Professional Documents
Culture Documents
சிங்கை
தமிழ்ச் செல்வம்
பாராட்டுப் பா...!
சிறுகதை எழுதும் நல்ல
சிந்தனைச் சிற்பி ஆவர்;
மறுவிலா எழுத்தின் ஆளர்;
மதித்துநான் வைத்தி ருந்தேன்!
உறுபொருள் நீட்டிச் சொல்லும்
உன்னதம் புதினம் தீட்டும்
பெருந்திறன் வாய்க்கப் பெற்ற
பெற்றிநான் அறியா ஒன்றே!
திருதமிழ்சி செல்வம் நண்பர்
தீட்டிய நாவல் பார்த்தேன்;
பெருமிதங் கொண்டேன்; அந்தப்
பெருங்கதை தொடரின் நீட்டம்
கருப்பொருள் உணர்த்தும் சோகக்
காட்சிகள் கருத்திற் கொண்டே
சுருக்கமாய் சொல்வ தென்றால்
சொர்க்கமா; நரகம் தானா?
வாழ்ந்திடப் பிறந்தோ ரெல்லாம்
வையக வாழ்வில் நன்றே
வாழ்ந்திடப் பெற்ற ரென்று
வரையறுத் துரைக்கப் போமோ?
வாழ்ந்திடப் பிறந்து வந்தாள்
வளர்தமிழ் வனிதை நல்லாள்
வாழ்ந்திடா தொழிந்த வாழ்க்கைக்
கதையது வடிக்கும் கண்ணீர்!
மு. தங்கராசன்
செயலாளர்
தமிழ்வேள் நாடக மன்றம்
சிங்கப்பூர்
அணிந்துரை
தமிழ்மொழி. இலக்கிய வளர்ச்சிக்குப் புலம் பெயர்ந்த
தமிழர்களின் பங்களிப்பு போற்றுதற்குரியதாகும். இருபதாம்
நூற்றாண்டின் தமிழ்மொழி வளர்சிக்குப் பாடுபட்டவர்கள்
ஈழத் தமிழ் இலக்கியவாதிகளே யாவர். ஈழத்துக்கு அடுத்த
வரிசையில் நிற்கும் தகுதி பெற்றவர்கள் மலேசியத் தமிழ்
எழுத்தாளர்கள். இன்று சிங்கப்பூர்த் தமிழர்களும் மலேசியத்
தமிழ் எழுத்தாளர்களுடன் போட்டி இடுகின்றனர்.
தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை
வணிக நோக்கோடு படைக்கிறார்கள். ஆனால், ஈழம்,
மலேசியா, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் மொழித்
தொண்டாகவே தங்களது பணியினைச் செய்து வருகின்றனர்.
இவை பாராட்டுக்குரியது, போற்றுதலுக்குரியது.
புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் நாடுகளில்
தமிழ்மொழி. வளர, தாயகத்திலிருந்து பல்வேறு
பங்களிப்புகளை எதிற்ப்பார்க்கின்றனர். தமிழ் எங்களது உயிர்
என்று கூறுபவர்கள் இலாப நோக்குடைய வணிகர்களாக
மாறிவிட்டபோது, இவர்களால் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு
பயன் தரத்தக்கவைகளை எங்கே வழங்கப் போகிறார்கள்?
நண்பர் சிங்கை தமிழ்ச் செல்வம் அவர்களின் தமிழ்
மொழி ஆர்வம் வியப்பூட்டுகிறது என்ற பன்னாட்டுக்
கவிஞரின் கவிதைகளைத் தொகுத்தவர், குறள்வழிக்
கதைகள், கவரிமான் என்ற இரண்டு சிறுகதைத்
தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு
சிறுகதைத் தொகுப்புகளுமே இளைஞர்களை நல்வழிப்
படுத்தும் பெரு நோக்கோடு அமைந்த இலக்கியப் பணியாகும்.
என்னுரை
இலக்கியப் பணி ஆற்றுவதே இறவாப் புகழ்
எய்துவதற்குரிய வழி என்னும் நம்பிக்கை என் இதயத்தின்
அடித்தளத்தில் இளமைக் காலந்தொட்டே ஊறிச் சுரந்து
கொண்டிருக்கின்றது.
தமிழ் இலக்கிய உலகுக்கு நான் படைத்துள்ள
ஒவ்வொரு நூலையும் ஒவ்வோர் எல்லைக் கல்லாகக் கருதிப்
பாத்துக் கொண்டபோது இலக்கிய நெடுஞ்சாலையில் நான்
இதுகாறும் மூன்று எல்லைக் கற்களைத் தாண்டியிருக்
கிறேன்... என்று கொள்ளலாம். இந்த வாழப் பிறந்தவள்
என்னும் படைப்பு நான்காவது எல்லை கல்லா இலங்கி
நிறகிறது.
இந்திய நாட்டில் தாய்த் தமிழகத்தின் தென்
சீமையில் பிறந்து, மலை நாட்டின் மடியில் தவழ்ந்து, சிங்கைத்
திருநாட்டில் சீர் பெற்றுக் கொண்டிருக்கின்றேன்.
சிங்கப்பூரியன் என்னும் உணர்வில் மண்ணின் மணங்கமழும்
மகத்தான படைப்புகளையே உருவாக்க வேண்டும் என்னும்
உந்துதல் காரணமாக எழுதும் படைப்புகள் எல்லாவற்றிலும்,
-
கதை - கவிதை - கட்டுரை - புதினம் நாடகம் என்பவற்றுள்
எதை எழுதினாலும் அதில் மண்மணங் கமழ்கள் வேண்டும்
என்ற நோக்கோடு எழுதிக்கொண்டு வருகின்றேன்.
வாழப் பிறந்தவளும் மண்மணங் கமழும் மாமணியாகக்
காட்சியளிப்பாள் என்பதில் மயக்கம் கிஞ்சிற்றும் இல்லை.
-
இந்த வாழப் பிறந்தவள் 1995 ஆம் ஆண்டில் மலேசியத்
திருநாட்டின் மத்தான வாரஇதழ் வானம்பாடியில் முப்பது
வாங்களாகத் தொடர்ந்து தவழ்ந்து வந்தவள் என்பதும்,
- சிங்கப்பூர் தமிழ்
அவள்தம் அணிநடை மலேசிய
நெஞ்சங்களில் நீங்கா நினைவாகப் பதிந்துள்ளது என்பதும்
ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
மனிதன் நினைப்பதுண்டு
வாழ்க்கை நிலைக்குமென்று;
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனித னென்று!...
காரின் வானொலியிலிருந்து பாடல் வருகின்
றது. அவளும் சுமார் இருபது வருடங்களாகக்
கேட்டுவரும் பாடல்தான். ஆனால் இன்று ஏனோ
அதை மறுபடியும் கேட்க ஆசைப்பட்டாள்.
கண்ணதாசனின் அப்பாடல் வரிகளில் சில
நிமிடங்கள் மனம் லயித்துப் போகின்றது.
அவளது மனதில் கட்டிய கோட்டைகள்தாம்
எத்தனை எத்தனை? அத்தனையும் சொல்லி வைத்தது
போல் மளமளவென்று சரிந்து மண்மேடாகிப் போன
மாயம்தான் என்ன?
'உன் துய மனதுக்கு உன் நல்ல குணத்துக்கு நீ
மகராசியாக வாழ்வாய்' என்ற பெரியோர்களின்
வாக்குப் பொய்த்துப் போன காரணம்தான்
என்னவாயிருக்கும்?
'மனம் போல் மாங்கல்யம்' என்றார்கள்.
அதுவும் மாறிப் போனது. பெருவாழ்வு வாழ்வாய்'
என்றார்கள். அதுவும் வெறும் பேச்சுடன் போனது.
அவளைப் பொறுத்தவரை நினைத்தது எதுவுமே
நடக்காமல், நினைக்காத விஷயங்கள் எல்லாமே
நடந்து முடிந்துவிட்டனவே! அதுதான் என்ன
15
17
18
20
24
27
29
வாழ்த்துங்கள்