Professional Documents
Culture Documents
நாட்டுப்புற கலைகளில் வில்லுப்பாட்டு
நாட்டுப்புற கலைகளில் வில்லுப்பாட்டு
அறிமுகம் :
மனிதன் தோன்றிய காலத்தே தோன்றியது நாட்டார் கலைகள்.நாட்டார் மக்களின் உணர்ச்சிகளின்
வெளிப்பாடு பாடலாகவும், ஆடலாகவும் அமைகின்றன.இக்கலைகள் அழகியல் சார்ந்தது. இவை
மனமகிழ்விற்காக பொழுதுபோக்கிற்காக மட்டும் நிகழ்த்தப்பெறவில்லை.அதன் வழி மக்கள் வாழும்
பகுதிகளின் கலாச்சாரம்,பண்பாடு,நாகரீகம்,பழக்கவழக்கங்கள்,மனவுணர்வு
கள்,சிந்தனைகள்,நம்பிக்கைகள்,எண்ணங்கள் போன்றவற்றை எடுத்துரைத்து அனைவரும் அறியும்
தகவல் தொடர்பு சாதனமாக விளங்குகின்றது.இவற்றை நாம் வாழும் சமுதாயத்தின் ஆவணம்
எனலாம்.இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கலையினை நிகழ்த்துக் கலைகள்,கைவினைக் கலைகள் என
இருவகைகளாக பிரிக்கின்றனர். நிகழ்த்துக்கலைகளில் குறிப்பிடத்தக்கதாக விளங்குவது
வில்லுப்பாட்டு.இக்கலை ஆரம்ப நாட்களில் கோவில்களில் நிகழ்த்தப்படும் கலையாக இருந்தது
என்பதனை “வில்லடிச்சான் கோவிலிலே - விளக்கு வைக்க நேரமில்லை”என்ற நாட்டுப்புற பாடல்
உணர்த்துகின்றது.வில்லுப் பாடல்கள் மக்களின் பொழுது போக்கிற்காக மட்டும் நிகழ்த்தப்பெறா மல்
அதன் வாயிலாக சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்கள்,விழிப்புணர்வு செய்திகள் பரப்பப்பட்டன.
கலை, சமூக வளர்ச்சிக்கும், மன எழுச்சிக்கும் ஒரு கருவியாக பயன்பட்டது.இன்றய தொழில் நுட்ப
வளர்ச்சியானாலும்,திரைப்பட மோகத்தினாலும் தொன்மையான இக்கலை அழிவின் விளிம்பில் உள்ளது.
இதனை மீட்டுருவாக்கம் செய்து பாதுகாக்கும் நோக்கத்தோடும் இன்றய இளைய தலை முறையினர்
அறிந்து கொள்ளும் வகையிலும் இவ்வாய்வு அமைகின்றது.
தோற்றம்:
மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த பொழுது அவனுக்கு உதவிய வில்லில்
கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகி
இருக்கலாம் எனவும்,போரில் ஏற்பட்ட வெற்றியினைக் கொண்டாடும் வகையில் வில்லின் நாணி னைத்
தட்டி அதிலிருந்து ஓசையினை கேட்டு மகிழ்ந்ததன் வழி தோன்றியதாகவும் கருதப்படுகிறது.
இதனைப்போன்று வேட்டைக்கு செல்லும் மன்னை மகிழ்விக்க அருகில் இருந்த வீரர்களில் சிலர்
தாங்கள் கொண்டு வந்த வில்லில் உள்ள நாணினைக் கொண்டும் தண்ணீர் கொண்டு வந்த மண்
பாண்டங்களைக் கொண்டும் ஓசை எழுப்பி பாடத் தொடங்கினர். அதோடு உடன் இருந்தவர் களும்
பாட மன்னன் மகிழ்ந்ததாகவும் அதன் பிறகு தொடர்ந்து அரசவையிலும் தொடர்ந்து கேட்டு
மகிழ்ந்துள்ளார்.இதன் வழி வில்லுப்பாட்டு தோன்றியதாக செவிவழிக்கதை கூறப்படுகின்றது.மன
மகிழ்ச்சிக்காக பொழுதுபோக்கிற்காக பாட பயன்படுத்தப்பட்ட இக்கலை காலப்போக்கில் வளர்ச்சிப்
பெற்று சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்வதற்கும் பயன்பட்டு வருகின்றது.
1
பெயர்க்காரணம் :
வேட்டையாட போர்புரிய பயன்படுத்தும் வில்லிலுள்ள நாணினைக் கொண்டு இசைத்து பாடப்
பெறுவதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்பது பொதுவான கருத்தாகும்.கோமதி நாயகம்
அவர்கள் இசை அமைதி,இசைப்பருவம்,இசைக் கருவி பொறுத்து பாடல்கள் பெயர்பெறுவதாகவும்,
வில் என்னும் கருவியினை முதன்மையாகக் கொண்டு வில்லுப்பாட்டு என்னும்பெயர்அமைவதால்
இது இசைக்கும் கருவியால் பெறும் பெயர் எனவும் கூறுகின்றார்.இதனை வில் வில்பாட்டு, வில்லு,
வில்லடி, வில்லவினாவது, வில்லடிச்சான் பாட்டு, வில்லிசை எனப் பல பெயர்களில் அழைக்கின்ற
னர்.
காலம் :
முத்துச்சண்முகம் அவர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக கூறுகின்றார். கோமதி
நாயகம் அவர்கள் சண்முகம் பிள்ளை சோமல ஆகியோர் இக்கலை 15 ஆம் நூற்றாண்டில்
தோன்றியது எனக் கூறிய கருத்தினை சுட்டிக் காட்டுகின்றார். வில்லுப்பாட்டின் தோற்றம் குறித்து
வரையறுத்துக் கூற இயலவில்லை இருப்பினும் 18 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் செல்வாக்குடன்
விளங்கி வருகின்றது.
நடைபெறும் இடங்கள்:
தமிழகத்தின் தென் பகுதியான குமரி,நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களிலும் இராமநாத புரப்
பகுதிகளில் உள்ள கோவில்களில் நடைபெறும் கொடை விழாக்களில் நிகழ்த்தப் பெறுகின் றது.
இன்றய சூழலில் தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள கோவில் விழாக்களிலும்,அரசு விழாக்கள்,
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளிலும் நடத்தப்பட்டு வருகின்றது.இலங்கை மலேசியா
போன்ற அயல்நாடுகளிலும் இக்கலை பரவியுள்ளது.
கால அளவு:
இக்கலை பல இரவுகள் கோவில் விழாக்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளது.ஆனால்
இன்றய கால மாற்றத்திற்கு ஏற்ப ஒரு மணிநேரம் முதல் ஆறு மணிநேரம் வரை சூழல்கேற்ப
நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
கலைஞர்களின் எண்ணிக்கை :
வில்லுப்பாட்டு ஒரு குழுவினைக் கொண்டதாக அமையும். ஐந்து முதல் எட்டு பேர்கள் பங்கு
பெறுவர். இதில் வில்லடிப்பவரே தலைவராவர்.இவர் அண்ணாவி எனப்படுகின்றார்.ஏனையோர்
கேட்டுக் கொண்டிருக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் பக்கவாத்தியக்காரர்களாக குடம் உடுக்கு
தாளம்,கட்டை ஆகிய இசைக் கருவிகளை மீட்டுவர். இவர்களோடு துணைப்பாட்டு பாடுபவர்,
பின்பாட்டு இசைப்பவர் என்வர்களும் இடம்பெறுவதுண்டு.ஆண்களால் மட்டும் நடத்தி வந்த இக் கலை
இன்று பெண்களைத் தலைவர்களாகக் கொண்டும் நிகழ்த்தப்படுகின்றது.
2
கலைஞர்களின் இருப்புமுறை:
வில்லினை இயக்கும் புலவர் நடுநாயகமாக வீற்றிருப்பர்.அவருக்கு இடப்பக்கம் குடத்தினை
இயக்குபவர் சிறிய இருக்கையில் குடத்தோடு கட்டிருக்கும் வில்லினை இடது கையினால் அணைத் து
பிடித்தது போன்று அமர்ந்திருப்பார். அதேபோன்று புலவருக்கு பின்புறம் பின்பாட்டுக்காரர்
தாளம்,கட்டை அடிப்பவர் அமர அதே வரிசையில் உடுக்கு அடிப்பவர் குடத்துக்காரரின் வலக்கை
அடுத்து அமர்ந்திருப்பார்.
வில்லுப்பாட்டுக் கருவிகள்:
வில் :
3
ப்பர். இது வீசு கோல் எனப்படும்.இக்கோல் 8.செ.மீ முதல் 10.செ.மீ கொண்டதாக கருங்காலி
மரத்தால் செய்யப்பட்டு கைப்பிடிக்கு மேல் உள்ளிடற்று சிற்சில மணிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
பெரும்பாலும் இவ்வீசுகோல்களை கதைப்பாடும் தலைமைப் புலவரே வில்லின் நாணின் மீது தட்டி
தாளத்திற்கேற்ப இசை எழுப்புவார்.இவர் அண்ணாவி என அழைக்கப்படுகின்றார்.சில நேரங்களில்
புலவர் கதை பாட வேறு வேறொருவர் வீசு கோலினை கையாளுவதுமுண்டு.
உடுக்கு:
4
இக்குடத்தின் வாய்ப்பகுதியினை மேசைப்பந்தாட்ட மட்டை வடிவம் உடைய தோல் அல்லது பனை
மட்டையினால் செய்யப்பட்ட பத்தி என்பதனைக் கொண்டு வலதுகையினால் வாய்ப்பகுதி யினையும்,
அதே போன்று இடது கைவிரல் இடுக்கில் சொருகிய மரத்துண்டலான சொட்டிக் கட்டை கொண்டு
உடல் பகுதியினையும் தட்டி ஒலி எழுப்புவர். உடுக்கின் சொற்கட்டுக்கு ஏற்ப இவ்வொலி
அமையும்.உடுக்கையும் குடமும் வில்லுப் பாட்டின் சிறப்பு உறுப்புகள் எனலாம்.
தாளம்:
6
அதில் குறிப்பிட்ட பாடலை பாடி நளினத்துடன் நானிணை தட்டுவார்.புலவர் பாடும் போது குடம்
இசைப்பவர் பத்தியினைக் கொண்டு அதன் வாய்பகுதியில் தட்ட பிற கலைஞர்களும் பாட்டிற்கேற்ப
இசைப்பர். புலவர் கதை சொல்லியும் பாடியும் முடிக்கும் போது இடைமறிக்கும்
7
வில்லுப்பாட்டு கலையோடு அழிவின் விளிம்பில் உள்ள நாட்டார் கலைகளை இன்றய தொழில்
நுட்ப வளர்ச்சியான சமூக வலைதளங்கள்,இணையம் போன்றவற்றை பயன்படுத்தி உலகு அறியச்
செய்து அவற்றின் சிறப்பினை உணரச் செய்தல் வேண்டும். நாட்டுப்புறக்
கலைகளை வளர்க்க அதன் கலைஞர்களை ஊக்குவிக்க அனைத்து கல்லூரிகளிலும் பயிற்சி கூடங்கள்
அமைத்து பயிற்சியளிப்பதன் மூலம் அவர்கள் பொருளாதாரம் உயர்ந்து வாழ்வு சிறப்ப தோடு
நாட்டார் கலைகளும் பாதுகாக்கப்படும்.தொன்மையான இக்கலைகளை விழாக்களில் புதிய முறைகளோடு
நிகழ்த்தி அதன் வழி இன்றய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளச் வழிவகை செய்தல்
வேண்டும்.
துணை நின்ற நூல்கள்:
1. தமிழ் வில்லுப் பாட்டுகள் - தி.சி.கோமதி நாயகம் எம்.ஏ, தமிழ்ப்பதிப்பகம்,சென்னை. 1979
2. சடங்கில் கரைந்த கலைகள் - அ.கா.பெருமாள்,காலச்சுவடு பதிப்பகம்,நாகர்கோவில்.2010
3. நாட்டுப்புறவியல்- மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகம் தொலை நிலைக்கல்வி.
4. வில் பிறந்த கதை–வில்லிசைச் செல்வி இராஜம் புஷ்பவனம் குமரன் பதிப்பகம் கொழும்பு.1991