Professional Documents
Culture Documents
வழங்குவர்:
ஆ. நித்தின்
இளங்கலைத் தமிழ்ப் படைப்பாக்கம்
rjnithin14@gmail.com
‘திராவிட மொழிகள் அனைத்தினும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும்
தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு
உயிர் வாழ்வதோடு, அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல் வளம்
பெற்றுவளர்வதும் இயலும்’.
- கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்)
தமிழ் இலக்கிய வரலாற்றை நோக்கின் தொல்காப்பியர் காலத்திலேயே
வடமொழிக் கலப்பு இருந்ததை அறிகிறோம்.
வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
சங்க இலக்கியங்களில் வடமொழிக் கலப்பு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.
சங்கமருவிய கால இலக்கியங்களில் வடமொழிக் கலப்பு சிறிது அதிகரித்தது.
மணிமேகலை போன்ற நூல்களில் புத்த சமயக்கோட்பாடுகளை விளக்குவதால்
வடசொற்கள் மிகுந்து காணப்படுகின்றன. பல்லவர், சோழர் காலத்தில் வடசொல்
கலப்புமிகுந்து காணப்படுகின்றது.
திருவாசகத்திலுள்ள 2810 சொற்களுள் 373 சொற்கள் வடசொற்கள் என
மறைமலையடிகள் குறிப்பிடுகிறார்.
சங்க காலந்தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரை தமிழில் பிறமொழிக்கலப்பு
இருந்ததை மறுப்பதற்கில்லை.
தனித்தமிழ் இயக்கம்
தனித்தமிழ் இயக்கம் என்பது தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலக்காமல்
தனித்தமிழில் எழுதப்பட வேண்டும் அல்லது பேசப்பட வேண்டும், அவ்வாறு கலப்பதால்
தமிழ்மொழிக்கு நன்மையில்லை, பெருந்தீமை என்று சொல்லும் இயக்கம் ஆகும்.
தமிழ் மொழி, இயற்கையாகவே தனித்தியங்கக்கூடியது; அதற்குப் பிறமொழிகளின்
துணை தேவையில்லை என்பது இக்கொள்கையின் அடிப்படையாகும்.
இந்த இயக்கம் 1916 ஆம் ஆண்டு அளவில் தோற்றுவிக்கப்பட்டது.
தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், பரிதிமாற்
கலைஞர், கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியவர்கள் தனித்தமிழ் இயக்கத்தில்
குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் மறைமலை அடிகள் 'தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை' எனப் போற்றி
வழங்கப்படுகிறார்.
தனித்தமிழ்க் கொள்கை தோன்றியது ஏன்?
இடைக்காலத்தில் தமிழ்மொழிக்குப் பெருங்கேடு தோன்றியது. அது மணிப்பிரவாளம் என்னும்
பெயருடன் தோன்றியது. மணி ஒன்றும் பவளம் ஒன்றும் அடுத்தடுத்துக் கோத்து
உருவாக்கப்படும் மாலையைப் போலத் தமிழ்ச்சொல் ஒன்று வடசொல் ஒன்றென
அடுத்தடுத்துப் பயன்படுத்தி எழுதுவது மணிப்பவளம் என்னும் கலப்படத்தமிழ் நடையாகும்.
இத்தகைய நடையால் தமிழுக்குக் கேடுவிளையும் என்பதை உணர்ந்த அறிஞர் மறைமலை
அடிகள் அதைத்தடுக்க முயன்றார். அதனால் தோன்றியது தனித்தமிழ்க் கொள்கையாகும்.
தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது பிறமொழிச்சொற்கள் தேவையில்லை என்பதை அவர்
வலிமையாகச் சொன்னார்.
தன் பெயரை "வேதாச்சலம் சுவாமிகள்" என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து "மறைமலை
அடிகள்" என்று தமிழ்ப் படுத்தினார். பரிதிமாற் கலைஞரும் "சூரிய நாராயண சாஸ்த்ரி"
என்னும் தம் பெயரை தமிழாக்கம் செய்தார்.
தனித்தமிழ்க் கொள்கை தோன்றியது ஏன்?
தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. வடமொழியோ இந்திய ஆரிய மொழிக்
குடும்பத்தைச் சேர்ந்தது. இரு வெவ்வேறு தன்மையுடைய இத்தகைய மொழிகளை
வலுக்கட்டாயமாக இணைப்பது மொழியியல் இயற்கைக்கு மாறானது.
திரு.வி.க. நடை
“1932ஆம் ஆண்டு ! துறையூர் உமாமகேசுவரர் வரவேற்பு ! சுயமரியாதை எழுச்சி
! என் பெயர் தீட்டிய வளைவு தீக்கிரை ! உமாமகேசுவரர் கையில் தீயன் சிக்கல் !
‘நம்மவன் விடுங்கள்’ என்கிறது என் நா !”
(திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், பக்.807)
மனோன்மணியம் பெ. சுந்தரனார் நடை
“அன்பும் குடிமைப் பிறப்பும் அரசவாம் பண்பும் அறிவும் பரவு நூலுணர்வும்
தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும் வாய்மையும் சொல்லில் வழுவா
வன்மையும் துணிவும் காலமும் கனமும் துணியுங் குணமும் மந்திரத் தலைவர்
துணைமையும் உடையனே வினையாள் தூதனென்று ஓதினர்"