Professional Documents
Culture Documents
பதிவு....
#ஜோதிடத்தில் கால நிர்ணயம்:
பொதுவாவே நாம் ஜோதிடர் இடத்தில் கேள்விகள் கேட்கும் போது அவரும் ஒரு ஆறு மதாத்தில் அல்லது
மூன்று மாதத்தில் நடக்கும் என்று கூருவர்.
ஆனால் நம் பதிவின் நோக்கம் ஒரு செயல் எப்போது எந்த கால கட்டத்தில் நடக்கும் என்பதை
துல்லியமாக கூறுவது தான். இந்த விஷயம் பல ஜோதிடர்களுக்கு தெரியும் இருந்தாலும் யாரும்
வெளியில் சொல்லுவது இல்லை.
அடுத்து அவர் ஒரு நட்ச்சத்திரத்தின் பாதத்தில் இருப்பார் அது எந்த பாதம் என்று பார்க்கவும் (ஒரு
நட்சத்திரத்திட்கு நான்கு பாதங்கள்).
இப்போது குரு திசை குரு புத்தி குரு அந்தரம் என்று வைத்துகொண்டு கணிதம் செய்வோம்
...............................................................................................................
Step 1:
இப்போது குரு திசை 16 வருடத்தினை 4 பாதங்களுக்கு சரியாக பிரிக்கவும் பாதம் ஒன்றுக்கு 4 வருடம்
வரும்.
இங்கு தான் கவனிக்கவேண்டும் முதல் இரண்டு பாதத்திற்கு 8 வருடங்கள் பெரியதாக ஒன்றும் வேலை
இல்லை அடுத்து வரும் மூன்றாம் பாதம் தான் நாம் கவனிக்கவேண்டும் அதில் தான் ஒரு செயல்
நடைபெரும். அதற்கு முன்பு (8 வருடங்கள்) நீங்கள் செய்த செயல் அத்தனையும் முயற்சி மட்டுமே.
சரி மூன்றாம் பாதம் என்று கணித்து விட்டோம் இப்போது அதில் நான்கு வருடங்கள் உள்ளது அப்படி
எனில் நான்கு வருடத்தில் எப்போது ஒரு செயல் நடைபெறும்.
...............................................................................................................
Step 2:
இங்கு கவனிக்கவேண்டியது ஒரு பாதித்திட்கு 3.20 degree. மூன்றாம் பாதத்தில் எந்த டிகிரி யில் குரு
இருக்கிறது என்று பார்க்கவும்.
இப்போது 4 வருடங்கள் / 200 = 4*365/200= 1460 நாட்கள் / 200 = 7.3 நாட்கள் 1 விகலைக்கு 7.3 நாட்கள் இதை
ஒரு கணித எளிமைக்கு 7 நாட்கள் என்று வைத்துகொள்வோம்.
இப்போது நம் குரு நிற்கும் பாதஅளவு 1 degree இதை விகளை ஆக்க 60 அப்படியெனில் 60*7 =420 நாட்கள்
வரும். இதை வருடம் ஆக்கா 1 வருடம் 55 நாட்கள் ஆக வரும். ஆக மொத்தம் 9 வருடங்கள் 55 நாட்கள்
எனற கால அளவில் நம் திசை நாதன் சரியாக ஒரு செயலை செய்ய ஆரம்பிப்பர்.
.............................................................................................................
சரி அப்படிஎனில் இப்படி யாருக்கேனும் இருந்து கல்யாணம் செய்யவேண்டும் என்றால் அதுவும் 30
வயதில் குரு திசை ஆரம்பம் என்றால் இன்னும் 9 வருடம் அதாவது 39 வயதுவரை காத்துகொண்டு
இருக்கவேண்டுமா?
...................................
Step 3:
அதுதான் இல்லை இங்கு தான் நம் கடவுள் நமக்கு புத்தி அந்தரம் என்ற அமைப்பை கொடுத்து உள்ளார்.
உதாரணம்:
குரு திசையில் குரு புத்தி 768 நாட்கள் இதை 4 பாதங்களுக்கு சரியாக பிரிக்கவும் பாதம் ஒன்றுக்கு 192
நாட்கள் வரும். முதல் இரண்டு 192+192=384 நாட்களை விட்டுவிடவும். மூன்றாம் 192 நாட்களை நம் குரு
நிற்கும் டிகிரி யின் அளவுகளுக்கு பிரித்து கொடுக்கவும். 192/200=0.96 நாட்கள்
அதாவது குரு திசை குரு புத்தியில் (குரு ஆரம்பித்ததில் இருந்து) 1 வருடம் 77 நாட்கள் என்னும் போது
இவருக்கு திருமணம் ஆகும்.
...................................................
இதை போன்று குரு அந்தரத்தில் அவருக்கு திருமணம் நடக்கும் என்று கணித்தால் அந்தரத்தை இதை
போன்று கணிதம் செய்யவேண்டும். இப்படி செய்யும் போது சரியான நாள் கிழமை நேரம் வரை
துல்லியமாக கணிக்கலாம்.
இதற்கு நமக்கு தேவை பிறந்த சரியான நேரம். ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் தவறாக பதிவு செய்யதால்
20 முதல் 25 நாட்கள் வித்தியாசம் வரும். அதாவது அந்த செயல் நடக்கும் காலம் சிறிது மாறுபடும்.
.....................................................
இப்படி தான் ஒரு செயலை நடக்கும் கால அளவை கணிக்கவேண்டும்.
இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் குரு திசை வருடத்தை ஒரு முழு நட்சத்திரத்தின்
13.20 degree ஆல் வகுத்து. குரு எந்த டிகிரி யில் உள்ளாரோ அந்த அளவுகள் மேல் உள்ளவாறு சரிபார்த்து
கால நிர்ணயம் செய்யலாம் இதை போல் தான் புத்தி அந்தரம் சூட்சமம் பிரிக்கவேண்டும்.
இது கடினம் இல்லை இரண்டு முறை முயச்சி செய்து பார்த்தால் உங்களுக்கு எளிதாகி விடும்.