வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. - ஒளவையார், மூதுரை - பொருள் பூக்களைக் கொண்டு விநாயகரின் திருப்பாதங்களைத் தவறாமல் துதிப்பவர்க்கு வாக்குத் திறமை உண்டாகும் ; நல்ல எண்ணங்கள் ஏற்படும் ; செல்வம் பெருகும் ; நோயற்ற வாழ்வும் கிடைக்கும்.