You are on page 1of 6

மேன்மைமிகு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்

சங்கராபுரம்
I.A.No. 110 / 2011

In

O.S.No. 73 / 2009

பாத்திமாபீ ... மனுதாரர்/வாதி

எதிர்

அல்லாபாஷா வகையறா ... எதிர்மனுதாரர்கள்


/பிரதிவாதிகள்

ஆணையர்/வழக்கறிஞர் தாக்கல் செய்யும் ஆணையர்


அறிக்கை
மேற்படி வழக்கின் இறுதிநிலை தீர்ப்பாணை மனுவில் குறிப்பிட்டுள்ள மனு
சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து தரும்படி சமூகம் நீதிமன்றம்
எனக்களித்த உத்தரவினைத் தொடர்ந்து இரு தரப்பு வழக்கறிஞர்கள்
முன்னிலையிலும் வாதி, பிரதிவாதிகள் முன்னிலையிலும், கிராம நிர்வாக
அலுவலர் உதவியுடன் கடந்த 3.10.2015 அன்று காலை சுமார் 10 மணியளவில்
மனு சொத்துக்களை பார்வையிட்டு கீழ்கண்டவாறு அறிக்கை தாக்கல்
செய்யப்படுகிறது.

1. மனு சொத்துகள் மொத்தம் 10 அயிட்ட சொத்துக்களாகும். இதில் 1 முதல் 8


அயிட்டங்கள் ராயசமுத்திரம் கிராம எல்லையில் பயிர் செய்யக்கூடிய விவசாய
நிலங்களாகும். 9, 10 அயிட்டங்கள் வடபொன்பரப்பியிலிருந்து பிரம்மகுண்டம்
செல்லும் சாலையில் எதிரெதிராக அமைந்துள்ள மெத்தை வீடும், வீட்டு மனையும்
ஆகும். 1,2,3,5,6,7,8, அயிட்ட சொத்துக்களின் மொத்த விஸ்தீரணம் 128.50 ஏர்ஸ்
அதாவது 3 ஏக்கர் 17 செண்ட் ஆகும். இதில் மனுதாரர்/வாதியின் 1/6 பாகம் 0.53
செண்ட் ஆகும். மேற்படி சொத்துக்களில் தனித்தனியே மனுதாரர்/வாதியின்
பாகத்தை ஒதுக்கீடு செய்தால் அவருக்கு பாதை ஒதுக்கீடு செய்வதிலும்,
பொதுக்கிணற்றிலிருந்து நீர் இறைக்கவும், இறைப்பு வாய்க்கால் அமைக்கவும்
முடியாத சூழல் உள்ளதோடு, அதிகப்படியான நிலங்களும் வீணாகும் சூழ்நிலை
உள்ளது. மேலும் எதிர்மனுதாரர்கள்/பிரதிவாதிகள் தங்களுக்குண்டான பாகத்தை
அனுபவம் செய்வதிலும் வசதிக்குறைவு ஏற்படும் சூழ்நிலையில் மனுச்
சொத்துக்கள் உள்ளது. ஆதலால் ஒரே சொத்தில் மனுதாரர்/வாதிக்கு பாகம்
ஒதுக்கப்படுகிறது.
2. மேலும் மனு சொத்தில் 1,2,3 வது அயிட்டமாக குறிப்பிடப்பட்டுள்ள ச.எண்
47/1, 47/2, 47/3 ஆகிய மூன்று அயிட்ட சொத்துக்களும் அருகருகில்
அமைந்துள்ளது. இது ஆணையர் வரைபடம் 1-ல் ABCD எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர்/வாதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சொத்திற்கு
நான்கெல்லைகள் ச.எண். 47/1 ல் ஷேக் காசீம் நிலத்திற்கும் கிழக்கு, ச.எண்.
46/1 ல் சின்னம்மாள் இடத்திற்கும் மேற்கு, ச.எண். 47/2 இடத்திற்கும் தெற்கு,
ச.எண். 47/4,7 ல் தனுசு நாயுடு, ஜெயராம நாயுடு இடத்திற்கும் வடக்கு, இதன்
மத்தியில்

..2..

மனுதாரர்/வாதிக்கு ச.எண் 47/1 ல் 0.15 செண்ட்டையும், 47/3 ல் மொத்த


விஸ்தீரணமான 38 செண்ட்டையும் சேர்த்து ஒரே அளவாக அவரது பாகமான
1/6 அதாவது சுமார் 0.53 செண்ட்டையும், 47/2 ல் அமைந்துள்ள கிணற்றில் 1/6
பாகத்தையும், 47/2 லிருந்து மனுதாரர்/ வாதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 0.53 செண்டு
வரை இறைப்பு வாய்க்காலையும் ஒதுக்கலாம் என பரிந்துரை செய்கிறேன்.

3. மனு சொத்தில் 4 வது அயிட்டமாக குறிப்பிடப்பட்டுள்ள ச.எண் 18/2


அயிட்ட சொத்து மனுதாரர்/வாதி குடும்பத்திற்கு சொந்தமான சொத்து அல்ல.
அது நல்ல தண்ணீர் குளம் என்று அழைக்கப்படும் குட்டை ஆகும்.
மனுதாரர்/வாதி மனுச்சொத்தை அவர்களுக்குண்டான சொத்து என்று மனுவில்
தவறாக குறிப்பிட்டுள்ளார்.

4. மனு சொத்தில் 9,10 என்ற இரு அயிட்ட சொத்துக்களில் மனுதாரர்/ வாதியின்


பாகமானது மிகக்குறைவாக இருப்பதாலும், ஒதுக்கீடு செய்வது சிரமமாக
இருப்பதாலும், 10 வது அயிட்ட சொத்தில் மனுதாரர்/வாதிக்கு உள்ள
பாகத்தையும் சேர்த்து 9 வது அயிட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் 10
வது அயிட்ட சொத்தில் இரண்டு அடுக்கு மெத்தை வீடு கட்டி ஏற்கனவே
மனுதாரர்/வாதியின் உறவினர்கள் குடியிருந்து வருகிறார்கள். 9 வது அயிட்ட
சொத்தில் தென்மூலையில் சிறிய மாட்டுக் கொட்டகை அமைத்து
மனுதாரர்/வாதியின் உறவினர்கள் அனுபவம் செய்து வருகிறார்கள். ஆகவே 10
வது அயிட்ட சொத்தின் நிலமதிப்பையும், கட்டிட மதிப்பையும் கணக்கிட்டு
மனுதாரர்/வாதிக்கு அவரது பாகமான 1/6 பாகமாக 9 வது அயிட்ட சொத்தின்
முழு விஸ்தீரணமான 173 சதுர மீட்டர் அதாவது 5 ½ செண்ட் முழுவதும்
மனுதாரர்/வாதிக்கு பாகமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது ஆணையர்
வரைபடம் 2-ல் ABCD என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் நான்கெல்லைகள்
ச.எண் 144/8 மனைக்கும் கிழக்கு, ச.எண் 144/10 மனைக்கும் மேற்கு,
ரோட்டிற்கும் வடக்கு, ச.எண் 143 விற்கும் தெற்கு, இதன் மத்தியில்
மனுதாரர்/வாதிக்கு அவரது பாகத்தை ஒதுக்கலாம் என பரிந்துரை செய்கிறேன்.

5. மேற்படி கிராம எல்லையில் உள்ள சொத்துக்களில் மண்வளத்தையும்,


தற்போதைய விலைமதிப்பையும் கணக்கிட்டு, அனுபவம் செய்வதற்கு வசதியாக
யாருக்கும் பாதகமில்லாமல் மனுதாரர்/வாதிக்கு ஆணையர் வரைபடத்தில்
கண்டுள்ளவாறு நிலங்கள் மற்றும் வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சில அயிட்ட சொத்துக்களை அளவீடு செய்தபோது மனுதாரர்/ வாதிக்கு ஒதுக்கீடு
செய்வதில் சிரமங்களும், பேதங்களும் ஏற்பட்டதால் அதற்கு ஈடான மதிப்புடைய
மற்றொரு சொத்தில் மனுதாரர்/வாதிக்கு சொத்துக்கள் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளன.

6. ஆகவே கனம் நீதிமன்றம் அவர்கள் தயவு செய்து நீதிமன்ற


ஆணையர்/வழக்கறிஞர் ஆகிய நான் மேற்படி சொத்துக்களை பார்வையிட்டு
மேற்கண்ட வகையில் பாகப்பிரிவினை செய்து உத்தரவிடலாம் என பரிந்துரை
செய்து, சமூகம் நீதிமன்றம் எனக்களித்த உத்தரவை நிறைவேற்றி வரைபடத்துடன்
தாக்கல் செய்யும் இந்த ஆணையர்/வழக்கறிஞர் அறிக்கையை ஏற்றுக்கொள்ள
வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வழக்கறிஞர்/ஆணையர்

இணைப்பு;

1. ஆணையர் வாரண்ட் 2. மெமோ

3. ஆணையர் வரைபடம்

மேன்மைமிகு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்


சங்கராபுரம்
I.A.No. 110 / 2011

In

O.S.No. 73 / 2009

பாத்திமாபீ ... மனுதாரர்/வாதி

எதிர்

அல்லாபாஷா வகையறா ... எதிர்மனுதாரர்கள்


/பிரதிவாதிகள்

ஆணையர்/வழக்கறிஞர் தாக்கல் செய்யும் கூடுதல்


ஆணையர் அறிக்கை
மேற்படி வழக்கில் இறுதிநிலை தீர்ப்பாணை மனுவில் குறிப்பிட்டுள்ள மனு
சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து தரும்படி சமூகம் நீதிமன்றம்
எனக்களித்த உத்தரவினைத் தொடர்ந்து இரு தரப்பு வழக்கறிஞர்கள்
முன்னிலையிலும் வாதி, பிரதிவாதிகள் முன்னிலையிலும், கிராம நிர்வாக
அலுவலர் உதவியுடன் கடந்த 3.10.2015 அன்று காலை சுமார் 10 மணியளவில்
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்களை பார்வையிட்டு ஏற்கனவே ஒரு
முதல் ஆணையர் அறிக்கை மற்றும் வரைபடம் கடந்த 02.04.2016 ல் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

1. இந்நிலையில் மேற்படி வழக்கின் இறுதிநிலை தீர்ப்பாணை மனுவில்


குறிப்பிட்டுள்ள 9,10 வது அயிட்ட சொத்துக்களை மீண்டும் பார்வையிட்டு
அவற்றின் மனை மதிப்பு மற்றும் கட்டுமானங்களின் மதிப்பை தனித்தனியாக
தெரிவித்தும், மேற்படி அயிட்ட சொத்துக்களில் மனுதாரர்/வாதியின் பாகத்தை
சரியான மதிப்பில் பிரித்தும் மற்றுமொரு ஒரு கூடுதல் ஆணையர் அறிக்கை
தாக்கல் செய்யும்படி சமூகம் நீதிமன்றம் எனக்களித்த உத்தரவினைத் தொடர்ந்து
இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையிலும் வாதி, பிரதிவாதிகள்
முன்னிலையிலும் கடந்த 28.01.2017 அன்று காலை சுமார் 11.00 மணியளவில்
மனு சொத்துக்களை மீண்டும் பார்வையிட்டு கீழ்கண்டவாறு கூடுதல் அறிக்கை
தாக்கல் செய்யப்படுகிறது.

2. மனு சொத்தில் 9 வது அயிட்டமானது வடபொன்பரப்பி கிராமத்திலிருந்து


பிரம்மகுண்டம் செல்லும் தார் சாலையில் வடக்குபுறமாக அமைந்துள்ள ச.எண்
144/9 ஆகும். 9 வது அயிட்ட சொத்தில் ஏற்கனவே நான் பார்வையிட்ட போது
தென்மூலையில் சிறிய மாட்டுக் கொட்டகை அமைத்து மனுதாரர்/வாதியின்
உறவினர்கள் அனுபவம் செய்து வந்தார்கள். தற்போது மேலும் ஒரு சிமெண்ட்
சீட் போட்ட கூரையும், அதனுடன் சேர்ந்தாற்போல் பாத்ரூமும் கட்டி அனுபவம்
செய்து

..2..

வருகின்றனர். மேலும் மேற்படி சொத்தில் கிழக்குபுறத்தில் கால்நடைகளை


கட்டியும், மேற்குப் புறத்தில் விறகுகளை அடுக்கி வைத்தும் அனுபவம் செய்து
வருகின்றனர். மேற்படி சொத்தின் நீள அகல அளவுகள் ஆணையர் வரைபடம்
1 ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

3. மனு சொத்தில் 10 வது அயிட்டமானது வடபொன்பரப்பி கிராமத்திலிருந்து


பிரம்மகுண்டம் செல்லும் தார் சாலையில் 9 வது அயிட்ட சொத்துக்கு எதிர்
திசையில் தெற்குப்புறமாக அமைந்துள்ள ச.எண் 3/12 ல் அமைந்த மெத்தை வீடு
ஆகும். மேற்படி சர்வே எண்ணில் அமைந்துள்ள மெத்தை வீடு இரண்டு அடுக்கு
மெத்தை வீடு ஆகும். அதில் மனுதாரர்/வாதியின் உறவினர்கள் குடியிருந்து
வருகிறார்கள். மேற்படி மெத்தை வீடானது இரண்டு வேறு வர்ணங்களால்
வண்ணம் அடிக்கப்பட்டு காணப்பட்டது. அதில் மேற்குப்புறத்தில் உள்ள
பகுதியானது பச்சை மற்றும் நீல வண்ணங்களால் வர்ணம் அடிக்கப்பட்டு
இருந்தது. அதில் மேற்படி வீடானது கடந்த 28.09.2000 வருடத்தில்
கட்டப்பட்டதாக வீட்டின் முகப்பில் குறிப்புகள் காணப்பட
எதிர்மனுதாரர்கள்/பிரதிவாதிகளும் அதை உறுதி செய்தனர். கிழக்குப்புறத்தில்
உள்ள பகுதியானது வெள்ளை நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்டு காணப்பட்டது.
அதில் மேற்படி வீடு எப்போது கட்டப்பட்டது என்ற குறிப்புகள் ஏதுமில்லை.
எனவே எதிர்மனுதாரர்கள்/பிரதிவாதிகளை மற்றும் ஊர் பொதுமக்களை வினவிய
போது சுமார் 22 வருடங்கள் இருக்கும் எனக் கூறினார்கள்.

4. மேற்படி சாலையில் 9,10 வது அயிட்ட சொத்துக்களுக்கு அருகில் வெறும்


மனைகள் ரூ 50,000/-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனவே 10 வது
அயிட்ட சொத்தின் வெறும் மனை மதிப்பு 1 செண்ட் ரூ. 50,000 எனில் 0.04
செண்ட் ரூ. 2,00,000/- ஆகும். கிழக்குப்புற பழைய கட்டிடத்தின் மதிப்பு ரூ.
5,00,000/-. மேற்குப்புற புதிய கட்டிடத்தின் மதிப்பு ரூ.8,00,000/- ஆக 10 வது
அயிட்ட சொத்தின் மொத்த மதிப்பு ரூ.15,00,000/- ஆகும்.

5. மேற்படி சாலையில் 9 வது அயிட்ட சொத்தின் மனை மதிப்பு 1 செண்ட் ரூ.


50,000 எனில் தோராயமாக 173 சதுர மீட்டர் அதாவது 0.04 ½ செண்ட் ரூ.
2,50,000/- ஆகும். மனு சொத்துக்களின் நிலமதிப்பையும், கட்டிட மதிப்பையும்
கணக்கிட்டு மனுதாரர்/வாதிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய பாகம் 1/6 என்பதால்
அதன்படி அவருக்கு ஒதுக்க வேண்டிய சொத்தின் மதிப்பு ரூ. 2,50,000/- ஆனால்
9 வது அயிட்ட சொத்தின் மொத்த மதிப்பு 2,25,000/- எனவே அதில்
அமைந்துள்ள சிமெண்ட் சீட் கூரையின் மதிப்பு ரூ. 10,000/- மற்றும் பாத்ரூம்
மதிப்பு ரூ. 10,000/- மாட்டுக் கொட்டகை ரூ. 5000/ என சேர்த்து முழு
மதிப்பான ரூ. 2,50,000/- மதிப்புள்ள சொத்தான 9 வது அயிட்டம் 0.04 ½ செண்ட்
முழுவதும் மனுதாரர்/வாதிக்கு அவரது பாகத்தை ஒதுக்கலாம் என பரிந்துரை
செய்கிறேன். மேற்படி சொத்தின் நீள அகல அளவுகள் மற்றும் நான்கெல்லைகள்
ஆகியவை ஆணையர் வரைபடம் 2 ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

6. மேலும் 9,10 இரு அயிட்ட சொத்துக்களிலும் மனுதாரர்/வாதிக்கு உரிய


பாகத்தை ஒதுக்கினால் 10 வது அயிட்ட சொத்தான மெத்தை வீட்டை
இடித்துதான் ஒப்புதல் கொடுக்க இயலும் அதில் இரு தரப்பிலும் இழப்பு
ஏற்படுவதால் சமமான மதிப்புடைய 9 வது அயிட்டம் முழுவதையும் யாருக்கும்
இழப்பின்றி தற்போதைய மனை மதிப்பு மற்றும் அவற்றில் உள்ள
கட்டுமானங்களின் மதிப்பையும் கணக்கிட்டு, அனுபவம் செய்வதற்கு வசதியாக
யாருக்கும் பாதகமில்லாமல் மனுதாரர்/வாதிக்கு ஆணையர் வரைபடத்தில்
கண்டுள்ளவாறு 9 வது அயிட்டம் முழுவதும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

..3..
ஆகவே கனம் நீதிமன்றம் அவர்கள் தயவு செய்து நீதிமன்ற
ஆணையர்/வழக்கறிஞர் ஆகிய நான் மேற்படி சொத்துக்களை மீண்டும்
பார்வையிட்டு மேற்கண்ட வகையில் பாகப்பிரிவினை செய்து உத்தரவிடலாம்
என பரிந்துரை செய்து, சமூகம் நீதிமன்றம் கூடுதல் அறிக்கை தாக்கல்
செய்யும்படி எனக்களித்த உத்தரவை நிறைவேற்றி தாக்கல் செய்யும் இந்த
ஆணையர்/வழக்கறிஞர் அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுமாய்
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
வழக்கறிஞர்/ஆணையர்

இணைப்பு;

1. ஆணையர் வாரண்ட் 2. மெமோ

3. ஆணையர் வரைபடம்

You might also like