Professional Documents
Culture Documents
Джатакам 3
Джатакам 3
ஸப்தரிஷிநாடி
14. தைரியமான மனமுடை யவன். சொற்களைக் கட்டிக் கூறுவான்.
மனைவியிடம் விருப்பமுடையவன். பலவித வியாபாரங்கள் செய்வான்.
ஆராய்ந்து தேர்ந்து நல்வழியைக் கடைப்பிடிப்பான் இவன் தொடங்கிய
செயல்களில் வெற்றி கிட்டும். காரியங்களைச் செய்வதில் சமர்ததன்.
பணியாட்களை யுடையன்.
15. துண்டமாம் குணத்த னாகும் துருசான நடையு முள்ளான்
அண்டினோர்க் குதவி செய்வன் அரசர்கள் இஷ்டம்
(கொள்வன்
ஸப்தரிஷிநாடி
30. சொற்படி செய்வா னாகில் துலங்கிடு மாண்பா லொன்று
பைப்படி பெண்பால் ரெண்டு அறைகின்றோம் தீர்க்க மாகச்
செப்புவேன் மாதுர் சேதி சிவந்திடு மேனி யாவள்
தப்பித மில்லா ளாகும் சாந்தமும் குணவா ளாமே.
30. சொன்னபடி செய்வானானால் ஆண் குழந்தையொன்றும், பெண்
குழந்தைகள் இரண்டும் தீர்க்கமாக இருக்கும். இவனுடைய தாயாருடைய
செய்தியைச் சொல்லுவேன். சிவந்த மேனியுடையவள். தீங்கான குண
மில்லாதவள். சாந்தகுண முடையவள்.
31. பித்தமும் இருப்பில் ரோகி புண்ணிய மனத்தளாகும்
வித்தகி சுசீல முள்ளாள் விளம்பு 3 வாம் துணை வர் தம்மைச்
சுத்தமாய் நவம தாகும் துலங்கிடு மாண்பால் ரெண்டு
பத்தினி அவ்வா றாகும் பகருவோம் தீர்க்க மாக
31. பித்த நோயுடையவள். நல்ல மனமுள்ளவள். நல்லொழுக்க
முடையாள். இவளுடைய உடன் பிறந்தார்களைப்பற்றிச் சொல்லுவோம்.
அவர்கள் ஒன்பதின்மர். அவர்களில் இரண்டு ஆண் மக்கள் மாத்திரம் தீர்க்
கமாக இருப்பர். இந்தப் பெண்ணும் அங்கனமே ண்ேட ஆயுளுடையவள்
என்று சொல்லுவோம்.
32. மற்றது சேத மாகும் அறைகின்றே மிவள் முன் சென்மம்
வித்தகி தவளை மேல்பால் விளங்கிய சிற்றூர் தன்னில்
சித்தமாய்க் கோகுலத்தில் செனித்துமே மதலை யுண்டாய்ப்
பத்தினி குடும்பி யாகிப் பஞ்சைகட் கன்ன மீந்து ;
32. மற்றவை அழியும். இவள் முன்சென்மத்தைப் பற்றிக் கூறு
கின்றோம். தவளை என்னும் ஊருக்கு மேற்கில் இருந்த ஒரு சிறிய ஊரில்
இடையர்குலத்தில் பிறந்தாள். குழந்தைகள் பிறந்து பெரிய குடும்பமுடை
யளாகி ஏழைகளுக்கு உணவு கொடுத்து ;
33. குறைவுக ளில்லா ளாகிக் கோதையும் வாழ்ந்து பின்பு
வரனுக்கு முன்னே மாண்டு வந்தவ ளிவளே யென்றோம்
நிறையவே அவர்கள் வீட்டில் நிற்பளே தெய்வ மாக
அறைகின்றோ மிவள்பிற் சென்மம் அம்மணி மேலும் கேளே.
33. ஒருகுறையு மில்லாதவளாகி வாழ்ந்து, தன் கணவனுக்கு முன்பே
மாண்டு இப்பிறப்பில் பிறந்திருப்பவள் இவளே யென்று கூறினோம். அவர்
கள் வீட்டில் தெய்வமாக இருப்பாள் இவள். இவளுடைய மறுபிறப்பைப்
பற்றிச் சொல்லுகின்றோம். தாயே! மேலுங் கேள்,
### book_page 77
விருஷப லக்னம் -ஜாதகம் 3
39
ஸப்தரிஷிநாடி
38. தந்தையின் மரண காலம் சாற்றுவோம் முப்பா னெட்டில்
முந்திய தேளின் மாதம் மொழிகிறோம் கருமந் தானும்
பிந்திய அன்னைக் கேதான் பேசுவோம் நாற்பான் ரெண்டில்
சந்ததம் ஆனி மாதம் சாற்றுவோம் மார கங்கள்.
38. இந்த ஜாதகனின் தந்தை மரணமடையுங் காலத்தைப் பற்றிச்
சொல்லுவோம். ஜாதகனின் முப்பத்தெட்டாம் வயதில் கார்த்திகை மாதத்
தில் தந்தை இறப்பான். இவன் தாய்க்கு இவனு டைய நாற்பத்திரண்டாம்
வயதில் ஆனி மாதத்தில் மரணம் ஏற்படும் என்று சொல்லுவோம்.
39. சாதகன் மரண காலம் சாற்றுவோம் அறுடா னாறில்
கோதிலா 'மகர மாதம் குறைபக்கம் நவமி தன்னில்
மேதினில் பித்த நோயால் வித்தக னுடலம் வாடும்
மாதவர் சொல்லும் போது அறைகின்றார் பராசர் தாமே.
39. ஜாதகனின் மரணகாலத்தைப் பற்றிக் கூறுவோம். அறுபத்
தாறாம் வயதில், மைாதம் கிருஷ்ண பட்சம் நவமி திதியில் பித்த
நோயினால் இவன் மரணமடைவான் என்று முனிவர் கூறும்போது, பரா
சரர் கேட்கின்றார்.
40. எப்படிச் சொன்னீ ரய்யா எட்டினுக் குடையோன் தானு
மெய்ப்புடன் குருவே யாகி வில்லுக்கு யெட்டில் நிற்கச்
செப்புமத் தசைகா லத்தே சேயர்க்குத் தோஷ மாகும்
தப்பித மில்லை ராசா தான வன் உச்ச மாகி;
40. ஜாதகன் அறுபத்தாறாம் வயதில் மரணமடைவான் என்று
எப்படிச் சொன்னீர்கள் ? எட்டாமிடத்துக்கு உரியவனாகிய குரு தனுர்
ராசிக்கு எட்டாவதாகிய கடகத்தில் இருக்கக், குருமகாதசையில் ஜாதகனுக்
குத்தோஷம் ஏற்படும். ஆனாலும், தவறில்லை. குரு உச்சமாகி ;
41. புகருமே மிரண்டி லாகப் பொன்னவன் மூன்றில் நிற்கப்
பகையில்லை வயது தீர்க்கம் பகருவோ மிதற்கு நேராய்த்
தகைமைசா தகநூ லில்தான் சாற்றினோ மேதா னெட்டாம்
வகையாகப் பார்ப்ப ராகில் மனமது தீரு மென்றோம்.
41. சுக்கிரன் மிதுனத்திலும், குரு கடகத்திலும் நிற்பதனால் இவர்க
ளுக்குள் பகைகிடையாது. ஆயுள் விருத்தி ஏற்படும். இதற்கு ஆதாரம்
சோதிட நூலிலிருந்து கூறினோம். எட்டாம் பார்வையாகப் பார்த்தார்க
ளானால் மனக்குறை நீங்கும்.
1. தைமாதம்.
### book_page 79
விருஷப லக்னம்-ஜாதகம் 3
41
ஸப்தரிஷிநாடி
பற்றிய கலகவார்த்தைகளும் கொஞ்சம் உண்டு. குழந்தைக்கு நோய
முண்டு .
46. மாதுரு தந்தை வர்க்கம் வந்திடும் சூத மென்றோம்
கோதிலாத் துணைவர் சேதம் குறித்தனம் தந்தை நோயாம்
சூதிலாச் சுபமு முண்டு சொந்தமாய்ப் பூமி சேரும்
போதக வானைப் பெற்ற புண்ணிய சாலி கேளாய்.
46. தாய்தந்தையர் வர்க்கத்தில் அசுபங்கள் வரும் என்று சொன்
னோம். குற்றமில்லாத சகோதரர் மரிப்பர். தந்தைக்கு வியாதியுண்டாகும்
என்று கூறினோம். சுபமும் ஏற்படும். சொந்தமாக நிலங்கள் சேரும்.
யானைமுகக் கடவுளைப் பெற்ற பார்வதியே! கேட்பாயாக.
47. பொன் திசை காலந் தன்னில் புதுமனைச் சித்திர மாகும்
தன்னிலே பணமு முண்டு தன தானிய விருத்தி யாகும்
உன்னிதப் பணியும் சேரும் உடன்பிறந் தோர்கள் சேதம்
பன்னிய குடும்பம் வேறு பகருவோம் மேலும் கேளே.
47. குருமகாதசையில் அழகிய புதுவீடு ஏற்படும். செல்வம், தானியம்
முதலியன விருத்தியாகும். ஆபரணங்களும் சேரும். உடன்பிறந்தார்கள்
நஷ்டமும் உண்டு. குடும்பமும் வேறாகும் என்று சோல்லுவோம். மேலுங்
கேட்பாயாக.
48. குடும்பத்தில் சுபமும் சூதம் கொண்டிடும் சமமாம் யோகம்
இடும்புகள் ஒன்று மில்லை இலகிடும் கன்று காலி
மடத்தினில் திருவும் வாசம் அறைகின்றோம் விபரம்
(ரெண்டில்