Professional Documents
Culture Documents
பாடி மகிழ்வோம் பைந்தமிழில்
பாடி மகிழ்வோம் பைந்தமிழில்
in/modernliterat
ure/katturai/%E0%AE%AA%E0%AE
%BE%E0%AE%9F%E0%AE%BF-
%E0%AE%AE%E0%AE%95%E0%AE
%BF%E0%AE%B4%E0%AF%8D
%E0%AE%B5%E0%AF%8B%E0%AE
%AE%E0%AF%8D-%E0%AE%AA
%E0%AF%88%E0%AE%A8%E0%AF
%8D%E0%AE%A4%E0%AE%AE
%E0%AE%BF%E0%AE%B4%E0%AE
%BF/
பாடி மகிழ்வோம் பைந்தமிழில்
உலகில் தோன்றிய முதல் மொழி தமிழே. எனவே, பிற அனைத்து
மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்கிறது. ஆதலின்,,இசை, கூத்து ஆகிய
மூன்றிலும் தாய்மைச் சிறப்புடன் இலங்குகிறது. இசைச் செல்வம் மிகுந்தது
தமிழ் என்பதை மறந்து பிற மொழிகளில் பாடுவதையே பெருமையாகக்
கொள்வது நமது பழக்கமாக உள்ளது. புலவர்களின் இசைப் பாடல்களைச் சிறு
அகவையிலேயே நாம் சிறுவர் சிறுமியருக்குப் பயிற்றுவிக்க வேண்டும்.
நமக்குத் தெரிந்த அல்லது எளிமையான பாடல் மெட்டுகளில் பாடிப் பழகுவது
தமிழ்ப் பாடல்களில் ஈடுபாட்டை ஏற்படுத்தும். எனவே, சில பாடல்களை
மெட்டுகளுடன் இப்பகுதியில் பார்க்கலாம்.
நன்னாள் பொன்னாள் இந்நாள்!
வாழ்க நலமாய்ப் பாரிலே!
நூறு நூறு ஆண்டுகள் ஆயினும்
வாழ்க வாழ்க தமிழுடன் என்றுமே!
திரைப்படங்களில் இப்படிப்பட்ட தமிழ் வாழ்த்துகள் இடம் பெற்றால் தமிழில்
வாழ்த்தும் பாங்கு எங்கும் பரவும் அல்லவா?
“Baa, Baa, Black Sheep” என்னும் பாடல் 1731 இல் இருந்து ஆங்கிலத்தில்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே மெட்டில் பின்வரும் பாடலைப் பாடி
மகிழுங்கள்.
உலகெனும் வட்டில்
ீ அனைவரும் உறவினர்
என்று சேர்ந்து வாழ்வோம் – நாம்
என்றும் சேர்ந்து வாழ்வோம் – இந்த
வடும்,
ீ நாடும் கடந்த உலகம்
ஒன்று என்று வாழ்வோம் – நாம்
ஒன்று பட்டு வாழ்வோம்.
நிறமென்ன உருவென்ன
பிறப்பென்ன தொழிலென்ன
எல்லாம் ஒன்று என்போம்
எல்லாம் ஒன்று என்போம்
பகையில்லை போரில்லை
இழிவில்லை தாழ்வில்லை
என்று இணைந்து வாழ்வோம் -இனி
என்றும் இணைந்து வாழ்வோம்
புதிய பாடல்கள் இல்லாமல் இருக்கின்ற மெட்டுகளில் ஏன் பாடவேண்டும்
எனச் சிலர் எண்ணலாம்.தெரிந்த மெட்டில் தமிழுணர்வுப் பாடல்களைச்
சொல்லித் தந்தால் பதிவது எளிதாக இருக்கும். அதன் பின்னர் நாம் புது புது
பண்களில் பாடல் சொல்லித் தரலாம்.!