You are on page 1of 7

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருகஇயல்பாகவே தோ ன்றி மறையும் பொருள்கள், அவற்றின்

இயக்கம், அவை இயங்கும்

இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். பனிபடர்ந்த

நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள்,

சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும்

அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா

இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த பரிசு.

இயற்கையின் அழகைக் கண்டு இன்புற்றால் மட்டும் போதாது. அந்த அழகை நாம்

பாதுகாக்க வேண்டும். நாம் தமது தேவைக்கா க மலைகள், காடுகள், விலங்குகள்,

பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை

மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி

வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும்

பாதுகாத்துக்கொள்ள முடியும்.

1. எதனை இயற்கை என்கிறோம்?

2. இப்பத்தியில் உள்ள இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை?

3. இயற்கையை ஏன் பாதுகாக்க வேண் டும்?

4. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.

இவ்வினாக்களுக்கு விடை கீழ்காணும் விளக்கத்தில் தெளிவாக உள்ளது


விளக்கம்:
1. இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம்,
இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம்.
2. ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க
ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா ஆகியன இயற்கையை வருணிக்கும் சொற்கள் ஆகும்.
3. நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து
வருகிறோம்.  மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம் இதனால் இயற்கைச்
சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது.
புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும்
பாதுகாத்துக் கொள்ள முடியும்.
4. பத்திக்குப் பொருத்தமான தலைப்பு "இயற்கை" ஆகும்.

                   வகுப்பு - 9 , தமிழ் 

               அலகுத் தேர்வு 1 - இயல் 1 

                                நேரம் : 1:30 நிமிடங்கள்

                                   மதிப்பெண்கள் : 50

*************     *************  **************

                     அலகுத் தேர்வு - 1                            

I ) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க

                             5x1=5

1. தமிழ் விடு தூது..... என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

அ.தொடர்நிலைச் செய்யுள்.          
ஆ.புதுக்கவிதை 

இ.சிற்றிலக்கியம் 

ஈ.தனிப்பாடல்

2. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக .

அ. ........இனம் ஆ .........குணம் இ ..........வண்ணம்    ஈ..............வனப்பு 

க)மூன்று நூறு பத்து எட்டு 

உ)எட்டு  நூறு  பத்து  மூன்று

ங) பத்து நூறு எட்டு மூன்று

ச) நூறு பத்து எட்டு மூன்று

3. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!... இவ்வடிகளில்
பயின்றுவரும் நயங்கள்_ 

அ)முரண் எதுகை இரட்டைத்தொடை

ஆ) இயைபு அளபெடை செந்தொடை

இ) மோனை எதுகை இயைபு 

ஈ)மோனை முரண் அந்தாதி

4. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தாமணி _ அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு- 

அ) வேற்றுமைத்தொகை 

ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 

இ) பண்புத் தொகை        

ஈ )வினைத் தொகை

5. சாப்டவே
் ர் _   என்பதன் தமிழ்ச்சொல் எது?

அ)உலவி 
ஆ)செதுக்கி

இ) ஏவி 

ஈ )மென்பொருள்

II ) குறுவினா🌸🌸

எவையேனும் 5 வினாக்களுக்கு மட்டும் வடையளி.                                  5 x 2 = 10

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

4. கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் 5 தமிழ்ச் சொற்களைத் தருக .

5.அகமாய்ப்  புறமாய் இலக்கியங்கள் _ அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் _  இலக்கியங்களில்


பாடுபொருள்களாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?

6. செய்வினையைச்  செயப்பாட்டு வினையாக மாற்றும் துணை வினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

7. வீணையோடு வந்தாள், கிளியே பேசு தொடரின் வகையைச் சுட்டுக.

III ) சிறுவினா🌸🌸

எவையேனும்  இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி.

                                                                   2 x 4 =8

1.மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?

2. காலந்தோறும் தமிழ் மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது ?

3.வளரும் செல்வம் உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச் சொற்களைத் தொகுத்து அவற்றிற்கு இணையான


தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுக.

4.தன்வினை பிறவினை எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

IV ) பாடலைப் படித்து  வினாக்களுக்கு விடை எழுதுக.


                                                                    5 x 1 = 5 

ஊனரசம் ஆறு அல்லால்  உண்டோ செவிகள் உணவு 

ஆன நவரசம் உண் டாயினாய் - ஏனோர்க்கு

அழியா வனப்பு ஒன்று அலது அதிகம்

 உண்டோ ஒழியா வனப்புஎட்டு உடையாய்.....

1. இப்பாடல் இடம் பெறும் நூல் எது?

2.இப்பாடலை இயற்றியவர் யார்?

3. உணவின் சுவைகள் எத்தனை?

4. வனப்புகள் எத்தனை?

5. ஊனரசம் என்பது எதைக் குறிக்கும்?

V ) நெடுவினா🌸🌸

ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடையளி.

                                                               1 x 5 = 5

1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை


எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க .

2.தூது அனுப்பத் தமிழே சிறந்தது _  தமிழ்விடு தூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

VI ) அடிபிறழாமல் எழுதுக              1 x 6 = 6

 தித்திக்கும் தெள்அமுதாய்த் எனத் தொடங்கி.... மூன்று இனத்தும் உண்டோ வரை. தமிழ்விடு தூது பாடலை
அடிபிறழாமல் எழுதவும்.
VII ) பொருத்தமான பெயரடைகளை  எழுதுக 

                                                                 4 x 1 = 4

(நல்ல ,பெரிய, இனிய ,கொடிய)

1. எல்லோருக்கும்..... வணக்கம் .

 2.அவன் .............. நண்பனாக இருக்கிறான்.

 3. ...........ஓவியமாக வரைந்து வா.

4. .............விலங்கிடம் பழகாதே !

VII ) மொழிபெயர்க்க.                      2 x 1= 2

1. Linguistics

2. Literature

VIII )  அகராதியில் காண்க            2 x 1 = 2

1. கிளத்தல் 

2.கேழ்பு

IX ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

                                1x3=3

You might also like