2. சித்தர்கள் வாழும் மலை எது? 3. இப்பாடலின் தலைப்பு யாது?
III. பின்வரும் உரைநடைப் பத்தியைப் படித்து பின்னர் கேட்கப்பட்ட
வினாக்களுக்கு விடையளி: 4×1=4
தாவரங்கள் இயற்கைச் செல்வங்களுள் ஒன்று. இத் தாவரங்களினால்
மனிதர்களும், பிற உயிர்களும் அடையும் பயன்கள் அநேகம். தாவரங்கள் இல்லையேல் கணக்கற்ற விலங்குகளும், புழு பூச்சிகளும் உயிர் வாழ முடியாது. ஏனெனில் யானை, காண்டாமிருகம், பசு, முயல், மான், குதிரை இவற்றிற்குப் புல் பூண்டுகள், இலைகள் தாம் உணவு. உலக மக்கள் அனைவருக்கும் உணவாக அமைபவை தாவரங்களில் இருந்து கிடைக்கும் கோதுமை, அரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற தானிய வகைகள். நாம் அணியும் ஆடைகளில் பெரும்பாலானவை தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஆடைகளுக்கு ஏற்றும் வண்ணச் சாயங்கள் தாவர இலைகள், பட்டைகள் இவற்றிலிருந்து கிடைக்கின்றன. சில தாவரங்கள் மருந்துப் பொருட்களாகவும் பயன்படுகின்றன.
வினாக்கள் :
1. தாவரங்களை எவ்வாறு அழைக்கிறோம்?
2. விலங்குகளின் உணவு யாது?
3. தாவரங்களில் இருந்து கிடைக்கும் தானிய வகைகள் யாவை?