Professional Documents
Culture Documents
சாலை விபத்து
சாலை விபத்து
சிறுகதை எழுதுக.
மிதிவண்டியை ஓட்ட் ஆரம்பித்தான். தன் நண்பர்களின் செயலைக் கண்ட ரவி, உடனே அவர்களை
வழக்கம் போல ரகு, முகில், பராம் ஆகிய மூவரும் இணைந்தே ஆசிரியர் கொடுத்த வீட்டுப்
பாடங்கள் சார்ந்து பேசிக் கொண்டே நடந்தனர். அப்பொழுது ஒரு பெண்மணி சந்தையிலிருந்து ஒரு கூடை
நிறைய புத்தம் புதிய பசுமையான காய்கறிகளோடு தள்ளாடி சாலையில் விழுவதைக் கண்டனர்.
“இவர் என் அண்டை வீட்டார் போலத் தெரிகிறதே” என்று சந்தேகத்தோடு அப்பெண்மணியை நோக்கி
ஓடினான் முகில்.
”பாவம் இந்தப் பெண்மணி இவருக்கு நாம் உதவி செய்வதுதான் சிறப்பு” என்று கூறினான் பராம்.
“நான் தாமதமாக வீட்டிற்குச் சென்றால் அம்மா கோபம் கொள்வார்” என்று கவலை பட்டான் ரகு. தான்
நல்ல நோக்கத்திற்காகத்தான் தாமதமாக வீடு திரும்பினால் கண்டிப்பாக அம்மா கோபம் கொள்ளாமல்
பாராட்டுவார் என்று மனதிற்குச் சமாதானம் கூறி அப்பெண்மணிக்கு உதவ முனைந்தான்.
உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. “பசி தாங்க முடியவில்லை, வீடு திரும்பியது அம்மா
சமையலை ஒரு வெட்டு வெட்டிடனும்” என்று ஒரே மூச்சாக ஓட்டமும் நடையுமாகப் பரபரப்பாக வீடு
திரும்பிக் கொண்டிருந்தான் கதிரவன். அப்பொழுது கறும் புகையுடன் வேகமாகத் தீப்பற்றி எரியும் வீட்டைக்
கண்டான் கதிரவன். கதிரவன் செய்வதறியாது சிலையானான், சூழ்நிலையைச் சுதாகரித்துக் கொண்டு
சமயொசித புத்தியுடன் செயல்பட தீர்மானித்தான். அறிவுக்கு விஷயம் மெல்ல மெல்லப் புரியத்
தொடங்கியது. மன மாற்றத்திற்கு விதை விதைத்தது.
உடனே, சுற்றும் முற்றும் பார்த்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை. சற்று
தொலைவில் இருக்கும் பொது தொலைபேசியின் மூலம் தீயணைப்பு நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு
விபரத்தைக் கூற முடிவெடுத்தான். இரண்டெட்டில் ஓடி அவசர எண் 999 என்ற இலக்கத்தை அழுத்தி
பதற்றத்திலும் விபரத்தைத் தெளிவாகத் தெரிவித்தான். அம்பு போல் தீயணைப்பு வண்டியும் விரைந்து
சம்பவம் நடக்கும் இடத்தை நோக்கி வந்தடைந்தது. தீயணைப்பு வீரர்களும் தங்களின் அயராத பணியைச்
செவ்வனே செய்ய மின்னல் வேகத்தில் களம் இறங்கினர். வீட்டு உரிமையாளர் தனது வேலை முடிந்து வீடு
திரும்பியதும் தமது வீடு தீப்பற்றி எரிவதைக் கண்டு கண்கள் அகல விரிந்தன. அதில் வியப்புக்குறியும்
கேள்விக்குறியும் தென்பட்டன. அவருடய மனைவியின் கண்ணீர் துளிகள் கன்னங்களை நனைத்தன.
கதிரவனால் பார்ப்பதற்கே முடியவில்லை. பின்னர், கதிரவன் நடந்தவற்றை வீட்டு உரிமையாளரிடம்
கூறினான்