Professional Documents
Culture Documents
ஆன்மீகம்-WPS Office
ஆன்மீகம்-WPS Office
அருமையான பொங்கலையும், புளியோதரையையும் செஞ்சு ... வயித்துல போட்டுட்டா ... அது சத்தாக உருமாறி
... ஆற்றலைக் கொடுத்துடுமா?
தின்னுட்டு, தின்னுட்டு தூங்கிகிட்டு ... அக்கம் பக்கத்துல இருக்கறவங்ககிட்டே வம்பு வளர்த்துகிட்டு ...
மரம், மட்டை, தண்ணி எல்லாத்தையும் ... இருக்கற வரைக்கும் தீர்த்துப்புட்டு, மேற்கொண்டு கெடைக்கம
இருக்கறத்துக்கு ... என்னென்ன வழியுண்டோ ... அத்தனை அட்டூழியத்தையும் பண்ணிக்கிட்டு
கெடக்கறத்துக்கா... இந்த மனம், எண்ணம், புத்தியெல்லாம் ... நம்மள நம்பி ஒப்படைக்கப் பட்டிருக்கு ?
அது என்ன?
அட, நம்ம மனம், புத்தி இதுகளை யெல்லாம் உணர மட்டுந்தானே முடியுது? தொட்டுப் பாக்க முடியாமில்லே?
இல்லை.
அப்போ மொதல்லேருந்து ஒரு பாட்டம் சொல்லிடுவோம். நமது உடல் உறுப்புகள் ... நமது காயம் ஆகும்.
கை, கால், மூக்கு, உடம்பு'னு ... ஸ்தூல உடல் பற்றி யாவரும் அறிவோம்.
ஒளி, ஒலி, நாற்றம், சுவை, ஊறு உணர்வு இவையும் ... இவற்றை அறியும் மனம், புத்தி அகங்காரமும் -புரியட்ட
காயமாகும்
நானாபுறமும் உடலில் பரவி ... வியாபித்து வரும் ... அசையும் காற்றாகிய பிராணனும், ஒரே பாதையில் நிலை
பெற்று நிற்கும் ... குண்டலினியும்.
அதை தெளிவான சொல்ல முடியாது. நாம நெனப்புல இருக்கற சங்கதி அத்தனையையும் தூக்கி வெளியே
கடாசிட்டோம்'னா … நான் என்கிற உருவகம் மட்டும் போயிடாம … திருட வந்த ஊட்டுல … கையும் களவுமா
மாட்டிக்கிட்டு … இருட்டுல முழிச்சிக்கிட்டு ஒக்காந்திருக்க திருட்டுப்பயலை மாதிரி … தனியா ‘நான்'
ஒக்காந்திருக்கறதை கண்டுபிடிச்சிடலாம்.
இந்த உயிர்தான் 'நான்' என்று சொல்வது தவறானது என்பதை assume பண்ணிக்கிட்டா போதும். பல
கொழப்பங்களை தவிர்த்து விடலாம்.
நான் என்கிற உணர்வை உண்டாக்குவது ஆணவ மலம் என்று சொல்வது சைவ சித்தாந்தம்.
நான் என்கிற உணர்வைத் தருவது பிரகிருதி என்று சொல்கிறது ... பதஞ்சலி யோகம்.
உயிருக்கு அறியாமையைத் தருவது ... பிரகிருதி. அந்த அறியாமை ... அவித்தை எனப் பெயர் பெற்றது.
“பல்லைப் பேத்துப் புடுவேன். நான் ரெண்டு டாக்டரேட் பட்டம் வாங்கி இருக்கேன். மூனாவதா ஒன்னுக்கு
கலிபோர்னியா யுனிவர்சிடி accorded sanction! … என்னையப் பாத்து அறியாமையில் உழல்கிறேன்'னு …
நாக்கு மேல பல்லைப் போட்டு பெணாத்திக்கிட்டு இருக்கே?”
Prof. Dr. சொடலைமுத்து, HoD, Department of Behavioral Science, SA diago university, USA.
இந்த அறியாமை வேற. எந்த அறியாமைய பத்தி நான் சொல்றேன்'றதை அறியாமையே … கத்திக்கிட்டு
கெடக்கீங்க?
Mr. சொடலை முத்து, உங்க வானளாவிய PhD க்களும், உலகளாவிய அனுபவ சேகரங்களுமே … நான்
சொல்லுற இந்த அறியாமைக்கு காரணம் !
மறுபடியும் என் பல்லைப் பேத்துப் புடாதீங்க. அப்புறம் முறுக்கு, சீடை பட்டாணியை எல்லாம் சாப்புட முடியாத
போயிடும்.
நம் உயிர் தோன்றும்போதே ... அதுவும் தோன்றிவிடுகிறது. எண்ணங்களை உருவாக்கி ... நம்மை வேறு
பாதைக்கு இட்டுச் சென்று ... உண்மைப் பொருளை அறியவிடாமல் செய்வதும் ... இந்த பிரகிருதிதான் .
அதேசமயம்...
பிராணன் என்பது எண்ணங்கள் கொள்ளும் போது -'நான் சிந்திக்கிறேன்'- என்னும் உணர்வை தந்து நிற்கும்
காற்று.
எண்ணங்களுக்கு உயிரும்,அறிவும்
- பிராணனின்றி மனம் செயல் படாது. பிராணக் காற்றாலேயே எண்ணங்கள் உருவாகிறது. மனம் என்கிற ஒன்று
உண்டாகிறது.
இவை தான் எண்ணங்கள் உருவாகக் காரணமானவை. பிராணனை சூரிய ஒளிக்கும் அபானனை சந்திர
ஒளிக்கும் ஒப்பிடுவர்.
- திருமந்திரம்.
பிராணனானது மனத்தோடு கூடி பெயர்நது
் போகாமல் ... அடங்கி இருந்தால் ... 'நான்' என்ற நினைப்பே
வராது.
- திருமந்திரம்
அவ்வாறு நீங்கும் வழியை அறிந்த பின் சிவபெருமான் இருக்கும் வாயுவை சேர்தல் உண்டாகும்.
அதில் ஒரு வாயு, இதில் ஒரு வாயு … இப்போ புதுசா மொளைக்க வச்சிருக்கியே … ‘சிவபெருமான் இருக்கும்
வாயு' … துக்கிரித்தனமா இருக்கு.
தெள்ளத் தெளிவா சொல்லுறேன் கேட்டுக்குங்கங்க சார். பத்து விதமான வாயு இருக்கு.
ஒரே ஒரு காத்து, ஆனா அது செய்யற செயலின் அடிப்படையில் பத்தாக பிரிச்சி வச்சிருக்காங்க நம்
முன்னோர்கள்
- போகர்
- வால்மீகர்
"காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகங்
மெய்தத
் ொழுயுஞ் சுழுமுனையே கம்ப மாகி"
- திருமூல நாயனார்
-ஔவையார்
ஹம் என்று பிராணன் வெளிச் சென்று “ஸ” என்று பிறகு உட்புகுந்து “ஹம்ச ஹம்ச” என்ற மந்திரம்
இயற்கையாகவே மூச்சு விடும், எல்லோராலும் ... ஜபிக்கப் படுகிறது.
சுவாச கதியாகிய 'ஹம் ... ஸ என்ற ஓட்டத்தை மடைமாற்றி ... “ஸோ ... ஹம் ஸோ ... ஹம்” என்ற மந்திர
உச்சாடனத்தை செய்வதே நம் வேலையாக இருக்க வேண்டும்.
நாம ஸோ… ஹம் வருதா வருதா' இதை கவனிச்சிக்கிட்டு ஒக்காந்திருந்தோம்'னா … வெறும் சோகம்தான்
வந்து சேரும்.
இதுவுமது ….
பிராணனும் அபானனும் மாறி மாறி ஏறியும் இறங்கியும் வரும் இடகலை பிங்கலை நாடிகளில் ஊறும் உயிர்
நடுவில் உயிரின் மூலம் உள்ளதை அறிந்து தெளியுங்கள்
ஒரு சுவாசம் சிவம் என்றும் மற்றது சக்தி என்றும் இரண்டும் புறப்படும் இடம் எது என்று கண்டால் சுழு முனை
என்றும் சொல்கிறது. அதை அறிந்து மேலேற வேண்டும் என்கிறது. அதாவது பிரானனையும் அபானனையும்
இயக்குவது சூழுமுனையில் உள்ள ஜீவன். அதை அறிந்து பின் மேலேற்ற வேண்டும் என்பது பொருள்.
கைலாயக் கம்பளிச் சட்டை முனி நாயனாரின் இன்னொரு பாடல்
பிராண யோகம் செய்ய தாமரையில் நூல் போல் உள்ள குண்டலினியையும், அதில் ஆடும் பிராண அபான
வாயுவையும் அறியலாம்.
அதன் இயக்கங்களை உற்று நோக்கி அறிந்து கொண்டால் அது ஞானமும் யோகமும் ஆகும்.
ஹம் என்று பிராணன் வெளிச் சென்று “ஸ” என்று பிறகு உட்புகுந்து “ஹம்ச ஹம்ச” என்ற மந்திரம்
இயற்கையாகவே எல்லா ஜீவர்களாலும் ஜபிக்கப் படுகிறது.
- யோகசிகோப நிஷத்து
"அறிந்திடும் பிராணன் தன்னை
- சிவஞான சித்தியார்
"எங்கு அறிவு இரண்டு பட்டதோ அங்கேயே அது பார்க்கிறது, முகர்கிறது, சுவைக்கிறது, தொடுகிறது,
அனைத்தையும் ஆத்மா உணர்கிறது.
எங்கு அறிவு இரண்டற்ற அத்வைதமாகி விட்டதோ காரியமும், காரணமும் இல்லததோ அங்கு அது
வாக்கினால் வர்ணிக்க முடியாததாகவும், உவமையற்றதாகவும், விளக்க முடியாததாகவும் உள்ளது."
- மைத்ராயணீ உபனிஷத்து
பிராணன் ... ஆத்மாவோடு இணைக்கப் பட்ட காற்று, அது சுவாசத்தோடு சம்பந்தப் பட்ட காற்று, அதன்
இயக்கம் வயிற்றிலிருந்து தலை உச்சி வரை உணரப் பட்டுள்ளது.
பிராணன் அபானன் இவை இரு முக்கிய காற்றுகள் இவற்றின் இயக்கம் உணர்வதற்கு அரிது. அவை
இரண்டும் உதிக்கும் இடம் சூழுமுனை. அவற்றை இயக்குவது ஜீவன். எல்லாவற்றையும் விட அதன்
இயக்கத்தாலேயே எண்ணங்களாகிய மனம் உண்டாகிறது. அறிவது ஆத்மாவே ஆகும். இது ஆகமப்
பிரமாணம் எனப் படும்.
நுரையீரல் தானாக சுருங்கி விரிவதில்லை. அதுவும் ஜீவனால் இயக்கப் படுகிறது.
The observer become observant. At the same time the observant is doing the business of observer.
Hence, the observant become observer.
கண்டு அறிந்து கொண்டிருந்த இவ்வுடல், பிராணனாகிய காற்று ஒடுங்காதிருக்கும் போதே இன்ப துன்ப
உணர்வுகளைக் கொள்ளாமல் உயிர்த்திருக்கும்.
(அதாவது பிராணனாகிய காற்று உடல் அறியும் போதும் (விழிப்பிலும்), அறியாத போதும் (தூக்கத்திலும்)
இயங்கும்) எனவே கண்டு அறிகின்ற வேறு ஒன்று உண்டு. அது ஒடுங்காமால் உடலை சேரும் போதே இன்ப
துன்ப உணர்வுகளை உடல் அறியும்.
- சிவஞான சித்தியார்
அறியாத போது (தூங்கும் போது) அடங்கியும், அறியும் போது (விழிப்பில்) உடலோடு கூடியும் இருந்தால், பிராண
வாயு அறிவதாக சொல்லலாம். உடல் உறங்கும் போது அறிவதில்லை அறிவும் இல்லை, மனம், புத்தி போன்ற
கரணங்களும் இல்லை. பிராணன் தான் அறிந்ததென்றால் அது ஓடும் போதே கரணம் நின்று போகாது
(அதாவது மனம் புத்தி இல்லாமல் போகாது). எனவே பிராணனை அடக்கியும் விட்டும் அறிவது ஆன்மாவே
ஆகும். (பிராணன் தான் அடங்குவதில்லை அதனால் அறிவதில்லை என்று சொன்ன பிறகு ஆன்மா
பிராணனை அடக்கியும் - விட்டும் அறிவதாக சொல்வது ஆன்மாவே பிராணனை பல நாடிகளில் செலுத்தி
அறிகிறது என்னும் பொருளை தருகிறது)
- பிரம்மானந்தச் சித்தர்
சூட்சும உடலில் உள்ள சக்கரங்களை அறிய முடியாதவர்கள் சாகாக் கால், வேகாத் தலை என்றும் சொல்லப்
படுகிற குண்டலினியை எவ்வாறு அறிவார்கள்?
கால் என்றால் பிராணன் சாகாக் கால் என்றால் நிலை பெற்ற பிராணனான குண்டலினியையே அது
குறிக்கிறது.
வேகாத் தலை என்பது அதன் பற்றும் இயல்பைக் குறிக்கிறது.
உயிரானது மூலப் பகுதியிலிருந்து முளைத்து வரக் காரணமான வேரை பிடுங்கி எறிய வேண்டும் என்று
பொருள்
- ஒவ்வையாரின் வரிகள்
"தவத்தின் வெப்பதாலும் பிராணாயாம வாயுவாலும், மனத்தின் ஒருமைப் பாட்டாலும் எழுப்பப்பட்ட அந்த சக்தி
நூலை எடுத்துக் கொண்டு ஊசி செல்வதைப் போல் சூக்ஷம்னா நாடி வழியாக மேலே செல்லுகிறது"
"எந்த வழியால் நோயற்ற பிரம்மாஸ்தானத்தை அடைய வேண்டுமோ அந்த வழியின் வாயிலை முகத்தால்
மறைத்துக் கொண்டு குண்டலினி பரமேசுவரி உறங்குகிறாள்.
தவத்தின் வெப்பதாலும் பிராணாயாம வாயுவாலும், மனத்தின் ஒருமைப் பாட்டாலும் எழுப்பப்பட்ட அந்த சக்தி
நூலை எடுத்துக் கொண்டு ஊசி செல்வதைப் போல் சுக்ஷம்னா நாடி வழியாக மேலே செல்லுகிறது.
வீணையினின்று எழும் உருவற்ற நாதம் பல வடிவில் பிரகாசிப்பது போல் சங்கம் முதலிய துவனிகள் தோன்றும்.
குழலோசை போலும் மயில் கூவுவது போலும் நாதம் தோன்றும். கபாலத்தின் நாலு வாயில்களின் மத்தியில்
ஆகாயத்தில் சூரியன் பிரகாசிப்பது போல் ஆத்மா பிரகாசிக்கும். இரண்டு வில்லின் மதியைப் போன்ற
பிரம்மரந்திரத்தில் ஆத்மாவாகிய தன்னை சாதாகனாகிய புருசன் யோகசக்தியால் காண்கிறான். அங்கு
மனது லயமடைகிறது. ரத்னப் பிரகாசம் நிலவில் மறைவது போல் நாதம் அங்கே பிந்துவில் ஒடுங்குகிறது. அது
மஹேசுவரன் உறைவிடம். எந்த புருசன் இதை அறிகிறானோ அவன் தான் தானாக விளங்கும் கைவல்யம்
எனும் இன்பத்தை அனுபவிக்கிறான்"
- தியான பிந்து உபநிஷத்து.
சொடலைமுத்து கேக்கறார் … என் PhD யை அநாயமாக முடிச்சிட்டேன். இது பெரிய தெண்ட கசமாலமா
தெரியுதே?
என் பல்லை பேக்க மாட்டேன்'னு உறுதிமொழி குடுத்தீங்க'னா … ஏன் வேஸ்டு கெடையாது'னு சொல்றேன்.
-சொடலை
பொழைச்சோம்.
கடலுல பாய்மரம் செலுத்தறத்துக்கு ... காற்றின் திசையறிந்து பாய்மரத்தை கட்டி உட்டுப்புட்டோம்'னா போதும்
... கையினால் துடுப்பு வலித்தலை நிறுத்திக்கலாம். படகு பாட்டுக்கு போயிட்டே இருக்கும். அப்பப்போ ...
பாய்மரத்துணியை தளர்வு இல்லாம செஞ்சிக்கிட்டு இருந்தால் போதுமானது
அப்பப்போ ... நிக்காம வெளியே போகுதா'னு மட்டும் போயி போயி பார்த்துக்கிட்டு இருந்தால் போதுமானது.
காற்று ஆலையில் (wind mill) ... இம்மாம் பெரிய விசிறியை ... முதலில் கொஞ்சம் நேரம் வரைக்கும் மட்டும்
சுழல வைக்க மின்சாரம் பாய்ச்சி மோட்டாரை போட்டு வைத்தால் போதுமானது.
பிறகு ... காற்றின் போக்குக்கு ஏற்ப ... விசிறி சுழல ஆரம்பித்துவிடும் ... அதுக்கப்புறம் அந்த சுழலுகின்ற
விசிறியானது மின்சாரம் அளிக்க ஆரம்பித்துவிடும்.
சில நுட்பங்கள் தெரிந்து வைத்துக் கொண்டு ... ஆரம்பத்தில் சிறிது பிரயாசைப்பட்டு ... நாம் எதிர்பப் ார்க்கும்
விஷயத்தை செய்ய ஆரம்பித்துவிட்டால் போதுமானது. பிறகு அந்த காரியம் தன்னாலேயே நடக்கும்!
அதை நாம் மறந்தாலும், நம்மை trigger செய்து நம்மை செய்யவைத்து ... அந்த செயல் தொடர்ச்சியாக
செயல்பட வைக்கும் பணியை ... அந்த system-மே கவனித்துக் கொள்ளும்.
நமது அப்போதைய பணி என்னவாக இருக்க வேண்டும் என்றால் ... அந்த செயலானது தங்குதடையின்றி
சென்று கொண்டிருக்கிறதா என்பதை மேற்பார்வை இடுவது மட்டுமே!
தியானம் பழக ஆரம்பிக்கும் அதே வேளையில் ... நமக்கு மிகமிகப் பிடித்தமான ஒரு செயலையும் செய்ய
ஆரம்பிக்க வேண்டும்.
இரண்டிலுமே கொஞ்சம் சரளம் கிடைத்தபின் ... எப்போது தியானம் செய்ய ஆரம்பிக்க நேரிடினும் ...
அச்செயலும் உடன்நிகழ்வாகக் கூடவரும்.
எப்பொழுது அந்த குறிப்பிட்ட செயல் செய்ய ஆரம்பித்தாலும், தியான நிலையும் உடன்நிகழ்வாகத்
தலைப்படும்.
உதாரணத்திற்கு, சித்தர்கள் ... மூச்சுப் பயிற்சியை சீரமைக்கும் தியான முறையை பழகி வந்துள்ளார்கள்.
கூடவே, மருத்துவம் என்ற மனித சமுதாயத்திற்கு பயன்படும் ஒரு செயலையும் உயிராக நினைத்தார்கள்.
தியானப் பயிற்சி கற்றார்கள். கூடவே மருந்து தயாரிப்பதை தொழிலாகச் செய்து ... அதில் நிபுணத்துவம்
பெற்றார்கள்.
இரண்டிலும் சற்றேக் கரைகண்ட பின்னர் ... தியானத்தை ஆரம்பித்து விட்டு உடன்நிகழ்வாக மருந்து
தயாரிக்க ஆரம்பித்து விடுவார்கள் 'உறிஞ்சி விட்ட தண்ணி போல' ... ஆரம்பித்த தியானமானது அத்தனை
புலனுணர்வையும் கூட்டி மருந்து தயாரிக்கும் போதெல்லாம் உடன்நிகழ்வாக உள்ளுக்குள்ளே பிரணாயம
முறையில் சீரமைக்கப்பட்ட காற்றானது ... சீராக இயங்கி வரும்.
இது தியானம் செய்யும் வகைமுறை. இதைத் தவிர தியானம் வேறு எப்படி செய்தாலும் விரக்தி நிலை மட்டுமே
நிலைக்கும்.
உலக விஷயங்களில் பயம் ஏற்பட்டு தியானத்திற்குள் ஒளிந்து கொள்வது என்பது ... உலக விஷயத்திலும்,
தியானத்திலும் இரண்டிலுமே நம் செயலுக்கு நியாயம் கற்பிக்க இயலாமல் போய்விடும்.
உலக விஷயம் மட்டுமே செய்து அதில் உன்னத உயர்வு அடைந்தாலும் ... ஒரு கட்டத்தில் ... வெறுமையும்,
விரக்தியும் வந்து சேரும்.
தியானமும், தொழிலும் ஒருங்கே செய்தால் இரண்டிலுமே நிபுணத்துவம் பெற முடியும் என்று இருக்கையில்,
ஒன்றை விடுத்து ... மற்றொன்றை மட்டும் செய்வானேன்?
உதாரணத்திற்கு, பெட்டிக்கடை வைத்திருப்பவராக இருந்தால் ... கடை திறந்து விற்பனைக்கு முன் ... தன்
தியான பயிற்சியை எடுத்துக் கொண்டு ... அதே உணர்வோடு விற்பனையை ஆரம்பிக்க வேண்டும்.
இப்படியே கொஞ்ச நாள் இப்படியே செய்து வந்தால் ... கடையைத் திறக்கும் போதே தியான உணர்வு எழுச்சி
பெறும்.
லௌகீக விஷயத்தை மட்டுமே கவனித்து வந்து ... தியானத்தை அசட்டையாக இருந்து விடுவதோ ...
சிறுபிள்ளைத்தனம்.
இன்னது வருமா அடுத்து? என்று மூளை செயல்பாட்டின்கண் ... எதிர்ப்பார்த்து காத்திருத்தல் என்பது ...
நீங்கள் objective conscious-க்கு போக மறுத்து வருகிறீர்கள் என்று அர்த்த