You are on page 1of 2

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ?

-
கவிவாணார் ஐ.உலகநாதன்

வஞ்ச மனத்துடன் வந்து புகுந்தவர்

வாலை யறுத்திட வாராயோ-வரும்

வெஞ்ச மருக்கிது வேளை பொருட்குவை

மேலும் குவித்துடன் தாராயோ

சேரு மலேசிய சீர்மிகு நாட்டினை

சேரு மிடைப்பகை தீராயோ-உனை

வாரியணைத்தவள் வாழ்வு சிறந்திட

வாரி நிதிக் குவை தாராயோ

ஆறு மலைத்தொடர் அன்பு மனத்தொடர்

ஆர்ந்த கலைத்தொடர் தாய்நிலமே-உனை

வேறு நிலத்த்வர் வெல்ல முனைந்திடின்

வேட்டி லவர்தலை போய்விழுமே!

வடு
ீ விளங்கிட பெற்ற குழந்தையை

நாடு விளங்கிடத் தாராயோ-அவர்

பீடு விளங்கிடக் கேடு களாந்திடப்

பிள்ளையைப் பெற்றவர் வாரீரோ!

தங்க மெனத்தகும் துங்கு பொழிப்படி

சிங்கமெனப் புக கூறீரோ-நாம்

பொங்கி யெழுந்திடின் புல்ல ரிருப்பது


பூமியு னுள்ளெனக் கூறீரோ-நாம்

அப்படி இப்படித் தப்படி வைத்தனர்

எப்படி யும்படி ஏறிடவே-அவர்

ஒப்பிட வரம்
ீ உணர்த்திடு; வைத்திடும்

ஒவ்வொரு காலடி கூறிடவே

You might also like