Professional Documents
Culture Documents
Джатакам 5
Джатакам 5
2. கடகம்,
### book_page 97
விருஷப லக்னம்-ஜாதகம் 5
3. வேலுடைக் கடவுள் உத்திரம் மீனத்தி லீசன் கோட்டம்
நீலியு மாரி தெற்கு நிகழ்த்துவோம் கம்மா ருண்டு
சாலவே யானை கோவில் தந்திடும் தெற்கி லேதான்
கோலமாய்க் கீழ்பால் சந்தி குலவிய சோலை யுண்டு.
3. முருகக் கடவுளின் கோயில் வடக்குத் திசையில் உள்ளது. வட
கிழக்கில் சிவபெருமான் கோயில். துர்க்கையும் மாரியும் தெற்குத் திசையில்
வாசம்செய்வர். கம்மியர்கள் அங்கு வசிக்கிறார்கள். பொருத்தமாக விநாயகர்
கோயில் தெற்குத் திக்கில் அமைந்துள்ளது, கிழக்குப் பக்கமாக அழகிய
நாற்சந்தி, சோலை ஆகியவை உள்ளன.
4. இவ்வித வடையா ளத்துள் இளவலும் வாசம் செய்வன்
ஒவ்விய தந்தை மாதா உறுந்துணை களத்திர புத்திரர்
பவ்வமாய் முன்பின் சென்மம் பாலகன் யோகம் தானும்
நவ்விய நவக்கோ ளாய்ந்து நவிலு வோம் கேளும் தாயே.
4. இவ்வாறான அடையாளங்கள் உள்ள இடத்தில் இந்த ஜாதகன்
வசிப்பான். இவனுடையவும், இவனுடைய தந்தை, தாய், உடன்பிறந்தார்,
மனைவி, மக்கள் ஆகியோருடையவுமான முற்பிறப்பு, மறுபிறப்பு, யோகச்
செய்கைகள் முதலிய அனைத்தையும் இந்த ஜாதகத்தில் அமைந்துள்ள
நவக்கிரகங்களையும் நன்கு ஆராய்ந்து சொல்லுவோம்; கேளுங்கள், தாயே!
5. தந்தையின் வர்க்கந் தன்னைச் சாற்றுவோம் ஆண்பால்
(மூன்று
ஸப்தரிஷிநாடி
இவர்கள் சேர்க்கையைப் பற்றிய விவாமெல்லாம் நிச்சயமாக இரண்டா.
பாகத்தில் சொல்லுவேன். பார்வதியே! மேலுங் கேள்.
14. சாதகன் மணத்தின் காலம் சாற்றுவோ மிருபான் ரெண்டில்
மேதினில் குடகு திக்கில் வித்தகி வருவா ளாகும்
கோதிலா அவள் குணத்தைக் கூறு வோ மிருசி கப்பள்
தீதிலா குணத்தாளாகும் திருமுக வடிவு முள்ளாள்.
14. இந்த ஜாதகனுக்கு மணம் நிகழும் கலத்தைப் பற்றிச் சொல்லு
வோம். இவனுடைய இருபத்திரண்டாவது வயதில் மேற்குத் திசையி
லிருந்து இவனுக்கு மனை வியாகப் போகும் பெண் வருவாள். குற்றமற்ற
அவள் குணத்தைக் கூறுவோம். கருமை கலந்த செர்ரிற முடையவள்.
கெடுதலில்லாத குணங்களை யுடையாள். முக இலட்சணமுடையவள்.
15. வரனுக்கு நேய முள்ளாள் மாதுநன் னடத்தை யாவள்
திறமையாய்ப் பேச வல்லள் செல்வியு ம திட்ட சாலி
பொறுமையு முடைய ளாகும் புண்ணிய மனத்த ளாகும்
அறநெறி பூண்பளாகும் அவளுமுன் கோபங் கொஞ்சம்.
15, கணவனிடம் விருப்பமுள்ளவள். நன்னடத்தை யுடையவள்.
சாமர்த்தியமாகப் பேசுவதில் வல்லவள். இவள் அதிர்ஷ்டசாலி. பொறுமை
யுடையவள். புண்ணிய மனமுடையவள். தரும வழியை மேற்கொள்ளு
வாள். சிறிது முன்கோப முண்டு.
16. துணைவர்க ளில்லா ளாகும் சொல்லுவோம் புத்திர பாகம்
கனமுட னாண்பா லொன்று கன்னிகை யிரண்டு தீர்க்கம்
பிணையாகு மூன்று தானும் பிரதமம் பெண்பா லாகும்
அனையவே கடகம் சென்ம மவிட்டநாள் தனிலு திப்பாள்.
16. உடன் பிறந்தார்க ளில்லாதவளாகும். இவளுக்குப் புத்திர பாவத்
தைப் பற்றிச் சொல்லுவோம். ஆண் ஒன்று. பெண்கள் இருவர். இவர்கள்
மாத்திரம் தீர்க்கம். பின்பு மூன்று குழந்தைகள் பிறந்து சேதமாம். முத
லாவது பெண் குழந்தை. அவள் கடக லக்னம், அவிட்ட நட்சத்திரத்
தில் இவளுக்குப் பிறப்பாள்.
17. அதற்குப்பி னிரண்டு சேதம் அறைகின்றோம் நான்கு விர்த்தி
சதமாகும் அதன்மேல் தோடம் சயமுனி புகலு கின்றார்
அதிபர்க்கு மதலை.யாண்பால் விளங்காது யென்று
[சொன்னீர்
2. புதன்
ஸப்தரிஷிநாடி
21. முனிவரிவ் விதமாய்க் கூற மொழிகின்றார் பராசர் தானும்
இனிமையா யைந்தோன் தன்னை இயல்செவ்வாய் பார்த்த
(தாலே
3. பிராமணர்.
### book_page 104
68
ஸப்தரிஷிநாடி
28. சுதராணும் விருத்தி பென்றோம் சொல்போலே செய்யா
[னாகில்
2, சுக்கிரன்
### book_page 106
70
ஸப்தரிஷிநாடி
35. பிதாவின் மரண காலத்தை உரைப்போம். இந்த ஜாதகனுக்கு
இருபத்து மூன்றாம் வயதில் கருமதசை வரம் என்று சொல்லுவோம். அந்தக்
காலத்தில் சுக்கிர மகாதசை புத புக்தியில் சந்தைக்கு மரணம் என்று
கூறுவோம்.
36. அன்னையின் மரண காலம் அறைகின்றோம் நாற்பா னாலில்
தந்தனுர் மாதந் தன்னில் சாற்றினோம் கருமம் தானும்
மன்னுசேய் - திசையி லே தான் மதிமகன் பொசிக்கு நாளில்
உனனித கெண்டம் சொல்வோம் உத்தமி கேட்டி டாயே.
36. தாயின் மரண காலத்தைச் சொல்லுவோம். இந்த ஜாதகனின்
நாற்பத்து நான்காம் வயதில் மார்கழி மாதத்தில் கரும தசை வருகிறது.
செவ்வாய்த் தசையில் புத புக்தியில் தாயாருக்குக் மரணம் சேரும் என்று
சொல்லுவோம். உத்தமியே! கேட்பாயாக
37. சாதகன் மரண காலம் சாற்றுவோம் அறுபா னேழில்
தீதிலா ஆடி மாதம் *குறைபட்சம் சட்டி தன்னில்
தீதான வாயு நோயால் செப்பு வோம் மார கங்கள்
போதக வானைப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.
37. ஜாதகனுடைய மாண காலத்தைச் சொல்லுவோம். அறுபத்
தேழாம் வயதில் குற்றமில்லாத ஆடிமாதத்தில் கிருஷ்ண பட்சம் சஷ்டி
திதியில் கொடிய வாயு நோயால் மரணம் நேரும் என்று சொல்லுவோம்.
யானைமுகக் கடவுளைப்பெற்ற புண்ணியசாலியே! கேள்.
38. மறுசென்மம் துவாரை தன்னில் வைசிய குலமு தித்து
பெருமையாய்ச் செட்டுச் செய்து பிரபல கீர்த்தி யாகி
இருவினை யில்லா னாகி இவனுமே வாழ்வா னாகும்
அறுமுகன் தன்னைப் பெற்ற அம்பிகை யாளே கேளாய்.
38. மறுபிறப்பில் துவாரகையில் வைசியகுலத்தில் பிறந்து, மேன்மை
யுடன் வியாபாரங்கள் செய்து, பிரபலமாய்ப் புகழடைந்து, தீவினையில்லாதவ
னாகி, இவனும் வாழ்நத
் ிருப்பான் என்று சொன்னோம். சுப்பிரமணியக் கட
வுளைப்பெற்ற பார்வதி தேவியே! கேட்பாயாக,
1. மார்கழி
2. செவ்வாய்
3. புதன்
4. கிருஷ்ண பட்சம்
### book_page 107
விருஷப லக்னம்-ஜாதகம் 5
71
2. கூடு.
### book_page 108
ஸப்தரிஷிநாடி
42. மறுபிறப்பில் திருவள்ளூரில் இக்குலத்தில் இவள் பிறப்பாள்
என்று சொன்னோம். இவள் மரண காலத்தைப் பற்றிச் சொல்லுவோம்.
தன் கணவனுக்குப் பின்பு சிலகாலம் சீவித்திருப்பாள் என்று சொன்னோம்.
நாங்கள் கூறிய வாக்குத் தவறாது. தருமத்தை வளர்க்குந் தாயே! அம்பி
கையே! இவ்வாறு நாங்கள் கூறினோம்.
43. இவனுடை யோகச் சேதி யியம்புவோம் வறுமை யில்லா
னவனியில் நல்லோ னாவன் நற்பூமி விருத்தி செய்வன்
பவமுள தந்தை மேலாய்ப் பாலகன் வாழ்வா னாமே
தவசியே பூமி தன்னால் தனமது நேரு மென்றோம்.
43. இவனுடைய யோகச் செய்தியைச் சொல்லுவோம். தரித்திரம்
இல்லாதவன். உலகில் நல்லவனாவன். நல்ல நிலபுலங்களை விருத்திசெய்
வான். தந்தையினும் மேலான நிலையில் இவன் வாழ்வான். பூமியினால்
இவனுக்குச் செல்வஞ் சேருமென்று கூறினோம்.
44. செனித்திடுங் காலந் தன்னில் செம்பாம்பு திசையி ருப்புக்
குனித்திடு மாண்டு நாலுங் கூறிய திங்கள் ஏழும்
இனமதில் சூத முண்டு இவனுக்குத் தேக கண்டம்
தனமது செலவே யுண்டு தாய்தந்தை பிணியு மாமே.
44. செனன காலத்தில் கேது மகாதசை யிருப்பு உருடிங்கள் நான்கும்
மாதம் ஏழுமாம். அப்பொழுது பந்து வர்க்கத்தில் அசுபம் ஏற்படும். இவ
னுக்கும் கண்டம் ஏற்படும். பணச் செலவு உண்டு. தாய் தந்தையர்க்கு வியா
தியும் உண்டாம்.
45. செய்தொழில் பலித மாகும் தாய்வர்க்கம் சூத முண்டு
வையமேல் கீர்த்தி யேற்பன் வருந்து துணை விருத்தியாகும்
பையவே களவு போகும் பகரு வோம் விபரம் ரெண்டில்
ஐயமென் றோரைக் காக்கும் அம்பிகை மேலுங் கேளே.
45. இவன் செய்யும் தொழில்கள் நல்ல பலனைக் கொடுக்
கும். தாய் வழியில் அசுபம் ஏற்படும். உலகில் கீர்தத
் ி பெறுவான். துணை
வர்கள் விருத்தியுண்டு, பொருள்கள் களவுபோம், விவரமாக இரண்டாம்
பாகத்தில் சொல்லுவோம். அடைக்கல மென்றவர்களைப் பாதுகாக்கும்
அம்பிகையே ! மேலும் கேள்.
1. கேது,
### book_page 109