You are on page 1of 4

வாடகை ஒப்பந்த பத்திரம்

2022 ம் வருடம் மே மாதம் 17 ஆம் தேதி

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிராமம் கிழக்குத் தெருவில்

வசிக்கும் காசிம் முஹம்மது மகன் ஜனாப். மைதீன் சேகு அப்துல் காதர் (ஆதார்

எண் : 9403 4547 7900) அவர்கள் 1 வது பார்ட்டியாகவும் (நிலத்தின் உரிமையாளர்)

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் உள்கடை சோகையன்தோப்பு

கிராமம் கதவு எண் 1/118-8 ல் வசிக்கும் திரு. தங்கச்சாமி மகன் இராமலிங்கம்

(ஆதார் எண்: 7077 2977 1658) அவர்கள் 2 வது பார்ட்டியாகவும் (வாடகைதாரர்)

எழுதிக்கொண்ட வாடகை ஒப்பந்த பத்திரம்.


மேற்சொன்ன 1 வது பார்ட்டிக்குச் சொந்தமான அழகன்குளம் குரூப்

பனைக்குளம் கிராமத்தில் பட்டா எண் 3363 சர்வே எண் 143/20B ல் உள்ள காலி

இடத்தில் பழைய இரும்பு வியாபாரம் செய்ய வேண்டி 1 வது பார்ட்டியினை

அணுகி வாடகைக்குக் கேட்க, அதற்கு 1 வது பார்ட்டி, 2 வது பார்ட்டிக்கு வாடகைக்கு

விடுவதற்க்கு ஒப்புக்கொண்டு கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் இந்த

ஒப்பந்தத்தை எழுதிக் கொண்டுள்ளனர்.

ஆக, நாம் 1,2 ம் பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக்

கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால்

1. நம்மில் 2 வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு மாத வாடகையாய் ரூபாய் 1000/-

(ரூபாய் ஆயிரம் மட்டும் ) பிரதி ஆங்கில மாதம் 15 -ம் தேதிக்குள் 1 வது பார்ட்டி

வசம் கொடுத்து விட வேண்டியது.

2. 1 வது பார்ட்டியிடம் 2 வது பார்ட்டி இன்று ரூபாய் 1 ௦,0 ௦௦/- ரூபாய் பத்தாயிரம்

மட்டும் ரொக்கமாக செலுத்தி உள்ளார். மேற்படி தொகையை நம்மில் 2 வது

பார்ட்டி இடத்தை காலி செய்து கொண்டு போகும் போது 1 வது பார்ட்டி திருப்பிக்

கொடுத்து விட வேண்டியது. மேற்படி இந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி ஏதும்

கிடையாது.

3. 1 வது பார்ட்டி தற்போதுள்ள நிலத்தை எப்படி ஒப்படைத்தாரோ அதே

நிலையில் 2 வது பார்ட்டி மேற்படி வீட்டினை காலி செய்யும் சமயத்தில்

சேதமில்லாமல் ஒப்படைக்க வேண்டும். மேற்படி ஏதாவது சேதம் இருந்தால் 1 வது


பார்ட்டி அட்வான்ஸ் தொகையில் சேதத்தின் மதிப்பை கழித்துக் கொண்டு 2 வது

பார்டியிடம் ஒப்படைக்க வேண்டும்.

4. 2 வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை மீட்டர்

அளவுப்படி மின்சார அலுவலகத்தில் தானே செலுத்திக் கொள்ள வேண்டியது.

5. இந்த வாடகை ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 11 மாத காலக் கொடுவிற்கு

உட்பட்டது. அதாவது 18-05-2022 தேதி முதல் 17-04-2023 தேதி வரையிலான 11 மாத

காலத்திற்கு உட்பட்டது.

6. 11 மாத காலக் கெடுவிற்குள் 1 வது பார்டிக்கு வீடு தேவைப்பட்டால் 2 வது

பார்ட்டிக்கு 2 மாத முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே போல் 2 வது பார்ட்டி

நிலத்தை காலி செய்ய விரும்பினால் 2 மாத முன்னறிவிப்பு கொடுத்து விட்டு

காலி செய்ய வேண்டியது.

7. மேற்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை 11 மாத காலம் முடிந்த பின்பு

இருவரின் ஒப்புதலின் பேரில் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.

8. 2 வது பார்ட்டி மேற்படி நிலத்தை தனது தொழில் உபயோகம் தவிர வேறு எந்த

விதமான உபயோகத்திற்கும் பயன் படுத்த்தக் கூடாது.

9. 2 வது பார்ட்டி மேற்படி நிலத்தை வேறு யாருக்கும் மேல் வாடகைக்கோ

அல்லது உள் வாடகைக்கோ விடக்கூடாது.


10. 2 வது பார்ட்டி தொடர்ந்து மூன்று மாத காலம் வாடகையைத் செலுத்தத்

தவறும் பட்சத்தில் மேற்படி இடத்தை காலி செய்ய 1 வது பார்ட்டிக்கும்

உரிமையுண்டு.

இப்படியாக நாம் இரண்டு பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து

எழுதிக் கொண்ட வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்.

வாடகை சொத்து விபரம்

அழகன்குளம் குரூப் பனைக்குளம் கிராமத்தில் சர்வே எண் 143/20B ல் உள்ள

காலி இடம்

1 வது பார்ட்டி (நிலத்தின் உரிமையாளர்)

2 வது பார்ட்டி (வாடகைதாரர்)

சாட்சிகள்

1)

2)

You might also like