான் இந்தப் புலி என்னைப்
பிடித்துக் கொண்டு வந்தது. தங்களுடைய சகோதரன்
அனுப்பிய தகவல்தான் அது, ’’ எனக் கதையை நீட்டியது
மான்குட்டி.
“ என்ன ? என் சகோதரனிமிருந்தா? எனக்கு எந்தச்
சகோதரனும் இல்லையே!’’ எனத் திகைப்புடன் கேட்டது
சிங்கம்.“ அப்படியா அரசே! ஆனால் அவன் எல்லா
விலங்குகளிடமும் இனிமேல் தங்களுக்கு மரியாதை
கொடுக்கக் கூடாது எனக் கட்டளையிட்டுள்ளான்,’’ என
நயமாகப் பொய் சொன்னது மான்குட்டி.
“ அவனுக்கு அவ்வளவு துணிச்சலா? எங்கே அவன்
இருக்கின்றான்?’’ எனச் சிங்கம் கர்ச்சித்தது.“
காட்டிலுள்ள ஒரு பெரிய ஆழமான குழிக்குள் அவன்
வசிக்கின்றான், நான் அங்கேதான் அவனைக் கண்டேன்,’’
எனக் மான்குட்டி கூறியது.
“ என்னை அவனிடம் அழைத்துச் செல். நான் அவனுக்குப்
பாடம் புகட்டுவேன். அதை அவன் ஒருபோதும்
மறக்கமாட்டான்,’’ எனச் சிங்கம் கட்டளை
இட்டது.சிங்கத்தின் கோபத்தைக் கண்டு குகையில் வேலை
செய்த விலங்குகள் கதி கலங்கின. சிங்கத்தின் முழக்கம்
குகையை அதிரச் செய்தது. சிங்கம் கோபமாகக்
குகையைவிட்டு மான்குட்டியுடன் வெளியேறியது.
சிங்கம், மான்குட்டியைப் பின்தொடர்ந்து சிறிது தூரம்
சென்றபின், “ எங்கே அவன்? அவன் எங்கே ஒளிந்து
கொண்டிருக்கின்றான்?’’ எனச் சிங்கம் கோபமாகக்
கேட்டது.
“ நாம் அருகில் வந்துவிட்டோம்,’’ எனக்கூறிய மான்குட்டி
சிங்கத்தை ஒரு குழிக்கு அருகில் கூட்டிச் சென்றது. “
உங்களுடைய சகோதரன் இதற்குள்தான் வாழ்கிறான்!”
எனக்கூறியது.
“ நான் அவனுக்கருகில் செல்லும்போது சத்தம் போடாமல்
அமைதியாக இரு,” எனச் சிங்கம் கட்டளை இட்டது.
மேலும் “ நாம் இங்கே இருக்கின்றோம் என்பது அவனுக்குத்
தெரிய வேண்டாம்,’’ எனக் கூறிய சிங்கம் குழிக்கு அருகில்
முன்னேறிச் சென்றது.
சிங்கம் பயங்கரமாக முழங்கியபடியே குழிக்குள் பாய்ந்தது.
தன்னைச் சூழ்ச்சி செய்துதான் குழிக்குள் மான்குட்டி
விழவைத்துள்ளது என்பதை சிங்கம் உணர்ந்தது. சிங்கம்
பலமுறை முயன்றும் அந்தக் குழியிலிருந்து வெளியில் வர
முடியில்லை.
மான்குட்டி மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது. காட்டிலுள்ள
எல்லா விலங்குகளும் மான்குட்டிக்கு நன்றி
கூறின.“இனிமேல் சிங்கத்திடமிருந்து ஓர் ஆபத்தும்
இல்லை!’’ எனக் கூறி அவை மகிழ்ச்சியடைந்தன.
நண்பர்களே இக்கதையிலிருந்து நாம் அறிந்துகொள்வது
என்னவென்றால் விவேகமாகச் சிந்தித்தால் நமக்கு
ஏற்படக்கூடிய ஆபத்திலிருந்து நம்மை நாம்
பாதுகாத்துக்கொள்ள முடியும்.
நன்றி வணக்கம்.