You are on page 1of 4

குத்தகை ஒப்பந்த பத்திரம்

2022 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் உள்கடை சோகையன்தோப்பு

கிராமம் கதவு எண் ______________ ல் வசிக்கும் திரு. ------------------------- மகன்

---------------------------- (ஆதார் எண்: ______________________) அவர்கள் 1 வது

பார்ட்டியாகவும் (உரிமையாளர்)

இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு உள்கடை கிருஷ்ணாபுரம்

கிராமம் கதவு எண் 2/23 ல் வசிக்கும் திரு. ஆழ்வார் மகன் தினேஷ்குமார் (ஆதார்
எண்: 6210 1421 3456) அவர்கள் 2 வது பார்ட்டியாகவும் (குத்தகைக்காரர்)

எழுதிக்கொண்ட குத்தகை ஒப்பந்த பத்திரம்.

மேற்சொன்ன 1 வது பார்ட்டிக்குச் சொந்தமான மோட்டார் என்ஜின்

பொருத்தப்பட்ட நாட்டுப்படகு பதிவு எண்:_____________________ (இதர விவரங்கள்)

மீன்பிடி தொழில் செய்ய வேண்டி 1 வது பார்ட்டியினை அணுகி குத்தகைக்குக்

கேட்க, அதற்கு 1 வது பார்ட்டி, 2 வது பார்ட்டிக்கு குத்தகைக்கு விடுவதற்க்கு

ஒப்புக்கொண்டு கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தை

எழுதிக் கொண்டுள்ளனர்.

ஆக, நாம் 1,2 ம் பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக்

கொண்ட குத்தகை ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால்

1. நம்மில் 2 வது பார்ட்டி மேற்படி படகிற்கு மாத குத்தகை தொகை ரூபாய் 2000/-

(ரூபாய் இரண்டு ஆயிரம் மட்டும் ) பிரதி ஆங்கில மாதம் 15 -ம் தேதிக்குள் 1 வது

பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

2. 1 வது பார்ட்டியிடம் 2 வது பார்ட்டி இன்று ரூபாய் 40,0 ௦௦/- ரூபாய் நாற்பதாயிரம்

மட்டும் ரொக்கமாக செலுத்தி உள்ளார். மேற்படி தொகையை நம்மில் 2 வது

பார்ட்டி படகை திரும்ப ஒப்படைக்கும் போது 1 வது பார்ட்டி திருப்பிக் கொடுத்து

விட வேண்டியது. மேற்படி இந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி ஏதும் கிடையாது.

3. 1 வது பார்ட்டி தற்போதுள்ள படகை எப்படி ஒப்படைத்தாரோ அதே நிலையில்

2 வது பார்ட்டி மேற்படி படகை திரும்ப ஒப்படைக்கும் சமயத்தில் சேதமில்லாமல்

ஒப்படைக்க வேண்டும். மேற்படி ஏதாவது சேதம் இருந்தால் 1 வது பார்ட்டி


அட்வான்ஸ் தொகையில் சேதத்தின் மதிப்பை கழித்துக் கொண்டு 2 வது

பார்டியிடம் ஒப்படைக்க வேண்டும்.

4. இந்த குத்தகை ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 11 மாத காலக் கொடுவிற்கு

உட்பட்டது. அதாவது 19-08-2022 தேதி முதல் 18-07-2023 தேதி வரையிலான 11 மாத

காலத்திற்கு உட்பட்டது.

5. 11 மாத காலக் கெடுவிற்குள் 1 வது பார்டிக்கு படகு தேவைப்பட்டால் 2 வது

பார்ட்டிக்கு 2 மாத முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே போல் 2 வது பார்ட்டி

படகை திரும்ப கொடுக்க விரும்பினால் 2 மாத முன்னறிவிப்பு கொடுத்து விட்டு

திரும்ப கொடுக்க வேண்டியது.

7. மேற்படி குத்தகை ஒப்பந்தப் பத்திரத்தை 11 மாத காலம் முடிந்த பின்பு

இருவரின் ஒப்புதலின் பேரில் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.

8. 2 வது பார்ட்டி மேற்படி படகை தனது தொழில் உபயோகம் தவிர வேறு எந்த

விதமான உபயோகத்திற்கும் பயன் படுத்த்தக் கூடாது.

9. 2 வது பார்ட்டி மேற்படி படகை வேறு யாருக்கும் மேல் வாடகைக்கு

விடக்கூடாது.

10. 2 வது பார்ட்டி தொடர்ந்து மூன்று மாத காலம் குத்தகை தொகையை செலுத்தத்

தவறும் பட்சத்தில் மேற்படி படகை திரும்ப எடுத்துகொள்ள 1 வது பார்ட்டிக்கும்

உரிமையுண்டு.
இப்படியாக நாம் இரண்டு பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து

எழுதிக் கொண்ட வீட்டு குத்தகை ஒப்பந்தப் பத்திரம்.

நாட்டுப் படகின் லைசென்ஸ் விபரம்

1 வது பார்ட்டி (உரிமையாளர்)

2 வது பார்ட்டி (குத்தகைக்காரர்)

சாட்சிகள்

1)

2)

You might also like