You are on page 1of 140

எம்.கே.

நாராயாணன்

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
@2000 M.K.Narayanan
Published by
Raffles, an imprint of
SNP Editions Pte Ltd
162 Bukit Merah Central #04-3545
Singapore 150162
Fax: (65) 27802456
Website: <http://www.snp.com.sg>
All rights reserved.No part of this publication
may be reproduced, stored in a retrieval syatem,
or transmitted, without the prior permission of the
publishers
Illustrations by Roy Foo
Cover Design by Albert Tan
ISBN 981-4059-87-0

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


Mr M.K.Narayanan’s novel is an absolute
Spellbinder. With the touch of marma
Maedai captivated and enthralled in its twists
And turns it kept me buried in the book day
And night. Mr M.K Narayanan is a master
Storyteller. His gripping stories, vivid
Characterization and amazing twists in the
Plot markes the book an enjoyable read .The
Book explores the realm of the unknown and
Mystifying yet the reader is kept glued to it
From pag to page. A must-read fiction for
All fans of horror and mystery stories.
K.Dharshini
Student,Nanyang Polytechnic

திரு.எம்.கே.நாராயணனின் இந்த மர்ம நாவல்


படிப்பவர் இரத்த ஒட்டத்தை உறைய வைக்கும்
தன்மை கொண்டது. இனிமை, எளிமை ஆகிய
சொற்றொடர்களால் நாவலை அமைத்துள்ள
முறை போற்றுதற்குரியது. கட்டிய அனைவியை
விட்டு விட்டு இடையில் வந்த ஆட்டக்காரியோடு
வாழ்க்கை நடத்தினால் அது முழுமை பெற்ற
வாழுக்கையாகாது என்ற உண்மையையும்,
உண்மையான அன்பே இறுதிவறை வரும் என்ற
உண்மையையும் இந்நாவல் புலப்படுத்துகிறது.
M. Thyagarajan
Lecturer, jurong Junior College
எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றினாலும்
நாம் பலன் அடைய பல கருத்ஙக்களையும்
அனுபவங்ணயும் சமுதாயத்திற்கு உணர்ந்தும்
ஒர் அருமையான நாவல். கதை ஒட்டம்
விறுவிறுப்புடன் அமைந்திருக்கறது.
“அன்னைத் தமிழுக்குத் தொண்டு செயத -
எம்.கே.நாராயணன்
ஆயிரங் காலத்துப் பயிரானார்.”
N.Ramakrishnan

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


சுவை குன்றாத எளிய இனிய தமிழ் நடை.
சிங்கப்பூர் இளையர்கள் இன்புறத்தக்க
இனிமையான மொழி. சிங்கப்பூர் தமிழ்
இலக்கிய வரலாற்றில் மர்ம நாவலின்
தொடக்கம் வளர வாழ்த்துக்கள்!
Meenal Devarajan
Teacher,St.Joseph’s Institution

உழைப்பே உயர்விற்கு அடிப்படை. குடும்ப


நெறியிலிருந்து விலகுவதால் இழுக்கும்
இடுக்கண்ணும் வரும். தீயோர் , ஆவி
நிலையிலும் தீமையே செய்வர். பாவத்திற்குச்
சன்மானம் மரண ம். திக்கற்றவருக்குத்
தேய்வமே துணை. இவை போன்ற
தேவையான கருத்துக்களை இந்நூல்
வழங்குகிறது கதை ஆசிரியருக்கு என் நல்
வாழ்த்துக்கள்!
S.Sockalingam
Retired Public Health Overseer

Ministry of Enviornment
Warning:-
After you have this book
Do not swith off the lights. From Mr M.K.
Narayanan comes yet another gripping tale
Of suspense. A sumptuous treat that will of all horror buffs.
A must-read.
Dhavakumaran Manokaran
Journalist
கதை நன்றாக அமைந்துள்ளது. சிங்கப்பூர்,
மலேசியா பின்னணியில் கதை
எழுதப்பட்டிருப்பதால் கதை ஒட்டத்தைப்
புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கிறது.
Kaarthegeswaran

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


ஒரே மூச்சீல் படித்து முடிக்கும் ஆர்வத்தைத்
தூண்டக்கூடிய நல்ல விறுவிறுப்பான
நாவலாக இருக்கின்றது. அந்தக் கால
கட்டத்தில் - ஒரு சில பெரும்புள்ளிகள் வாழ்ந்த
வாழுக்கையை தத்ரூபமாக காட்டியிருக்கிறார்
ஆசிரியர். அனைவருக்கும் புரியக்கூடிய,
அழகான, தனக்கே உரிய எளிய நடையில்
கதையை எடுத்ஙக்கூறிய ஆசிரியர் திரு
எம் .கே.நாராயணன் அவர்கட்கு என்
மனமார்ந்த பாராட்டுக்கள்.
Mrs.Geetha Swami
Housewife
பேய் பிசாசுகனின் மேல் நம்பிக்கை
இல்லாதவர்களுக்கு, இக்கதை வெறும்
கதையாகத்தான் தெரியும். ஆனால், நம்பிக்கை
உள்ளவர்களுக்கு இக்கதை ஒர்
அனுபவமாக்க்கூட அமையலாம் அல்லவா?
Mohamed Daanishshah
Student, Jurong Junior College
ஆற்றோரத்தில் ஒரு மாளிகையைக் கண்டேன்!
அதன் மர்மத்தைக் கண நேரத்தில் உணர்ந்தேன்!
ஒவ்வொரு கதாபாத்திரமாக மாறினேன்!
அச்சத்தால் அலறினேன்!
ரத்த வெள்ளத்தில் மூழ்கினேன்!
கதிரவன், பத்மா மீது இரக்கம் கொண்டேன்!
கலியபெருமாள் நிலை குறித்துக்
கவலைப்பட்டேன்!
மணிவண்ணன்,கலாவின் மீட்பால்
திம்மதியடைந்தேன்!
பல்வெறு உணர்ச்சிகளுக்கு
ஆட்கொள்ளப்பட்டேன்!
மர்மக் கதை மன்னன் எம்.கே. நாராயணனுக்கு
என் வாழ்த்துக்காள்.
R.Yokanathan
Programme Director
Oli 96.8 FM Radio Corporation of

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


தன் இனம், தன் மொழி என்ற தணியாத தாகம்
கொண்டவர் எம்.கே.நாராயணன்.
எப்படியாவது எந்த வகையிலாவது தமிழுக்குத்
தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்
ஆற்றோரத்தில் ஒரு மாளிகை” என்ற மர்ம
நாவலை கலப்படமற்ற தமிழில் தந்துள்ளார்.
கதையின் போக்கு நீரோடை - கதை சொல்லும்
பாங்கு அனுபவத்தின் முத்திரை.
இழையோடும் இறை நம்பிக்கை இருண்ட
மனத்தில் ஒர் ஒளி விளக்கு.
Kannammah Ram Narayana swamy
Writer, Housewife

அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்று


துடிப்புடன் பார்ப்பதைப் போன்ற உணர்வில்
மூழ்கிவிடுகிறோம். “மர்ம நாவல்” எழுதுவது
தமக்குக் கை வந்த கலை என்பதை
இப்புதினத்தின் வழி ஆசிரியர்
மெய்ப்பித்திருக்கிறார்.
Mrs. Thilagavathy Munusamy
Curriculum Specialist,Tamil Language
Languages & library Branch, MOE
Simple and yet powerful. A bril iantly writ-

Ten piece that keeps the reader asking for


More
BHarathi

புதினத்தைப் படிக்கத் தொடங்கியவுடன்,


விறுவிறுப் ானகதைஒட் மும்,திகலூட் டும்
சம்பவங்களும், எதிர்பாராத திருப்பங்களும்
ஏதோ ஒரு துப்பறியும் படத்தை மெய்மறந்து

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அத்தியாயம் 1

30.10.1940 - (புதன்கிழமை)

நள்ளிரவு. மழை பெய்துகொண்டிருந்தது. சுழல்காற்றுச்


சுழன்று வீசிக்கொண்டிருந்தது.

சிறிய-ஆனால், அழகான தரைவீடு. அன்றைய கால


கட்டத்தில் அது பங்களா எனக் கூறப்பட்டது. அந்தப் பங்களா
அப்போது மரகதத்திற்கும் அவள் ஒரே மகன்
மணிவண்ணனுக்கும் சிறைச்சாலையாக - உள்ளத்து
உணர்வுகனை அலைக்கழிக்கக்கூடிய சித்திரவதைக்கூடமாக
இருந்தது.

கார் வந்து நின்றது. ஆறு வயது மணிவண்ணன் தன்


தாயை அணைத்துக்கொண்டான். மரகதம், மணிவண்ணனைத்
தூக்கிக்கொண்டாள்.

டிரைவருக்கு முன்னே தடுமாறியவண்ணம்,


அ ங்கப்பன் வந்தான். மது போதையில் அவன் கால்கன்
தடுமாறின.

“நான் போயிட்டு வர்றேன் சார்” என்று கூறிய டிரைவர்


சற்றுத் தயங்கி நின்றான். “ஐயா, ஏதாவது கூறுவாரா” எனத்
தயங்கி நின்றான். ‘ஐயா’ பேசாமல் இருந்ததால் டிரைவரும்
“நாளைக்கு வர்றேன்” என்று கூறிவிட்டு வேகமாகச் சென்று
காரை அந்த இடத்திலிருந்து ஓட்டிச் சென்றான்.

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அங்கப்பன் வீட்டிற்குள் நுழைந்தான்.

ஒரு மூலையில் மரகதம் மணிவண்ணனைத் தன்


மார்போடு அணைத்தவண்ணம் நின்று கொண்டிருந்ததைப்
பார்த்தான்

மரகதம், அங்கப்பனை வெறித்து நோக்கினாள்.

“என்னடி, பார்க்கிறே?”

பதில் கூறாமல் மரகதம்.... அங்கப்பனைத் - தன்


கணவனை - வெறித்து நோக்கியவண்ணம் இருந்தாள்

“ஏய், உன்னைத்தாண்டி... தேவடியாளே....


உன்னைத்தாண்டி.: கேட்கிறேன்... என்னடி பார்க்கிறே...?”
அங்கப்பன் தொடரவில்லை.

படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த மரகதம்,


மணிவண்ணனைத் தன் இடுப்பில் இருந்து இறக்கிவிட்டாள்.

“என்ன சொன்னே...? என்னையா:. தேவடியான்’னு


சொன்னே:.” என்று படிக்கட்டில் இருந்து கீழே இறங்கினாள்.

“எவ எவனோட எல்லாம் சுத்திட்டு வர்ற நீயா


என்னைப்பாஎத்து தேவடியான்”னு சொல்றே?”

அன்றுவரை அடியும் உதையும் வாங்கிக்கொண்டு


பொறுமையின் சின்னமாக இருந்த மரகதம் பொங்கி எழுந்தாள்.

அங்கப்பன் அதை எதிர்பார்க்கவில்லை. தடுமாறினான்.

2
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
தடுமாறியவன் - நிமிர்ந்தான். அடுத்து அவன் என்ன செய்வான்
என்பது மரகதத்திற்கு நன்கு தெரியும்.

அறைவான் - முடியைப்பிடித்துத் தன்ளுவுன் - கீழே


விழுபவளை எட்டி உதைப்பான்.
அவற்றையெல்லாம் பார்த்து மணிவண்ணன் கதறி
அழுவான்.
மணிவண்ணன் சோபாவுக்கு அருகில் சென்று நின்று
கொண்டான்.

அச்சத்தால் அந்த ஆறு வயதுச் சிறுவனின் உடல்


நடுங்க்யது. தாயையும் தந்தையையும் மாறிமாறிப் பார்த்துக்
கொண்டிருந்தான்.

“மரகதம்” என்று கத்தியவண்ணம் அங்கப்பன்


மரகதத்தின் நீண்ட கூந்தலைப் பற்றி அவனைத் தரையில் தன்ன
முயன்றான்.
அதே வேகத்தில் மரகதம் திரும்பினாள். தன்
கரங்களால் அங்கப்பனின் முகத்தைப் பிறாண்டினாள். கூரிய
நகங்கன் அங்கப்பன் முகத்தைக் கோடுகன் போலக் கீறின.

“ஆ” என்று கத்தியவன் மீண்டும் மரகதத்தை அன்றயக்


கையை ஓங்கினான். அதே கணத்தில் மரகதம் அவனைப்
பிடித்துத் தள்ளினாள்

அங்கப்பன் பின்னுக்குச் சென்று நாற்காலியில் தடுக்கிப்


பின்புறமாகத் தரையில் சாய்ந்தான்.

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


“இன்னைக்கு ஒரு முடிவோடதான் இருக்கேன்.
மிருகமான உன் கையில் அடி வாங்கிக்கிட்டு நானும் என்
மகனும் இனி இங்க இருக்கப்போறதில்லை. மங்களங்கிற அந்தத்
தேவடியா சிறுக்கியோட நீ இங்கேயே இருக்கலாம். மணி, வாடா
போகலாம்,” என்றாள்.

அங்கப்பன் எழுந்து உட்கார்ந்தான். “விண் விண்” என்று


வலித்த தன் கன்னத்தைத் தடவினான். ரத்தம் வேகமாகக் கசிந்து
கொண்டிருந்தது. மரகதத்தை அடித்து நொறுக்கவேண்டும் என்ற
வெறி கினம்பியது . ஆனால், பயந்து அழுது புலம்பும்
மரகதத்திற்குப்பதில் முற்றும் மாறுபட்ட மரகதத்தை அவன்
கண்டு கொண்டிருந்தான்.

‘இவளுக்கு எவ்வளவு ஆணவம்... எப்படி இந்தத்


தைரியம் வந்தது’ என்று யோசித்தவனாக....

“போடி வெளியே... என்னைத் தள்ளிவிடுற அளவுக்குப்


போயிட்ட நீ இங்க இருக்கக்கூடாது....,’ ‘ என்று கத்தினான்.

ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த பிரயாணப்


பையைத் தூக்கித் தோளில் மாட்டியப டி அங்கப்பனைத்
திரும்பிப் பார்த்தாள் மரகதம்.

“நீ சொல்லி நான் போகலை.. நான் முன்ன சொன்னதை


இப்ப நீ திருப்பிச் சொல்றே. என்னையும், மணிவண்ணனையும்
பொறுத்தவரையில நீ செத்துட்டே,” என்று கூறிய மரகதம்
வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

கடும் மழை பெய்துகொண்டிருந்தது. வாயிற்படி

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அருகில் இருந்த குடையை விரித்துப் பிடித்தாள்.
மணிவண்ணனைத் தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டாள்.

கடைசி முறையாகத் தான் வாழ்ந்த அந்தப்

பங்களாவைப் பார்த்தாள்.

தகரக்கூரை கொண்ட மாரியம்மன் கோவிலில் தங்கி விடலாம்.

கதவு சாத்தப்படவில்லை; திறந்தே இருந்தது.


அங்கப்பன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான்.
பங்களாவில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில்
இருந்த அந்தச் சிறிய மாரியம்மன் கோவிலுக்குக் காரில் வந்து
இறங்கிய மரகதம் நன்ளிரவைத்தாண்டிய அந்த நேரத்தில்
மழையில் நனைந்தவண்ணம் தன் மகனோடு வந்து சேர்ந்தாள்.
கோவிலுக்குப் பக்கத்திலேயே ஒரு குடிசையில் கருப்பையா
பண்டாரமும் அவர் மனைவி அஞ்சலையும் வசித்து வந்தனர்.

ஆனால், குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது.


அவர்கனை அந்த நேரத்தில் எழுப்பலாமா வேண்டாமா
என மரகதம் யோசித்தாள். மணிவண்ணன் குளிரால்

நடுங்கிக்கொண்டிருந்தான்.
கதவருகில் மண்டியிட்டு அமர்ந்த மரகதம், “தாயே
மாரியம்மா வீட்டை விட்டு மகனோடு வெளியேறிட்டேன் இனி

நீதான் ஒரு வழிகாட்டணும்,” என்று வேண்டினாள்.


“யாரு இந்த நேரத்திலே?” என்று குரல் கேட்டு
எழுந்தாள். கருப்பையா பண்டாரம் தன் குடிசைக் கதவருகே

நின்றுகொண்டிருந்தார.

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


“நான்தாங்க மரகதம்..”

“யாரு அம்மாவா? என்னம்மா... இந்த நேரத்திலே,”


என்று பதற்றத்துடன் கோவிலுக்குள் வந்தார்.

பேச்சுக்குரல் கேட்டு அஞ்சலையும் வெளியே வந்தாள்.

அரிக்கன்விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

மணிவண்ணன் தூங்கி விட்டான். அஞ்சலையின்


பழைய சேலையை அணிந்து கொண்ட மரகதம், வீட்டைவிட்டு
வெளியேறியதற்கான காரணத்தைச் சுருக்கமாகவும் நயமாகவும்
எடுத்துக்கூறினாள். அங்கப்பனின் வாழ்வில் ஏற்பட்ட -
ஏற்பட்டுகொண்டிருந்த மாற்றங்களை ஓரளவு அறிந்திருந்த
கருப்பையா பண்டாரம் “அம்மா, நீங்க வீட்டுக்குத் திரும்பிப்
போகப்போறது இல்லையா?” என்று கேட்டார்.

எத்தனையோ வீடுகளில் நடப்பதை நன்கு


அறிந்திருந்தவர் கருப்பையா பண்டாரம்.

“கோவிலுக்கு வருகின்ற பத்துப் பெண்களில் எட்டுப்


பேர் குடிகாரக் கணவனிடம் அடியும் உதையும்
வாங்கிக்கொண்டு வாழ்வதையும், ஏதாவது ஒரு நாள் மாரியாத்தா
தன் கணவனுக்கு நல்ல புத்தியைத் தருவாள் என்ற
நம்பிக்கையோடு இருப்பதையும் அவர் கண்டிருக்கிறார்.
அவர்களுள் மூவராவது நால்வராவது ‘ப டிதாண்டிய
பத்தினிகளாக’ மாறி வேறு ஆடவர்களுடன் பிணைப்பை
ஏற்படுத்திக்கொண்டதையும் பார்த்திருக்கிறார்.

மரகதம் பண்பின் உறைவிடமாக இருந்தாள். பண்பாடு

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


என்ற சிறைக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு
வாழ்ந்தாள் அதனால்தான், அந்தக் கேள்வியை கருப்பையா
பண்டாரம் கேட்டார்.

“இல்லைங்க. எந்த நேரத்திலேயும் அவர் மங்களத்தை


வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்து என் கண் எதிரிலேயே
குடும்பம் நடத்தத் தயங்கமாட்டாரு. என் மகனை நான்
வனர்க்கணும் அதுதான் என் குறிக்கோள்-,” அமைதியாக
மரகதம் கூறினாள்.

அஞ்சலை அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.


பண்பாடு என்ற சிறையில் இருந்து வெளியே வந்து நின்ற
மரகதத்தைக் கருப்பையாவும் பார்த்துக்கொண்டிருந்தார்

“அம்மா, நீங்க விரும்பினா இங்கேயே இருந்துடலாம்.”

“இல்லைங்க… நான் இந்தத் தோட்டத்தில


இருக்கப்போறது இல்லை. பல தோட்டங்கள் இந்தப் பகுதியில
இருக்கு மணியை அழைச்சுக்கிட்டு நான் அங்கே
போயிடுறேன். பக்கத்துத் தோட்டங்கள்’ல இருந்து பல பேரு
இங்க வர்றாங்க. உங்களுக்குத் தெரிஞ்சவங்க மூலமா ஒரு
தோட்டத்துல வேலை வாங்கிக்கொடுத்துடுங்க,” என்றாள்

ஒரு பெரிய பணக்கர்ரரின் - தோட்ட முதலாளியின்


மனைவி தோட்டத்தில் ஒரு சாதாரண வேலைக்குச் செல்வதா
அஞ்சலைக்கு அழுகையே வந்துவிட்டது கருப்பையாவால்
பேச முடியவில்லை மெனனமாக இருந்தார்

“நான் பத்து வயதுப் பெண்ணா இருந்தப்ப:. என் அப்பா

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


மரம் விழுந்து இறந்துட்டாரு. அப்பாவே ட சிதைந்த
உடலைப்பார்த்த அம்மா அடுத்த கணமே மாரடைப்பால அப்பா
போன இடத்துக்கே போயிட்டாங்க. அதன்பிற்பாடு என்
தாத்தாதான் என்னை வளர்த்தாங்க. அந்தச் சின்ன வயசிலேயே
நான் என்னைப் பக்குவப்படுத்திக்கிட்டேன். அதனால, எனக்கு
எதையும் தாங்குற மன உறுதி இருக்கு. மாரியம்மன் எனக்கு ஒரு
வழிகாட்டுவாங்கிற எண்ணத்துலதான் இங்க வந்தேன்,” என்று
கூறி மரகதம் நிறுத்தினாள்.

கருப்பையா பண்டாரம் நிமிர்ந்து பார்த்தார்.

“ஆத்தா நிச்சயம் வழிகாட்டுவா,” என்று கூறிய அவர்,


“அம்மா, சிங்கப்பூர்ல ஒரு நாலைஞ்சு இடங்கள்ல ரப்பர்
தோட்டங்கள் இருக்கு. இங்க இருந்து வேலை ஆட்களை
கொண்டு போக முந்தா நாளு ஒருத்தன் இங்க வந்திருக்கான்
நாலைஞ்சு குடும்ப ங்கன் சிங்கப்பூருக்குப் போக முடிவு
எடுத்திருக்கு. அந்தக் குடும்பங்கள்ல ஒண்ணு ராமலிங்கத்தோட
குடும்பம். புருஷனும் பொஞ்சாதியும் ரொம்பத் தங்கமானவங்க
நேத்து இங்க வந்து ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க
ராமலிங்கத்துக்கூட நீங்க போகலாம்,” என்றார்.

“சரிங்க”என்றுமரகதம்தலையாட் ினாள்
8

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அத்தியாயம் 2

10.8.1962 - (வெள்ளிக்கிழமை)
இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த
அழைப்பு வரும் என மணிவண்ணன் எதிர்பார்க்கவே இல்லை.

“என் பேரு கலியப்பெருமாள். தம்பி, நீங்க சின்னப்


பின்னையா இருந்தப்ப உங்க அப்பாவுக்கு நான் லாயரா
இருந்திருக்கேன். ஃபோன்ல எல்லா விவரத்தையும் நான்
சொல்லமுடியாது. உங்களை நேர்ல கண்டு பேசணும். அதுவும்
உங்களுடைய லாயர் முன்னிலையில பேசணும்” என்று தன்
உரையாடலைத் தொடங்கினார்.

ஐந்து வயதில் கலியப்பெருமானைத் தன் தகப்பனார்,


அங்கப்பனுடன் பார்த்தது மணிவண்ணனுக்கு ஞாபகம்
இருந்தது. தன் தகப்பனாரின் போக்குப் பிடிக்காமல்
அவரிடமிருந்து கலியப்பெருமாள் பிரிந்து சென்றதைப்பற்றித்
தன் தாயார் கூறியதும் மணிவண்ணன் நினைவில் நின்றது.
கலியப்பெருமாள் பற்றி உயர்வான எண்னம் அவனுக்கு
இருந்ததால், கலியப்பெருமாள் சிரம்பானில் இருந்து
தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதும், அவரைச்
சந்திக்க அவன் ஒப்புதல் தெரிவித்ததோடு, தன்னுடைய
வழக்கறிஞரான கதிரவன் அலுவலக முகவரியையும் தந்தான்.

தன் கணவன் கலியப்பெருமாளுடன் பேசியதைக்


கேட்டுக் கொண்டிருந்த கலா, “நம் தொலைபேசி நம்பரைச்
சித்தப்பாவா கொடுத்திருக்காங்க?” என்று கேட்டாள்.

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


“ஆமா, ஆனா, எப்படி உன் சித்தப்பாவைப்
பார்த்தாருன்னு சொல்லலை. எது கேட்டாலும், “எல்லாத்தையும்
விவரமா ந்ர்ல பார்க்கும்போது சொல்றேன்னு’ சொல்றாரு.
‘ஏதோ அப்பா விஷயமாத்தான் இருக்கணுமுன்னு
நினைக்கிறேன்....” என்று கூறி ய மணிவ ண்ணன், பூஜை
அறைக்குச் சென்றான். அங்கே தெய்வ்ப்படங்களுடன் தாயார்
மரகதத்தின் படமும் இருந்தது. அதைப் பார்த்தான் - அவன்
நினைவுகன் பின்னோக்கிச் சென்றன.

பூஜையருகே வந்த கலா தன் கணவன் என்ன


நினைக்கின்றான் என்பதை உணர்ந்துகொண்டாள்
ராமலிங்கத்தின் மகனான கலா, மணிவண்ணனோடு
வளர்ந்தவள்; அவனோடு தன் வாழ்வை
இணைத்துக்கொண்டவள்; மரகதம் பட்ட துயரை எல்லாம்
நேரில் கண்டவள்.

திரும்பிய மணிவண்ணன், “இருபத்து இரண்டு


வருஷங்களுக்கு முன்னால... மதுபோதையிலும் மாது
மயக்கத்திலேயும் அறிவை இழந்துகிடந்த, “அப்பா” என்ற உறவு
றுகாண்ட ஒருவரை விட்டு, நான் அம்மாவோட அந்தக் கடும்
மழையில வெளியேறினப்ப... அந்த உறவு அறுபட்டுப்போச்சு.
இப்ப அந்த “அவரைப்பற்றி” ஏதோ பேசக் கலியப்பெருமாள்...
வரப்போறாரு... எனக்கு இது... புரியலை... பிடிச்சுக்கலை.”

“இதோ பாருங்க... ஒரு விஷயத்தைப் பத்தி முழுமையா


தெரியாதவரையில ஒரு முடிவு எடுக்கக்கூடாதுன்னு நீங்கதான்
சொல்லுவீங்க. கலியப்பெருமாள் எதைப்பத்திப் பேசப்போறாரு
- என்ன சொல்லப்போறாருன்னு முதல்ல் கேட்போம். பிறகு ஒரு

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


முடிவை நீங்க எடுங்க,” என்று கலா கூறியதை மணிவண்ணன்
ஏற்றுக்கொண்டான்.

ஏறத்தாழ இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்


மாரியம்மன் கோவில் கருப்பையா பண்டாரம் கூறியவாறு
ராமலிங்கம் குடும்பத்துடன் சிங்கப்பூர் புறப்பட்டாள் மரகதம்.
ராமலிங்கத்தின் தம்பி கணபதி அந்த எஸ்டேட்டில் தன்
தாயாரோடு தங்கிவிட்டான்

செம்பவாங் ரப்பர் தோட்டத்தில் போராட்டம் மிகுந்த


வாழ்க்கை தொடங்கியது. ஒப்பந்தக் கூலிகனாக அவர்கள்
மலாயர்வில் இருந்து வராவிட்டாலும் ஒருவகையில் அந்த
வாழ்க்கை அ டிமை வாழ்க்கைய வே இருந்தது
ராமலிங்கத்தின் மனைவி சீதாலெட்சுமி அழகான பணிவான
பெண். “அக்கா... அக்கா” என்று மரகதத்துடன் மிகவும்
பாசத்தோடு பழகினாள் அந்த எஸ்டேட்டில் சுமார் நாற்பது
தமிழ்க் குடும்பங்களும் ஐந்து ஜாவானியக் குடும்பங்களும்
இருந்தன சிறிய அத்தாப்புக்குடிசையில் மாரியம்மனையும்
முணீஸ்வரரையும் எழுந்தருளுச்செய்து தமிழ்ர்கள் வணங்கி
வந்தனர். ஒருவருக்கொருவர் துணையாக இருந்ததோடு
மாரியம்மனையும் தங்களுக்குத் துணையாக
வைத்துக்கொண்டனர்.

‘ ஆண்கன் அனைவரும் பால்மரம் வெட்டும் தொழிலில்


ஈடுபட்டனர் பெண்களில் பெரும்பாலோர் புல் வெட்டுதல், செடி
கொடிகளை அகற்றுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டனர்

11
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
கலியப்பெருமாள் தொடர்பு கொண்ட பின் அடுத்த
ஏழாம் நாள் வழக்கறிஞர் கதிரவன் அலுவலகத்தில் அந்தச்
சந்திப்பு நடைபெற்றது.

அறுபது வயதைத் தாண்டி நிண்ற கலியப்பெருமாள்


அதே கம்பீரத் தோற்றத்துடன் காணப்பட்டாலும்
தனர்ந்திருந்தார். மணிவண்ணனைப் பார்த்ததும் அவன் இரு
கரங்கனையும் இறுகப்பற்றிக்கொண்டார். அவர் கண்களில்
கண்ணீர் பெருகியது.

“தம்பி மணி - எத்தனை வருஷங்களுக்குப் பிற்பாடு -


உங்களை நான் பார்க்கிறேன். எப்ப டித்தான் இத்தனை
வருஷங்கள் ஓடிப் போயிட்டுதோ தெரியலை,” என்று கூறிய
கலியப்பெருமாள் ஒருசில விநாடிகன் மெனனமாக இருந்தார்
கதிரவன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்

“இவுங்கதான் கலாவா - ராமலிங்கத்தோட மக கலாவா?”


என்று கலாவை நோக்கிக் கேட்டார்.
மணிவண்ணன் தலை அசைத்தான்

“சித்தப்பாவா எங்க ஃபோன் நம்பரைக்


கொடுத்தாங்க?” என்று கலா கேட்டதற்கு “ஆமா” என்று
கலியப்பெருமாள் பதில் கொடுத்தார்

“இந்தச் சிறிய அறிமுகத்திற்குப் பிறகு நாம பேச்சைத்


தொடரலாம் என்று நினைக்கிறேன்” என்று கதிரவன்
ஆரம்பித்தான்.

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


“சுமார் ஒரு வாரத்துக்கு முந்தி கலியப்பெருமாள்
மணிவண்ணனுடன் தொடர்புகொண்டு பேசினாரு அதன் பிறகு
சட்டபூர்வ மா மணிவண்ணன் தகப்பனாரின் சொத்துபற்றி
எனக்குத் தெரியப்படுத்தினாரு. மணிவண்ணனின்
வழக்கறிஞர்ங்கிற முறையில் உயில் சம்பந்தமான முழு
விவரமும் தெரியணும். எந்தக் கட்டத்தில், எத்தகைய
சூழ்நிலையில் அது எழுதப்பட்டிருக்குங்கிறதும் தெரியணும்.
மேலு ம் ஒரு சிக்கல் இருக்கு. அத வது , மணிவ ண்ணன்
தனக்குத் தன் தகப்பனார்ன்னு சொல்லிக்கிற ஒருவரோட
சொத்து வேண்டாம்’ன்னு என்கிட்ட சொல்லி இருக்காரு. ஆனா,
அப்படி வேணாமுன்னு சொல்றதையும் நாம சட்டப்பூர்வமா
செயல்படுத்தணும். நான் தெளிவா சொல்லிட்டேன்னு
நினைக்கிறேன்” என்று கதிரவன் நிறுத்தினான்.

“எல்லாத்தையும் விவரமா சொல்லத்தான் இங்க


வந்திருக்கேன். மரகதத்தோடு இறுதிக் கால வாழ்வு பற்றியும்
தெரிஞ்சுக்க விரும்புறேன்” என்று கூறி நிறுத்திய
கலியப்பெருமாள், “பல மாதங்களுக்கு முன்னால அங்கப்பன்
குழம்பிய நிலையில என்கிட்ட வந்தான். பிறகு உயில் பற்றி
என்கிட்ட சொல்லி அதுக்கான பத்திரங்களையும் கொடுத்தான்
கதிரவன் கேட்டுக்கிட்டபடி நான் முழு விவரத்தையும் இப்பச்
சொல்றேன்,” என்று கூறிய கலியப்பெருமாள் முன்

நடந்தவுற் ைக் ூறத் ொடங்கினார்.


þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
அத்தியாயம் 3

தஞ்சை மாவட்டம், மன்னார்குடியில் பிறந்த


அங்கப்பன் தன்சிறு வயதிலேயே பெற்றோரைஇழந்தான் தாய்
மாமன் வீட்டில் வளர்ந்த அவன் சென்னைக்கு வந்து
கபாலிஸ்வரர் கோவிலுக்கு அருகில் இருந்த ஒரு கடையில்
எடுபிடி ஆனாக வேலைக்கு அமர்ந்தான் அப்போதுதான்
கலியப்பெருமாளுக்கும் அவனுக்கும் இடையில் நட்பு
வளர்ந்தது ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த
கலியப்பெருமாள் வழக்கறிஞனானான்

மலாயாவுக்கு வரக் கலியப்பெருமாளுக்கு ஒரு வாய்ப்பு


வந்தது தன்னுடைய பால்ய நண்பனான அங்கப்பனையும்
உடண் வரும்படி அழைத்தான்

கோலாலம்பூருக்கு வந்த கலியப்பெருமாள் ஒரு


வழக்கறிஞர் நிறுவனத்தில் பதவி ஏற்றான். அதே நிறுவனத்தில்
“ஆபீஸ் பையனாக” அங்கப்பன் வேலைக்கு அமர்ந்தான்
“ மரங்களில் ரூபாய் நோட்டுகள் காய்த்துத் தொங்கும்.
அப்படிய பறித்துக்கொள்ளலாம்” என்று நம்பி வந்த
அங்கப்பனுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், எப்படியாவது
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேகம் இருந்தது
அங்கப்பனுக்குப் புதிய உலகில் பல புதியவர்களின் நட்பும்
கிடைத்தது ஓராண்டுக்குப் பின் ரயில்வே ஸ்டேசனுக்கு
அருகில், செட்டியார் ஒருவரிடமிருந்து வட்டிக்குக் கடன் வாங்கி
ஓர் உணவகத்தை ஆரம்பித்தான் ஆறே மாதங்களில் கூட்டம்

14
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
கூடியது; கல்லாப்பெட்டியும் நிரம்பியது. காதர் மைதீன் என்ற
பெரியவரின் உதவியேடு அடுத்த ஈராண்டு களி ல் மூன்று
உணவகங்களை அங்கப்பன் நகரப்பகுதிகளில் திறந்து
நிர்வாகம் செய்தான். நான்கு ஏக்கர் கொண்ட ஒரு ரப்பர்
எஸ்டேட்டையும் விலைக்கு வாங்கினான்.

“டேய் கலியப்பெருமாள் பார்த்தியாடா. ஊரில இருந்து


கப்பல்ல வர்றப்ப எப்படி இருந்தேன்னு , இப்ப எப் படி
இருக்கேன்னு பாரு. ‘சுக்கிரதிசை, அ டிக்க ஆரம்பிச்சா
தொட்டதெல்லாம் பொன்னாகும்’பாங்க. அப்படித்தான் இருக்கு.
மாத்தா ஈத்தாம்ல ஒரு செம்பனைத் தோட்டத்தை வாங்கலாம்னு
நினைத்சிருக்கேன். எனக்குப் பல வழிகளில் உதவி செய்த காதர்
மைதீன் நாகப்பட்டினத்துக்குப் போயிட்டாரு. உன்னைத்தவிர-
எனக்கு இப்ப நம்பிக்கையானவன் வேறு யாரும் இல்லை.
தோட்டங்களை நிர்வாகம் பண்ணவும் எனக்கு வழக்கறிஞரா
இருக்கவும் நீ வந்துடு” என்று அங்கப்பன் கூறியபோது, அந்த
அழைப்பை மறுக்காமல் கலியப்பெருமான் ஏற்றுக்கொண்டான்.
தன் சொந்த ஊரான குளித்தலைக்குச் சென்று உறவுப்பெண்ணை
மணமுடித்துத் திரும்பிய கலியப் பருமாள் தன்
குடும்பத்தாருக்கும் மனைவி குடும்பத்தாருக்கும் ஓரனவு பணம்
அனுப்பவும் இங்கு வசதியோடு வாழவும், வழக்கறிஞர்
நிறுவனம் தரும் மாத ஊதியம் போதுமானதாக இல்லை எனவே
இரட்டிப்பு ஊதியம் தர முன்வந்த அந்த நிர்வாகப் பொறுப்பை
கலியப்பெருமாள் ஏற்றுக்கொண்டான்.

தோட்டத்தைச் சுற்றி ப்பார்த்துக் கொண்டிருந்த


போதுதான் அங்கப்பன் மரகதத்தைச் சந்தித்தான்.
பொற்கொடிபோல் இருந்த மரகதத்திடம் மனத்தைப் பறி

15
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
கொடுத்தான் தாய் தந்தையை இழந்து தாத்தாவின் பராமரிப்பில்
வாழிந்துகொண்டிருந்த மரகதமும் அங்கப்பனை விரும்பினாள்
தோட்ட முதலாளி ஒருவரைத் தொழிலாளி மகன் ஒருத்தி
மணமுடிக்கப் போகிறாள் என்ற செய்தி எங்கும் பேசப்பட்டது.
திருமணம் ஆடம்பரமான முறையில் நடத்தப்பட்டது.

தன்னுடன் வந்து தங்கும்படி தாத்தாவை மரகதம்


அழைத்த போது, அந்தக்கால மனிதரான அவர், “எளிய
பாட்டாளி மகனாகவே இருந்துட்டேன் பேத்தி திருமணம்
மூலமா எண் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள விரும்பவில்லை”,
என்று கூறினார் பெரியவர் அதே குடிசையில் சில நாள்கள்
வாழ்ந்து மறைந்தார்.

முதியவருக்கு நேர்மாறானவனாக அங்கப்பன்


இருந்தான். பணமும் பதவியும் வருகின்றபோது மனிதன்
மாறுவான் என்று கூறுவார்கன் அந்தக் கூற்றைப் பொய்யாக்க
அங்கப்பன் விரும்பவில்லை. மாறினான் இரவு விடுதி, பெரிய
ஹோட்டல்களில் விருந்து என மேல்மட்ட நி லைக்குத்
தாவினான் ஏழைப் பாட்டாளி மகளாகப் பிறந்து வளர்ந்த
ம்ரகதம் எளிமையான ஒரு குடும்பப் பெண்ணாகவே இருக்க
விரும்பினாள் புற வாழ்க்கைக்கு ஆடம்பரத் தோற்றங்கள்
தேவை என்றாலும், அக வாழ்க்கை எளிமையானதாக
இருக்கவேண்டும் என்ற கோட்பாட்டை அவள் வலுவாகப் பற்றி
இருந்தாள்.

ஆடம்பரமான விடுதிகளுக்கும் ஹோட்டல்களுக்கும்


விருந்துகள் என்ற பெயரால் அவன் போகவிரும்பவில்லை.
கணவன் ஏதாவது நினைத்துக்கொள்வானோ என்பதற்காகப்

16

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


போனாள். மணிவண்ணன் பிறந்தபின் அதை ஒரு வாய்ப்பாக
வைத்துக்கொண்டு “குழந்தைக்கு இரைச்சல் பிடிக்காது; மணி
அழ ஆரம்பிச்சிடுவான்,” என்றெல்லாம் கூறி ஆடம்பர
இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வந்தாள்.

அங்கப்பனுக்கு அது ஒரு வகையில் சாதகமாக


அமைந்தது. மதுவும் மாதுவும் அவனை இறுகப்பபற்றி க்
கொள்ள வழி பிறந்தது. பலவகை மதுபானங்கன், பல இனப்
பெண்கன் என அவன் சென்றுகொண்டிருந்தாலும் அவன்
மரகதத்தின்மீது வைத்திருந்த அன்பில் மாற்றம் இல்லை
மங்கள்ம் என்ற ஒரு நடனப் பெண்ணின் உறவு வரும் வரை
அந்த அன்பில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

1940களில் ஏராளமான நாடகக் கலைஞர்களும் இசைக்


கலைஞர்களும் மலாயாவுக்கு வந்து பின்னர்ச் சிங்கப்பூர்
செல்வார்கள். அல்லது சிங்கப்பூர் வந்து மலாயா செல்வார்கள்.
1930களின் இறுதியில் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துக்
கொண்டிருந்த ஒரு துணை நடிகையின் மகள்தான் மங்களம்.
ஒரு கோவில் சீரமைப்புப் பணிக்கு என ஒரு நாட்டிய
நிகழ்ச்சிக்குக் கோலாலம்பூரிவு இயங்கிய ஒரு மன்றம் ஏற்பாடு
செய்திருந்தது. அந்த நாட்டிய நிகழ்ச்சிக்கு ச் சிறப்பு
விருந்தினனாக அங்கப்பன் அழைக்கப்பட்டிருந்தான்.

அன்றைய காலகட்டத்தில் சிறப்பு விருந்தினர் அல்லது


தலைமைத் தாங்குபவர் என்றால் அவர் கணிசமான அனவு நிதி
உதவி அளிக்கவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக
இருந்தது.

“இவுங்கதான் மங்களம். இது அவுங்க அம்மா. பல

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


படங்கள்’ல நடிச்சிருக்காங்க. இவுங்க மற்ற நடனமணிகள்”
என்று மன்றத் தலைவர் சிவப்பிரகாசம் சில படங் கனைக்
காண்பித்தார்.

மங்களத்தின் படத்தைப் பார்த்தபோது அவளுடைய


கவர்ச்சியான தோற்றத்தைப் பார்த்து அங்கப்பனுக்கு தடுமாற்றம்
ஏற்பட்டது; மரகதத்தின் வாழ்வில் விதி சிரித்தது.

மங்களத்தின் தம்பி தலைமையில் பத்துப்பேர் கொண்ட


குழுவினர், மலாயா வந்தனர். அங்கப்பன் போன்ற
செல்வர்களின் உதவியோடு இடம்பெற்ற நடன நிகழ்ச்சி பலரின்
கண்டனத்துக்கு ஆளாகியது. தரமான நிகழ்ச்சியாக இல்லாமல்
இசைத் தட்டுகளுக்குக் கவர்ச்சியான நடனங்களை - நடனங்கள்
என்று கூறுவதைவிட-உடலை வளைத்துக் குலுக்கி - ஆட்டம்
போட்டனர்.

ஒரு கோவில் நிதிக்கு இத்தகைய நிகழ்ச்சி தேவைதானா


என்று தலைப்பிட்டு ஒரு சஞ்சிகையில் கடிதமும் வந்தது.

சிவப்பிரகாசம் மனமுடைந்துபே னார். ஆனால்


அங்கப்பன் போன்ற வசதி படைத்தவர்கன் மனம் மகிழ்ந்தனர்.
மேடையில் ஆடிய அழகிகன் பின்னர் அவர்களின் தனி
அறைகளில் ஆடினர்.

அவர்களில் ஒருத்தி மங்களம். ஆடலைக் கண்டு


ஆனந்தமடைந்தவன் அங்கப்பன்.

அடுத்த ஒரு வாரத்தில் மங்களத்தின் தாயான நடிகை


உடன் வந்த சில பெண்களை அழைத்துக்கொண்டு சென்னை
திரும்பினாள்.

18

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


மங்களத்தைப் பிரிய அங்கப்பனுக்கு மனமில்லை.
தன்னுடனேயே மலாயாவில் இருக்கும்ப டி அங்கப்பன்
வேண்ட, மங்களமும் இணங்கினாள். ஆனால், தன் தம்பி
தன்னுடன் இருக்கவேண்டு ம் என்பது மங்தளத்தின்
வேண்டுகோள். அதையும் அங்கப்பன் நிறைவேற்றிவைத்தான்.
அந்தக் கணத்தில் அங்கப்பன் தன் மனைவியை மறந்தான்;
மகனையும் மறந்தான்.

அன்றைய சூழ்நிலையில் அத்தகைய நிகழ்ச்சிகள்


ஒன்றும் புதிதல்ல. வழக்கமாக நடப்பவை - நடந்தவை. பல
மனைவி யர் அவற்றை ஏற்றுக்கொண்டனர். ஆனால்,
மரகதத்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டில்
போராட்டம் ஆரம்பமானது.

கலியப்பெருமாள் மானேஜர் மட்டுமில்லை;


அங்கப்பனின் நெருங்கிய நண்பனும்கூட. ஒழுக்கமான வாழ்வு
வாழ்ந்த கலியப்பெருமாள் அங்கப்பனின் தனிப்பட்ட வாழ்வை
வெறுத்தான். மங்களத்திடம் அடிமைபோல் கிடந்த
அங்கப்பனைக் கண்டித்தான்.

“கலியப்பெருமாள். இது என்னுடைய தனிப்பட்ட


விஷயம். நெருங்கிய நண்பன்கூட ஒரு தனிப்பட்ட விஷயத்துல
தலையிடுவதை நான் விரும்பலை,” ஆணித்தரமாகவும்
அழுத்தமாகவும் அங்கப்பன் கூறினான்.

“அங்கப்பா, ந் போற போக்குச் சரியில்லை; மது


மயக்கமும் மாது மயக்கமும் உன் மதியை மழுங்கச்
செய்துட்டுது. தண்ணியும் கன்னியும் உன்னை எங்கோ
கொண்டு போகுது.”

19

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


கலியப்பெருமாள் கூறி முடிக்கவில்லை...

“கலியப்பெருமாள்” என்று அங்கப்பன் கத்தினான்.

“நாவை அடக்கிப் பேசுடா. எங்கோ கிடந்தவனை


கோபுரத்தில் கொண்டு வந்து வச்ச என்கிட்டேயா இப்படிப்
பேசுறே?”

“ஏன்னா, கோபுரத்திலே இருந்த நீ குப்பை மேட்டை


நோக்கிப் போறே. அதனாலதான்...”

“டேய் நிறுத்துடா” என்று கத்திய அங்கப்பன்


கலியப்பெருமாளை அடிக்கக் கைநீட்டினான். ஓங்கிய கையைத்
தட்டிவிட்ட கலியப்பெருமாள் “அங்கப்பா, நான் சட்டம்
படிச்சவன். இன்னொருதரம் கை நீட்டினா... கோர்ட்டுல உன்னை
நிறுத்த நான் தயங்கமாட்டேன். என் பொருன்களை
எடுத்துக்கிட்டு நான் இந்தக் கணமே வெளியேறப் போறேன்.
தள்ளி நில் லுடா,” என்று கூறி அலுவலக அறைக்குன்
நுழைந்தான்

அங்கப்பன் பேயால் அறையப்பட்டவனைப்போல்


அசையாமல் நின்றுகொண்டிருந்தான்.

20

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அத்தியாயம் 4

கடந்தவற்றைக் கூறிக்கொண்டு வந்த கலியப்பெருமாள்


சற்று நிறுத்தினார். நிறுத்தியவர் தொடர்ந்தார்:

“அங்கிருந்து வெளியேறிய நான் என் பழைய


வழக்கறிஞர் தொழிலுக்கே போயிட்டேன் மரகதமும்
மணிவண்ணனும் வீட்டை விட்டு ப் போய்வி ட்டதாவும்
கேள்விப்பட்டேன் மங்களத்தை அங்கப்பன் பதிவுத் திருமணம்
செய்துக்கிட்டாங்கிற தகவலும் கிடைச்சுது நல்லா இருந்த
குடும்பத்தை அங்கப்பண் பாழாக்கிட்டானேன்னு ரொம்ப
வருத்தப்பட்டேன் அங்கப்பன் ஒருத்தன் இருந்தாங்கிறதையே
நான் மறந்துட்டேன். ஆமா, தம்பி தோட்டத்தில இருந்து
வெளியேறிய நீங்க?” என்று கலியப்பெருமாள் ஒரு
கேள்விக்குறியோடு நிறுத்தினார் ஒரு கணம் மௌனமாக
இருந்த மணிவண்ணன், “சுருக்கமா சொல்றேன். கலாவோட
அப்பாதான் ராமலிங்கம். அப்ப கலாவுக்கு வயது ரெண்டு
இருக்கும். செம்பவாங் எஸ்டேட்டில் அம்மாவுக்கும் எனக்கும்
துணையா இருந்தவங்க மாமா ராமலிங்கம், அத்தை பார்வதி,
கலா” என்று கூறிக் கலாவைப் பார்த்தான் கலா தன் கணவன்
முகத்தைப் பார்த்தாள் ஒரு பருமூச்சுடன் மணிவண்ணன்
தொடர்ந்தான்.

“எங்களுக்கெல்லாம் துணையா இருந்தவங்க ஒரு


சின்னக் குடிசையில இருந்த மாரியம்மன். அந்தக் குடிசைக்குப்
பக்கத்திலதான் எங்க குடிசை இருந்தது என் அம்மா -பல

21

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


தோட்டங்களுக்குச் சொந்தக்காரரின் மனைவியான அம்மா -
புல் வெட்டுகிற வேலையில சேர்ந்தாங்க. காலையில இருந்து
பிற்பகல் வரை கடும் வெயில்ல வியர்வைத் துளிகள் முத்து
முத்தா வழிந்தோட வேலை செய்தாங்க. ஒரு காசு - அஞ்சு
காசுன்னு ஒரு சின்ன உண்டியல்ல போடுவாங்க போட்டுட்டு,
‘மணி, நீ நல்லா படிச்சு வரணும்’ன்னு சொல்லுவாங்க’ ஆனா
பன்ளிக்கூடம் போக பன்ளிக்கூடம் இல்லை ரத்தினங்கிற ஒரு
தொழிற்சங்கவாதி ஒரு தமிழ்ப் பன்ளிக்கூடத்தைத்
தோட்டத்துக்குப் பக்கத்தில இருந்த பழைய குடிசையில
ஆரம்பிச்சாரு அந்தப் பன்ளிக்கூடத்தில அம்மா என்னை
சேர்த்துவிட்டாங்க. படிச்சேன்.... ஒரே வெறி.:: படித்து ஒரு நல்ல
வேலையில அமர்ந்து என் அம்மாவை வீட்டிலேயே வச்சுப்
பாதுகாக்கணுங்கிற வெறியில படிச்சேன். இதற்கிடையில
ஆங்கிலப்பள்ளி ஒண்ணும் ஆரம்பிக்கப்பட்டது
அம்மாவோட ஆசைப்ப டி நான் ஆங்கிலப்பன்ளிக்குப்
போனேன். படித்து.... ஒரு நல்ல வேலையில அமர்ந்தேன். என்
குறிக்கோள் நிறைவேறியது. என் அம்மா எப்போதும் என்
கூடவே இருப்பாங்கண்ணு நினைச்சேன். எனக்கும் கலாவுக்கும்
திருமணத்தை நடத்தி வை ச்சுட்டு அவுங் க என்னைப்
பிரிஞ்சாங்க,” என்று கடந்த கால வாழ்வைக் கூறிவந்த
மணிவண்ணன், தொடர முடியாமல் நிறுத்தினான். அவன் குரல்
கரகரத்தது. அருகில் இருந்த கலா அவன் கைகளைத் தன்
கைகளோடு இணைத்துக்கொண்டாள்.

அதுவரை மௌனமாக இருந்த கதிரவன்... “மிஸ்டர்


கலியப்பெருமாள். இப்ப... எனக்கு ஓரளவு என்ன நடந்ததுன்னு
புரியுது. எப்படி நீங்க மணிவண்ணனோட தற்போதைய

22

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


இடத்தைக் கண்டுபிடிச்சீங்க...? உங்கனை அடிக்கக் கை ஓங்கிய
அங்கப்பனைப் பிறகு எப்பச் சந்திச்சீங்க...?”

“ஒரு வருசத்துக்கு முந்தி ஏறத்தாழ இருபது


ஆண்டுகளுக்குப் பிறகு என்னைத் தேடிக்கிட்டு அங்கப்பன்
வந்தான். பழைய கம்பீரம் - பழைய செருக்கு, திமிர், ஆணவம்
எல்லாம் இல்லை. என் கால்ல விழ வந்தான் ஒதுங்கி
நின்னு க்கிட்டேன். ஏதோ ஒரு அதிர்ச்சியில-பயத்தில
இருந்தான். தெளிவா பேச முடியலை; திக்கித் திக்கிப்பேசினான்.
திரும்பித் திரும்பிப் பார்த்துக்கிட்டுப் பேசினான் மரகதத்தைப்
பத்தியும் மகன் மணிவண்ணன் பத்தியும் பேசும்போது விம்மி
விம்மி அழுதான் சொத்தை எல்லாம் மங்களமும் அவ தம்பி
பரமநாயகமும் சூறையாடிட்டதாகவும் கடைசியா ஒரே பங்களா
- மாளிகை இருக்கிறதாகவும் சொன்ன அங்கப்பன், அந்த
மாளிகையைத் தன் மகன் மணிவண்ணனுக்கு உயில் எழுதி
வைக்கப் போறதா சொல்லி உடனடியா உயில் தயாரிக்கச்
சொன்னான்.

உயி லை நேரடியாகவே மரகதத்துக்கிட்டேயும்


மணிவண்ணன்கிட்டேயும் கொடுக்கணுமுன்னு சொன்னான்.
ரெண்டு நாள்ல உயிலைத் தயாரிச்சு அவன்கிட்ட நான்
கொடுத்தேன். அதை வாங்கிப் பார்த்தான். அப்பதான்
அங்கப்பன் முகத்துல ஒரு மகிழ்ச்சி. அடுத்த கணம் நெஞ்சு
வலிக்குதுன்னான். சுருண்டு கீழே விழப்போனவனை நான்
தாங்கிப் பிடிச்சேன். அவன் உயிர் பிரிஞ்சுது,” என்று
கலியப்பெருமாள் கூறி நிறுத்தினார்.

அனைவரும் மெனனமாக இருந்தனர்.

23
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
“அதன் பிற்பாடு மரகதத்தையும் மணிவண்ணனையும்
தேடித் தோட்டத்திற்குப் போனேன். கலாவோட சித்தப்பா
கணபதி அதே தோட்டத்தில் இருந்ததால சுலபமா
மணிவண்ணனோட முகவரி எனக்குக் கிடைச்சுது,” என்று
கலியப்பெருமாள் பழைய வரலாற்றைக் கூறி முடித்தார்.

ஆற்றோரத்தில் அமைந்த அந்த மாளிகை தனக்கு


வேண்டாம் என்று மணிவண்ணன் கூறினான். நீண்ட
விவாதத்திற்குப் பின் மணிவண்ணனின் நெருங்கிய நண்பனும்
வழக்கறிஞனுமான கதிரவன் எளிதான ஒரு முடிவைக்
கூறினான். “நாம் எல்லாரும் அந்த மாளிகையைப் போய்ப்
பார்ப்போம். பிறகு என்ன செய்யலாம்’ன்னு முடிவு செய்வோம்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்ன ஒரு லட்சம் வெள்ளிக்கு
வாங்கப்பட அந்த மாளிகை இப்ப.. இருபது... முப்பது லட்சம்
ரிங்கிட்டுக்கு விலை போகலாம். பிற்பாடு முடிவு பண்ணுவோம்”
என்று கதிரவன் கூறியதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இரு வாரங்களுக்குப்பின் மணிவண்ணன், கலா,


கதிரவன், அவன் வருங்கால மனைவி பத்மா ஆகியோர்
மாளிகை காணப் புறப்பட்டனர்.

24
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
அத்தியாயம் 5

ஆண்டு க்கு ஒரு முறையாவது மணிவண்ணனும்


கலாவும் கோலாலம்பூர் பத்துமலைக்குச் சென்றுவிடுவார்கள்.
முருகப் பெருமானைத் தரிசித்த பிறகு கோலாலம் பூரில்
இருக்கும் கலாவின் உறவினர் வீட்டில் ஓரிருநாள்
தங்கியிருந்துவிட்டு வீடு திரும்புவார்கள்.

‘மாளிகையில் எல்லா வசதிகளும் இருக்கின்றன.


இரண்டு நாள் மாளிகையில் தங்கி இருந்துவிட்டு வரலாம்’ என்று
கலியப்பெருமாள் கூறினார். மாளிகையில் இருநாள் தங்கி
இருந்துவிட்டுப் பத்துமலைக்குச் சென்று சிங்கப்பூர் திரும்பலாம்
எனக் கதிரவன் கூறியதை மணிவண்ணன் ஏற்றுக்கொண்டான்.
வசதிகளைப் பொறுத்து ம்ளிகையில் ஒரு நாள் தங்குவதா
இரண்டு நாள் தங்குவதா என்பதைப் பிறகு முடிவு செய்து
கொள்ளலாம் என்றும் தீர்மானித்துக்கொண்டனர்.

கலியப்பெருமாள் கொடுத்த குறிப்புகளை


வைத்துக்கொண்டு கதிரவன் கூறக் கூற மணிவண்ணன் காரை
ஓட்டினான் பெண்கன் இருவரும் பலவற்றைப்பற்றி
பேசிக்கொணடிருந்தனர். Pekan பட்டணத்தைத் தாண்டிக்கார்
சென்றுகொண்டிருந்தது. சிறுசிறு மலாய்க் கிராமங்கள். பின்னர்ப்
பொட்டல்வெளிகள் - காடுகள் எனக் காட்சிகள்
மாறிக்கொண்டிருந்தன.

“அதோ... அந்தச் சாலையில் திரும்பு மணி...” என்றான்


கதிரவன்.

25
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
குறுகலான சாலை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
ஒரே பொட்டல் வெளி. ஆங்காங்கே சில மரங்கள்.. புதர்கள்..

சற்றுத்தொலைவில் மாளிகை தெரிந்தது.

“அதுதான்... மாளிகை.” என்று கதிரவன் கூவினான்.

மாளிகை கம்பீரமாக ஆற்றின் அருகே நின்றது.

ஆற்றோரத்தில் நின்று காரைப் பார்த்துக்கொண்டிருந்த


கலியப்பெருமாள் காரை நோக்கி வந்தார்.

காரில் இருந்து இறங்கிய மணிவண்ணன், கதிரவன், கலா


ஆகியோரை, “வாங்க தம்பி... வாங்கம்மா...” என்று கூறிய
கலியப்பெருமாள், இறுதியாக இறங்கிய பத்மாவைப் பார்த்ததும்
திடுக்கிட்டவராக அவளை நோக்கினார்.

“என்ன சார்... அப்படிப் பார்க்கிறீங்க... என் பேரு


பத்மா....” என்று கூறிக் கதிரவனைப் பார்த்தாள்.

அதற்குன் கலா குறுக்கிட்டு, “இவதான் கதிரவனோட


வருங்கால மனைவி,” என்று அறிமுகப்படுத்தினாள்.

“என்னை மன்னிச்சுடுங்க. எங்கேயோ பார்த்த முகமா


இருக்கேன்னு அப்படிப் பார்த்தேன்,” என்றார். அதற்குள்
மாளிகையில் இருந்து ஒருவன் வெளியே வந்தான். அவனைக்
கண்டதும், “வா, வைரப்பா.. கார்ல இருந்து பொருள்களை
எடுத்துக்கொண்டு போய் வை...” என்று கூறிவிட்டு, “வைரப்பன்
பெக்கானுக்குப் பக்கத்திலே உள்ள ஒரு கிராமத்திலதான்

26
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
இருக்கான். வாரத்துல ஒரு நாள் வந்து மாளிகையைச் சுத்தம்
செஞ்சுட்டுப் போவான். ரொம்ப நம்பிக்கையானவன்,” என்று
கூறியவர், “தம்பி, மாளிகை எப்ப டி இருக்கு?” என்று
மணிவண்ணனை நோக்கிக் கேட்டார் “இப்படிப்பட்ட
பங்களாக்களை - மாளிகைகளைச் சாங்கி, செம்பவாங் -
பகுதிகள்ல பார்த்திருக்கேன். உயர் பதவியில RAF - Naval
Base-ல இருந்த ஆங்கிலேயர்களுக்காகக் கட்டப்பட்ட அந்தப்
பங்களாக்கள் மாதிரி இருக்கே” என்றான் மணிவண்ணன்.

“சரியாச் சொன்ணீங்க தம்பி. பக்கத்துல ஒரு ரப்பர்


எஸ்டேட் இருந்தது. அந்த எஸ்டேட்டுக்குச் சொந்தக்காரனாக
இருந்த ஓர் ஆங்கிலேயன் இந்த மாளிகையைக் காலனித்துவக்
கட்டட அழைப்பு முறைப்படிக் கட்டி இருந்தான் பிறகு ஒரு
சீனன் இதை வாங்கினான். அவன்கிட்ட இருந்துதான் உங்க
அப்பா வாங்கினாரு. ம் வாங்க....” என்று கலியப்பெருமாள் முன்
செல்ல மணிவண்ணன், கலா, கதிரவன், பத்மா நால்வரும் பின்
தொடர்ந்தனர்.

பத்மாவுக்கு ஒரே ஆனந்தம். சின்னக் குழந்தைபோல


பரபரவென்று அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இரண்டு மாடி கொண்ட அந்த மாளிகையில்


கீழ்த்தளத்தில் வேலைக்காரர்களுக்கு என இரண்டு
அறைகளும், ஒரு ‘ஸ்டோர்’ ரூமும் இருந்தன. அதனை
நிலவறை என்று குறிப்பிட்ட கலியப்பெருமாள் அது பற்றிப்
பிறகு கூறுவதாகக் கூறினார்

மேல் மாடியில் ஐந்து அறைகள் இருந்தன. அந்த ஐந்து

27
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
அறைகளில் நான்கு அறைகள் திறந்திருந்தன. ஒவ்வொரு
அறையிலும் இருவர் படுத்துக்கொள்ளக் கட்டிலும் எழுதப்
படிக்க ஒரு மேசையும் படுக்கை அறையுடன் இணைக்கப்பட்ட
குளியல் அறையும் இருந்தன நவீன வசதிகளுடன் கூடிய
அந்த அறைகள் ஹோட்டல் அறைகளை நினைவூட்டக்
கூடியவையாக இருந்தன.

இரண்டு அறைகள் ஆற்றை நோக்கி இருந்தன. ஓர்


அறையில் மணிவண்ணனும் கலாவும் தங்கிக்கொள்ளலாம்
என்றும் அடுத்த அறையில் கதிரவவனும் பத்மாவும் தங்கலாம்
என்றும் முடிவு செய்யப்பட்டது தன் அறையைப் பத்மாவே
தேர்ந்தெடுத்துக்கொண்டாள். ஓர் அறையில் கலியப்பெருமாள்
தங்கிக்கொள்வதாகக் கூறினார்.

“பலமுறை இங்க வந்திருக்கேன். ஆனா... தங்க்னதே


கிடையாது” என்றார் கலியப்பெருமாள்.

கதிரவன் பத்மா தேர்ந்தெடுத்த அறைக்கு எதிரே


இருந்த அறையைச் சுட்டிக்காட்டிய கலியப்பெருமாள், “நான்
முதண் முதலா வந்தப்பவே கதவு திறக்க முடியாம இருந்தது
இதோ பாருங்க கதவைத் திறக்க முடியாம பூட்டை யாரோ
உடைச்சிருக்காங்க அது அப்ப டியே stuck ஆகிட்டுது ,”
என்றார்.

மணிவண்ண்ன் கதவுக் குமிழைத் திருப்ப முயன்றான்.


முடியவில்லை.

குமிழ் இருந்த இடத்தைக் காண்பித்து, “இந்தப் பகுதியை


வெட்டி எடுத்தாத்தான் கதவைத் திறக்க முடியும். பிறகு புதுசா

28
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
ஒரு கதவு செய்யணும். அதனாலதான் அப்ப டியே
விட்டுவச்சுட்டேன், இன்னும் இரண்டு நாள்ல கதவை உடைச்சு
வேறு கதவு போட ஏற்பாடு செஞ்சிடுறேன்,” என்று கூறிய
கலியப்பெருமாள் “ம் வாங்க கீழே போகலாம்,” என்றார்.

மணிவ ண்ணன் தயங்கி க்கொண்டே, “நான்


கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க இந்த மாளிகையைச்
சுத்தம் செய்து பராமரிக்கவும் - வைரப்பனுக்குச் சம்பள்ம்..
கொடுக்கவும்...?”

“எப்படிப் பணம் கிடைக்குதுன்னு கேட்கிறீங்கள்


தம்பி? கடைசிய என்னைச் சந்திச்சு உயில் எழுதச்
சொன்னப்பவே உங்க அப்பா ரொக்கமாக இருபதாயிரம் ரிங்கிட்
கெ டுத்தாரு. அ தைக் கொண்டுதன் எல்லத்தைஒயும்
பார்த்துக்கிட்டு இருக்கேன்.” என்று கலியப்பெருமாள் வினக்கம்
தந்தார்

கீழே வந்தபோது, காபி, வாட்டப்பெற்ற


ரொட்டித்துண்டுகளுடன் வைரப்பன் காத்திருந்தான்.

“ம்.... எல்லாரும் காப்பி குடிங்க,” என்று கூறிய


கலியப்பெருமாள் “காலையில சிங்கப்பூர்ல இருந்து புறப்பட்ட
நீங்க இங்க சரியா மூணு நாலு மணிக்கு வந்துடுவீங்கன்னு
எனக்குத் தெரியும். அதே மாதிரி மூன்றரை மணி க்கு
வந்துட்டீங்க. சரி... இனி உங்க முடிவுதான்.... அதாவது இங்க
தங்கப் போறீங்கனா... அல்லது..?” கலியப்பெருமாள் கூறி
முடிப்பதற்குள் பத்மா, “oh. I like this place. please,let it be
a picnic for us,” என்றாள்.

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


“உங்களுக்கெல்லாம் இந்த மாளிகை ரொம்பப்
பிடிக்கும்ன்னு எனக்குத் தெரியும் முன்பு நாம பேசினப்படி
நீங்க எத்தனை நாளைக்கு வேணுமுன்னாலும் இங்க
இருக்கலாம் இன்னைக்குச் சாப்பாட்டுக்குன்னு வைரப்பன்...
இதோ மீ கோரேங், ரோஜா, புராட்டான்னு நிறைய வாங்கிட்டு
வந்திருக்கான் நாளைக்குக் காலைச் சிற்றுண்டிக்கு ஏதாவது
வாங்கிட்டு வந்துடுவான் சொந்தமா சமைக்கணுமின்னாலும்
அதுக்குள்ள வசதிகளும் இருக்கு ,” என்று கூறிய
கலியப்பெருமாள் சமையல் அறையையும் காண்பித்தார்
மின்சார சமையல் சாதனங்களுடன் அடுப்புக்கரி ,
மண்ணண்ணய் பயன்படுத்து பழைய முறை
அடுப்புகளும் இருந்தன.
“எப்போதாவது மின்சாரத் தடை ஏற்பட்டா எந்தவிதப்
பாதிப்பும் இல்லாம தொடர்ந்து செயலாற்றலாம். இதே போல்
மெழுகுவத்திகளும், பெட்ரோமாக்ஸ் வினக்கும் இருக்குது,”
என்று கலியப்பெருமாள் கூறி, “தம்பி, இதுதான்நிலவறை,” என்று
சுட்டிக்காட்டினார்

“இது ஸ்டோர் ரூம் மாதிரி இருக்கே,” என்று கதிரவன்


கேட்டதற்கு “ஆமா ஆனா, மணிவண்ணன் அப்பா இதை
இடிச்சுக்கட்டிப் பூமிக்கடியில ஓர் அறையைக் கட்டிட்டாரு,”
என்று கூறி அறைக்கதவைத் திறந்தார்.

படிகளுடன் கூடிய அந்த நிலவறை, குகை போல்


காட்சியளித்தது
சுவிட்சைப் போட்டதும் வினக்கொளியில் படிகள்
தெரிந்தன

30
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
“நானும் மணிவண்ணனும் முதல்ல போறோம்,” என்று
கூறிய கலியப்பெருமாள் படிகளில் இறங்கினார்.

சுவரோடு நின்ற அடுக்குகளில் (cabinets) பல


விதமான கோப்புகளும் - (files) பழைய நாளித்ழ்கன் -
சஞ்சிகைகன் போன்றவை அடுக்கடுக்காக வைக்கப்
பட்டிருந்தன. ஒரு பெட்டிக்குன் அங்கப்பனின்
நாட்குறிப்புகளும் (diaries) புகைப்பட ஆல்பம்களும் (photo
albums) இருந்தன. “தம்பி, அங்கப்பன் கடைசிக் காலத்தில்
இந்த அறையைப்பற்றித்தான் என்கிட்ட சொன்னான் உங்க
அப்பாவோட வாழ்க்கை பற்றிய குறிப்புகள் இதுல கிடைக்கும்.
சாவகாசமா இதை எல்லாம் படிச்சுப்பாருங்க. வேண்டியதை
எடுத்து வச்சுக்கலாம் வாங்க, போகலாம்,” என்று கூறிக்
கிள்ம்பினார்.

கதிரவன் மட்டும் நிலவ றையைப் பார்க்க


விரும்பினான்.

‘ராஜாராணி திரைப்படங்கள்ல உள்ள


சுரங்கப்பாதைபோல இருக்கு... பயமா இருக்கு,’ என்று கூறிக்
கலாவும் பத்மாவும் நிலவறையைப் பார்க்க விரும்பவில்லை

“இந்த மாளிகையைப் பார்த்தா... டவுனுல இருந்து


ரொம்பத் தூரத்தில இருக்கிற மாதிரி இருக்கு ஆனா மின்சாரம்,
டெலிபோன் எல்லா வசதிகளும் இருக்கு இது எப்படி?” என்று
கதிரவன் கேட்டதற்குக் கலியப்பெருமாள், “நீங்க பிரதான
சாலையில இருந்து வந்ததால - தூரமா தெரியுது ஆனா, இங்கே
இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில, குவாந்தானுக்குப் போற

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


சாலையில் தொழிற்சாலைகள் உள்ள பகுதி இருக்கு. அங்கே
இருந்து இங்கே மின்சார வசதி நீட்டிக்கப்பட்டிருக்கு” என்று
கலியப்பெருமாள் விளக்கம் தந்தார்

‘குவாந்தான்’ எ ன்ற சொல்லைக்கேட்ட கலா


“குவாந்தாண்னு சொன்ணீங்கனே அப்ப மாரான்?” என்று
ஆவலோடு கேட்டாள்.

“இங்கே இருந்து சுமார் 120-130 கிலோ மீட்டர்


தூரத்திலதான் மரத்தாண்டவர் இருக்காரு” என்று
கலியப்பெருமாள் கூறியபோது கலாவின் கண்கன் படபடத்தன.
அதே வேளையில் ஹாலுக்கு அருகில் இருந்த
வேலைக்காரர்களின் ஓர் அறைக்குள் சென்ற பத்மா “அப்பா”
என்று அலறினாள்.

அவன் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் அந்த


அறைக்குச் சென்றனர். ‘

“என்ன பத்மா என்ன பத்மா” என்று அவன் அருகில்


சென்ற கதிரவனைப் பயத்துடன் இறுக அணைத்துக்
கொண்டாள். அவள் உடல் நடுங்கியது.

“அதோ பாருங்க” னன்று சுட்டிக்காட்டிய திசையில்


அனைவர் பார்வையும் சென்றது

அங்கே மூலையில் ஓர்எலி விழித்துக்கொண்டிருந்தது

அதைப் பார்த்ததும் கதிரவனுக்கு வந்த சிரிப்பை


அடக்க முடியவில்லை”என்ன பத்மா, உன்னைப் பார்த்துத்தான்

32

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


எலி நடுங்கிப் போயிருக்கு....,” என்று கூறி முடிப்பதற்குன்,
“இந்தக் கேலி பேச்செல்லாம் வேணாம் என்னை விடுங்க,”
என்று கதிரவ ன் கையை உதறி வி ட்டுச் சன்றாள். கலா
அவளைத் தொடர்ந்தாள்.

இதற்குள் அங்கு வந்த வைரப்பன், “எப்படியோ இந்த


மாதிரி ஒண்ணு ரெண்டு எலிங்க வந்துடுது. நாளைக்கு இதுக்கு
ஒரு வழி பண்ணிடுறேன்,” என்று கூறி எலியை அடிக்கத்
துடைப்பத்தை எடுத்தான். அதற்குள் அந்த எலி வெளியே ஓடி
மறைந்தது வானத்தில் இடி முழங்கியது “மழை வரும்போல
இருக்கு எல்லாரும் குளிச்சிட்டு உடை மாத்திக்கிட்டு வந்துடுங்க
பிறகு பேசிக்கிட்டு இருக்கலாம்,” என்று கலியப்பெருமாள்
கூறினார்.

சோபாவில் கோபத்துடன் உட்கார்ந்திருந்த பத்மாவைச்


சமாதானப்படுத்தும் நோக்கத்தில், “பத்மா வா ரூமுக்குப் போய்
குளிச்சிட்டு உடை மாத்திக்கிட்டு வருவோம்,” என்று
கன்னத்தைத் தடவி அழைத்தான். சிறு குழந்தையைப் போலச்
சிணுங்கிக்கொண்டே பத்மா கதிரவனைப் பின் தொடர்ந்தாள்.

அவ்விருவரும் மேல் மாடிக்குச் சென்றதைப் பார்த்துக்


கொண்டிருந்த கலியப்பெருமாள், “பத்மா குடும்பத்தைப்பத்தி
உங்களுக்கு நல்லா தெரியுமுல்ல,” என்று மணிவண்ணனைப்
பார்த்துக் கேட்டார். கதிரவனுக்கும் தனக்கும் நீண்ட நாள்
பழக்கம் என்றும், பத்மா அண்மையில்தான் தங்களுக்கு
அறிமுகமானாள் என்றும் மணிவண்ணன் மறுமொழி தந்தான்

நிலவறையில் இருந்த சில ஆல்ப ம்களையும்,

33

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


நாளிதழ்கனையும் புரட்டிப் பார்க்க மணிவண்ணன்
நிலவறைக்குச் சென்றான். வைரப்பனுக்கு உதவி செய்யக் கலா
சமையல் அறைக்குச் சென்றாள்

கலியப்பெருமாள் ஹால் வினக்குகளை எரியவிட்டார்


விலை உயர்ந்த விளக்குகள் தந்த ஒளி, மாளிகைக்கு மேலும்
அழகு சேர்த்தது. மழை பெய்யத் தொடங்கியது. பெய்தது என்று
கூறுவதைவிட வானத்தில் இருந்து நீர் கொட்டியது என்றே
கூறவேண்டும்.

தங்கள் அ றைக்கு வந்த கதிரவனும் பத்மாவும்


சுவிட்சைப் போட்டனர் விளக்கொளி எங்கும் பரவியது

“ரொம்ப அழகான அறை,” என்று புத்மா கூறிக்


கொண்டே ஜன்னலுக்கு அருகில் சென்றாள். மணி ஆறு
என்றாலும் மழையின் காரணமாக வெளியே இருட்டாக
இருந்தது எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

அவனைப் பின்புறமாகத்தழுவி னான் கதிரவ ன்


திரும்பிய பத்மா அவனை அணைத்துக்கொண்டாள் “பத்மா”
என்று மெதுவாகக் கூறி அவளின் செக்கச் சிவந்த உதடுகளில்
முத்தமிட்டான்.

கண்களை மூடி இருந்த பத்மாவுக்குத் தங்களை யாரோ


பார்ப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. கண்களைத்
திறந்தாள். அறைக்கதவு லேசாக ஆடியது போன்றிருந்தது.
கதிரவன் பிடியில் இருந்து பட்டென்று விடுவித்துக்கொண்டாள்.

34
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
“என்ன பத்மா... என்னது?” என்றான்

“கதவை நீங்க சரியா பூட்டலை: யாரோ... வந்தது போல


இருந்தது,” என்றாள்

பத்மாவைத் தன் பிடியில் இருந்து விட்டுக் கதவருகே


சென்றான் கதவு சாத்தப்படாமல் இருந்தது

உள்ளே வந்தபோது கதவை இழுத்து மூடியது கதிரவன்


நினைவுக்கு வந்தது ஆனால், இப்போது கதவு சாத்தப்படாமல்
இருந்ததைக் கவனித்தான்

“என்ன யோசிக்கிறீங்க?” என்றாள். “இல்லை... இல்லை:.


கதவை நான்தான் சரியா சாத்தலைபோல இருக்கு... இங்க யார்
வரப்போறா? எலியைப்பார்த்து::” என்று கூறியவன் பத்மா
கோபித்துக் கொள்வாளே என்று சட்டென்று நிறுத்திவிட்டுக்
கதவை இழுத்து மூடினான்

பத்மாவை மீண்டும் முத்தமிட்ட கதிரவன் காதோரமாக


ஏதோ கூறினான்.

“ம்ஹீம்: கோவில் கல்யாணத்திற்குப் பிறகுதான்:..”


என்று கூறி அவன் கன்னத்தில் லேசாகத் தட்டினாள்.

“Ok... Madam.” என்றான் கதிரவன்.

இருவருக்கும் பதிவுத் திருமணம் நடைபெற்றுவிட்டது.


அடுத்த இரண்டு மாதங்களில் கோவில் திருமணம்
நடைபெறவிருந்தது. இருவரும் நெருங்கிப் பழகினாலும்
பண்பாட்டை மீறவில்லை.

36

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


“நான் போய் குளிச்சுட்டு வந்துடுறேன்,” என்று கூறிக்
குளியல் அறைக்குன் பத்மா சென்றாள்

பிரயாணப் பையைத் (travelling bag) திறந்த கதிரவண்


அதில் இருந்து விஸ்கி போத்தலை எடுத்தான் உடன் கொண்டு
வந்திருந்த பிளாஸ்டிக் கோப்பையில் சிறிது விஸ்கியை
ஊற்றினான் பின்னர்ச் சோடா டின்னைப் பட்டென்று திறந்து
சோடாவைக் கலந்தான்; குடித்தான்; தெம்பாக இருந்தது

மேஜையில் விஸ்கியை வைத்துவிட்டு உடன் கொண்டு


வந்த ஃபைலை (கோப்பு) எடுத்துப் படிக்க ஆரம்பித்தான் அது
ஒரு வழக்குத் தொடர்பான ஃபைல். இரண்டாவது முறையாக
விஸ்கியைச் சிறிது அருந்தினான்.

அப்போது ஏதோ நிழல் மேஜையில் படர்ந்ததுபோல்


அவனுக்குத் தோன்றியது திடுக்கிட்டவனாக மீண்டும்
பார்த்தான்

வேறு ஒன்றுமில்லை... பினாஸ்டிக் கோப்பையை அவன்


வாயருக கொண்டு வந்தபது விளக்கொளிபட்டு அவன் கை
நிழல், மேசையில் படர்ந்தது என்பதை உணர்ந்து தனக்குள்
சிரித்துக்கொண்டான்

மேலும் கொஞ்சம் சோடாவுடன் விஸ்கியைக் கலந்து


அருந்தினான் பெரும்பாலும் அலுவலகத்தில் இருந்து வீடு
திரும்பியதும் தன் தனி அறையில்’ அம ர்ந் து கொஞ்சம்
கொஞ்சமாக விஸ்கியைப் பருகிக்கொண்டே சில வழக்குகள்
பற்றிய குறிப்புகளைச் சுமார் ஒன்றரை மணி நேரத்தில்
எடுத்துவிடுவான்.

37

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


இரண்டாவது முறையாக விஸ்கியைக் குடித்தவுடன்
கதிரவனுக்குத் தலை சுற்றுவதுபோல் இருந்தது அது
அவனுக்கு வியப்பாக இருந்தது பிரயாணக் களைப்பினால்
அவ்வாறு மயக்கம் வருகிறதா என்று யோசித்தான் முடியாது
இரண்டே இரண்டு ‘பெக்’ விஸ்கியைச் சோடாவுடன் கலந்து
குடித்து இப்படி மயக்கம் வருவது என்றால் நாற்காலியில்
இருந்து எழ முயன்றான்.. முடியவில்லை தலை சுற்றியது
அப்படியே மேசைமீது தலையைக் கவிழ்த்தான் கண்கள்
இருண்டன. இறுக மூடிக் கொண்டான் மூடிய கண்களை
அவனால் திறக்க முடியவில்லை

குளியல் அறையில் பத்மா குளித்துக்கொண்டிருந்தாள்


வெந்நீர் தங்கநிகர் உடலைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது
வெளியே மழை நீர் கடுமையாகப் பெய்துகொண்டிருந்தது
குளியல் அறை ஜன்னல் வழியாகத் தெரிந்தது பத்மாவுக்கு
யாரோ தன்னைப்பார்ப்பது போன்றிருந்தது அறையைப்
பார்த்தாள். யாரும் இல்லை. எதுவும் தெரியவில்லை. ஆனாலும்,
பத்மாவுக்கு ஒருவித அச்சமான உணர்வு மேலோங்கியது
நீர்க்குழாயை மூடிவிட்டுத் தொங்கிய துவாலையை எடுத்துத்
தன் உடலை மறைத்துக்கொண்டாள்.

“கதிரவன் கதிரவன்” என்று கூப்பிட்டாள் பதில்


இல்லை. மெதுவாகக் கதவைத் திறந்து எட்டிப்பார்த்தாள்
கதிரவன் மேசைமீது தலைவைத்துப் படுத்திருந்தது தெரிந்தது
மீண்டும் கதிரவன் என்று கூப்பிட்டாள். பதில் இல்லை

பையில் இருந்து புதிய ஆடைகளை அ ணிந்து


கொண்டாள்.

38

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


கதிரவன் தோளில் கை வைத்து “என்னங்க” என்று
கூப்பிட்டாள். லேசாகத் தோளைக் குலுக்கினாள்.

“ம்... எனக்குப்... பத்மா...” என்று உனறலுடன் கதிரவன்


கூறி மௌனமானான்.

‘விஸ்கியை மடக்கென்று குடிச்சிருப்பாரு. மயக்கம்


வந்துட்டுதுபோல இருக்கு’ என்று எண்ணியவனாகக் கீழே
செல்லலாம் என்று கதவை மெதுவாகத் திறந்து வெளியே
வந்தாள்,

நேர் எதிரே இருந்த அறைக்கதவு திறந்து கிடந்தது.

கதவை உடைத்துத்தான் திறக்கமுடியும் என்று


கலியப்பெருமாள் கூறிய கதவு அகலத் திறந்து கிடந்தது.
உள்ளே... யாரோ இருப்பது போல் இருந்தது. கதவை நெம்பித்
திறந்துவிட்டு உள்ளே கலியப்பெருமாளோ வைரப்பனோ
இருக்கிறார்கள் என்று நினைத்த பத்மா சற்றுத்தயங்கி நின்றாள்.
“பத்மா, நான்தான்!’

ஆம். அது கலாவின் குரல்


“கலா, நீயா என்ன செஞ்சுக்கிட்டு இருக்கே…? என்று
அறையை எட்டிப்பார்த்தான்

ஜன்னல் ஓரத்தில் ‘கலா’ நிற்பது தெரிந்தது அவள்


முதுகுப்புறம்தான் தெரிந்தது பத்மா அருகில் சென்றாள்.

‘கலா’ திரும்பினாள்.

39
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
கலா இல்லை உயரமான வாட்டசாட்டமான ஓர் ஆண்.

“பத்மா” என்றான் அவன்.


“ஆ” என்று அலற முயன்ற பத்மாவை இறுக

அணைத்து வாயை மூடினான் அவன். பத்மா திமிர முயன்றாள்


“பத்மா, பத்மா” என்று மெதுவாகக் கூறிய அவன் அவள்
முகத்தைத் தன்பக்கம் திருப்பினான். பத்மா: அவனைப்
பார்த்தாள்... கம்பீரமான முகம்:. அவன் கண்களைப் பார்த்தாள்…

அந்தக் கண்கள் அவள் இதயத்தை ஊடுருவின.


“பத்மா... என் அழகுத் தெய்வமே... என்
பொற்கொடியே...” என்று அவன் காதருகே கூறினான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பத்மா….


அவன் பத்மாவை இறுக அணைத்து அவள்

உதடுகளில் முத்தமிட்டாள்.
அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்த பத்மா

அவனை இறுக அணைத்தாள்.

திறந் ருதகவுமெதுவாகமூடிக்ொண்டது
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
அத்தியாயம் 6

புகைப்பட ஆல்பத்தை மணிவ்ண்ணன்


பார்த்துக்கொண்டிருந்தான், கலியப்பெருமாள் ஓவ்வொரு
படமாக வினக்கம் கூறிக் கொண்டிருந்தார்.

“இதோ... இதுதான் உன் அப்பா அங்கப்பன்...” என்று


கூறி அந்தக் காலத்து புஷ் கோட்டுடன் இருந்த ஒரு படத்தைக்
காண்பித்தார்.

“பார்த்தீங்களா தம்பி*. நீங்க உங்க அப்பா மாதிரியே


இருக்கீங்க*” எள்று கூறினார்.

அன்போடும் அரவணைப்போடும் வளரவேண்டிய


அதச் சின்னஞ்சிறு பருவத்தில் தன்னையும் தன் தாயையும்
புறக்கணித்துக் கண்டவளோடு சுற்றித் திரிந்த அங்கப்பனை
மணிவண்ணனால் மன்னிக்கமுடியவில்லை.

அந்தப் படத்தைப் பார்த்தபோது எந்தவித உணர்ச்சியும்


இல்லாமல் பார்த்தான்.

“தம்பி, இதோ இவதான் மங்களம்!” என்று கூறி ஓரு


படத்தைக் கணிப்பெருமாள் காண்பித்தார்.

அங்கப்பன் அருகில் மங்களம் நின்று


கொண்டிருந்தாள்.

தன் தாயின் வாழ்க்கையை முற்றாய் அழித்த அவளை

41
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
- மங்களத்தை - மணிவண்ணன் பார்க்க விரும்பவில்லை -
ஆனால் பார்த்தான்

பார்த்தவன் திடுக்கிட்டான்.

“என்ன தம்பி, அப்படிப் பார்க்கிறீங்க...? பத்மா


மாதிரியே இல்லை:?”

ஆம் அதே முகச்சாயல் அதே கண்கன் அதே


தோற்றம்

“ஆமா ஆமாம் பத்மா, மங்களம் போன்றே


இருக்கிறாள்,” என்ற வியப்புடன் மணிவண்ணன் கூறினான்.
“அதனால்தான் பத்மாவை நீங்க முதன்முதலாகப் பார்த்தப்ப
அப்படிப் பார்த்தீங்களா?” என்று கேட்டான்.

‘ஆமாம்’ என்பதுபோல தலை ஆட்டிய


கலியப்பெருமாள் “மங்களத்துக்கும் பத்மாவுக்கும் ஏதோ ஒரு
தொடர்பு இருக்குன்னு நினைக்கிறேன்” என்று கூறிய
கலியப்பெருமாள் அடுத்த ஒரு படத்தில் இருந்த ஒருவனைச்
சுட்டிக்காட்டி, “இதோ இவன்தான் மங்களத்தின் தம்பி
பரமநாயகம்” என்றார்

“பரம்... ப ரமநாயகம்,” என்று முணுமுணுத்த


மணிவண்ணன் “ஏதோ கேன்விப்பட்ட பெயரா இருக்கே:. ஓ::
ஆமா: தன்னுடைய வருங்கால மாமனார் அதாவது பத்மாவின்
அப்பா பெயர் பரமநாயகம் என்று கதிரவன் சொன்னது
நினைவில் இருக்கு,” என்றான்.

42
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
புதிருக்கு விடை கிடைத்து விட்டது. மங்களத்தின் தம்பி
மகளதான் பத்மா என்று தெரிந்தது. தற்போது உறுதி செய்யாமல்
பின்னர்ப் பத்மாவிடமே உறுதி செய்துகொள்ளலாம் என்று
முடிவு செய்தனர்.

அங்கப்பன் கலந்துகொண்ட கோவில் தொடர்பான


விழாக்கன், கலை நிகழ்ச்சிகன், பொதுக்கூட்டங்கள் என வேறு
படங்களும் இருந்தன.

தன் மனைவி மரகதம், மகன் மணிவண்ணனுடன்


அ ங்கப்பன் நிற்கும் நான்கு படங்கன்ள் மட்டும் ஒரு கடித
உறையில் இருந்தன அந்தப் படங்களில் மணிவண்ணன் மூன்று
நான்கு வயதுச் சிறுவனாக இருந்தான். மங்களத்தின் தொடர்பு
ஏற்பட்டதும் தன் குடும்பப் படங்களைத் தனியாக ஓர் உறையில்
அங்கப்பன் வைத்திருந்தான் என்பது புலனாகியது.

படங்கனை ஓரளவு பார்த்தபின்னர் நாட்குறிப்புகனைப்


புரட்டினான். தன் பெற்றோரின் கடந்த கால வாழ்வைப்பற்றி
மேலும் தெரிந்துகொள்ள மணிவண்ணனுக்கு ஆவல் மிகுந்தது.

சமையல் அறையில் வைரப்பனுடன் உரையாடிக்


கொண்டே உணவு வகைகளை வாணலியில் சூடேற்றி க்
கொண்டிருந்தான் கலா.

மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. கதிரவனும்,


பத்மாவும் மாடிக்குச் சென்று ஒன்றரை மணி நேரத்திற்கு மேல்
ஆகின்றதே எனக் கலியப்பெருமாள் எண்ணினார்.

அதே வேளையில்....

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


“பத்மா போடு: அதை... பத்மா...” என்று கதிரவன்
கத்தியது கேட்டது மழை பெய்யும் ஒலியையும் மீறிக் கதிரவன்
குரல் கேட்டது.

“போடப்போறியா இல்லையா?” என்று மீண்டும்


கத்தினான். பத்மாவின் குரல் கேட்கவில்லை.

இருவருக்கும் இடையில் ஏதோ தகறாரு... என்று மேல்


மாடிக்குச் செல்ல மணிவண்ணன் படிகளுக்கு அருகில் வந்தான்.
கலியப்பெருமாளும் எழுந்து நின்றார். குரல் ஒலி கேட்டுக்
கலாவும் வைரப்பனும் ஹாலுக்கு வந்தனர்.

படிகளில் பத்மா இறங்கி வந்து கொண்டிருந்தது


தெரிந்தது மேல் தனத்தில் இருந்த கதிரவன் பத்மா கீழே இறங்கி
வந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

முதல் படியில் கால் வைத்துப் படி ஏற நின்ற


மணிவண்ணன் அப்படியே திகைத்து நின்றான். அவன் அருகில்
வந்த கலியப்பெருமாளும் வெறித்து நோக்கினார்

செத்த எலியைத் தூக்கிப் பிடித்தவாறு பத்மா படிகளில்


இறங்கி வந்துகொண்டிருந்தான்.

பத்மாவை எலியுடன் பார்த்த கலா ‘ஆ’ என்று அலற


முயன்று தன் வாயைப் பொத்திக்கொண்டாள் எலியைப் பார்த்து
அலறிய பத்மா அதைக் கையில் அலட்சியமாகத்
தூக்கிப்பிடித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்த வைரப்பன்
அதிர்ச்சி அடைந்தான்.

44

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


கடைசிப் படிக்கு வந்த பத்மா , “பர்த்தீங்களா
என்னைப் பயமுறுத்திய எலியைத் தேடிக் கண்டு பிடிச்சு
அடிச்சுக் கொன்னுட்டேன்,” என்று கூறிச் சிரித்தாள் அந்தச்
சிரிப்பு, சித்தம் கலங்கிய ஒருத்தியின் சிரிப்பாக இருந்தது.

கதிரவன் தட தடவென்று படிகளில் கீழ் இறங்கி

வந்தான்.
“பத்மா.. எலியைப் போடப் போறீயா.. இல்லையா.. ?”

என்று கத்தினான்.
“ஏன் இப்படிக் கத்துறே?” என்று கதிரவளை

முறைத்தாள்.
அந்தப் பார்வை - குரலில் இழைந்தோடிய கரகரப்பு -

கதிரவனைப் பின்னடையச் செய்தன.


வைரப்பன் உடனே பத்மா அருகில் வந்து “அம்மா,

அதை என்கிட்டே கொடுங்க,” என்று பணிவாகக் கேட்டான்


தன் தலையை ஒரு மாதிரியாகச் சாய்த்துக்கொண்டே
அலட்சியமாக எலியை வைரப்ப னிடம் நீட்டினாள்.
வாங்கிக்கொண்ட வைரப்பன், அந்த எலியைப் பார்த்தான்
காலணி அல்லது தடித்த ஒரு கருவியால் எலி அடித்துக்
கொல்லப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது அதன்
உடல் உருக்குலைந்திருந்தது வைரப்பன் ஜன்னலைத் திறந்து
எலியை வீசினான். ஜன்னல் திறக்கப்பட்டபோது மழைச்சாரலின்

வேகம்கடுமையாகஇருந்த ு.
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
“அங்க இங்க ஓடப்பார்த்த எலியைப் பிடிச்சு என்
சிலிப்பர்னா’ல அடி அடின்னு அடிச்சே கொன்னுட்டேன்,” என்று
கூறிய பத்மா எல்லாரையும் பார்த்தாள்

அனவரும் பேசாமல் அவளையே


பார்த்துக்கொண்டிருந்தனர். பத்மா படியில் தடுமாறி னாள்
சாய்ந்தாள் அவனைப் பிடிக்கக் கதிரவன் முயன்றான் ஆனால்
முடியவில்லை அருகில் நின்றுகொண்டிருந்த கலியப்பெருமான்
மீது சாய்ந்தாள் கலியப்பெருமாள் அவளைத் தாங்கிப்பிடித்துக்
கொண்டார் தாங்கிப்பிடித்துக்கொண்ட கலியப்பெருமாளை
கட்டி அணைத்தாள் பத்மா அதைக் கலியப்பெருமாள்
எதி ர்பார்க்கவில்லை அணைத்தவள் கைகள் துவண்டு
விழுந்தன.

பத்மா மூர்ச்சையானான். கதிரவன் அவனைத் தூக்கிச்


சோபாவில் படுக்கவைத்தான்

“பத்மா:. பத்மா உனக்கு என்ன பத்மா?” என்று


கதறினான்.

மணிவண்ணன் கதிரவ ன் தோள்பட்டையில் கை


வைத்துக், “கதிரவன், அமைதியா இரு... பத்மாவுக்கு
ஒண்ணுமில்லை” என்றான்

சமையல் அறைக்கு விரைந்து சென்ற கலா ஒரு


கோப்பையில் குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து பத்மா முகத்தில்
தெளித்தாள் அவள் அருகில் அமர்ந்து “பத்மா.... பத்மா....” என்று
கன்னத்தைத் தட்டினாள்.

46
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
பத்மாவின் இமைகள் துடித்தன. ஆனால் விழிகளைத்
திறக்கவில்லை. ஏதோ மு ணுமு ணுத்தான் பத்மா என்ன
கூறுகிறாள்...? என்ன கூற விரும்புகிறாள்? என்று தெளிவாகக்
கேட்கவில்லை.

கலா, அவன் வாயருகே தன் காதை வைத்துக்கேட்டாள்.

“அவன் அவன் no.... sex. . .no. ..” என


முணுமுணுத்தான் பத்மா.

கலாவின் முகம் மாறியது.

“என்ன பத்மா.... என்ன சொல்றே?” என்று மெதுவாகக்


கேட்டாள்.

பத்மா தன் உடலை முறுக்கிக் கொண்டாள். யாருடனோ


எதுவுடனோ... போராடுவது போல் இருந்தது.

கதிரவன் பத்மாவை அணைத்துப்பிடித்துக்கொண்டு,


“பத்மா... பத்மா:..” என்றான்.

“ஆ” என்று அலறிய பத்மா “கதிரவன்.... கதிரவன்.... நீங்க


எங்கே?” என்று கத்தினாள்.

“பத்மா... இங்கதான் இருக்கேன்... இங்கதான் இருக்கேன்,


என்று பதறினான் கதிரவன்.

தூக்கத்தில் இருந்து எழுவதுபோல் கண்களை அகலத்


திறந்தாள்.

47
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
கதிரவனை ஏறிட்டு நோக்கிய பத்மா... அவனை
அணைத்துப் பிடித்துக்கொண்ழ் அழ ஆரம்பித்தாள்.

ஒரு குழந்தையை அணைத்து முதுகில் தட்டிக்


கொடுப்பது போலப் பத்மாவை அணைத்து முதுகில் தட்டிக்
கொடுத்தான் அழுகை நின்றது. பத்மா லேசாக விம்ம
ஆரம்பித்தாள்.

கலியப்பெருமாள் சிந்தனையில் ஆழ்ந்தார். கலா


பிரமை பிடித்தவள்போல் உணவு மேஜை அருகே அமர்ந்தாள்

மணிவண்ணன் பத்மாவையே பார்த்துக்


கொண்டிருந்தான்.

அங்கே... அந்தக் கூடத்தில் மயான அமைதி நிலவியது.


மாளிகைக்கு வெளியே “சட... சட”வென்று கொட்டும் மழையும்,
ஆற்றின் ஒலியும் மாளிகைக்குள் நிலவிய அந்த மயான
அமைதியைக் கலைக்க முயன்றுகொண்டிருந்தன.

பத்மாவிடமிருந்து வந்த விம்மல் ஒலி சிறிது சிறிதாக


அடங்கியது. அவன் தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

கலியப்பெருமான் எழுந்தார். மணிவண்ணனை நோக்கி


“தம்பி எனக்குத் தெரிந்த ஒரு டாக்டருக்குப் ”ஃபோன்
போடலாம்’ன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?”
என்று கேட்டார்.

“ஆமாம் அதுதான் நல்லது. பத்மாவைப்பற்றி எனக்குப்


பயமா இருக்கு அவளை டாக்டருக்கிட்ட கொண்டு போறது

48
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
அல்லது அவரை இங்க வரச் சொல்றதுதான் நல்லது,” என்று
மணிவண்ணன் கூறினான்.

கலியப்பெருமாள்... ஹாலின் மூலையில் இருந்த


தொலைபேசியை எடுத்தார்.

கருவியில் எந்தவிதச் சத்தமும் இல்லை.

கலியப்பெருமாளின் முகம் மாறியது. “Oh... it is


dead... என்று கலியப்பெருமாள் கூறி டெலிபோன் கருவியை
இரண்டு முறை அழுத்தினார்.

இதற்குள் மணிவண்ணன் அவர் அருகில் சென்று


தொலைபேசிக் கருவியை வாங்கி, காதில் வைத்துப் பார்த்தான்.
எந்த ஒலியும் இல்லை.

“தொலைபேசி செயல்படவில்லை, போன்


போடமுடியாது,” என்று மணிவண்ணன் கூறினான்.

கதிரவன் சட்டென்று எழுந்தான்.

“மிஸ்டர் கலியப்பெருமாள். உண்மையிலேயே


டெலிபோன் செயல்பட்டதா.... அல்லது... போலியா...
வைக்கப்பட்டதா..? என்று கலியப்பெருமாள் அருகில் சென்று,
ஆள்காட்டி விரலை அவர் எதிரே... நீட்டியவாறு கதிரவன்
கேட்டான். அவன் குரல் ‘ஹாலில்’ எதிரொலித்தது. அவன்
கண்கன் சிவந்தன.

“தம்பி, நீங்க என்ன சொல்றீங்க....?” என்று தடுமாறினார்


கலியப்பெருமாள்.

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


“இந்தப் பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்தவர் நீங்க...
எல்லாம் சரியா இருக்கான்னு நீங்கதானே பார்த்துக்கணும். it is
your responsibility Mr.Kaliaperumal....” என்று கதிரவன்
ஏதேதோ கூறத்தொடங்கினான்

“கதிரவன்,” என்று மணிவண்ணன் உரத்தக் குரலில்


கத்தினான்.

கதிரவன் திடுக்கிட்டு நின்றான். கலியப்பெருமாள் இதை


வாய்ப்பாக எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று
ஜன்னல் அருகே சென்று நின்றுகொண்டார்.
“கதிரவன், படிச்ச நீயே இப்படிப் பேசலாமா?
மழையினால் கேபிள் பாதிப்படைஞ்சிருக்கலாம். பத்மாவுக்கு
என்னங்கிறதுதான் இப்ப முக்கியம். ஒருவர் மேல
இன்னொருவர் குற்றம் சாட்டிக்கிட்டு இருக்கிறது - இப்ப
முக்கியம் இல்லை,” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.
கதிரவன் ஒரு கணம் தள்ளாடினான். சோபாவின்
விளிம்பைப் பிடித்தவாறு தரையில் உட்கார்ந்து கால்களுக்கு
இடையில் தன் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டான்.
மணிவண்ணன் அருகில் வந்த கலா அவன் கரத்தை
இறுகப்பற்றிக்கொண்டான் அவன் கரம் நடுங்கியது.
“அத்தான்: எனக்கு என்னவோ பயமா இருக்கு. நாம
இங்கிருந்து” அவ்ளால் முடிக்க முடியவில்லை.
மணிவ ண்ணன் அவ ன் கரத்தை லேசாக
அழுத்திப்பிடித்தான். “எப்போதும் படிப்பியே: கந்த சஷ்டி
கவசம்... அதை இப்ப எடுத்துப்படி....” என்றான்.

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


மெதுவாகத் தலையாட்டினாள். திருமுருகன் பாடல்கள்
கொண்ட நூலில் கந்த சஷ்டி கவசமும் இருந்தது. அவள்
கொண்டு வந்த கைப்பையில் அந்த நூல் இருந்தது.

“வைரப்பன் என்னுடைய hand bag எங்க்,” என்று


கேட்டாள்.

“மேல் மாடியில நீங்க தங்கப் போற ரூம்ல கொண்டு


போய் வச்சுட்டேன் வேணுமா, அம்மா?” என்றான்

“ஆமா” என்று தலையாட்டினாள் வைரப்பன் படிகளை


நோக்கிச் சென்றான். ஜன்னல் வழியாக மணிவ ண்ணன்
வெளியே பார்த்தான். இருட்டில் எதுவுமே தெரியவில்லை.

“இருங்க தம்பி நிலவறையில torch light இருக்கு


எடுத்துக்கிட்டு வந்துடுறேன்,” என்று நிலவறைக்குச் சென்று கை
மின்வினக்குடன் வந்தார்.

மணிவண்ணன் முன் வாயிற்படிக் கதவைத் திறந்தான்.


மழைச்சாரல் அடித்தது. டார்ச் லைட் ஒளி பாய்ச்சப்பட்டது.
எங்கும் வெள்ளம். காரின் டயர்கள் முழுமையாக வெள்ளத்தில்
மூழ்கி இருந்தன.

“தம்பி, வெள்ளம்.: பெருகிட்டது... மழை இன்னமும்


விடாமல் பெய்யுது” என்றார்.

மணிவ ண்ணன் எது வும் கூறாமல் முன் கதவை ச்


சாத்தினான்.

51

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


“மாளிகைக்குப் பின்புறத்திலதானே ஆறு ஓடுது..?”

“ஆமா, தம்பி... பின்பக்கக் கதவு வழியாப் பார்க்கலாம்....”


என்றார்.

சமையல் அறைக்குச் சென்றனர். கதவின் அருகே


வந்தபோது ஆற்றின் ஒலி தெளிவாகக் கேட்டது.

கதவு இடுக்கின் வழியாக நீர் கசிந்துகொண்டிருந்தது.


கலியப்பெருமாள் கதவைத் திறந்தார். டார்ச் லைட் ஒளி
பரவியது. ஆற்றி ல் வெள்ளம் கரை புரண்டு
ஓடிக்கொண்டிருந்தது. மழை நீர் கொட்டிக் கொண்டிருந்தது.
சாரல் அடிக்கவே கலியப்பெருமாள் கதவைப் படீர் என்று
சாத்தினார்.

அப்போது....

மேல் மாடிக்கு வந்த வைரப்பன், அறைக்குள்


நுழைந்தான். கலாவின் கைப்பை மேஜைமீது இருந்தது. அதை
எடுக்கக் கை நீட்டியபோது அ றை விளக்கு பட்டென்று
அணைந்தது. வைரப்பன் இருளில் நின்றான். அவனுக்கு
எதுவுமே தெரியவில்லை. அவனுடன் ... அவனுக்கு மிக மிக
அருகில் யாரோ இருப்பது போன்று இருந்தது.

அவன் விடும் மூச்சே... அவனுக்கு அச்சத்தைத் தந்தது.


ஏதோ ஒரு வேகத்தில் - அந்த இருளில் - கலாவின்
கைப்பையைப் பற்றினான். இருளில் தட்டுத் தடுமாறி அறையில்
இருந்து வெளியேறினான். படிகளுக்கு அருகே வந்தபோது

52

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


பின்புறமாகச் சிரிப்பொலி கேட்டது தன்னையும்
அறியாமல்... “ஐயா.... ஐயா” என்று அலறினான்.

“என்ன... என்ன வைரப்பன்” என்று மணிவண்ணன்


கீழே இருந்து கேட்டான் டார்ச் லைட் ஒளியை மணிவண்ணன்
பாய்ச்சினான். வைரப்பனுக்குத் தைரியம் ஏற்பட்டது.

“அங்கேயே இரு; நான் வர்றேன்” என்று


மணிவண்ணன் கூறியதும் விளக்குகள் மீண்டும் எரி யத்
தொடங்கின. ஒளி எங்கும் பரவியது.
வைரப்பண் விடுவிடெனப் படிகளில் இறங்கி வந்தான்
அவனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
“என்ன வைரப்ப ன்... என்னது?” என்ற ன்
மணிவண்ணன் பதற்றத்துடன்.

“திடீர்னு….. விள்…. விளக்குங்க அணைஞ்சதனாலே


எனக்கு... எனக்குப் பயமாயிட்டது. அதனால.... நான்....,” கூற
முடியாமல் நிறுத்தி னான் வேறு ஒன்றையும் அவன்
கூறவில்லை. யாரோ அறையில் இருந்தது போன்ற உணர்வு
ஏற்பட்டதையோ - சிரிப்பொலி கேட்டதையோ வைரப்பன்
கூறவில்லை.
வைரப்பண் பத்மாவைப் பார்த்தான் அவள் ஆழ்ந்த
உறக்கத்தில் இருந்தாள் அது உறக்கமா அல்லது மயக்கமா எண்று
தெரியவில்லை விளக்குகள் அணைந் தபோது
மணிவண்ணனும் கலியப்பெருமாளும் சமையல் அறையில்
இருந்தனர் கையில் பற்றியிருந்த ‘டார்ச் லை ட்’
மணிவண்ணனுக்குப் பேருதவியாக இருந்தது. விள்க்கு

53

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


ஒளியில் கலா பிரமையுடன் நிற்பது தெரிந்தது. அவன் அருகில்
வந்த மணிவண்ணன் அவளை அணைத்துக்கொண்டான்.
கதிரவன் மீது ஒளியைப் பாய்ச்சினான். தூக்கத்தில் இருந்து
எழுந்தவன் போலக் கதிரவன் எழுந்து, “என்ன, மணி? என்ன...?”
என்று கேட்க, “ஒன்றுமில்லை.... விளக்குங்க அணைஞ்சு
போச்சு,” என்று மறுமொழி கொடுத்தபோதுதான் மேல் மாடியில்
இருந்து வைரப்பன் “ஐயா.... ஐயா....” என்று கூப்பிட்டான்.

சிந்தனையுடன் நாற்காலியில் அமர்ந்திருந்த


கலியப்பெருமாள் “தம்பி மணிவண்ணன்.... விளக்குங்க மீண்டும்
அணைஞ்சு போனாலும் போகலாம். நாம தயாரா
பெட்ரோமாக்ஸ் விளக்குங்க, மெழுகுதிரிங்க, சிம்னி
விளக்குங்க... இதையெல்லாம் ஏற்றி வச்சுட்டா நல்லது,” என்றார்.

அந்த யோசனையை மணிவண்ணன்


ஏற்றுக்கொண்டான். இருவரும் நிலவறைக்குச் சென்றனர். மேல்
மாடியைப் பார்த்த வண்ணம் வைரப்பன் அவர்கனைப் பின்
தொடர்ந்தான்

திருமுருகன் பாடல்கன் தொகுப்பு நூலை எடுத்த கலா


‘கந்தர் சஷ்டி’ கவசத்தை மெதுவாகப் படிக்க ஆரம்பித்தாள்.

பத்மா புரண்டு படுத்தாள். அவளிடமிருந்து முனகல்


சத்தம் வந்தது. கதிரவன் அவளையே பார்த்துகொண்டிருந்தான்.
விளக்குகள் மெழுகுதிரிகள் ஆகியன ஓர் அட்டைப் பெட்டியில்
வைக்கப்பட்டிருந்தன.

54

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


“வைரப்பன், எல்லாத்தையும் சுத்தம் செஞ்சு ‘கரெக்டா’
இந்தப் பெட்டியில் வச்சுடுவான்,” என்று கூறிய
கலியப்பெருமாள், ஹாலுக்கு எடுத்துச் சென்று விளக்குகளை
ஏற்றும்படி வைரப்பனிடம் கூறினார் வைரப்பன் சென்றதும்
“தம்பி எனக்கு மனசு சரியா இல்லை...” என்றார்.

“எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கு. பத்மாவுக்கு


என்ன...? கதிரவனுக்கு என்ன...? இதே கேள்விகளை நான்
கேட்டுக்கிட்டே இருக்கேன் விடைதான் கிடைக்கலை,”
என்றான் மணிவண்ணன். இருவரும் நிலவறையை விட்டு
வெளியே வந்தனர்.

பெட்ரோமாக்ஸ் ஏற்றிக்கொண்டிருந்த வைரப்பன், “சார்


குசினில (சமையல் அறை) தண்ணி ஓட ஆரம்பிச்சிட்டுது...
மண்ணெண்ணெய் எடுக்கப் போனப்பப் பார்த்தேன்,” என்றான்.

மணிவ ண்ணன்... சமைய ல் அ றைக்கு ச் செ ன்று


பார்த்தான். ஆம். கதவு இடுக்கின் வழியாக நீர் உன் புகுந்து
கொண்டிருந்தது

வென்னம் பெருகிக்கொண்டிருக்கிறது என்பது நன்கு


புலனாகியது.

இரண்டு பெட்ரோமாக்ஸ் விளக்குகளை வைரப்பன்


ஏற்றியதும் மின் விளக்குகள் ஒளியோடு கலந்து மாளிகை
ஒளிமயமாக காட்சியளித்தது.

“வெள்ளம் முழுமையாகப் பெருகிடும். அதுக்குள்ள


நான் எப்படியாவது பக்கத்து டவுனுக்குப் போய் உதவிக்கு

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


யாரையாவது அழைச்சுக்கிட்டு வந்துடுறேன்,” என்றான்
வைரப்பன்.

பாடலைப் படித்துக்கொண்டிருந்த கலா படிப்பதை


நிறுத்தி வைரப்பனைப் பார்த்தாள்.

“வைரப்பா, உனக்கு இந்த இடம் நல்லா தெரியும்.


இருந்தாலும்:.” என்று சற்றுத் தயக்கத்துடன் கலியப்பெருமாள்
கூறினார்

“இங்கே இருந்து 300 மீட்டரில் ஆற்றின் இடையே ஒரு


மரப்பாலம் வரும். கொஞ்சம் உயரமான பாலம். பாலம்
வெள்ளத்திலே மூழ்க வாய்ப்பில்லை. பாலத்தின் வழியா
அடுத்தப்பக்கத்துக்குப் போயிட்டா... உயரமான பகுதி வரும்.
அதன் வழியா பக்கத்தில உன்ன டவுனுக்குப் போயிடலாம்,”
என்றான் வைரப்பன்.

அதுவரை பேசாமல் இருந்த கதிரவன், “ஆமா...


வைரப்பன் சொல்றது சரி. டெலிபோன் கட்டாயிட்டுது...,
வெள்ளம் வேற உயர்ந்துக்கிட்டே இருக்கு. வைரப்பன் போய்
உதவி கேக்கிறதுதான் நல்லது. இங்க இருக்கவே எனக்குப்
பிடிக்கலை. பத்மாவைத் தோள்ல சுமந்துக்கிட்டு வெள்ளத்தில
போயிடலாமுன்னு இருக்கு,” என்று படபடவென்று பேசினான்.

“வைரப்பா, வெள்ளத்தோட நிலைமையைப் பார்த்துக்க..


முடியும்ன்னா போ. இல்லைன்னா திரும்பி வந்துடு” என்றான்
மணிவண்ணன். ‘சரிங்க, சரிங்க” என்று தலையாட்டினான்
வைரப்பன். “போற வழியில டெலிபோன் வசதி இருந்தா இந்த

56

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


இடத்தைப்பத்திப் போலிஸ் நிலையத்துக்குத் தெரியப்படுத்திடு”
என்று தொடர்ந்து மணிவண்ணன் கூறினான்.

பக்கத்துக் கிராமங்களில் வெள்ளத்தினால்


பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியும் நடைபெறலாம்.
அவ்வாறு மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களைச் சந்திக்க
நேர்ந்தால் மாளிகை பற்றிக் கூறவும் கலியப்பெருமாள்
ஆலோசனை கூறினார்.

“எப்படியாவது ஒருமணி.... அல்லது ஒன்றரை மணி


நேரத்தில ஒரு நல்ல செய்தியோட நான் வந்துடுறேன்,” என்று
கூறிப் புறப்பட்டான் வைரப்பன்.

“பல வெள்ளத்தையும் மழையையும் கண்டவன் நான்”


என்று கூறிக் குடையும் இல்லாமல் கொட்டும் மழையில் அவன்
சென்றான். செல்வதற்கு முன் கலா அருகில் வந்த வைரப்பன்
ஏதோ கூற “அம்மா...” என்றான். பிறகு எதுவும் கூறாமல் முன்
கதவை நோக்கிச் சென்றான்.

“வைரப்பன்... நான் சொன்னதை ஞாபகம் வச்சுக்க...


போக முடியலேன்னா திரும்பிடு.” என்று மணிவண்ணன்
மீண்டும் கூறினான்.

“சரிங்க...” என்று கூறிக் கதவைத் திறந்தான். வெள்ளம்


விரைந்து உள் புகுந்தது.

அதே சமயத்தில் தாழ்வாக ஒரு ஹெலிகாப்டர் வந்து


கொண்டிருந்த சத்தமும் கேட்டது.

57

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


“அதோ ஒரு ஹெலிகாப்டர்... டார்ச் லைட்டை அடி....”
என்றான் மணிவண்ணன். ஆனால், அதற்குன் ஹெலிகாப்டர்
மாளிகையைத் தாண்டிச் சென்றது,

“வெள்ளம் உள்ள வருதுங்க.... கதவைச் சாத்திடுங்க...


நான் போயிட்டு வர்றேன்,” என்று கூறிக்கொண்டே வைரப்பன்
நடந்தான்.

கதவு சாத்தப்பட்டது. மாளிகையைச் சுற்றி வெள்ளம்


முழங்கால் அளவுக்கு இருந்தது. ஒரே இருட்டு. டார்ச் லைட்
ஒளியோடு செடி கொடிகன் - மரங்களின் அடிப்பாகம் நீரில்
மூழ்கி இருப்பதைப் பார்த்து வெள்ளத்தின் அளவை ஓரளவு
அறிந்து கொண்டு மேடான பகுதியில் நடந்தான். ஆற்றில்
வெள்ளம் கரை புரண்டு செல்வதையும் பார்த்தான்.

மாளிகையை விட்டு வெளியேறியதில் வைரப்பனுக்கு


ஓர் ஆறுதல். பலமுறை மாளிகையைச் சுத்தம் செய்ய
வந்தி ருக்கிற ன். பரும் பாலும் பகல் நேரத்திலேயே
வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பி விடுவான். சுமார்
மூன்று மாதங்களுக்கு முன் பிற்பகலில் தாமதமாக வந்ததால்
இரவு 7.00 மணிக்கு மேல் வேலை செய்ய வேண்டியதாயிற்று.
ஓர் அறையைச் சுத்தம் செய்துவிட்டுக் கதவை இழுத்து
மூடிவிட்டுத் திரும்பிய போது... பூட்டப்பட்டே கிடக்கும்
அறைக்கதவு திறந்து மூடப்பட்டது போல் இருந்தது. அது தன்
மனப்பிரமை என்று நினைத்துப் படிகளில் இறங்கி வந்தபோது
சிரிப்பொலி கேட்டது. பயத்துடன் முன்ஹாலுக்கு
வந்துவிட்டான். அதே வேளையில் சைக்கிளில் வந்த இரு
மலாய் இளைஞர்கள் ஆற்றோரத்தில் நின்று சிரித்துப் பேசிக்

58
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
கொண்டிருந்தது ம் தெரிந்தது அவர்களுடைய சிரிப்பொலிதான்
சற்று முன்னர்க் கேட்ட சிரிப்பொலி என்று தன்னைச்
சமாதானப்படுத்திக்கொண்டான். ஆனால், இன்று அவன் கேட்ட
சிரிப்பொலி…….

கலாவை வைரப்பனுக்கு மிகவும் பிடித்திருந்தது ஒரு


சில மணி நேரங்களில் அவன் மீது அவனுக்கு மரியாதை யும்
அண்பு ம் ஏற்பட்டன. கலாவும் வைரப்பனின் மகள் மீனாட்சி
பற்றி ஆர்வத்துடன் கேட்டாள்.

மாளிகையில் இருந்து புறப்பட்டபோது கலாவிடம்


“அம்மா, மேல் மாடிக்குத் தனியா போயிடாதீங்க” என்று ஏனோ
கூற நினைத்தான் முடியவில்லை

மெதுவாக வெள்ளைத்தில் வைரப் பன் நடந்தான்


எப்படியாவது வெள்ளைத்தைத்தாண்டி உதவி பெற்றுவிடலாம்
என்று வைரப்பன் நினைத்தான் மாளிகைக்குத் திரும்பிப்
போகும்போது, மீட்புக் குழுவி னரோடு போகலாம் என்ற
நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது
* * * * *

“ஹெலிகாப்டர் போனதுலேயிருந்து... வெள்ளைத்தினால்


இந்தப் பகுதி பெதிக்கப்பட்டிருக்குன்னு தெரியுது. மீட்புப்
பணியும் நடைபெறலாம்,” என்று கலியப் பெருமாள் கூறிக்
கொண்டிருந்தார் அப்போது ஷோபாவில் படுத்திருந்த பத்மா
கண் விழித்தாள்

“கதிரவன் கதிரவன்” என்றாள்.

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அருகில் அமர்ந்திருந்த கதிரவன் வேகமாக எழுந்து
பத்மா அருகில் சென்றான் அவனை அணைத்தவாறு பத்மா
லேசாக விம்மினாள்.

“எண்ன பத்மா,,, என்ன?” என்று கதிரவன் கேட்டான்.

கலா அருகில் வந்து “பத்மா” என்றாள்

பத்மா திரும்பிப் பார்த்தாள் சற்று முன் விம்மிய அவள்,


கலாவைப் பார்த்துப் புன்னகை பூத்தாள்!
அவ ள் கண்கள் அந்தக் கண்களைப் பார்க்கக்
கலாவுக்கு அச்சமாக இருந்தது திரும்ப நினைத்தாள்
அடுத்த கணம்....
உட்கார்ந்திருந்த பத்மா பட்டென்று எழுந்து கலாவை
இறுக அணைத்தாள் ஓர் ஆண் ஒரு பெண்ணை வெறியுடன்
தழுவுவதுபோல் ஆரத்தழுவினாள். கலா திமிறினாள்.
முடியவில்லை கலா முகத்தைத் திருப்பி அவள் கன்னத்தில்
முத்தமிட்டாள் உதட்டில் முத்தமிட முயன்றபோது கலா, “பத்ம”
பைசாசமே,” எண்று கத்தியவண்ணம் பத்மாவை பிடித்துத்
தள்ளினாள் தள்ளியவேகத்தில் பத்மா ஷே ப வில் விழுந்தாள்.
விழுந்தவள் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு தலையைச்
சாய்த்து ஓய்யாரமாகக் கலியபெருமாளைப் பார்த்தாள்.

அனைத்தும் ஒருசில விநாடிகளில் நடந்து முடிந்தன


கலாவைப் பத்மா அணைத்தபோது அதைப்பார்த்துக்

எகதனிரவ்றனு'சYிeரs,தit்'sுaகsh் oொw fண்a ecடtioேnaகmூonறgினfrieாndனs'்


60
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
மணிவண்ணன் அதிர்ச்சி அடைந்து, நடப்பன என்ன
என்பதை அறிந்து கொள்ள முடியாமல் திக்பிரமையுடன்
நின்றான். கலா அவன் அருகில் வந்தபோதுதான் அவன் சுய
நினைவு பெற்றான்.

கலியப்பெருமாள் உடல் நடுங்கியது முதியவரான


அவருக்குப் பத்மாவும் கதிரவனும் தங்கள் சுயநினைவில்
இல்லை; ஏதோ ஒரு தீய சக்திக்கு அடிமையாகிவிட்டார்கன்
என்பதை உணர்ந்து கொண்டார்.

''I dont't like this place'' வாங்க நாம மேல் மாடிக்குப்


போயிடுவோம்,” என்று கூறிக்கொண்டே பத்மா எழுந்தாள்

"Ok.As you wish'' என்றான் கதிரவன்.

Good-night folks'' என்று கூறிக்கொண்டே


கதிரவனும் பத்மாவும் கைகோத்துக்கொண்டு மாடிப்படிகளில்
ஏறினர்.

இரண்டு படிகள் ஏறியதும் பத்மா, “Please carry me''


என்று சிறு குழந்தைபோல் சிணுங்கினாள்

சிரித்துக்கொண்டே கதிரவன் பத்மாவை இரு


கரங்களில் சுமந்திகொண் படி ஏநினாள்.

மநனோல் இமாங.:ட்கிுயஇலரு்ாகத”வஎ்குனூபறடாவடீரதி்முஎ:ன.லவு்றடெனளது.ச்காியலதேறபிுட்லமவபோினஒாலளமி்
எ“கேட்
61
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
“வைரப்பன் எப்படியும் இங்க உதவிக்கு யாரையாவுது
அழைச்சுக்கிட்டு வந்துடுவான் அதுவரைக்கும் பொறுமையா
இரு,” என்றான்

கலியப்பெருமாள் எதுவும் கூறாமல் நாற்காலியில் நிலை


குத்தி அமர்ந்திருந்தார்.

62
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
அத்தியாயம் 7

இடுப்பளவு வெள்ளத்தில் வைரப்பன் மெதுவாக நடந்து


கொண்டிருந்தான் மழை பெய்துகொண்டிருந்தது. இடியுடன்
கூடிய மழையாதலால் அவ்வப்போது மின்னல் ‘பளீர்: பளீர்’
என்று மின்னியது மின்னல் ஒளியில் அவ்வப்போது சுற்றுச்
சூழல் தெரிந்தது: பின்னர் இருள் சூழ்ந்தது. ஒவ்வோர்
அடியையும் நிதானமாக எடுத்து வைத்தான் டார்ச் லைட்
ஒளியைப்பாய்ச்சிப் பாலம் தெரிகிறதா எனப்பார்த்தான் பாலம்
தெரிந்தது வெள்ளம் பாலத்தை எட்டிப் பிடிக்க முயன்றதும்
தெரிந்தது எளிதில் பாலத்தைக் கடந்து மேடான அடுத்த
பகுதிக்குச் சென்று விடலாம் என்ற நிம்மதி வைரப்பனுக்கு
ஏற்பட்டது ஒரு கையால் நீரை விலக்கிக்கொண்டு பாலத்தை
நோக்கிச் சென்றான்.

பாலத்தை அடைந்தபோது மறுமுனையில் உயரமான


ஓர் உருவம் நின்று கொண்டிருந்தது தெரிந்தது

திடுக்கிட்ட வைரப்பன் அதே இடத்தில் அப்படியே


நின்றான் அப்போது இடி இடித்து மின்னல் மின்னியது மின்னல்
ஒளியில் அந்த உருவம் தெரிந்தது மின்னல் மறைந்ததும்
இருளில் அந்த உருவம் தெளிவாகத் தெரியவில்லை. டார்ச்
லைட் ஒளியில் அந்த உருவத்தைப் பார்க்க ஏனோ
வைரப்பனுக்குத் துணிவு ஏற்படவில்லை.

“என்ன அப்படியே நின்னுட்டே? என் பேரு மாணிக்கம்

63

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


- ஆமா மாணிக்கம் சும்மா வா” என்று அந்த உருவம் கூறிச்
சிரித்தது.

அந்தச் சிரிப்பு:

மாளி கையில் வைரப்பன் கேட்ட அதே சிரிப்பு..


திரும்பினான் நீரை இரு கைகனாலும் விலக்கிக்கொண்டு
வேகமாக நடந்தான் கால் தடுக்கியது போல் இருந்தது நீரில்
தலை குப்புற வீழ்ந்தான் டார்ச் லைட் வெள்ளத்தில் மறைந்தது
வைரப்பன் வீழ்ந்த பகுதி ஆழமான பகுதி. நீந்த முயன்றான்;
முடியவில்லை அவனுடைய இரு கால்களும் எதிலோ
சிக்கிக்கொண்டன போல் இருந்தது நீரில் இருந்து மேல் நோக்கி
முழுமையாக வெளிவர முடியவில்லை

சிறி தளவு மேல் வருவதும் பின்னர்க் கீழே


இழுக்கப்படுவதுமாக இருந்தது கைகளால் நீரை தாறுமாறாக
அடித்துக்கொண்டு கத்த முயன்றான் சத்தம் வெளிவரவில்லை;
செம்மண் கலந்த நீர் வாயினுள் சென்றது.

தன் இரு கால்களையும் யாரோ இறுகப்பற்றி இருப்பதை


உணர்ந்தான். பிடியி லிருந்து விடுபட முயன்றான்,
முடியவில்லை இரும்பால் இரு கால்களும் இறுகப்
பிணைக்கப்பட்டிருப்பது போல் இருந்தது

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
அத்தியாயம் 8

தன் ஆடையைச் சரி செய்துகொண்டு பத்மா கட்டிலில்


இருந்து இறங்கினாள். கதிரவன் நல்ல உறக்கத்தில்
ஆழ்ந்திருந்தான் பத்மா ஒரு வித மயக்கத்தில் இருந்தான் மேல்
மாடி அறைக்கு வந்ததும் கதிரவன் சிறிதளவு வி ஸ்கி
அருந்தினான் மது அருந்தி பழக்க மில்லாத பத்மா
முதன்முறையாகச் சிறிது விஸ்கி குடித்தாள் அந்த மயக்கம்
விஸ்கி குடித்ததால் ஏற்பட்ட மயக்கமா அல்லது: பத்மாவால்
சிந்திக்க முடியவில்லை. தலை லேசாக வலித்தது

அப்போது.... கதவு மெதுவாகத் திறந்தது. திறக்கப்பட்ட


கதவின் இடைவெளியில் “அவன்” நின்று கொண்டிருந்தது
தெரிந்தது

பத்மா தடுமாறினாள் கட்டில் ஓரத்தில் நி ன்று


கொண்டிருந்த அவன், கதிரவனைத் தட்டி எழுப்ப
முயல்கின்றவள் போல அவன் கால்களை அசைத்தாள்

கதவு முழுமையாகத் திறந்தது

“பத்மா.... என் ஆசைக்கிளியே.... ம்.... வா....,” என்றரள்


தாழ்ந்த குரலில் தன் கைகனை நீட்டியவண்ணம்
பத்மா... நிமிர்ந்தாள்

அவ ன் கண்களைப் பார்த்தாள் அவனுடைய


கரங்களில் கட்டுண்டாள் அவளை அவன் அழைத்துக்கொண்டு

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


நடந்தான் கதவு மெதுவாக மூடிக்கொண்டது கதிரவன் லேசான
குறட்டை ஒலியுடன் தூங்கிக்கொண்டிருந்தான்

மணிவ ண்ணன் தன் தந்தையின் நாள்குறிப்பைப்


பார்த்துக் காண்டிருந்தான் 1941-ஆம் ஆண்டு டயரி
முழுமையாகக் காலியாக இருந்தது. எதுவும் எழுதப்படவில்லை
அடுத்தடுத்த ஆண்டுகளில் சில நாள்கள் எழுதப்பட்டிருந்தன
சில நாள்கள் விடுபட்டிருந்தன பல இடங்களில் கை எழுத்துப்
புரியவில்லை பிறகு சாவகாசம்கப் பார்க்கலாம் என்று
பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தான்

யாருக்கும் பசியோ சாப்பிட வேண்டும் என்ற


எண்ணமோ வரவில்லை.

“ஒரு கப் காஃபி குடிக்கலாம் போல இருக்கு, “ என்று


கலியப்பெருமாள் கூறியதும், கலா சமையல் அறைக்குக் காபி
கலக்கச் சென்றாள். உடன் கலியப்பெருமாளும் துணைக்குச்
சென்றார். பின் பக்கக் கதவில் ஆற்று வெள்ளம் மோதுவது
நன்கு கேட்டது. சமையல் அறையில் வெள்ளம் பருகத்
தொடங்கி இருந்தது.

நிலைமை மோசமாகிக்கொண்டிருப்பது தெளிவாகத்


தெரிந்தது

“வைரப்பன் போய் ஒரு மணி நேரத்துக்கு மேலாகுதே:.”


என்றாள் கலா விரைவில் உதவியோடு வைரப் பன்
வரமாட்டானா என்ற துடிப்பு அவள் குரலில் இழைந்தோடியது.

“வெள்ளத்தைக் கடந்து போறது சாமான்யமானது

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


இல்லேம்மா, வைரப்பன் கெட்டிக்காரன், வந்துடுவான்,” என்றார்
கலியப்பெருமான்

அப்போது முன்பக்கக்கதவு தட்டப்பட்டது போன்ற


ஒலி கேட்டது

ஹாலில் அமர்ந்திருந்த மணிவண்ணன், வெள்ளம்


மோது கின்ற ஒலிய அ ல்லது யாராவது கதவைப்
பலமாகத்தட்டும் ஒலியா என்று ஒரு கணம் யோசித்தான்.
மீண்டும் அதே ஒலி கேட்டது. மணிவண்ணன் விரைவாகச்
சென்று கதவைத் திறந்தான்

வெள்ளம் வேகமாக உள்ளே பாய்ந்தது. வெள்ளத்துடன்


வைரப்பனும் வந்து மோதினான். மோதப்பட்ட மணிவண்ணன்
மல்லாந்த நிலையில் தரையில் விழுந்தான். அனைத்தும் ஓரிரு
விநாடிகளில் நடந்தன.

‘அத்தான்’ என்ற அலறலுடன் கலா பாய்ந்து வந்தாள்.


கையில் பிடித்திருந்த கோப்பையை அப்படியே கீழே
போட்டுவிட்டுக் கலியப்பெருமாள் ஓடி வந்தார். மணிவண்ணன்
தட்டுத்தடுமாறி எழுந்தான். முதலில் அவன் வைரப்பனைத்தான்
பார்த்தான்.

திறந்த கதவின் வழியாக வெள்ளம் குபு குபு என்று உள்


புகுவதைக் கண்ட கலியப்பெருமாள் கதவைச் சாத்த முயன்றார்;
முடியவில்லை. மணிவண்ணன் எழுந்து இருவருமாகக்
கதவைச் சாத்தினர்

கலா, வைரப்பன் அருகில் வந்தாள். “வைரப்பன்,

68

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


வை ரப்பன்” என்று உடலை அசைத்தாள். மெதுவாகக்
கண்களைத் திறந்தான் வைரப்பன்.

‘அம்ம ’ என்று கூறியவன் கலியப்பெருமாளைப்


பார்த்தான் அருகில் வரும்படி சைகை காட்டினான்.

கலியப்பெருமாள் தரையில் அவன் அருகே


அமர்ந்தார்.

வைரப்பன் ஏதோ கூறினான் தெளிவ கக்


கேட்கவில்லை கலியப்பெருமாள் குனிந்து கேட்டார்
மணிவண்ணனும் உன்னிப்பாகக் கேட்டான்
“மாணிக்கம் - பேய்” என்று வைரப்பன்
முணுமுணுத்தான்
“மாணிக்கம் - மாணிக்கமா?” என்று அதிர்ச்சியுடன்
கலியப்பெருமாள் கேட்டார்.

“ஆ ஆமா... என்னை...வெள்ளத்தில மூழ்


மூழ்கடிச்சுட்டான் மாணிக்கம்,” என்று கண்கனை
மூடிக்கொண்டே கூறிய வைரப்பன் மெனனமானான்
வைரப்பனிடமிருந்து எந்தவிதச் சத்தமும் வரவில்லை வாயில்
இருந்து ரத்தம் குபுகுபுவென்று வெளியாயிற்று.
மாணிக்கம் பற்றிக் கூறத் தன் இறுதி மூச்சைப் பிடித்துக்
கொண்டிருந்தவன் போலக் கூறி முடித்ததும் உயிர் துறந்தான்
வைரப்பன்.

எழுந்து நின்ற கலா விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.


வைரப்பனின் மரணத்தை அவள் எதிர்பார்க்கவில்லை

69

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


மணிவண்ணன் கலியப்பெருமாளை நோக்கி, “யார்
அந்த மாணிக்கம்?” என்றான்.

கலியப்பெருமாள் பதில் கூறாமல் இருந்தார்.

அவ ரையே மணிவ ண்ணன் பார்த்துக்


கொண்டிருந்தான் மீண்டும் அதே கேள்வியை அவரிடம்
கேட்டான்

தலைநிமிர்ந்த கலியப்பெருமாள் “தம்பி, இதை நான்


சொல்லக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன். ஆனா
சொல்லவேண்டிய நிலைமை வந்துட்டுது. உங்க அப்பாவினால்
கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு மடிஞ்சவன்தான்
மாணிக்கம்,” என்றார்.

விம்மலுக்கு இடையே ‘ஆ’ என்றாள் கலா.

“என்ன சொன்ணீங்க? அப்ப வினால கொலை


செய்யப்பட்டவனா மாணிக்கம்? ஏன்:. ஏன் அவரு இந்தக்
கொலையைச் செஞ்சாரு?”

70

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அத்தியாயம் 9

தன் அழகாலும் சாகசத்தாலும் அங்கப்பனைத் தன்


வசமாக்கிக் கொண்டான் மங்களம் காமத்துக்கு அடிமையாகி
மதி இழந்து மங்களத்தின் காலடியே தஞ்சமென அவன்
கிடந்தான். “நீங்கள் என் உலகம்; நீங்கள் என் உயிர்; எனக்கு
வாழ்வு தந்த நீங்கள் என் தெய்வம்,” என்றெல்லாம் மங்களம்
கூறியதை அங்கப்பன் உண்மை மொழிகள் என நம்பினான்
ஆனால், மங்களத்திற்கு இருந்த ஒரே குறிக்கோள் -
அங்கப்பனின் பணம் - சொத்து அனைத்தையும் அடைதல்

உடல் இன்பத்திற் கு அவள் சிலரை நாடினாள்.


அவர்களிலே ஒருவன்தான் மாணிக்கம்.

செல்வம் பெருகுகின்றபோது வள்மான வாழ்வு


வந்தடைகின்றபோது ஒரு சிலரே நிதானத்தை இழக்காமல்,
கடந்த கால வாழ்வை மறக்காமல் இருப்பார்கள் பலர்
மறந்துவிட்டு ஆட்டம் போடுவார்கள் அந்த
நிலைமைக்குத்தான் அங்கப்பன் ஆனானான்.

குடித்துக் கும்மாளம் போடுவதற்குச் சில நண்பர்கள்;


விபச்சாரிகளை அறிமுகம் செய்து வைக்கச் சில நண்பர்கள்;
சூதாட்டம் ஆடச் சில நண்பர்கள் என நண்பர் வட்டம்
வளர்ந்தது.

ஓர் உண்டுறை விடுதியில் (hotel) மானேஜராக

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


இருந்தவன் மாணிக்கம் அந்தப் பிரபலமான ஹோட்டலில்
நடைபெற்ற ஒரு விருந்தின்போதுதான் அவன் அங்கப்பனுக்கு
அறிமுகமானான் அந்த அறிமுகத்தால் பல பெண்களும்
அங்கப்பனுக்கு அறிமுகமாயினர்

பல பெண்கனோடு தொடர்பு கொண்டவன் மாணிக்கம்


அவனுடைய கண்கள் சற்று நீல நிறமாகவும் எவரையும்
மயக்கும் தன்மை உடையதாகவும் இருந்தன. மாந்திசகத்தின்
மூலம கப் புருவத்தில் மை தீட்டிப் பண்கனை மயக்கு
கின்றானா அல்லது ஹிப்னோட்டீஸம் (hypnotism) என்ற
முறையில் பெண்களை ஈர்க்கின்றானா என்று திட்டவட்டமாகக்
கூறமுடியாத நிலை எப்படி இருப்பினும், அடைய நினைத்த
மங்கையரை அவன் எளிதில் அடைந்தான். அங்கப்பனுக்கும்
அவர்களில் சிலரை அறிமுகம் செய்து வைத்தான்.

இதற்கிடையில் ஆற்றோரத்தில் அமைந்த மாளிகையை


அங்கப்பன் வாங்கினான். மிகவும் ஆடம்பரமாக house-
warming ‘ ஐக்- கிரகப்பிரவேசத்தை நடத்தினான் பல
பிரமுகர்களும், நண்பர்களும் புதுமனை புகுவிழா விருந்திலே
கலந்துகொண்டனர் காஞ்சிபுரம் பட்டுப்புடவை உடுத்தி விலை
உயர்ந்த அணிகலன்களுடன் ஒரு தேவதைபோல் மங்களம்
காட்சியளித்தாள். முதன் முறையாக மாணிக்கம் அவள்ப்
பார்த்தான் மங்களத்தின் அழகுக்கு அ டிமையானான்
அவளிடம் ஒரு சில நிமிடங்கள் பேசினான். அவள் அவனுக்கு
அடிமையானான். அடுத்த நாளே இருவரும் தனிமையில்
சந்தித்தனர்

72
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
நான்கள்: வாரங்களாகி….மாதங்களாகின. மாணிக்கம் -
மங்களம் உறவு ஆழமாகத் தொடர்ந்தது

வியாபார நிமித்தமாகவும் வேறு அலுவல்கள்


காரணமாகவும் சிங்கப்பூர், பினாங்கு, கோலாலம்பூர் எனப் பல
நகர்களுக்கு அங்கப்பன் சென்று திரும்ப இரண்டு மூன்று
தினங்கள் ஆகும். அப்பொதெல்லாம் மாணிக்கம் மாளிகையில்
வந்து தங்கிவிடுவான்

அங்கப்பனுக்குத் துளியும் சந்தேகம் ஏற்படாமல்


மங்களம் கவனித்துக்கொண்டாள்.

கலியப்பெருமாள், அங்கப்பனை விட்டு விலகிச்


சென்றபின் அங்கப்பன் தன் கம்பேனியின் நிர்வாகப்
பொறுப்பை ஆங்கிலோ இந்தியப் பெண் ரோஸ்லின்
என்பவளிடம் ஒப்படைத்தான். நாற்பது வயதுக்கும் மேலான
ரோஸ்லின் நன்கு ஆங்கிலம் கற்று மிகத் திறமையாக நிர்வாகம்
செய்ததால், அ னைத்து ப் பொறுப்புகளையும் அவ ளிடம்
தந்ததோடு அவள்மீது முழு நம்பிக்கையும் அவன்
வைத்திருந்தான். நம்பிக்கையோடு ஒருவித மரியாதையும்
அவனுக்கு இருந்தது. அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலோ
இந்தியர்களை மற்றத் தமிழர்கள் “சட்டைக்காரர்கள்” என்று
அழைப்பார்கள் மற்றவர்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள்
என்ற எண்ணத்து டன் அவ ர்கன் ஆ ங்கிலே யர்கனைப்
போலவே தங்கள் வாழ்க்கை முறையை
அமைத்துக்கொண்டார்கள் ஆனால், ரோஸ்லின், “என் அப்ப்ன்
ஒரு இங்கிலீஸ்காரனாக இருக்கலாம். ஆனா, என் அம்மா ஒரு
தமிழச்சி அதனால், நான் ஒரு தமிழச்சி - தமிழ்ப் பண்போடு
வாழ விரும்புகிறேன்,” என்றாள்

73
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
வேலையில் அமர்ந்த இரண்டு தினங்களுக்குப் பிறகு,
ரோஸ்லினுடைய சிவந்த நிறமும் வாளிப்பான உடற்கட்டழகும்
அங்கப்பனை மயக்கின. ஆங்கிலப் பெண் போல் இருந்த
அவள் தன் இச்சைக்கு இணங்குவான் என நினைத்து அவளை
நெருங்கியபோதுதான், “நான் ஒரு தமிழச்சியாகத் தமிழ்ப்
பண்போடு வாழ விரும்புகிறேன்” என்று அவள் கூறினாள்.
அன்றிலிருந்துதான் அங்கப்பனுக்கு அவளிடம் மிகுந்த
மரியாதை ஏற்பட்டது

திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்த ரோஸ்லின்


ஓய்வு கிடைத்த போதெல்லாம் ஒரு குழந்தைகள் அநாதை
விடுதிக்குச் சென்று சேவை செய்வாள். அங்கப்பனிடமிருந்து
அந்த விடுதிக்கு என நிதி உதவியும் பெற்றிருக்கிறாள்.

ரோஸ்லின்தான், மங்களம் - மாணிக்கம் உறவு பற்றிக்


கூறினாள் உறவு பற்றிக் கூறினாள் என்பதைவிட மங்களம் -
அங்கப்பன் வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து மாணிக்கம்
கணக்கிற்கு ஆயிரம் ஆயிரமாகப் ப ணம்
மாறிக்கொண்டிருந்ததைப் பற்றி ரோஸ்லின் கூறினாள் என்று
கூறுவதே பொருத்தமானது.

கணக்குகனைச் சரி பர்த்தபே துதான் அந்த


முறைகேடு நடந்த விஷயத்தை அறிந்து கொண்டதாகவும்
வங்கியோடு தொடர்பு கொண்டு அதை உறுதிப்படுத்திக்
கொண்டதாகவும் தெரியப்படுத்தினான்.

அப்பே துதான் அங்கப்பன் தான் ஏமாற்றப்பட்டு


விட்டதை உணர்ந்தான்

74
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
சொத்துகள் - வங்கிகளில் இருக்கும் பணம் ஆகிய
அனைத்தும் அங்கப்பன் - மங்களம் இருவர் பெயராலும்
இருந்தன மற்றொருவரின் கையெழுத்து இல்லாமலேயே
பணத்தைப் பெறலாம்; வேறு கணக்குக்கு மாற்றலாம்.....
அல்லது

1952-ஆம் ஆண்டு பினாங்கில் நடைப்ற்ற ஒரு


கொலை வழக்கு அங்கப்பனுக்கு நினைவுக்கு வந்தது. சொத்தை
அபகரிக்க எண்ணிய ஒரு சீன மாது தன் கன்னக் காதலனுடன்
திட்டமிட்டுக் கணவனைக் கொலை செய்த வழக்கு அன்று
பரபரப்பை உண்டு பண்ணியயிருந்தது.

தானும் கொலை செய்யப்படலாம் என்று அங்கப்பன்


எண்ணியபோது வேதனை அழுத்தியது. எவளுக்காகத் தன்
அருமை மனைவியையும் ஒரே மகனையும் வீட்டை விட்டு
விரட்டினானோ... அவன் இப்போது மாற்றான் மடியில் தலை
சாய்த்ததோடு கணவன் தலையைத் துண்டாடவும்
துணிந்துவிட்டான்.

ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு


அங்கப்பனுக்கு ஞானோதயம் பிறந்தது . மனைவி
மரகதத்தையும் மகனையும் நினைந்து கல ங்கினான்.
வழிகாட்டிகளாகவும் நண்பர்களாகவும் இருந்த
கலியப்பெருமாளையும் காதர் மைதீனையும் நினைவு கூர்ந்து
வருந்தினான்.

கடந்த ஆறு ஏழு மாதங்களாக மங்களம்


தன்னிடமிருந்து’ ஒதுங்கி இருந்ததற்கன காரணமும்
புலனாகியது.

75
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
மாளிகைக்குச் சென்று மங்களத்திடம் மாணிக்கம் பற்றிக்
கேட்கலாமா எனநினைத்தான் பயனில்லை;அழுவாள்அல்லது
சீறிப்பாய்வாள் அல்லது வீட்டை விட்டு உடனே கிளம்பி
விடுவாள் மங்களத்தின் முன் அங்கப்பன் பலமுறை செயல்
இழந்து நின்றிருக்கிறான் எனவே, மங்களத்தைப் பார்க்க
அங்கப்பன் விரும்பவில்லை ஒன்று அவன் உணர்ச்சி
வயப்படுவான் அல்லது கோபம் கொன்வான்.

சுமார் ஒரு மணி நேரம் தன் தனி அறையில் அங்கப்பன்


அமர்ந்திருந்து சிந்தித்தான் இறுதியாக ரோஸலினை
அழைத்தான்.

“ரோஸலின், வீட்டுக்குப் போன் போடு. தோட்டத்து


ஆபீஸ்ல இருந்து நான் போன் போட்டதாவும் போன்
கிடைக்கலைன்னும், அதனாலதான் நீ இப்பப் போன்
போடுறதாவும் சொல்லு வேலைத் தொடர்பா பினாங்குக்குப்
போறதாகவும் திரும்பி வர மூணு நாளாகும்னும் நான் சொல்லச்
சொன்னதாகச் சொல்லு,” என்றான் அங்கப்பன்.

ரோஸலின் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்

“அதோட சில பொறுப்புகனை மங்கனத்தோட தம்பி


பரம நாயகத்துக்கிட்ட கொடுத்திருந்தேன் தோட்டத்தில உன்ன
சிண்ன office’ல அவன் இருக்கான் முடிஞ்சா நாளைக்குப் போய்
அங்குள்ள கணக்குகளையும் பார்க்கணும்,” என்று கூறிய
அங்கப்பன், நாற்காலியில் இருந்து எழுந்தான்

அண்றைய சூழிநிலையில் செல்வர்களாகவும்


பிரமுகர்கனகவும் இருந்த அங்கப்பன் போன்றவர்களுக்கு இரு

76

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


வேறுபட்ட துறையினரிடம் செல்வக்கும் ஆதிக்கமும்
இருந்தன. ஒன்று, காவல் துறையினர். இரண்டு, ரகசியச் சங்கக்
குண்டர்கன். தங்களுடைய தில்லு முல்லு காரியங்களுக்கும்
சட்ட விரோதச் செயல்களுக்கும் அவர்களுடைய உதவியும்
நட்பும் இவர்களுக்குத் தேவைப்பட்டன. இவர்களுடைய பணம்
அவர்களுக்குத் தேவைப்பட்டது.

அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அ ங்கப்பன்


குவாந்தானுக்கு வந்து தன் சீன நண்பனான Ah Hai-யைச்
சந்தித்தான்

அந்தச் சந்திப்புச் சுமார் இரண்டரை மணி நேரம்


நீடித்தது. பின்னர் முன் சென்றிராத ஒரு ஹோட்டலுக்குச் சென்று
ஓர் அறை எடுத்துத் தங்கினான் விடிய விடிய மது
அருந்தினான்

காலை 700 மணிக்கு Ah Hai தொலைபேசி வழி


தொடர்பு கொண்டான். அவன் கொடுத்த தகவல்: “மாளிகையின்
முன் - -763 என்ற எண் கொண்ட கார் இரவு முழுமையும்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை என்னுடைய ஆட்கள்
பார்த்திருக்கிறார்கன்.”

அந்தக் கார் மாணிக்கத்தின் கார் என்று


அங்கப்பனுக்குத் தெரியும்.

காலை மணி ஒன்பது.

அன்பு முத்தங்களுக்குப் பிறகு மாணிக்கம்


மங்கனத்திடமிருந்து விடை பற்றான். வாயிற்படிவரை

77
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
வழியனுப்பி வைத்தாள் வேலைக்காரப் பெண் முத்துலட்சுமி
எதையும் கவனிக்காமல் தன் வேலையைப் பார்த்துக்
கொண்டிருந்தாள் அவள் அங்கே இருக்கிறாள் என்பது பற்றி
மங்களம் கவலைப்படவே இல்லை.

மாணிக்கத்தின் கார் மாளிகைச்சாலையில் இருந்து


திரும்பி, பிரதான சாலைக்குச் சென்றபோது ஒரு சீனன்
சைக்கிளில் குறுக்கே வந்தான் மாணிக்கம் காரை வளைத்தான்.
ஆனால், கார் சைக்கினை மோதியது சைக்கிளில் வந்த சீனன்
லாவகமாக அடிபடாமல் புல் தரையில் குதித்தான் மாணிக்கம்
பதறிப் போய் காரை நிறுத்திவிட்டுக் காரில் இருந்து
இறங்கினான். சைக்கிள் வண்டியில் (bicycle) இருந்து
குதித்தவன் எழுந்தான் சீனத்தில் அசிங்கமான மொழியில்
திட்டியவாறு மாணிக்கத்தை உடி உதைத்தான்அதே கணத்தில்
மரங்களுக்கிடையே மறைந்திருந்த ஐந்து சீனர்கன் பாய்ந்து
வந்தனர் மாணிக்கம் காருக்குள் தள்ளப்பட்டாள் சரமாரியான
குத்து கனால் மாணி க்கம் மூர்ச் சையனான். எதிரே
நிறுத்தப்பட்டிருந்த Morris Minor - காரின் பின்புறம் சைக்கிள்
வைக்கப்பட்டது ஆறு பேரில் இருவர் காரில் ஏறினர் நால்வர்
மாணிக்கம் காரில் அமர்ந்தனர் இரு கரங்களிலும் பச்சைக்
குறிகள் உடைய் சீன இனைஞன், கார் பந்தயத்தில் காரைச்
செலுத்துவது போலக் காரைச் செலுத்தினான்

முற்பகல் மணி பதினொன்று அங்கப்பனுக்குத் தலை


‘விண் விண்’ என்று வலித்தது இரவு முழுமையும் பீர், விஸ்கி
என்று குடித்ததாலும், தூங்காமல் இருந்ததாலும் தலை வெடிப்பது
போல் இருந்தது.

78
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
டெலிபோன் ஒலி: Ah Hai - பேசினான்.

“Semua suda siyap” - everything is ready” என்றான்


எல்லாவற்றையும் முடித்துவிட்டோம்; எல்லாம் தயாராக
இருக்கிறது; என்று மலாய் மொழியிலும் ஆங்கிலத்திலும்
கூறினான். எந்த இடத்தில் “எல்லாம் தயாராக இருக்கிறது”
என்றும் கூறினான்.
அந்த இடம் ...

சாலையில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் அடர்ந்த


காட்டின் நடுவே... ஓர் ஓடையின் அருகே....
இரத்த வெள்ளத்தில் மாணிக்கம் கிடந்தான்.

“டேய் மாணிக்கம்....” என்று குரல் கேட்டுப் பொறுக்க


முடியாத வேதனையுடன் தன் கண்களைத் திறந்தான்.

எதிரே அங்கப்பன் நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு


எல்லாம் புரிந்து விட்டது.... தன் இரு கைகளைத் தூக்க
முடியாமல் உயரே தூக்கினான்
“என்னை மன்னிச்சிடு... I am.... sorry....” என்றான்.
அருகில் நின்றுகொண்டிருந்த சீனன் ஓர் அரிவாளை
வைத்திருந்தான். அதை அங்கப்பன் வாங்கினான்.
மாணிக்கம்... “சார்... சார்....” “என்னை.... என்னை....
ஒண்ணும் செஞ்சிடாதீங்க....” என்று கெஞ்சினான்.

ஒரே வீச்சு. மாணிக்கம் அலறினான். தூக்கிய கைகள்


வெட்டப்பட்டு வீழ்ந்தன.

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அங்கப்பன், வெறி பிடித்தவனாக மாணிக்கத்தின்
உடலைக் கண்டம் துண்டமாக வெட்டினான்.

ரகசியச் சங்கக் குண்டர்கள் தலைவன் “Ah Hai”


அங்கப்பனை அழைத்து... மெதுவாக அரிவாளை வாங்கித்
தூக்கி எறிந்தான்.

மயங்கிய நிலையில் இருந்த அங்கப்பனைத் தன் காரில்


ஏற்றி அவன் தங்கி இருந்த ஹோட்டலுக்கே அழைத்துச்
சென்றான் அங்கப்பனுடைய கார் பத்திரமாக அதே
ஹோட்டலுக்குக் கொண்டு வரப்பட்டது.

அன்று முழுமையும் அங்கப்பன் ஏதோ ஒரு


மயக்கத்தில் படுத்திருந்தான். அந்த மயக்கத்தில் நிழல் போல்
மனைவி மரகதம் வந்தாள்.... மகன் மாணிக்கம் தவழ்ந்து
வந்தான் மங்கனம் ஒய்யாரமாக அசைந்து வந்தான். மாணிக்கம்
அவளை அணைத்து முத்தமிட்டான்.... அங்கப்பன்...
மாணிக்கத்தை அங்குலம் அங்குலமாக வெட்டினான்....!

இந்தக் காட்சிகள் தோன்றித் தோன்றி மறைந்தன.

இரவு மணி ஏழு.....

மங்களம் மாணிக்கம் வேலை செய்யும்


ஹோட்டலுக்குப் போன் போட்டாள். அவன் அன்று வேலைக்கு
வரவில்லை என்று கூறப்பட்டது. மருத்துவ விடுப்பு (medical
leave) எடுத்துக் கொன்னப்போவதாக முன்தினம் கூறியிருந்த
மாணிக்கம், நேராக ஹோட்டலுக்குப் போவதாகவும் பிறகு
மாளிகைக்கு வந்துவிடுவதாகவும் கூறியிருந்தான். என்ன

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


காரணம் என்று அவளுக்குப் புரியவில்லை..குளித்துவிட்டு
உடை மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தவனாகக் குளியல்
அறைக்குச் சென்றாள்.

குளித்துக்கொண்டிருந்தபோது “மங்கனம்” என்று


மாணிக்கம் அழைத்த குரல் கேட்டது.

“ஓ. வந்துட்டீங்களா,” என்று குளியல் அறைக் கதவைத்


திறந்து கேட்டாள்.

யாரும் இல்லை. ‘ம்.... நான் அவனையே


நினைச்சுக்கிட்டே இருந்ததால் அவன் வந்து கூப்பிட்டது போல
இருக்கு,’ என்று தன்னைச் சமாதானம் செய்துகொண்டாள்.

ஆனால்... அவளுக்கு என்னவோ ஒரு மாதிரியாக


இருந்தது. விரைவாகக் குளித்துவிட்டு உடைகளை மாற்றிக்
கொண்டாள்.

அறைக்கு வெளிய வந்து “லட்சுமி” என்று


கூப்பிட்டாள். சமையல் அறையில் இருந்த முத்துலட்சுமி
படிக்கட்டுகளுக்கு அருகில் ஓடிவந்து, “என்ன அம்மா?”
என்றாள்.

“நாயகம் வந்துட்டானா?” என்றான்.

“இல்லை அம்மா” என்று பதில் வந்தது

தன் தம்பி பரமநாயகம் முற்றும் மாறிவிட்டான்


என்ப தை நினைத்துப்ப ர்த்தபே து... மங்கனத்திற்கு

81

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


வேதனையாக இருந்தது. தமிழ் நாட்டில் இருந்து அவனை
வரவழைத்து இந்த நாட்டிலே ஒரு வாழ்வு தந்ததையெல்லாம்
யாரோ ஒரு பெண்ணுக்காக அவன் மறந்துவிட்டதை....

அவள் தன் தம்பியைப்பற்றி எண்ணிக் கொண்டிருந்த


போது இரண்டு கார்கள் கிறீச்சிட்ட ஒலியுடன் மாளிகை முன்
வந்து நின்றன. அடுத்த கணம் கதவு படபடவெ ன்று
தட்டப்படுவதும் காலால் உதைக்கப்படுவதும் கேட்டது.

“Buka Lakas buka” - (திற. விரைவாகத் திற) என்று


மலாய் மொழியில் கூறப்படுவதும் கேட்டது.

அப்படி முன்பு நடந்ததே இல்லை. வேகமாக மங்களம்


கீழே இறங்கி வந்தாள்.
வேலைக்காரப் பெண் முத்துலட்சுமி திகிலுடன் நின்று
கொண்டிருந்தாள்.

கதவு தொடர்ந்து தட்டப்பட்டது - உதைக்கப்பட்டது.


“Who is that....? What do you want?”

பதில் வந்தது. “Buka... buka” (திற திற)

வந்தவர்கள் கதவை உடைத்துக்கொண்டு வந்து


விடுவார்கள் என்பது புலனாகியது.

மங்களம் தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத்திறந்தாள்.

மூன்று சீனர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.


அவர்களுக்குப் பின்னால் நாலைந்து பேர்.

82

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அவர்களுக்கெல்லாம் தலைவன் போலத்
தோன்றியவன் உன்னே நுழைந்தான்.

“Do you know whose house is this,,? மங்களம்


முடிக்கவில்லை....

“I know... I know... Saya thauv, (எனக்குத் தெரியும்)


Mr Angappan” என்று முதலில் வந்தவன் முடித்து வுவத்தாள்.

சீன மொழியில் ஏதோ கூறினான். முரட்டுக் காளைகள்


போல நின்றிருந்த இருவர்: மங்களத்தைப் பிடித்தனர். அவள்
அலறியவண்ணம் திமிறினாள். ஆனால்... அந்த இருவரில்
ஒருவன் அப்படியே... அவளைத் தூக்கி... வெளியே கொண்டு
சென்று கதவு திறக்கப்பட்டிருந்த காருக்குள் தள்ளினான்.
கால்களை உதைத்துக்கொண்டும் அலறிக்கொண்டும் இருந்த
மங்களத்தின் முகத்தில் ஒருவன் ஓங்கிக் குத்தினான். “அம்மா”
என்ற அலறலுடன் மங்களம் மூர்ச்சையானாள்.

அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த


முத்துலட்சுமி... “ஐயோ... ஐயோ...” என்று அலறியவாறு வெளியே
ஓட முயன்றாள்.

ஒருவன் அவளைப் பிடித்து “வாயை மூடிக்கொண்டிரு”


என்று பாதி மலாய் மொழியிலும் பாதி ஆங்கிலத்திலும்
கூறினான்.

ஒரு ரப்பர்த் தோட்டத்தில் இருந்து வேலைக்கு வந்த


முத்துலட்சுமி, தன் தாயையும் தோட்டத்தின் காவல் தெய்வமான
முணீஸ்வரரையும் நினைத்துக்கொண்டாள். அவள் உடல்
அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது.

83

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


பயத்தால் இரவு முழுமையும் அதே இடத்தில்
உட்கார்ந்திருந்த முத்துலட்சுமி, இரவு இரண்டு மணிக்கு மேல்
உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

விடியற்காலை கண் விழித்தவள் தன் சேலை


துணிமணிகளை எடுத்துக்கொண்டு அந்த மாளிகையை விட்டு
வெளியேறினாள்.

‘ மங்களம் கண் விழித்தாள். ஒரு பெரிய அறையில் தான்


இருப்பதை உணர்ந்தாள். அவள் பக்கத்தில் ஒரு பெண்
உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள்.

தாய்லாந்து, இந்தோனேசிய, மலாய், சீன எனப் பல


இனப் பெண்கள்....

தரையில் சிலர் படுத்திருந்தனர்; ஒரு சிலர் சுவரில்


சாய்ந்திருந்தனர்....

ஜன்னல்கன் கறுப்புத் துணியால் மூடப்பட்டிருந்தன.

வெளியே Majong (சீன சூதாட்டம்) விளையாடும் ஒலி


கேட்டது. திடீர் என்று அடுத்த அறையில் இருந்து ஒரு பெண்
அலறும் ஒலி சுவரைத் தாண்டி வந்தது. Mai, Paa""Mai
Paa” (அடிக்காதே... அடிக்காதே) என்று அந்தப் பெண் சீனத்தில்
கதறினாள். உடன் ஓர் ஆணின் குரலும் அடி விழும் ஒலியும்
ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் கேட்டன.

அறையில் இருந்த பெண்கன் பயத்துடன் ஒருவரை


ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

84

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


மங்களத்திற்கு எதுவுமே புரியவில். அருகில்
இருந்த பெண்களிடம் மலாய் மொழியிலும் ஆங்கிலத்திலும்
கேட்டாள்.

அவர்களிடமிருந்து எந்தவிதப்பதிலும் வரவில்லை

Majong வினையாட்டு ஒலி தொடர்ந்தது

காலை மணி ஏழு.

அங்கப்பனுக்குத் தொலைபேசி வழி செய்தி வந்தது

அந்தச் செய்தி.

“மங்களம் விபச்சார விடுதியில் சேர்க்கப்பட்டு


விட்டாள் இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவள்
வாடிக்கையானர்களைத் திருப்திப்படுத்தவேண்டும். இல்லை
என்றால் அவள் அடியும் உதையும் வாங்குவாள்.”

85

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அத்தியாயம் 10

நடந்தவற்றைக் கூறிக்கொண்டே வந்த


கலியப்பெருமாள் சற்று நிறுத்தினார்.

சோபாவில் உட்கார்ந்திருந்த மணிவண்ணன் இடை


இடையே கேள்விகள் கேட்டான். மற்றப்படி பெரும்பாலும்
மெனனமாகவே இருந்துவிட்டான். கலா எதுவுமே கேட்காமல்
வைரப்பன் உடலைப் பார்ப்பதும், மாடியில் ஏதாவது சத்தம்
வருகிறதா என மேல் நோக்குவதுமாக இருந்தாள். தன்
மாமனாரின் பழைய இழிவான வாழ்க்கையை அறிந்து கொன்ன
அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அவனால் எதையும்
ஆழமாகச் சிந்திக்க முடியவில்லை. ஒரு விதமான குழப்பமான
நிலையில் அவள் இருந்தான்.

கலியப்பெருமாள் தொடர்ந்தார்.

“ரகசியச் சங்கக் குண்டர்கள் மூலமா மங்களத்தை


விபச்சார விடுதியில் கொண்டு போய் விட்டதன் மூலம் மிகப்
பயங்கரமா அங்கப்பன், மங்களத்தைப் பழி வாங்கிட்டான்.
பரமநாயகம் தலைமறைவானான். ஆயிரம் ஆயிரமா
பணத்தைக் களவாடிய பரமநாயகம் எங்கே போனான்னு
யாருக்குமே தெரியாது. மாணிக்கம் கொலை உட்பட
எல்லாத்தையும் நான் மறைச்சுட்டேன்.”

மாணிக்கத்தின் கொலைக்குப் பின்னரும்


மங்களத்தைப்பழி வாங்கும் படலத்திற்குப் பின்னரும்

86

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அங்கப்பன் தன் மன நிம்மதியை இழந்தான். ஒருவித மன
நோய்க்காளானான். இந்த நிலையில்தான் அங்கப்பன்
கலியப்பெருமாளிடம் வந்தான் பாதிச் சொத்துப் பாழான
நிலையில் வந்தான் மீத மிருந்த சொத்துகளைப்பற்றிய
பத்திரங்களைக் கலியப்பெருமளிடம் கொடுத்தான்.
அனைத்துக் கோப்புகளும் தன் அலுவலகத்தில் இருப்பதாகக்
கூறி முடித்த கலியப்பெருமான்.

“தம்பி, வைரப்பன் மரணம் பயங்கரமானது. நாம்


எல்லாரும் மிக மிக ஆபத்தான சூழ்நிலையில இருக்கோம்.
எனக்கு:.. எனக்கு... எப்படிச் சொல்றதுன்னே தெரியலை”
என்றார்.

மணிவண்ணன் அவர் என்ன கூற வருகிறார் என்பதை


ஓரளவு புரிந்துகொண்டான்.

“கொலையுண்ட மாணிக்கத்தின் ஆவிதான்


வைரப்பனின் மரணத்துக்குக் காரணமுன்னு சொல்றீங்கனா7”
என்று அவன் கேட்ட கேள்விக்கு... “ஆமா, தம்பி. நாம.... எப்படி.
அதுகிட்ட இருந்து தப்பப் போறோம்முன்னு எனக்குத்
தெரியலை...,” என்று கூறமுடியாமல் கூறி நிறுத்தினார்.

“எனக்கு எப்பவுமே பேய் பிசாசுங்கள்ல நம்பிக்கை


இருந்தது இல்லை. நம்பறவங்க நம்பட்டும். இருண்ட குகை
போன்ற குடிசையில என் அம்மாவை நான் பயத்தோட
கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருந்தப்ப என் அம்மா ஒண்ணு
சொல்லுவாங்க.:,’ பக்கத்தில மாரியாத்தா இருக்கா.: நீ
பயப்படாதேன்னு சொல்லுவாங்க கறுத்த மாரியின் பேரைச்

87
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
சொன்னா காலனும் அஞ்சுமடான்னு பாரதியோட பாட்டையும்
நான் படிச்சிருக்கேன். அந்தத் தெய்வம் காப்பத்தறதா இருந்தா
காப்பாத்தட்டும். நாம இப்பப் பயந்தா ஆகப்போறது எதுவுமே
இல்லை. அடுத்து நாம செய்ய எதுவுமே இல்லை. வெள்ளம்
பெருகிட்டது. வெளியே போக முடியாது. இந்த மாளிகையை
விட்டு வெளியேற முடியாது. முதலில் ஒரு ஹெலிகாப்டர்
போச்சுது. அடுத்து ஏதாவது இப்படி ஹெலிகாப்டர் போகலாம்;
உதவிக்கு அழைப்போம். இல்லை....” என்று கூறிவந்த
மணிவண்ணன் சற்று நிறுத்திப் பின் தொடர்ந்தான்: “எது
வந்தாலும் வரட்டும்னு காத்திருப்போம்,” என்று முடித்தான்.

கலா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

கலியப்பெருமாள் ஏதோ கூற வந்தார். அவரைக்


கையமர்த்தி.... “நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குத்
தெரியுது. கதிரவன், பத்மா பற்றித்தானே சொல்ல வர்றீங்க. அது
எனக்குப் புரியுது. அவுங்க மூலமா ஏதோ ஒரு வகைப்
போராட்டம் ஆரம்பமாகி இருக்கு. மேலும் விளக்கம் கொடுக்க
எனக்குத் தெரியலை. போராடிப் பார்ப்போம்,” என்று
மணிவண்ணன் கூறியபோது....

நிலவறையில் பெரும் ஒலியுடன் ஏதோ விழும் சத்தம்


கேட்டது.

மூவரும் திடுக்கிட்டு எழுந்தனர். மணிவண்ணன்


நிலவறை நோக்கிச் சென்றான். கலியப்பெருமாள் பின்
தொடர்ந்தார்.

88

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


நிலவறையின் ஒரு பக்கச் சுவர் இடிந்து விழுந்து
வெள்ளம் “குபு குபு” என உன்புகுந்து கொண்டிருந்தது

நிலவறையில் இருந்த பழைய நாளிதழ்கன்... கட்டு


கட்டாக இருந்த கோப்புகன் ஆகியளவற்றைக் காப்பாற்ற
முடியாத நிலை ஒரு சில விநாடிகளில் நிலவறை நீரால்
நிறைந்தது. நிலவறைக் கதவை இருவருமாகச் சேர்ந்து மூடினர்.
ஆனால், நீர் கசியத் தொடங்கியது. எனவே, முன் பின் பக்கக்
கதவுகன் நிலவறைக் கதவு என மூன்று வழிகளில் மாளிகைக்குள்
நீர் புகுந்து கொண்டிருந்தது அதிகநேரம் கீழ்த்தளத்தில் இருக்க
முடியாது என்பது தெளிவாகியது.

வைரப்பன் உடலைத் தழுவி நீர் ஓடத் தொடங்கியது.

மணிவண்ணனும், கலியப்பெருமாளும் வைரப்பன்


உடலை உணவு மேசை மீது கிடத்தினர் வைரப்பனின் உடலைப்
ப ர்த்தபே து கலாவின் இதயமே வெடித்து விடும்போல்
இருந்தது தன் பத்து வயது மகள் மீனாட்சி பற்றி வைரப்பன்
பெருமையோடு கூறியதையும் அவளை நன்றாகப் படிக்க
வைத்து ஒரு தமிழாசிரியராக அவள் வரவேண்டும் என்று தன்
ஆசையைக் கூறியதையும் நினைவுகூர்ந்தபோது அவளால்
அழுகையை அடக்க முடியவில்லை.

அவள் மனநிலையை அறிந்துகொண்டவனாக


மணிவண்ணன் எதுவும் பேசாமல் செயலாற்றினான்.

ஒளி தந்துகொண்டிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்குகள்,


ஏற்றப்படாமல் இருந்த மெழுகு திரிகள் தீப்பெட்டி
ஆகியனவற்றை எடுத்துக்கொண்டனர். கலா, தன் கைப்பையை

89

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


எடுத்துக்கொண்டாள். முருகன் திருப்பாடல்கள் கொண்ட நூலை
இறுகப் பற்றிக்கொண்டாள். மேல் மாடியில் ஒரே அறையில்
மூவரும் தங்கிக்கொள்ளலாம் என்று கலா கூறி யதை
முதியவரான கலியப்பெருமாள் உடனே ஏற்றுக்கொண்டார்
தனியாக ஓர் அறையில் இருக்க அவருக்கும் சற்று அச்சமாக
இருந்தது.

முதலில் கலா படி ஏறினாள். அடுத்து


கலியப்பெருமாளும் இறுதியாக மணிவண்ணனும் ஏறினர்.

மாடியில் பத்மா... மெதுவாக நடந்து செல்வது தெரிந்தது

“பத்மா....” என்று மெதுவாகக் கலா அழைத்தாள்.

மணிவண்ணன் பார்த்தான்; கலியப்பெருமாளும்


பார்த்தார்.

தூக்கத்தில் நடப்பது போலப் பத்மா வலப்பக்கத்தில்


இருந்து வந்து அறைக்குள் சென்றாள். கதவு மூடிக்கொண்டது.

மூவரும் மேல் மாடிக்கு வந்தனர். கலியப்பெருமாள்


வலப்பக்கத்தை நோக்கினார்; “ஆ” என்றார். மணிவண்ணனும்
பார்த்தான். ,

எந்த அறையின் கதவைத் திறக்க முடியாது; பூட்டை


உடைத்துத்தான் திறக்க முடியும் என்று கூறப்பட்டதோ அந்தக்
கதவு அகலத்திறந்துகிடந்தது.

“தம்பி...” என்று ஏதோ கூற வந்த கலியப்பெருமாள்


அச்சத்துடன் சுற்றும் முற்றும் தன் பார்வையைச் செலுத்தினார்.

90

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அவர் உடல் நடுங்கியது. ஆடைகள் நனைந்துவிட்டதனால்
ஏற் ப ட்ட குளிர் நடுக்கமா அல்லது அச்சத்தால் ஏற்பட்ட
நடுக்கமா:?

“ரூம்க்குள்ள போயிடுவோம்.:” என்றார்.

“சரி” என்பது போலத்தலையாட்டினான், மணிவண்ணன்.

கதிரவன் பத்மா இருவருடைய அறை அருகே சென்று


ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று மணிவண்ணன் காது
கொடுத்துக்கேட்டான். கதிரவனின் குறட்டை விடு ம் ஒலி
கேட்டது கூப்பிடலாமா, வேண்டாமா என்று யோசித்தான்.
வேண்டாம் என்று முடிவு செய்தான்

ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கைப் படிகளுக்கு அருகே


வைத்தான். மின்விளக்கின் ஒளியோடு இணைந்து அந்த இடம்
பகல் போல் காட்சியளித்தது.

அறைக்குள் வந்தனர். அறைக்கதவு திறந்தே இருந்தது.

“தம்பி, அந்த அறைதான் உங்க அப்பாவோட படுக்கை


அறை. மாணிக்கமும், மங்களமும் அந்த அறையிலதான்
இருந்தாங்கங்கிற கோபத்துல அந்த அறைக்கதவு பூட்டை
உடைச்சுக் கதவைத் திறக்க முடியாம செஞ்சுட்டாரு ஆனா...
இப்ப::” அச்சத்துடன் கலியப்பெருமாள் மேசையை இறுகப்
பிடித்துக்கொண்டார். “நாம மேலே வர்றப்பப் பத்மா அந்த
அறைப் பக்கமா இருந்து வந்தமாதிரி இருந்துச்சு,” என்று கூறிய
அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.

91
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
நேர் எதிரே இடப்பக்கமாக “அந்த” அறை இருந்தது

மணிவண்ணன் அந்த அறையைப் பார்த்தான்.

விளக்கு வெளிச்சத்தில் சுவர் ஓரமாக இருந்த ஒரு


சாய்வு நாற்காலியும் (easy chair) சோபாவும் அவனுக்கு நன்கு
தெரிந்தன

மணிவண்ணன் அறையை விட்டுவெளியே வந்தான்.

“அத்தான்” என்றாள் கலா. அவள் குரல் நடுங்கியது.

“நீங்க ரெண்டு பேரும் இங்கே இருங்க. நான் போய்


அறையைப் பார்த்துட்டு வர்றேன்...” என்று கூறிக்கொண்டே
அறையை நோக்கிச் சென்றான்.

“வேணாம் தம்பி... வேணாம்.” என்று மணிவண்ணனைப்


பின்தொடர்ந்த கலியப்பெருமாள் இடையிலே நின்றார். கலா
செய்வதறியாது சுவரோடு சாய்ந்துவிட்டாள். அவள் இருதயம்
படபடவென்று அடித்துக்கொன்னத்தொடங்கியது
மணிவண்ணன் கதவோரத்தில் இருந்த சுவிட்சைத்
தட்டினான் அறையில் இருள் முழுமையாக விலகி ஒளி
பரவியது.

ஆடம்பரமான படுக்கை அறை. ஆனால், பல நாள்


மூடியே கிடந்ததாலோ என்னவோ ஒரு வித வாடை அடித்தது.
உல்லாசமான கட் டில். போர்வையும், தலையணிகளும்
தாறுமாறாகக் கிடந்தன. தரை எங்கும் தூசு. ஆனால், சிறிய
காலணி - ஒரு பெண்ணின் காலணிச் சுவடுகன் வாயிற்படியில்

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


இருந்து கட்டில் வரை இருந்தன. வறு சுவடு
காணப்படவில்லை

கண்ணாடி ஜன்னல் வழி வெளியே பார்த்தபோது ஒரே


இருட்டாக இருந்தது.

ஒரு சில விநாடிகளில் மணிவண்ணன் அனைத்தையும்


பார்த்துத் திரும்பினான்

அதே வேளையில் கதவு படீர் என்று மூடிக்கொண்டது


ஒரு சிறு இடைவெளியில் மணிவண்ணன் முகத்தை
உராய்ந்துகொண்டு கதவு மூடியது.

தன்னையும் அறியாமல் மணிவண்ணன் ‘ஆ’ என்றான்.


“அத்தான்” என்று கலா அலறினாள். “தம்பி, தம்பி” என்று
கலியப்பெருமாள் கூப்பிடுவது கேட்டது.

ஒரு கணம் மணிவண்ணன் நிலை குலைந்த ன்.


“அம்மா” என்று தன் தாயாரை நினைத்துக்கொண்டான்.

“கலா, பயப்படாதே. ரெண்டு பேரும் தைரியமா இருங்க.


சத்தம் போடுறதுனால பயனில்லை” என்றான்.

கதவுக் குமிழைத் திருக முயன்றான். முடியவில்லை


கதவைப் பலங்கொண்ட மட்டும்: மோதினான் கதவு
அசையவில்லை.

கதவின் அருகில் கலா வந்து “அத்தான், அத்தான்”


என்று விம்மினாள். அவள் குரல் லேசாக மணிவண்ணனுக்குக்
கேட்டது.

93
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
“கலா” என்று அழைத்தான்.

“என்னங்க என்னங்க” என்று பதில் கொடுத்தாள்.


மேற்கொண்டு அவளால் பேச மு டியவில்ல . விம்மத்
தொடங்கினாள்

“இதோ பாரு கலா... தைரியமா இரு. கலியப்பெருமாள்


எங்கே?” என்று மணிவண்ணன் கேட்டதும் செய்வதறியாது
நின்று கொண்டிருந்த கலியப்பெருமாள்....

“தம்பி தம்பி எனக்கு என்ன செய்யிறதுன்னே


தெரியலை போகவேணாம்ன்னு சொன்னேன். போணீங்க...
இப்ப:: இப்ப: தம்பி... நான் கீழே பேரய்ப் பாராங்கத்தி, சுத்தியல்
இருக்கான்னு பார்த்து எடுத்துக்கிட்டு வர்றேன். கதவை
உடைச்சுடுறேன்.:” என்றார்.

அந்த முதியவரின் குரலில் ஒலித்த அந்தத்


தன்னம்பிக்கை மணிவண்ணன் உள்ளத்தில் ஒரு திண்மையை
அளித்தது.

“ஆமா அப்படியே செய்யுங்க நானும் முயற்சி


பண்றேன்” என்றான் மணிவண்ணன்

“பெட்ரோமாக்ஸ்” விளக்குடன் கலியப்பெருமான் கீழே


படிகளில் இறங்கினார்.

கலா, மணிவண்ணன் சிக்கிக்கொண்ட அறையின்


கதவருகே தரையில் அமர்ந்தாள்

கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். இரவு மணி ஒன்றரை.

94

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கனால் நேரம் நகர்ந்ததை
உணரமுடியவில்லை.

அடுத்து மூன்று நான்கு மணிநேரத்தில் இரவு


கடந்துவிடும் - பொழுது விடிந்துவிடும் - பொழுது
விடிந்து விட்டால் ஏதாவது ஒரு வகையில் உதவி
கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை கலாவுக்கு ஏற்பட்டது

அறைக்குள் இருந்த மணிவண்ணன் ஜன்னல்


வழியாகக் கீழே இறங்க முடியுமா எனச் சிந்தித்தான்

ஜன்னலை அவன் திறந்தபோது வெளியே தொடர்ந்து


மழை பெய்துகொண்டிருப்பதுதெரிந்தது.

அறைமுழுவதையும் நோட்டமிட்டான். கட்டில் அருகே


உடைந்த வளையல் கிடந்தது. குளியல் அறையைத்
திறந்தபோது அங்கே கரப்பான் பூச்சிகள் ஓடுவதைக் கண்டு
கதவை மூடினான்.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

கலியப்பெருமாள் கீழ்த்தளத்திற்கு வந்தார் கடைசிப்


படியில் நீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. வெள்ளம் ‘ஹால்’
முழுமையும் நிறைந்து நின்றது. வெளியில் இருந்து கதவுகளின்
வழியாகவும் நிலவறை மூலமாகவும் வெள்ள்ம் வேகமாக
உள்ளே வந்துகொண்டிருந்தது.

மெதுவாகக் கலியப்பெருமாள் நடந்தார். உணவு மேசை


மீது கிடத்தப்பட்டிருந்த வைரப்பன் உடலைப் பார்க்க ஏனோ

95

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அவருக்குத் துணிவில்லை. பார்த்தும் பார்க்க ததுபோல
வேகமாகச் சமையல் அறைக்குச் சென்றார்.

சமயல் அறையில் விளக்கொளி பிரகாசமாக


இருந்தது அடுப் பின் அருகே கோழி இறைச்சி
முதலியனவற்றைத் துண்டு துண்டாக வெட்டப்
பயன்படுத்தப்படும் கூரிய பெரிய கத்தி கணப்பட்டது.
அதனால் பூட்டை உடைக்க முடியுமா எனச் சிந்தித்தவாறு
மேசை டிராவரைத் (drawer - இழுப்பறை) திறந்தார் அங்கே
ஓர் அரிவாள் இருந்தது

இரண்டையும் ஒரு கையில் எடுத்துக்கொண்டு


‘பெட்ரோமாக்ஸ் விளக்கை மற்றொரு கையில்
தூக்கிப்பிடித்துக்கொண்டு மேல் மாடியை நோக்கி நடந்தார்.

மேலே.... கலா... காத்திருந்தாள்.

அறைக்குள்ளே:.. மணிவண்ணன்... யோசித்தவாறு:.


நின்றுகொண்டிருந்தான் துர்நாற்றம் அதிகமாகிக்
கொண்டிருந்தது அறையில் பிண வாடை அ டிக்கத்
தொடங்கியது.

96

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அத்தியாயம் 11

குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்த, கதிரவ ன்


திடுக்கிட்டு விழித்தள். ஆனல் கண்களைத் திறக்க
முடியவில்லை. ஒருவித மயக்கநிலை

கடினப்பட்டுக் கண்களைத்திறந்தா ன். அறை


வெளிச்சமாக இருந்தது.

அவன் கண்ட காட்சியை அவனால் நம்ப


முடியவில்லை. அது கனவு போல் இருந்தது

நாற்காளியில் பத்மா அலங்கோலமான உடையில்


கண்கனை மூடியவாறு ஓருவித மயக்க றிலையில்
அமஈதிருக்கிறாள் நாற்காலியின் பின்புறமாக நின்று மார்பில்
கை வைத்து அணைத்தவாறு களியப்பெருமாள் அவளை
முத்தமிடுகிறார் - தன்னை மறந்து முத்தமிடுகிறார் “

கண்களைக் கசக்கிக்கொண்டு கதிரவன் பார்த்தான்.

“டேய் கலியப்பெருமாள்” என்று கத்தினான்.

திடுக்கிட்டு நிமிர்ற்த கலியப்பெருமாள் கதவைத்


தறிந்து கொண்டு வெளியே ஓடுகிறார்

“எங்கேடா நீ போய்விட முடியும். இரு உன்னை நான்


கவனிச்சுக்கிறேன்” என்று கூறிய கதிரவன் நாற்காலியில்
அமர்ந்திருந்த பத்மாவைப் பிடித்துக்குலுக்கினான்.

97
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
“பத்மா பத்மா” என்று அழைத்தவாறு அவன் தலை
முடியையும் கன்னத்தையும் தடவினான் மயக்க நிலையில்
இருந்து பத்மா விடுபடாமல் இருந்தாள் அப்படியே அவனை
விட்டு விட்டு வெளியே வந்தான்

மூடப்பட்ட கதவருகே சோர்ந்து போய் உட்கார்ந்திருந்த


கலா, கதிரவன் குரல் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தாள்

அறைக்குள் அடைபட்டுக் கிடந்த மணிவண்ணனுக்கும்


கதிரவன் குரல் லேசாகக் கேட்டது.

“என்ன கலா, என்ன?” என்று அவன் கேட்டதற்கு


மறுமொழி தருவதற்குள் கதிரவன் அறையை விட்டு வெளியே
வந்தான்

“எங்கே அந்தக் கலியப்பெருமாள்?” என்று கத்தினான்

அதே சமயத்தில் படிகளில் கலியப்பெருமாள் ஏறி


வந்து கொண்டிருந்ததைக் கதிரவன் பார்த்தான்

“ஓ அரிவாளோட வர்றியா...? என்னைக் கொல்ல


வர்றியாள்” என்றான் கதிரவனின் முகம் பயங்கரமாக மாறியது

ஏதோ ஆபத்து வருகிறது என்பதைக் கலா உணர்ந்து


கொண்டாள்.

“கதிரவன், நீங்க என்ன சொல்றீங்க இதோ இந்த


அறையில அத்தான் சிக்கிக்கிட்டாரு. கதவை உடைக்க
கலியப்பெருமாள் கீழே போனாரு:..” என்று படபடப்பாகக் கலா

98
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
கூறி முடிப்பதற்குள் கதிரவன், “கலா, கலியப்பெருமாள், அந்தக்
கிழப்பய என்ன தெரியுமா செஞ்சான். மயக்கத்தில் இருந்த
பத்மாவைக் கட்டிப்பிடிச்சு முத்தமிட்டுக்கிட்டு இருந்தான்”

“இல்லை... இல்லை... அவர் என் கூடவே இருந்தாரு::”


என்று கூறிக்கொண்டே படிகளுக்கு அருகே... வந்து நின்று
கொண்டான்

கதிரவன் ஏதோ ஒரு தீய சக்திக்கு ஆட்பட்டுவிட்டான்


என்பதைக் கலியப்பெருமாள் உணர்ந்துகொண்டார். அவர்
கைகள் நடுங்கின பெட்ரோமாக்ஸ் விளக்கை
இறுகப் பற்றிக் கொண்டார். அரிவளையும் கத்தியையும்
நடுக்கத்துடன் படியில் வைத்தார்.

கலா சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் போலக் கதிரவன்


ஒதுங்கி நின்றான்.

விறுவிறு என்று படிகனைத் தாண்டிக் கலா அருகில்


வந்து நின்ற கலியப்பெருமாள், “தம்பி: பத்மா எனக்கு மக
மாதிரி... நம் ம எல்லம் ஏதோ ஒரு தீய சாக்தி
ஆட்டிப்படைக்குது:”

கதிரவன் படிகளில் பாய்ந்து இறங்கினான். அவன்


எதற்கு இறங்குகிறான் என்பதைக் கலியப்பெருமான் உணர்ந்து
கொண்டார்.

அரிவாளுடன் கதிரவன் வந்தான். “கதிரவன்:. பிளிஸ்


வேணாம்... வேணாம்” என்று கலா கதறினாள். “அத்தான்:..
கதிரவன்... அரிவானோட வர்றாரு...” கலா கத்தினாள்.

99
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
மணிவண்ணன், “கதிரவன். கதிரவன்... நான்
சொல்றதைக் கேளு.” என்று கதவை ஓங்கி ஓங்கி உதைத்தான்.

கலியப் பெருமாள் கதவு திறந்திருந்த வேறு ஓர்


அறைக்குள் ஓட: நினைத்தார். ஆனால், அந்த அறைக்கு
அருகிலேதான் கதிரவன் நின்று கொண்டிருந்தான். எனவே
அறைக்குள் போக முடியாது

“வேணாம் தம்பி.: வேணாம்...” என்று அந்த முதியவர்


கெஞ்சினார்.

“பத்மா:. பத்மா...” என்று கலா கூப்பிட்டாள். பத்மா


எழுந்து வந்து அந்த இக்கட்டான சூழ்நிலையில்
கலியப்பெருமாளைக் காப்பாற்றமாட்டானா என்ற நப்பாசையில்
பத்மாவைக் கூப்பிட்டாள்.

வலக்கையில் ஓங்கிய அரிவாளுடன் நின்ற கதிரவன்


கலா அலறுவதையோ கலியப்பெருமாள் கெஞ்சுவதையோ
அறைக்குள் இருந்து கதவை இடித்த வண்ணம் மணிவண்ணன்
கூப்பிடுவதையோ கேட்கவில்லை

“கல குறுக்கே நிக்கதே... பே ...” என்றான்


அவனு க்கும் கலியப்பெருமாளுக்கும் இடையே நின்று
கொண்டிருந்த கலாவை நோக்கி முன்னால் வந்தான்.

“கதிரவன்... please... I beg you... please,” என்றாள்.

கதிரவன் அவளிடம் நெருங்கினான். அவன்


தோன்பட்டையை இடக்கையால் பற்றி லேசாகத் தன்ளினான்.

100
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
அவன் பார்வை; தோளை அவன் பற்றிய விதம்..
அச்சத்தைத் தந்தன

கலா விலகினாள்.

அடுத்த விநாடி....

அரிவனால் தாறுமாற்கக் கலியப்பெருமாளை


வெட்டினான். தலை, கை, இடுப்பு... மார்பு... என வெட்டுகள்
வீழ்ந்தன கலியப்பெருமாள் ஓட முயன்று கீழே விழுந்தார்

கசாப்புக்கடைக்காரர் இறைச்சியைத் துண்டுதுண்டாக


வெட்டுவது போல் அவர் உடலை மூர்க்கத்தனமாகக் கதிரவன்
வெட்டிச் சிதைத்தான். ரத்தம் எங்கும் பீறிட்டு அடித்தது.
வேதனையால் துடி துடித்துக் கதறிய கலியப்பெருமாளின் குரல்
கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஓய்ந்தது.

கெடூரமான அந்தக் காட்சியைப் பார்த்த கலா


அலறினாள்; மூர்ச்சையானாள்

அறைக்குள் இருந்த மணிவண்ணன் கதவை


இடித்தான்... “கலா... கலா” என்று கதறினான்.

கதவு திறந்தது

அங்கே அவன் கண்ட காட்சி.: கலியப்பெருமாளின்


உடலை அரிவாளால் வெட்டிக் கொண்டிருந்தான் கதிரவன்.

தரை, சுவர் என எங்கும் ரத்தம். கதிரவன் முகம் - தலை


- ஆடை.... ரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது.

101
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
தரையில் மண்டியிட்டுக் கலியப்பெருமாளின் உயிரற்ற
உடலைத் துண்டாடிக்கொண்டிருந்த கதிரவன் முகத்தில் ஓங்கி
உதைத்தான் மணிவண்ணன். ‘ஆ’ என்ற ஒலியுடன் கதிரவன்
தரையில் வீழ்ந்து உருண்டான்; அவன் கையில் இருந்த
அரிவாள் தூரத்தில் போய் விழுந்தது.

அடுத்தவிநாடி தரையில் மயங்கிக்கிடந்த கலாவை


நிமிர்த்திச் சுவரோடு சாய்ந்த நிலையில் உட்காரவைத்தான்

திட்டுத்திட்டாக அவன் சேலையில் ரத்தத்துளிகன்


படிந்திருந்தன

“கலா கலா” என்று கன்னத்தை லேசாகத் தட்டிக்


கூப்பிட்டான் மூடிய விழிகனை மெல்லத் திறந்த கலா,
மணிவண்ணனைக் கண்டதும் ‘அத்தான்’ என்று அவனை இறுக
அணைத்துக்கொண்டு விம்ம ஆரம்பித்தாள்.

மணிவண்ணனால் உதைக்கப் ப ட்டுத் தரையில்


மல்லாந்து விழுந்த கதிரவ ன் மதுவகத்தட்டுத்தடு மாறி
எழுந்தான் தரையில் இருந்து எழ முயன்றான்; முடியவில்லை.

தன்னால் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டுக்கிடந்த


கலியப்பெருமாளின் உடலை அவன் பார்த்தான் அதைப்
பர்க்க விரும்ப தவனப் பால் தலைன் யத்
திருப்பிக்கொண்டான் சுவர் ஓரமாக உட்கார்ந்திருந்த
மணிவண்ணனையும் கலாவையும் பார்த்தான்.

மணிவண்ணன் வெறுப்புடன் அவனை நோக்கினான்

102
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
கதிரவன் ஏதோ கூற முயன்றான். உதடுகன் துடித்தன.

“மணி....” என்றான் மெதுவாக. “மணி” என்ற சொல்


கேட்டுக் கலா பட்டென்று தலையை நிமிர்த்திக் கதிரவனைப்
பார்த்தாள்.

“பாபி:. கலியப்பெருமாளை வெட்டிக்கொன்னுட்டீயே.


என்கூடவே.. இருந்த அந்த முதியவர் பத்மாவை
முத்தமிட்டார்னு சொல்லி அவரைக் கொலையே செய்துட்டீயே”
என்று ஆக்ரோஷமாகக் கத்தினாள்.

கதிரவன் தட்டுத்தடுமாறி எழுந்தான் அவன்


தாக்குவான் என எதிர்பார்த்து மணிவ்ண்ணன் தயாராக எழுந்து
நின்றான்.

எழுந்த கதிரவன்... “மணி, கலா... எனக்கு... எனக்கு...


என்ன நடந்துச்சுன்னே தெரியலை... சத்தியமா சொல்றேன்...
இங்க வந்தவுடன் விஸ்கி சாப்பிட்டேன். கொஞ்சம்தான்
சாப்பிட்டேன். ஆனா.... ஆனா... மயக்கத்திலே ஆழ்ந்துட்டேன்.
அதன்பிற்பாடு.: ஏதோ... நிழல்: நிழல்மாதிரி:. ஓர் உருவம்.... அது
என்கிட்ட வந்தது அதன் பிற்ப டு... எனக்கு எது வுமே
தெரியலை கெஞ்ச நேரத்துக்கு முந்தி: திடீர்னுகண்
விழிச்சேன்: அப்ப:: பத்மாவைக்:. கலியப்பெருமாள்... ஆமா:
கலியப் பருமான்... முத்தமிட்டதை.: இல்லை. அது.:
கலியப்பெருமாள் இல்லை... ஒரு நிழல் உருவம்..:” என்று
கூறிக்கொண்டே வந்த கதிரவன், “ஐயோ என் தலையே
வெடிச்சிடும் போல இருக்கு,” என்று தலையை இரு
கரங் கனாலும் அழுத்திப்பி டித்துக்கொண்டு தரையில்
உட்கார்ந்தான்.

103

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அப்போது அறையில் இருந்த பத்மா “அப்பா... அப்பா”
என்று அலறிக்கூப்பிடுவது கேட்டது.

அதுவரை நடந்த பெரும் பேராட்டத்தின்பே து


மயங்கிக்கிடந்த பத்மா, பயந்த குழந்தை தன் தந்தையைக்
காணாமல் கூப்பிடுவது போல் அந்தக் குரல் ஒலித்தது.

கதிரவனால் எழ முடியவில்லை. அதே இடத்தில்


அமர்ந்திருந்தான். ஆனால், கலாவையும் மணிவண்ணனையும்
பார்த்தான்

அப்போது... “கலா:. நீ எங்கே இருக்கே கலா?” என்று


பத்மா பரிதாபகரமான குரலில் கூப்பிட்டாள்.

கலா தயக்கத்துடன் மணிவண்ணனைப் பார்த்தாள்.

“போ. நான் கூடல் வர்றேன்” என்றான். தரை எங்கும்


கலியப்பெருமாளின் ரத்தம் சிதறிக்கிடந்ததால் அருவருப்புடன்
கீழே பார்க்காமல் மணிவண்ணன் கையை இறுகப்பற்றிய
வண்ணம் கலா நடந்தாள்.

இருவரும் அறைக்குன் சென்றனர்

கட்டில் நடுவே... பத்மா அமர்ந்திருந்தான். அவள்


ஆடை சற்று அலங்கோலமாக இருந்தது. மணிவண்ணன்னப்
பார்த்ததும் அவள் த்ன் ஆடையைச் சரி செய்ய முயன்றான்.
அதைக்கண்ட மணிவண்ணன் வாயிற்படி அருகே வந்து நின்று
கொண்டான்.

104

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


கதிரவன் பாள்றே பத்மாவும் தெளிவுடன்
காணப்பட்டாள் சில மணி நேரங்களுக்கு முன் ஏதோ ஒரு தீய
சக்திக்கு கட்டுப்பட்டு இருந்த பத்மா பழைய நிலைக்குத் திரும்பி
இருந்தாள். ஏன் எப்படி இந்தத் திடீர் மாற்றம் ஏற்பட்டது என்பது
புரியாத புதிராக இருந்தது அடுத்து என்ன நடக்கும் - என்ன
நடக்கப்போகின்றது என்று குழம்பிய நிலையில் மணிவண்ணண்
வாயிற்படியில் நின்றுகொண்டிருந்தான் கைக்கடிகாரத்தைப்
பார்த்தான். இரவு மணி இரண்டு

பத்மா அருகில் செல்லாமல் கலா சற்று விலகியே


நின்றாள் தன்னைப் பத்மா கட்டி அணைத்து வாயில் முத்தமிட
முய ன்றதைக் கலா மறக்கவில்லை. அவளைக் கலா
அச்சத்துடன் பார்த்தாள்.

“கலா... நான்... நான்.... பலியாகிட்டேன். கொஞ்சம்....


கொஞ்சம்.: நினைவு இருக்கு.... கனவுல நடந்தது போல இருக்கு....
என்னை... ஒருத்தன்... அவன் மனுசனே இல்லை... இல்லை...
பேய்...” என்று பட படவென்று பேசிய பத்மா “கலா:.. நீ போயிடு:.
இந்த மாளிகையில இருந்து தப்பிப் போயிடு: அவன்.: அவன்
கண்கள்ல இருந்து நீ தப்பவே முடியாது ... அப்பாகிட்ட
காலையிலதான் சொன்னேன். போகாதே.... போகவேணாம்னு
சொன்னாங்க.... நான் கேக்கலை... எல்லாமே... போச்சு... கதிரவன்
எங்கே...? I want to see him.... I want to see him” என்று
கத்திக்கொண்டே கட்டிலில் இருந்து கீழே இறங்கினாள்;

கலா சட்டென்று ஒதுங்கி நின்றுகொண்டாள்

தெளிவு கிடைத்ததும் நடந்த சம்பவங்களால் அவள்

105

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


மனம் பதிக்கப் பட்டு விட்டது என்பதை மணிவண்ணன்
அறிந்துகொண்டான்

கதிரவன் எழுந்து நின்றான். அவ ன் ஆடைகள்


முழுமையும் ரத்தத்துளிகன். பத்மா பார்த்தாள். கீழே தரையில்
வெட்டுண்டு கிடந்த கலியப்பெருமாளின் உடலையும்
பார்த்தாள்

“இது என்ன என்ன.... what happened.... oh... god...


what happened.”

அலறினாள் மீண்டும்... மீண்டும்... அதையே கூறிக்


கத்தினாள்; கதறினாள்.: அவள் குரல் மாளிகை முழுமையும்
எதிரொலித்தது

கலா... சிலைபோல் நின்றாள். மணிவண்ணன் அவன்


அருகில் நின்றான்.

கதறிய பத்மாவின் குரல் அடைத்தது.

கதிரவன்... பரிதாபமாகப் பத்மாவைப் பார்த்தான்...

“பத்மா கலியபரும்னை நான்தான்: வெட்டிக்


கொன்றேன்”

பத்மா வெறித்து நோக்கினாள்.

“ஏன்னா: அவன்:. இல்ல.... இவரு... உன்னை


முத்தமிட்டுக் கொண்டிருந்ததை...” அவன் முடிக்கவில்லை

106

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அறைக்குள் இருந்து சிரிப்பொலி எழுந்தது

கலா, மணிவண்ணன் கரங்களைப்பற்றிக்கொண்டான்.

பத்மா அறையை நோக்கினாள்

அறைக்கதவு லேசாகக் காற்றில் அசைந்தது

“You bastard... you...bastard... வாடா வெளியே,” என்று


கத்திக்கொண்டே பத்மா அறைக்குள் பாய்ந்தான்

“பத்மா: போகாதே” என்று கூறி க்கொண்டே


மணிவண்ணன் பின்தொடர்ந்தான்.

“பத்மா” என்று தடுமாறிய கதிரவன்.: தள்ளாடி


அறைக்குள் சென்றான்.

அறைக்கு வெளியே தனியாக நின்ற கலா அதே


இடத்தில் அசையமல் நின்றான். அவனால் நடக்க
முடியவில்லை; சிந்திக்கமுடியவில்லை; அப்படியே நின்றாள்

அறைக்குள் பத்மா, மணிவண்ணன் கதிரவன் மூவரும்


இருந்தனர்

ஆற்றோரமாக இருந்த அந்த அறையின் கண்ணாடி


ஜன்னலில் ஓர் உருவம் தெரிந்தது. அந்த உருவம்
“மாணிக்கத்தின்” உருவம்.

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
"You bastard என்னைக் கெடுத்திட்டீயே’டா! என்
உடம் பல்லாம் எரியிது,” என்று கத்தியவண்ணம் பத்மா
கண்ணாடி ஜன்னலை நோக்கிப் பாய்ந்தாள்

கண்ணாடி சிதறியது: பத்மா ஜன்னல் வழியாக


வெளியே வீழ்ந்தாள். கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குன் அது
நடந்தது. மணிவண்ணன் பாய்ந்துசென்று சிதறிய கண்ணாடி
ஜன்னல் வழியாகக் கீழே விழவிருந்த பத்மாவின் கால்களைப்
பற்றினான். க்னால், கால்கன் நழுவின. பத்மா... தலை குப்புற
“அப்பா” என்ற அலறலுடன் வெள்ளத்தில் வீழ்ந்தாள்.

“என்ன ஆச்சு: என் பத்மாவுக்கு என்ன,” என்று


அலறியவண்ணம் சிதறுண்ட கண்ணாடி ஜன்னல் வழியாக
கதிரவன் குதிக்க முயன்றான்.

“கதிரவன்... பிளீஸ்... இனி எதுவும் செய்ய முடியாது:.”


என்று மணிவண்ணன், கதிரவனைப் பிடித்துக்கொண்டான்.”
“இல்லை இல்லை:. என் பத்மா:. என் பத்மா... I want
to die.... I want to die.. with my பத்மா” என்று கதறி
ஜன்னலை நோக்கிச் செல்ல முயன்ற கதிரவனை மணிவண்ணன்
பின்புறமாகப் பிடித்துத் தரையில் தன்ளினான்

தரையில் தள்ளப்பட்ட கதிரவன் மீது அறையில் இருந்த


நாற்காலி மோதியது. மோதிய வேகத்தில் கதிரவன் “ஐயோ” என்ற
அலறலுடன் வெளியே வந்து வீழ்ந்தான்

அதே சமயத்தில் அறைக்கதவு இரண்டாவது


முறையாக மூடிக்கொண்டது

109

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அறைக்குள்ளே மணிவண்ணன் சிக்கிக்கொண்டான்.

அறைக்கு வெளியே கவு நின்றாள்.

கதவு மூடிக்கொண்டதும் “அத்தான்” என்று


அலறக்கூடச் சக்தி இல்லாமல் அப்படியே அசைவற்று நின்று
கொண்டிருந்தாள்.

“கலா நீ போயிடு:. இந்த மாளிகையில இருந்து தப்பிப்


போயிடு “அவன்: அவன்” கண்கள்’ல இருந்து நீ தப்பவே
முடியாது,” என்று பத்மா கூறிய சொற்கள் அவள் காதில்
எதிரொலித்தன

நாற்கலியல் அறைக்கு வெளியே தள்ளப்பட்ட


கதிரவன்... மெதுவாக எழுந்து நிற்க முயன்றான். தரையில் சிந்திக்
கிடந்த கலியப்பெருமாளின் ரத்தம் முழுமையாக அவன்
ஆடையில் ஒட்டிக் கொண்டது.

“மணி மணி.: என்ன இது மணி ....” என்று


தள்ளாடியவண்ணம், மூடிக்கொண்ட அறைக்கதவைத்
தட்டினான்.

அறைக்குன் இருந்த மணிவண்ணன், “கலா... எங்கே...


ஏன் பேசாம இருக்கா:. கலா எங்கே” என்று கேட்டான். அவன்
குரல் கரகரத்தது. தொடர்ந்து பேச அவனால் முடியவில்லை.

“She is here....” என்றான் கதிரவன்.

அப்போது:

110

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


மின்சார விளக்கு விட்டு விட்டு எரியத்தொடங்கியது.

அறைக்குள் இருந்த மணிவண்ணனுக்கு ஏதோ ஒரு


முடிவு வரப்போகின்றது என்று தெரிந்தது

அந்த முடிவு....?

111

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


அத்தியாயம் 12

பரம நாயகத்தின் ஒரே மகன் பத்மா, தன் பத்தாவது


வயதிலேயே தாயை இழந்தவள். தன் மனைவி கண்மணியின்
மறைவுக்குப்பின் பரம நாயகம் பத்மாவை மிகவும் செல்லமாக
வனர்த்தார் அதிகமான சல்லத்திளால் பத்ம பிடிவத
குணமுடையவனாகத் தன் போக்கிலேயே வனர்ந்தாள் பதிவுத்
திருமணத்திற்குப் பிறகு கதிரவனுடன் அடிக்கடி வெளியில்
செல்வதும் நேரம் கழித்து வருவதுமாக இருந்தாள் பரம
நாயகத்திற்கு அது உடன்பாடாக இல்லை என்றாலும்,
பத்மாவிடம் அது குறித்துப் பேச அவருக்கு ஏனோ அச்சமாக
இருந்தது ஒருவர் மீது அளவுக்கு அதிகமாக அன்பு
வைத்துவிட்டால் அந்த ஒருவரிடம் உள்ள குறைகளை
எடுத்துக்கூற ஏற்படும் அச்சமே பரமநாயகத்திற்கு இருந்தது.

மலாயாப் பயணம் பற்றி அன்று காலைதான் பத்மா தன்


தந்தையிடம் கூறினாள் முன்பு இரண்டு முறை மலாக்காவுக்குக்
கதிரவனுடன் சென்றபோதும் கடைசி நிமிடத்தில் பயணம்
பற்றிக்கூறி இருக்கிறாள் ஆனால், பக்கானுக்குப் போகப்
போவதாகக் கூறியதும் பரம நாயகம் அதிர்ச்சி அடைந்தார்
அதுவும் சுங்கை திங்கி ஆற்றோரத்தில் அமைந்திருந்த ஒரு
மாளிகையில் ஓர் இரவு தங்கப்போவதாகக் கூறியதும் தடும்றி
நாற்காலியில் அமர்ந்துவிட்டார் எப்படி ஏன் இந்த ஏற்பாடுகள்
என்று பரமநாயகம் படபடப்பாகக் கேட்டதற்குத் தெளிவான
பதில் பத்மாவிடம் இருந்து வரவில்லை

112
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
“பத்மா.. நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே...
எந்த மாளிகைன்னு எனக்குத் தெரியலை: ஆனா:. அன்று
போகவேணாம்” என்றார்.
பத்மா வியப்புடன் தன் தந்தையைப் பார்த்தாள்.

“அவர் நண்பர் மணிங்கிறவரோட உயில் சம்பந்தமா


ஏதோ ஒரு மாளிகையைப் பர்க்கணுமாம். என்னையும்
கூப்பிட்டாரு. சரின்னு சொன்னேன். நனைக்குத்

திரும்பிடுவோம்,” என்றாள் பத்மா.


“ஏன் நேத்தே சொல்லலை:?” என்று கேட்டதற்கு
பத்மாவிடமிருந்து எந்தவிதப் பதிலும் வரவில்ன்ல. அந்தக்

கேள்வி அவன் காதில் விழுந்ததா என்றும் தெரியவில்லை.

“ஏன்... ஏன்.: பேகவேணாம்” என்று பத்மா


கேட்டதற்குப் பரமநாயகத்தால் பதில் கூறருடியவில்லை.

அப்போது தொலைபேசி மணி ஒலித்தது. கதிரவன்தான்


பேசினான். பத்மவை அழத்துச் செல்ல சுமார் பத்து
நிமிடங்களில் வருவதாகக்கூறினான்.

எது வும் பேச முடியாத நிலமையி ல் அப்ப டியே


சோர்ந்துபோய் பரமநாயகம் உட்கார்ந்துவிட்டார். கதிரவன்
வந்தபோது... “என்ன உயில் என்ன சொத்து..?” என்று பட்டும்
படாமல் விசாரித்தபோதுதான் “யார்... எவர்:.” என்ற விவரங்கன்
அவருக்குத் தெரியவந்தன. அவற்றை ஜீரணிக்க முயன்று
கொண்டிருந்த வேளையில் “அப்பா, போயிட்டு வர்றேன்” என்று
கூறிவிட்டுப் பத்மா புறப்பட்டாள்.

113
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
பழைய நினைவுகள் அவர் அகக்கண்முன்னே
விஸ்வரூபம் எடுத்து நின்றன; ருத்ர தாண்டவம் புரிந்தன

பரமநாயகம், மங்கனத்திள் தம்பி என்னும் முறையில்


அங்கப்பனின் அரவணைப்பில் சுகபோகங்களை
அனுப வித்தன் அந்தக் கலகட்டத்தில் கோலாலம்பூரி ல்
புகழ்பெற்றிருந்த ஜவுளிக்கடை முதலாளி ஒருவரின் மகனான
கண்மணியைக் கண்டான்; காதல் கொண்டான்.

இதற்கிடையில் மங்களம், அங்கப்பனை மறந்து


மாணிக்கத்தின் மடியில் வீழ்ந்து கிடப்பதையும் கண்டான். அதை
பரமநாயகம் பொருட்படுத்தவில்லை ஆனால், கண்மணி பற்றி
ஒருநாள் தன் அக்கா மங்களத்திடம் கூறியபோது அருகில்
இருந்த மாணிக்கம் மிகுந்த ஆவலுடன் கண்மணியைப் பற்றிக்
கேட்டதையும், தானே முன்னின்று திருமணத்தை நடத்தி
வைக்கப் போவதாகக் கூறியதையும் பரமநாயகம் ஏனோ
விரும்பவில்லை அப்போதுதான் தன் அக்காவுக்கும் -
மாணிக்கத்திற்கும் இடையில் உள்ள கள்ள உறவை அவன்
வெறுக்கத்தொடங்கினான் கண்மணியின் அப்பா ஒரு ஜாதி
வெறியர் தன் மகனைத் தன் ஜாதிக்காரருக்குத்தான்
மணமுடித்துத்தர உறுதியாக இருந்தார்.

பரமநாயகத்திற்கும் கண்மணிக்கும், அவர்கள் காதல்


வெற்றி பெற ஒரே ஒரு வழிதான் தென்பட்டது.

“ஊரைவிட்டு ஓடுவது,”

114
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
பரமநாயகம் அங்கப்பனின் பணத்தில் வேண்டிய
அளவு எடுத்துக்கொண்டான் கண்மணியும் தனக்குரிய பெழ்ள்
ஆபரணங்கனை எடுத்துக்கொண்டாள் பணத்தோடும்
பொள்னோடும் சிங்கப்பூர் வந்த அவ்விருவரும் புது வாழ்வு
தொடங்கினர். அந்தப் புது வாழ்வில் மலர்ந்த மலர்தான் பத்மா.

தஞ்சோங் பகார் பகுதியில் உணவுக் கடை தொடங்கிய


பரமநாயகம் நல்வாழ்வு அமைத்துக்கொண்டான்

பழையனவற்றை மறக்க முயன்ற பரமநாயகத்திற்கு


மங்களத்தை நினைவூட்டுவதாகப் பத்மாவின் முகத்தோற்றம்
அமைந்திருந்தது

பழைய நினைவுகள் அவ்வப்போது தோன்றி மறையும்


கண்மணியும் தன் பெற்றோரை அவ்வப்போது நினைத்துக்
கொள்வாள் ஆனால், சொந்த ஊருக்குப் போகவோ தொடர்பு
கொள்ளவோ இருவருமே முயற்சி செய்யவில்லை விருப்பம்
இருந்தாலும் துணிவு இல்லை

விபச்சார விடுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட மங்களம்


நரக வேதனை அனுபவித்ததையோ இறுதியில் காசநோயினால்
பீடிக்கப்பட்டுச் சிவப்பு விளக்குப் பகுதியில் துர்நாற்றம் வீசும்
சாக்கடை ஓரத்தில் செத்துக்கிடந்தது பற்றியோ பரம
நாயகத்திற்குத் தெரியாது.

நேரம் ஆக ஆகப் பரமநாயகம் நிலை குலைந்தார்.


இனம் தெரியாத அச்சம் மனத்தில் ஏற்பட்டுக் கலங்கினார்

115
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
கண்மணி கார் விபத்தில் சிக்கிப் பொது மருத்துவமனையில்
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது பரமநாயகத்திற்கு
மனநிலை எப்படி இருந்ததோ, அதே நிலைக்கு அவர்
தள்ளப்பட்டார்

பிற்பகல் மணி மூன்று கோலாலம்பூருக்கு விமானம்


மூலம சென்று அருகிருந்து பெக்கனுக்கு வடகவண்டி
மூலம் செல்ல முடிவு செய்தர் மலை 5.00 மணி க்குப்
பயலேபர் விமான நிலையத்தில் இருந்து புறப் பட்ட வி மானம்,
மாலை 600 மணிக்குக் கோலாலம்பூர் சென்றடைந்தது. விமான
நிலை யத்தில் இருந்தேவடக வண்டியில் புறப்பட்ட
பரமநாயகம் வென்னத்தின் காரணமாகவும் கரடுமுரடான
சாலைகனாலும் பின்னிரவு 30 மணிக்குப் பெக்காள்
சென்ற டந் தார் போகப்போக வாடகை வண்டியின்
கட்டணத்தை ஓட்டுநர் கூட்டிக்கொண்டே போனார். ஓட்டுநர்
கேட்ட தொகையைக் கொடுக்க உறுதி அளித்தார் பரமநாயகம்
சுங்கைதிங்கி ஆற்றின் அருகே இருந்த கிராமங்கள்
பாதிக்கப்பட்டிருந்தன.

நிவா ரணப் பணிகன் ஆங்காங்கே நடபற்று


கொண்டிருந்தன வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் ஒரு
பள்ளியில் அடைக்கலம் புகுந்திருந்தனர் அந்த முகாமுக்கு
பாறுப்பேற்றிருந்த இராணுவ அதிகாரியை அணுகினார்
பரமநாயகம். -

116
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
அத்தியாயம் 13

அறைக்குள் சிக்கிக்கொண்ட மணிவண்ணன் உடைந்த


கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தான்
அறை விளக்கொளியில் வெளியே சுவரிண் பக்கத்தை ஒட்டிய
ஒடுங்கிய நீன் விளிம்பு (ledge) தெரிந்தது

சுவரைப்பற்றிய வண்ணம் அடுத்த அறைக்குச் சென்று


விடலாம். ஆனால், அவ்வாறு செல்வது தற்கொலை முயற்சிக்கு
ஒப்பனது என்பது மணிவண்ணனுக்குத் தெரியும் சற்றுத்
தடுமாறினாலும் ஆற்றிலே விழவேண்டிய நிலை ஏற்படலாம்.
அறையிலேயே அடைந்து கிடப்பதைவிட... அந்த முயற்சியை
மேற்கொன்வது சாலச்சிறந்தது என்ற முடிவுக்கு வந்தான்

கதவோரமாக வந்து “கலா” என்று கூப்பிட்டாள்

கதவோரத்தில் நெஞ்சம் படபடக்க ஒருவித மயக்க


நிலையில் நின்றிருந்த கலா திடுக்கிட்டு, “என்ன அத்தாண்
ஐயோ... என்ன அத்தான்” என்றாள்

“கலா... இப்ப நான் சிக்கிக்கிட்ட அறைக்கு அடுத்த


அறைக்கு நீ போயிடு. ஜன்னலைத் திறந்து வை... நான்... சுவர்
ஓரமா உள்ள பகுதியில் - அதாவது ledge - மூலமா
வந்துடுறேன் விளக்கு எந்த நிமிடத்திலேயும் நிக்கப்போகுது
அறைக்குப் போ... மெழுகுதிரிகளை ஏத்திவை” என்று
கத்தினான்.

117
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
“சரி” என்று கலாவால் கூறமுடியவில்லை.

அறைக்குள் தட்டுத்தடுமாறி ஓடினாள்

கதிரவன் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தான்

அறைக்குள் ஓடிய கலா முதலில் முருகன் பாடல்கள்


கொண்ட தொகுப்பு நூல் இருக்கின்றதா எனப் பார்த்தாள்
மேஜையில் இருந்தது ‘முருகா முருகா’ என்று
கூறிக்கொண்டே மெழுகுதிரிகனை ஏற்றி வைத்தாள்

ஜன்னலில் இருந்து மெதுவாக மணிவண்ணன் கீழே


விளிம்பில் இறங்கினான். விளிம்பு, சுமார் 40 சென்டிமீட்டர்
அகலம் இருந்தது மழைச்சாரல் அடித்தது . கீழே எதுவுமே
தெரியாத நிலையில் இருளாக இருந்தது. மூடிக்கொண்ட
அறையின் விளக்கொளியும் கலா சென்ற அறையின்
வினக் களியும் ஜன்னலுக்கு அருகில் மட்டும் தெரிந்தன.
மற்றப் பகுதிகளில் இருள் படிந்திருந்தது. மணிவண்ணன்
பின்புறமாகச் சுவரோடு சாய்ந்துகொண்டு பக்கவாட்டில்
மேதுமேதுவாக… நகர்ந்தன் சுமர் 10 மீட்டர் அவன்
கடக்கவேண்டும் மழை நீர் அவன் உடலை
நனைத்துக்கொண்டிருந்தது சற்றுத் தடுமாறினால் அவன்
தலைகுப்புறக் கீழே விழவேண்டியதுதான் ஆற்றிலே
விழுந்தால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவான்.
ஆழமில்லாத பகுதியில் வீழ்ந்தால் கைகால்கள் முறியலாம்
அல்லது....

எப்படியும் அவன் அடுத்த அறைக்குச் சென்றுவிட


வேண்டும் - கலாவைக் காப்பாற்றவேண்டும்

118
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
சிறுவளாக மணிவண்ணன் இருக்நிறாள் காட்நிம்
மழையில் அவன் அம்மா அவன் கையைப்பிடித்து
அழைத்து நிசவ்நிறாள் அறுதருஸில் - அறுத மழையில்
அவன் தன் தாயாரிள் கரத்தை இறுகப்பற்றிக்கொண்டு...
‘அம்மா” என்று கூப்பிடுகிறான்… கூப்பிட்டுக்கொண்டே
நடக்கின்றான்...

அம்மாவை நினைத்துக் கொண்டான். ஒரு தைரியம்


வந்தது. பாதங்களைச் சறுக்கியபடி நகர்ந்தான்.

அறைக்குள் கலா மெழுகுதிரிகள் ஏற்றிவைத்தாள் ‘


திறக்கப்பட்ட ஜன்னல் வழியாக உள்ளே வீசிய காற்றில்
மெழுகுதிரிகள் அணைந்துவிடாமல் இருக்க அவற்றை
ஜன்னலுக்குக் கீழே வைத்தாள். மணிவண்ணன் எப்படியும்
வந்துவிடுவான் என்ற தைரியம் அவளுக்கு இருந்தது

அறைக்கு வெளியே நின்றிருந்த கதிரவனுக்குச்


சிரிப்பொலி கேட்டது. அதிர்ச்சியுடன் திரும்பினான். அங்கே
“மாணிக்கம்” நின்றுகொண்டிருந்தான்.

மனித உருவமாகவும் இல்லை; ஆவி உருவமாகவும்


இல்லை. இரண்டும் கலந்த ஒரு விதப் பயங்கரத் தோற்றமாக
இருந்தது

“என்... பத்மா சாவுக்கு:. நீ.: நீதானே... காரணம்” என்று


கத்தினான். கத்தியவேகத்தில் அந்த உருவத்தின்மீது பாய்ந்தான்..
மாணிக்கத்தின் உருவம் கலைந்து சிதைந்தது. அதே வேளையில்
கதிரவன் மேலே தூக்கி எறியப்பட்டான். மேலே தொங்கிக்
கொண்டிருந்த விளக்கில் அவன் உடல் மோதியது. விளக்கு

119
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
உடைந்து சிதறியது உடைந்த விளக்கில் இருந்து தீப்பொறிகள்
கிளம்பின. கீழே வந்து விழுந்த கதிரவன் வாயில் இருந்து
இரத்தம் கொட்டியது எந்தவித ஒலியும் அவனிடமிருந்து
வரவில்லை.

ரத்தம் கக்கிக் கதிரவன் மடிந்தான்

அறைக்குள் இருந்த கலாவுக்குக் கதிரவனின் குரல்


கேட்டதும் அறைக்கு வெளியே பார்த்தாள்

நிழல் உருவம் தெரிந்தது கதிரவன்நிற்பதும் தெரிந்தது

ஏதோ ஒரு வேகத்தில் கதவைச் சாத்தினாள். அவள்


உடல் வெடவெட என்று நடுங்கத்தொடங்கியது ஜன்னலுக்கு
அருகில் ஓடி வந்து “அத்தான் அத்தான்” என்று அலறினான்

அதே வேகத்தில் ஜன்னல் மெதுவாக மூடத்


தொடங்கியது யாரோ வெளியே இருந்து ஜன்னலை மூடுவது
போல இருந்தது கலா அச்சத்துடன் விலகி நின்றாள்.

ஜன்னல் இறுக மூடிக்கொண்டது திறக்க முயன்றாள்;


முடியவில்லை.

ஓர் உணர்வு. பின்னால் யாரோ நிற்பது போன்ற உணர்வு

விளிம்பில் (ledge) மெது மெதுவாக நகர்ந்து வந்து


மணிவண்ணனுக்கு கலா “அத்தான் அத்தான்” என்று
கூப்பிட்டது லேசாக்க் கேட்டது கலாவின் குரல் கம்மலாக
இருந்ததாலும் மழை பெய்யும் ஒலியின் இரைச்சலாலும் குரல்
தெளிவாகக் கேட்கவில்லை.

120

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


ஜன்னல் மூடிக்கொண்டதும் அவனுக்குத் தெரியாது.
ஜன்னலுக்கும் அவனுக்கும் இடையில் இன்னும் ஐந்து மீட்டர்
இருந்தது.

ஆற்று நீரின் ஒலி நன்கு கேட்டது . அதாவது


மணிவண்ணன் அப்போது ஆற்றுக்கு மேலே நீள் விளிம்பில்
நகர்ந்துகொண்டிருந்தான்

கலா அசையாமல் நின்றாள்

“கலா, நான்தான்” அது மணிவண்ணனின் குரல்.

திடுக்கிட்ட கலா “அத்தான்” என்று திரும்பினாள்.

ஆனால்....

அங்கே மணிவண்ணன் இல்லை.... “மாணிக்கம்” நின்று


கொண்டிருந்தான்.

“ஆ” என்று அலற முயன்றான். முடியவில்லை.

மாணிக்கத்தின் கண்கன் அவன் கண்கனை ஊடுருவின.

“கலா, பயப் படாதே அழகின் பிறப்பிடமே:


இன்பத்தின் உறைவிடமே:” என்று அந்த ‘உருவ ம்’
கூறிக்கொண்டே கலாவை நெருங்கியது கலா ஏதோ ஒரு
சக்தியில் இருந்து - அந்தக் கண்களில் இருந்து - விடுபட
முயன்றாள்; முடியவில்லை.

“பத்மா மூலமா உன் செக்கச் சிவந்த உதடுகளை

121

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


முத்தமிட நினைச்சேன் முடியலை:: இப்ப... ஆசை தீர.:
முத்தமிடப் போகிறேன்”

மாணிக்கம் கலாவை அணைத்தான். “அவ ன்”


கைப்பட்டதும் கலா ஒரு கையால் மேஜையைப் பற்றிக்
கொண்டாள்.

மாணிக்கம் கலாவின் தாடையைப் பற்றினான். அவன்


கை ஜில்லென்று - ‘ஐஸ்’ கட்டி போன்று இருந்தது.

கலா முகத்தருகே ‘அவன்’ முகம் நெருங்கியது.

மேஜையைப் பற்றி இருந்த கலாவின் கை நடுங்கியது


அப்போது அந்த அற்புதம் நிகழ்ந்தது.

நூல் அசைந்தது; நகர்ந்தது; கலா கரத்தில் உராய்ந்தது.

ஒரு மின்வெட்டு.

புத்தகத்தைப் பற்றினாள்.

தன்னையும் அறியாமல் “முருகா” என்று கத்தினாள்

“மாணிக்கம்” விலகினான்

அவன் பிடியில் இருந்து விலகிக்கொண்ட கலா அந்த


‘உருவத்தை’ நோக்கி முருகன் பாடல்கன் நூலை வீசினான். -

சக்கரம் போல் அந்த நூல் சுழன்று சென்று


‘மாணிக்கத்தின்’ கண்கனக்குத்திக் கி ழித்தது . அதே

122

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


வேளையில் ஜன்னல் கண்ணாடி உடைந்து சிதறியது; மின்னல்
மின்னியது - ஒளி சிதறியது.

“ஆ” என்ற அலறலுடன் மாணிக்கத்தின் உருவம்


மறைந்தது

ஜன்னலுக்குச் சற்றுத் தூரத்தில் மணிவண்னன் நகர்ந்து


வந்துகொண்டிருந்தபோதுதான் மின்னல் மின்னிக் கண்ணாடி
உடைந்தது.

“கலா” என்று அலறினான்.

கலா ஜன்னலுக்கருகே தடுமாறி வந்தாள். மெதுவாக.:


நகர்ந்து வந்து... அறைக்குள் குதித்த மணிவண்ணன் கலாவை
அணைத்துக்கொண்டான்.

கலா விம்மிக்கொண்டே “முருகன் காப்பாத்திட்டான்...


என் முருகன் காப்பாத்திட்டான்” என்று கூறிக்கொண்டே
மூர்ச்சையானாள். சரிந்து விழுந்த அவளைத் தோளில் சுமந்து
கொண்டான். தரையில் கிடந்த முருகன் பாடல்கன் தொகுப்பு
நூலைக் கையில் எடுத்துக்கொண்டான்.

அப்போது மின்விளக்குகள் அணைந்தன. வெளியே


வெடிக்கும் சத்தம் கேட்டது இருளில் மெதுவாகக் கதவை
திறந்துகொண்டு மணிவண்ணன் வெளியே வந்தான்.

எந்த விளக்கின் மீது கதிரவன் மோதப்பட்டுக் கீழே


வந்து விழுந்தானோ... அந்த வினக்கில் ஏற்பட்ட மின்சாரத்
தாக்கத்தால் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. அந்த நெருப்பு
எங்கும் பரவத் தொடங்கியது.

123

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
இன்னும் சிறிது நேரத்தில் மாளிகை முழுமையும் தீ
பரவிவிடும் என்பதை மணிவண்ணன் உணர்ந்தான்

அப்போது ஹெலிகாப்டர் வரும் ஒலி கேட்டது

ஜன்னலுக்கு அருகே சென்று சைகை காண்பிக்கலாம்


என்று எண்ணியபோது, ஜன்னலுக்கு அருகில் “மாணிக்கம்”
நிற்பது தெரிந்தது

நெருப்புச் சுற்றி வளைத்தது

ஹெலிகாப்டர் சத்தம் நெருங்கி வந்தது ஜன்னல்


ஓரமாகச் சென்றால்தான் ஹெலிகாப்டரில் இருப்பவர்களின்
உதவியைப் பெறமுடியும். ஆனால், குறுக்கே “மாணிக்கம்” -
அதன் ஒரு கண் இருண்ட நிலையில் நின்றுகொண்டிருந்தது

ஓர் ஆவியுடன் போராட முடியுமா என்ற வினாவும்


மணிவண்ணனுக்கு எழுந்தது. “முருகன் காப்பாத்திட்டான்”னு
கலா சொன்னதும் எதிரொலித்துக்கொண்டிருந்தது.

அப்போது பயங்கரமான ஒரு குரல் “டேய், மாணிக்கம்”


என்று எழுந்தது அந்தக் குரலைக் கேட்டு மாணிக்கத்தின்
உருவம் அங்குமிங்கும் பார்த்தது

திடீர் என்று ஓர் உருவம் தேன்றியது. அந்த


உருவத்தைப் பார்த்தது ம் மணிவண்ணன் திடுக்கிட்டான்
தெரிந்த உருவமாக இ ருந்தது ஆம்:: சிறு வயதில்
மணிவண்ணன் பார்த்த தன் தந்தையின் உருவம். ஆனால்
உருவம் சிதைந்திருந்தது.

125

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


“மகனே:” “மகனே” என்றான் ஆவி வடிவில் இருந்த
“அங்கப்பன்.”

“பேங்க: பேங்க:” என்று அ ங்கப்பன் கை


அசைத்தான். வாழ்ந்த காலத்தில் புறக்கணித்த மகனை மறைந்த
காலத்தில் பார்த்தது “அங்கப்பன்”. அதேவேளையில்
“மாணிக்கம்” உருவம் கலைந்தது . அடுத்த கணம்
மாணிக்கத்தின்மீது அங்கப்பன் பாய்ந்தான்.

“மாணிக்கம்” அலறலுடன் மறைந்தான்

இக்கட்டான நேரத்தில் ‘அங்கப்பன்’ ஆவி வந்து


மகனையும் மருமகனையும் காப்பாற்றிவிட்டது. ஹெலிகாப்டர்
கீழே இறங்கியது.

ஹெலிக ப்டரில் ஏறி யது ம் கீழே மணிவண்ணன்


பார்த்தான். மாளிகை முழுமையும் தீப்பற்றி எரிந்து
கொண்டிருந்தது.

தன் தாயார் மரகதத்தை நினைத்துக்கொண்டான். கடைசி


நேரத்தில் “அப்பா” வந்து காப்பாற்றியதையும் நினைத்துக்
கொண்டான். வானத்தை நோக்தி அவன் கைகன் குவிந்தன.

126

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000


þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
முடிவு

மகன் மாண்டான் என்று அறிந்து பரமநாயகம் குலுங்கிக்


குலுங்கி அழுதார்.

கலியப்பெருமாளின் அலுவலகத்திற்கு ச் சென்று


பத்திரங்களை மணிவண்ணன் பர்வையிட்டான். தன்
தந்தையின் சொத்தில் தனக்கு எந்தப் பங்கும் வேண்டாம் என்று
மணிவண்ணன் கூறி விட்டான். தங்களுக்காக உயிர்ந்த்த
கலியப்பெருமாள் குடும்பத்துக்கும் வைரப்பன் குடும்பத்துக்கும்
கணிசமான பங்கும் ரோஸ்லின் நடத்தும் அனாதை இல்லத்துக்கு
ஒரு பங்கும் சேரும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மூன்று வரங்களில் அந்த ஏற்படுகளை


மணிவண்ணன் செய்தான். இரண்டு முறை அவள்
குவாந்தானுக்கும் கோலாலம்பூருக்கும் போகவேண்டி இருந்தது

மணிவண்ணனும் கலாவும் வைரப்பன் வீட்டிற்கே


சென்றனர்

வைரப்பன் மனைவி கையெடுத்துக்கும்பிட்டாள்

“மீனாட்சி , உன் அப்பா உள்ளைப்பற்றித்த்ன்


பேசிக்கிட்டே இருப்பாரு. நீ படிச்சு வரணும். சிங்கப்பூர்லேயே
உனக்கு ஒரு வேலை வாங்கிக்கொடுத்துடுவோம். எங்க மகனாக
எங்க வீட்டிலேயே இருந்துடலாம்” என்றாள் கலா, மீனாட்சியின்
கன்னத்தைத் தடவிக்கொடுத்தவாறு.

128
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
மீனாட்சி சிரித்தாள்.

அப்போது::

மரத்தாண்டவருக்குப் பால் அபிஷேக ம் செய்து


கொண்டிருந்தார் ஒரு பெரியவர் பால் முருகன் திருமுகத்தில்
வழிந்தோடியபோது...

“பாரய்யா:. முருகன் சிரிக்கிற மாதிரி இல்ல?” ஏன்றார்

“மாதிரி என்னைய்யா மாதிரி, அவன் சிரிக்கிறான்,”


என்றார் வேறு ஒருவர்

129
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000
Unremittingly dark and menacing. The
Novel exposes the mindless thirst for
Women and wealth in the mansion…
Novel with twists and turns written in a
Highly readable style for persons off all
Ages.
புத்தகத்தினிருந்து அகற்ற மனமில்லாமல் ‘அந்த
மாளிகைக்குள்ளேயே’ சன்று விடும் அளவிற்கு விறு
விறுப்பு.

T.Durairajoo
Lecturer, Subject head
Catholic Junior college
“எம் கே நாரயணனின் அற்றோரத்தில் ஒரு மாளிகை.
சிங்கப்புரில் தரமான மர்மக் கதைப் புத்தகம் இல்லையே
என்று ஏங்கிய நஞ்சங்ணிளை நிறைவு செய்யும் அளவிற்கு ஒரு
மர்மம், அதில் ஒரு பயங்கரம். புத்தகத்திள் ஒவ்வொரு
பக்கத்தையும் புரட்டும் போதே வியர்த்து விடுகிறதே!
அடுத் ுஎன் !அடுத்ரஎன்ள!என் கண்களைப்
Radha Kasiramu
Journalist-Special reports

þÿAll rights reserved. Ž®Í •Ç. ¨¾°¾¯£©Í, 2000

You might also like