Professional Documents
Culture Documents
சோற்றுக்கணக்கு விமர்சனம்
சோற்றுக்கணக்கு விமர்சனம்
உணவு என்பது உயிர்தான்! எனவே அதைக் கொடுப்பவர் யாராக இருப்பினும் அவர்கள் கடவுளுக்கு
நிகராகப் போற்றத் தகுந்தவர். பலனைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலையின்றி எல்லோருக்கும் உணவு
தரும் கெத்தேல் சாகிப் அட்சயபாத்திரம் ஏந்திய மணிமேகலையின் மறு அவதாரம்தான். அவர் ஓர்
அன்னதாதா; உண்மையான ஆன்மீகவாதி. இந்த உலகில் எத்தனையோ அவதார புருஷர்கள்
தோன்றியிருக்கலாம். அவர்களுக்கு எல்லாம் சற்றும் இளைத்தவரல்ல கெத்தேல் சாகிப்.
உறவும் சரி, பெற்ற தாயும் சரி சோற்றுக்குக் கணக்குப் பார்க்கும்போது கெத்தேல் சாகிப்பின் இந்தப்
பண்பு வார்த்தைகளால் அளவிட முடியாதது. அவர் உணவு விடுதி நடத்துகிறார். எல்லோருக்கும்
இலவசமாக உணவு கொடுக்கிறார். பணம் இருப்பவர்கள் கொடுக்கலாம், இல்லாதவர்கள் வெறுமே
சாப்பிட்டுப் போகலாம் என்பது ஒரு பக்கமிருப்பினும், அதைச் செய்யும் விதத்தில் அன்பு, இரக்கம்,
பாசம் இருப்பது அவசியம். இல்லையேல் அந்தச் செயலால் ஒரு பயனும் இல்லை. இலவசம்
என்பதற்காகச் சாப்பிடுபவன் குற்ற உணர்வு இல்லாமல் சாப்பிடவேண்டும் என்ற அவரின் உயர்ந்த
பண்பு இதனால் வெளிப்படுகிறது. அது மட்டுமல்ல, அந்த உணவின் ருசி, இதுவெறும் கடனுக்காகச்
செய்யும் காரியமல்ல கடமைக்காகச் செய்யும் காரியம் என்பதையும் நமக்குக் காட்டுகிறது. இங்கேதான்
கெத்தேல் சாகிப் வானளவு உயர்ந்து நிற்கிறார். இது அவரது முதல் பரிமாணம்.
சோற்றுக்கணக்கு கேசவமணி
மனிதன் எதற்கு வேண்டுமானாலும் கணக்குப் பார்க்கலாம்.ஆனால் சோற்றுக்கு கணக்குப் பார்
க்கலாமா? உண்மையில்உற்றார் உறவினர் என்பவர்கள் கணக்குப் பார்க்கத்தானே
செய்கிறார்கள்? அப்படியிருக்கும் இந்தக் காலத்தில் ஒரு உணவுவிடுதி நடத்துபவர் அப்படி
இருக்கமுடியுமா? முடியும் என்பதை ஜெயமோகனின் இந்தக் கதை சொல்கிறது. ஜெயமோகனின்
அறம் சிறுகதைகளில் சோற்றுக் கணக்கு ஆகச்
சிறந்தகதையாகும். இந்தக் கதை தன்னுள் பொதிந்து வைத்திருக்கும்
நுட்பங்கள் அநேகம். இந்தக் கதை நம்முள் ஏற்படுத்தும் தாக்கம்
ஆழமானது. கதையைப் படித்து முடித்ததும் நம் மனம் கொள்ளும்பரவசம், நம் மூளையில் ஏற்ப
டும் பாய்ச்சல் வார்த்தையில்சொல்லும் தரமன்று.
பசி எவ்வளவு கொடுமையானது என்பதை நாம் அறியாதவர்கள்அல்ல. மனிதனுக்கு அவனுடை
ய வாழ்வில் எத்தனையோஇல்லாமை இருக்கலாம் ஆனால் உணவு இல்லாமையைப்போலக்
கொடியது வேறு ஒன்றுமில்லை. சங்க காலக்காப்பியமான மணிமேகலை உணவையும் பசியையு
ம் பற்றிப்பேசுகிறது. அட்சயபாத்திரம் பெற்ற மணிமேகலையிடம்தீவதிலகை என்ற பெண் இவ்
வாறு சொல்கிறாள்:
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உயிர்க் கொடை பூண்ட உரவோய்!
பசியைப் பொறுக்கமுடியாத ஏழைகளின் வேதனையைப்போக்குவதுதான் இந்த வாழ்க்கைக்கு
உரிய உண்மையான நெறி.அணுக்களால் நிறைந்த இந்த உலகத்தில்வாழ்பவர்களுக்கெல்லாம் நீ
உணவு கொடுத்தால், அதுஅவர்களுக்கு உயிரைக் கொடுத்ததற்குச் சமம். ஆகவே,உன்னுடைய
அறிவைச் சரியானபடி பயன்படுத்து, எல்லாருக்கும்உயிரைத் தானமாகக் கொடு! என்று சொல்வ
தாக இப்பாடலைபாடியிருக்கிறார் சீத்தலைச் சாத்தனார்.
உணவு என்பது உயிர்தான்! எனவே அதைக் கொடுப்பவர் யாராகஇருப்பினும் அவர்கள் கடவு
ளுக்கு நிகராகப் போற்றத் தகுந்தவர்.பலனைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலையின்றி எல்லோருக்கு
ம்உணவு தரும் கெத்தேல் சாகிப் அட்சயபாத்திரம் ஏந்தியமணிமேகலையின் மறு அவதாரம்தா
ன். அவரைப் பற்றியஉருவம் நம் கண்முன் விரியும் தருணத்தில், கண்ணதாசனின்,
”கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவேஆனாலும் கலங்கமாட்டேன்” என்
ற வரிகள் மனதில்தன்னியல்பாக ஓடுகிறது. அவர் ஓர் அன்னதாதா; உண்மையானஆன்மீகவாதி
. இந்த உலகில் எத்தனையோ அவதார புருஷர்கள்தோன்றியிருக்கலாம் அவர்களுக்கு எல்லாம்
சற்றும்இளைத்தவரல்ல கெத்தேல் சாகிப்.
கெத்தேல் சாகிப்பை நாம் முழுவதுமாகப் புரிந்துகொள்ளஜெயமோகன் காட்டும் மூன்று காட்சிக
ளின் சித்தரிப்பும், அந்தச்சித்தரிப்பிலிருந்து எழும் அவரது மூன்று பரிமாணங்களையும்நாம் உ
ணரவேண்டியது அவசியம்.
முதல் காட்சி:
மாமிக்கு கொஞ்சம்கூட மனமில்லை என்பது அன்றைக்குச்சாயங்காலம் சாப்பிடும்போதே தெரி
ந்தது. எல்லாரும் அப்பளம்பொரியல் சாம்பாருடன் சாப்பிடும்போது என்னைஅழைக்கவில்லை.
சாப்பிட்டு முடித்தபின்னர் அடுப்படியில் ஒருஅலுமினிய பாத்திரத்தில் எனக்கு தண்ணீர்விட்ட
சோறுஅதிலேயே விடப்பட்ட குழம்புடன் இருந்தது.
இரண்டாம் காட்சி:
அம்மா நல்ல அரிசி வாங்கி மீன்குழம்பு வைத்து அவளேபரிமாறுவாள். ஆனால் எத்தனையோ
காலமாக நீண்டு நின்றவறுமை. அவளுக்கு பரிமாறத்தெரியாது. ஒரு கண் எப்போதும்பானையி
ல் இருக்கும் சோறையும் சட்டியில் இருக்கும்குழம்பையும் கணக்குபோடுவதை தவிர்க்க தெரி
யாது.அகப்பையில் அவள் சோறோ குழம்போ அள்ளினால் அரைவாசிதிரும்ப கொட்டிவிடுவா
ள். இன்னும் கொஞ்சம் குழம்பு என்றால்அவளுடைய அகப்பை சில சொட்டுகள் தான் அள்ளு
ம். கையோமனமோ குறுகிவிட்டது. சாளைப்புளிமுளமும் சம்பா அரிசிசோறும் அவள் அள்ளி
வைக்கையில் நான் நாலாவதுஉருண்டைச் சோறில் வயிறு அடைத்த உணர்வை அடைவேன்.
அந்த சோற்றை அள்ளி வாயில் போடுவதே சலிப்பாக தெரியும்.பலவீனமாக ’சாப்பிடுடா’ என்
பாள் அம்மா.
மூன்றாம் காட்சி:
என்னருகே வந்தவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார்.
‘எந்தாபுள்ளேச்சன், புத்தனா வந்நதா?’ என்றார். என்னை வெள்ளாளன்என்று எப்படி கவனித்தா
ர் என்று வியந்து பேசாமல் இருந்தேன்.சோற்றைக் கொட்டி அதன் மேல் குழம்பை ஊற்றினார்.
ஒருபெரிய பொரித்த சிக்கன் கால். இரண்டு துண்டு பொரித்த மீன்.
‘தின்னு’ என்று உறுமியபின் திரும்பிவிட்டார். அதற்கு எப்படியும்மூன்று ரூபாய்க்குமேல் ஆகிவி
டும். என் கைகால்கள் பதறஆரம்பித்தன. சோறு தொண்டையில் அடைத்தது. சட்டென்றுதிரும்பி
ய சாகிப் ‘நிங்ங அவிடே எந்து எடுக்கிணு? தின்னீன்பிள்ளேச்சா’ என்று ஒரு பயங்கர அதட்ட
ல் போட்டார். அள்ளிஅள்ளி சாப்பிட்டேன். அந்த ருசி என் உடம்பெல்லாம் பரவியது.ருசி! கட
வுளே, அப்படி ஒன்று உலகில் இருப்பதையே மறந்துவிட்டேனே. என் கண்களில் இருந்து கண்
ணீர் கொட்டி வாய்வரைக்கும் வழிந்தது.
உறவும் சரி, பெற்ற தாயும் சரி சோற்றுக்குக் கணக்குப்பார்க்கும்போது கெத்தேல் சாகிப்பின் இந்
தப் பண்புவார்த்தைகளால் அளவிட முடியாதது. அவர் உணவு விடுதிநடத்துகிறார். எல்லோருக்
கும் இலவசமாக உணவு கொடுக்கிறார்.பணம் இருப்பவர்கள் கொடுக்கலாம், இல்லாதவர்கள்
வெறுமேசாப்பிட்டுப் போகலாம் என்பது ஒரு பக்கமிருப்பினும், அதைச்செய்யும் விதத்தில் அன்
பு, இரக்கம், பாசம் இருப்பது அவசியம்.இல்லையேல் அந்தச் செயலால் ஒரு பயனும் இல்லை.
இலவசம்என்பதற்காகச் சாப்பிடுபவன் குற்ற உணர்வு இல்லாமல் சாப்பிடவேண்டும் என்ற அவ
ரின் உயர்ந்த பண்பு இதனால்வெளிப்படுகிறது. அது மட்டுமல்ல, அந்த உணவின் ருசி, இதுவெ
றும் கடனுக்காகச் செய்யும் காரியமல்ல கடமைக்காகச்செய்யும் காரியம் என்பதையும் நமக்குக்
காட்டுகிறது.இங்கேதான் கெத்தேல் சாகிப் வானளவு உயர்ந்து நிற்கிறார். இதுஅவரது முதல் பரி
மாணம்.
தான் பல வருடங்களாக சாப்பிட்டதற்கு ஒட்டுமொத்தமாகபணத்தை உண்டியலில் போடுகிறான்
கதைசொல்லி. ஒரு பக்தன்கடவுளின் சன்னிதியில் உண்டியலில் காணிக்கையிடும்காட்சிக்கு நிக
ரானது இது. கடவுளுக்கு நாம் ஏதேனும் உபகாரம்செய்யமுடியமா? இருந்தும் நம் சிற்றறிவு அதி
ல் சற்றே திருப்பதிஅடைகிறது. அவரது சோற்றுக் கணக்கை எத்தனை எத்தனைபணம் கொட்டி
க் கொடுத்தாலும் தீர்க்கத்தான் முடியுமா? ஏழேழுஜன்மத்திற்கும் தீர்க்க இயலாத ஒரு கடன் அ
ல்லவா? கெத்தேல்சாகிப் அவனைப் பார்த்து சற்றே தலையசைத்து ஒரு பார்வைபார்த்து விடமா
ட்டாரா என்ற ஏக்கம் அவனுக்கு மட்டுமல்லநமக்கும் ஏற்படுகிறது. ஆனால் அப்படி பார்த்துவி
ட்டால் அவர்செய்த காரியத்தின் மகத்துவம் நமக்கு விளங்காமலேபோய்விடும். மாறாக நம் அ
கங்காரம்,
“பார்த்தாயா இதுவரைசாப்பிட்டதற்கு மொத்தமாக கணக்குத் தீர்த்துவிட்டேன்” என்றுகொக்கரிக்
கும். இத்தகைய காரியத்தைச் செய்வதும், அதைஅன்புடன் செய்வதும் மட்டும் போதுமானது அ
ல்ல. மாறாகஅதற்கான பலனின் மீதும் பற்று வைக்காமல் இருப்பதுபோற்றுதற்குரியது. இந்த இ
டத்தில், கீதை காட்டும்கிருஷ்ணனின் தரிசனம் போன்று, கெத்தேல் சாகிப்பின்விஸ்வரூப தரிசன
ம் வெளிப்படுகிறது. நாம் அவரைக் கண்டுபரவசமடைந்து பேச்சடைத்து நிற்கிறோம். இது அவர
துஇரண்டாவது பரிமாணம்.
அவர் வெறும் உணவை மட்டும் தன் வாடிக்கையாளர்களுக்குபரிமாறவில்லை மாறாக உணவுட
ன் சேர்த்து அற உணர்வையும்பரிமாறுகிறார். இந்த அறம், நேர்மை, அன்பு, இரக்கம் என்பதுஎப்
போதும் ஒரு தரப்பை மட்டும் சார்ந்ததல்ல. இரண்டுதரப்பையும் சார்ந்தது. எனவே ஒரு தரப்பு
மட்டும் தீவிரத்துடனும்,தீரத்துடனும் இவற்றை நடைமுறைப் படுத்தும்போது அடுத்ததரப்பினரு
ம் அவற்றைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம்ஏற்படுகிறது. இதுவே காந்தியடிகள் மேற்கொண்ட
அகிம்சையின்அடிப்படைத் தத்துவம். ஆகவே கெத்தேல் சாகிப்பின் இந்தப் பண்புகதைசொல்லி
யிடம் இயல்பாகப் படிந்து விடுகிறது. கிடைத்தபணத்தை தன் அத்தையிடம் கொடுத்து அவள்
கணக்கைத்தீர்க்கப்போகிறான் என்றே நாம் நினைக்கிறோம். ஆனால்அவளது மகளைத் திரும
ணம் செய்வதன் மூலம் அந்தக்கணக்கைத் தீர்க்கிறான். தன்னைப் புறக்கணித்துஅவமானப்படுத்
திய அத்தையின் மகளைக்கட்டிக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் அவனுக்கு இல்லை
.இருந்தும் அப்படி ஏன் செய்கிறான் என்றால் அதற்குக் காரணம்கெத்தேல் சாகிப்புதான். அந்த
உணர்வை அவனுக்குக் கொடுத்ததுஅவர்தான். இங்கே அவரது மூன்றாவது பரிமாணத்தை நாம்
உணர்ந்து கொள்கிறோம்.
சுருங்கச் சொன்னால்,
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கான பொருள்கெத்தேல் சாகிப்பின் வாழ்க்கைதான்.
உலகில் எங்கேயும்எப்போதும் இப்படியான மனிதர்கள் தோன்றியபடிதான்இருக்கிறார்கள். அவ
ர்களின் இருப்பு பிறரையும் அவ்வாறாகமாறுவதற்குத் தூண்டுகோலாக அமைகிறது. அதுவே ம
ண் மீதானஇந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதாக இருக்கிறது.இவையெல்லாம் கெத்தேல் சாகி
ப்பை நம் உள்ளத்தில்என்றென்றுமாக நிலைத்து நிற்பவராகச் செய்து விடுகிறது.இத்தனையும் இ
ந்தக் கதையில் வெளிப்படுவதன் மூலம் இதுஎன்றென்றைக்குமாக பேசப்படும் ஒரு கதையாக
ஆகியிருக்கிறது.
சோற்றுக் கணக்கு மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் கதை.எப்போது படித்தாலும் புதிது
போல இந்தக் கதை என்னைவெகுவாக அலைக்கழிக்கிறது. படித்துப் படித்துத் தீராத கதை இது
.