You are on page 1of 19

அஷ்டாங்க யோகா: அஷ்டாங்கா என்றால் எட்டு அங்கம் என்று அர்த்தம்.

இங்கு
நாம் எட்டு அங்கங்களைப் பற்றி பேசுகிறோம், எட்டு நிலைகளைப் பற்றி அல்ல.
யமா, நியமா, ஆசனா, பிராணாயாமா, ப்ரத்யாஹாரா, தாரனா, தியானா, சமாதி
இவற்றையே யோகத்தின் எட்டு அங்கங்கள், அஷ்டாங்க யோகம் என்கிறோம்.யமா
நியமா: யமா, நியமத்தை சுலபமாக விளக்க வேண்டுமென்றால் - எதைச் செய்ய
வேண்டும், எதைச் செய்யக்கூடாது அதுவே யமா, நியமா. ஒருவரது ஆன்மிக
வளர்ச்சிக்கு எந்தவிதமான சூழ்நிலை உறுதுணையாய் இருக்குமோ, எது
உதவாமல் தடையாய் இருக்குமோ, இவற்றையே யமா, நியமா என்றனர்.

உங்களுக்குள் மனிதம் நிரம்பி தழும்பினால், இது சரி, அது தவறு என்று யாராவது
உங்களுக்குச் சொல்லித் தரவேண்டுமா என்ன? தெய்வகம்
ீ அலையாய் பொங்கி,
கரை தட்டினால், நிரம்பி வழிந்தால், இதைச் செய், அதைச் செய்யாதே என்று
யாராவது பாடமெடுக்க வேண்டுமா என்ன? கடவுளிடம், "இதைச் செய் அதைச்
செய்யாதே என்று சொல்லத் தேவையிருக்குமா? மனிதம் மலராமல்,
இறைத்தன்மை ஒருவருக்குள் கனியாமல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே செய்,
செய்யாதே என குறிப்புகள் வழங்கத் தேவையிருக்கும்.

உயர் நிலையை உணர யோகாசனம்:

இது யோகத்தின் மூன்றாவது அங்கம். இவ்வுடல் எண்ணிலடங்கா உடல்


நிலைகளை எடுக்க முடியும். இந்த உடல்நிலைகளில் சிலவற்றை நாம் "யோக
ஆசனா", யோகாசனா என்று அழைக்கிறோம். வாழ்வின் உயர்ந்த பரிமாணங்களை
உணரச் செய்வது யோகா. உங்களை அந்த உயர்ந்த நிலையை உணரச் செய்ய
வைக்கும் ஒரு ஆசனம் யோகாசனம். நம் உணர்ச்சி, மனநிலைக்கு ஏற்றவாறு
உடல் அமரும் நிலையும் மாறுவதை நீங்கள் கவனித்திருக்க முடியும்.
சந்தோஷமாக இருந்தால் ஒருவாறு அமர்வர்கள்.
ீ துக்கமாக இருந்தால் இன்னொரு
மாதிரி அமருவர்கள்.
ீ அமைதியாக இருந்தால் நீங்கள் உட்காரும் விதம் மற்றொரு
விதத்தில் இருக்கும். கோபம் வந்தால் வேறொரு விதத்தில் அமர்வர்கள்.
ீ இதனை
நீங்கள் கவனித்ததுண்டா? இதன் அடிப்படையிலேயே ஆசனங்கள்
அமைக்கப்பட்டிருக்கின்றன.

விழிப்புணர்வாக உங்கள் உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத்திருப்பதன்


மூலம் உங்கள் விழிப்பு நிலையையும் நீங்கள் உயர்த்திக் கொள்கிறீர்கள்.
குறிப்பிட்ட விதத்தில் அமர்வதன் மூலம் நீங்கள் சிந்திக்கும், புரிந்துகொள்ளும்,
உணரும் விதங்களை மாற்ற முடியும்.

ஆசனா ஒரு உடற்பயிற்சி அல்ல:

ஆசனா ஒரு உடற்பயிற்சி அல்ல, உடலை உயர்ந்த சாத்தியத்திற்கு தயார்


செய்யும் முறையே ஆசனா. நீங்கள் என்றாவது பானை செய்திருந்தால், மண்ணை
பிணைந்து தயார்செய்வது எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு
தெரிந்திருக்கும். சப்பாத்தி செய்திருந்தால் மாவை பிசைவது எத்தனை முக்கியம்
என்று தெரிந்திருக்கும். அதைப் போலவே ஆசனங்களும் உங்கள் சக்தியை ஒரு
குறிப்பிட்ட திசையில் செலுத்துவதற்கான சூட்சுமமான முறை. இதனை குறிப்பிட்ட
விழிப்புணர்வு நிலையிலிருந்து செய்வது மிக அவசியம்.

ஆசனா செய்வதில் பல நிலைகள் உள்ளன. வெறும் உடலளவில் செய்யலாம்,


அல்லது இன்னும் ஆழமாகவும் செல்ல முடியும். மூச்சினை கவனத்தில் கொண்டு,
உணர்வுகளை கவனித்து, அதிர்வுகளுடன் இருந்து, நாடிகளை விழிப்புணர்வில்
வைத்து, பொருத்தமான மந்திரங்களை உச்சரித்து இதனை பல நிலைகளில் செய்ய
முடியும். உடலின் ஒரு அங்கத்தைக் கூட நகர்த்தாமலும் ஆசனாக்களைச் செய்ய
முடியும். அதுவும் சாத்தியம்தான்.

பிராணாயாமத்தின் 2 அம்சங்கள்:

நான்காவது பரிமாணத்தை பிராணாயாமம் என்கிறோம். அஷ்டாங்க யோகத்தைப்


பற்றி நாம் பேசும்போது, அதன் முதல் மூன்று அங்கங்களை "நெருப்பு" பகுதி
என்கிறோம். கடைசி நான்கு அங்கங்களை "வெளிச்ச" பகுதி என்கிறோம்.
பிராணாயாமம் நெருப்பு, வெளிச்சம் இவை இரண்டிலும் இடம்பெறும்.
சுத்தப்படுத்தும் எதையும் நெருப்பு என்கிறோம். ஞானோதயம் வழங்கும் எதையும்
வெளிச்சம் என்கிறோம். பிராணாயாமம் நெருப்பு, வெளிச்சம் இந்த இரண்டு
அம்சத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

பிரத்யாஹாரா: இன்றைய காலகட்டத்தில், பிரத்யாஹாரா அஷ்டாங்க யோகத்தின்


மிக முக்கியமான அம்சம். பிரத்யாஹாரா என்றால் "உள்நோக்கி திரும்புவது" என்று
அர்த்தம் கவனத்தை வெளியிலிருந்து உள்நோக்கி திருப்புவது பிரத்யாஹாரா.
இன்று இருப்பதைப்போல் என்றைக்குமே மனிதர்களுக்கு இத்தனை கவனச்
சிதறல்கள் இருந்திருக்கவில்லை. இயற்கையில் இருந்திருந்தால், நிற மாற்றத்தைக்
காண, சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை கொட்டக் கொட்ட
முழித்துக் கொண்டு காத்திருக்க வேண்டும். இன்று தொழில்நுட்பம்
வழங்கியிருக்கும் வசதியைப் பாருங்கள். டிவி முன் உட்கார்ந்த மாத்திரத்தில்,
நொடிக்கு நொடி அத்தனை வண்ணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தொழில்நுட்பம்
இத்தனை வசதிகளை நமது வாயிலுக்கு கொண்டு சேர்த்திருக்கிறது. வசதிகளோடு
சில இடர்களும் கூடியிருக்கின்றன. மனித புலனுறுப்புகள் இன்று தூண்டப்படுவது
போல் வேறெப்போதும் தூண்டப்படவில்லை.

உள்நோக்கி திரும்பும் சவால்:

இத்தனை விஷயங்கள் மனிதர்களைத் தூண்டுவதற்கு இருக்க, வெளிப்புற


கவனத்தைத் தவிர்த்து, கண்களை மூடி, உள்நோக்கி திரும்புவது சவாலான
விஷயம்தான். உள்முகமாக திரும்புவதைப் பற்றி நாம் பேசும்போது, நமது
உடலையும் மனதையும் வெளிப்புற விஷயங்களாகத்தான் நாம் பார்க்கிறோம்.
இவற்றிலிருந்து கவனத்தை நீக்கி, உள்முகமாக திரும்புவது நீங்கள் செய்யக்கூடிய
செயல் அல்ல. உள்முகமாக திரும்ப நீங்கள் எதையும் செய்யத் தேவையில்லை.
வெளியே பரவும் உங்கள் கவனத்தை குறைப்பது ஒன்றே நீங்கள் செய்யக்கூடிய
செயலாக இருக்கும். பிரத்யாஹாரா என்றால் "உள்முகமாக திரும்புவது".

எதையோ ஒன்றை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால், உங்கள் சக்தியை சற்று


வெளிநோக்கி நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். எதையோ ஒன்றை கேட்பதற்கு
காது கொடுக்கும்போது சக்தியை விரயமாக்க வேண்டி இருக்கும். சக்தியை
இரைக்காத பட்சத்தில், கேட்க இயலாது. எதையோ ஒன்றை உணர, சக்தியை
செலுத்த வேண்டி இருக்கும். உங்கள் புலன் உறுப்புகளை எத்தனைக்கு எத்தனை
துடிப்பாக வைத்திருக்கிறீர்களோ அத்தனைக்கு அத்தனை சக்தி விரயம் ஏற்படும்.
நீங்கள் உறங்கும்போது, புலனுறுப்புகளை முழுமையாக அடைத்து வைக்கிறீர்கள்.

உடலும் மனமும்:

உடல் உயிரோடு, மனம் உயிரோடு, உலகம் துடிப்போடு, அத்தனையும் உயிரோடு


இருக்க புலன்கள் மட்டும் அடைக்கப்படுகிறது. காலையில் அத்தனை
சக்தியோட்டத்துடன் கண்விழிக்கிறீர்கள். படுக்கப்போகும் போது அவ்வாறு
இருப்பதில்லை. உறக்கத்தின்போது நீங்கள் அடைக்கும் புலனுறுப்புகள் உங்களுக்கு
அத்தனை சக்தியை தேக்கித் தருகிறது.

பிரத்யாஹாரா செய்வதற்கு தயாரற்ற நிலையில் நீங்கள் இருப்பதால், வெளிப்புறம்


செல்லும் சக்தியை தடைசெய்வது அவசியம். இப்படி தடைசெய்யும்போது
சக்திநிலை மென்மேலும் வளரும். சக்தியை வெளிநோக்கி செலுத்தாதபோது,
இயல்பாகவே அது உள்நோக்கிச் செல்லும். "உள்முகமாக" என்று நான்
சொல்லும்போது, உடல் மனதிற்கு அப்பாற்பட்ட ஒன்றைச் சொல்கிறேன்.
ஏனெனில், இந்த உடலும் மனமும் வெளியிலிருந்து சேகரிக்கப்பட்டவைதான்.

தாரனா: நீங்கள் ஏதாவது ஒன்றிற்கு போதுமான கவனம் செலுத்தினால் அதனுடன்


ஆழமான தொடர்பு ஏற்படுவதை நீங்கள் பார்த்திருக்க முடியும். இன்று
பெரும்பாலான மனிதர்கள் கவனக் குறைப்பாட்டால் அவதியுறுகிறார்கள். ஒன்றன்
மீ து கவனம் செலுத்த சிரமப்படுகிறார்கள். அச்சடிக்க நாம் கற்றபோது, புத்தகங்கள்
அடித்தபோது, மக்களுக்கு ஏதோ ஒன்றன் மேல் கவனம் செலுத்தும் பழக்கம்
ஏற்பட்டது. புத்தகம் எப்படி இருந்தாலும் சரி, கவனம் செலுத்தினோம். புத்தகத்தின்
சுவாரஸ்யம் கூடக்கூட நம் ஈடுபாடு அதிகரித்தது. எதைப் படித்தாலும் அதனுடன்
முழுமையாக ஈடுபாடு கொண்டோம். அதனால் எப்படிப்பட்ட புத்தகம் வாசித்தாலும்
நாம் தாரனா நிலையில் இருக்கிறோம்.
உள்ளுணர்வால் ஏற்படும் தொடர்பு

: இன்று வளர்ந்து வரும் எலக்ட்ரானிக் உலகத்தில் இந்தத் திறனை நாம் இழந்து


வருகிறோம். ஏதோ ஒன்றுடன் உங்கள் கவனம் இருக்கையில் அதனுடன்
உங்களுக்கு தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. உள்ளுணர்வால் இத்தொடர்பு ஏற்படுகிறது
என்று நான் சொல்வேன். பொதுவாக பெண்களுக்கு இதைப்பற்றி தெரிந்திருக்கும்.
தன்மேல் கவனம் செலுத்த வேண்டிய யாரோ ஒருவர் தன்னிடம் போதிய கவனம்
செலுத்தாதபோது அவர்கள் முதல் ஆளாக அலர்ட் ஆவார்கள். ஆண்களோ
விபரீதம் ஏற்படும் வரை காத்திருப்பார்கள். ஏனெனில், ஆண் முதல்
முறையிலேயே விபரீதத்தை உணர்ந்து கொள்வதில்லை. போதுமான ஈடுபாடு
காட்டாமல் இருக்கும்போது, உறவு உடைந்துவிட்டதை உணரத் தவறுகிறான்.
எதனிடம் நீங்கள் கவனம் செலுத்தவில்லையோ அந்த உறவு முறிந்துவிடுகிறது.
எங்கு கவனம் செலுத்துகிறீர்களோ அங்கு உறவு நிலைத்திருக்கும். இதுவே
தாரனா.

தியானம் சமாதி: தற்சமயம், உங்களால் என் மீ து முழுமையான கவனம் செலுத்த


முடியுமென்றால், நீங்கள் மெல்ல என்னுடன் தொடர்பு நிலைக்கு வருவர்கள்.

இப்போது, இங்கு நீங்கள், நான் என இரண்டு இருக்கிறது. ஆனால், இவ்விரண்டும்
தொடர்பில் இருக்கிறது. இந்த கவனம் ஒரே முனை உடையதாய் ஆனால்,
தொடர்பு உறுதியானால், அங்கு இரண்டு இருக்காது ஒன்றாய் மாறிப்போகும்.
இதனைத்தான் நாம் "தியானம்" என்கிறோம். அங்கு இரண்டு இருந்தது, கவனம்
செலுத்தியதால் அதில் தொடர்பு ஏற்பட்டது, இது தாரனா. கவனம் செலுத்திய
இவை ஒன்றானது, இதனை தியானம் என்கிறோம். இது ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு நிலைத்து நின்றால், அங்கே ஒன்றுமே இருக்காது, ஒன்றோடு ஒன்று
கரைந்துவிடும், இரண்டுமே கரைந்துவிடும். மற்றொரு பரிமாணத்தைச் சேர்ந்த
ஏதோ ஒன்று இருக்கப்பெறும்போது அங்கு இருப்பது இல்லாமல் போகும்.
இரண்டுமே இல்லாமல் போகும். இது நடந்தால், அதனை "சமாதி" என்கிறோம்.

நீண்ட ஆயுளை தரும் அற்புத மூச்சு பயிற்சி: பிராணாயாமம் செய்வதால் உடல்


மற்றும் மன வலிமை உண்டாகும்

யோகா என்பது பல்வேறு பயிற்சிகளை உள்ளடக்கியது, உடற்பயிற்சி, மன பயிற்சி,


மூச்சு பயிற்சி என வகை படுத்தலாம். ஒவ்வொரு பயிற்சியும் உடலுக்கு
ஆரோக்கியத்தை கொடுத்து மன அமைதியினை தருகிறது. தொடர்ந்து யோகா
செய்வதினால் பிணி இன்றி நீண்ட நாள் வாழ வகை செய்யும்.

பிராணாயாமம்

பிராணாயமம் என்பதன் பொருள் பிராணன்+அயாமம் அதாவது (உயிர்க்காற்று +


கட்டுப்படுத்துதல்). மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக கால
அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே பிராணயாமமாகும்.

உயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி


மூச்சு வரை நமது உடலில் இருந்து கொண்டு இருக்கும். முறையான மூச்சு
பயிற்சியினை மேற்கொண்டால் நீண்ட ஆயுளுடன் வாழலாம். குறைவாகவும்,
மெதுவாகவும் மூச்சுவிடும் ஜீவராசிகள் அனைத்தும் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறது.

மனிதன் 1 நிமிடத்திற்கு 18 தடவை சுவாசிக்கின்றான். இதையே 9 முறை


சுவாசித்தால் அவன் ஆயுட்காலம் இரட்டிப்பாகும். அதாவது மூச்சினை நன்றாக
இழுத்து பின் மிகவும் மெதுவாக வெளியில் விட வேண்டும். இதனை
படிப்படியாக குறைக்கும் போது உடல் இளமையாக இருக்கும்.

பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்று, குறைந்த அளவு நுரையீரலை அடைகிறது.


முறையான பயிற்சி மேற்கொள்வதால் நுரையீரல் முழுதும் பிராணவாயு
கிடைக்கும். இதனால் மூளை புத்துணர்ச்சி பெறுவதோடு ஞாபக சக்தி
அதிகமாகும். குறிப்பாக படிக்கும் மாணவர்கள் இதனை செய்வதினால்
படிப்பாற்றல், புத்தி கூர்மை கூடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

மூச்சு பயிற்சிக்கு உகந்த நேரம் அதிகாலை அல்லது மாலை வேளைகள் ஆகும்.


சமமான தரையில் துணி ஒன்றை விரித்து பத்மாசனத்தில் அமர வேண்டும். புல்
தரை, திறந்த வெளி போன்றவை மூச்சு பயிற்சிக்கு ஏற்றதாகும்.பயிற்சி
செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமயங்களில் செய்தல் கூடாது.

இடது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது


இடகலை. வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து
வெளிவிடுவது பிங்கலை. இடது மூக்குத் துவாரத்தின் வழியாக மூச்சை
உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக வெளிவிடுவது எளிய மூச்சு
பயிற்சி ஆகும். இதில் பல்வேறு நிலைகள் உள்ளன.

மூச்சு பயிற்சி தொடங்கும் முன்பு குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன்


இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இப்படியே தொடர்ந்து ஒரு மாத காலம்
செய்யும் பொழுது நாடி சுத்தமடையும்.

சாத்விக உணவுகளை பழக்கமாக்க வேண்டும். துரித உணவுகள், அதிக கொழுப்பு


சத்துள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

சர கலை ரகசியங்கள்

மூச்சுக் கலை - "சரம்


பார்த்தல்"

சர கலை சாஸ்திரம்

சித்தர்களின் சாகாக்கலை (மரணமில்லாப் பெருவாழ்வு)

இந்த சித்தர்களின் சாகாக்கலைக்கு முக்கியமான ஒன்றான சர நூல் சாஸ்திரத்தை


இங்கே சற்றே விளக்கப் போகிறேன்.

இந்த சித்தர் சரநூல் சாஸ்திரம் என்பது  சிவன் பார்வதிக்குச் சொல்லி ,  பார்வதி


நந்திதேவருக்குச் சொல்லி, நந்திதேவர் அகஸ்தியருக்குச் சொல்லி, அகஸ்தியர் 
பதிணென் சித்தர்களுக்கு சொல்லி, சித்தர் பரம்பரை வரும் அனைவருக்கும் 
இரகசியமாக  உபதேசிக்கப்பட்டு வருவது.

சரம் என்றால் மூச்சுள்ளது.  அசரம்  என்றால்  மூச்சில்லாதது. இவையே சித்தர்கள்


உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக  சராசரம்  என்று கூறுகிறார்கள். இந்த
உலகமே மூச்சை  அடிப்படையாக  வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின்  
வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும்,  அண்ட சராசரம்(அண்டம் என்றால்
முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.
1 நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600
மூச்சும்    ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள்  216 என்பது இந்த
21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும்
21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள்
120 ஆண்டுகளாகும்.

          ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12 மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும்,


ஒடும்போது    25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும்,  கோபம்
முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. 
இந்த மூச்சினுடைய  அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ  அதற்கு தகுந்தாற்போல்
ஆயுள் குறைகிறது.
          நாம் செய்யும் காரியங்களில்  வெற்றி பெறவும், காரியத்தடை நேராமல்
தடுத்துக் கொள்ளவும்,  பலன்களைச் சொல்வதற்கும், கேள்வி கேட்கும் நபருக்கு
காரியசித்தியாக்குதலையும், இன்னும் பல காரியங்களுக்கும்   இந்த சரநூல்
சாஸ்திரம் பயன்படுகிறது.  சரம் பார்க்கத் தெரிந்தவனே  “பார்ப்பான்” என்று
அழைக்கப்படுகிறான். சரம் பார்க்கத் தெரிந்தவனிடம்  எந்த மோதலையும்
வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே “சரம் பார்ப்பவனிடம்  பரம் போகாதே” 
என்று வழக்குச் சொல்லில் கூறுவர். சரமே இறைவன்,   எனவே அகத்தியர்  தனது
சரநுநூல்   சாஸ்திரத்தில்,  சரத்தை இறைவனுக்கு சமமாகவும் பஞ்சபூதங்களின்  
ஒடுக்க ஸ்தானமாகவும்  கூறுகிறார். இந்த சரநூல் சாஸ்திரத்தின் விரிவைப் 
பார்ப்போம்.

சூரிய கலை, சந்திர கலை  அவற்றின் வேகம் மற்றும் எண்ணிக்கையைப் பற்றி


பார்த்தோம். ஒரு நாளில்  ஓடக்கூடிய  மூச்சுக்களின்  எண்ணிக்கை 21,600 என்று
பார்த்தோம் சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன.
இந்த 64 ம் 64 வகையான கலைகளாகும்.   21,600 ஓடுகள் வேயப்பட்டுள்ளன.  அவை
ஒரு நாளில்  ஓடக்கூடிய  மூச்சின் எண்ணிக்கையை குறிக்கும். 5 வெள்ளிப் படிகள்
உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச
பூதங்களையும்) குறிப்பன.

இதையே விதியை  மதியால் வெல்லலாம் என்பார்கள்.  இங்கு மதி என்று


கூறப்படுவது  புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய 
சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள்  விருத்தியாகும். எனவே விதி முடிவும்
விலகியே போகும்.

நந்தனார் கீ ர்த்தனையில் எட்டும்    இரண்டறியாத மூடன் என்கிறார்.  8 என்பது    'அ'


காரமாக   தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இரண்டு என்பது 'உ' காரமாக 
தமிழ்  எழுத்துக்களில்  குறிக்கப்படுகிறது.  இதையே அகார   உகாரம் என்று
கூறுகின்றார்கள்.   8×2=16  அங்குலம் ஓடும் சந்திரகலையை   குறிக்கிறது.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்'


அகார(8), உகாரம்(2),யகாரம்(10).

தமிழ் எழுத்துக்களில் எண்ணாகவும் எழுத்தாகவும் திகழ்கின்றனவோ அவையே


அகாரம் மதி,உகாரம் ரவி,சுடர் மகாரம்,இந்த மூன்றும் சேர்ந்ததே ஓம் என்னும்
பிரணவம்.

ரவி, மதி,சுடர்,மூன்றிலும் இருப்பது சிகாரம் என்றழைக்கப்படும் நெருப்பு.

'நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும்'

    “குழவியும்  ஆணாம் வலத்தது  ஆகில்


     குழவியும்  பெண்ணாம் இடத்தது ஆகில்
    குழவியும் இரண்டாம்  அபானன் எதிர்க்கில்
    குழவி   அலியாகும்  கொண்ட கால்  ஒக்கிலே”

                                                                திருமந்திரம் 482


          உடலுறவில்  இணைகின்ற  ஆணுக்கு  வலது நாசியில் சுவாசம்  நடந்தால் 
ஆண்குழந்தை  தோன்றும். சுவாசம் இடது நாசியில்  நடந்தால் பெண் குழந்தை
தோன்றும். சுவாசம் சுழுமுனையில் நடந்தால் தோன்றும் குழந்தை  அலியாகும்.
வலது அல்லது இடது  நாசியில்   சுவாசம் நடந்து அப்போது  அபானன்   என்ற வாயு 
எதிர்க்குமானால் இரட்டைக் குழந்தை தோன்றும்.
           பிறவியிலேயே  கூன், குருடு,  ஊமை போன்ற பல  குறைகளுடன்
குழந்தைகள் பிறப்பதற்கு, காரணங்களை   சித்தர்கள்   சரநூலில்  பல இடங்களில் 
கூறுகின்றனர். இதையே திருமந்திரத்தில

“மாதா உதரம் மலமிகில் மந்தனாம்


மாத உதரம் சலமிகில் மூங்கையாம்

மாதா உதரம்   இரண்டொக்கில் கண்ணில்லை.


மாதாஉதரத்தில்வந்தகுழவிக்கே'
                                                               திருமந்திரம் 481

உடலுறவின்   போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் தோன்றும்


குழந்தைக்கு   மூளை வேகமாக செயல்படாது  மந்தமாக இருக்கும். பெண்ணின்
வயிற்றில் சிறுநீர் மிகுந்து இருந்தால்  பிறக்கும் குழந்தை ஊமையாகும். மலம், 
சிறுநீர் இரண்டும் அதிகமாக  இருந்தால் பிறக்கும்  குழந்தைக்கு  கண் குருடாகும் 
என்ற திருமூலர் திருமந்திரத்தில் கூறுகின்றார்.

“பாய்கின்ற   வாயு  குறையிற்  குறளாகும்


பாய்கின்ற   வாயு இளைக்கின் முடமாகும்.
பாய்கின்ற   வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற   வாயு மாத்ர்க்கில்லை பார்க்கிலே”
                                                               திருமந்திரம் 480
ஆணின் உடலிலிருந்து உயிரணுக்கள்  வெளியேறும் நேரம் இருவரின் சுவாசமும்
சரியான  அளவில் இருந்தால் எந்தக் குறைபாடும் இராது. ஆனால்  ஆணின்
சுவாசம் தேவையான  அளவை விட குறைந்து வெளிப்படுமானால் பிறக்கும்
குழந்தை குள்ளமாக இருக்கும்.  சுவாசம் திடமின்றி  வெளிப்படுமானால்  பிறக்கும்
குழந்தை முடமாகும். சுவாசத்தின் அளவு குறைந்தும், திடமின்றியும் 
வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு  கூன் விழும்.

'பாய்ந்த  பின்  அஞ்சோடிய ஆயுளும் நூறாம்


பாய்ந்த பின் நாலோடி  பாரினில்  எண்பதாம்'
                                                                       திருமந்திரம் 479

          உயிரணுக்கள் வெளியேறும் நேரம் ஆணின் சுவாசம் ஐந்து மாத்திரை நேரம் 


பாய்ந்தால் பிறக்கும் குழந்தை  நூறு வயது வரை வாழும். நான்கு மாத்திரை
நேரம்    ஓடினால் எண்பது  வயதுவரை உயிர்வாழும். சுவாசம் வெளிப்படும்
மாத்திரை குறைய குறைய ஆயுளும் குறையும்

'கொண்ட வாயு இருவருக்கும்   ஒத்தொழில்              


கொண்ட குழவியும்  கோமளமாயிரும்
கொண்ட  நல்வாயு இருவருக்கும்   குழறிடில்
கொண்டதும்  இல்லை  கோல்வினையாட்கே.'    
                                                                      திருமந்திரம் 483

உடலுறவின் போது ஆண் பெண் இருவருக்கும் சுவாசம்  சீராக ஒரே அளவாக


ஓடினால் தோன்றும் குழந்தை மிக அழகாக பிறக்கும் . சுவாசம் தாறுமாறா

சந்திர கலை  சூரியகலை சூரி

யன் உதிக்கும் போது ஓட வேண்டிய திதிகள்  குறிப்பிட்டிருந்தோம்.சூரியன்


உதிக்கும்போது சூரியகலையில்  அதாவது  வலது நாசியில் ஓட வேண்டிய
திதிகளில்  காலை 6 மணிக்கு ஓட ஆரம்பித்து  ஒரு மணிநேரம் கழித்து சந்திர
கலை ஓட ஆரம்பிக்கும். மீ ண்டும் ஒரு  மணிநேரம் கழித்து சூரிய கலை ஓட
ஆரம்பிக்கும். இதே போல்சூரியன் உதிக்கும்  போது சந்திர கலையில்   ஓட
வேண்டிய  திதிகளில் சூரிய உதயத்தில்  சந்திர கலையில் ஒரு மணிநேரம்  மூச்சு 
ஓடி, பின் சூரிய கலையில் ஒரு மணி நேரம் மூச்சு ஓடி இப்படியே  மாறி  மாறி  
மூச்சு   ஓடிக்கொண்டிருக்கும்.

“நாத விந்து கலாதி நமோ நம


          வேத மந்திர சொரூபா நமோ நம”
                                   -அருணகிரிநாதர் திருப்புகழ்-

நாதத்திற்கும் (பெண்களிடமுள்ள  ஜீவசக்தி)    விந்துவிற்கும் (ஆண்களிடமுள்ள


ஜீவசக்தி) முதல் வணக்கத்தைத் தெரிவித்த அருணகிரிநாதர் பின்னரே  வேத
மந்திர  சொரூபனான  இறைவனுக்கே  வணக்கம்
தெரிவிக்கிறார்.இதையேதிருப்புகழில்

  “அருகுநுனி பனியனைய  சிறிய துளி


பெருகியொரு ஆகமாகிய பாலரூபமாய்”

          என்று கூறுகிறார். ஒரு விந்துவில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள் 


ஒவ்வொன்றும் மானிடனாகி 120 வருடங்கள் வாழ வைக்கக்கூடிய உயிர்ச்
சக்தியைப்  பெற்றிருக்கின்றன.   எனவே “விந்து விட்டவன் நொந்து  கெட்டான்”
என்று சித்தர்கள் கூறுகின்றனர்.  நாம் அணியும்   திருநீறு வெள்ளை நிறமாக 
இருந்து இந்த விந்தையே குறிக்கிறது.  குங்குமம்  சிவந்த நிறமான  பெண்களின்
நாதத்தைக் குறிக்கிறது.

இதையே உலக இயக்கம் என்பதால் குங்குமமும். திருநீறும் 


நெற்றியில்அணிகிறோம். எல்லோருமே நாத விந்து சொரூபர்களே.

ஆண், பெண்களின் சேர்க்கையே   லிங்க சொரூபம். இடப் பாகம் சக்தியென்பதால் 


லிங்கத்தின்   இடது பாகம் நீர்த்தாரை வைக்கப்பட்டுள்ளது.  சிவலிங்கத்தின் அந்த
இடப்பாகத்தையே  நோக்குவது போல இடதுபுறம் நந்தி சாய்த்துப் பார்க்கும் படி
அமைக்கப்பட்டுள்ளது.சக்தியான சந்திரகலையை முதலில் குறைக்க வேண்டும்
என்பதற்காகவே,    இது கோயிலில் அமைப்பாக  காட்டப்பட்டுள்ளது.

(சீனத்து அக்கு பஞ்சர் முறை நமது போக முனிச் சித்தரால் கண்டுபிடிக்கப்பட்டு


சீனத்தில் கையாளப்பட்டு வருகிறது அதில்'யின்'(yin)என்றால் இடப்பக்கம் என்றும்
பெண் தன்மை என்றும் ,யாங்(yang)என்றால் வலப்பக்கம் என்றும் ஆண் தன்மை 
என்றும் கூறப்பட்டுள்ளது.) 

“மூலமான  மூச்சதில் மூச்சறிந்து  விட்டபின்


நாலு  நாலு முன்னிலொரு  நாட்டமாகி  நாட்டில்
பாலனாகி   நீடலாம் பரப்பிரம்மம்  ஆகலாம்.
ஆலமுண்ட கண்டராணை  அம்மையாணை உண்மையே”
“இருக்கலாம் இருக்கலாம்  அவனியிலே இருக்கலாம்
அரிக்குமால் பிரம்மனும் அகண்ட  மேழ் அகற்றலாம்
கருக்கொளாத   குழியிலே   காலிடாத கண்ணிலே
நெருப்பறை  திறந்த பின்பு நீயும்  நானும் ”
                              “சிவ வாக்கியர்”

மேற்கண்ட  பாடல்களில் மூலமான  மூச்சை  சரியான படி  அறிந்து அளவிட்டு   4


அங்குலமட்டில் ஓட  விட்டால் பாலன் போன்ற   தோற்றமும்,பரப்பிரம்மான  
இறைவனுக்குச்    சமமாகவும்  ஆகலாம்  என்று சிவவாக்கியர் இறைவன்,  இறைவி  
மீ து  ஆணையிட்டுக் கூறுகிறார்.
          இந்த  அவனியான பூமி இருக்கும்  வரை, அரி, மால் பிரம்மன்.,அண்டங்கள் 
இவற்றைக் கூட படைக்கலாம், அழிக்கலாம் காலிடாத கண்ணிலே  என்ற
மூச்சுவிடாத (கால் என்றால் காற்று)   நிலை அடைந்தால் நெற்றிக்கண்ணில்
நெருப்பறை திறக்கும். “நெருப்பறை திறக்குமானால் ,  நீ நான்  அனைவரும்
ஈசனே.                    
     உண்ணும் போது உயிரெழுத்தைஉயரேவாங்கு
     உறங்குகின்ற   போதெல்லா மதுவேயாகும்.
     பெண்ணின்   பாலிந்திரியம்  விடும்போ தெல்லாம்
     பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு
     தின்னுங்  காயிலை மருந்தும் அதுவேயாகும்.
     தினந்தோறும் அப்படியே  செலுத்த வல்லார்
     மண்ணு}ழி  காலமட்டும் வாழ்வார் பாரு.
     மரலிகையில்  அகப்படவு மாட்டார்  தாமே.

அகத்தியர்தம்  ஞானப்பாடலில் இவ்வாறு கூறுகிறார்.


எனக்கு சொந்த அனுபவத்தில் சில மருத்துவ   கலைகளின் அறிவு உண்டு.  
ஆனால் சித்த மருத்துவக்   கலையில்  எனது முன்னோர்கள் பரம்பரையாகச் செய்து
வந்திருக்கின்றனர்.   இவற்றில் முக்கியமான விஷயம்,  என்னை பிரமிக்க வைத்த
விஷயம்  ஒன்று உண்டு.  எல்லா வைத்திய  முறைகளும் உடலில் ஏற்படுகின்றன 
பிணிகளைப்  போக்கிக் கொள்ளும்   முறைகளைப் பற்றிமட்டுமே கூறுகின்றன.
அதிலும்  சில நோய்கள்   மனித குலத்திற்கும்,   விஞ்ஞானத்திற்கும் 
சவாலாகவேஅமைந்திருக்கின்றன.

ஆனால்சித்தர்களோஉடலில் ஏற்படுகின்ற வியாதிகளின் எண்ணிக்கை 4448 


வியாதிகள்   என்று குறிப்பிட்டுச் சொல்வதுடன்  அவற்றைப் போக்கும்
முறைகளையும் தெளிவுபட விளக்கியுள்ளனர்.

          இதற்கு மேலும் ஒருபடி சென்று மரணம் என்பதும் ஒரு பிணி  என்று
கூறுவதுடன் மரணம்  மாற்றம் முறைகளையும,  மரணமிலாப் பெருவாழ்வு  
என்பதனையும் விளக்கிச் சொன்னதுடன்  கடைபிடித்து வெற்றியும்  கண்டுள்ளனர்.

குரு குல கல்வி   முறையில் இவையெல்லாம் ஒரு காலத்தில் கற்பிக்கப்பட்டு


வந்தன.இந்த மேம்பாடான் கல்விமுறை அழிந்து  தற்கால சந்ததியினருக்கு 
கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமே. தற்கால சந்ததியினர் மெக்காலே கல்வி
முறை ஆங்கிலேயர் காலத்தில் குமாஸ்தாக்களை உருவாக்கவே
ஏற்படுத்தப்பட்டது.

அந்தக் கல்வி முறை மூலம் உருவாகும் இவர்கள்,சுயம் என்பது போய் தன்


காலில் நிற்கத்தெரியாதவர்களாகவும்,அரசாங்க வேலையைஎதிர்பார்த்து ,அதற்கு
கையூட்டு கொடுப்பவர்களாகவும். கொடுத்த கையூட்டை, மறுபடி மக்களிடம் அதே
கையூட்டின் மூலம் வசூலிக்கும் அக்கிரமக்காரர்களகவும் மாறி கடைசியில் நிம்மதி
தொலைத்து,முறையற்ற வழியில் பணம் தேடும்பிசாசுகளாய்வாழ்ந்து,முடிவில்
இறந்தே போகுபவர்களாவே உள்ளனர்.

இந்த சரநூல் சாஸ்திரத்தைக் கொண்டு  நோய்களை போக்கிக் கொள்ளவும்,  நமக்கு


வேண்டிய காரியங்களை முடித்துக் கொள்ளவும் சித்தர்களின் அருளாசியால் 
மச்சமுனிவரின் எட்டாவது பேரனாகிய  என் மூலம்  கற்றுக் கொள்ள இங்கு
இறைவன் கருணை புரிந்து இருக்கின்றார்.

88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
8888

பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியும் அதன் மூலம் கிடைக்கும் பயன்களும்!

பிராணாயாமம் பற்றி திருமூலர் அருளிச் செய்த ”திருமந்திரத்தில்” அட்டாங்க


யோகம் பகுதியின் நான்கம் பிரிவில் வெளிப்படுத்திய மூச்சுப் பயிற்சி தொடர்பான
சிறு விளக்கம் கீ ழே பதிவாகியுள்ளன.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக்


கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு
900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை
எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள்
கூடும்!

எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு


ஆயுள் குறையும். இது ஒரு வங்கியில் பணம் சேமிப்பது போல. வங்கியிலுள்ள
பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான்
நம்முடைய மூச்சை விரைவாக செலவழித்தால் நாம் உயிர் வாழும் ஆண்டுகளும்
குறையும்.

இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ”கோயில்” என்ற சொல்லால்


பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம்.

சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள்


இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான
வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் “beam” என்று சொல்லப் படும்
இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில்
விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள
நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.

திருமூலர் தனது பாடலில்:-


விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான், தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்,
வணங்கிடு ஆமைம்மலம்வா, யுவெழுந்து விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும்


சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க
முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே
ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.

ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த
ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய
வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.

ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை


சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்

18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)

ஆம் சுவாசமே நம் உயிர் வாழ்விற்கு ஆதாரம். ஆனால் அதைக் குறித்த எந்த
விழிப்புணர்வும் இல்லாமல் நாம் வாழ்ந்து வருகிறோம்.

சுவாசம் பற்றிய அறிவு அனைத்து தரப்பு மக்களுக்கும் அவசியமான ஒன்றாகும்.


பலப்பல தேவையில்லாத விஷயங்களைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்கிற
நாம், நம் உயிர் வாழவிற்கு ஆதாரமான சுவாசம் பற்றி யோசிக்கக் கூடச்
செய்வதில்லை.

சுவாசத்தை வாசி என்பார்கள். வாசியை மாற்றிச் சொன்னால் சிவா. ஆக சுவாசம்


கடவுளுக்கு நிகரான அல்லது கடவுளை அறிய உதவும் விஷயமாகும்.
சுவாசிப்பதை இரண்டு நிலைகளாகச் சொல்லலாம்.

ஒன்று நுரையீரலுக்குச் சென்ற பிராணவாயு நிறைந்த காற்று இரத்தக்


குழாய்களுக்குக் கொடுக்கப்பட்டு இரத்தக் குழாய்களிலுள்ள கரிமிலவாயு காற்றால்
வெளியேற்றப்படுகிறது.
இரண்டு இரத்தக் குழாய்களில் உள்ள பிராணவாயு செல்களுக்குக் கொடுக்கப்பட்டு
செல்களில் உள்ள கரிமிலவாயு இரத்தக் குழாய்களால் பெறப்படுகிறது. இப்படி
இரண்டு நிலைகளில் வாயுக்களின் பரிமாற்றம் நடைபெறுகிறது.

நாம் சுவாசிக்கும் போது மூக்கில் நுழையும் காற்றிலுள்ள தூசுகள் மூக்கின் உள்


உள்ள முடிகளாலும் ஈரப்பதமுள்ள மியூகஸ் பரப்பாலும் தடுக்கப்பட்டு
தொண்டைப் பகுதிக்குக் காற்று செல்கிறது.

அங்கிருந்து குரல்வளைப் பகுதியைத் திறந்து கொண்டு மூச்சுக் குழலுக்குச்


சென்று, அங்கிருந்து சிறிய மூச்சுக் குழலையும், நுண்ணிய மூச்சுக் குழலையும்
தாண்டி காற்றறைகளுக்கு வந்து சேர்கிறது.

இங்கு வைத்துதான் பிராணவாயு நிறைந்த மூச்சுக் காற்றும் இரத்தத்தில் உள்ள


கரிமில வாயு நிறைந்த காற்றும் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.

நுண்ணிய காற்றறைகளும், நுண்ணிய மூச்சுக் காற்றுக் குழாய்களும், நுண்ணிய


இரத்தக் குழாய்களும் நிறைந்த தொகுதியே நுரையீரல் ஆகும்.

இதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 5 லிட்டர் காற்று. இது மார்பின் இடப்பக்கமும்,


வலப்பக்கமும் இரு பாகங்களாக அமைந்துள்ளன. உயிர் மூச்சுக் காற்றுப்
பரிவர்த்தனை நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் நடைபெறுவதால்
இது ஒரு முக்கியமான உறுப்பாகக் கருதப்படுகிறது.

செல்களில் உள்ள கரிமிலவாயு நிறைந்த காற்று அசுத்த இரத்தக்


குழாய்களால்(சிரை) கவரப்பட்டு இதயம் செல்கிறது. அங்கிருந்து இரத்தக்
குழாய்கள் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. அங்குள்ள காற்றறைகளில்
கரிமிலவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களால் தள்ளப்பட்டு, காற்றறைகளில்
உள்ள சுவாசத்தின் மூலம் வந்த காற்று இரத்தக்குழாய்களால் பரிவர்த்தனை
செய்யப்பட்டு இதயம் வழியாக செல்களுக்கு அனுப்பப்படுகிறது.

உள்ளிழுக்கும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு, நைட்ரஜன் 79%, பிராணவாயு 20 %,


கரிமிலவாயு 0.04%, ஆகும்.

வெளிவிடும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு நைட்ரஜன் 79%, பிராணவாயு 16%,


கரிமிலவாயு 4.04% ஆகும்.

பிராணாயாமத்தின் பொழுது காற்று நுரையீரலில் அதிக நேரம் நிறுத்தப்படுவதால்


காற்றிலுள்ள ஆக்சிஜன் அதிக அளவு பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
இதனால் செல்களுக்கு அதிக ஆக்சிஜன் என்கிற பிராணவாயு கொடுக்கப்பட்டு
சக்தி வணாவது
ீ தடுக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும்
ஆக்சிஜனால் கிடைக்கும் பிராண சக்தி தசைகளில் உள்ள மயோகுளோபினால்
சேர்த்து வைக்கப்படுகிறது.

சாதாரணமாக சுவாசிக்கும் போது நுரையீரலில் உள்ள 3000 காற்றறைகள் மட்டுமே


செயல்படுகின்றன. ஆனால் பிராணாயாமத்தின் போது 6000 காற்றறைகள்
செயல்படுகின்றன.

எனவே இரு மடங்கு சக்தி கிடைப்பதோடு, அதிகமான பிராணசக்தி சேமிக்கப்பட்டு


ஒரு நிலையில் ஓஜஸாக மாறி மூலாதாரத்தில் சேர்கிறது. இதனால் ஆயுளும்
அதிகரிக்கிறது.

செல்களுக்குத் தேவையான பிராணவாயுவை பிராணாயாமம் மூலம் பெறும்


தன்மையையும் உடல் அடைவதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் சீராக
இயங்கும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன.

நிமிடத்துக்கு 15 முறை சுவாசிக்கும் மனிதன் 10 நிமிடம் பிராணாயாமம் செய்யும்


போது ஒரு பங்கு நேரம் உள் இழுத்தல், நாலு பங்கு நேரம் உள்ளே வைத்தல்,
இரண்டு பங்கு நேரம் வெளியே விடுதல் என்று சுவாசம் செய்யும் போது 140
சுவாசங்களை மிச்சப்படுத்துகிறான்.

காலை, மாலை இரு வேளையும் செய்தால் 280 சுவாசம் ஒருநாளில் மிச்சமாகிறது.


மேலும் சுவாசத்தை ஆழமாக இழுத்து மெதுவாக விடும் பழக்கத்தைப்
பெற்றுவிடுவதால் நிமிடத்திற்கு மூன்று சுவாசம் மிச்சமானால் கூட, தூங்கும்
நேரம் போக மற்ற நேரங்களில் எவ்வளவு சுவாசம் மிச்சமாகும் என்று
கணக்கிட்டுப் பாருங்கள்.

அந்த அளவு ஆயுள் அதிகரிக்கும் என்பதோடு மட்டுமல்ல ஆரோக்கியமும்


மேம்படுகிறது.

இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. பிராணன் அடங்கினால் மனம் அடங்கும்,


பிராணனின் சலனம் மனதின் சலனம், பிராணன் வசமானால் மனம் வசமாகும்
என்றெல்லாம் சொல்கிறீர்கள். அப்படியானால் எதற்காக அஷ்டாங்க யோகத்தில்
இயமம், நியமம், ஆசனம் என்கிற மூன்று நிலைகளை பிராணாயாமத்திற்கு
முன்னால் கடைபிடிக்கச் சொல்கிறீர்கள் ?
நேரடியாகப் பிராணாயாமம் அதற்கு அடுத்து பிரத்யாகாரம், தாரணை, தியானம்,
சமாதி என்று போய் விடலாமே ?

ஒருவன் தன் ஆன்மிக வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியே


இயமம், நியமம் என்பனவாம், வேறொன்றும் இல்லை. இந்த ஒழுக்க
நெறிகளையும், ஆசனம் என்கிற உடலை உறுதி செய்கின்ற பயிற்சியையும்
மேற்கொண்டவர்கள் மட்டுமே தியானத்தில் நிலைத்து நின்று சமாதி நிலையை
அடைய முடியும்.

மற்றவர்கள் மனதையும், உடலையும் வலுவாக்கி உலகாய வாழ்வை திறம்பட


நடத்திக் கொள்ளலாம். ஏனென்றால், எவ்வளவு சக்தியை மேம்படுத்திக்
கொண்டாலும், உலகாய வாழ்வைப் பொறுத்த மட்டில் சக்தி விரையமாவதைத்
தடுக்க முடியாது.

இந்த உலகாய வாழ்விலும் இல்லற ஒழுக்கம் என்ற நெறியைத் தவறாமல்


கடைபிடித்து மேம்பாடு அடைந்தவர்களும் உண்டு. எனினும் இரண்டிற்கும்
பலனடையும் காலம் வித்தியாசப்படும். என்றாலும் பிராணனைக்
கையிலெடுத்தவர்கள் காலதாமதமானாலும் உண்மையை உணரும் வழிக்கு தானே
வருவார்கள். இது நிச்சயம்.

ஒரு ஆரோக்கியமான சூழலில் வாழும், திடகாத்திரமான மனிதன் சராசரி ஒரு


நிமிடத்திற்கு 15 முறை சுவாசிப்பான். ஆனால் நாமெல்லாம் இருபது முறைக்கும்
அதிகமாகவே சுவாசிக்கிறோம் என்பது அதிர்ச்சிதரும் புள்ளி விபரம்.

ஆரோக்கியமான நல்ல மனிதனுக்குக் கூட ஒரு நாளைக்கு 21600 சுவாசங்கள்


இயங்கினாலும், 7100 சுவாசங்கள் பாழாகும் என்று சித்தர்களால்
சொல்லப்பட்டுள்ளது.

எஞ்சிய 14500 சுவாசங்களே உள்ளே புகுந்து உடலுக்கு நன்மை செய்யும் என்று


கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள். தற்போது மனிதர்களின் ஆயுள் குறைந்துள்ளது
எதனால் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளியே விடும் பழக்கம் நமக்கு இல்லை.
கட்டாயம் அதை நாம் பழகிக் கொள்வதோடு நம் குழந்தைகளுக்கும் இளம்
வயதிலேயே அதைப் பழகித்தர வேண்டும்.

எனெனில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராண சக்தியே மானிட உடலுக்குள்


உயிராய் விளங்குகிறது. அதை நாம் உணவு, நீர் மற்றும் வாயுவிலிருந்துப் பெற்றுக்
கொள்கிறோம். எனினும் சுவாசம் மூலமாகவே நாம் அதிகம் பெறுகிறோம்.

மனித சக்திக்கு ஆதாரமாய்த் திகழும் பிராணனே உடலில் ஒவ்வொரு


அணுவுக்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கிறது. பிராணன் உடலின் தொழிலாகவும்,
நரம்பில் ஓட்டமாகவும், இதயத்தில் துடிப்பாகவும், நுரையீரல் விரிந்து, சுருங்கவும்,
சுரப்பிகள் சுரப்பு நீரை சுரப்பதற்கும், உணவு செரிப்பதற்கும், கழிவுகள்
வெளியேற்றப்படவும் எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணத்தின் போக்குக்கும்,
வலிமைக்கும் காரண, காரியமாகவும் விளங்குகிறது.

எவர் ஒருவர் உடலில் பிராணசக்தி குறைவில்லாமல் உள்ளதோ, அவர் முகத்தில்


வனப்பும், உடலில் வலிமையும் மிகுந்து காணப்படும். நாம் சுவாசிப்பது
மூச்சுவிடுவது என்பது நமது உயிரின் வடிவம். அதிலிருந்து எழும் பிராணசக்தி
அதன் சூக்கும வடிவம். எனவேதான் உயிர் மூச்சு உள்ளவரை பிராணன் இருக்கும்
என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

பிராணன் நம் உறுப்புகள் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பே கருவிலேயே


உதயமாகிவிடுகிறது. பரம ஆத்மாவிலிருந்து உண்டாகும் பிராணன்
ஜீவாத்மாவிடம் பரவி நிற்கின்றது.

ஆத்மாவின் நிழல் போன்றது பிராணன் என்று சொல்வார்கள். ஆகவேதான்


பிராணன் நம் மனதையும், புலன்களையும் இயக்கும் சக்தி பெற்றுள்ளது.
பிராணனை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தி பயன்படுத்தினால் நெருப்பினால்
உலோகம் தூய்மையடைவது போல ஜீவாத்மாவின் கரும வினைகளும்
தொலைந்து ஜீவன் தூய்மையடையும்.

உடம்பிலும், இந்திரியங்களிலும் உள்ள அசுத்தங்கள் யாவும் நீங்கி அவைகளும்


தூய்மையடையும். மனதை அழிவிலிருந்துக் காத்து காயசித்தி பெற்று மரணத்தை
வெல்லலாம்.

“மூச்சு என்ன செய்யுமடா (என அலட்சியம் காட்டினால்) நரகில் தள்ளும்,


மோசமது போகாதே பாசன் (எமன்) கையில்”. – அகத்தியர்.

You might also like