You are on page 1of 180

þÿAll rights reserved.

¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007
பொழுத புலரமா?.

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007
þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007
நூல் வெளியீட்டுக் குறிப்புகள்

பொழுத குலழுமா?...

நூர்ஜஹான் சுலைமான்
உரிமை : ஆசிரய்கு
176 பக்கம்
முதற் பதிப்பு : 207, செப்டமபர்
1x8 டெம்பி
அட் ை வடிவமைப்பு :
விஜயன்’ஸ கிரியேட்டிவ் ஸ்டுடியோ செல் : 98402 75550
அச் ும் வடிவமைப்பு :
தி.நடராசன், பாரதி அச்சகம், செல் : 94442 65152

BLOCK 609,#6-8, clement west street-1


Singapore -120 609

தமிழகத்ில ரூ.100
சிங்கையில் S$15
ISBN 978-981-05-9271-4

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


இல் ாமல் வரு ோர்கு அப்துலஜீ
எம்இனிய
ஈந்துவக ம் பெருவள் ல் அகிலத் ில சிறந்தருக துஆசெய்வோம!
அல்ாவின் அருளாலே திசைநோக்ி அனுதினமு ்
ஆண்டவனி ்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007
அந்தக் காலத்தில் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்குப் பிழைப்புத் தேடி
வந்தர்கள் எத்தனையோ பேர். அவர்களுள் இங்கேயே காலூன்றுவதற்கு
நினைத்தவர்கள் சிலரே. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்ற போக்கில்தான்
அன்றைய தமிழர்களின் வாழ்க்கை இருந்திருக்கிறது.
சிங்கப்பூர், மலேசியா, பர்மா, இந்தோனேசியா, இலங்கை என்று தமிழர்கள்
பிழைப்புத் தேடிச் சென்றிருக்கின்றனர். சென்ற இடங்களில் அவர்கள் கொடிகட்டிப்
பறந்தாலும்கூட, அவர்களுக்கு அங்கெல்லாம் காலூன்ற மனமின்றி இரைதேடிய
பறவைகளாய் மீண்டும் இந்தியத் திருநாட்டுக்கே சென்றுவிடுவர்.
உயிரைப் பிரிந்து ஆண்டுகள் பல உலவிவிட்டு மீண்டும் உடலோடு
ஒட்டிக்கொள்வதுபோன்று தமிழர்கள், குடும்பத்தை மனத்தில் தாங்கியவாறே
வெளிநாடுகளில் இரைதேடிகளாய் வாழ்ந்திருக்கின்றார்.
அப்படி வந்த ஓர் இரைதேடியின் மகன்தான் இந்த நாவலின் நாயகன் பாரதி.
இவனும் ஒரு இரைதேடியாகவே தன் தந்தையால் தருவிக்கப்பட்டான். அக்கால
நாயகர்களுக்குத் தயாராக இருக்கும் மாமன் மகள், அத்தை மகள் போல் நமது
நயாகனுக்குத் ஒரு மாமன் மகள் ஊரில் தயாராகத்தான் இருந்தாள்.
ஆனால் காதல் இவனைக் கட்டிப்போட்டுவிட்டது.
அழகுச் சிலையொன்று இவனை ஆட்கொண்டுவிட்டது.
அவனுக்கு ஞாயிற்றின் உதயமும் திங்களிள் ஒளியும்கூட எதிர்வீட்டுச்
சன்னலில் இருந்தே பிறந்தன.
சன்னல் திறக்கப்படாத நிமிடங்களில் ஒளியிழந்து காணப்படுவான்.
அந்த நிமிடங்கள், நாட்களாய் நகர்ந்து ஆண்டுகளாய் அவனை
ஆளத்
காதல் பிழைப்பதற்காக அவன் வாழ்கிறான்.
வாழ்ந்துகொண்டே இருக்கிறான்.
ஒரு நாள்....

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அவனது காதல் உயிர்ப்புற்றெழுகிறது அப்போது அவனது அழகு
தேவதையின் மடியில் தலை வைத்தபடி உயிர் விடுகிறான்.
காதலுக்கு உயிர் கொடுக்கவே இத்தனை ஆண்டுகள் உயிரைக் கையில்
பிடித்து வைத்து வாழ்ந்தவள் போல் காதலை மட்டும் வாழவைத்து விட்டுச்
சென்று விடுகிறாள் நாயகன்.
“பொழுது புலருமா” என்னும் தலைப்பிலான இந்த நாவலில், நூலாசிரியர்
திருமதி நூர்ஜஹான் சுலைமான் அக்காலஹில் சிங்கப்பூர் கம்போங் பகுதிகளில்
ஒற்றையாய் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையைச் சித்திரித்திருப்பதோடு காதலின்
இயல்பை, வெவ்வேறாய் ஓடும் ஆறுகள் கடலில் சென்று ஒன்றுகூடுவதற்கு ஒப்ப
உவமை கூறுவதுபோல் உருக்கொடுத்துள்ளார்.

திருமதி நூர்ஜஹான் சுலைமான் தமது 15ஆவது வயதிலிருந்து சிங்கப்பூர்


எழுத்துலகில் பெயர் பதித்துக் காலூன்றிப் பீடுநடை போட்டு வருகிறார்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும்
அவரது படைப்பாற்றலை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.
1960ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மலர், வானொலி தமிழ் முரசு போன்றவற்றின்
வழியாகத் தொடர்ந்த இவரது நீண்ட எழுத்துப் பயணம் மேன்மேலும் தொடர
வாழ்த்துகிறேன்.

அன்புடன்
அண். சிவ குணாளன்
6, செப்டம்பர் 2007 தலைமை உதவி ஆசிரியர்
சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழ்

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


வாழ்த்துரை
-
‘பொழுது புலருமா’ குறுநாவல், ஒரு காதல் கதை, உடல் சார்பற்ற
மனத்தளவில் நிற்கும் தெய்வீகக் காதல் கதை, காலம் என்னும் வெள்ளத்தையும்
-
கடந்து நிற்கும் காவியக் காதல் பாரதிக்கும் நளினிக்கும் இடையில் முகிழ்த்த
காதல்.
நம் எல்லோருடைய வாழ்விலும் முதல் காதல் இதயத்திலே, இதயத்தின்படி
மனத்தில பதிந்து விடுகிறது முதல் காதல் ஒருசிலருக்கே வெற்றியாக அமையலாம்,
அவர்களுள், சிலருக்குக் காதல் தேய்பிறையாகித் தேய்ந்து மறைந்து விடலாம்.
தன் இளமையைத் தியாகம் செய்துவிட்டு நிற்கும் மனைவியையோ, கணவனையோ
குமுறி அழ வைத்துவிட்டு மற்றொருவரின் மடியிலே இன்பம் காணலாம். எத்தகைய
அனுபவமாக இருந்தாலும், முதல் சந்திப்பு, அந்த முதல் அரவணைப்பு, அந்த
முதல் முத்தம் நெஞ்சிலே பதிந்து விடுகிறது. ஆனால் அவ்வப்போது அந்த
நினைவு வெளிக்கிளம்பும், எப்படி நம் வாழ்க்கை அமைந்திருக்கின்றதோ
அதற்கேற்ப, உதடுகளில் புன்னகை மலரும் அல்லது கண்களில் கண்ணீர் மல்கும்.
1940கள் வரை தமிழர்களில் பெரும்பாலோர் தங்கள் மனைவியை அல்லது
தங்கள் முறைப்பெண்ணைத் தமிழ்நாட்டில் விட்டுவிட்டு வந்தவர்களாக
இருந்தார்கள், இங்கே துளிர்த்த காதல் தற்காலிகக் காதலாக இருந்தது.
தமிழ்நாட்டிலிருந்து இங்குக் குடியேறி வந்த என் பெற்றோர் போன்றவர்கள்கூடத்
தங்கள் மகன், முறைப்பெண்ணை மணமுடிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்,
முதன் முறையாக 1971ஆம் ஆண்டில் என் தாயார் கிராமத்திற்கு நான் சென்றபோது
என் தாய் மாமன், பதினைந்து வயது நிரம்பிய மாமன் மகளை உடன் மணமுடித்து
சிங்கப்பூருக்கு அழைத்துக் கொண்டு போகும்படி கூறியபோது நான் பின்வருமாறு
கூறினேன்:
“மாமா, எனக்குத் திருமணமாகி ஏழு வயதிலும் நான்கு வயதிலும் இரு
மகன்கள் இருக்கிறார்கள். பதினைந்து வயது நிரம்பிய இந்தப் பெண்ணை நான்
அழைத்துச் சென்றால், வீட்டிற்கு நான் போக முடியாது. நேராக நான் போலீஸ்

பொழுது
புலருமா?...

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


சட்ட
நிலையத்திற்குத்தான் கொண்டு செல்லப்படுவேன்” என்று கூறி, சிங்கப்பூரின்
விதிமுறைகளை விளக்கிய பின்னரே மாமா,தன் மகன் திருமணத்திற்கு ஒரு
முற்றுப்புள்ளி வைத்தார்.
1950, 1960களில் இளையர்களாக இருந்தவர்களுக்கு ஏற்பட்ட முதல் காதல்
அனுபவம் துயரம் மிக்கதாக அமைந்தது.
- -
இந்தக் காலகட்டம்தான் ஏழை பணக்காரன் முதலாளி தொழிலாளி
என்ற வேறுபாடுகளும், ஜாதி வேறுபாடுகளும் நிறைந்திருந்த காலகட்டம் சமுதாய
ஏற்றத்தாழ்வுகள் மலிந்திருந்த இந்த ஆண்டுகளில் பெரும்பாலான காதல்கள் தோல்வி
அடைந்தன. இந்தக் காலகட்டத்தைக் களாமாக வைத்து, சகோதரி நூர்ஜஹான் தம்
தொடர்கதையை எழுதியிருக்கிறார, உரையாடல் மூலமாக உள்ளது உணர்ச்சிகளை
அற்புதமாகச் சித்திரித்திருக்கிறார்.
இந்த முன்னுரையில், என் சில சிந்தனைகளையும் உங்களோடு பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன்.

இரண்டாம் உலகப்போரின் காரணமாக என் பன்னிரண்டாவது வயதில்


Combridge
ஆங்கிலப்பள்ளிக்குச் சென்ற நான் 1959ஆம் ஆண்டில் Senior
Certificate பெற்றேன். உடனடியாக கலாசார அமைச்சின் தகவல் இலாகாவில்
வெளிவேலைப் பிரிவு அதிகாரியாகப் பணியேற்றேன். சிங்கப்பூரின் பல்வேறு
பகுதிகளுக்கும் சிங்கப்பூரைச் சுற்றியிருக்கும் தீவுகளுக்கும் செல்லக்கூடிய வாய்ப்புக்
கிடைத்தது. பல்வேறு இன மக்களின் பல்வேறு பிரச்சினைகளை நேரில் காணும்
வாய்ப்பு எனக்குக் கிட்டியது. பெரும்பாலான தமிழர்கள் பொது மராமத்து இலாகா
(public Works Department), நகராண்மைக்கழகம் (City Council), தஞ்சோங்
பகார், செம்பவாங் போன்ற கப்பல் தளங்கள், சாங்கி விமானத் தளம் ஆகியவற்றில்
பணி புரிந்தனர், குடும்பத்தோடு இவர்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதிகள் Quarters
என்றழைக்கப்பட்டன.

நூர்ஜஹான்
சுலைமான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


நான் எழுதிய “முள்னாள் தலைமகன் லீ குவான் இயூ” என்ற நூலில் நம்
தமிழர்களுக்கு ஒரு எதிர்காலம் இருக்கிறதா என்ற வினாத் தொடுத்திருந்தேன்.
அவர்கள் வாழ்க்கை அத்துனை அவல வாழ்க்கை அமைந்திருந்தது, அத்தகைய
அவல வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொண்டார்கள். இந்தப்
பின்னணியில்தான் “கசந்த தேன்” என்ற வானொலித் தொடர் நாடகத்தை
எழுதினேன்.
முத்தம்மா அழகான இளம் பெண். நகராண்மைக் கழகத்தில் வேலை பார்க்கும்
அவன் தந்தை வீராசாமி வேலை முடிந்து நேராகக் கள்ளுக்கடைக்குப்
-
போய்விட்டுதான் வீடு திரும்புவார், தன் மனைவி முத்தம்மாவின் தாயாருக்கும்
-
திருட்டுத்தனமாகக் கள் வாங்கி வருவார். அந்தப் பெற்றோர், பருவம் எய்திய
ஓருமகள் இருப்பதையே மறந்துவிடுகின்றனர், முத்தம்மாவின் வாழ்விலே சங்கரன்
என்ற இனைஞன் குறுக்கிடுகிறான். முத்தம்மா கர்ப்பமடைகிறாள், மலாயாவுக்கு
ஓடிப் புது வாழ்வு தொடங்கலாம் என்று சங்கரன் கூற வேறு வழியின்றி முத்தம்மா
இணங்கி உடன் செல்கிறாள், கோலாலம்பூர் ஹோட்டல் ஒன்றில் முத்தம்மாவை
விட்டுவிட்டுச் சங்கரன் சிங்கப்பூர் திரும்புகிறான், தனித்து விடப்பட்ட முத்தம்மா
விபச்சார விடுதியில் சேர்க்கப்படுகிறாள்.
தன்னை நம்பி வந்த ஒருத்தியின் வாழ்வையே பாழாக்கும் இச்செயலுக்குப்
பெயர் காதலா?
ஓர் உண்மைச் சம்பவத்தை இப்போது காண்போம்
1966ஆம் ஆண்டு. அப்போது Queen Crescent,Block ஒன்றில்
குடியிருந்தோம் (அடுக்கு மாடி வீடுகள் இருந்த இடம், இப்போது திறந்தவெளியாக
இருக்கிறது. இந்தப் பகுதி Alexandra சாலைக்கு அருகில் இருக்கிறது)
ஒவ்வொரு நாளும் ஓர் இந்தியத் தம்பதியர் (அவர்கள் பெயரை நான் குறிப்பிட
விரும்பவில்லை), மாலை சுமார் ஆறு மணிக்குச் சாலை ஓரமாக நடந்து செல்வார்கள்.
ரோட்டுக்கு அருகில் இரவில் தண்டவாளம் வரை சென்று திரும்புவார்கள். ஏழாவது
மாடியிலிருந்து பலமுறை நான் பார்த்திருக்கிறேன், ஒவ்வொரு நாளும் அவர்கள்.

பொழுது
புலருமா?...

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


செல்வதாக என் மனைவி கூறுவாள். இந்த அன்புப் பிணைப்பைத் துண்டிக்க
வேறு ஓருத்தி வந்தாள். கணவன் அவளை நாடிச் சென்றுவிட்டான். மனைவி
மட்டும் தனியாக அதே ஆறு மணிக்கு நடந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன்.
தலை குனிந்து மெல்ல நடந்து செல்வார், இரயில் தண்டவாளம் வரை சென்று
திரும்புவார்,
சில நாள்கள் உருண்டோடின. ஒரு நாள், இரயில் தண்டவாளம் வரை
சென்றவர், தண்டவாளத்தில் படுத்தார். இரயில் அந்த அழகான உடலைச்
சிதைத்துவிட்டுச் சென்றது, இதுதான் காதல் தரும் பரிசா?
என்னால் இந்தச் சம்பவத்தை இந்நாள் வரை மறக்க முடியவில்லை.

தங்கை நுார்ஜஹானின் “பொழுது புலருமா” என்ற நவீனத்தைப் படித்தபோது.


எந்தவித உணர்வும் இல்லாமல் படித்தேன். இது என் பழக்கம், படித்தபின்னரே
சிந்திப்பேன்.
காதலுக்கு ஒரு தனித்தன்மையை நூர்ஜஹான் வகுத்துள்ளார், இப்படித்தான்
-
அன்பு காதல் இருக்க வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார்.
19 2ஆம் நெஞ்சை
ஆண்டு நிகழ்ந்த - நெகிழவைக்கும் ஒரு சம்பவத்தை
இவரின் குறுநாவல் எனக்கு நினைவூட்டியது.
வயது முதிர்ந்த தம்பதியர், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக
வாழ்ந்தவர்கள். மனைவி இறந்துவிடுகிறாள் பெரியவருக்கு ஒரு துணையாக
இருந்தவள் இறந்துவிட்டாள் என்பதைப் பெரியவர் நம்ப மறுப்பதோடு பிறரிடம்
கூறினால் மனைவியின் உடலை எடுத்துச் சென்று புதைத்து விடுவார்கள் என்று
அச்சப்படும் அவர், எவரிடமும் கூறாமல் இருப்பதோடு, அவரும் வெளிவராமல்
வீட்டிற்குள்ளேயே இருக்கிறார். இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகே
சந்தேகப்படும் அண்டைவீட்டுக்காரர்களால் உண்மை வெளிப்படுகிறது.
நாளிதழில் இச்செய்தி வெளியான உடன், அப்போது ஒலிக்களஞ்சியத்தில்
தயாரிப்பாளராக இருந்த திரு வீரபாண்டியனை, பெரியவரைப் பேட்டி காணுமாறு

நூர்ஜஹான் சுலைமான்
10

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அனுப்பி வைத்தேன், அன்பு மனைவி தூங்குகிறாள். அவள் தூக்கத்திலிருந்து
எழுந்து விடுவாள் என்று அப்பெரியவர் காத்திருந்தாராம். ஒருவருக்கு மற்றொருவர்
துணையாக வாழ்ந்திருக்கிறார்கள்.
பேட்டி ஒலிபரப்பப்பட்டபோது பலர் கேட்டுக் கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள்.
நூர்ஜஹான் தரும் கதை,கரு இப்போது நமக்கு மிகமிகத் தேவை.
விபச்சார விடுதிக்குத் தள்ளப்படட் “கசந்த தேன்” கதாநாயகி முத்தம்மாவின்
பெற்றோர் இரகசியமாகக் கன் குடித்து மயங்கி இருந்தனர்.
இன்று...
காப்பிக்கடைகளிலே நம் இந்தியச் சகோதரர்கள் நண்பகல் முதல் நள்ளிரவு
வரை beer,stout முதலியவற்றைக் குடித்துக் கொண்ட இருக்கின்றனர். மனைவியர்
பலர், குழந்தைகளை அணைத்துக்கொண்டு உறங்காமல் உறக்க மயக்கத்தில்
ஆழ்ந்திருக்கின்றனர், சில மனைவியரோ, மாற்றான் மடியில் கண்ட சுகத்தை
எண்ணிக் கண்களை மூடியிருக்கின்றனர்.

குழந்தைகள்...? எதிர்காலம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


கடந்த ஆண்டின் இறுதியிலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலும் இரு
இந்தியக் குடும்பங்களில் நடந்த கொலையும் தீ வைப்பும் எவற்றைச் சுட்டுகிறன?
கணவன் மனைவியரிடையே காதலும் அன்பும் இல்லை என்பதைச் சுட்டிக்
காட்டுகின்றன இந்தத் துன்பச் செய்திகளை நாளிதழ்களில் நான் படித்தபோது
அவர்கள் ஈன்ற பச்சிளம் குழந்தைகளை எண்ணித்தான் என் மனம் வேதனைப்பட்டது.
தாத்தா, பாட்டி, பெரியப்பா, சிற்றப்பா, மாமா, அத்தை எனப் பலர் இருக்கலாம்.
ஆனால் யாரை நம்பி இறைவன் இந்தக் குழந்தைகளை இந்த உலகத்திற்கு
அனுப்பினானோ அந்த 'அம்மா... அப்பா...?'
நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? இந்தக் கேள்விக்கு விடை
கிடைக்காது. விடை கிடைக்கும்போது நாம் இங்கிருக்க மாட்டோம்.

பொது11 புலருமா?.

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


சிங்கப்பூரில் படைப்பிலக்கியம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26, 27ஆம் தேதிகளில் கோலாலம்பூரில்
-
நடைபெற்ற மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாநாட்டில், சிங்கப்பூரில்
தமிழிப் படைப்பிலக்கியம் பற்றி விரிவான ஒரு கட்டுரை படைத்தேன் ‘உள்ளுர்
எழுத்தாளர்களின் படைப்பிலக்கியம் மரணப் படுக்கையில் கிடப்பதாகக் கூறினேன்.
மூத்த சிங்கப்பூர் எழுத்தாளர்கள், படைப்பிலக்கியப் பாதையிலிருந்து விலகிச்
செல்கிறார்கள். புதிய இளம் சிங்கப்பூர் படைப்பாளர்கள் படைப்பிலக்கியம் படைக்க
முன் வருவதில்லை’ என்று வேதனையுடன் குறிப்பிட்டேன் ‘உள்ளுர்த் தமிழ்
எழுத்தாளார்களுக்கு, கவிஞர்களுக்கு, ஆய்வாளர்களுக்கு இலக்கிய அமைப்புகள்
என்ன செய்கின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது’ என்பதையும்
சுட்டிக்காட்டினேன். 1950களிலிருந்து 1990கள் வரை படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு
வானொலி நிலையம் ஆற்றிய பங்கையும் பட்டியலிட்டேன்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சகோதரி நூர்ஜஹானின் தொடர்கதை


கிடைத்தது. வாழ்த்துரை வழங்க வேண்டினார், மகிழ்ச்சியுடன் வேண்டுகோளை
ஏற்றுக்கொண்டேன்.
வாழ்த்துரை வழங்குவதிலே ஒரு பெருமை. அதே வேனையில் நமது
சிங்கப்பூர்த் தமிழ்ப் படைப்பிலக்கியம் மீண்டும் தழைத்தோங்கப் புறப்பட்டுவிட்ட
தங்கைகளில் திருமதி நூர்ஜஹான் சுலைமானும் ஒருவர்.
இவருக்கு என் வாழ்த்துகள், பாராட்டுகள். மேலும் ஒரு வேண்டுகோள்.
இந்த மண்ணிலே பிறந்து தமிழை இரண்டாம் மொழியாகக் கற்ற நமது
தங்கைகளும், தம்பிகளும் படைப்பிலக்கியம் படைக்க முன் வரவேண்டும்.
அப்போதுதான், தமிழ் நம் இதய மொழியாக என்றும் ‘இந்த
நிலைபெற்றிருக்கும்.
அன்பன்
எம்.கே. நாராயணன்

நூர்ஜஹான் சுலைமான்
12

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


சிறுகதை இலக்கியத்துக்கும் சிந்தனைக் கவிதைகளுக்கும் மட்டுமன்றித்
தமிழிலக்கியத்தின் எல்லா வடிவ வளர்ச்சிக்கும் அன்பும் ஆதரவும் காட்டி வரும்
சிங்கப்பூர்த் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் என் தலைதாழ்ந்த
வணக்கங்கள்.

“பொழுது புலருமா?” என்ற இந்தப் புதினம் என் இரண்டாவது இலக்கிய


வெளியீடு.
“வேரில் நிற்கும் விழுதுகள்” என்ற என் முதல் படைப்புக்கு ஆதரவுக் கரம்
நீட்டி அன்பு சொரிந்த உங்கள் அனைவருக்கும் நனையும் விழிகளோடு நன்றி
சொல்லி என் இரண்டாவது நூல் பற்றி எழுத முனைகிறேன்.

முழுக்க முழுக்கக் காதல் சார்ந்த இந்தப் படைப்பு, ‘தமிழ் முரசு’ என்ற என்
தாய்மடி மேடையில் தொடர்கதையாக வெளிவந்த “பொழுது புலருமா” என்ற
இந்தப் புதினத்தை நான் எழுதி முடிக்கும்வரை மனத்தளவில் நானும் என் வாலிபக்
காலத்தின் வாசலுக்குச் சென்று வந்தேன் என்றே சொல்வேன்.

உடல்விட் ு உயிர்போதல் சாதல்!


உயிருக்குள் உயிர்பாய்தல் காதல்
என்றார் ஒரு கவிமாலைக் கவிஞர், இந்த உணர்வினை நான் அணுஅணுவாக
அனுபவித்தேன். இந்தக் கதையினை எழுதி முடிக்கும்வரை, வரம்பு மீறாத வாலிபக்
காதலை, நாகரிகம் குறையாத நல்ல நடையில் உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறேன்.
படித்து, ருசித்து உங்கள் பார்வையில் என் படைப்பு பற்றிய சிந்தனைகளை எனக்குத்
தெரிவியுங்கள்.
‘தமிழ் முரசு’ நாளிதழில் இந்தப் புதினம் தொடராக வெளிவந்தபோது
ஒவ்வொரு வாரமும் என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியும்,
விமர்சித்தும் என் எழுத்துப் பயணத்தை ஆர்வப்படுத்திய நண்பர்களுக்கும் என்
தனிப்பட்ட நன்றிகள்.

பொழுது புலருமா?...
13

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


இந்நூலுக்குத் தன் ஆழ்ந்த புலமையையும், ஆய்வியல் சிந்தனையையும்
கொண்டு ஆய்வுரை தந்திருக்கிற சகோதரர் திரு எம்.கே. நாராயணன் அவர்களுக்கும்;
‘தமிழ் மூரசு’ நாளிதழின் தலைமை உதவி ஆசிரியர் திரு அண். சிவ
குணாளன் அவர்களுக்கும்;
தலைமுறை வேறுபாட்டையும் மறந்து என்னைத் தம் சகோதரி போலவே
-
கருதி அன்பு காட்டும் கவிமாலை கவிச்சோலைக் கவிஞர்கக்கும்;
இந்நூல் முயளிக்குப் பலவகைகளிலும் உதவிய பிற நண்பர்களுக்கும்;
அட்டை வடிவமைப்புடன், பக்க வடிவமைப்புச் செய்து, பிழை திருத்தி
அச்சிட்டுதவிய சென்னை பாரதி அச்சக உரிமையாளர் திரு தி. நடராசன்
அவர்களுக்கும் இந்தச் சகோதரி என்றும் நன்றி காட்டுவேன்.
-
புதினத்தைப் படியுங்கள் அது பற்றிய உங்கள் எண்ணங்களை
இன்னும் நிறைவாக என் இலக்கியப் பங்களிப்பைத்
எனக்கெழுதுங்கள். இன்னும்
தமிழருக்குத் தர வேண்டும் என்ற தாகத்துடன் காத்திருக்கிறேன்.
நன்றி,
தங்கள் அன்பில் மகிழும்
சிங்கப்பூர் நூர்ஜஹான் சுலைமான்

நூர்ஜஹாணை சுலைமன்
14

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அத்தியாயம் 1

பாரதி, தஞ்சோங்பகார் கம்பத்திற்கு ஞாயிற்றுக்கிழமைதான்


குடி வந்திருந்தான்.
சீனர், மலாய்க்காரர், இந்தியர், நோன்ஞா என்று
அழைக்கப்படும் பாபா இனத்தவர், சில வங்காளி வம்சத்தினர்
என்று பல இனத்தவர் வாழ்ந்து வரும் அந்தக் கம்பத்தில், இருபதே
வயது நிரம்பிய பாரதியும் ஒண்டிக் கொள்ள ஓர் இடத்தையும்
வாடகைக்குப் பிடித்துக் கொண்டான்.
நெருக்கடி மிகுந்த - ஜன இரைச்சல் மிகுந்த ஒரு சூழலில்,
மேல் மாடி ஜன்னல் ஓரத்தில், தன் ஒரே சொத்தான, கறை படிந்த
தன் பழைய டிரங்குப் பெட்டியை வைத்துவிட்டு, ஜன்னல் கதவில்
தன் இரு கைகளையும் ஊன்றியபடி, வானத்தை அண்ணாந்து பார்த்த
வண்ணம் பாரதி... பலத்த சிந்தனையில் ஆழிந்து விட்டான்.
நோய்வாய்ப்பட்ட தந்தையை ஊருக்கு அனுப்பிவிட்டு, தான்
முன்பு குடியிருந்த சீலாட் ரோட் கம்பத்தை விட்டு, இங்குக் குடி
வந்துவிட்டான். ஒரு சீன தனியார் கம்பெனியில் வேலை
பார்த்துவரும் பாரதிக்குக் குடியிருக்கும் இடமும், வேலை பார்க்கும்
இடமுமான ஷெண்டன்வே அருகில் இருப்பது, போக்குவரத்துக்கு
வசதியாகவே இருந்தது.
அந்த அந்தி நேரத்தில் வான இருள் கல்விக்கிடந்தது.
எந்நேரமும் மழை வந்துவிடுமெனப் பயமுறுத்தும் இடிமுழக்கம்
வேறு; யோசனையில் ஆழ்ந்திருந்த பாரதியின் கண்கள்,
எதார்த்தமாக எதிர்வீட்டு ஜன்னலில் நிலைகுத்தி நின்றுவிட்டது.
மின்வெட்டுப்போல், கண்சிமிட்டும் நேரம், ஒரு பிரகாசம் எதிர் வீட்டு
ஜன்னலில் தோன்றி மறைந்ததைக் கண்டதும், பாரதி... அப்படியே
பிரமித்து நின்றுவிட்டான். இதயம் படபடவென்று

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அடித்துக்கொண்டது. அந்தப் பிரகாசம் வேறு யாருமல்ல,
எதிர்வீட்டுக்காரரின் மகள் நளினிதான்.
சுந்தரம்
பாரதி, அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடிச்சிட்டு,
வேலு வாங்கி வச்சிருந்த ஆப்பத்தை எடுத்துக்கிட்டு,
ஆப்பத்துக்குப் பத்துக் காசையும் கொடுத்துட்டு? கீழே
இறங்குமுன், மறுபடியும் ஒரு தரம் அந்த எதிர்வீட்டு
பாரதி பார்க்கத் தவறவில்லை. ஜன்னல் மூடியபடியே இருந்தது.
வேலைக்குப் போன பாரதி, அன்று சீக்கிரமே
அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டான் அவசரமாக
உடைகளைக் களைந் த ு போட் ட வன், லுங்கியைக்
துண்டைத் தோளில் கற்றியபடி, மறுபடியும் ஜன்னலருகே
பார்வை நாலாப் பக்கமும் சுழன்றது. ஜன்னல் அழகியின்
தரிசனத்துக்குத் தவமிருக்க ஆரம்பித்துவிட்டான்.
கீழே ஐந்தடியில் குழந்தைகளின்
துளைத்தது. அவ்வப்போது சாலையில் கார்கள் ஓடும்
வயது குறைந்த பிள்ளைகளின் கயிறாட்டம் ஒரு பக்கம், கார்
நேரங்களில் பையன்களின் கோலி விளையாட்டு நடுரோட்டில்
மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நேரமும் நகர்ந்து
கொண்டிருந்தது. எதிர்வீட்டு ஜன்னல் திறந்தே கிடந்தது.
அரவமும் இல்லை ஐந்தடியில் ஒரு பக்கத்தில் அரும்பு
இளவட்டங்களின், முதல் நாள் பார்த்த எம்.ஜி.ஆ. படத்தின்
விமர்சனம் காரசாரமாக விவாத மேடையாகிக் கொண்டிருந்தது.
காலையில் இரை தேடக் கூட்டைவிட்டுப் போய்,
இருப்பிடம் தேடி அடைய வரும் பறவைகளைப்போல்; வேலை
கொண்டிருந்தனர்.
முடிந்து ஒவ்வொருவராக வீடு வந்து சேர்ந்து
நடைராஜாக்கள் சிலர், சைக்கிளில் சிலர், பேச்சா வண்டிகளில்
என வந்து கொண்டிருந்தவர்களைப் பாரதியின் கண்கள் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தாலும், அடிக்கடி எதிர்வீட்டு ஜன்னலையும்
பார்க்கத் தவறவில்லை சோர்வு, அலுப்பு என்று
பட்டுக் கொண்டிருந்தாலும், எப்படியும் தன் மனம் கவர்ந்தவளைப்
பார்த்துவிட வேண்டுமென்ற துடிப்பில் இருந்தான்.
மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது.
பொழுது புலருமா?...

16

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"ஏம்பா!... நானும் நீ வந்ததுல இருந்து பாத்துக்கிட்டிருக்கேன்.
அப்படி என்ன ஜன்னல்ல தவமா தவம் இருக்கே? ஏதாவது
வேண்டுதலா? சுருட்டு சுந்தரம் வாயில் சுருட்டை உறிஞ்சியபடி,
கேள்வி கேட்டார். பாரதி எரிச்சலுடன் அவரைப் பார்க்காமலே
"போங்க சுந்தரம் மாமா... உங்க வேலையைப் போய்ப் பாருங்க.“
சுருட்டு வாடை மூக்கைத் துளைத்தது. துண்டல் மூக்கை
மூடிய பாரதி, மூச்சுவிட ஒரு கணம் மறந்திருப்பான், சே... என்ன
வாடை... குடலைப்புரட்டுதே... அருவருப்புடன் மீண்டும் அந்த
எதிர்வீட்டு ஜன்னலை நோக்கியவனுக்கு... என்ன ஆச்சர்யம்...
அவன் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த எழிலரசி, குளித்த தலையை
விரித்துப் போட்டபடி வந்து கொண்டிருந்தாள்.
கண் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த
வனுக்கு... மூச்சே வரவில்லை. மஞ்சள் முகம், கறுத்த சுருண்ட
கூந்தல். அந்த மாலை நேரத்தில் அவள் அழகின் ஜொலிப்பில்
அவன் மனம் அவன் வசமில்லைன்னுதான் சொல்லணும். குப்பை
மேட்டில் மாணிக்கங்கள் சிதறிக் கிடந்ததைப்போல் ஒரு பிரமிப்பு.
என்...ன... அழகு.. அரண்மனையில் இருக்கவேண்டியவன்...
சாதாரண இந்தக் கம்பத்தில் இருக்கிறாளே! பிரம்மாவின்
படைப்புதான், எத்தனை விந்தையானது. தன் உணர்வு இல்லாமல்
பிரமை பிடித்திருந்தவனுக்கு, ஜன்னல் கதவு படீரென மூடும் சத்தம்
கேட்டுத் தன் உணர்வுக்கு வந்தான். அந்த அந்தி நேரத்திலும்,
அவனுக்கு வேர்த்துக் கொட்டியது. தவறு செய்துவிட்டோமே
என்ற குற்ற உணர்வு உள்ளுர உறுத்தியது, ஆயினும் அவள் நினைவு
அவனை வாட்டியது.
அவனைப்பற்றி யாரிடம் விசாரிப்பது? செதுக்கி வச்ச
சிலைபோல் இருக்கிற அந்தத் தேவதை எனக்குக் கிடைப்பாளா?
வேணும்.... அந்த அழகு எனக்கே.... எனக்கு வேணும்.... முடியும்...
புலம்பியவாறு படுக்கைக்குப் போய்விட்டான்.
காலையில் சுருட்டு சுந்தரம், “பாரதி!.. ஏம்பா!.., மணியாச்சு,
வேலைக்குப் போகலை... காட்டுக்கத்தலா காலையில் கத்திக்கிட்டு
கிடக்கிறானுங்க. நீ என்னடான்னா பேய் அடிச்சுப் போட்டது போல
அப்படியே கிடக்கிறியே. கருட்டு சுந்தரம் புலம்பியபடி அவன்
தோளைக் குலுக்கினார். பதறியபடி மறுபடியும் நெற்றியைத்

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


தொட்டுப் பார்த்தார். "என்னப்பா உடம்பு இப்படி கொதிக்குது. பாரதி,
பாரதி என்றார், பாரதி.... கண்களைத் திறக்க முடியாமல் மெல்லிய
குரலில் "மாமா! மாமா! .. வந்து ... உடம்பு மாமா...“ மேலே
முடியாமல் பாதியுடன் நிறுத்தினான் -தெரியும்பா. ரொம்ப ஜூரம்
அடிக்குது. நீ ராத்திரி பூரா தூங்கலை போலிருக்கு. ஒரே புலம்பல்.
"சரி, சரி... பேசாம இரு.. நான் போய் கொஞ்சம் காப்பி கலந்து
எடுத்திட்டு வர்றேன். ரெண்டு மாத்திரையும் தர்றேன். போட்டு
முழுங்கிடு என்ன...“ மாமா அவசரமாக அடுப்பங்கரைக்கு ஓடினார்
பாரதி மறுபடியும் புரண்டு படுத்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில், காப்பியும் கையுமாக சுந்தரம் பாரதியை
எழுப்பினார். கையிலிருந்த மாத்திரையையும், காப்பியையும்
பாரதியிடம் கொடுத்தார், எழுந்து கை நடுக்கத்துடன் காப்பியை
வாங்கிய பாரதி மாத்திரையை வாயில்போட்டுக் காப்பியைக்
குடித்தான். காப்பியைக் குடித்தபடி "ஏன் மாமா, காப்பி இத்தனை
கசப்பாவா இருக்கும்?"
"பிள்ளே... தம்பி இது ஹைலாங்கடை காப்பி. இப்படித்தான்
இருக்கும். ஆனா! ரொம்ப ருசியா இருக்கும்பா. இந்தா... ரெண்டு
சுட்ட ரொட்டி பட்டர் தடவி வாங்கிட்டு வந்திருக்கேன். எந்திரிச்சு
பல்லை வெளக்கிட்டு, இதையும் சாப்பிட்டுத் தூங்கு, கொஞ்ச
நேரத்துல நல்லா வேர்த்துக் கொட்டும். காய்ச்சலும் விட்டுடும்.
இந்தா... இந்த டைகர் பாம் தலைவலி தைலம், நல்லா நெத்தியில
தடவிக்க, போத்திட்டு தூங்கு என்ன? மதியம் நல்லா இஞ்சி, பூண்டு
போட்டு கொஞ்சம் கஞ்சி காய்ச்சித் தர்றேன்; சாப்பிடு என்ன,
மத்ததைப் பிறகு பேசிக்குவோம் சரியா- ‘சரி மாமா’ என்றவன்,
தட்டுத் தடுமாறி எழுந்து, காலைக் கடனை முடிச்சிட்டு, ரெண்டு
ரொட்டியையும் பிட்டு வாயில் போட்டுட்டு மிச்சமிருந்த
வறக்கோப்பியையும் குடிச்சிட்டு மறுபடியும் படுக்கையில்
சுருண்டுகிட்டான்.
அத்தியாயம் 2
மதியம் ஒரு மணி இருக்கும். மறுபடியும் சுருட்டு சுந்தரம்
பாரதியை எழுப்பினார், சுருட்டு வாடை மூக்கைத் துளைக்க,
பாரதி... முகம் சுளித்தபடி படுக்கையை விட்டு எழுந்தான்.
சட்டைபூரா வியர்வையில் நனைந்து போயிருந்தது. காய்ச்சல் போன
இடம் தெரியலை. எழுந்து அறைக்குப் போய் முகம் அலம்பிட்டு

பொழுது
புலருமா?...

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


வந்து, நாற்காலியில் அமர்ந்து கொண்டான், கந்தரம் மாமா சுடச்சுட
சோற்றுக் கஞ்சியை வார்த்து, கூடவே வெங்காயம், ஊறுகாயுடன்
வந்தார்.
பாரதி, மாமாவை நீண்ட நேரமா உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தான், பாரதி அந்தக் கம்பத்துக்கு வந்து ரெண்டே
நாள்தான் ஆச்சு, அவர் யாரோ! அவன் யாரோ! காய்ச்சல்னு
தெரிஞ்சதுமே பெத்த தாயை விட மேலா கவனிச்சுக்கிட்டாரே,
சொந்தக்காரன் சோத்துக்கு வந்துட்டாண்டோய்னு ஓடுற இந்தக்
காலத்துல, சொந்தமே இல்லாத இந்த சுந்தரம் மாமாவின் அன்பு,
பாரதியைக் கண்கலங்க வச்சிடுச்சு மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன்
போல் மாமா குடுத்த கஞ்சியை வாங்கி, கரண்டியால் ஊதி ஊதிக்
குடித்தான்.
மெல்ல அவன் பக்கத்தில் வந்தமர்ந்த சுந்தரம்,
உறுத்துப் பார்த்துக்கிட்டிருந்தார். வாயில் கஞ்சியை ஊற்றியபடி
பாரதி... 'என்ன மாமா அப்படிப் பார்க்கிறீங்க?..." என்று
சொல்லும்போதே, பாரதிக்குப் புரையேறியது. உடனே அவன்
தலையைத் தட்டிய சுந்தரம் மெல்ல, "யாரோ உன்னையே
நெனச்சுக்கிட்டிருங்காங்க போலிருக்கு."
"அப்படியா! ... என்றபடி ஆச்சரியத்துடன்
பார்க்கிறான் "அட!.... இது கூட உனக்குத் தெரியாதா? ... என்ன. .
என்றவாறு அவன் காதருகில் மெல்லிய குரலில்... ஆமா! அந்த
எதிர்த்த வீட்டுப்பொண்ணு நேத்து உன் கனவுல வந்து, படாத பாடு
படுத்திட்டானா?..." என்றார். வாயில் கஞ்சி இருக்க, மனம் திக்குன்னு
அடித்துக் கொள்ள பாரதி மாமாவை ஏற இறங்கப் பார்த்தான். ஒரு
வேளை அவர் நேத்து பூரா நம்மையே நோட்டம் விட்டுக்கிட்டு
இருந்திருப்பாரோ? பாரதி தயங்கியவாறு மாமாவைப் பார்த்தான்.
"ம்... ம்... எல்லாம் எனக்குத் தெரியும். அதுசரி நேத்து நீ
நல்லத்தானே இருந்தே. ஏன் திடீருன்னு காய்ச்சல் வந்து
படுத்துட்டே... எதையாவது பாத்து பயந்துட்டியா... என்றார்....
கிண்டலாக.
மேலிடக் கேட்டான்.
"என்னவா? காய்ச்சல்ல ராத்ி
பொண்ணப் பத்தியே புலம்பிக்கிட்டு கெடந்தியே அதான்
நூர்ஜஹான் சுலைமான்

19

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


கேட்டேன், அட நான் மட்டுமா கேட்டேன். இங்க படுத்திருந்தவங்க
எல்லாரூமே கேட்டாங்களே. என்ன கண்டதும் காதலா...." பாரதிக்கு
என்ன சொல்றதுன்ளே புரியலை, வெட்கத்துடன் கைகளைப்
பிசைந்து கொண்டிருந்தான், திருடனுக்குத் தேள் கொட்டியது
போலிருந்தது அவன் நிலைமை. "போங்க மாமா" என்றான், மாமா
விடுறதாக இல்லை.
மறுபடியும் எல்லாம் அந்த எதிர்த்த வீட்டுப் பொண்ணுதானே,
என்ன என் யூகம் சரிதானே? கண்டதும் காதல்தானே? என்றார்.
அட... எப்படி மாமா கண்டுபிடிச்சீங்க, ம்.... மாமா வந்து....
வந்து...."
"என்னடா வந்து போயின்னு, உன் மனசுல உள்ளதை நான்
சொல்லட்டுமா? அவ ரொம்ப அழகா இருக்கா, கல்யாணம்
பண்ணினா அவளத்தான் பண்ணிப்பேன்னு அடம்பிடிப்பியே."
சுருட்டு சுந்தரம் சொல்லிக்கிட்டே பார்வையால் அவனை அளந்தார்.
கமாமா, எப்படி நீங்க என் மனசுல உன்னதையெல்லாம்
சொல்றீங்க,
"அப்போ நான் சொன்னது சரி, அப்படித்தானே"
"நூத்துக்கு நூறு நீங்க சொன்னது சரிதான் மாமா, அந்தப்
பொண்ணு யாரு மாமா?... உங்களுக்குத் தெரியுமா? பாரதி
ஆச்சரியம் மேலிடக் கேள்வியால் துளைத்தெடுத்தான்.
"... நீ இந்த காலத்துப்பிள்ளை, நான் அந்த காலத்து ஆளு,
உன் வயசைத் தாண்டித்தான் நானும் வந்திருக்கேன், எல்லாம்
எனக்குத் தெரியும், உன்னையும் அறியாம இப்ப நீ... என்ன
செஞ்சுகிட்டு இருக்கேன்னு பாரு. கஞ்சிய குடிக்காம சும்மா
அளஞ்சுகிட்டு இருக்கியே. ஆறிப் போன கஞ்சி பழங்கஞ்சின்னு
உனக்குத் தெரியாதா? சாப்பிடப் பிடிக்கலேன்னா போய்க்
கொட்டிரு. தட்டுகளக் கழுவி வச்சிட்டு வா. அப்புறமா பேசலாம்'னு
மாமா சொன்னாரோ இல்லியோ... பாரதி உடம்புல புதுத்தெம்பு
வந்தது போல, விறுவிறுன்னு எச்சில் தட்டுகளை எடுத்துக்கிட்டு
அடுப்பங்கரைக்கு ஓடினான்.
பாரதி மறுபடியும் பூனை போல மாமா பக்கத்துல போய்
உட்கார்ந்து கொண்டான், அவனைக் கவனிக்காதது போல் சுருட்டு
சுந்தரம் ‘ம்... இப்ப காய்ச்சல் எல்லாம் பறந்துடுமே. என்ன ஓட்டம்

பொழுது புலருமா?...
20

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


ஓடுறான் பாரு. ரேஸ் குதிரை கூட இந்த ஓட்டம் ஓடாது’, தனக்குள்
பச்ைகல் பேசிக்கிட்டிருந்த சுந்தரம்; இடுப்பில் லுங்கியின்மேல் சுற்றி இருந்த
வார்பட்டையில் உள்ள பட்டனைத் திறந்து, சுருட்டு
ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து, பல்லில் வைத்து மென்றபடி,
புகையை உள்ளே இழுத்து; ஆனந்தமாக மிக நிதானமாக வெளியே
ஊதித்தள்ளினார்.
புகை வாடையினால் முகம் சுளித்த பாரதி, "ஐயோ, ..
பார்த்தாலும் இந்த நாத்தம் பிடிச்ச சுருட்டுதானா?... மாமா இந்த
சுருட்டு வடையே எனக்குப் பிடிக்கலை. இந்தக் கர்மத்தை
எப்படித்தான் பழகிட்டீங்களோ... போங்க" எரிச்சலுடன் தலையில்
அடித்துக் கொண்டான்.
சுந்தரம் பிள்ளை மிக நிதானமாக, “டேய்; இதன் அருமை
உனக்கென்னடா தெரியப்போகுது,
"ஐயோ! மாமா... சுருட்டு வடை உங்களோட போகட்டும்,
அதப்பத்தி எனக்கு எதுவும் தெரிய வேணாம். எனக்குத்
தெரியவேண்டியதெல்லாம்...“ என்று சொல்லி முடிப்பதற்குள்
குறுக்கிட்ட சுந்தரம்,
"தெரியுமே... எப்படியாவது அந்த எதிர்வீட்டுப் பெண்ணோட
விசயத்தைச் சேகரிச்சாப் போதுமின்னு, சுருட்டு வாடையையும்
தாங்கிக்கிட்டு பக்கத்துல வந்து நீ.... உட்கார்ந்திருக்கிற பாரு, நீ
சரியான காரியக்காரன்தான்... அதனாலத்தான் என் சுருட்டோட
மகிமை உளக்குப் புரியலை".
"ஐயே... மாமா அறுக்காதீங்க. உங்க சுகத்தை நீங்களே
மகராஜனா அனுபவிங்க. நான் தடுக்கலை; முதல்ல சேதிய
சொல்லுங்க மாமா, பாரதி அலுத்துக்கொண்டான்.
சுந்தரம் மறுபடியும் சுருட்டை ஒரு இழுப்பு இழுத்தபடி,
ஆச்சர்யத்துடன் பாரதியைப் பார்த்து, "ஏம்பா பாரதி... காய்ச்சல்
இப்போ எப்படி இருக்கு, வேலைக்குப் போகலியே.... ஆபிஸுக்குப்
போன் போட்டு சொல்லலியா?" சுந்தரம் பாரதியின் வேட்கை
புரியாமல் அவளை சீண்டிப் பார்த்தார்.
"ஐயோ... மாமா. அதை எல்லாம் நாளைக்குப் பாத்துக்கலாம்.
இப்போ, எனக்கு ஜுரம் இல்லை, மறுபடியும் எனக்கு ஜுரம் வந்தா
மாத்திரை குடுங்க , முதல்ல விஷயத்துக்கு வாங்க" ஆவல்

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


மேலிடப் பாரதி அவர் முகத்தையே கண் சிமிட்டாமல் பார்த்துக்
கொண்டிருந்தான்.
"ஏம்பா பாரதி!... நான் தெரியாமத்தான் கேக்குறேள். இந்தக்
கம்பத்துக்கு எத்தனையே பேர் குடிவந்துட்டுப் போய்ட்டாங்க,
யாருக்குமே வராத இந்தக் காதல் நோய் உனக்கு மட்டும் எப்படி
வந்துச்சு... எதுக்கும் நாளைக்கு அந்தப் பொண்ணுக்கு ஜுரம்
வந்துருக்கான்னு கேக்கட்டுமா?"
"மாமா! நான் எவ்வளவு சீரியஸா கேட்டுக்கிட்டிருக்கேன்.
போதுமே உங்க கேலியும், கிண்டலும். இப்ப இதையெல்லாம்
கே க்கிறது க்கு எனக்கு ஆர்வ மில்லை
பொண்ணப்பத்தின செய்தியைச் சொல்லுங்க." பாரதி கெஞ்சும்
நிலைமைக்கு வந்துவிட்டான். "ப்னீஸ்... மாமா பீடிகை போடாம
சொல்லிடுங்க" என்றான்.
"பொறு... பொறு.... சொல்றேன். இதப்பாரு பாரதி. அந்தப்
பெண்ணு யாரு? ... என்ன ஏதுன்னு தெரியாம,
நெனச்சிக்கிட்டு ஜுரத்துல விழுந்துட்டியே ... ஒருவேளை
அப்பா, அவளுக்கு வேற எடத்துல மாப்பிள்ளை பார்த்து
வச்சிருந்தா... அதுவுமில்லாம அவளும் வேற யாரையாவது காதல்
பண்ணியிருந்தா என்ன செய்வோம்? ம்... சொல்லுப்பா" என்றவாறு
சுருட்டைப் பாதியுடன் ஜன்னலுக்கு வெளியே வீசிட்டு, ஜாடையாக
பாரதியின் முகபாவத்தை அளந்தார், காய்ச்சலிலும் தாமரையாய்ப்
பூத்திருந்த பாரதியின் முகம், சட்டெனத் தொட்டல் சிணுங்கி
செடியைப்போல் சுருங்கியது. "பாரதி!... நாம எப்பவும் நல்லதையே
நெனச்சிக்கிட்டு இருக்கக்கூடாது, நீ செய்யப்போற காரியம்
ஒண்ணும், சின்ன விசயமில்லை. காதல் விவகாரம், இந்தக் காதல்
விவகாரத்தால விளையப் போற கெட்டதையும் நீ யோசிக்கணும்.
புரியுதா?..."
பாரதியின் மனம் சற்று நேரத்தில், என்ன இந்த மாமா
ஆரம்பத்திலேயே அபசகுனமாப் பேசுறாறேன்னு நினைத்தது.
“ஏன்னா நீ இந்தக் கம்பத்துக்கு வந்து மூணு நாள்தான் ஆச்சு.
எனக்கே... உன்னப்பத்தி சரியாத் தெரியாது. அதுக்குள்ள காதல்,
கத்தரிக்கான்னு... அது எனக்கே கூட சரியாப்படலேப்பா,"
"மாமா... என்ன மாமா சொல்றீங்க." விட்டால் அழுதிடுவான்
போலிருக்கு.

பொழுது புலருமா?.
22

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"இரு.... சொல்றேன்" என்றபடி; இந்த சுருட்டு மாமா இந்தக்
கம்பத்துக்கு வந்து பத்து வருஷமாச்சு. இங்க யாரு.... எப்படி....
என்ன ஏதுன்னு எனக்கு அத்துப்படி.“
உடனே பாரதி. "மாமா நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.
புத்திக்கும் புரியறாப்புலத்தான் சொல்றீங்க, ஆனா... மனசு... மனசு
கேக்கமாட்டோங்குது, அதுதான் கவத்துல அடிச்ச பந்து மாதிரி.
அவகிட்டே போகுது. இப்ப நான் என்ன செய்யட்டும் மாமா?
பாரதியின் கண்களில் கண்ணீர் திரையிட்டது.
'சரி, சரி முதல்ல நான் சொல்றதைக் கேட்டுக்க, "
ஆசுவாசப்படுத்திய சுந்தரம். பாரதி! அந்த எதிர்வீட்டுப்
பொண்ணுடைய அப்பா அந்த வீட்டுக்கே சொந்தக்காரர். ரொம்ப
கர்வம் பிடிச்ச ஆளு, யாரையும் மதிக்கமாட்டாரு, அனாவசியமா
யார் கிட்டேயும் பேசமாட்டாரு, அவருக்கு நளினிதான் ஒரே
பொண்ணு. ம்.. அந்தப் பொண்ணு பேரு நளினி, சொல்ல
மறந்துட்டேன்." பாரதி நளினியின் பேரை மனதில் அசைபோட்டுக்
கொண்டான்.
'மனைவியும் இருக்காங்க. நளினிதான் அவருக்கு ஒரே
பொண்ணு , அம்மா, பொண்ணு ரெண்டு பேரையும்,
வெளியில் கூடப் பாக்க முடியாது. அவ்வளவு கட்டுப்பாடு.
எவ்வளவோ பேரு அந்தப் பொண்ண கட்டிக்கிறேன்னு, பொண்ணு
கேட்கப் போனாங்க. அவர் யாருக்கும் குடுக்கலை. உனக்கு
எப்படி... ம்.." சற்று யோசித்த சுந்தரம், “சரி பாரதி, நீ எதுக்கும்
கொஞ்சநான் பொறு, மேலே என்ன செய்யணுமின்னு நான்
சொல்றேன். அதுவரைக்கும் இந்த விசயத்தை யார்கிட்டேயும் மூச்க
விடாதே. என்ன..."
உடனே பாரதி, ஆச்சரியம் பொங்க மாமாவின் கைகளை
இறுகப் பற்றிக் கொண்டான். "மாமா.... ரொம்ப நன்றி. உங்களை
நான் மறக்கவே மாட்டேன் என்றான்.
மெல்லச் சிரித்த சுந்தரம்... 'ஆமாம்மா!... காரியம்
ஆகணுமின்னா காலக்கூட பிடிப்பீங்க. காதல் அப்படிப்பட்ட
ஈர்ப்புசக்தி கொண்டதாக்கும். "
"அப்போ மாமாவுக்கும் காதல் அனுபவம் உண்டுன்னு
சொல்லுங்கு என்றான் மெல்லச் சிரித்தபடி.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"யப்பா பாரதி.. உனக்கு இருபதுன்னா, எனக்கு அறுபதாக்கும்,
தெரிஞ்சுக்க' என்றவர் 'ஆமா ஏதோ வீடு காலி இருக்குன்னு யாரோ
சொல்லி, ஒரு பெட்டியமட்டும் தூக்கிட்டுக் குடி வந்துட்டியே சரி...
நீ... யாரு என்ன ஏதுங்கிற விஷயத்தையே சொல்லலியே" என்றார்,
உடனே பாரதி... "மாமா நான் யாருன்னு தெரிஞ்சுக்கக்கூடிய
அளவுக்கு பெரிய விஐபி ஒண்ணுமில்லை. நான் ரொம்ப
சாதாரணமான பாரதி...
"உன்னப்பத்தி நல்லது கெட்டது நாலு ஜனத்துக்குத்
தெரிஞ்சாதானே உதவிசெய்ய முடியும், நீ விஐபி இல்லேங்
கிறதுக்காக உன்னைப்பத்தி சொல்லாம இருக்கமுடியுமா? சொல்லு,"
"மாமா... தஞ்சாவூர்ல காட்டுர் கிராமத்துலதான் நாங்க
இருக்கோம். நானும் அப்பாவும் சிங்கப்பூருக்குப் பொழப்பு தேடி
வந்தோம். சீலாட் ரோடு கம்பத்துலதான் வீடு புடிச்சுக்
குடியிருந்தோம், அப்பாவுக்கு ஹார்பர்ல கூலி வேலை கிடைச்சுது.
நான் கொண்டோன்மண்ட் இங்கிலீஷ் ஸ்கூல்ல படிச்சேன். பிறகு
கான்எங்செங் உயர்நிலைப் பள்ளியில் ஓ லெவல் வரைக்கும்
படிச்சேன், இப்போ ஒரு சீனர் தனியார் நிறுவனத்துல கணக்காளரா
வேலை செய்றேன். மாசம் மூணு வெள்ளி சம்பளம். சமீபத்துல
அப்பாவுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாம போனதுனால CP
பணம் கெடைச்சதும் உடளே’ ஊருக்கு அனுப்பி வச்சுட்டேன்,*
போன மாசம் அவ ர் ஊருக்குப் போளது
ஒருத்தனு க்கு வீடு குடுக்க மு டியாது
காலி பண்ணச்சொல்லிட்டார், பிறகுதான் அப்பாவோட கூட்டாளி
மூலமா இங்கே எளக்கு வீடு கிடைச்சு வந்தேன், இப்போதைக்கு
இதுதாம் மாமா என்னோட வரலாறு, வேற எந்த சிதம்பர ரகசியமும்
இல்ல , என்ன, ., ஊர்ல ரெண்டு
பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க, இனிமே, மாப்பின்ளைங்க ரெண்டு
பேரையும் இங்கே வரவழைச்சிடணும்ள்னு இருக்கேள்,
உங்க அப்பா ஊர்ல உளக்கு பொண்ணு எதுவும் பார்க்கலியா*
- சுந்தரம் கேன்வியால் தூண்டில் போட்டார்,
சரியாப் போச்சு ம மா, ,, ஊர்ல
முறைப்பொண்ணே இருக்கா, ஆனா, ஊர்ல எனக்குக் கல்யாணம்
பண்ணிக்க இஷ்டம் இல்ல மாமா, அம்மாவும், அப்பாவும் நான்

மெழுது புஷமயீ. .
24

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


என் முறைப் பொண்ணத்தான் கட்டிக்கணுமின்னு பிடிவாதமாக
இரூக்காங்க. இப்ப நான் ஊருக்குப் போனாலும் எதையாவது
சொல்லி கட்டி வச்சுடுவாங்க. அதனால நான் ஊருக்கே போகாம
இருக்கேன்னா பாத்துக்கிடுங்கனேன்"
"ஆனா.... நீ சிங்கப்பூர்ல கல்யாணம் பண்ணிக்கிட்டா பின்னாடி
பிரச்சனை எதுவும் வந்துடாதே,'
"மாமா .... என்னைப் பொறுத்தவரைக்கும் கல்யாணம்
இஷ்டப்படிதான் நடக்கணுமின்னு நானும் பிடிவாதமாக இருக்கேன்
மாமா' என்று பாரதி உறுதியாகச் சொன்னான்.

“இது போதும்பா, இதுக்குமேல, நீ எதுவும் சொல்ல வேணாம்,


உனக்கு அதிர்ஷ்டம்னு ஒண்ணு இருந்தா அந்த எதிர்வீட்டு ஜன்னல்
அழகியை பொண்ணு பாத்துமுடிச்சிடுவோம். என்ன... என்றார்.
உடனே பாரதி நெகிழ்ச்சியுடன், மாமா, நான் நினைக்கவே
இல்லை. நீங்க இப்படி ஒரு ஜாலியாபன பேர் வழிய
இருப்பீங்கன்னு' - மறுபடியும் வாயில் சுருட்டைப் பற்ற வைத்த
சுந்தரம், பெருத்த குரலுடன் சிரித்தார்.
உடனே பாரதி... ஏதோ ஞாபகம் வந்தவன் போல் 'சரி... மாமா
நான் இப்பவே ஆபீஸுக்குப்போய் இன்னிக்கும், நாளைக்கும்
சேர்த்து ரெண்டு நாளைக்கு லீவு லெட்டர் எழுதிக் கொடுத்திட்டு
வந்திடுறேன்' என்றவாறு ஆபிஸுக்குக் கிளம்பத் தயாரானான்.
'ஆமாம்மா... முதல்ல அதைச்செய். அப்படியே வரும்போது
நாம ரெண்டு பேருக்கும் சாப்பாடும் பார்சல் பண்ணிட்டு வந்திடு
என்ன. நான் கொஞ்சநேரம் என் கட்டையை கீழே போடுறேன்'
சுந்தரம் சொல்லிக்கிட்டே, தரையில் சாய்ந்தார்.
சரி மாமா' என்றவாறு சுருட்டு வாடையைச் சகிக்க முடியாமல்
மூக்கைப் பொத்திக்கிட்டு கீழே படியில் இறங்கியபடி, மாமா
நல்லவத்தான். என்ன... இந்த சுருட்டுப் புகைதான் குடலைப்
புரட்டுதுன்னு புலம்பியபடியே வெளியே வந்தான்.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அத்தியாயம் 3
அன்று இரவு பாரதி நித்திரை வராமல் புரண்டு
கொண்டிருந்தான். நளினியின் அழகு முகம் அவன் கண்முன்
நிழலடியது. நளினி... அழகான பேர். சிரித்தால் பனீரெனத்
தெரியும் முத்துப்பல் வரிசை. பாரதி நளினியின் பெயரையே
தியானம் செய்ய ஆரம்பித்து விட்டான். நாட்கள் நகர்ந்தன. பாரதிக்கு
நளினியை நினைத்த மாத்திரத்தில் அவனோடு சேர்ந்து
மாட்டோமாங்கிற ஏக்கமும் வளர்ந்தது.
ஏனோ, இப்போழுதெல்லாம் நளினியும் ஜன்னலருகில் வந்து,
பாரதியைக் கண்டதும், மயக்கும் புன்னகை ஒன்றை வீசிவிட்டு
மறைந்து விடுவாள். இதற்காகவே காத்திருந்தவன் போல் பாரதியும்
அவனைக் கண்டதும் புன்னகை புரிய ஆரம்பித்து விட்டான்.
இப்படியாக நானொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப்
பாரதியின் காதல் வளர்ந்தது. அவளும் பார்வையால் தினம் தினம்
அவனைக் கொன்று கொண்டிருந்தாள்.
இதற்கிடையில் பாரதிக்குக் கம்பத்தில் நிறைய நண்பர்களும்
சேர்ந்து விட்டனர். வேலை முடிந்து, மாலை நேரத்தில்
அவர்களுடன் அரட்டை அடிக்கவும், பூப்பந்து விளையாடவும்
ஆரம்பித்து விட்டான். அவ்வப்போது கார்கள் வந்து நுழையும்
அந்தச் சின்ன ரோட்டில் தினம் இரண்டு மணி நேரமாவது
விளையாட்டுக்கு ஒதுக்கி விடுவது அவன் வழக்கமாகி விட்டது.
போக்குவரத்து வசதிக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கொண்டான்.
நண்பர்களிலேயே, பாரதிக்கு மட்டும்தான் ஸ்கூட்டர் இருந்தது.
ஒருநாள் பெரிய வெள்ளிக்கிழமை விடுமுறை தினம். பாரதி
வீட்டுக்குப் பின்புறம், கொல்லைப்புறப் பக்கம் சற்றுதூரம் சென்றால்
ஒரு நீச்சல் குளம் இருந்தது. நண்பர்களுடன் நீச்சல் குளத்தில்
குளித்து விட்டு வரும் வழியில் அந்த அழகியைக்
ஆமாம்... நளினிதான் தோழிகளுடன் அரட்டை அடித்துக்
கொண்டிருந்தான், திகைப்பில் பாரதி, அந்த இடத்தில் நின்றபடியே
நளினியை உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ரசித்துக்
கொண்டிருந்தான். மாலை வெயிலில் அவள் மேனியின் மஞ்சள்
நிறமும் முத்துப்பல் வரிசையுடன் அடடா! ... அவன்
அழகே... அழகுதான். பாரதி தன்னை மறந்த நிலையில் நளினியின்
சிரிப்பில் ஐக்கியமாகி விட்டான்.

பொழுது புலருமா?..
26

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


சிறிதுநேரம்தான், என்ன ஆச்சோ தெரியலை. நளினி திடிரென
மயங்கிக் கீழே சாய்ந்துவிட்டாள். ஒரு கணம்தாள்... பாரதி தன்னை
சுதாரித்துக்கொண்டு ஓடிச்சென்று, கீழே விழுந்து விடந்த அவளைத்
தூக்கி... தன் நெஞ்சோடு அணைத்த வண்ணம், அவன் வீட்டினுள்
நுழைந்தான், அவனைப் படுக்கையில் போடுமுன் யாரும் அறியா
வண்ணம், நளினி... என்றபடி அவள் உதட்டில் ஒரு முத்த மழையும்
பொழிந்துவிட்டான்.
வாடிய சருகுபோல் அவன் கைகளில் தவழ்ந்திருந்த
நளினியைப் படுக்கையில் மெதுவாகக் கிடத்தினான். அதற்குள்
அவன் பின்னால் ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. அங்கு யாரும்
பேச முடியாமல் ஒரு மௌன நாடகம் நடந்து கொண்டிருந்தது.
அந்த நேரம் அங்கு வந்து நின்ற நளினியின் தந்தை, அவனை
முறைத்துப் பார்த்தபடி, 'உன்னை யார் தூக்கிட்டு வரச் சொன்னது?
எங்களைக் கூப்பிடக் கூடாதா? ஒரு வயசுப்பொண்ணை இப்படி
தொட்டுத் தூக்கிட்டு வந்திருக்கியே, பாக்கிறவங்க என்ன
நினைப்பாங்க" என்றார் கோபத்துடன்.
"இதுல நெனைக்கிறதுக்கு என்னங்க இருக்கு, ஆபத்துக்குப்
பாவமில்லேன்னுதான் தூக்கிட்டு வந்தேன்' என்றான் பாரதி பயமே
இல்லாமல்.
'சரி சரி, எல்லாம் முடிஞ்சிடுச்சு, எல்லாரும் கூட்டம் போடாம
முதல்ல எடத்தைக் காலிப்பண்ணுங்க' என்று விரட்டினார்.
'தவறுன்னா மன்னிச்சுடுங்கன்னு' பாரதி விருட்டென
வெளியேறிளான். இவருக்கென்ன பைத்தியமா?... மயக்கம் போட்டு
விழுந்த பொண்ணைத் தூக்கிட்டு வந்து உதவி செஞ்சிருக்கான்.
புரியாம ஒரு நன்றிகூட சொல்லாம விரட்டுகிறாரே என்று பலரும்
பலவிதமாகப் பேசிக்கிட்டு கலைந்தனர்.
வீட்டுக்கு வந்த பாரதிக்கு மனம் ஒரு நிலை கொள்ளலை.
நளினிக்கு என்ன ஆச்சோங்கிற கவலை ஒருபுறமிருக்க அவளைத்
தொட்டுத்தூக்கி, முத்தமிட்ட உணர்ச்சிகளால் உந்தப்பட்ட அவனின்
இளநெஞ்சம் பாகாய் உருகியது. அவளைப்பற்றி இனிய
நினைவுகளுடன் நாட்களும் நகர்ந்தன.
இப்பொழுதெல்லாம் பாரதி ஜன்னல் பக்கம் வந்து நின்றால்
போதும், உடனே அந்த ஏந்திழையாளும் வந்து நின்று
புன்னகைப்பதும் கைகளை அசைச்சு சைகை புரிவதும்

சுலைமான்
நூர்ஜஹணை

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


வாடிக்கையாகி விட்டது. ஆனால்... இருவருமே ஓருவரை ஒருவர்
விரும்புவது போல் பேசிக் கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்த
வரை அந்த ஜன்னல் வழி, இனம் புரியா ஒரு மெளன நாடகம்தான்
நடந்து கொண்டிருந்தது. தன் உள்ளத்து உணர்ச்சிகளால் பொங்கி
எழுந்து கொண்டிருந்த காதலை வார்த்தைகளால் கொட்டி
விடுவதற்குப் பாரதிக்கு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. அந்த
ஜன்னலுக்கு வாயிருந்தால் பாரதியின் காதலைப் பற்றி
கதைகள் சொல்லி இருக்கும்.
அன்று மாலை வேலை முடிந்து பாரதி, தூரத்தில் இருந்து வரும்
போதே ஸ்கூட்டரில் ஹாரன் அடித்துக்கொண்டு வந்தான். இந்த
ஹாரன் சத்தத்தைக் கேட்டாவது ஓடி வரமாட்டாளாங்கிற
நப்பாசைதான், பாரதியின் பார்வை ஜன்னலில் இருந்தது. ஏக்கம்
அவன் முகத்தில் இருந்தது . இதயமோ, வந்துவிடு
துடித்தது ம்... மனம் கவர்ந்தவள் எட்டியும் பார்க்கவில்லை. மனம்
நொந்துபோன பாரதி, ஸ்கூட்டரை தன் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு,
ஸ்கூட்டரின் கண்ணாடியை நளினியின் வீட்டு ஜன்னல் தெரியும்படி
சரிசெய்தான் ம்... இப்போ ஜன்னலில் யார் வந்து நின்றாலும்
தெரிந்துவிடும்.
திருப்தியுடன் பாரதி, பக்கத்தில் ஒட்டுக்கடைக்குப் போய், ஒரு
நீளமான பேப்பரும், ஒரு கிரீம் கிரேக்கர் பிஸ்கட் டின்னும்
வாங்கிட்டு ஸ்கூட்டர் பக்கம் வந்து நின்றதபடி, கண்ணாடிவழி
நளினி வீட்டு ஜன்னலைப் பார்த்தான். என்ன ஆச்சர்யம்!...
ஜன்னலில் நளினி நிற்பது தெரிந்தது. கண்ணாடியில் அவளின்
அழகு முகத்தை ரசித்தபடி சிலையாக நின்றுவிட்டான்.
அதேநேரம் அவன் நண்பர்களும் ஒருவர் பின் ஒருவராக
வந்து சேர்ந்து
அதில் ஒருவன் 'டேய், பாரதி அந்தக் கண்ணாடியில அப்படி
என்னடா பாத்துக்கிட்டு நிக்கிறே?...' என்றான்.
உடனே இன்னொருத்தன். அட நீ வேறப்பா,, கொஞ்சநாளா,
பாரதி இப்படித்தான் தன்னையை மறந்து நிக்கிறான். என்னான்னு
புரியலை" என்றான் 'யப்பா! பாரதி. .நாங்களெல்லாம் வந்துட்டோம்.
நீ என்ன இப்படி சிலையாட்டம் நிக்கிறே? ...'
தோளைத்தொட்டு உலுக்கினான்.

பொழுது புலருமா?.
28

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


தன் உணர்வுக்கு வந்த பாரதி 'ஓ... ஒண்ணுமில்லையே'ன்னு
அசடு வழிந்தான்.
அப்பொழுது சைக்கிளில் நளினியில் தந்தை, வேலை முடிந்து
வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பாரதியின்
கூட்டாளி ரவி, பாரதி... இதோ போறாரே இவர்தான் அந்த
எதிர்வீட்டு கிளியோபாட்ரோவோட அப்பா. சரியான கர்வம் பிடிச்ச
மனுஷன்' என்றான், பாரதியும் அடிக்கடி அவரைப்
பார்த்திருப்பதால், பேசாமல் இருந்து விட்டான். கண்ணாடி
அவன் நளினியைப் பார்க்கத் தவறவில்லை, நிலவு மறைந்து வானம்
வெறிச்சோடிக் கிடந்ததுபோல்; ஜன்னலும் நளினி இல்லாமல் களை
இழந்து காணப்பட்டது.
அவன் மனசைப்போல, பாரதியின் மனநிலையை உணராத
அவன் நண்பன், “பாரதி... சும்மா சொல்லக்கூடாது. நளினி
உண்மையிலேயே பேரழகிதான். இந்தக் கம்பத்துல அவள்
அழகுக்கு ஈடு கொடுக்க யாரும் இல்லதான். அதனாலத்தான் அவ
அப்பா அவளை ரொம்பக் கட்டுப்பாடா வச்சிருக்கார். அழகு
இருக்கிற எடத்துலத்தான் ஆபத்தும் இருக்கும்பாங்க'...
"அப்படீன்னா... அந்தப்பொண்ணு ஆபத்தானவளா?...” பாரதி
புரியாமல் கேட்டான்.
"சேச்சே... அந்தப் பொண்ணு ரொம்ப தங்கமானவ ஆனா..."
"ஆனா என்னடா...' பாரதி பதற்றமாக நண்பன் என்ன சொல்லப்
போறானோங்கிற தவிப்பில் அவசரப்பட்டான்.
"வேற ஒண்ணுமில்லடா... இப்போ போனாரே... அந்தக்
கிழவன் சரியில்லை. அவரைத்தான் ஆபத்தானவர்னு சொன்னேன்"
என்றான்.
நண்பனின் பதிலில் நிம்மதிப் பெருமூச்க விட்ட பாரதி, “டேய்...
ரவி... இதுல என்னடா தப்பு இருக்கு, மக அழகா இருக்கிறதால
அப்பா கொஞ்சம் கண்டிப்ப இருப்பார் போலிருக்கு. ரோஜாச்
செடியில் முள்ளிருக்கிறது தப்புன்னா, அவ அப்பாவும்
ஆபத்தானவர்தாண்டா... வேலி போட்டாத்தான் பாதுகாப்பாக
இருக்கும்.... புரியதா?" பாரதி விளக்கம் கொடுத்தான்.
"பாரதி... போதும்பா போதும் இதுக்குமேல எனக்கு எந்த
விளக்கமும் வேணாம்பா. மொத்தத்துல எவனுக்குக் குடுத்து

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


வைச்சிருக்காளோ தெரியலை. கம்பத்துல... அவனவன் தவம்
கிடக்கிறான் நமக்குக் கிடைக்கமாட்டாளான்னு... கிழவன் அசைஞ்க
குடுக்க மாட்டேங்கிறான் போ...' என்று ஒரு கதையே சொல்லிக்
கொண்டிருக்க, எரிச்சலடைஞ்ச பாரதி,
"ஆமாண்டா, ரவி சொல்றது உண்மைதாண்டா"ன்னு
இன்னொருவன் ஓத்து ஊத, பாரதி என்ன சொல்வதுன்னே
தெரியாமல்...
'சரி... போதும் நிறுத்துங்க உங்க புராணத்தை, இப்ப வாங்க
பந்து விளையாடலாமின்னு" சமாளித்தான்.
அந்தக் கூட்டத்தில் ஒருவன் 'ஏண்டா இப்ப அந்த எதிர்வீட்டு
பொண்ணப்பத்திகூட பேச விட மாட்டேங்கிற. உனக்கு என்னடா
ஆச்சு"ன்னு குதர்க்கமாகப் பேசிக்கிட்டே விளையாட்டில்
ஈடுபட்டனர்.
'டேய், அவ ஒரு வயதுக்கு வந்த பொண்ணு. அவளப்பத்தி
இப்படியெல்லாம் பேசுறது தப்புடா" என்று கூறியபடியே பந்தைக்
காலால் எட்டி உதைத்தான் பாரதி. பாரதியின் மனமோ... நண்பன்
கூறியது போல் நளினி யாருக்கும் குடுத்து வைக்கலே. இந்த
பாரதிக்குன்னே பொறந்தவடான்னு... தனக்குள் கூறிக்கொண்டான்.
பந்து விளையாடியதில் நேரம் போனதே தெரியவில்லை, இருட்டும்
சமயம் பாரதி தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.
நளினியைப் பற்றிய இன்ப நினைவுகளுடன், கழுத்தில்
துண்டைச் சுற்றியபடி குளியலறைக்குள் நுழைந்தான்.
அத்தியாயம் 4
அறைக்குள் நுழைந்த பாரதியைக் கண்டதும்;
அவனுக்காகவே காத்திருந்தது போல, "பாரதி இந்தா.... ஊரிலிருந்து
உளக்குக் கடிதம் வந்தி ருக்குன்னு சுந்தரம் மாமா 9ரு
அவனிடம் நீட்டினார்.
கடிதத்தை வாங்கிய பாரதி பிரித்துப் படித்தான். என்ன பாரதி...
யார்கிட்ட இருந்து கடிதம் வந்திருக்கு! ... என்ன
என்றார்.
மாமாவை நிமிர்ந்து பார்த்த பாரதி... “அம்மாகிட்ட இருந்து
மாமா, அப்பாவுக்கு உடம்புக்கு ரொம்ப முடியாமப் போயிட்டுதாம்,
டவுன்ல பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்களாம்' என்றான்.

பொழுது புலருமா?...
30

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


'அவ்வளவுதானா? வேற ஒரு சேதியும் இல்லியா?" என்றார்
சாதாரணமாக.
“இருக்கு மாமா. அப்புறம் முடிஞ்சா ஒரு எட்டு ஊருக்கு
வந்துட்டுப் போன்னு எழுதி இருக்காங்க" என்றான் அமைதியாக.
பாரதியின் மனம் யோசனையில் ஆழ்ந்து விட்டது.
கவனித்த சுந்தரம், பாரதியின் தோளில் கை போட்டபடி... "பாரதி
நான் ஒரு சேதி சொல்றேன் கேக்கிறியா?..." என்றார்,
என்ன மாமா... என்பது போல் பாரதி அவரைப் பார்த்தான்.
அதாவது!... நம்ம ரூம்ல இருக்கிற நாலஞ்சு பெரிய மனுஷங்களை
அழைச்சிட்டு, எதிர் வீட்டுல உள்ள நளினியோட அப்பா
கிட்டப்போய், அவளைப் பொண்ணு கேட்டா என்ன?" என்றார்.
கண்கள் பிரகாசமாக... பாரதி மாமாவைப் பார்த்தபடி
'அப்படியே செய்யுங்க மாமா. எப்ப மாமா போறீங்க?..., என்றான்
அவசரமாக. அவன் குரலில் பதற்றம் தெரிந்தது.
"இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைதான் எல்லாருக்கும்
வசதிப்படும். நீ என்ன சொல்றே?" என்றார்,
பாரதி, மாமாவின் கையைப் பற்றியபடி... “நான் சொல்றதுக்கு
என்ன மாமா இருக்கு. நீங்க எது செஞ்சாலும் எனக்கு சம்மதம்தான்
மாமா" என்றான்.
'அதுக்கில்லேப்பா, எதுக்கும் நீ உன் அப்பா, அம்மாகிட்ட ஒரு
வார்த்தை சம்மதம் கேட்டா நல்லது பாரு. பின்னால இதனால் எந்தப்
பிரச்சனைக்கும் வழி இருக்காது பாரு,"
உடனே பாரதி அவசரமாக... "மாமா, நீங்க சொல்றது எல்லாம்
சரிதான். இப்ப அப்பா உடம்புக்கு முடியாத நேரத்துல, இங்கே நான்
பொண்ணு பாக்குற விஷயத்தைப் பத்திப் பேசினா... இதை ஒரு
பிரச்சனையா வச்சிக்கிட்டதுமில்லாம, அதையே சாதகமாக்கிட்டு,
ஊர்ல மாமா பொண்ண கட்டிக்கச்சொல்லி வற்புறுத்துவாங்க மாமா.
இப்ப அம்மா கடுதாசி போட்டுக் கூப்பிடறதும் இதுக்குத்தான்'
என்றான்.
யோசனையில் ஆழ்ந்த சுந்தரம்... முடிவாக.. "சரி... சரி,..
பாரதி! நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதே என்ன?
நான் பாத்துக்கிறேன். இந்த ஞாயிற்றுக்கிழமை எல்லாம் நல்லடிபடியா
முடிஞ்சிடுமின்னு நினைக்கிறேன். நீ முதல்ல உடைகளை

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


களைஞ்சிட்டு குளிச்சிட்டு வா... சாப்பாட்டு வேலைய முடிச்சிட்டு
பிறகு பேசுவோம். இப்ப நான் கொஞ்சம் கீழே... கடைக்குப்
போய்ட்டு வந்துடறேன்"ன்னு மாமா கீழே போனார்.
மாமாவின் நம்பிக்கை ஊட்டும் பேச்சில் புதுத்தெம்புடன் பாரதி
விசிலடித்தபடி குளியல் அறைக்குள் நுழைந்தான். மனசில இருந்த
ஒரு பாரம் குறைஞ்சமாதிரி இருந்தாலும், ஊரில் அப்பாவை
நினைத்த மாத்திரத்தில் அவன் மனம் வேதனை அடைந்தது.
அன்று இரவு படுக்கப்போகுமுன் பாரதி தன் தாயாருக்கு
விரிவாக சிங்கப்பூரில் தான் திருமணம் செய்து கொள்ளப்போகும்
விஷயத்தை ஒரு நீண்ட கடிதமாக எழுதி முடிச்சிட்டு... நெட்டி
முறித்தபடி ஜன்னலருகே வந்து நின்றபோது, அவன் எதிர்பார்த்தது
போல அவனுக்காகவே நளினியும் காத்திருந்தாள். பாரதி சைகை
காட்டி, கைகளை ஆட்டி சாப்பிட்டாயா என்றான். அவனுக்குச்
சளைத்தவனா என்ன... அவளும் புன்னகை புரிந்தபடி கைகளால்
பதிலுக்கு சைகை காட்டி, சாப்பிட்டாச்சு என்றாள் நளினமாக இந்த
சைகை மொழி கண்சிமிட்டும் நேரமே நடந்திருக்கும், அதற்குள்
யாரோ கூப்பிட... கையை அசைத்தபடி, மின்னலென ஓடி
மறைந்துவிட்டாள் நளினி என்ற அந்த அழகிய பூங்கொடி.
அடடா! போய்ட்டாளேன்னு பாரதி ஜன்னலையே வெறிக்கப்
பார்த்துக் கொண்டிருந்தான், மனமில்லாமல் படுக்கையை விரித்துப்
படுத்துக் கொண்டான், வெகுநேரம் கழித்தே பாரதி உறக்கத்தில்
ஆழ்ந்தான்.
ஞாயிற்றுக்கிழமை, பாரதி வானத்தில் பறக்காத குறையாக
அலைந்து கொண்டிருந்தான். கற்பனை வானத்தில் சிறகடித்துப்
பறந்து கொண்டிருந்தான், பெண் பார்க்கப் போக பூ, பழம், கற்கண்டு
எனப் பார்த்துப் பார்த்து வாங்கியிருந்தான். பூமியில் கால்
பதியலேன்னுதான் சொல்லணும். அத்தனை படபடப்பும்
பரபரப்புமாகக் காட்சி அளித்தான். சீக்கிரம் நேரம் போகாதான்னு
ஏங்கிக்கிட்டிருந்தான்.
சாயந்தரம் ஆறு மணி அளவில் சுருட்டு சுந்தரம்
சில பெரிசுகளையும் அழைச்கக்கிட்டு நளினி வீட்டுக்குப்
போனார்கள். ஒரு கும்பலே மேல் மாடிக்குப் போவதைப் பார்த்து,
அதிசயத்தோடு ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொண்டிருந்தனர்.
அதற்குள் அங்கு ஒரு கூட்டமே கூடி விட்டது. பலவாறகப் பேச

பொழுது புலருமா?....
32

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


ஆரம்பித்து விட்டார்கள். கூட்டத்தில் பலவிதமான பேச்சுகள்
பரிமாறப்பட்டாலும், விஷயம் என்னவென்று ய்ராலும் யூகிக்க
முடியவில்லை, பழத்தட்டுடன், நல்ல விசயம்தான் பேசப்
போகிறார்கள் என்று நினைத்தாலும், நளினியின் அப்பா என்ன
குணத்தில் - என்ன பேசப் போகிறாரோ? மேலே என்ன நடக்கப்
போகிறதே... என்று நளினியின் தந்தையின் குணத்தைப் பற்றி
நன்கு அறிந்தவர்கள் கவலைப்பட்ட்னர். சுத்த சிடுமூஞ்சி, வறட்டு
கர்வம் பிடிச்சவராச்சே... என்ன நடக்கப்போகுதோன்னு
ஒருவருக்கொருவர் குசுகுசுன்னு பேசிக் கொண்டனர், வேறுசிலர்
என்ன நடக்கப்போகுதுன்னு பாத்துடுவோமேன்னு காதுகளைத்
தீட்டியபடி நின்றிருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே நளினியின் தந்தை கொஞ்ச
நேரத்தில் காச்சு மூச்சுன்னு கத்த ஆரம்பிச்சுட்டார், பாரதி
பெரியவர்கள் சூழ நளினியின் வீட்டு வாசலில் வந்து நின்றான்
அப்பொழுது எதார்த்தமாக வாசலுக்கு வந்த நளினி...
கூட்டத்தையும் கூட்டத்தில் பாரதியையும் பார்த்ததும்; படபடப்புடன்
வெட்கம் மேலிட.... வெளியே சிட்டாய்ப் பறந்து விட்டாள்.
எதுவும் விளங்காமல்... வாசலில் வந்து நின்றவர்களைக்
கமலம் வரவேற்றாள்,
நளினியின் வசந்த மாளிகையினுள் காலை வைத்த பாரதியின்
மனம் பட படவென அடித்துக் கொண்டது இருந்தும்
வீட்டைச் கற்றிலும் ஒரு நோட்டம் விட்டான். அவர்களின்
காதலுக்குக் காரணமான ஜன்னலையும் பார்க்கத் தவறலை, சுவரில்
நளினியோட பலவிதமான படங்களைப் பார்த்தான் ஒவ்வொரு
படத்திலும், அவளோடு இணைஞ்சு இருப்பது போலக் கற்பனை
செய்தான். மனசுதானே காசா, பணமா? எதையும் நினைக்க முடியும்.
ஆனால்!... எதுவும் நடக்க கடவுளின் அனுக்கிரகம் வேணுமே.
இங்கு பாரதி கற்பனையில் மிதக்க...
வெட்கப்பட்டு பக்கத்து வீட்டில் ஒளிந்து கொண்ட நளினியின்
மனமே... தாம்பாளத்தட்டோட வந்திருக்காங்களே. ஒருவேளை
அவரு என்னைப் பொண்ணு கேக்க வந்திருப்பாரோ... எதுவுமே
சொல்லாம, கொள்ளாம திடுதிப்புனு வந்து நிக்கிறாங்களே, கடவுளே
இந்தக் குணம் கெட்ட அப்பா என்ன சொல்லப்போறாரோ?
கடவுளே... நல்ல விஷயமா இருந்த அப்பா எதுவும்
சொல்லாம உடனே சம்மதிச்சிடணும். கடவுளே... அவரோட

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


என்னை சேத்து வைச்சிடுன்னு... மனசு கெடந்து அடிக்கு ரெண்டு
கைகளையும் நெஞ்சோடு சேர்த்து வச்சு, கண்களை மூடிக்கிட்டு
கடவுளை வழிபட ஆரம்பித்தாள்.
தான் இந்த வீட்டுக்கு மருமகனாகப் போகிறோம் என்ற
தெம்பில் பாரதி சுருட்டு சுந்தரம் முதுகுக்குப் பின்னால் நின்று
கொண்டான். வராதவன் வந்திருக்கானே, ஒரு கண் ஜாடைகூட
காட்டாமல் ஓடிட்டாளே. இருக்கட்டும், கூடிய சீக்கிரம் எங்கிட்ட
மாட்டப்போறானே... பாத்துக்கிறேன்.... என எண்ணச்சிறகில்
பறந்தவன் ராமசாமியின் குரல் கேட்டுத் தன் உணர்வுக்கு வந்தான்.
"ம்,.. வாங்க... இப்படி திடுதிப்புனு எல்லாருமா சேர்ந்து
வந்திருக்கீகளே.... என்றவாறு படிச்சுக்கிட்டிருந்த பேப்பரை மடிச்சு
கக்கத்தில் வச்சுக்கிட்டு வரவேற்றார்.
வீடு தேடி வந்தவங்களை வான்னு சொன்னதோடு சரி.
உட்காரச் சொல்லலை, இதைப் பொருட்படுத்தாத சுந்தரம், வந்த
விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
"இன்னிக்கு நாள் நல்லா இருக்குன்னு, உங்க பொண்ண நம்ம
பாரதிக்குக் கேக்கலாமின்னு வந்திருக்கோம்" என்றபடி பழத்தைக்
கீழே வைக்கக் குனிந்தபோது,
"போதும்... போதும், தட்டைக் கீழே வைக்காதீங்க' சீறினார்.
திகைச்சுப் போன சுந்தரம் மறுபடியும் தட்டைக் கையில் ஏந்தியபடி,
"ஏங்க...ஏன் எடுக்கச் சொல்றீங்க?*
"ம்.... பட்டுக்கம்பளம் விரிச்சு வைக்கத்தான். யாருய்யா
இவன்? நீங்களெல்லாம் யாரு, யாருய்யா வந்து பொண்ணு
கேக்கறது? இப்படி வரவன், போறவனுக்கெல்லாம் பொண்ணு
குடுக்க, நான் ஒண்ணும் இளிச்சவாயன் இல்லை,
வந்திருந்த அத்தனைபேரும்.... வாயடைத்து நின்றனர் சுந்தரம்
எப்படியோ சமாளித்தபடி -என்னய்யா இப்படிப்பேசுறே- என்றார்
கலக்கத்துடன்.
“நான் அப்படித்தான் பேசுவேன்யா. இவன் யாரு? இவன்
குலம் கோத்திரம். என்னங்கிறதாவது உமக்குத் தெரியுமா?...
சொல்லுயா... எந்த முன் அறிவிப்பும் இல்லாம பெரிசா....
தட்டுதூக்கிட்டு வந்து நிக்கிறீங்க... என்றார் படபடப்புடன்.

பொழுது புலருமா?...
34

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


உடனே சுந்தரம் பிள்ளைக்கும் கோபம் வந்துடுச்சு.
வந்திருந்தவங்க முன்னால நம்மள அவமானப்படுத்திட்டானேங்கிற
ஆத்திரத்தில்.... "ஏம்பா... நீ... என்ன மனுஷனா?... வந்தவங்களை
இப்படித்தான் மரியாதைக் குறைவா பேசுறதா? அவன் ஒண்ணும்
பொண்ண இழுத்துட்டுப் போறேன்னு சொல்லலை. முறைப்படி
கல்யாணம் பண்ணிக்கிறேன்னுதான் வந்திருக்கான்."
"ம்... ம்... வருவான். ஏன்யா! நேத்து குடிவந்தவனுக்
கெல்லாம்... நல்லது, கெட்டது தெரியாம முதல்ல உன் பொண்ணக்
குடுப்பியா? சொல்றவன் சொன்னா* கேக்குறவனுக்கு மதி எங்கேயா
போச்சு? பெரிசா பொண்ணு கேக்க வந்துட்டே?..." ஆத்திரத்தில்
ராமசாமி பல்லை நறநறன்னு கடித்தார்.
"யோவ்... ராமசாமி... எனக்கு ஒரு பொண்ணிருந்தா... கண்ண
மூடிக்கிட்டு நான் பொண்ணு குடுப்பேன். பாரதிக்கு என்னய்யா
குறைச்சல்?... நல்ல படிச்சவன், நல்ல உத்தியேகத்தில் இருக்கான்.
நல்ல சம்பளம், நல்ல குடும்பம், நல்ல வசதி, பெத்தவங்களுக்கு
ஒரே ஆம்புளப்புள்ள. உம்ம பொண்ணக்குடுக்க இது போதாதா?
இதுக்கு மேல என்னய்யா வேணும்?" என்று சுந்தரமும் என்ன
ஆனாலும் சரின்னு குதித்தார்,
"நான் எதிர்பார்க்கிற எதுவுமே இவங்கிட்ட இல்ல. இந்தக்
கதையெல்லாம் நீ நம்புற மாதிரி நான் நம்பத் தயாரா இல்லை.
முதல்ல எடத்தக் காலி பண்ணுங்க, ஐயா சுந்தரம்!... இந்த மாதிரி
ஊர்? பேர் தெரியாதவனுக்கெல்லாம் வக்காலத்து வாங்கிக்கிட்டு
பொண்ணு கேட்டுப் போறதை இன்னியோட விட்டுங்க" என்றார்.
“ஆமாம்பா!... இவர் பெரிய பிர்லாப் பேரன்பாரு. பேச
வந்துட்டான். போடா, நீயாச்சு உன் பொண்ணாச்சு. வாங்கய்யா...
பாரதி... இதுக்குமேல நீ இங்க நின்னே இதைவிடக் கேவலம் வேற
எதுவுமில்லை. இது இல்லேன்னா, இதைவிட நல்ல
பொண்ணாப்பாத்து உனக்கு நான் கட்டி வைக்கிறேன். வா... வா..."
என்றபடி பாரதியை இழுத்துக்கிட்டு வந்துவிட்டார்.
கோபத்தில் அவன் உதடுகள் துடித்தன. கோபக்கனல் தெரித்த
அவன் கண்களின் முன், நளினியின் அழகு முகம் வந்து
அமைதிப்படுத்தியது.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


-தகுதியாம் தகுதி பொல்லாத தகுதி. குடும்பம் ஊர்ல இருந்தா
அவன் என்ன அனாதை ஆயிடுவானா7, நான் பாரு,
வயசானவன் சொல்றேன், அவன் உருப்படவே மாட்டான்
அழகான பொண்ணைப் பெ த்து ட்டோமின்னு
அ லையறான். டேய் .,, இப்ப சொல்றேன்
பாரதி க்குக் கிடைக்க த அவ ள்
இருக்க து பாத்திடுறேன்ு யாருக்குக்
உட லும்9 மனமும் நடுங்க சுந் த ரமு
தீத்துட்டார்.
பல ஆண்டுகள் சுந்தரம் கம்பத்தி ல் தங்கி
ச தாரணமாக ய ரிடமும் பழ க்கம்
ஆ னால், குறுகி ய நாளில் பாரதி யின்
கவரப்பட்டுத் தன்னையுமறியாமல் அதிக உரிமைகள் எடுத்துக்கிட்டு
பழக ஆரம்பித்து விட்டார் ஒரு சிலரைப் பார்த்தால் பழகவும்,
பேசவும் தே ன்று ம் ஒரு சிலரிடம் ப
ஒதுங்கி விடுவது இயல்பு சிகரெட், மது, மாதுன்னு எந்த கெட்ட
பழக்கமுமில்லாமல் நல்லவனான பாரதிக்கு பொண்ணு இல்லேன்னு
சொல்லி அவமானப்படுத்தி அனுப்பியதைக் கண்டு நல்ல மனிதர்
சுந்த ரத்து க்குக் கே
ஆத்திரமும் அவமானமும் தாங்க மாட்டாத பாரதி, பலரும்
கேலியுடன் பார்க்க, போகும்போது இருந்த கம்பீரம், குனிந்த
தலைநி மி ராம ல், அவம
உடம்பில் தெம்பே இல்லாதவாறு துவண்டு போனான்,
அ றைக்குள் வந்தது ம், மாமா
சாபம்விட்டதும் துடித்துவிட்டான் -வேணாம் மாமா சாபம்
விட தீ ங்க, நளினி ப வ ம்.
பலிய வ து எந் த விதத்தில் நியாயம்.
விடுங்க மாமா*ன்னு அவரைக் கட்டிப் பிடித்துக் கண்ணீர் விட்டான்.
சின்னக் குழந்தையைப்பேரல் அழும் பாரதியைத் தேற்ற வழி
தெரியாது சுந்தரம் தவித்தார், கலங்காத அவர் மளமும், கண்களும்
கூட க் கலங் கின, அவனு க்கு
புரியாமல், மெ ல்ல அவன் முது கத்
வாழ்க்கையில் முதல் கட்டமே உன க்குத் தே
போச்சு, அதே தோல்விதான் 9ரு வெற்றிக்கு அறிகுறிங்கிறதை
மறந்து டாதே , கேவல ம் இது 9ரு

மீழுது புலருமாஜு..,
36

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


இதை நீ... தோல்வியா நினைக்காதே, பொறு, கடவுள் உனக்கு ஒரு
நல்ல வழியைக் காட்டுவார், அவர் பொண்ணை உனக்குக்
கட்டிக்குடுக்க பாவம் அவருக்குக் குடுத்து வைக்கலேன்னு
நெனச்சிட்டுப் போ. ம்... மேலே என்ன செய்யப் போறதா
இருக்கே"ன்னு கேட்டாரோ இல்லியே, ஏன் கேட்டோமின்னு
ஆயிடுச்சு.
வேதனை தாளாத பாரதி சுந்தரத்தின் கைகளைப் பிடிச்கக்கிட்டு
மாமா... "இனிமே எனக்கு என்ன செய்றதுன்னு தோணவே இல்லை.
பேசாம தற்கொலை பண்ணிக்கலாமான்னு இப்ப தோணுது மாமா'
என்றான் கண்களில் நீர் மல்க.
"பாரதி... நீ படிச்சபுள்ள. நீ இப்படியெல்லாம் பேசலாமா?...
என்னுடைய கணிப்பில் நீ நல்லபிள்ளை. உனக்குத் தோல்வியே
கிடையாது, உன்னைப் போலத்தான் நளினியும் ரொம்ப நல்லவ. நான்
அந்தப் பொண்ணப்பத்தி ஒரு குறையும் சொல்லமாட்டேன். நான்
இங்கே இருந்தவரையில் யாரும் அவனப்பத்தி தப்பா பேசினது
கூடக் கிடையாது , தகப்பன் பொல்லாதவன். அவனுக்குப்
நடக்கிறவ. பொண்ணு பொண்ணா இல்லேன்னா பலரும் பலவிதமா
பேசிடமாட்டங்களா? நல்லதோ, கெட்டதே தகப்பனுக்குக்
கட்டுப்பட்டுத்தானே ஆகணும்' என்று சொல்லிக்கிட்டு வரும்
போதே, “அப்போ மாமா!... எனக்கு நளினி கிடைக்கவே
மாட்டாளா..." என்று ஏக்கத்துடன் கேட்டான்.
“மாமா, நான் அணுஅணுவ ரசித்துக் காதலித்த முதல்
பெண்ணே அவதான் மாமா... நளினி எனக்குக் கிடைக்கவே
மாட்டாளா?“
பாரதியின் கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு யோசித்த
சுந்தரம், "சரி நான் ஒரு யோசனை சொல்றேன் கேக்கிறியா?
அவனை மறந்துடுன்னு சொல்லிடாதீங்க. அது இல்லாத வேறு
எந்த யோசனையையும் சொல்லுங்க மாம கேக்கிறேன்." பாரதி
கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டான்.
நீ எதுக்கும் அந்தப் பொண்ணுகிட்ட ஒருதரம் தனியா
பேசிப்பாரேன்."
"என்ன மாமா சொல்றீங்க... எந்த நேரமும் கும்பல் கூடி
இருக்கிற இந்தக் கம்பத்துல அவளை எப்படி மாமா தனியர்

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


சந்திச்சுப் பேசுறது? என்ன...., விளையாடுறீங்களா ...”
பயந்தான்.
“ஏண்டா! ... இப்ப இப்படிப் பயப்படுறியே. .3
அவளை அலாக்காத் தூக்கிட்டு வந்தே... அதே மாதிரி ஒரு
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிட்டு பேசிட வேண்டியதுதான்”.
பாரதி தயங்கியபடி -மாமா, அது அன்னிக்கு யாதார்த்தமா
நடந்த ஒரு சம்பவம்,”
-எது? அவளுக்கு நீ முத்தம் குடுத்ததாச் சொன்னியே
அதுவா...” என்றார் சிரித்தபடி,
“அட போங்க மாமா-ன்னு வெட்கத்துடன் பாரதியும் சிரித்து
விட்டான்.
“அப்பாடி, ஒரு வழியா அழுதபிள்ளை சிரிச்சிடுச்சு’ என்றவர்
மிக சகஜமாக, -சரி பாரதி, இன்னிக்கு நடந்ததை இத்தோட
மறந்துடுவோம் உனக்கு அவ கிடைக்கணுமின்னா, துணிஞ்சு
அவளை சந்திச்சு அவ மனசுல என்ன இருக்குன்னு பேசிப்பாரு,
மத்ததை நான் கவனிச்சுக்கிறேன், -எப்படி மாமா, ..-
புரியாமல் பாரதி:,
“அன்னிக்கு மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போயிடும்,*
மாமா தைரியம் கூறினார்.
“சரி மாமா நான் கொஞ்சநேரம் யோசிக்கணும்போல இருக்கு
மாமா”ன்னு தலையணையைப் போட்டு படுத்துக் கொண்டான். “ம்..,
ம்.. நல்லா யோசி. என்ன நடக்குதுன்னு பாரு. இனிமே உன்
மாமாவோட திருவிளையாடலை . என்ன... நானும்
பாரதியின் பக்கத்தில் அவரும் தலையணையைத் தட்டிப் போட்டார்
அத்தியாயம் 5
அன்று இரவு வெகு நேரம் வரையில், தூக்கம் வராமல்
புரண்டு கொண்டிருந்தான், பெண் கேட்டுப் போன இடத்தில்,
அத்தனைபேர் முன்னிலையிலும் நளினியின் தந்தை
அவமானப்படுத்தினாலும், பாழாய்ப்போன மனசு மட் டும்,
வண்டுபோல் நளினியைச் சுற்றியே வட்டமிட்டது, எந்தப்
பொண்ணையும் ஏறிட்டுப் பார்க்காத பாரதி, நளினியைப் பார்த்த
உடனே, அவன் அழகுக்கு அடிமையாகிட்டான்.

பொழுது புலருமா?...
38

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


இளம் வயதில் முதல் காதல், முதல் முத்தம் அவற்றின்
பலத்தை எண்ணி பாரதிக்கே ஆச்சரியமாய் இருந்தது.
முதல் காதல் அவன் மனசில் ஆழத்தையும், அதே நேரத்தில்
பெண் கொடுக்க முடியாதுன்னு சொன்னது; அவனை
-
உதாசீனப்படுத்திப் பேசியது எப்படியாவது அவளை அடைஞ்சே
தீரணுக்ங்கிற வைராக்கியம் அவன் மனசில் உருவாகியது. உடம்பில்
அடிபட்டால் தாங்கிக்கலாம், நளினியின் அப்பா அவன்
இதயத்திலல்லவா அடிச்சிட்டார். யோசிக்க யோசிக்க மனம்
வேதனையில் ரணமாகிப்போனது, விழி ஓரத்தில் கண்ணீர் கசிந்தது.
என்ன இருந்தாலும் அவனும் சதையும், ரத்தமும் கொண்ட சாதாரண
மனுஷன்தானே.
மறுநாள் விடிஞ்சதும் வழக்கம்போல் எழுந்து, கடமைகளை
முடிச்சிட்டு வேலைக்குப் போய்விட்டு வந்துகொண்டு இருந்தான்.
யாரிடமும் அதிகம் பேசுறதில்லை. இப்படியே... ஒரு வாரமா
அக்கம் பக்கம் என்ன நடக்கிறதென்ற உணர்வுகூட இல்லாமல்,
கிட்டத்தட்ட ஒரு நடைப்பிணமாகவே ஆகிட்டான்னுதான்
சொல்லணும். ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. படுக்கையைப்
போட்டதும் கண்களை மூடிக் கொள்வான். தூங்குகிறனா?... இல்லை
தூங்குவது போல் பாசாங்கு செய்கிறானா?... என்று சுருட்டு சுந்தரம்
ஒரு சில வேளைகளில் குழம்பிப் போவார்.
இப்படியே மெளன வட்டத்துக்குள் தன்னை
நுழைத்துக்கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்தான்.
இப்பொழுதெல்லாம் எதிர் வீட்டு ஜன்னலும் மூடியே இருந்தது
பாரதிக்கு இன்னும் பலவீனத்தை உண்டாக்கியது. போச்சு... காதலால்
நண்பர்களை இழந்தான். விளையாட்டை மறந்தான். சுந்தரம்
கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு வேலைக்குப்
போய்விடுவான். வந்ததும் சாப்பிடக்கூட மனமில்லாமல்
படுக்கையில் சுருண்டு கொள்வான். மொத்தத்தில் பாரதி ஒரு
நடமாடும் இயந்திர மனிதன் போலாகிவிட்டான்.
அன்று பாரதி வழக்கம் போல் வேலை முடித்து ஸ்கூட்டரில்
வந்து கொண்டிருந்தபோது, கம்பத்தில் உள்ளவர்கள் கைகளில்
வாளியும், குவளையுமாகப் பலதரப்பட்ட பாத்திரங்களுடன்
இங்குமங்குமாக நடமாடிக் கொண்டிருந்தனர். பாரதிக்கு ஒன்றும்
விளங்கலை. என்ன ஆச்சு? இப்படிப் பாத்திர பண்டங்களை
எடுத்துக்கிட்டு எங்கே ஓடுறாங்க? ம்... ஒண்ணும் விளங்கலியே

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


என்று எண்ணியபடியே... மேலே நளினியின் வீட்டு ஜன்னலை
அண்ணாந்து பார்த்தான். அட... சாட்சாத் நம்ம தேவதையேதான்.
என்ன ஏதேதோ சைகை வேறு காட்டுறாளே. என்ன அதிசயம்,
என்ன ஆச்சு இந்த நளினிக்கு.... தன் முல்லைப் பற்கள் தெரிய
சிரித்தபடி என்னமோ.... என்னோட வரவை எதிர்பார்த்துக்
காத்திருந்த மாதிரி இருக்கே...
புரியாமல் தவித்தான். புரிந்து கொள்ளத் துடித்தான். தெருவில்
இத்தனைபேர் கண்ணிலும் மண்ணைத்தூவிட்டு எப்படி
அவக்கிட்டப் பேசுறது?... பதிலுக்கு சைகை காட்டுறது... அது
நடக்காத காரியம்? ம்.. அதுக்கும் ஓரு வழி இருக்கு. ஸ்கூட்டரை
அவசர அவசரமாக உரிய இடத்தில் வச்சிட்டு விடுவின்னு மேலே
தன் அறைக்கு ஓடினான். என்னமோ எதிர்பாராத லாட்டரிச் சீட்டில்
ரெண்டு லட்சம் வெள்ளி விழுந்த மகிழிச்சியில் ஓடினான்.
ஒரு வாரமாக எந்த முகத்தைப் பார்க்கக்கூடாதுன்னு
வைராக்கியமாக இருந்தானோ, அந்த அழகு முகம் இன்று
சோலையில் புத்தம் புதிய சூரியகாந்திப் பூ பூத்து அழகு காட்டியது
போல் இருந்தது. மனசெல்லாம் மத்தாப்பாய்ப் பிரகாசிக்க...
அறைக்குள் நுழைந்து மெதுவாக ஜன்னல்பக்கம் வந்து எட்டிப்
பார்த்தான். ஒரு கணம்தான்; பாரதியின் முகம் வாடிவிட்டது, அந்த
ஜன்னல் அழகி அங்கு இல்லாததால் என்னவாக இருக்கும்?
கன்னத்தைத் தடவியபடி யோசித்தான், ஒருவே னை அவ
நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாரோ. ம் பார்க்கலாம்...
என்றபடி திரும்பியபோது; மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க சுந்தரம்
வாளி நிறையத் தண்ணீரைச் கமந்து வந்து, குளியல் அறையில்
இருந்த பெரிய அண்டாவில் கொட்டினார்.
"அப்பாடா! வந்துட்டியா பாரதி" என்றார் சற்று ஆயாசமாக
"என்ன மாமா கம்பத்துல இந்த நேரத்துல இவ்வளவு
கூட்டத்தைப் பார்க்க முடியாதே. எல்லாரும் வாளியும் கையுமா
எங்கே போய்க்கிட்டு இருக்காங்க? அது சரி.. நீங்க ஏன்
கஷ்டப்படுறீங்க வாளியில தண்ணீரை சுமந்துகிட்டு வர்றீங்க’
என்றான் எதுவும் புரியாமல்.
உனக்குத் தெரியாதா? சரிதான் போ... காலையில இருந்து,
ராத்திரி ஒன்பது மணி வரைக்கும் தண்ணீர் அடைப்புன்னு,, அஞ்சு
நாளைக்கு முன்னேயே அரசாங்கம் நோட்டீஸ் குடுத்திருந்ததே...

பொழுது புலருமா?.
40

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அதான் பைப்புல தண்ணி வரலை, கம்பத்துல எல்லாரும் காலையில
இருந்து, பொதுக் குழாயடிக்குப் போய்த் தண்ணீர் பிடிச்சிட்டு வந்து
புழங்கிக்கிட்டு இருக்காங்க, அதுசரி, இந்த ஒரு வாரமாத்தான் நீ...
நீயாகவே இல்லியே, எப்படி இதெல்லாம் உனக்குத்
தெரியப்போகுது," பேசி முடித்தார்.
அப்போ நான் எப்படி மாமா குளிக்கிறது?
"அதான் நீ குளிப்பியேன்னு நான் அண்டா நிறைய தண்ணி
பிடிச்சு நிறைச்சு வைச்சிருக்கேன். நீ குளிக்கிறியா?" என்றார்
பாசத்துடன்.
"மாமா, என்னைப் பெத்தவங்க இல்லாத குறையை, அப்பப்ப
நீதான் மாமா தீத்து வைக்கிறீங்க" ஏன்றான் நெகிழ்ச்சியுடன், மாமா
சொன்னது உண்மைதான். இந்த ஒரு வாரமும் இங்கே என்ன
நடக்குதுன்னு புரியாமலே இருந்துட்டேன், உடனே பாச மின்னல்
வெட்டியதுபோல் ‘ஓஹோ ’ இதைத்தான் அவள்
குளிக்கக் குழாயில் தண்ணீர் வரலைன்னு ஜாடை செய்தானோ!
குறும்புக்காரி என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
“யப்பா!... நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு நிக்கிறேன். நீ
எதையோ யோசிச்சிக்கிட்டு இருக்கியே. மறுபடியும் கனவுல அந்த
ஜன்னல் அழகி வந்துட்டாளா?
“மாமா... இந்த வயசு ஆகியும்... இன்னும் குசும்பு போகலை"
என்றான் கேலியாக...
சுந்தரம் பாரதியை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி... "இல்ல
தண்ணீர் நெறச்சு வச்சிருக்கேன், குளிக்கிறியான்னு கேட்டேன்; பதில்
இல்ல. அதான் கனவு காணறியான்னு நெனச்சேன்."
“அதெல்லாம் இல்ல மாமா... என்றான் வெட்கத்துடன், பிறகு
"மாமா, இன்னிக்கு நீச்சல் குளத்துல குளிச்சிடுறேன் என்ன..."
என்றபடி அவசரமாக உடைகளை மாற்றி விட்டு,
லுங்கிவுயக் கட்டிக்கிட்டு, தோளில் துண்டடப் ாவை ைப் போட்டபடி, சவுக்கார
"போ போ... சீக்கிரம். குழாயடியில் தண்ணி பிடிக்க
ஆளும் கியூவில நிக்கிறான்னு" சொன்னதுதான் தாமதம் பாரதி...
விசிலடித்தபடி, கொல்லைப்புறமாக எட்டி நடை போட்டான்.
நூர்ஜஹான் சுலைமான்

41

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அந்திநேரம், சற்று ஒதுக்குப்புறமான இடமும்கூட - நடமாட்டம்
சற்றுக் குறைந்திருந்தது. பொதுக்குழாயடி அருகில்தான் நீச்சல்
குளமும் இருந்தது.
வெயில் அதிகமான காலங்களில், மழையில்லாமல் வறட்சி
கண்ட வேளைகளில், அரசாங்கம் இப்படி அடிக்கடி தண்ணீர்
அடைப்பு செய்திடும். அரசாங்க அறிவிப்பு ஒரு வாரத்துக்கு
முன்பே தெரிந்து விடுமாதலால், கம்பத்தில் உள்ளவர்கள்
பொதுக்குழாயடியில் கூடிவிடுவார்கள். அன்றைய தினம் வாளி
வாளியாகத் தண்ணீர் பிடித்து, பெரிய பெரிய அண்டாவில் நிரப்பி
விடுவார்கள். ஒண்டுக்குடித்தனக்காரர்கள் தண்ணீர் வந்ததும்
பாத்துக்கலாமின்னு அலட்சியமாக இருந்து விடுவார்கள். இளசுகள்
நீச்சல் குளத்திற்குப் போய்விடுவார்கள். இதில் அவஸ்தைப்
படுபவர்கள் பெரியவர்களும், குழந்தைகளும்தான். இன்னும்
சொல்லப்போனால் தண்ணீர் இல்லாமல் கூட்டுக் குடும்ப
வாசிகள்தான் அதிகம் அவஸ்தைப்படுபவார்கள். புழங்குவதற்கு -
குடிப்பதற்கு என இவர்கள்தான் அதிகமாகத் தண்ணீர் சுமந்து வந்து
நிரப்பி வைப்பார்கள்.
சின்ன பிள்ளை முதல் இளசுகள் முதியவர்கள் வரையில்
போட்டி போட்டுக்கிட்டு வரிசை பிடித்து நிற்பது ஒரு திருவிழா
போல் காட்சியளிக்கும்.
அந்தப் பொதுக் குழாயடி தெருவுக்கு ஒன்று இருக்கும்.
பாத்ரூம், கழிவறைகளும் உண்டு. பல இன மக்கள் வாழும்
கம்பமாக இருந்தாலும், இக்கட்டான இந்தத் தண்ணீர்ப் பஞ்ச
நேரத்திலும், பொறுமையைக் கடைப்பிடிச்சு, ஓருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்து, தண்ணீர் எடுத்துக்கொண்டு போவார்கள். இப்படி
ஒரு நிலை ஊரில், கிராமத்தில் வந்திருந்தால் ஆயிரம் குழாயடிச்
சண்டைகள் வந்திடும்.
பலவாறாக யோசித்தபடி, ஆள் நடமாட்டம் குறைந்த
ஒற்றையடிப் பாதை வழியா நடந்து கொண்டிருந்தவன்...
அப்படியே.... ஸ்தம்பித்து நின்று விட்டான். ஒரு சிலை
வருவதுபோல், அந்தச் சின்ன இடையாள் நளினி வாளியில்
தண்ணீர் பிடிச்சுக்கிட்டு, வேகமாக வந்து கொண்டிருந்தாள்.
வழிவிடாமல் எதிரே நின்றிருந்த பாரதியைப் பார்த்ததும்.... நளினி...
தலைகுனிந்தபடி வழி விடுமாறு கெஞ்சினாள்.

பொழுது புலருமா?...
42

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"வழி விடமுடியாது... என்ன பண்ணுவே" என்றான் குறும்பாக.
ஐயோ... நேரமாச்சு... நான் சீக்கிரம் போகணும். யாராவது
வந்துடப்போறாங்க, வழி விடுங்க..." சிணுங்கலுடன் கூறினாலும்
பயத்தில் குரல் நடுங்கியது.
பாரதி சுற்றிலும் நோட்டம் விட்டான். “இப்போதைக்கு யாரும்
அவ்வளவு சீக்கிரமா வந்துடமுடியாது. முடிஞ்சா இந்த ரெண்டு
கையையும் தள்ளிட்டுப்போ" என்றான், இரண்டு கைகளையும்
நீளவாக்கில் விரித்தபடி.
"போம். நான் ஒண்ணும் ஏமாற மாட்டேன். இந்த
விளையாட்டெல்லாம் எங்கிட்ட வேணாம். வழி விடுங்க....
என்றாள்... சற்றுக் கோபத்துடன்.
"ம்... வேற யார் கிட்ட வச்சுக்கிறதாம். சரி... நீ சரியா
வரமாட்டே, முதல்ல இந்த வாளிய எங்கிட்டக் குடு' என்று
வேகமாக அவள் கையில் இருந்த வாளியைப் பிடுங்குவது போல்...
நளினியின் மென்கரத்தைப் பற்றினான். மின்சாரம் தாக்கியதுபோல்
கையை வெடுக்கெனப் பின்னுக்கு இழுத்த நளினிக்கு
உண்மையிலேயே பயம் வந்துடுச்சு. இருந்தும் இப்பொழுதுதான்
முதன்முதலாகப் பார்ப்பது போல் அவனைப் பார்த்தாள். பாரதியும்
நேருக்கு நேர் அவள் அழகை ரசித்தான். குறும்புப்புன்னகை
அவன் முகத்தில் இழையோடியது...
"வந்து... அப்பா... பேசினதை மனசுல வச்சுக்காதீங்க. ம்...
மன்னிச்சிடுங்க' தயங்கியபடி வார்த்தைகள் வெளியே வந்தன.
பார்வை நாலாபுறமும் சுழன்றது.
அவள் பேசியது வீணையில் இருந்து, நாதமலை பொழிந்தது
போல் இருந்தது, அவன் பேசிய அழகை ரசித்தபடி... நளினி
உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?..."
பதில் சொல்லாமல் நளினி குனிந்திருந்தாள்.
ஏய்! தைரியமா என் முகத்தைப் பார்த்து சொல்லு... ம்...
எங்கே... என் கண்ணைப்பாரு, என்னைப் பிடிச்சிருக்கா சொல்லு...
பாரதி அவள் முகத்தை நிமிர்த்தினான்.
தாமரை விழியில் பனித்துளி இருந்ததுபோல் கண்ணீர் தேங்கி
நின்ற நளினி மெதுவாக... 'நீங்க மறுபடியும் அப்பாகிட்ட வந்து
பேசுறீங்களா?...”

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"ஏன்... பட்ட அவமானம் போதாதா" என்றதும் நளினி
மறுபடியும் தலையைக் குனிந்து கொண்டாள்.
"என்ன பதில் சொல்லாம தலையைக் குனிஞ்சுக்கிட்டா எப்படி?
பதில் சொல்லு. நான் உங்கப்பாகிட்ட மறுபடியும்
அவமானப்படணுமா? மெதுவாக, அவன் முகத்தில் சுருண்டு
விழுந்துகிடந்த கூந்தலைப் பின்னால் தூக்கி விட்டான்.
"நான்... நான் சொல்றேன். நீங்க மறுபடியும் அப்பாகிட்ட வந்து
பேசுங்க, இப்ப நான் போகணும் வழி விடுங்க" என்றாள். அவள்
நினைத்தால் பாரதியின் கையைத் தள்ளிவிட்டுட்டு ஓடிடலாம்.
ஆனால்.... அங்கிருந்து ஒரு அடி எடுத்து வை க
மனசில்லை.
வந்த வாய்ப்பை லேசில் விடமாட்டதவனாக, "பதில்
சொல்லாம நீ போயிட முடியுமா என்ன? பதில் சொல்லு" என்றான்.
"அதான் மன்னிச்சிருங்கோன்னு சொல்லிட்டேனே...
புரியலியா? யாராவது வந்துடப்போறங்க, நான் போகணும்"
என்றாள்.
“ம்... சும்மா இரு... நான் நல்லா பாத்துட்டுதான் உங்கிட்டப்
பேசுறேன். இப்ப நான் கேக்கிறதுக்கு பதில் சொல்லு. உனக்கு
என்னப் பிடிச்சிருக்கா?" குழந்தைத்தனமா அவன் பேச்சில்
மனதைப் பறிகொடுத்தபடி இவன் பேச்சினை வாழ்க்கைபூரா
கேட்டுக்கிட்டு இருக்க மாட்டோமாங்கிற ஏக்கம் மனதில் ஓடியது...
“என்னை உனக்குப் பிடிச்சிருக்கிறதாலத்தானே
அவமானப்பட்டாலும் பரவாயில் ல ைன் ன ு... என்னை மறுபடியும்
பொண்ணு கேக் க ச் சொல்றே... அப்படித்தானே,"
பாரதியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நளினி
பேசாமலிருந்தாள். “அப்படீன்னா... பேசாம நாம ரெண்டு பேரும்
வீட்டை விட்டு ஓடிப்போய்டுவோமா?..." அவன் மனசை அறிய,
பாரதி இப்படி ஓரு குண்டைத் தூக்கிப் போட்டான்.
உடனே அவனை நிமிர்ந்து பார்த்தவள். 'என்ன
இப்படியெல்லாம் பேசுறீங்க... அம்மா... நான்... செத்தேன் போங்க.
இப்ப நான் போறேன்... நீங்க..." என்று நளினி முடிக்குமுன்,
“சரி... சரி... உங்கப்பாகிட்ட நானே வந்து பேசுறேன். நீ...
என்னை.... மறக்கமாட்டியே' என்று நளினி சற்றும் எதிர்பாரா

பொழுது புலருமா?
44

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


வண்ணம், அவள் கையைப் பிடித்து இழுத்து, தன் நெஞ்சோடு
அணைத்துக் கொண்டான். "ம்... இப்போ என்ன பண்ணுவே"
என்றான்.
அவன் இறுகிய பிடியில் நிலைகுலைந்துபோன நளினி ஏனோ...
அவன் இன்ப அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள
விரும்பவில்லை. நெஞ்சம் படபடக்க.... கண்ணீர் முட்ட.... பாரதியின்
பரந்த மார்பில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டிருந்த நளினியின்
முகத்தை நிமிர்த்தி... சிவந்திருந்த அவள் அதரத்தில் இரண்டாவது
முறையாகத் தன் முத்திரையைப் பதித்தான். மெல்ல அவள் சுருண்ட
கூந்தலை வருடிய பாரதி, நளினி, நீ... எனக்குக் கிடைக்கலேன்னா...
நான் செத்துருவேன். மறந்துடாதே. ஏன் என்னைப் புரிஞ்சுக்கிட
மாட்டேங்கிற" என்றான், பாரதியின் முரட்டுப் பிடிக்குள்
இறுகிக்கிடந்தாள் நளினி... வெட்கத்துடன் கண்களையும்
மூடிக்கொண்டாள். இரண்டு சர்ப்பங்கள் பிணைந்திருந்த நேரத்தில்,
வேட்டுச் சத்தம் கேட்டதுபோல், பேச்சுக்குலும், காலடிச்சத்தமும்
அருகாமையில் கேட்கவே பதறிப்போன நளினி, அவன் இரும்புப்
பிடியிலிருந்து. வலுக்கட்டாயமாக விடுபட்டு... அவசரமாகத்
தண்ணீர் வாளியையும் தூக்கிக்கிட்டு வேகமாக ஓடினாள். ஓடும்
வேகத்தில் வாளியிலிருந்த தண்ணீர் வழியெல்லாம் கொட்டியது.
பதற்றத்தில் அவள் இதயமே நின்று விடும் போலிருந்தது.
அவன் மறையும் வரையில் அவள். போன திசையையே
பாத்துக்கிட்டிருந்த பாரதி, எதிரே ஒட்டுக்கடைக்காரரும், அவர்
மனைவியும்... வந்து கொண்டிருந்தனர்.
"என்ன பாரதி!... இன்னுமா குளிக்கலை?.... போ... போ...
குழாயடியில் இன்னும் கூட்டமாத்தான் இருக்குது" என்றார்,
"இல்ல மாமா... நான் நீச்சல் குளத்துக்குப் போறேன்.... ம்...
நீங்க போங்க..." என்று கூறிய பாரதிக்குக் கொஞ்ச நஞ்ச கடுப்பு
இல்லை, சிவ பூஜையில் கரடி புகுந்த மாதிரி என்று மனதிற்குள்
திட்டியபடி அவர்களுக்கு வழிவிட்டான்.
ம்... ம்... சீக்கிரமாப்பே... அங்கேயும் ஒன்பது
மணிக்கெல்லாம் மூடிடுவான். நீ வா சீக்கிரம்" என்று மனைவிக்குக்
குரல் கொடுத்துக்கிட்டே போனார் ஒட்டுக் கடைக்காரர்.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


இனம்புரியா இன்பம் மனசில் தூண்டில்போட இதுவரையில்
அடையா மகிழ்ச்சியுடன் விசிலடித்தபடியே குளிக்கப் போனான்.
பாரதி குளித்துவிட்டு வரும்போது மணி ஒன்பதரையாகி
இருந்தது. அறையில் மாமா சுருட்டுப்புகையை ஆனந்தமாக ஊதிக்
கொண்டிருந்தவரிடம், குளிக்கப்போன இடத்தில் நடந்தவற்றை
ஒன்று விடாமல் கூறி முடித்தான். மகிழ்ச்சியில் பாரதி, சுந்தரம்
பிள்ளையின் கையைப் பிடித்துச் சுற்றினான்.
"டேய்!.... டேய்!... பாரதி.... கையை விடுய்யா... என்றவாறு
பாரதியிடமிருந்து விடுபட்ட சுந்தரம், "அந்த ஜன்னலழகியப்
பாத்ததுனாலத்தான் இவ்வளவு லேட்டுன்னு சொல்லு. என்ன
இருந்தாலும் எனக்கு அவ அப்பனை நினைச்சா இப்பக்கூட
பயமாத்தான் இருக்கு" என்றார் விளையாட்டாக.
"மாமா, அன்னிக்கு நடந்த விஷயத்தை அப்பவே
மறந்துடணும், என்ன மாமா நான் சொல்றது" என்றான்.
"நான் மறக்கிறது இருக்கட்டும், முதல்ல நீ மறந்துடு.
அப்பத்தான் நீ உன் காரியத்தைச் சாதிக்க முடியும் காதல் ரொம்ப
சக்தி வாய்ந்ததுன்னு உன்னைப் பாத்துதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்.
ஏன்னா... கொஞ்சநாளா உன் முகத்துல இல்லாத சந்தோசத்தைப்
பார்க்கிறேன். எப்படியோ... பாரதி... இந்த மாதிரி நீ எப்போதும்
சந்தோசமா இருக்கணும். அதுதான் இந்த மாமாவுக்கு வேணும்,
சரி. .நேரமாச்சு. உனக்கு சாப்பாடு வாங்கி வச்சிருக்கேன். எடுத்து
வச்சு சாப்பிடு. அப்புறம்... சந்தோஷத்துல எப்போதும் வாங்கிட்டு
வர்ற சுருட்ட மறந்துடாதே.
"அது வேறயா... சரி மாமா.. முதல்ல நான் போய்
சாப்பிடுறேன்" என்றவாறு சமையல் கட்டுக்குள் நுழைந்தான்.
இனிமேல் பாரதியின் வாழ்க்கையில் சந்தோஷமே
கிடைக்கப்போவதில்லை என்பது அவருக் க ென் ன ஜோசியமா
தெரியும்!

அத்தியாயம் 6
அன்று முதல் பாரதி... புதுப்பிறவி எடுத்ததுபோல் முகத்தில்
மகிழ்ச்சியும் குறும்பும் ஒருசேர அனைவரிடமும் கலகலப்பாகப்
பேச ஆரம்பித்தான். நண்பர்களின் பேச்சில் தன்னையும்
ஈடுபடுத்திக்கிட்டு, உலக சாம்பியனைப் போல் தன்னை

பொழுது புலருமா?...
46

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


நினைச்சிக்கிட்டு.... அந்தி நேர விளையாட்டிலும் முழுநேரம்
செலுத்த ஆரம்பித்தான். ஜன்னல் காதல் நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது.
நளினியின் தந்தை அவமானப்படுத்தியதைச் சற்று
மறந்திருந்தான். மறுபடியும் அவளைச் சந்திக்க முடியாதான்னு ஏங்க
ஆரம்பித்தான். நாளுக்கு நாள் அவனை நம் வசமாக்கிக்கொள்ள
வேண்டுமென்ற வேட்கையே அதிகரித்தது. அவள் சிந்தையைச்
சிதறடித்த அவனை எப்படியும் மணந்தே தீர வேண்டுமென்ற
தீர்மானமான உறுதியில் இருந்தான். இந்த முறை தனக்காக யாரும்
தலையிடாமல் தானே தனியாக நளினியின் அப்பாவைச் சந்தித்துப்
பேசிவிட வேண்டுமென்று சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்
காத்திருந்தான்.
அன்று அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் அவனுக்குக்
கிடைத்தது. நளினியின் தந்தை வேலை முடிந்து கைக்கிளில் வந்து
கொண்டிருந்தார். அந்திவானம் ஆரஞ்சு வண்ண நிறத்தை அள்ளித்
தெளித்தது போல் காட்சி தந்து கொண்டிருந்தது.
பாரதி ஒரு கூட்டாளியைக் காணவேண்டி, ஸ்கூட்டரில் போய்க்
கொண்டிருந்தபோது, எதிரே சைக்கிளில் ராமசாமி வந்து
கொண்டிருந்ததைக் கண்டதும், வண்டியை நிறுத்திவிட்டு
ராமசாமியை நிற்கும்படி சைகை செய்தான். அலட்சியமாக
சைக்கிளை விட்டு இறங்கிய ராமசாமி... "என்ன..." என்று
காட்டமாகவே கேட்டார்.
பாரதி அடக்கமாக அவர்முன் வந்து நின்றவாறு.... "ஐயா...
நான் மறுபடியும் மறுபடியும் ஒரே விஷயத்தைப் பத்தியே
பேசுறேன்னு தவறா நினைக்காதீங்க. நான் நேரடியாகவே
விசயத்துக்கு வந்திடுறேன்" என்றான்.
என்ன என்பதுபோல் அவன் சொல்லப்போகும் விஷயத்தைக்
கேட்கலானார்.
இன்னிக்கு நாம் நரி முகத்துலதான் முழிச்சிருக்கணும்
இல்லேன்னா தன் வருங்கால சிடுமூஞ்சி மாமனார் என்னான்னு
கேட்டுக்கிட்டு நம்மகிட்ட நிப்பாரா? யோசிச்சபடியே, பாரதி
"ஐயா... நளினியை நான் மனசார நேசிக்கிறேன் நளினி இல்லாம
எனக்கு வாழிக்கையே இல்லீங்க. அவ இல்லாத ஒரு
நினைச்சுப் பார்க்கவே என்னால முடியாது" என்றான்.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


சைக்கிள் கைப்பிடியைப் பிடிச்சபடி நின்றிருந்த ராமசாமிக்கு
வந்ததே கோபம் "நீ... நேசிச்சா... நான் உனக்கு கட்டிக்
குடுத்திடணுமாக்கும், ஏண்டா! உனக்கென்ன பைத்தியமா
புடிச்சிருக்கு. அதான் அன்னிக்கே தெள்ளத் தெளிவா
சொல்லிட்டேன்ல, கண்ட கண்ட அனாதைககெல்லாம கட்டிக்
குணுக்க நான் என் பொண்ணைப் பெத்துப் போடலைன்னு. நீ
புரிஞ்சுக்க மாட்டியா? இதைச் சொல்றதுக்கா என்ன நிப்பாட்டி
வச்சிருக்கே... போ... போய் வேற வேலை இருந்தாப் பாரு"ன்னு
அலட்சியமாகச் சொன்னார்.
வச்சுக்
"ஐயா!... உங்க மகளை நான் கண்கலங்காம சந்தோசமா
காப்பாத்துவேன். இந்தக் கம்பத்துல உள் ள வங் க மூக்குல விரலை
வைக்கிறப்புல நான் நளிளியை வச்சுக் காப்பாத்துவேன் என்னை
நம்புங்க" என்றான்.
"எம் பொண்ணை, மாமா, மாமி, அண்ணன், தம்பி உள்ள
பெரிய கூட்டுக் குடும்பத்துலதான் அவளைக் கட்டிக் குடுக்கப்
எம்
போறேன். உன்னைமாதிரி நாதியத்தவனுக்கெல்லாம்
பொண்ணைக் குடுத்தா என் கெளரவம் என் ன ஆகிறது. போப் ப பா...
போ.... போ.... " என்றதும், மேலும் அவரைப் பேசவிடாத
"ஐயா... நீங்க நினைக்கிறாப்புல நான் ஒண்ணும் யாருமில்லாத
அனாதை இல்ல எனக்கும் குடும்பம், சொந்தம், பந்தம்னு நிறைய
இருக்காங்க, என்ன... நீங்க இதப் புரிஞ்சுக்கணும். எல்லாரும் ஊருல
இருக்காங்க, முத... நீங்க இதப் புரிஞ்சிக்கணும்.
"நான் எதையும் புரிஞ்சுக்க வேணாம். நீ... என்னதான்
மாட்டா.
தலைகீழா நின்னாலும், என் பொண்ணு உனக்குக் கிடைக்ரூ
என் பொண்ணோட அழகுக்கு ஒரு பெரிய எடத்துக்குத்தான்
கல்யாணம் பண்ணிப் போவா, அது தெரியுமா உனக்கு? போ..
பே..." என்றார் அலட்சியமாக.
மாட்டேங்
"ஐயா... நான் பேசுறதைப் புரிஞ்சுக்கவே
கூடவே
கிறீங்களே... பணமும் அந்தஸ்தும் நாம் செத்துப் போறப்ப
பேர்
வர்றதில்லீங்க. ஒரு கல்யாணம் நடக்கணுமின்னா... ரெண்டு மக
மனசும் ஒத்துப் போகணுமுங்க. நீங்க வேணுமின்னா உங் க
கிட்ட ஒருதடவை கேட்டுப் பாருங்க" என்றான் மன்றாடாத
குறையாக.
எதுக்கும் மசிஞ்சு குடுக்காத ராமசாமி..."ஆமா நீ என் ப்த ி
என்ன நினைச்சுக்கிட்டே, பேசிக்கிட்டே போறே... இந்தக்

பொழுது புலருமா?.
48

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


கம்பத்துல எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு, உன்னைப்போல
அனாதைக்கெல்லம் எம் பொண்ணைக் குடுத்துட்டு; அதைக்
கெடுக்க விரும்பலை. நான் சொல்றதைத்தான் என் பொண்ணு
கேப்பாள். இதுக்கு மேல உன்கிட்ட பசுறதுக்கு எங்கிட்ட
எதுவுமில்லை.
"இவ்வளவு நேரம் உன்கிட்டப் பேசிக்கிட்டு இருந்ததே பெரிய
விஷயம். என் பொண்ணு இல்லேன்னா வேற பொண்ணே உனக்குக்
கிடைக்காதா? என்ன, நீ ஒரு அனாதைன்னா, உனக்கு ஒரு அனாதை
கண்டிப்பாக் கிடைக்கும். என் பொண்ணை மறந்துடு. இப்ப
எடத்தைக் காலி பண்ணு..."
"ஐயா!... பெரியவங்களாச்சேன்னு மரியாதை குடுத்துப்
பேசினேன்... என் கல்யாணம் அனாதையோ, பணக்காரியோ... அது
எப்ப நடக்கணுமின்னு எனக்குத் தெரியும், நீங்க ஒண்ணும் நாள்
குறிக்க வேணாம்" என்று கடுப்பாகப் பேசினான்.
"அப்பா ஏன்... இன்னும் இங்க நின்னுகிட்டு இருக்கே.
வழியவிடு. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" என்றவர்... "கடைசியாக
ஒண்ணு சொல்லணுமின்னு தோணுது கேளு. இதுக்கு மேலயும் நீ
எனக்கு உங்க பொண்ணுதான் வேணுமின்னு என் முன்னால வந்து
நின்னே... காசு போனாப் போவுன்னு, உன்ன... ஆள் வச்சு அடிச்சு...
கையக் கால ஒடிச்சிடுவேன். ஜாக்கிரதை. பொண்ணு
கேக்குறதுக்கும் ஒரு தகுதி வேணாம்" என்றவாறு அவன் பதிலுக்குக்
காத்திராமல் சைக்கிள் பெடலை மிதிச்சபடி ஜம்பமாக அமர்ந்து
போய்க்கிட்டிருந்தார், அந்த மரியாதை தெரியாத பெரிய மனுஷன்.
பாரதி... கண்களில் முட்டி நின்ற கண்ணீரைக்கூடத் தட்டிவிடத்
தோணாமல் அப்படியே... சிலையாக நின்று விட்டான்.
அவன் இருந்த மனநிலையில் நண்பர்களைக்கூடப் பார்க்கப்
போகாமல் வந்த வழியே ஸ்கூட்டரைத் திருப்பினான். அவன் போன
வேகத்தில் ஒரு முடிவுக்கு வந்தவன் போல் வேகமாக வந்து
வண்டியை நிறுத்திவிட்டு மேலே அறைக்கு ஓடினான்.
அறைக்குள் வந்தவன் அப்படியே... படுக்கையில்
முடங்கிட்டான், கண்ணை மூடிக்கிட்டாலும், நடந்த நிகழ்ச்சிகள்
ஒவ்வொன்றும், காட்சியாய் அவன் மனத்திரையில் வந்த
வண்ணமாய் இருந்ததால்... தூக்கம் அவன் கண்ணைத் தழுவ
மறுத்திடுச்சு.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


இதுக்கு ஒரு முடிவுதான் என்ன? ...
கசக்கிக்கிட்டான்.
சுருட்டு சுந்தரம் பல தடவை எழுப்பியும் சாப்பாடு
வேணாமின்னு திரும்பிப் படுத்துக்கிட்டான். சுந்தரமும் பாரதியை
வற்புறுத்தாமல்... தான் மட்டுமே சாப்பிட்டுட்டு சுருட்டு வாங்க,
கடைக்குப் போனார்.
இரவு சரியா ஒரு மணி இருக்கும், ஊர் அடங்கிய நேரம்,
பாரதி... ஒரு தீர்மானத்துக்கு வந்துட்டான்னுதான் சொல்லணும்.
படுக்கையை விட்டு எழுந்து, தன் பெட்டி படுக்கையை
மூட்டை கட்டினான், பக்கத்தில் மூணாவது உலகப்போர் வந்தாலும்
தெரியாம... கவலையில்லாம குறட்டை விட்டுத் தூங்கிக்கிட்டிரூந்த
மாமாவைப் பார்த்தான்.
மனம் வலித்தது. இந்தக் குறுகிய நாளில், ராமசாமி
சொன்னது போல் இந்த அனாதைக்குக் கிடைச்ச ஒரு
சுயநலமே குறிக்கோளாகக் கொண்டு வாழற இந்தக் காலத்துல
கந்தரம் மாமாவைப்போல நல்ல மனசு கொண்டவங்க
எத்தனைபேர் இருந்திருப்பாங்க... அன்பும், ஆதரவும் காட்டினார்.
யாருன்னே தெரியாத எனக்காகப் போய்... பொண்ணு கேட்டு
அவமானப்பட்டார். இந்த நல்லவரை... விட்டுப் போவதுங்கிறது...
பெரிய கஷ்டம்தான். இருந்தும் மனசைக் கட்டுப்படுத்திக்கிட்டு...
ஒரு பேப்பரும், பேனாவும் எடுத்துக்கிட்டு மாமாவுக்கு ஓரு கடிதம்
எழுதினான்.
அன்புள்ள மாமாவுக்கு, பாரதி எழுதுவது!
மாமா, இன்னிக்கு நான் நளினியின் தந்தையிடம் எவ்வளவு
மன்றாடியும் பலன் இல்லை, நான் எதிர்வீட்டில்
இருந்துக்கிட்டே... நளினி இன்னொருத்தனுக்கு மாலை
யிடுறதைப் பார்க்கும் சக்தி எனக்கு இல்லை, தினம் தினம்...
அவளைப் பார்த்து நொந்து போக இந்தச் சின்னமனசு இடம்
தரலை. அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் மாமா....
நான் இந்தக் கம்பத்தை விட்டும் உங்களையும் விட்டும்
போறேன் மாமா. போதும் நான்பட்ட அவமானங்கள் இனி
நீங்களும் என்னோடு சேர்ந்து அவமானப்பட வேண்டியதில்லை.
இங்கு இருந்தவரையில் என்னை ஆதரிச்சு, என்கிட்ட காட்டிய
அன்புக்கு என் நன்றி மானமுள்ள எவனும் வாழமுடியாத

பொழுது புலருமா?.
50

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


இந்தக் கம்பத்தை விட்டு நான் போறேன். பிராப்தம் இருந்தால்
மறுபடியும் உங்களைச் சந்திக்கிறேன். நீங்க செஞ்ச உதவிகளை
என் உயிருள்ளவரை நான் மறக்க மாட்டேன், நான்... நான்
வர்றேன்... இல்லை... இல்லை.... போறேன் மாமா.
இப்படிக்கு
உங்கள் அன்பு மறவாத
பாரதி"
கடிதத்தை எழுதி முடித்து விட்டு, அதை ஒரு
போட்டு... கூடவே ஒரு நூறு வெள்ளியையும் வச்சு, ஒரு குறிப்பு
எழுதினான்.
“மாமா... வாடகை போக மீதிப்பணத்தை என் அன்பளிப்பா
வச்சிடுங்க. உங்ககிட்ட நேர்ல பார்த்து சொல்லாம போறதுக்கு
என்னை மன்னிச்சிடுங்க"ன்னு எழுதி, கொஞ்சம் சோத்தை எடுத்து
கவரில் ஒட்டி, வெளியே தன் பெயரையும் எழுதிட்டு, அவர்
படுத்திருந்த, தலையணைக்கடியில் வச்சிட்டு, கடைசியா ஒரு
தடவை அவரையே பார்த்துக்கிட்டிருந்தான். குறட்டையுடன் நல்ல
நித்திரையில் ஆழ்ந்திருந்தார் சுந்தரம். இந்த அறுபது வயசிலேயும்,
பதினாறு வயசு இனைஞனைப்போல வாழும் மாமாவைப்
பொறாமையுடன் பார்த்தபடி, பெட்டியைத் தூக்கிட்டு, விறுவிறுன்னு
கீழே வாசல் கதவைத் திறந்து வெளியே வந்து நின்றான்.
எங்கே மனசு மாறிடுமோன்னு பயம் வேறு.
சுற்றுமுற்றும் பார்த்தான், ஹார்பரில் மாடு போல உழைச்சிட்டு
வந்து கிடைக்கிற ஓரு நாள் விடுமுறையை, ஜாலியா தூங்கியே
தீர்க்கும் தனிக்குடித்தன நடுத்தரவாசிகள் சிலர்; மடக்குக் கட்டிலில்
நல்ல குறட்டையில் மூழ்கியபடி, உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.
வீட்டில் இடமில்லாமல்; ஓரு சில கிழடுகட்டைகள், மோனத்தில்
- ஆழ்ந்தநிலையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களோடு
சின்னச்சின்ன வாண்டுகளும், பக்கத்துல போர்வையைப் போட்டு
மூடிக்கிட்டு சுருண்டு கிடந்தனர்,
மனைவியுடன் சண்டைபோட்டுக்கிட்டு, அவளால் வெளியில்
விரட்டப்பட்டு, படுத்துக்கிடப்பவர்களும் உண்டு.
மேலும் பெற்றோருக்கு இடைஞ்சல் கொடுக்காது,
நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிச்சுக்கிட்டு தூங்கலாம்.
அப்பத்தான் திருட்டுத் தம்மும் அடிக்கமுடியுங்கிற நோக்கத்துல,

சுலைமான்
நூர்ஜஹன்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


வெளியே வரிசையா நிறுத்தியிருந்த லாரிகளில் வலுக்கட்டாயமாக
வந்து உறங்கும் இளசுகள் ஒருபுறம்.
பாரதி கண்கள் எட்டும் தூரம் வரையில் பாத்துக்கிட்டிருந்தான்.
பலதரப்பட்ட காரணங்கனால், ஜாலியாக வெளியே வந்து
உறங்கிக்கிட்டிருக்கும் இவர்களுக்கும், காதல் பிரச்சினையினால்,
நிம்மதியற்று கம்பத்தையே விட்டுத் திருட்டுத்தனமாய், இந்த
நடுநிசியில் வெளியேறிக்கிட்டிருக்கும் தனக்கும் எத்தனை
வேறுபாடு!
ஐயோ... நான் ஏன் அவளைப் பார்த்தேன்? மனசைப்
பறிகொடுத்தேன். மனம் பாராங்கல்லைத் தூக்கிப் போட்டது போல்
கனத்தது. அவனையும் அறியாமல் எதிர்வீட்டு ஜன்னலைப்
பார்த்தான். அது வெறுமையாய் இருந்தது... பாரதியின்
மனசைப்போல், வலிக்கும் நெஞ்சை மெதுவாகத் தடவினான்.
“யாருப்பா!... இங்கே இந்நேரத்துல நிக்கிறது?..." மடக்குக்
கட்டிலில் படுத்திருந்த தாத்தா வேலுப்பிள்ளை, வெற்றிலை இடிக்க
எழுந்துட்டார் போலும் மூச்சுக்கட்டாமால் டாக்சி பிடிக்க வெளியே
சாலையில் வேகமாக வந்து நின்றான். சாலை பாய் விரித்தது போல்
கிடைந்தது. ஒன்றிரண்டு கார்களும், டாக்சிகளுமே அவ்வப்போது
சென்று கொண்டிருந்தன. மற்றபடி சாலை வெறிச்சோடிக் கிடந்தது.
கொஞ்ச நேரத்துக்குப் பிறகுதான் ஒரு டாக்சி வந்து அவன்
முன்னாடி நின்றது. பின் இருக்கையில் மூவர் பயணம் செய்து
கொண்டிருந்தனர். இருந்தும் முன் இருக்கையில் அமர ஒரு இடம்
காலியாக இருந்தது. யோசிக்க நேரமில்லாததால் பாரதி... டிக்கியில்
தான் கொண்டு வந்திருந்த பெட்டியை வச்சிட்டு? தெரிஞ்ச
லாட்ஜுக்குப் போகச் சொன்னான். "பின் இருக்கையில் உள்ளவங்க
இன்னும் ரெண்டு தெரு தள்ளி இறங்கிடுவாங்க அப்புறமா
உன்னைக் கொண்டுபோய் விட்டுடுறே"ன்னு டிரைவர்
அசடுவழிஞ்சான்.
பாரதி எதையும் காதில் வாங்கிக்கலை. சிந்தனைச் சுழலில்
சிக்கிக்கிட்டு இருக்கிறவனுக்கு சுற்றுப்புறத்தில் நடக்கிறது
என்னதுன்னா புரியப்போகுது? கொஞ்சநேரத்துல பின்புறத்து
இருக்கையாளர்களும் அவுங்க இடம் வந்ததும் இறங்கிப்

பொழுது புலருமா?.
52

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


போய்ட்டாங்க. முன்னெல்லாம் டாக்சியில் எத்தனை பேருன்னாலும்
ஏறிக்கலாம். கணக்குக் கிடையாது. குறைவாகக் கட்டணம் செலுத்தி,
அவரவர் இடம் வந்ததும் இறங்கிடுவாங்க. இதனால் டிரைவருக்கு
நல்ல வருமானம்! இதைத்தான் அப்பொழுது எல்லோரும் கள்ள
டாக்சிம்பாங்க. போலீஸ் கெடுபிடி அதிகமில்லாத அன்றைய
காலகட்டங்களில் நன்கு சம்பாதித்தவர்களில், ஒரு சிலர் டாக்சி
டிரைவர்களும் என்றால் அது மிகை இல்லை.
இதெல்லாம் பாரதிக்கும் நன்கு தெரியும். ஒருசில
பயணிகளிடம் டிரைவர்கள் அனுமதி கேட்டு, வேறு பயணிகளை
ஏற்றிக்கொள்வதும் உண்டு. இது அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும்
ஒரு குற்றச் செயலாகும்.
இதைப்பற்றியெல்லாம் யோசிக்கும் மனநிலையில் பாரதி
இல்லை. கண்களை மூடிக்கிட்டான், மனம் பொருமியது. கண்களில்
கண்ணீர் குளம் கட்டியிருந்தது.
‘ஒரு வேளை... நான் என்ன... அவசர முடிவு
எடுத்திட்டேனோ? என்னைத் தேடுவாளோ? ஐயோ!... நான்
அங்கே இல்லேன்னு தெரிஞ்சதும் ஏமாந்துடுவாளே... ஏமாறட்டும்,
நல்லா... ஏமாறட்டும்.’ மனதிற்குள் பாரதி கோபமாக உறுமினான்.
‘நளினி!... உன் நன்மையைக் கருதி நீ... நீ... நல்லா
வாழணுமேன்னு இன்னிக்கு என் மனசை நான் கல்லாக்கிக்கிட்டேன்.
உனக்காக... உன்னை நானே... நளினி... நானே உன்னை விட்டுப்
பிரிஞ்சுட்டேன். நளினி என்னை... மன்னிச்சிடும்ம. என்னை
மன்னிச்சிடடு,’
யோசிக்க யோசிக்க அவன் மண்டையே வெடிச்சிடும்
போலிந்தது. நளினி... காதல் இந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததா?...
ஏன்... அது உனக்கு இல்லியா? பிரிவின் வேதனையைத் தாங்க
முடியாத பாரதி; சூழலை மறந்து கைகளால் முகத்தில் அறைந்து
கொண்டான். அழுதும் தீர்த்தான். அப்படியும் மனப்பாரம்
குறைந்ததா?... இல்லையே.
டாக்சிக்காரனுக்கு எதுவும் புரியலை. அவனுக்குப் பாரதியிடம்
கேட்கவும் பயம். நேரம் அப்படிப்பட்டது. பைத்தியமோ
என்னக்மோன்னு பாரதியைக் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய்ச்
சேர்த்தான்.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அத்தியாயம் 7
என
அவன் சிந்தனை விடுபடுவது போல் டாண்... டாண்
சுவர்க்கடிகாரம் பன்னிரெண்டு முறை அடித்து ஓய்ந்தது. பாரதி
தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.
கண்ணீர் படுக்கையை நனைக்கிறது. கம்பத்து வாழ்க்கை’
அவன் காதல் வாழிக்கை நடந்து முடிந்து, இருபத்தஞ்சு
பின்னோக்கி
வருஷமானாலும், அவ்வப்போது நினைவுக்கயிறு
இழுத்துச் செல்லும்போது, இன்றைய தினம் வரை, தான்
கோழையாய் இருந்ததை எண்ணி அழுது தீர்த்துடுவான் இது
ஓண்ணுதான் அவனுடைய பலவீனம் மத்தபடி பாரதி்; உள் கடும
நல் ல அந் த ஸ் த ில் ள
உழைப்பாளி, தொழிலதிபர், சமூகத்தில்
ஒரு லட்சாதிபதி சமூகம் பாரதிக்குப் பணக் க ாரன் என் ற ஓரு
அந்தஸ்தைக் கொடுத்திருந்தாலும், அவனைப் பொறுத்தவரை,
சொந்த வாழ்க்கையில் இன்று வரை பரம ஏழைதான். பாரதி...
இன்றுவரை தனிமரமாகவே இருந்துவிட்டான். அன்று நளினியின்
மனம்
தந்தை பேசிய பொறுப்பற்ற, கேவலமான பேச்சினால்,
உடைந்து போன பாரதி; இனியும் இந்த சோக ஆற்றின் சுழற் சியில்
காணாமலே
உழன்று கொண்டிருந்தால், பைத்தியம் பிடிச்கக்
போயிடுவோமோங்கிற பயத்தில்தான், அந்த நிமிஷமே தன்னைச்
சுதாரித்துக் கொண்டு, சங்கிலி போட்டு மனம் தடுத்து
நிறுத்தினாலும், மானம் ரோஷம் மிகுந்த பாரதி... கம்பத்தை விட்டு
யார் கண்ணிலும் படாமல் வெளியேறி... இந்த இருபத்தஞ்சு
வருஷமா காணாமலே போய்விட்டான்.
மனுஷனாப் பொறந்த எல்லாருக்குமே? மான ரோஷம் உண்டு.
என்ன?...
அதுக்கு பாரதி மட்டும் விதிவிலக்காகிட முடியமா
என் ன ... நளினியே வந்து
ஆனால்... அவன் மனசு... நளினி அப்பா
மிரட்டினாலும் கூட... அந்தப் பிஞ் ச ு மனசில் நளினியிடம் அவன்
கண்ட அற்புத அழகு, கொண் ட காதல், அவளிடம் அவன் கண்ட
உளி கொண்டும் உடைக் க முடியாத
முதல் ஸ்பரிசம், அத்தனையும்
பாராங்கல்லைப் போலல்லவா மனதில் இறுகிப் போயிருக்கிறது.
அதில் மாளிகை கட்டி நளினி என்ற மகாராணியுடன்,
ராஜவாழ்க்கையல்லவா வாழ்ந்து வருகிறான். அதை என்றைக்கும்
யாராலும் மாற்ற முடியாதே... பெற்றவர், உற்றவர், தோழர்கள்...
அது... என்ன... அவன் வாழ்க்கையில் வலிய எத்தனையோ

பொழுது புலருமா?...
54

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


சந்தர்ப்பங்கள் வந்தும் எதுக்கும் மசியாத பாரதி, இன்னிக்கு
வரைக்கும் ஒரு ஞானிபோல் இருக்கிறான்.
அந்த மகாராணியா! என் நளினியா! ... நளினியா!... இப்படி...
நம்பமுடியலியே, செதுக்கிய சிலையாய் இன்னிக்கும் அவன் மனசில
அன்றலர்ந்த பூ மாதிரி... முதுமையின் எல்லையைக் கூடத்
தொடாமல் ஊஞ்சலாடிக்கிட்டிருக்கிறாளே... அந்த என் நளினியா...
இவன் சிதைந்து போன ஓவியமா, சித்திரிக்கப்பட்டிருக்கும் என்
நளினியைப் நான் இன்னிக்குப் பார்த்தேன், கடவுனே!, நான் ஏன்
இன்னிக்கு அவளைப் பார்த்தேன்?... அந்த அழகு மயிலின்
அழிந்த கோலத்தைக் காணவா... என் கண்கள் இன்னும்
குருடாகாமல் இருக்குது? பாரதி? ஏண்டா... ஏண்டா... நீ இன்னும்
சாகாம இருக்கே... பாரதி முகத்தில் அறைந்தபடி புலம்பிளான். என்
கனவு தேவதையைக் கடைசி வரையிலும் நான் தரிசிக்காமலே
இருந்திருக்கலாமே...
நினைக்க நினைக்க பாரதியின் இதயம் படபடன்னு,
வழக்கத்தை விட வேகமாக அடித்தது. பனி முத்துகள் போல்
வியர்வைத் துளிகள் முகத்தில் படிய, தட்டுத்தடுமாறி எழுந்து,
அவசரமாக மாத்திரையை எடுத்து நாக்கின் அடியில்
போட்டுக்கிட்டான். வழக்கத்துக்கு மாறாக இன்னிக்கு நெஞ்சுவலி
அதிகமானதுபோல் இருந்தது. மேலும் கீழும் மூச்சிரைக்க பாரதி
மெல்ல நடந்துவந்து படுக்கையில் சாய்ந்தான். கண்கள் மூடிய
நிலையில் இருந்தது.
அப்பொழுது மணி சரியாக ஒன்றடித்தது. கொஞ்ச நேரம்
அமைதியாக இருந்தவன் தூங்க முயற்சித்தான். தூக்கம் வந்த
பாடில்லை. நளினியைக் காதலித்த பலன், இன்னிக்கு அவன் இதய
நோய்க்குப் பலியானதுதான் மிச்சம்.
பாரதி... பணம், பாசம் என்ற கூட்டுக்குள் இருந்தாலும், அவன்
வாழ்க்கை இன்றும் வெறுமை மட்டுமல்ல; தனிமை
நிறைந்ததும்கூட.
நோய் நொடியுடன் வேலை செய்யமுடியாமல் ஊருக்குப்
போன பாரதியின் தந்தை... ஒரே ஆண்டில் நோய் குணமாகாமலே
இறந்து போனார், அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்களை
முடித்த பாரதி, அம்மாவையும், தங்கைகளையும் சிங்கப்பூருக்குத்
தன்னோடு அழைச்சிட்டுப் போகும் வேலையில், முழு மூச்சாக

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


இறங்கியிருந்தான். ஏற்கெனவே பாஸ்போர்ட்டுகளை ஏற்பாடு
செய்யச் சொல்லி இருந்ததால், அவர்களை அழைத்துப் போவதில்
பாரதிக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை.
நம்மளை அழைச்சிட்டுப் போக வந்ததும் வந்துட்டாள்... இந்த
முறை எப்படியாவது தன் தம்பி மகளுக்கு நிச்சயம் பண்ணிட
வேண்டியதுதான்னு பெருமுயற்சி செஞ்சு பார்த்தும், முடியாமல்
போகவே... விதியேன்னு தன் இரு மகள்களுடன் சிங்கப்பூர் வந்து
சேர்ந்தார் அவன் அம்மா.
தான் வேலை செஞ்ச கம்பெனியில் பல தொழில் நுட்பங்களை
அறிந்திருந்த பாரதி, தானே தனி நிறுவனம் ஒன்றைத் துவக்கினான்.
பூமிக்கடியில் கேபிள் போடும் காண்ட்ராக்ட் எடுத்து, கடுமையாக
உழைத்துப் படிப்படியாக முன்னேறினான். அவன்
முன்னேற்றத்துக்கு உந்து சக் த ியாக இருந் த வளே நளினிதான்
என்றால், நம்ப முடிகிறதா?...
ஆமாம்... அதுதான் உண்மை. அன்னிக்கு நளினியோட
அப்பா நாயைவிடக் கேவலமாகப் பேசியிராவிட்டால்... பாரதி
அந்தக் கம்பத்திலேயே கிடந்து, குண்டு சட்டியில் குதிரை
ஓட்டிக்கிட்டு இருப்பான். அதிலும் இன்னும் பைத்தியம் ஆகாத
குறையாக ஆகியிருப்பான்.
கம்பத்தை விட்டு ரோஷத்துடன் வெளியேறியதுதான்...
இன்னிக்குப் பணக்காரனாய், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து
உள்ளவனாய் இருக்கிறான். நாளுக்கு நான் முன்னேற்றத்தை
நோக்கிப் போய்க்கிட்டிருக்கான்.
சிந்தனைகளை மூட்டைகட்டிட்டுத் தூங்கலாமின்னு புரண்டு
புரண்டு படுத்தாலும் தூக்கம்.... வந்தால்தானே.
மருந்தினால் நெஞ்சு வலியும் சற்றுக் குறைந்திருந்தது.
கடிகாரத்தில் மணி இரண்டு அடித்தது.
அடடா! என் நளினியைப் பார்க்க இன்னும் ஏழு மணிநேரம்
இருக்கே. நிமிர்ந்து படுத்து, நெற்றியில் கையை வச்சுக்கிட்டு...
நளினி எங்கிட்ட சொன்னாளே... இன்னிக்கு காலையில ஒன்பது
மணிக்கு கண்டிப்பா சந்திக்கிறேன்னு சொன்னாளே... நிச்சயம்
வந்துடுவாளா? இந்த முறை நிச்சயம் நளினி என்னை ஏமாற்ற
மாட்டாளுன்னு நினைக்கிறேன், என்ன நினைக்கிறது... காலையில

பொழுது புலருமா?...
56

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


நிச்சயம் வருவாள். இனிமே எனக்குத் தனிமை சிம்ம சொப்பளம்,
ஆமாம், ஆமாம்... நான் என் நளினியுடன் வாழப்போறேன். நாங்க
சாகுற வரைக்கும் சந்தோசமா, எனக்கும், என்னவளுக்கும்
நெருக்கத்தைத்தவிர, பிரிவுங்கிறதே இனிமே எங்க வாழ்க்கையில்
கிடையாது. ஏ... நான்காட்டியே, நேரம் சீக்கிரமா ஓடக் கூடாதா?
என் மனசைப் போல.. இன்னிக்கு விடியப்போற பொழுது என்னோட
வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக் குடுக்கப் போகுது.
இது சத்தியம். பாரதி ஒருக்களித்துப் படுத்தான். வேதனைகள்
குறையக் குறைய மனசு லேசானது போல் இருந்தது. இந்தப்
பாழாப்போன உறக்கம் இன்னும் எட்டிப் பார்க்க மறுக்குது.
ஆனாலும் இன்னிக்கு மதியம் நடந்த சம்பவங்களை மறுபடியும்
எண்ணிப்பார்த்து மனம் அசைபோட்டது.

அத்தியாயம் 8
அன்று மதியம் பாரதி... தன்னோட வேலை செய்றவங்களுக்கு
உணவுப் பொட்டலம் வாங்க, மெக்பர்ஸனில் உள்ள ஒரு சீன
கோப்பிக் கடைக்குப் போனான். கூடவே... வழக்கமா உணவு
வாங்கிட்டு வரும் தன் வேலையாளையும் அழைச்சிட்டுப் போனான்.
கூட வந்தவனிடம் சாப்பாடு வாங்கப் பணத்தைக் குடுத்துட்டு,
பாரதி... தான் சாப்பிட உணவும் ஆர்டர் பண்ணச்சொல்லிட்டு...
கற்றுமுற்றும் பார்த்தான். மதியம் பதினோரு மணி... சாப்பாட்டு
நேரங்கிறதாலே, அந்தக் கடையில் கூட்டம் சற்று அதிகமாகவே
இருந்தது. கடைக்கு வெளியில் வந்த பாரதி, சுவரை ஒட்டிய ஓரத்தில்
ஒரு இடம் காலியாக இருந்தது. கோப்பிக் கடைக்காரனிடம் ஒரு
குளிர்பானம் ஆர்டர் செஞ்சுட்டு, அந்த நாற்காலியில் வந்து
உட்கார்ந்தான். அந்த இந்தியச் சாப்பாட்டுக் கடையில் இன்னும்
கூட்டம் குறைஞ்சபாடில்லை. ம்... நம்ம வேலையாள்
சொன்னதுபோல மற்ற சீ ன ர் , மலாய் க க
் ாரங்களைவிட, இந்த இந்தியக்
கடையிலதான் கூட் ட ம் வரிசை பிடிச்சு நிக்குது.
நேத்து வேலையாள் வாங்கிட்டு வந்த உணவு,
வழக்கத்தைவிட ருசியா இருந்தது. அந்த உணவின் ருசி பாரதியை,
இறுபது வருஷத்துக்கு முன்னால அவன் வாழ்ந்த கம்பத்துக்கே
இட்டுப் போனது.
இன்னிக்கு மாதிரியா அப்போ சாப்பாடு. விறகு அடுப்பில்
சமையல் செய்வாங்க. சிலபேர் கரி அடுப்பிலும், சில பேர்

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


மண்ணெண்ணெய் அடுப்பிலும் சமைப்பாங்க. கொஞ்சம்
வசதியானவங்கதான் கேஸ் அடுப்பைப் பயன்படுத்து
கறி சமைக்க உபயோகிக்கும் மல்லி, மிளகாய், சீரகம் போன்ற
மசாலாப் பொருள்களை வறுத்து, உரலில் இடிச்சுத் தூளாக்கி
வச்சிக்கிட்டு தேவையானபோது எடுத்துக் குழம்பு வைப்பாங்க.
இன்னும் சிலபேர் கறி இன்னும் ருசியா இருக்குமின்னு; முழுசா
வறுத்த மசாலாப் பொருள்களை, தேங்காயோடு சேர்த்து அம்மியில்
வச்சு மசிய அரைச்சு எடுத்து, கோழிக்கறி, மீன்கறி, கருவாட்டுக்
கறின்னு சமைப்பாங்க, சமைக்கும்போதே மணம் எட்டு வீட்டுக்கு
மூக்கைத்து துளைக்கும்.
அதுமட்டுமா... காலை பலகாரத்துக்கு முதல்நாளே, அரிசியை
ஊற வச்சு, உரல்ல இடிச்சுத் தூளாக்கி சலித்துத்தான் தோசை,
ஆப்பம், இட்லி, புட்டு, இடியாப்பம்ன்னு செய்வாங்க. அத்தனையும்
மல்லிகைப் பூப்போல, அப்பத்தான் வெள்ளை வெளேருன்னு பஞ்சு
போல ருசியா இருக்கும்... இதெல்லாம் அந்தக்காலம், அப்படி ஒரு
காலம் இனி எங்கே வரப்போகுது?
ஆனா என்ன ஆச்சரியம்!... நேத்து பாரதி சாப்பிட்ட சோறு,
கறி வெகு நாளைக்குப்பிறகு மணமும், ருசியும் கொண்டதா
இருந்துச்சு. உடனே பாரதி சாப்பாடு வாங்கிட்டு வந்த
வேலையாளைக் கூப்பிட்டு விசாரிச்ச பிறகுதான் அந்தக் கடையில
புதுசா ஒரு பொம்பளை சமைக்கிறதா சொன்னான்.
அது மட்டுமல்ல... முன்னவிட அந்தக் கடையில
அதிகம்னும் அதிலும் சுடச்சுட அங்கே கடையிலேயே உக்காந்து
சாப்பிட்டா இன்னும் ருசியா இருக்குமின்னான்.
சாதாரணமா மதிய வேளையில் வீட்டுக்குப் போய்
சாப்பிடுறதுதான் வழக்கம். சரக்கு வர்ற நேரம், வேலைப்பளு
அதிகமிருக்கிற நேரம் வீட்டுக்குப் போக நேரமில்லாமல், இப்படிக்
கடையில் வாங்கி சாப்பிடுறது வழக்கம் இதுவரை வேலையாள்
எத்தனையோ கடையில் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்காள்.
ஆனால், நேத்து அவன் சாப்பிட்ட சாப்பாட்டோட ருசியே தனி.
இயற்கையா பாரதி.. சாப்பாட்டு விசயத்தில் படு சுத்தத்தையும்,
ருசியையும் பார்த்து கடைகளைத் தேடிப்புடிச்சுத்தான் சாப்பிடுவான்.
வாடிக்கையா மெக்பெர்ஸன் கடையிலத்தான் சாப்பாடு கொஞ்சம்
நல்லா இருக்குமின்னு வாங்கச் சொல்வான்.

பொழுது புலருமா?.
58

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


ஆனால்... நேத்தைய சாப்பாடு என்னிக்குமில்லாம ருசியோ...
ருசின்னா கேட்கவா வேணும். மறுநாளே... வேலையாளைக்
கூட்டிக்கிட்டு நேரா கடைக்கே வந்துட்டான்.
சாப்பாட்டுப் பொட்டலத்தைச் கமந்துகிட்டுவந்த வேலையாள்,
"சார்! உங்க சாப்பாடு வந்துகிட்டு இருக்கு. முதல்ல நான்
ஆபீஸுக்குப் போறேன். எல்லாரும் சாப்பிட காத்துக்கிட்டு
நிற்பாங்க'ன்னதும்... உடனே பாரதி, அவன் கிட்ட டாக்சிக்கு பணம்
குடுத்து அனுப்பிட்டு, மேசை மேலிருந்த குளிர்பானத்தை கிளாசில்
ஊற்றி உறிஞ்சினான். இடையில் கடிகாரத்தையும் பாத்துக்கிட்டான்.
அந்த நேரம் தட்டில் கோழி பிரியாணி, கறி வகைகளும் அவன்
மேசைக்கு வந்தது. அதைப் பாங்காகத் தலைகுனிந்தபடி எடுத்து
வச்சிக்கிட்டிருந்த பெண்ணிடம், பாரதி பணம் குடுக்க நிமிர்ந்தபோது
தன் கண்கள் மட்டுமல்ல, உணவு பரிமாறிய பெண்ணின் கண்களும்
நேருக்குநேர் சந்தித்தபோது... ரெண்டு பேருமே ஒருவரை ஒருவர்
பார்த்ததும் அப்படியே நிலைகுத்தி நின்று விட்டனர். பாரதிக்குத்
தொண்டையிலிருந்து வார்த்தையே வெளிவரலை.
ஆச்சரியம் மேலிட பாரதி, "நீயா!... நீ... நீங்களா?... என்றான்;
தடு மாறியபடி “நளினி!... இது... கனவு இல்லியே..."
பதற்றத்துடன்.
ஏறத்தாழ நளினியும் அதே நிலையில்தான் இருந்தாள்.
"பாரதி!... நீ...ங்... களா!... அடடா!..." அந்தக்
எத்தனை ஏக்கம். அவனால் நம்பவே முடியலியே. கண்களில்
கண்ணீர் வழிந்தது. உதடுகள் துடித்தன. தலை தானாகவே
கவிழ்ந்தது.
பாரதிக்கு அதிர்ச்சி ஒருபுறம். மகிழ்ச்சி ஒருபுறம். “நளினி... நீ
எங்கே இப்படி..." நளினி பதில் சொல்லாமல் அவனையே
பார்த்தபடி நின்றிருந்தாள்.
"அப்போ!... நீதான் இந்தக் கடைக்குப் புதுசா வந்த
சமையல்காரியா?" அப்பவும் பதில் பேசாமல் நின்றிருந்தாள். அவள்
பேசாமல் இருந்தாலும் அவள் மனசு படும்பாட்டைக் கடவுள்தான்
அறிவார்.
"ம்... வேலையாளுங்க எங்ககிட்ட வந்து சொன்னாங்க.
இந்தக்கடையில புதுசா ஒரு பொம்பளை சமைக்கிறாங்க. சாப்பாடு

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


ரெம்பா ருசியா இருக்குமின்னு. அதான் இங்க நானும் வந்து சாப்பிட
வந்தேன். ஆனா... நான் கனவுகூடக் காணலை. இந்தக் கோலத்துல
உன்னைப் பார்ப்பேன்னு. சொல்லும்மா எப்படி இருந்த நீயா..
இப்படி... நளினி என்னால் நெனச்சுக் கூடப் பார்க்க முடியலை."
இப்பவும் நளினி பதில் சொல்ல முடியாமல் கண்ணீரைக்
கொட்டினாள். நளினி, சொல்லமாட்டியா? ... இப்பவும்
சொல்லாம போயிடுவியா?... சொல்லு நளினி, என்னோட மனசு
பதறுது. என் பாதுகாப்புப் பெட்டகம் எப்படி தெருவுக்கு வந்துச்சு.
இப்படி உன்னைத் தெருவுல வீசினது யாரு நளினி? சொல்லு... யார்
வீசினா..." உணர்ச்சி வசப்பட்ட பாரதி, தன் நிலை மறந்து கொஞ்சம்
உரக்கக் கத்திட்டான்.
திடுக்கிட்டுப்போன நளினி மெல்லிய குரலில் "பாரதி! இது
பொது இடம். கொஞ்சம் மெதுவாப் பேசுங்க. எல்லாரும்
பார்க்கிறாங்க பாருங்க" என்றாள்.
அப்போ!... நான் கேக்குறதுக்குப் பதில் சொல்லு. உன்ன இந்த
நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டது யாருன்னு சொல்லு, என்ன
நடந்ததுன்னு சொல்லு. ஆமா!... கேக்கணுமின்னுதான் கேக்கிறேன்.
தப்பா எடுத்துக்காதே, உன்ன பெரிய... கோடீஸ்வரனுக்கு கட்டிக்
குடுக்கப் போறதா உன் அப்பா சொன்னாரே. அது... இதுதானா?...
சொல்லு நளினி, படபடப்புடன் பேசிய பாரதி, சூழ்நிலையை மறந்து
நளினியின் கையைப் பிடித்தான்.
பாரதியிடமிருந்து தன் கையை விடுவிக்காமல் "விதி... எல்லாம்
என்னோட தலையெழுத்து. அதை யாரால மாத்தமுடியும்
சொல்லுங்க,"
"இப்படித்தான் ரொம்பபேரு விதி மேல பழியைப் போட்டுட்டு,
தப்பிச்சிடுறாங்க. நீயும் அப்படித்தானா? சொல்லு நளினி,"
"பாரதி..." என்றவாள்... மெல்லிய குரலில், உதட்டைக்
கடித்தபடி... "என்னை இப்ப விட்டுடுங்க. கடவுள் விட்ட வழி
எப்படியோ... அப்படியே... நா... நானும் போயிடுறேன்" என்று
தழுதழுத்த குரலில் கூறியவன், தன் கையைப் பிடித்திருந்த
பாரதியிடமிருந்து விடுவிக்க எத்தனித்தபோது, பாரதி பிடித்திருந்த
அவள் கையை விடாமலே...
“முடியாது நளினி... உன்னைப் பார்க்கும்போதே ஏதோ... நீ
பெரிய சோகத்தில் இருக்கிறதுபோல் என் உள்ளுணர்வு சொல்லுது.
இந்த நிலைமையில இப்ப நான் உன்னை விடமுடியாது. நளினி

பொழுது

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


புரிஞ்சுக்க... ஓரு தடவை உன்ளை விட்டுப் பிரிஞ்சதுபோதும். இனி
ஒரு பிரிவை என்னால தாங்கமுடியாது. நளினி... நான் உன்னைப்
பார்த்துப்பேசணும், நான் கண்டிப்பா உன்கிட்ட பேசியே
ஆகணும்னு" அவள் கையை விடாமலே இன்னும் கெட்டியாகப்
பிடித்திருந்தாள். எங்கே... மறுபடியும் அவளைப் பார்க்கமுடியாமல்
போய்விடுமோ என்ற பயம் வேறு, ஏனோ... நளினியால் இப்பவும்
அவன் பிடியை விலக்கிக் கொள்ள முடியலை. நளினி மெல்ல
அவன் முகத்தை, நிமிர்ந்து பார்த்தாள், விழிகளிலிருந்து வழிந்த
கண்ணீரைப் புடைவைத் தலைப்பால் துடைத்தாள். கொஞ்சம் சிரிக்க
முயற்சித்தாள். சிரிப்பு... அது எப்படி வரும்? அதைத்தான்
இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே தொலைச்சவளாச்சே.
நளினி... சன்னமான குரலில், "ம்... இன்னும் அந்த முரட்டுப்
பலம் உங்களை விட்டுப் போகலியே என்றாள்.
பாரதி... அவளைப் பிடித்திருந்த கையை விட்டான். சுற்றிலும்
ஒருமுறை பார்த்தான். இதுதான் சமயமுன்னு நளினி உடனே
கடைக்குள் போய் கடைக்காரரிடம் ஏதோ பேசிட்டு மறுபடியும்
பாரதியிடம் வந்தாள். “ம்... கடையில தேடிக்கிட்டு இருக்காங்க.
அதான் போய் சொல்லிட்டு வந்தேன்," மிகவும் மெதுவாகப்
பேசினாள்,
"நளினி இனிமேல் நான் உன்னை எங்கே பார்க்கலாமின்னு
சொல்லலியே." பாரதி கெஞ்சுவது போல் கேட்டான்.
"அவசியம் பார்க்கணுமா?... நளினிக்கும் பாரதியைப் பார்க்க
பாவமாக இருந்தது.
"ஏன்!... உன்னைப் பார்க்கணுமின்னு எனக்குத் தோணாதா!
உன்ளைப் பார்த்து எத்தனை வருஷமாச்சு. உங்கிட்ட நிறைய
பேசணும் நளினி... பேசலாமா?..."
"எனக்கும் உங்ககிட்ட நிறைய பேசணும் பாரதி. ஆனா!... இப்ப
அதுக்கு சந்தர்ப்பம் சரியில்லை,"
ஏன்... ஏன் சரியில்லை. வேலை போயிடுமின்னு
பயப்படுறியா? வேணாம்... தேவையே இல்லை உனக்கு இந்த
வேலை. நீ உடனே என் கூட வா... வா... நளினி என்றான்
அவசரமாக.
"பாரதி!... அவசரப்படாதீங்க, வேலைக்கின்னு வந்துட்டேன்.
அதை ஒழுங்கா முடிச்சுக்குடுத்துட்டு முதலாளிகிட்ட

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


சொல்லிட்டு வந்திடுறேன். வேணுமின்னா, உங்களுக்கு
விருப்பமில்லைன்னா... நாளையிலிருந்து நான் வேலைக்குப்
போகலை. போதுமா!..." என்றாள் சற்று ஆறுதலாக.
"பரவாயில்லையே, இப்பவாவது என் விருப்பப்படி
நடக்கணுமின்னு தோணுச்சே."
அதெல்லாம் ஒண்ணுமில்லை. இந்தக் கடையில் வேலை
செஞ்சாத்தானே... நாளைக்கே வேற கடைக்கு வேலை தேடிப்
போகாமலா இருக்கப்போறேன். நளினி மனதிற்குள் சொல்லிக்
கொண்டாள். "நளினி என்ன பேசாம இருக்கே. நான் கேட்டதுக்கு
நீ இன்னும் பதிலே சொல்லலியே." பாரதி பேசிக்கிட்டே நளினியை
நன்கு உற்றுப்பார்த்தான். அவளின் மஞ்சள் மேனியில் மஞ்சள்
கயிறு இல்லை. கழுத்து வெறிச்சோடிக் கிடந்தது.
"பாரதி... என்ன நின்னுக்கிட்டே கனவு காண்தீங்களா?"
என்றவள், பாரதி!... இப்போ கடையில கூட்டம் அதிகமா இருக்கு.
முதலாளி இவ்வளவு நேரம் அனுமதி குடுத்ததே பெரிய விஷயம்,
அதுக்காக, மறுபடியும் உங்ககிட்ட நான் பேசமுடியாது."
"பார்க்க முடியாதுன்னு சொல்லப்போறியா?... ம்... கேக்க
மறந்துட்டேன்... எப்படி இருக்கார் உன்னோட உடும்புப்பிடி
அப்பா..." என்றான் கிண்டலாக.
"ஐயோ!... ஏன் அவசரப்படுறீங்க, நான் நிச்சயமாக இன்னிக்கு
நாலு மணிக்கு உங்களைப் பார்க்க வர்றேன். இங்கிருந்து இப்ப நான்
எதுவும் பேசமுடியாது. அதோ பாருங்க... எதிர்த்தாப்புல ஒரு பஸ்
ஸ்டாப் இருக்கு... அங்கதான் நாலு மணிக்கு உங்களுக்காக
காத்திருக்கிறேன். நீங்க வந்துடுங்க" என்றாள்.
"நளினி நீ... நிஜம்மா வந்துடுவியா?.... பாரதியின் கண்கள்
பிரகாசமாக, ஆவலுடன் கேட்டான்.
"நிஜம்மா, கண்டிப்பா வந்திடுவேன். நீங்க கம்பத்தை விட்டு
சொல்லாம கொள்ளாம ராவோட ராவா போனமாதிரி இந்த
தடவையும் என்னைவிட்டுப் போயிடாதீங்க,"
உருக்கமான அவனது வேண்டுகோன், அவன் மனசை
அலைக்கழிக்கத் தொடங்கியது. ஒரு வினாடி பாரதி அவளையே

பொழுது புலருமா?...
62

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


பார்த்தபடி நின்றான். நிலவு முகத்தோற்றம்... அதில் பொலிவுதான்
இல்லை.
"பாரதி... என்ன அப்படி ஒரு பார்வை" என்றாள்...
"ம்... அதெல்லாம் ஒண்ணுமில்லை"ன்னு மழுப்பினான்.
"அப்படீன்னா... சரியா நாலு மணிக்கு மறந்துடாதீங்க." நளினி
சொல்லிக்கிட்டே வேகமாகக் கடைக்குள் போய் மறைந்துவிட்டாள்.
நளினி இல்லாத அந்த இடம் வெறுமையாய் இருந்தது. அதே
முத்துச்சிரிப்பு, கரு கருன்னு சுருண்ட அடர்த்தியான தலைமுடி,
கருமையான அவள் கண்களில் ஒளி குன்றி இருந்தது. நடுத்தர
வயசானாலும், இன்னும் அந்தச் சுருக்கமில்லாத அழகு
முகத்தோற்றம், இன்னும் அவள் இளமையைப் பறை சாற்றியது
உடம்பில் நளினி எந்த நகையும் அணிந்திராமல் காட்சி
அளித்தாலும், காண்போரைச் சுண்டி இழுக்கும் சக்தி கொண்டது
என்ற உண்மை பாரதிக்கு மட்டுமே புரியும்.
அவன் கண்ணிலிருந்து அவள் மறையும் வரை பார்த்துக்
கிட்டிருந்த பாரதிக்கு லேசாக நெஞ்சு வலிப்பது போல்
நெஞ்சை நீவிவிட்டான். நல்ல வேளையாக அவன் ஒதுக்குபுறமான
ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டதால் ஒரு சிலரைத் தவிர மற்ற
யாரும் அவர்கள் இருவரையும் கண்டு கொண்டதாகத் தெரியலை.
அப்பொழுது மணி ஒன்றுதான் ஆகி இருந்தது.
மறுபடியும் அவளைப் பார்க்க இன்னும் மூணுமணி
இருக்குதே... என்ன செய்யலாம் என்று யோசித்தவன், மறுபடியும்
ஆபிசுக்கே போயிடுவோமின்னு... சாப்பாட்டு மேசையைப்
பார்த்தான் நளினி கொண்டு வந்து வச்ச கோழி பிரியாணி;
குருவிகளுக்கு இரையாகி இருந்தது. குளிர்பானம் பாதி குடிக்காமலே
இருந்தது.
காரை எடுத்துக் கொண்டு தன் அலுவலகம் சென்றான். காரை
நிறுத்தி விட்டுத் தன் தன் அலுவலக அறைக்குள் நுழைந்து,
இருக்கையில் இருந்தபடி கண்ணை மூடிக்கொண்டான். இதயம்
படபடன்னு அடித்த வேகத்திலும் நாக்கின் அடியில் போடும்
நெஞ்சுவலி மாத்திரை, சட்டைப் பையில் இருந்தும், அதைப்
போட்டுக் கொள்ள வேண்டும் என்று தோணாமல் அப்படி ஒரு
மோன நிலையில் இருந்தான்.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அவன் மனசு பூரா நளினியைச் சுற்றியே இருந்தது. எவ்வளவு
நேரம் இதே நிலையில் இருந்தானோ... அவனுக்கே தெரியாது.
அஞ்சல்காரர் கதவைத்தட்டிய அதே நேரம் டெலிபோன் மணி
அலறியது. பதறியடிச்சு எழுந்த பாரதி... முதலில் கைக்கடிகாரத்தைப்
பார்த்தான், மணி நான்கடிக்கப் பதினைஞ்சு நிமிஷமே இருந்தது.
அடடா!.. யோசிச்சுக்கிட்டே.. அப்படி என்ன ஒரு அசுரத்தூக்கம்.
அதுவும் ஆபிஸில்.. பாரதி இதுவரை. இந்த நேரத்தில் இப்படித்
தூங்கியதே இல்லை. அவசர அவசரமாக எழுந்து கதவைத்
திறந்தான். அலறிக்கிட்டிருந்த டெலிபோனையும் எடுக்காமல்
அப்படியே வெளியே வந்தவன், வாசலை அடைச்சிக்கிட்டு இருந்த
அஞ்சல்காரர் கையிலிருந்த ரிஜிஸ்தர் கடிதங்களை வாங்கிக்
கொண்டு வேகமாகக் காரை எடுக்க ஓடினான். பதினைந்து
நிமிஷத்தில் குறிப்பிட்ட இடத்தை வந்து அடைந்த பாரதி, சுற்றிலும்
தன் பார்வையைச் செலுத்தினான். அவனுக்கு நேர் எதிரே இருந்த
காப்பிக்கடையைப் பார்த்தான். காப்பிக்கடைக்காரனைத் தவிர
எவருமில்லை கடை வெறிச்சோடிக் கிடைந்தது.
பாரதி... பரபரப்புடன் அங்குமிங்கும் பார்வையை ஓட்டினான்.
ஐயோ... இப்பவும் நம்மளை ஏமாத்திட்டாளே. பேச்சு மும்முரத்தில்
அவள் வீட்டு முகவரியைக் கேக்காம போய்ட்டோமே சே...
-
நளினி... ஏன் இப்படி என்னை அலைகழிக்கிறே? பலவாறாக
யோசித்த பாரதி அங்குமிங்கும் அசையாமல் அப்படியே
நின்றிருந்தான். நேரம் ஓடிக்கிட்டு இருந்தது. கடவுளே...
வந்துடுவாளா... காரில் வானொலியைத் திருகினான். இந்திப்பாடல்
ஓடிக்கிட்டு இருந்தது. எரிச்சலுடன் வானொலியை மூடிவிட்டு
காரின்
நிமிர்ந்த போது, சற்று தூரத்தில் நளினி நடந்து வருவதைக்
கண்ணாடி வழி பாத்துட்டு, ஹாரன் அடித்தான்.
சுற்றுமுற்றும் பார்த்தபடி வந்துகிட்டிருந்த நளினியின் முன்
காரை நிறுத்தினான். முன் சீட்டின் கதவையும் திறந்து அவளை ஏறிக்
கொள்ளச் சொன்னான்.
வெள்ளை நிறத்தில் பெரிய பென்ஸ் காரைப் பார்த்த நளினி
சற்றுத் தயக்கத்துடன், “இதிலேயா... நானா!..." ஆச்சரியத்துடன்
பாரதியைப் பார்த்தாள். அடிக்கடி அவள் கண்கள், அங்குமிங்கும்
பார்க்கத் தவறவில்லை.
"என்ன நளினி, கார்ல ஏற பயம்மா இருக்குதா? பேசாம
வண்டியில ஏறு. நான் ஒண்ணும் கடிச்சுத்தின்னுட மாட்டேன்."

பொழுது புலருமா?...
64

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


மறுபடியும் நளினி தயக்கத்துடன், பாரதி... நான் இப்படி எல்லாம்
கார்ல போனதே இல்லை. அழகான பெரிய கார்... இல்ல பாரதி...
நளினி... இன்னும் திறந்திருக்கும் காரில் ஏறாமலே குனிந்தவாறு,
அவனைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாள். அதுமட்டுமல்ல...
"பாரதி... இது உங்க காரா"ன்னு கேட்டாள்.
பாரதிக்கு எரிச்சல் வந்துடுச்சு, "இது என்னோட கார் இல்லை.
ஒரு காலத்துல திருடனைப்போல, நடு ராத்திரியில கம்பத்தை விட்டு
ஓடினேன்ல, அது மாதிரி இதுவும் திருடிட்டு வந்த கார், இன்னும்
சின்னப்புள்ள மாதிரியே பேசுறியே, நளினி ஏன்... பெரிய காரா
இருந்தா வரமாட்டியா?" என்றான் சற்றுக் கோபமாக.
"இல்ல பாரதி... யாராவது பாத்துடுவாங்களோன்னு பயமா
இருக்குது" என்றாள்; தயக்கத்துடன் வார்த்தைகள் வந்தன.
அவள் பேசுறதையே பாத்துக்கிட்டிருந்த பாரதி...
"ஏம்மா...இன்னுமா பயம் உன்னை விட்டுப் போகலை இப்ப நாம
என்ன சின்னக்குழந்தைகளா? வாக்குவாதம் பண்ணாம பேசாம
வந்து ஏறிக்க" என்றதும் நளினி எதுவுமே பேசாமல் காரில் ஏறிக்
கதவைமூட, கார் நகரத்தொடங்கியது, பாரதி மெதுவாகச் சாலையில்
போய்க்கிட்டிருந்தான். இடையிடையே அவன் பார்வை
நளினியிடமும் இருந்தது. இன்னமும் அப்பாவித் தனமாகவே
இருக்கிறாடிடிளேன்னு ஆச்சர்யப்பட்ட பாரதி கனிவாக... என்ன
நளினி... நான் பேசிட்டேன்னு பயந்துட்டியா" என்றான்.
"இல்லையே..." குனிந்த தலை நிமிராமல் நளினி பதிலளித்தாள்.
பாரதி... மறுபடியும் நளினியை சீண்டிப் பார்க்கும் நோக்கில், "சரி...
சரி... பெல்ட்டை மாட்டிக்க, போலீஸ் பிடிச்சுதுன்னா அபராதம்தான்".
நளினி என்ன பெல்ட்டுன்னு சுற்றுமுற்றும் தேடுகிறாள்.
மறுபடியும் பாரதி... "என்ன தேடுறே?, நான் மாட்டிவிடட்டுமா?"
சொல்லிக்கிட்டு இருக்கும்போதே, கார் சிவப்பு விளக்குக் கோட்டில்
நின்றது பாரதி, அவள் மேனியில் தன் கை படாதவாறு பெல்ட்டை
எடுத்து மாட்டினான். பச்சைவிளக்கு மாறியதும் மறுபடியும் கார்
சாலையில் நிதானமாகப் போய்க்கொண்டிருந்தது.
ரெண்டு பேருக்கும் பேச்சே வரவில்லை, அந்த ஒரு கண
நெருக்கம். மூச்சுக்காற்றின் ஸ்பரிஸம்... அப்பப்பா!... பாரதியின்
உடல் நெருப்பாய் இருப்பது போல் உணர்ந்தான்.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


நளினியும் பெல்ட்டை மாட்டுவதன்மூலம், இப்படி ஒரு
நெருக்கமான வாய்ப்பை எதிர்பார்த்திருக்க மாட்டாள், பாரதியிடம்
என்றோ - கண்ட அந்த உடம்பின் வாசம் அவளை மெளன
மாக்கியது. இருவருக்கும் அங்கு ஓரு மெளனப் போரே நடந்து.
கொண்டிருந்தது.
அந்தத் திடீர் மெளனத்தைப் பாரதியே கலைத்தான். மெல்லக்
களைத்தபடி, "என்ன... நளினி, எதுவுமே பேசாம வர்றியே"
“ஏன்?... நீங்களும்தான் திடீர்னு பேச்சை நிறுத்திட்டீங்க."
“சரி... சரி... நளினி! நீ... வந்து... வீட்டுக்கு கொஞ்ச லேட்டாப்
போனா பரவாயில்லையா..." பாரதி மெல்லப் பேச்சைக் கொக்கி
போட்டு இழுத்தான். பாரதியின் வாயிலிருந்து என்ன
வரப்போகுதோங்கிற பயம் வேறு.
ஏன்... பாரதி ரொம்ப நேரமாகுமா?... இப்ப நாம
போறோம்" - நளினி மெதுவாகக் கேட்டாள்.
"ஏன்?... லேட்டா போனா; வீட்டுல புருஷன், புள்ளைங்க
எல்லாம் தேடுவாங்களா?..."
"என்னது ? பாரதி!... அப்படி எனக்கு யாருமில்லை."
வெளிப்படையாகப் பேசினாள்.
நளினியின் இந்தப் பதில், பாரதிக்கு சற்று அதிர்ச்சியைத்தான்
கொடுத்தது. பேச்சை மற்ற எண்ணி... "நளினி நீ ஏதாவது
சாப்பிடப்போறியா?..."
“இப்போதைக்கு எனக்குப் பசி இல்லை பாரதி" என்றாள்.
இம்முறை காரை வேகமாகச் செலுத்தினான் பாரதி.
"ஆமா!... நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில்
சொல்லலியே. இப்ப நாம எங்கே போறோம்?..."
"நாம இப்ப ஈஸ்ட்கோஸ்ட் கடற்கரைக்குப் போறோம். அதான்
கொஞ்சம் நேரம் ஆனா பரவாயில்லியான்னு கேட்டேன்." நளினி
பதில் எதுவும் கூறாமல் அந்தப் பெரிய காரின் உட்புற அழகை
ரசித்துக் கொண்டிருந்தாள்.
"ஆமா, நான் என்ன சொன்னேன்னாவது தெரியுமா?..."

பொழுது புலருமா?...
66

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


''தெரியும், தெரியாம என்ன பாரதி... இத்தனை வருஷத்துக்குப்
பிறகு பார்க்கிறேன், கொஞ்சம் லேட்டாபோனா என்ள குறைஞ்சிடும்,
பரவாயில்லை பாரதி. எந்தப் பிரச்சனையுமில்லை" என்றவள்,
தொடர்ந்து பாரதி "நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து,
இருபது வருஷம் இருக்கும் இல்லியா?..."
"ம்... இருக்கும்... இருக்கும்." காரை வேகமாக ஒட்டியபடி
பதில் கூறினான்.
"காலம் எவ்வளவு வேகமா ஓடிடுச்சு பாத்தீங்களா?..."
"ம்... அகரவேகத்துல ஓடிடுச்சு கம்பமே இல்லாம.... எல்லாம்
கலைஞ்சு போச்சு. நம்ம காதலைப் போல... முணுமுணுத்தான்.
"என்ன... உங்களுக்குள்ளே முணுமுணுக்கிறீங்க?..."
"ஒண்ணுமில்ல... கம்பங்கள் எல்லாம் அழிஞ்சுபோய், பெரிய
கட்டடங்களா வளர்ந்திருக்கு"ன்னு சொன்னேன்.
"இல்ல... என்னமே... கலைஞ்ச மாதிரின்னு காதுல
விழுந்துச்சே அதான் கேட்டேன்," நளினி இப்பொழுது... பாரதியை
மிக அருகில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன நளினி... அப்படி பாத்துக்கிட்டிருக்கே..."
“அப்போ உங்களைப் பார்க்க எனக்கு தைரியம் பத்தலை"
என்று வெட்கத்துடன் தலையைக் குனிந்தவாறு கூறினாள்.
"ம்... அப்பாவும் சரி, இப்பவும் சரி, உனக்குத் தைரியம்
இல்லேன்னுதான் சொல்வேன். ஏன்னா... என் கார்ல ஏறணுமான்னு
எவ்வளவு யோசிச்சே. அதான் உன் பயத்தை கொஞ்சம்
முன்னாடிதான் பார்த்தேனே. நளினி, காலம் எவ்வளவோ மாறிடுச்சு.
ஆனா, பழைய பத்தாம்பசலித்தனம் இன்னும் உன்னை விட்டுப்
போகலை. பயம் வாழ்க்கையில் இருக்கணும்தான், ஆனா... பயமே
வாழ்க்கையா இருக்கக்கூடாது. என்ன புரியுதா?... மத்தவங்களுக்கு
நாம ஏன் பயப்படணும்கிறேன்."
“என்ன செய்றது... நான் வளர்ந்தது அப்படி. சரி அத விடுங்க
பாரதி! நீங்க எப்படி இருக்கிறீங்க? உங்களைப்பத்தி எதுவுமே
சொல்லலியே."

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"சொல்றதுக என்ன இருக்கு. அதான் பார்க்கிறியே...
இப்படித்தான் என்றான் விரக்தியாக.
"இல்லை பாரதிக்கு குடும்பம்... வந்து எதுக்கு
கேக்குறேன்னா, நீங்க லேட்டா வீட்டுக்குப் போனா உங்களை
வீட்டுல யாரும் தேட மாட்டாங்களா?, தயங்கித்தயங்கி
வார்த்தைகள் வெளிவந்தன.
"ஏன் தயங்குறே?... நேரடியாகவே கேளேன், நீ கல்யாணம்
பண்ணிட்டியான்னு."
"பாரதி... நான் தப்பா எதுவும் கேட்டிருந்தா மன்னிச்சிடுங்க
நீங்க முன்ன... நான் பார்த்த பாரதியே இல்லை. ரொம்ப
மாறிட்டீங்க."
"என்னது! மாறிட்டேனா?... இல்லியே... அதே...
கறுப்பாத்தானே இருக்கேன். என் ன . அப் ப ோ ரொம் ப ஒல் லியா
இருப்பேன். இப்ப கொஞ்சம் சதை போட் ட ிருக் க ு. அவ் வ ளவுதான் .
ஆமா!... நீ எதை வச் ச ு சொல்றே மாறிட் ட ேன் ன ு."
நல்லாத்தான் இருக்கேன்..."
"என்ன பாரதி... எங்கிட்ட ஜோக் அடிக்கிறதா நெனப்பா?...
உங்களை எனக்குத் தெரியாதா."
"என்ன உளர்றே? என்னைப் பத்தி உனக்கு என்ன
தெரியும்?..."
"என்ன தெரியாது என்னோட பாரதிய எனக்குத் தெரியாது?...
இப்போ உள்ள பாரதி... சோகத்தை உள்ளுக்குள்ளேயே வச்சு
வேதனைப்படுறீங்கன்னு தெரியுது. இல்லேன்னா என்னோட பாரதி...
ரொம்பவே உருக்குலைஞ்சு போய்ட்டாருன்னு தெரியுதே. சின்ன
வயசுல சிறகடிச்சுப் பறந்துக்கிட்டிருந்த நீங்க... எப்படி... இப்படி
ஆனிங்க..."
நளினிக்குக் குரல் தொண்டையைப் பேசவிடாமல்
நெருக்கியது. வலிய சிரிப்பை வரவழைத்தபடி பாரதி, "என்ன!...
சோகம!... எனக்க! பரவாயில்லியே... நளினி... நீ... எப்ப
டாக்டருக்குப் படிச்சே?..."
நளினிக்குப் பாரதியின் சிரிப்பு... கோபத்தை வரவழைக்காமல்
சோகத்துடன்... உதட்டைக் கடித்தபடி... 'இதுக்கெல்லாம்
டாக்டருக்குப் படிக்கத் தேவை இல்லை பாரதி.''

பொழுது புலருமா...?
68

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"அப்புறம்... கண்ணு மட்டும் நல்லாத் தெரிஞ்சா
போதும்ங்கிறியா? பைத் த ியக் க ாரி.. நீ நினைக் க ிறப்புல
ஒண்ணுமில்லை. நான் நல்லாத்தான் இருக்கேன். பணம் , கார்"
பங்களா, குடும்பம்னு இருக்காங்க. எனக்குக் கீழே சுமார் , இருநூறு
பேர் வேலை செய்றாங்க. வாழ்க்கையில இதைவிட எனக்கு வேற
என்ன வேணும் சொல்லு? நான் நளினியைக் கேட்க வேண்டிய
கேள்வி" பாரதி, சிலவற்றை உண்மைக்குப் புறம்பாகக் கூறினாலும்,
வார்த்தையில் உயிரில்லை. பாரதி சாலையில் கவனத்தைச்
செலுத்தியபடி காரை ஓட்டிச் சென்றான். நளினியிடம் பேச்சுக்
கொடுத்துக்கொண்டே, சிங்கப்பூரை ஒரு வலம் வந்தான்.
இரண்டு பேரிடமும் மெளனம் நிலவியது.
மறுபடியும் பாரதியே பேசினான்.
"நளினி, நீ என்னைப் பத்தி அவசியம்... தெரிஞ்சுக்கணுமா?..."
''பாரதி!... நீங்க இஷ்டப்பட்டா சொல்லுங்க. கஷ்டம்னா
வேணாம்."
“சரி... நீ என்னைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு என்ன
செய்யப்போறே?... என்னைக் கல்யாணம் பண்ணிக்கிடுவியா?...”
திடீரெனக் கேட்ட பாரதியின் கேள்வி; நளினியைத் திகைக்க
வைத்தது. "பாரதி!..." என்றாள் ஆதங்கத்துடன். ஏனா!...
அவளுக்குக் கோபமே வரவில்லை.
"என்ன நளினி திகைச்சுப் போயிட்டியா? ஏன்... நான் இப்ப...
உன்னைக் கல்யாணம் பண்ணக்கூடாதா?... இல்ல... நான் கேட்கக்
கூடாத கேள்விய கேட்டுட்டேனா?"
தன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுதான் பாரதி பேசுகிறானா?
நளினி... ஒரு நிமிஷம் குழம்பிப் போனாள்.
“என்ன... பதிலைக் காணோம்." பாரதி... நளினியைச்
சீண்டினான்.
“பாரதி!... நீங்க ஒண்ணும் தப்பாக் கேட்டதா நான்
நினைக்கலை. ஏன்னா... அந்த நிலையை நான் தாண்டி வந்துட்டேன்"
என்று கூறியவள்... "ஆனா நான்... கேட்ட கேள்விக்கு நீங்க
இன்னு பதிலே சொல்லலியே நளினி இப்படிக் கூறிக்
கொண்டிருக்கும்

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"நளினி... இடம் வந்துடுச்சு. முதல்ல இறங்கு சொல்றேன்..."
என்றான். நளினிக்கு வசதியாக கார் கதவைத் திறந்து வைத்து,
இறங்கச் சொன்னான். நளினியும் மெதுவாக இறங்கினாள்.

அத்தியாயம் 9

ஜிலு ஜிலுவென்ற கடற்காற்று. மாலை நேரத்து மஞ்சள்


வெயில் உடம்பில் பட்டும் படாமலும் விழும்போது, உடம்பே
தங்கம்போல் ஜொலிப்பது போலிருந்தது. கடற்காற்று இதயத்தை
வருடும்போது மனதுக்குச் சற்று இதமாக இருந்தது. இனம் புரியாத
இன்பம், இருவர் மனத்திலும் இத்தனைக் கால சுடைகளையும்
குறைப்பதுபோல் இருந்தது.
பாரதி... மிக அருகாமையில் நளினியுடன் நடந்தபடி, கடற்கரை
மணலைத் தன் கால்களால் தள்ளிய வண்ணம் நடந்து சென்றது
நளினிக்கு அந்நாளில் கம்பத்தில், பாரதி நண்பர்களுடன் துறு
துறுன்னு ஓடியாடிப் பந்து விளையாடிய இளம் பிராயத்து ஞாபகம்
தான் வந்தது. அவளையும் அறியாமல், க்ளுக் எனச் சிரித்தாள்.
"என்ன நளினி, திடீர்னு சிரிக்கிறே?
ம்... இல்ல இப்ப உங்களுக்கு ஒரு நற்பது வயது
இருக்குமா?"
"உனக்கு முப்பத்தஞ்சு வயசுன்னா, எனக்கு நாற்பது
இருக்குமே ஏன்?..." கேள்வி கேட்டபடி, மறுபடியும் தன் கால்களால்
மணலை அள்ளியபடி நடந்து கொண்டிருந்தான்.
"இதோ!... சின்னப்புள்ள மாதிரி மணலைத் தள்ளிக்கிட்டே
போறீங்களே; அதைப் பார்த்ததும்" என்று நளினி மேலே
தொடர்வதற்குள்,
"அதைப் பார்த்ததும் உனக்குக் கம்பத்துல நாங்க
விளையாடினதெல்லாம் ஞாபகத்துக்கு வந்திருக்குமே."
குளிர் உடலை நடுங்க வைத்தாலும், காற்றில் நளினியின்
சுருண்ட கூந்தலின் ஒரு பகுதி; நெற்றியில் விழுந்து ஆடிக்
கொண்டிருந்த அழகை ரசித்தபடி. "அது மட்டுமா! வேறு
ஞாபகங்க்ளும் வரணுமே..." குறும்பாகக் கேட்டான்.
கம்... எல்லாமே... கண்முன்னால வந்து... மனசை ரொம்பவுமே
கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்கு" என்றான்.

பொழுது புலருமா?...
70

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"உஸ்... அப்பப்பா என்ன குளிர்... என்று வானத்தைப்
பார்த்தபடி... எல்லாம் மேகம் போல் கலைஞ்சு போயிடுச்சே"
என்றான். பாரதி... நளினி பார்க்காத நேரம் தன் நெஞ்சை
அழுத்தினான். வேதனைத்தீயில் பல ஆண்டுகளாக வெந்துருகும்
வேத்னை அவனுக்குத்தானே தெரியும்.
"பாரதி!... இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்?" பாரதியுடன்
எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் அவளால் நடக்க முடியும்.
ஆனாலும், ஒரு இடத்தில் உட்கார்ந்து, அவனைப் பற்றி அறிந்து
கொள்ளணுமின்னு துடித்தாள். இதையே பாரதியும் நினைத்தான்.
"அதோ!... அந்த சிமெண்டுப் பெஞ்சில் யாரும் இல்லை. வா...
அங்கேயே போய் உட்காந்துடுவோம்" என்று இருவரும் அந்த
பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டனர்.
பெஞ்சில் கல்மேல் கால்போட்டு வசதியாக அமர்ந்து
கொண்ட பாரதி; "நளினி!... ரொம்பக் குளிருதா?..." என்றான்.
"ம் என்றவள், பெஞ்சின் ஓரத்தில்... சற்றுத் தள்ளியே
அமர்ந்து கொண்டாள்.
“நளினி!... எனக்கும் கூட இந்த மாலை நேரம் ஆரஞ்சுக்கலர்
அள்ளித் தெளிச்சதுபோல், அந்தி வானத்தின் அழகு, என்னையும்
அந்தப் பழைய கம்பத்து வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தையும்
நினைவுபடுத்துது" பாரதி நளினியைப் பாராமலே, தொடர்ந்து
வானத்து வண்ண ஜாலங்களை ரசித்தபடி,“இப்படித்தான் கம்பத்துல
ஒரு தடவை அந்திவானத்தின் அழகை ரசித்தபடி என் வீட்டு
ஜன்னல்ல நின்னுக்கிட்ட இருக்கும்போதுதான் மின்னல்
விட்டுப்போல், தோன்றி மறைந்த அந்த எதிர் வீட்டு ஜன்னல்
அழகியின் அழகில் சொக்கிப் போனவன்தான், இன்னும் அந்த
மயக்கத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கிறேன்" என்றான்
சோகத்துடன். “உன்னோட அழகு என்னை மயக்கிடுச்சு, அந்த
அழகான கடல்ல இன்னும் மூச்சடக்கி முத்துக்குளிச்சிக்கிட்டு
இருக்கேன். ஆனா... முத்துதான் இன்னும் கிடைக்கலை" என்றான்.
“பாரதி! உங்களுக்குக் கவிதை கூட வருமா?" என்றாள்.
"ஏன்?
“இல்ல, கற்பனை வனம் ரொம்பப் பிரமாதம்" எனக் கூறிச்
சிரித்தாள்.... அது மட்டுமல்ல, வானத்தை அண்ணாந்து பார்த்தபடி;

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அவன் அசாத்தியமாகப் பேசிய தோரணை, நளினிக்கு
வியப்பாயிருந்தது.
"நளினி, இளமையில் நடந்த எதையுமே என்னால
மறக்கமுடியாது. முதல் காதல், முதல் முத்தம், முதல் ஸ்பரிஸம்னு
சொல்லுவாங்களே... அதைத்தான் இன்றளவும் என்னால
மறக்கமுடியாது. கொல்லையில் நீ மயக்கம் போட்டு விழுந்தது, நான்
உன்னைத் தூக்கிக்கிட்டு வந்து உங்க வீட்டுல கொண்டு வந்து
விட்டது. நான் உனக்கு முத்தமிட்டது, உன்னைக் கட்டியணைச்சது,
அப்புறம் உங்கப்பாக்கிட்ட பொண்ணு கேட்டுப் போய்
அவமானப்பட்டது, கடைசியில ராவோடு ராவா, கம்பத்தை விட்டுப்
போனது எல்லாம் மறக்கக்கூடிய விஷயங்களா?...
"உன்னை மறக்க முடியாம தவிச்ச நாட்கள் ஒவ்வொண்ணும்,
என் இதயத்தை சல்லடைய அரிச்சுக்கிட்டிருந்தது
கரையான்கள்தான்... நான் சொன் ன ா நீ நம்புவியா? ஆமா!... நளினி
உங்கிட்ட நான் ஒண்ணு கேக்கணுமின்னு இருந்தேன். உன்னைப்
பெரிய குடும்பத்துல வாழ வைக்கப்போறேன்னு உங்கப்பா
சொன்னாரே, என்னைவிட ஒரு பெரிய கோடீஸ்வரனுக்கு
வாழ்க்கைப்பட்டு நீ சந்தோசமா இருப்பேன்னு நெனச்சேன். ஏன்!...
என்ன ஆச்சு?... நீ இப்படி தெருக்கோடிக்கே வந்து... சமையல்
வேலை செஞ்சுக்கிட்டு இருக்கே?" மனசைக் கல்லாக்கிட்டு கேட்டே
விட்டான் பாரதி, இத்தனையையும் பாரதிக்கு மனசும் இப்போ
லேசான மாதிரி இருந்தது. தான் சாவதற்குள் இந்த ஒரு
கேள்வியைக் கேட்கணுமின்னு இருந்த பாரதிக்கு இப்படி ஒரு
சந்தர்ப்பம் கிடைக்குமின்னு நினைத்துப் பார்க்கவே இல்லை.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த நளினியின் சின்ன மனம்
தாங்குமா? பாரதியின் இடி போன்ற இந்தக் குற்றச்சாட்டுகளை,
அடுக்கடுக்கான சோதனைகளை, வாழ்க்கையில் அன்றாடப்
போராட்டங்களில் சிக்கித் தவிச்சு, சிதைந்த ஓவியமாய்ச்
சின்னாபின்னமாயிருப்பவள் வாழ்க்கையில் திசை தெரியாமல்,
அலக்கழிக்கப்பட்டு இருப்பவள்... பாரதி வார்த்தைகளால் வேல்
கொண்டு குத்திக் கிளறும்போது, அந்த நொந்து போன மனம்,
ரணமாகாமல் வேறு என்ன செய்யும்...
“போதும் பாரதி!... போதும்... இதுக்கு மேல எதையும்
பேசிடாதீங்க, அம்மா.... தாங்காது... பாரதி... நான் செத்துடுவேன்"

பொழுது புலருமா?...
72

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


எனத் தன் இருகைகளால் முகத்தில் அறைந்தபடி கதறியே
விட்டாள். இதைச் சற்றும் எதிர்பாராத பாரதிக்கு அதிர்ச்சியைக்
கொடுத்தாலும் ஏனோ.... கதறி அழும் நளினியைத் தேற்ற
வேண்டுமெனத் தோன்றவில்லை. நல்லா அழட்டும். மனசுல உள்ள
பாரம் குறையும் மட்டும் அழட்டும். இந்த இருபது வருஷமா
தேற்றுவாரின்றி அவனும் அழுதுக்கிட்டுத்தானே இருக்கிறான்.
முகத்தை மூடியவாறு அழுது கொண்டிருந்தவளைத் தன்
கையால் தொட்டு விலக்கினான். அவளின் மஞ்சள் முகம்
அழுதழுது சிவந்திருந்தது. நளினி தலையைக் குனிந்து கொண்டாள்.
கண்ணீர் ஊற்றுபோல் கன்னங்களில் வழிந்தோடியது. பாரதியின்
மனமும் இளகியது. இத்தனை வருஷத்துக்குப் பிறகு கண்டுபிடித்துச்
பேச வந்தவளை அழ வைத்து விட்டோமேன்னு வேதனைப்
பட்டான்.
பாரதி... நளினியின் முகத்தை நிமிர்த்தி வழியும் கண்ணீரைத்
துடைத்தபடி, “நளினி... உன்னைத் தொடும் உரிமை எனக்கு
இருக்கான்னு தெரியலை. எனக்கு வேற வழி தோணலை.
தவறுன்னா என்னை மன்னிச்சிடு நளினி." குரல் கரகரத்து, குரல்
வளையை நெரித்தது.
உடனே நளினி... 'என்னோட பாரதிக்கு இல்லாத
உரிமையான்னு அவன் கரத்தை எடுத்து, தன் கன்னத்தில் வைத்துத்
தோளோடு சேர்த்துக் கொண்டாள். தானமுடியாத பாரதி, அவளைத்
தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். சிறிது நேர அந்த
அணைப்பு, இருவரின் சோகங்களுக்கும் வடிகாலாக
அமைந்ததென்று சொல்லலாம்.
நேரம் கடந்தது. தன் உணர்வு வந்த நளினி... தீயை மிதித்தவன்
போல் சட்டெனப் பாரதியிடமிருந்து விலகினாள்.
"பாரதி!... என்னை மன்னிச்சிருங்க. இன்னும் கொஞ்ச நேரம்
நான் இங்க இருந்தா, உங்களோட நானும் கரைஞ்சு போயிடுவேன்.
அதனால் அப்ப நான் வர்றேன்- என்று போகத் திரும்பியவளை,
பாரதி... கையைப் பிடித்துக் கொண்டான்.
"நளினி, இனியும் என்னை விட்டுட்டுப் போயிடாதே. உன்னால
உருக்குலைஞ்சு போன இந்த பாரதி,உயிரோடவே இருக்கமாட்டான்
இது சத்தியம்" என்றான்.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


உடனே நளினி பாரதியின் வாயைப் பொத்தியபடி "வேணாம்
பாரதி, அந்த வார்த்தைய இன்னொரு தரம் சொல்லாதீங்க. சாக
வேண்டிய நானே உயிரோடு இருக்கும்போது... உங்களால பல
குடும்பங்கள் வாழுதே... அதுக்காகவாவது நீங்க வாழ்ந்தே
ஆகணும். பாரதி!... இனியும் வளர்த்தாம... என்னைப் பத்திய
விஷயங்களை நானே சொல்லிடுறேன்." மறுபடியும் நளினி அந்த
சிமெண்ட் பெஞ்சிலேயே அமர்ந்து கொண்டாள்.
"நீங்க மறுபடியும் அப்பாகிட்ட பொண்ணு கேட்டு,
அவமானப்பட்டு கம்பத்தைவிட்டுப் போனதும், நான் எப்படித்
துடிச்சுப்போனேங்கிறது என் மனசோட புதைஞ்சு போன ரகசியம்.
ரொம்பப்பேரு, நீங்க என் அப்பாவாலத்தான் கம்பத்தை விட்டுப்
போய்விட்டதாகப் பேசிக்கிட்டாங்க... ஒருநாள் எதார்த்தமாக
சுந்தரம் மாமாவ பார்க்க நேர்ந்தப்ப, என்ன காரணத்தாலோ நீங்க
கடிதம் எழுதி வச்சிட்டுப் போய்ட்டதா சொன்னார். நீங்க
மாமாகிட்டேயும் எதுவும் சொல்லலேன்னு சொன்னார். அப்புறம்
சுந்தரம் மாமாவும் ரொம்ப நான் அங்கே இருக்கலை. ஒருநாள்
திடீர்னு அவரும் ஊருக்குப் போயிட்டதா பேசிக்கிட்டாங்க. பிறகு
ஒருநாள் அப்பா நெனச்சமாதிரி, பெரிய குடும்பம், பதினைஞ்கபேர்
கொண்ட கூட்டுக் குடும்பத்துல மூத்த மருமகளாவே நான்
வாழ்க்கைப் பட்டேன்.
இதைச் சொல்லும்போது, நளினிக்குத் தொண்டை அடைத்தது.
பாரதிக்கு ஏனோ, மனம் பதைபதைத்தது. அவனாலும் எதுவும்
பேசமுடியவில்லை. அந்த நேரம் ராமசாமி நேரில் வந்திருந்தால்...
அவன் கண்களாலே அவரைப் பொசுக்கி இருப்பான் போலிருந்தது
அவன் பார்வை... நளினி தொடர்ந்தாள்.
"பாரதி... ஒரு தூக்குக் கைதிக்குக்கூட உன் கடைசி ஆசை
என்னான்னு கேட்பாங்க, என் அப்பாவுக்கு நான் அந்தக் கைதிய
விடக் கேவலமாகப் போய்ட்டேன். அந்தஸ்து, கெளரவம்னு
என்னை வளர்த்த அப்பா... இந்த ஒத்த மகளுக்கு, கல்யாணத்துல
விருப்பமான்னு கூடக் கேட்கத் தோணலை."
"உன் அப்பா என்ன மனுஷனா?... சீ...'' என்றான் வெறுப்புடன்.
"காலம் பூரா கட்டுப்பெட்டியா, பயந்து பயந்து வாழ்ந்ததுனால,
புகுந்த வீட்டிலேயும், அவர்கள் செஞ்ச கொடுமைகளை
சகிச்சுக்கிட்டு, அடிமைபோல வாழப் பழகிக்கிட்டேன்."

பொழுது புலருமா?.
74

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


“ஏன்! ... உன்... புருஷன் எதுவுமே சொல்றது
புருஷன்னு சொல்லும்போதே, பாரதிக்கு வேப்பங்காயாய்க்
கசந்தது. "புருஷனா அவன்?... அவன் என்னைத் தாலி
கட்டினதோட... கடமை முடிஞ்சுதுன்னு, வேற பொண்ணோட
குடித்தனம் பண்ண வீட்டை விட்டே போய்விட்டான், பிறகுதான்
தெரிஞ்சுது, அவனுக்கு விருப்பமில்லாத இந்தக் கல்யாணத்தை,
வற்புறுத்திப் பண்ணி வச்சிருக்காங்கன்னு. விஷயத்தைக்
கேள்விப்பட்டு, ஒருநாள் அப்பா என்னைப் பார்க்க வந்தப்ப...
தப்புப் பண்ணிட்டேன்னு தலையில அடிச்சுக்கிட்டாரு. அந்த
நிலைமையிலக்கூட என்னால அவர்கிட்ட எதிர்த்துப்பேச முடியலை.
அழத்தான் முடிஞ்சது."
"அவரோட கெளரவத்தைக் காப்பாத்திக்க, உன்னைப் பலி
கடாவா ஆக்கிட்டாரு, கேட்கக்... கேட்க பாரதிக்கு நெஞ்சே
வெடிச்சிடும் போலிருந்தது. "பாவி... பாவி..." என்றான்.
நளினி... அநியாயமா உங்கப்பா கண்ணத் தொறந்துக்கிட்டே
பாழுங் கிணத்துல தள்ளிட்டாரே" என்று கோபமாகக் கூறினான்.
“கல்யாணமகி அஞ்சு வருஷமாகியும், அன்னிக்குப் பூத்த
பூப்போல காலத்தை ஓட்டிட்டேன். அதுகூட எனக்குப் பெரிய
வருத்தமில்லை. மனசுல ஒருத்தரை சுமந்துகிட்டு, பேருக்கு
இன்னொருத்தன் கட்டின தாலிய சுமந்துகிட்டு இருக்கிறது. ஒரு
வகையில் எனக்கு அசிங்கமாக்கூட இருந்துச்சு. ஒருநாள்
விவாகரத்து நோட்டீஸ் ஒண்ணு நான் புருஷன் வீட்டுல இருக்கும்
போதே வந்துடுச்சு... விதியேன்னு கோர்ட்டுக்கு போய் அதையும்
முடிச்சிட்டு. விவாகரத்து பத்திரத்தை மட்டும் எடுத்துக்கிட்டு,
உடுத்திய துணியோட அப்பா வீட்டு வாசல்ல போய் நின்னேன்."
"உன் மாமனார், அத்தை, மத்தவங்க யாரும் உனக்காகப்
பரிஞ்சு பேசலியா?..." என்றான் பாரதி.
"அவுங்களும் என்னை ஒரு மருமகளாவா நடத்தினாங்க?
சம்பளம் இல்லாத உயர்மட்ட வேலைக்காரியாத்தான் நான் அந்த
வீட்டுல இருந்தேன். கல்யாணம் பண்ணிப் போனதுமே; அப்பா
எனக்குக் குடுத்த சீர்வரிசையான நகைங்க, பாத்திரபண்டங்க,
புடவை, துணிமணிங்க எல்லாத்தையும் புடுங்கிட்டாங்களே."
"அதப்பத்தி நீயோ, உன் அப்பாவோ எதுவும் கேக்கலியா?..."

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"என்னைத்தான் எதிர்த்துப் பேசமுடியாத ஒரு கோழையா
வளர்த்துட்டாரே பாரதி. எனக்கு வாழ்க்கையே போச்சு. இனிமே
இதுகளைத் திருப்பிக் கேக்குறதாலே இழந்த என்னோட வாழ்க்கை
திரும்ப வரப்போகுதா என்ன?... இதே ஏக்கத்துல அப்பா
ரொம்பநாள் உயிரோட இருக்கலை. ஒருநாள் ஹார்ட்
அட்டாக்குன்னு படுத்தவருபிறகு எழுந்திருக்கவே இல்லை," இதைச்
சொல்லும்போது நளினியின் குரல் கரகரத்தது...
"அப்பா போன உடனே, என்க்கு திடீருன்னு எல்லாத்தையும்
இழந்தது போல் ஆயிடுச்சு. இருந்த பணம் கல்யாணத்துலேயும்
அப்பாவோட இறுதிச்சடங்குலேயும் கரைஞ்சு போயிடுச்சு. அடுத்து
என்ன செய்றதுன்னு புரியலை. வேலைக்குப் போகணுமின்னு
இருந்தப்ப அம்மாவுக்கு வாதம் அடிச்சு நடக்கமுடியாம,
பேசமுடியாம படுத்த படுக்கையாயிட்டாங்க ரெண்டு உயிர்
வாழணும், சாப்பிடணும், வீட்டுச் செலவும் இருக்கு, அம்மாவ இந்த
நிலையில விட்டுட்டு எப்படி வேலைக்குப் போக முடியுமின்னு
யோசிச்சுக்கிட்டு இருந்தேன். நல்ல வேளையா, அம்மாவோட
தங்கச்சி கைகொடுத்தாங்க, நானும், அம்மாவும் சித்தி வீட்டுல
போய்த் தங்கிட்டோம், வீட்டை அரசாங்கத்திடமே திருப்பிக்
குடுத்திட்டோம். அம்மாவோட மருந்து செலவுக்கும், நாங்க
குடியிருக்கிறதுக்கும் பணம் வேணுமேன்னு, சமையல் வேலை
செஞ்சு அஞ்சு வருஷம், எப்படியோ அம்மாவைப்
பாத்துக்கிட்டேன். ஒருநாள் அம்மாவும் என்ன விட்டுட்டுப்
போய்ட்டாங்க. சித்தி வீட்டிலேயும் கஷ்ட ஜீவனம். எனக்கு ஒரு
பாதுகாப்பு வேணுமேன்னு அங்கேயே ஒண்டிக்கிட்டேன்.
அங்கேயும் பணம் குடுத்தாத்தான் இருக்கமுடியுங்கிற நிலைமை.
பாரதி... இந்த இருபது வருஷமா நானும்... உழைச்சு உழைச்சு...
ரொம்ப அலுத்துப் போய்ட்டேன்." கண்களில் நீர் மல்க... "பாரதி...
எனக்கும்... எனக்கும்... ஓரு ஓய்வு வேணும் பாரதி... ஓய்வு
வேணும்"- நளின கதறிவிட்டாள்.
ஒன்றுவிடாமல் அத்தனையும் கேட்ட பாரதி... இத்தனை
சுமைகளை மனசுல சுமந்துகிட்டு எப்படி வாழ்ந்தா? ஒரு நிமிஷம்
பாரதி சிலையாகிப் போனான். பாவிங்க, என் அழகுச்சிலையை
அலங்கோலமாக்கிட்டாங்களே... "நளினி. நீ
கஷ்டப்படுற நேரத்துல கூட பாதியில விட்டுட்டுப்போன இந்தப்
பாவிய பார்க்கணுமின்னு தோணலியா?..." தவிப்புடன் பாரதி
கேட்டான்.

பொழுது புலருமா?...
76

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"பாரதி... நீங்க நல்லா இருக்கணும். மனைவி, குழந்தைன்னு
குடும்பத்துல சந்தோசமா இருப்பீங்க. நீங்களாவது நல்லா
வாழணுமின்னுதான் நான் உங்களைத் தேடி வரணுமின்னு
நினைக்கலை... இவ்வளவு கஷ்டப்படுறாளே, இன்னோர்
கல்யாணமாவது பண்ணி இருக்கலாமேன்னு, நீங்க கேக்க
நினைக்கலாம்...
"ஒரு கல்யாண வாழ்க்கையிலேயே இன்னும் நான் கரை சேர
முடியாம போயிட்டேன் இனி இன்னொரு வாழ்க்கையைப் பத்தி
நினைக்கவே எனக்குப் பயமா இருந்துச்சு. அப்பப்பா!... போதும்...
போதும்... பத்துத் தலைமுறைக்குப் போதும்னு ஆயிடுச்சு; நான்
பட்ட பாடு பாரதி... இதுதான் சீரழிஞ்சுபோன என்னோட வாழ்க்கை.
என்னைப் பத்தி நான் சொல்லிட்டேன். இப்ப என் மனசுல உள்ள
பாரமும் குறைஞ்ச மாதிரி இருக்குது...
"சரி நீங்க எப்படி?... உங்க மனைவி, பிள்ளைங்க எல்லாம்
எங்க இருக்கிறாங்க? இப்ப உங்க பையன் ராணுவத்தில்
இருப்பானே... ஏன் உங்க பொண்ணுகூட இப்ப யுனிவர்சிட்டில
படிக்கணுமே என்ன பாரதி... நான் சொல்றது நெஜமா இருந்தா...
எவ்வளவு சந்தோஷப்படுவேன் தெரியுமா? பாரதி!... உங்களுக்கு
எத்தனை குழந்தைங்க இருக்கிறாங்க?" மிகுந்த ஆவலுடன்
கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.
பைத்தியக்காரி, உண்மை புரியாம அடுக்கடுக்கா கேள்வி
கேட்கிறாளே என்னைப்பத்தின உண்மை தெரிஞ்சா
தாங்குவாளா?...
“என்ன பாரதி... பேசாம என்ன யோசிக்கிறீங்க? நான் தப்பா
ஏதாவது கேட்டுட்டேனா?..." என்றவள்; மறுபடியும் "ஆமா...
பாரதி... உங்க மனைவி ரொம்ப... ரொம்ப அழகா
இருப்பாங்களா?..." ஒரு குழந்தையைப் போல் கெஞ்சினான்.
"ம்... உன்னைப்போல அழகா இருப்பா. இப்ப
மகாராணியாட்டம் இருக்கா."
"அப்படியா! பழைய ஆர்வமில்லாமல் இருந்தது அவள்
குரல்.
“ஏதேது... என்னைப்பத்தி சொல்லாட்டி விடமாட்டே
போலிருக்கு" என்றான் விளையாட்டாக. "ஆமா!... என் மனைவி

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அழகா, ராணியாட்டம் இருக்கான்னு சொன்னதுக்கே, உன் முகமே
சரி இல்லை... என் கதையைச் சொன்னா தாங்குவியா?..." என்றான்.
"பாரதி!... நீங்க சொல்றது தவறு. எனக்கு இந்த வாழ்க்கையில
எதிர் நீச்சல் போட்டு வாழத்தெரியலை. நான் கோழையா
வளர்க்கப்பட்டதால, என்னால மத்தவங்ககிட்ட போட்டி போட்டு
வாழ முடியலை. எதுவும் பயம், எப்பவும் பயம்னு வாழ்ந்தேன்.
ஆனா, நீங்க அப்படி இல்ல. தைரியமா... கம்பத்தை விட்டு
வெளியேறி... வாழ்க்கையில் பெரிய வசதிகளோடு,
வெற்றிக்கனியைப் பறிச்சுட்டீங்க. அதுதானே உண்மை. அதனால,
நீங்க என்ன சொன்னாலும் நான் தாங்கிக்கிடுவேன். நீங்க
சந்தோசமா இருந்தா நான் அதைவிட சந்தோசப்படுவேன்" என்ற
நளினி... பாரதி என்ன சொல்லப் போகிறானோ என்ற ஆவலில்
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அத்தியாயம் 10

"நான் குடும்பத்தோட சந்தோசமா இருக்கேன்னு நீ


நினைச்சுக்கிட்டு இருந்தா... அது தப்பு நளினி."
"பாரதி! என்ன... என்ன சொல்றீங்க?..." நளினி பதறினாளாள்.
"ஆமாம் நளினி... பணத்தை சம்பாதிச்சு நல்ல வசதியா
வாழ்றேனே தவிர... என்னுடைய வாழ்க்கையில, நான்
உண்மையிலே தோத்துப் போயிட்டேன் நளினி."
"பாரதி, என்ன சொல்றீங்க? கொஞ்சம் புரியும்படியா
சொல்லுங்களேன்." நளினி அவசரப்பட்டாள்.
"நளினி... நான் சொல்லப்போறதைக் கேட்டா நீ
தாங்குவியோ... மாட்டியோ... எனக்குத் தெரியாது. ஆனாலும் நான்
அத்தனையையும் சொல்லித்தான் ஆகணும். மனசை தைரியப்
படுத்திக்க" என்றான். என்ன பாரதி புதிர் போடுறாரே...
என்னவாயிருக்கும்... கேட்கும் ஆவலில் நளினி பாரதியின்
முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள். நளினி சற்றுப்
படபடப்புடன் காணப்பட்டாள்.

பொழுது புலருமா?...
78

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"பயப்படாதே நளினிணு அதிர்ச்சியும் அடையாதே. உனக்கு
ஏதாவது புண்ணியமா இருந்தாப் பரவாயில்லை. புண்ணியம்
இல்லாத என்னோட விசயத்தைச் சொல்லி, உன்னோட மனசை...
மென்மேலும் வேதனைப்படுத்தக் கூடாதுன்னுதான் இன்னமும்
உன்கிட்ட சொல்ல மமழுப்பிக்கிட்டு இருக்கேன்."
"பாரதி வாழ்க்கையில நான் எத்தனையே அதிர்ச்சிகளைத்
தாங்கிகிட்டேன். அப்பா என் மனசே மரத்துப்போச்சு... இனி நீங்க
சொல்லப் போற எந்த விஷயமும் எனக்கு அதிர்ச்சியா இருக்காது."
"நளினி!... உன் வேதனைகளைத் தாங்கிகிட்டு, இந்த
அளவுக்குத் திறமையா நீ காலத்தை ஓட்டிட்டியேன்னு நெனச்சு,
எனக்கே ஆச்சரியமா இருக்குது. நேரமானாலும் பரவாயில்லேன்னு
என்னைப்பத்தி தெரிஞ்சிக்கத் துடிக்கிறியே.. ஏன்?..."
"பாரதி... இதே கேள்வியை என்னாலும் கேட்கமுடியும். ஏன்
நான் கேட்கலைன்னா? இத்தனை வருஷத்துக்குப் பிறகு மறுபடியும்
நான் உங்களைப் பார்ப்பேன்னு கனவுகூடக் காணலை.
வேதனையான நாட்கள் கூட என்னோட மனசுக்கு... என்னோட
உணர்வுகளுக்கு உணவு கொடுத்தது நாம சந்தித்த அந்தச் சில
நாட்கள்தான். முழுமையா சொல்லப்போனா, உங்களை நான்
நினைகாத நாளே இல்லேங்கலாம், காதலுக்கு இத்தனை பெரிய
சக்தி இருக்கிறதை நான் உணர்ந்தேன். நான் ஒண்ணும் மகான்
இல்லை பாரதி. நானும் நரம்பாலும், எலும்பாலும், சதையாலும் ஆன
ஒரு சாதாரண மனுஷிதானே, எனக்குன்னு ஒரு மனசு இருக்கு.
அதுல நீங்கதான் இருக்கிறீங்க. வாழ்க்கைப் போராட்டங்களில்
எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டேன்.. ஆனா... உங்க பிரிவைத்தான்
என்னால சகிக்க முடியலை. என்னோட வாழ்க்கை இடையிலே
முடிஞ்சு போனதுக்கு... கடவுள் எனக்குக் கருணை காட்டி
இருக்காரூன்னுதான் சொல்லுவேன். இல்லேன்னா இப்ப... இங்க...
உங்களை சந்திச்சிருப்பேனோ என்னவோ...?"
'ம்... எது எப்படியோ... நெறைய தத்துவமா பேசக்
கத்துக்கிட்டே என்னமோ ஒரு பழமொழி சொல்வாங்களே, பட்டை
தீட்டப் பட்டை தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும்னு சொல்லுவாங்க.
அதுக்கு உதாரணம் நீதான் போலிருக்கு" என்றவன்... "நளினி
என்னைப் பத்தி நீ தெரிஞ்சுக்கிறதுக்கு பெரிசா ஒண்ணுமில்லை
உன்னைக் கட்டிக்க எனக்கு எந்த தகுதியுமில்லேன்னும்... நான் ஒரு
அனாதைன்னும் பலமுறை உங்க அப்பா அவமானப்படுத்தினது

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


மில்லாம ஆளுங்களை வச்சு அடிச்சுடுவேன்னு சொன்னதுக்குப்
பிறகும் இந்தக் கம்பத்துல நாம இருக்கிறது அர்த்தமில்லேன்னுதான்
நான் கம்பத்தை விட்டு வெளியேறிளேன்...
பட்ட
"அந்த ராத்தியில நான் வெளியேறினப்ப, நான்
வேதனைகள் அப்பப்பா... சொல் ல ி மாளாது. போகும் போதாவது
உன்னைப் பார்க்க மாட்டோமான்னு அந்த ஜன்னலைப்பார்த்து
எப்படி ஏங்கியிருப்பேன்? எனக்குள்ள ஒரு வெறியேற்பட்டு, நான்
ஒண்ணுமில்லாதவன், அனாதைங்கிற வார்த்தைக்கு முற்றுப்புள்ளி
வைக்க நெனச்சேன். ஆத்திரமும், ஆக்ரோஷமும் சேர்ந்து,
என்னை ஒரு கடுமையான உழைப்பாளியாக்கிடுச்சு. அயராத
ஊர்ல
உழைப்பு என்னைப் பணக்காரனாக்கிடுச்சு. நான் ஊர்ல
இருக்கும்போதுதான் அப்பா இறந்து போனாரு. கொஞ்சநாள்
இருந்துட்டு, அம்மா தங்கச்சிகனை சிங்கப்பூருக்கு வரவழைச்சு,
வேலை
கல்யாணமும் பண்ணிக்குடுத்துட்டேன், ஓய்வு இல்லாம
என் ன ால சரிவர கவணிக் க
செஞ்சதுனால, வீட்டுல அம்மாவ
முடியலை. அதுதான் அவுங்களுக்குப் பெரியகுறையா இருக்கு."
"இப்ப அம்மா ஊர்ல இருக்காங்களா? இங்க இருக்காங்களா?"
''ரெண்டு தங்கச்சிங்க வீட்டுலேயும் மாறி மாறித்
தங்கிடுவாங்க.
"அப்போ ! நீங்க... உங்க மனைவி பிள்ளைங்களோட
இருக்கீங்கன்னு சொல்லுங்க, என்ன... என்றாள்.
"ம்... தனியாத்தான் இருக்கேன். ஆனா... மனைவி
குழந்தைங்கதான் இல்ல. இனிமேல்தான் எப்படீன்னு பார்க்கணும்."
சோகத்திலும் குறும்பு அவன் பேச்சில் தெரிந்தது.
அப்படீன்னா அவுங்க எல்லாம் ஊர்ல இருக்காங்களா?"
"ம்... ஏதோ ஒரு பழமொழி சொல்லுவாங்க.
தூண்டில்காரனுக்கு மிதப்புல கண்ணுன்ணு. அந்த மாதிரி இருக்கு
உன்னோட கேள்வி. இப்ப என்ன நான் கல்யாணம் பண்ணிட்டேனா?
இல்லயான்னு தெரியணும் அதுதானே." இதுக்கு மேலேயும் அவளை
சோதிக்க விரும்பாத பாரதி "நளினி எனக்குக் கல்யாணமின்னு
ஒண்ணு ஆனாத்தானே... மனைவி குழந்தைன்னு இருக்கும்.
நான்தான் கட்டை பிரம்மச்சாரி ஆச்சே... போதுமா?"

பொழுது புலருமா?...
80

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"போதும்... பாரதி! உண்மையிலே இப்பத்தான் நான் அதிர்ச்சி
அடைஞ்சுட்டேன். இப்ப... நீங்க சொன்னது உண்மையா?..."
நளினிக்கு பாரதியின் இந்த எதிர்பாராத பதில் அதிர்ச்சியை
மட்டுமல்ல; பேசமுடியாமல் குரல் நடுங்கியது, உதடுகள் துடித்தன.
"என்ன... பாரதி!... நீங்க இப்படிப் பண்ணிட்டீங்க." நளினி பாரதியின்
சட்டையைப் பிடித்தபடி அழுதாள்.
"ஏன்னா... ஊர் உலகத்துக்குத் தெரியாம நான் மனசாரக்
காதலிச்ச நளினிங்கிற தேவதைகூட... என் மனசையே
மாளிகையாக்கி அவளோட நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். எம்
மனசுல உள்ள உண்மையை... யாராலேயும் என்கிட்ட இருந்து
பிரிக்கமுடியாது பாரு."
பாரதி!... என்ன காரியம் பண்ணிட்டீங்க? வயல்ல விதைக்க
வேண்டிய நெல்லை அநியாயமா, பாறையில் விதைச்சுப்
பாழாக்கிட்டீங்களே..." நளினியின் இதயம் பதறியது. துடித்தாள்.
உன்னை மறக்க என்னால முடியலியே... அந்தப் பிஞ்சு
வயசுல உன்னை நான் மனசுல வரிச்சிட்டு, இன்னொருத்திய என்
பிணம் கூட தீண்டாதும்மா.'' பாரதிக்கு எங்கே தன்
கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீர்விட்டுக் கோழையாகிடுவோமோ
என்கிற பயம் வேறு. "கட்டுக்கடங்காத காதலை, நான் உன்கிட்ட
கொண்டதுனாலதான்... எத்தனையோ தடவை, அம்மா தங்கச்சிங்க
எல்லாரும் கல்யாணம் பண்ணச் சொல்லி வற்புறுத்தியும்
மறுத்திட்டேன். ஊர்ல மாமா பொண்ண கட்டிக்கலேன்னு
அவருக்கும் என்மேல வருத்தம். நான் கடந்து வந்த பாதையில,
எத்தனையோ சந்தர்ப்பங்கள் வலிய வந்தும், ஒருநாள் கூட என்
மனசு சலனப்பட்டதில்லை. நீ என் மனசுல எப்பவும் இருந்ததுனால,
எல்லாத்தையும் வெற்றியோட நான் கடந்து வந்துட்டேன். இனிமேல்
அது சாத்தியப்படுமான்னு தெரியலை" என்றதும்,
நளினி உடனே “ஏன் முடியாது?“ என்று வேகமாகக் கேட்டாள்.
'அதுக்கு நீதான் பதில் சொல்லணும்' என்றான் குறும்புடன்.
"நான் என்ன சொல்லணுமின்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க?..."
மேலே எதுவும் பேசத் தோணாமல் தலைகுனிந்தபடி மணலையே
பார்த்துக் கொண்டிருந்தாள்.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


சிந்தனையில் ஆழ்ந்திருந்த பாரதி... ஒரு மூடிவுக்கு வந்தவன்
போல் "நளினி நான் சொல்லப் போறதைக் கேட்டு, எப்படி நீ மூடிவு
எடுப்பியோன்னு தெரியாது. ஆனா... நீ எனக்கு நல்ல முடிவாச்
சொல்லுவேன்னு நம்புறேன். அந்த நம்பிக்கையில் கேக்கிறேன்"
என்றான் பீடிகையுன்.
நேரமாச்சு, பீடிகை போடாம விஷயத்தை சொல்லுங்க பாரதி."
"வந்து... ஒண்ணுமில்லை... வந்து... இதப்பாரு. நீ
விரும்பினாத்தான்"
"புரியலியே... என்ன சொல்ல வர்றீங்க?" புரியததுபோல்
கேட்டாள்.
'நளினி நீ விரும்பினா... நாம ரெண்டு பேரும் கல்யாணம்
பண்ணிக்கிடுவோமா?..." பாரதியின் மனத்தில் உள்ளது
வார்த்தையாய் வெளிப்பட்டது.
முதலில் பாரதி இது போன்ற கேள்வி கேட்டதும், அதா, பாரதி
விளையாட்டுக்குக் கேட்பதாகத்தான் எண்ணினாள். ஆனால்...
அவன் அதே கேள்வியை மறுபடியும் கேட்டதும்...
“பாரதி!... நிஜமாவா சொல்றீங்க?... என்னால நம்பவே
முடியலியே..."
“ஏன்? நம்பமுடியலை, நான் நிஜமாத்தான் கேக்கிறேன்.
வேணுமின்னா கிள்ளி விடட்டுமா?..." என்றான் விளையாட்டாக.
'ம்... வேணாம்... வேணாம்" என்றாள்.
''இப்படி திடீருன்னு உங்கிட்ட கேட்பது எனக்குத்
தவறாப்படலை யோசிச்சுப்பார்த்தா, வாழ்க்கையில நீதான் என்ன
பெரிய சாதனை செஞ்கட்ட? காலமும் போயிடுச்சு; வாழவேண்டிய
காலத்துல வாழ்க்கையைத் தொலைச்சுட்டு வந்து நிக்கிற...
"நானா... நீ இல்லாம வாழ்க்கையே இல்லேன்னு
இருந்துட்டேன். இருபது வருஷத்துக்குப் பிறகு தொலைஞ்சு போன
வாழ்க்கையைத் தேடிக் கண்டிபிடிச்சிருக்கோம். இதுல நாம இரண்டு
பேரும் சேர்ந்து வாழறதுல என்ன தப்பு இருக்கு? சொல்லு."
நளினி பதிலே பேசவில்லை, பாரதி தொடர்ந்தான்.

பொழுது புலருமா?...
82

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"காலங்கடந்து கடவுள் நம்ம ரெண்டு பேரையும் சந்திக்க
வைச்சிருக்கான்னா, ஏதோ... நாம புண்ணியம் பண்ணி யிருக்கோம்
என்று நெனச்சுக்க வேண்டியதுதான். என்ன... பதில் சொல்லு.
பேசாம இருந்தா என்ன அர்த்தம்? இப்பவும் நீ வாயைத்
தொறக்கலேன்னா இன்னும் ஒரு இருபது வருஷம் காத்திருக்கணும்.
அப்புறம் நீயும்... நானும் கிழவன் கிழவியாகிடுவோம். அப்புறம்
சங்கரா... சிவசங்கரான்னு போக வேண்டியதுதான்." பாரதி...
வாய்விட்டுச் சிரித்தான். அவன் சிரிப்பில் அவளும் கலந்து
கொண்டாள்.
"முதல்ல நீ இனிமேல் வேலைக்குப் போறதை விட்டுடு.பிறகு
நாளைக்கு நீ உன் சித்தி வீட்டுல இருந்து வந்துடு. நானும் தங்கச்சி
வீட்டுல இருக்கிற அம்மாவை அழைச்சிட்டு வந்துடறேன்.
முடிஞ்சுபோச்சுன்னு நினைச்ச நம்ம வாழ்க்கையை இனிமேலாவது
புதுப்பிச்சுக்கிட்டு சந்தோசமா இருப்போம். புரியுதா?' என்றான்.
"முடிஞ்சுதா? பேசி முடிச்சுட்டீங்களா! மூச்சு விடாம பேசி
முடிச்சுட்டீங்களே... இது சத்தியப்படுமா? ரெண்டாந்தாரமா
என்னைக் கல்யாணம் பண்ணிக்க உங்கம்மா முதல்ல சம்மதிக்க
வேணாமா?..."
"போச்சுடா. இன்னுமா சந்தேகம். இந்த சந்தேகப் புத்திய விட
மாட்டியா? நீ..."
பாரதி இப்படி வெளிப்படையாகப் பேசுவான்னு நளினி
நினைக்கவே இல்லை.
"என்ன பதிலைக் காணோம்... நான் என்ன சொன்னாலும்
அதிர்ச்சியே அடைய மாட்டேன்னு சொன்னியே, இப்ப இப்படி
திகைச்சுப் போய் நிக்கிறே?... என்ன... மறுபடியும் பயமா
இருக்கர்?... இப்ப நீ பயப்படுறதுக்கு, உன் அப்பா ராமசாமிதான்
உயிரோட இல்லியே. அப்புறம் என்ன யோசனை? ..."
சற்றுக் கோபமாக.
“பாரதி!... எனக்கு எந்த யோசனையும் இல்ல பாரதி...''
“அப்புறம் அம்மா என்ன சொல்லுவாங்களோன்னு
பயப்படுறியா? பைத்தியம்... எங் கம்மா ஒண்ணும் உங்கப்பா மாதிரி
இல்ல; எனக்கு எதிரா யாரும் பேசமாட்டாங்க, போதுமா?" என்றான்.
“பாரதி... நீங்க எதுக்கு இப்படி ஆவேசப்படுறீங்க?

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"என்னைக் கட்டிக்கிறியான்னு சொன்னதும், நான் திகைச்சுப்
போனது உண்மைதான், ஆனா!... இப்ப இல்லை, கடல்ல
தத்தளிச்சுக்கிட்டு இருக்கிறவனுக்கு ஒரு துடுப்பு கிடைச் சா,
சந்தோசப்படுவானோ... அந்த மனநிலையில்தான் இப்ப நான்
இருக்கேன். இந்த வயசுல இந்த நிலமையில, என்னோட
வாழ்க்கையில இப்படி ஒரு விடிவு காலம் ஏற்படுமின்னு நான்
நெனச்சுப் பார்க்கவே இல்லை. அதனாலதான், ஆனந்தத்துல நான்
வாயடைச்சுப் போய்விட்டேன்' என்றான்.
"நளினி!... புனிதமான நம்மோட காதலுக்கு, ஈடு இணை
எதுவுமே இல்லை. இருண்டு போன உள்ளோட வாழ்க்கைக்கு
ஒளியேற்ற விரும்புறேன் இருக்கிற கொஞ்ச காலத்தை, மனசார
விரும்புன உன்னோட கழிக்க விரும்புறேன் நளினி என்றான்.
மனம் நெகிழிந்து போன நளினி பாரதியின் கரங்களைப்
பற்றியவாறு 'பாரதி!... இளமைக் காலங்களை விட்டுட்டு,
நடுத்தர வயசுல உங்களுக்கு நான் என்ன ககத்த கொடுக்க
முடியுமின்னு நினக்கிறீங்க?..."
" நளினி... கேவலம் அழிஞ்சு போகப் போற இந்த
சுகத்துக்காக, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணுமின்னு
நினைக்கலே. அழகான என்னோட நிலவு முகத்தழகி, இனிமேலும்
உடல் நோக மத்தவங்ககிட்ட வேலைங்கிற பேர்ல அடிமையா
இருக்கக் கூடாதுன்னுதான் நான் இந்த முடிவு எடுத்தேன்."
"பாரதி, என்னுடைய நலத்துல அக்கறை காட்டுறதுக்கு,
உங்களைத் தவிர வேறு யாரு இருக்க முடியும்’ உங்களை நம்பாம
நான் வேறு யாரை நம்பப்போறேன். இந்த முடிவை நான் எப்பவோ
எடுத்திருக்கணும். என்ன செய்ய வாழ்க்கையில சீரழிஞ்ச
பிறகுதான் ஞானோதயம் பிறக்குமின்னு சொல்லுவாங்களே...
அது மாதிரி நிலையிலதான் கடைசியா உங்ககிட்ட
சேர்ந்திருக்கேன். பாரதி... இனி... உங்க முடிவுதான் என் முடிவும்.
நீங்க என்ன செஞ்சாலும் நான் கட்டுப்படுறேன். நீங்க எனக்கு நல்லது
தவிர, கெட்டது செய்ய மாட்டீங்கன்னு எப்பவோ தெரியும்." நளினி
பாரதியின் கைகளை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொள்கிறாள்.
"இதுபோதும் நளினி. எனக்கு நீ கிடைச்ச இந்த நிமிஷத்தில
இருந்து நான் செத்துடக்கூடாதான்னு நினைக்கிறேன்" என்று
கூறியபடி பாரதி நளினியை அணைத்துக் கொள்கிறான்.

பொழுது புலருமா?..
84

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"பாரதி!... நாம வந்து வெகு நேரமாச்சு. சித்தி... என்ன
எதிர்பார்த்துக்கிட்டு இருப்பாங்க, நாம போகலாமா?..." அவன்
நெஞ்சில் சாய்ந்தபடி கேட்கிறாள்.
பாரதியும்... அவளை விட்டுப் பிரிய மனமில்லாமல்... "ந்
வீட்டுக்குப் போய்த்தான் ஆகணுமா..." பாரதி... அவள் தலையை
வருடுகிறான்.
நாளைக்கு நீங்க எங்க வீட்டுக்கு வந்து எங்க சித்தி,
சித்தாப்பாக்கிட்டப் பேசி, முறைப்படி அழைச்சிட்டுப் போங்க.
என்ன..." என்றாள்.
"ம்... நீ சொல்றதும் சரிதான்... சரி... என்றபடி அவளை
அணைத்திருந்த தன் பிடியை விலக்கினான்...
நளினி அவன் நெஞ்சில் சாய்ந்தபடியே... "அப்ப... என்னை...
விட்டுடுங்களேன்" என்று முணங்குகிறாள்.
ம்... சரிதான்போ... அம்மா... தாயே, நீதான் விடாப்பிடியா
என்னைப் பிடிச்சுக்கிட்டு இருக்கிறே? ...“ என்றபடி
வெட்கம் மேலிட, அவனிடமிருந்து விலகுகிறாள் நளினி...
ஒரு குழந்தையைப்பால், அவள் தோளை அணைத்தபடி
பாரதி நடக்கிறாள். அவன் மனத்தில் ஆயிரமாயிரம் பட்டாம்
பூச்சிகள் பறப்பது போல் உணர்கிறான். நளினியும்
அணைப்பில் இனம்புரியா ஓரு சுகத்தில் திளைக்கிறாள்.
நளினியை சித்தி வீட்டில் விடும்பொழுது, மறுபடியும் பாரதி
அவளுக்கு நினைவூட்டுகிறான். "நளினி... நீ... உன் சித்திகிட்ட
எல்லா விஷயத்தையும் சொல்லிட்டுத் தயாரா இரு. நான் அம்மாவ
அழைச்சிட்டு வந்து முறைப்படி பேசி, உள்ள அழைச்சிட்டுப்
போறேன்" என்று சொல்லியபடி வீடு வந்து சேர்ந்தான்.

அத்தியாயம் 11
நடந்து முடிந்த பழைய சம்பவங்களால்... தூக்கத்தை இழந்த
பாரதி விடிந்து வெகு நேரமாகியும் எழுந்திருக்கவே இல்லை. காப்பி
எடுத்துக்கிட்டு பாரதியின் அறைக்கும்.
அலைந்து கொண்டிருந்தாள் வேலைக்கார லட்சுமி.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அந்நேரம் கைத்தொலைபேசி மணி ஒலிக்கவே வேகமாக
எழுந்தான் பாரதி.
பாரதியின் அலுவலக மேலாளர் போன் செய்திருந்தார்.
போனை எடுத்த பாரதி... மேனேஜர் பேசுவதைப் பொருட்
படுத்தாமல் "இதைப்பாருங்க பத்து நாளைக்கு நான் அலுவலகம்
வரமுடியாது. எல்லாத்தையும் நீங்க பாத்துக்கிடுங்க. ஏதாவது
முக்கியமான விஷயம் இருந்தா... போன் செய்யுங்க. மத்ததை நான்
வந்து பாத்துக்கிறேன்"னு, போனை வைத்துவிட்டுக் கடிகாரத்தைப்
பார்த்தான். மணி பத்து பதினைஞ்சாகி இருந்தது. "அடடா!..
ராத்திரியெல்லாம் பழைய சம்பவங்களைக் கற்பனை பண்ணித்
தூக்கம் வராம புரண்டுக்கிட்டு விடிஞ்சதுகூடத் தெரியாம இப்படி
கும்பகர்ணனாட்டம் தூங்கிட்டோமேன்“னு, புலம்பலுடன் குளியல்
அறைக்குள் நுழைந்தான்.
அவசர அவசரமாகக் காலைக்கடன்களை முடிச்சிட்டு,
உடைகளை மாத்திக்கிட்டு, வெளியில் வந்தபோது வேலைக்காரி
காலைப் பலகாரம் எடுத்து வச்சிக்கிட்டு, பாரதியைப் பார்த்தாள்.
புரிந்துகொண்ட பாரதி, "என்ன, மாத்திரை சாப்பிடலியான்னு
கேப்பே... இன்னிக்கு ஒருநாளைக்கு மாத்திரை சாப்பிடாட்டி, நான்
செத்துடமாட்டேன்" என்று சொல்லி முடிப்பதற்குள்...
"ஐயா! நீங்க இன்னும் பசியாறலீங்க... என்றாள்.
"எல்லாம் சேர்த்து மத்தியானம் வந்து சாப்பிட்டுக்கிறேன்"
என்றவாறு... மேலும், இதப்பாரு சுசிலா! அம்மா, தங்கச்சிங்க
எல்லாம் வந்துடுவாங்க வந்ததும் சாப்பிட்டு வெளியே போகணும்,
தயாரா இருக்கச் சொல்லு என்ன" சொல்லி முடித்து பாரதி
வெளியேறினான். மேலே எதுவும் பேசத் தோன்றாமல்
ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சுசிலா. யாரிடமும்
எதுவும் பேசாமல், தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருக்கும்
பாரதியின் முகத்தில், இத்தனை மகிழ்ச்சியை, அவள் வேலைக்கு
வந்து இந்த ஒரு வருடத்தில் இன்றுதான் பார்க்கிறாள்.
பீப்பிள்ஸ்பார்க் கட்டிடத்தில் இருக்கும் தம் கம்பெனி லாயரை
பார்த்து விஷயாத்தைக் கூறினான். பாரதி கூறிய விஷயம், அந்த
லாயருக்கே சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

பொழுது புஷமா?...
86

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"பாரதி!... இது ஒண்ணும் பண்டம், பலகாரம் விற்கும்
விஷயமில்லை. உயில், உங்க வாழ்க்கை... சொல்லப்போனா உயிர்னு
கூடச் சொல்லலாம். யார் பேச்சையும் கேட்டு, நீங்க இந்த முடிவுக்கு
வரலியே." லாயர் சந்தேகத்துடன் பாரதியைக் கேட்டார்.
"சார்!... நீங்க கேக்கிற இந்தக் கேள்விதான் எனக்கு சிரிப்பை
வரவழைக்குது. யார் பேச்சையும் கேக்க நான் ஒன்றும் சின்னக்
குழந்தை இல்லை. இது நான் எடுத்த திடீர் முடிவுமில்லை. நல்லா
யோசிச்சு தீர்க்கமா எடுத்த முடிவு. சொல்லப்போனா... நான் இந்த
முடிவு எடுத்தது, சம்பந்தப்பட்டவங்களுக்கே தெரியாது. சார்!
என்னோட உடல்நிலை உங்களுக்கே நல்லத் தெரியும்.
சாகுறதுக்குள்ள... நான் யாரைப் பார்க்க முடியாமப்
போயிடுமோன்னு நினைச்சேனோ, தெய்வாதீனமா அவளைப்
பாத்துட்டேன். நான் பட்ட வேதனைகள்கூட... அவளுக்குச்
சாபமாயிடுச்சோ... என்னவோ... கல்யாணம் ஆகி,
படாதபாடெல்லாம் பட்டு, பெத்தவங்களைப் பறிகொடுத்துட்டு, தன்
ஒரு சாண் வயிற்றுக்காக... யாருக்கோ அவ உழைச்சுப் போடுறது,
என் கண்ணுல ரத்தத்தையே வரவழைச்சிடுச்சு. ஒரு பாவமும்
அறியாத அவ... இனி வரும் காலங்களைக் கஷ்டமில்லாம
கழிக்கணும். அதுக்காகத்தான் நான் இந்த முடிவை எடுத்தேன்"
என்றான் பாரதி.
பாரதி சொன்னதை எல்லாம் கவனமாகக் கேட்ட லாயர்
கார்த்திகேயன், நீங்க சொல்றதெல்லாம் சரின்னாலும், நீங்க எடுத்த
இந்த முடிவை உங்க அம்மாகிட்ட சொன்னீங்களா?
முடிக்குமுன் பாரதி குறுக்கிட்டான். "சார் இது விஷயம்
என்னோட அம்மாவுக்கோ, ஏன்... என்னோட
சகோதரிகளுக்குக்கூடத் தெரியாது. ஏன் ன ா... இது என் அப்பா...
தாத்தா சொத்தோ இல்லை . ந னே
சம்பாதிச்சது. ஏற்கெனவே நான் அவளைக் கல்யாணம் பண்ணி
இருந்தாலும், எனக்குப் பிறகு... என் சொத்து அவளுக்குத்தானே
முறைப்படி சேரும்... நான் லேட்டா அவளைக் கல்யாணம்
பண்ணிக்கிறதாலே. நானே அவளை... எனக்குப் பிறகு எதுவுமே
இல்லாம ஆக்கிடக்கூடாது."
"அதுக்கில்லை பாரதி... உங்க உயிலை, அவுங்க பேருக்கு
எழுதி வெக்கக்கூடிய அளவுக்கு நம்ப வேண்டிய காரணம்தான்
என்ன?" லாயர் இடைமறித்தார்.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"ஏன்னா, அவ ரொம்ப நல்லவ சார், எனக்குப்பிறகு என்
அம்மாவ அவ நல்லாவே கவனிச்சுக்குவா அவ மேல எனக்கு
ரொம்ப நம்பிக்கை இருக்கு சார்...."
"உங்க அம்மா, தங்கச்சிங்களை விடவா?..."
"அப்படி இல்லை சார், உங்களுக்கு நல்லாத் தெரியும்...
என்னோட உடல் நிலைமை, எந்த நேரத்திலேயும் எதுவும் ஆகலாம்.
எனக்குப் பிறகு, அவ என்னோட அம்மாவ நல்லபடியா
கவனிச்சுக்கிடுவா. இதுல எந்தவித சந்தேகமுமில்லாம நான்
நம்பறேன்.... மேலும், நான் என் சகோதரிகளுக்கு, தாய்க்கு நான்
எந்தக் குறையும் வச்சதில்லை... இதுவரைக்கும் ஒரு நல்ல
அண்ணனா..."
"நான் விரும்பிய என் நளினி... பாவம், ஒரு அப்பாவி சார்.
நான் என் தங்கச்சிகளை நம்பாம இல்லை. அதுக்கு மேல... என்
நளினி ஒரு பாவமும் அறியாத நல்லவ. அவ, அப்பா செஞ்ச ஒரு
தவறால் வாழ்க்கைன்னா என்னான்னு அறியறதுக்கு முன்னே...
வாழ்க்கையை இழந்தவ. கடந்த இருபது வருஷமா துன்பத்தையே
சுமையாக் கொண்டவ. இங்க... நான் வசதியாக வாழறபோது... என்
உயிரு... எங்கோ ஒரு இடத்துல... கஷ்டம், கவலை, தோல்விங்கிற
பேருல ஊசலாடிக்கிட்டிருந்திருக்கா..."
லாயர் கார்த்திகேயன் பாரதி பேசுறதைக் கூர்ந்து
கவனிக்கலானார். சாதாரண ஒரு பொண்ணுக்காக... உயிலை
மட்டுமல்ல... தன் உயிரைக்கூட பாரதி... கொடுப்பார்
போலிஸக்கிறதே...
"சார்!... எனக்கு நெஞ்சு வலி இருக்கிறது நளினிக்குத்
தெரியாது. எனக்கு இந்த நோய் இருக்கிறது தெரிஞ்சும், அவளை
நான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னது, உடம்பு
சுகத்துக்காக இல்லை. எனக்கும், அவளுக்கும் காதலிச்ச ஒரு
காரணம் தவிர வேறு வலுவான ஒரு காரணமும் இல்லாம,
அவளுக்கு நான் இந்த உயிலை எழுதி வச்சா, அதை நிச்சயமா
ஏத்துக்க மாட்டா...
"அதனாலதான் கல்யாணம்ங்கிற ஒரு அணுக்கமான உறவு
இருந்தாகணுமின்னு, அவளைக் கல்யாணத்துக்கு சம்மதிக்க
வச்சேன். எனக்குப் பிறகு, என்னைச் சேர்ந்தவங்களாலேயும்,

பொழுது புலருமா?.
88

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அவளுக்கோ, அவனாலே என்னைச் சேர்ந்தவங்களுக்கோ எந்தப்
பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பிருக்காது.
"அதனால... இந்த வாரத்திலேயே சொத்துப்பிரச்சனைனயும்
முடிச்சிட்டு உடனே... கல்யாணத்தையும் முடிச்சிடலாமின்னு முடிவு
பண்ணி இருக்கேன்... இவ்வளவுக்கு மேல... உங்களுக்கு ஏதாவது,
தனிப்பட்ட கருத்து இருக்குதா சார்."
மெல்லப் புன்னகைத்த கார்த்திகேயன், "இல்ல... பாரதி... உங்க
நளினிய நீங்க தாலி கட்டின நேரம்... உங்களோட ஆயுசு ஏன்...
கெட்டியா இருக்கக்கூடாது... நிச்சயமா நீங்க நீண்ட ஆயுளோட
இருப்பீங்க... இருக்கணும்..."
“அப்படி இருந்துச்சுன்னா... என்னைவிட சந்தோசப்படுறவன்
யாராக இருக்கமுடியும். அப்பக்கூட... என் சொத்தை எல்லாம்
அவளுக்கு எழுதி வச்சிட்டனேன்னு நான் வருத்தமும் பட
மாட்டேன்..." என்று குறுக்கிட்ட பாரதி, தன் கருத்துகளை
வெளிப்படையாகவும், உறுதியாகவும் கூறினான். பாரதிக்கு லேசாக
மூச்சு இரைத்தது.
"ஓகே... பாரதி ... கூல் டவுன்... ரிலாக்ஸ்..." என்று
அமைதிப்படுத்திய கார்த்திகேயன் "பாரதி!... உங்களை ரொம்ப
வருஷமா நான் அறிவேன். எனக்குத் தெரிஞ்சவரை... நீங்க ஒரு
ஓய்வு ஒழிச்சலில்லாத தொழிலதிபர். ஒரு தொழிலை ஆரம்பிச்சு
இத்தனை வருஷமா வெற்றிகரம, தொய்வே இல்லாம நடத்திக்
கிட்டு வர்றதை நினைச்சுப் பலசமயம் நானே பிரமிச்சிருக்கேன்.
அப்படிப்பட்ட உங்களுக்குள்ளேயும் மென்மையான, அழகான,
ஆழமான காதல் உருவாகி, இத்தனை வருஷமா அது உங்களை
ஆட்டிப் படைச்சிருக்குதுன்னு சொன்னா... யாரும் நம்பமாட்டாங்க.
வயசும், அநுபவமும் உங்களை இது வரை
வச்சதில்லை. நீங்க ஒரு முடிவு எடுத்தா... அது நிச்சயமா நல்லா
ஆலோசிச்சுத்தான் எடுத்திருப்பீங்க. நானும் நம்பறேன். சரி... உங்க
விருப்பப்படியே பத்திரங்களைத் தயார் பண்ணி வைக்கிறேன்.
ரெண்டு பேரும் சேர்ந்து வந்து கையெழுத்துப் போட்டுட்டுப்
போயிடுங்க" என்றவர் "காதல் வாழ்க" என்றார் சிரித்தபடி.
மனச்சாந்தியுடன் லாயரிடமிருந்து விடைபெற்ற பாரதி...
மறுபடியும் காரை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்தபோது,
தயாராயிருந்த அம்மா, சகோதரிகளுடன் நளினியின் சித்தி

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


வீட்டுக்குச் சென்றான். மனம் காற்றைப் போல் லேசாய் இருப்பதை
உணர்ந்தான். காலையிலிருந்து பசியோடு இருந்தாலும், சாப்பிடவும்
தோன்றவில்லை. போகும் வழியில், எல்லா விஷயங்களையும் ஒன்று
விடாமல் தாயிடமும், தங்கைகளிடமும் கூறிய பாரதி, தாயின்
அபிப்பிராயத்தையும் கேட்கத் தவறவில்லை.
இத்தனை காலமும் பிரம்மச்சாரியாய் வாழ்ந்த காரணத்தை
அறிந்ததும் மூவருமே பாரதியின் திருமணத்துக்கு எந்தத் தடையும்
கூறவில்லை, இனிமேலாவது தன் மகனை ஓரு குடும்பஸ்தனாகப்
பார்க்கலாம் என்று எண்ணிய தாயின் மனமும் குளிர்ந்து போனதை
வார்த்தைகளால் வடிக்க முடியாது தன் அண்ணனுக்குக்
குறையிருப்பதாகப் பலரும் வெளியில் பேசுவதைக் காது கொடுத்துக்
கேட்க முடியாமல் தவிச்சுக்கிட்டு இருந்த சகோதரிகளும்,
அண்ணனின் அழுத்தமான காதல்தான் திருமணத்துக்குத்
தடையாயிருந்திருக்கிறது என்பதை உணர்ந்ததும், தங்களின்
மனப்பூர்வமான சம்மதத்தையே தெரிவித்தனர். கார் சாலையில்
ஒரே நோக்காகப் போய்க் கொண்டிருந்தாலும், காரில் அமர்ந்திருந்த
நால்வரின் மனமும், நான்கு விதமாக அசைபோட்டுக்
கொண்டிருக்க, அவர்கள் வரவேண்டிய குவின்ஸ் டவுன் ஓரறை
வீட்டின் அருகில் கார் நின்றதும்... நால்வரும், காரிலிருந்து
இறங்கினர். பாரதி... ஓரடி முன்னே சென்றவாறு, "அம்மா! நளினி
வீட்டை நாம எங்கேயும் தேட வேண்டாம்... இதோ அந்த மூலை
வீடுதாள் அவுங்களுடையது..." என்றபடி... வீட்டுக்கதவைத்
தட்டியபோது காலம் மாறினாலும், கோலம்மாறாப் பதுமையாய்
நளினியே வந்து கதவைத் திறந்தாள்.
தாயாரும், தங்கைகளும் கூட சிறிது நேரம் அவள்
மெய் மறந்து நின்றனர். நளினியும் சங்கோஜப்படாமல் எதிர்பார்த்துக்
காத்திருந்தவள் போல் அவர்களை வரவேற்றாள்.
சித்தி, சித்தியின் கணவர் இருவரிடமும் அறிமுகப்
படுத்தினாள் இந்த வயதில் அவளுக்கு இப்படி ஒரு பணக்கார
சம்பந்தம் காத்திருக்குமென்று இருவருமே எதிர்பார்க்கவில்லை.
வேலையில்லாத புருஷனையும் மூணு பிள்ளைகளையும்
வைத்துக்கொண்டு, ரொம்பவும் சிரமப் ப ட் ட சித் தி, நளினியின்
வருகை, அவள் சம்பாத்தியம், அந்த வீட்டு வருமையை நீக்கியது.
இருப்பினும், அக்கா மகள் இனிமேலாவது சந்தோசமாக வாழட்டும்
என்ற நல்லெண்ணத்தில் நேற்று அவள் கூறிய விஷயங்களைக்
கேட்டு மகிழிச்சியுடன் மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்தனர்.

பொழுது

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


நளினியைப் பற்றி சித்தி கமலம் பெருமையாகவே பேசினார்.
"உங்க மகனால, எங்க அக்கா மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை
அமையப்போகுது. இது அவ செஞ்ச புண்ணியமின்னுதான்
சொல்லணும். வாழ்க்கையில் இந்த சின்ன வயசிலேயே அவ பட்ட
கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நீங்க பெரியவங்க, எங்க
பொண்ண உங்க மகன் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு எங்களுக்கு
பரி பூரண சம்மதம். நீங்கள், ஒரு நல்ல நாள்ல எங்க
தாராளமா, அழைச்சிட்டுப் போகலாம்" என்றாள்.
நளினி வந்தவங்களுக்கு காப்பி, பலகாரம் கொண்டு வந்து
வைத்தான். பாரதியின் பார்வை அவளிடமே லயித்திருந்தது.
கம்பத்தில் பார்த்த அதே நிலவு முகம்.. நேரில் பார்த்த இந்த நேரம்
வரையில் அவன் மனசை சஞ்சலப்படுத்திக் கொண்டிருந்தது.
நளினி கொண்டு வந்துவைத்த காப்பியை ருசித்தபடி
பாரதியின் தாயார், தன் மகள்களான லலிதா, தாமரையின் முகத்தைப்
பார்த்தார். இருவருமே, சம்மதமென்று கண்களால் ஜாடை
செய்தனர். "நல்ல நான் பார்த்துத்தான் இப்பவும் வந்திருக்கோம்.
நீங்க சம்மதிச்சா என் மருமகளை இப்பவே நாங்க அழைச்சிட்டுப்
போகத் தயாரா இருக்கிறோம் என்றார், பாரதியின் தாயார்.
தாமரையும், லலிதாவும் 'ஆமாம்மா, நீங்க சொன்னதுதான்
சரி... அண்ணிய நாம இப்பவே அழைச்சிக்கிட்டு, நம்ம வீட்டுக்குப்
போயிடுவோம்" என்று சொல்ல...
நளினியின் சித்தி கமலம் “அதுக்கென்னமா, உங்க வீட்டுப்
பொண்ண, எப்ப வேணுமின்னாலும் நீங்க அழைச்சிட்டுப்
போகலாம்; எங்களுக்கு சந்தோஷம்தான்."
பாரதி இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நம்ம அம்மாவா
இப்படிப் பேசினாங்க. அம்மா எப்போ இப்படி முற்போக்குவாதியா
மாறினாங்க. ஐஸ் மலை உருகி அப்படியே பாரதியின் தலையில்
விழுந்தது போல் சந்தோசப்பட்டான். பழம் நழுவிப் பாலில்
விழுந்து, அதுவும் நழுவி வாயில் விழுந்த நிலைமையில்,
மகிழ்ச்சிக்கடலில் குதித்தான்.
"பாரதி, என் மருமகள... நம்ம வீட்டுக்கு இப்பவே
அழைச்சிட்டுப் போவோமா?... நீ என்னப்பா சொல்றே...''காமாட்சி
மகனைப் பார்க்கிறான். இப்படியும் நடக்குமா? ...
அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி... பாரதி நளினியைப் பார்க்கிறான்.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அவள் என்ன சொல்லப் போகிறாளோ... என்ற பயமும் பாரதியிடம்
இருந்தது.
நளினியும்... பாரதியிடம் கண்களால் ஜாடை செய்கிறாள்.
நளினியின் சித்தியே நளினி இந்த வீட்டை விட்டுப்
போய்ட்டா சாப்பாட்டுக்கு கஷ்டப்படவேண்டி வருமே என்று
கவலைப்பட்டார். அதுக்காகத் தன் அக்கா மகளுக்கு வந்திருக்கும்
நல்ல வாழ்க்கையைத் தட்டிக்கழிக்கவும் விரும்பவில்லை.
“நளினி இருந்தவரையில் எங்களுக்கு ரொம்பவும்
உறுதுணையாவே இருந்தாள். அவ உழைச்சு எங்களைக் காப்பாத்தி
இருக்கா. இன்னிக்கு அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை தேடி
வரும்போது, அவ எங்கிருந்தாலும் நல்லா இருக்கணுமின்னுதான்
நான் நினைக்கிறேன். இந்த வயசிலே அவளுக்கொரு வாழ்க்கை
அமைச்சிருக்குதுன்னா அது கடவுளோட பிராப்தமின்னுதான்
சொல்வேன்.
"நளினி!.. நாங்க உனக்கு நிறையவே கடமைப்
பட்டிருக்கோம்மா. நீ எனக்கு மகளாப் பொறக்கலியேன்னு உண்மை
யிலேயே... இப்பத்தான் வருத்தப்படுகிறேன்.'' கமலத்தின் கண்களில்
கண்ணீர் மல்கியது.
சூழ்நிலையை புரிந்து கொண்ட பாரதி, உடனே... தன்
கையோடு கொண்டு வந்திருந்த செக் புக்கில் பத்தாயிரம்
வெள்ளிக்கான செக் ஒன்றை எழுதி, அதை நளினி மூலம் நாசுக்காக
கொடுக்கச் செய்தான்.
ஆச்சரியம் மேலிட, கண்ணீர் சொரிய எதுவும் பேசத்
தோன்றாமல், கணவன், மனைவி இருவருமே ஸ்தம்பித்து
நின்றுவிட்டனர். "இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண உன்
அப்பா, அம்மா இல்லியே நளினி"ன்னு நளினியைக்
கட்டிக்கொண்டாள். "நளினி, உனக்குக் கடவுள், இனிமேல் எந்தக்
குறையும் வைக்க மாட்டாரும்மா. நீ நல்ல பொண்ணு. என் அக்கா
வயித்துல ஒரு முத்தா பிறந்திருக்கே. அத நெனச்சு நான்
பெருமைப்படுறேம்மா, இதப்பாரு... நீ எதுவும் யோசிக்காம துணி
மணிகளை எடுத்திட்டு கிளம்பு... என்று கமலம்
அவசரப்படுத்தினாள்.
நளினி... நன்றியுடன் பாரதியைப் பார்க்கிறாள்.

பொழுது புலருமா?..
92

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


புத்தொளி வீசி, புதுமைப் பெண்ணாய், தன் மனசை
அலங்கரித்து... அவனோடு வழப்போகும் நளினியின்
அழகுக்கண்களில் தன் பார்வையைப் பதிக்கிறான்.
கண்ணோடு கண் நோக்கின், வாய்ச்சொல்லில் வலிமை ஏது?...
நளினி நிதானமாகத் தன் அறைக்குச் சென்று... தன்
உடைமைகளை ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்து மூடியவன், ஒரு
கணம் இறந்துபோன தன் பெற்றோரை நினைக்கிறாள். கண்ணீர்
முத்துகள் தரையில் தெறிக்கிறது. என்றைக்கோ கிடைக்கவேண்டிய
தன்னுடைய அழகான வாழ்க்கை, ஆடிக்காற்றில் அடித்துச் செல்லத்
தன் தந்தையே காரணமென்றாலும், இறந்துபோன தந்தையை
நிந்திப்பதில் பலனேதும் இல்லை. கடவுள் தன் விதியை
இப்படித்தான் என்று எழுதி இருக்கும்பொழுது, யார் என்ன செய்ய
முடியும்? அன்று வாயிருந்தும் ஊமையாயிருந்த நளினி, இனியும்
தாமதிக்க வேணாம்... எல்லாம் நன்மைக்கே என்றெண்ணியவள்,
பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு, சித்தி, சித்தாப்பாவிடம்
வேதனையுடன் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு தன் புதிய
குடும்பத்தாருடன், புதிய வாழ்க்கை வாழ வெளியேறுகிறாள்.
பள்ளிக்கூடம் முடிந்து வரும் சித்தியின் பிள்ளைகளைக்
கேட்டதாகச் சொல்லி, விவரங்களையும் கூறிச் சொல்ல நளினி
மறக்கவில்லை. என்ன இருந்தாலும் தன்னோடு எந்தப் பாகுபாடும்
காட்டாமல், அன்போடு பழகிய சித்தி பிள்ளைகளை அவளால்
மறக்கவும் முடியாது. என்ன இருந்தாலும் அவர்களோட ஒண்ணா
பழகியாச்சே. பாசம் விட்டுப் போகுமா?
கையில் இருக்கிற பணத்தை வச்சுக்கிட்டு, சித்தப்பாவை ஒரு
காவலர் வேலைக்குப் போகச் சொல்லணும். உழைச்சுப் போட ஆள்
இல்லேன்னா வேலைக்குப் போறது கட்டாயமாயிடுமே. நோய்,
நோயின்னு நொந்து கிடக்காம, வேலைக்குப் போகச்
சொல்லணுமின்னு மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டாள்.

அத்தியாயம் 12

"அண்ணி!... என்ன அண்ணி, இப்படித்தான் கூப்பிடுறதுகூடக்


காதுல விழாதமாதிரி... பகல்ல கனவு கண்டுகிட்டுத்தான் இருப்
பாங்களா?..." என்றாள் குறும்புக்காரி லலிதா...

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"சரி சரி... வந்ததும் ஆரம்பிச்சுடாதே... உன்
திருவிளையாடலை" என்ற பெரியவள் தாமரை, அண்ணி... அவ
அப்படித்தான், ஏதாவது சொல்லிக்கிட்டு இருப்பா, வீடு வந்துடுச்சு...
நீங்க இறங்குங்க" என்றாள் நளினியின் காதில்.
திடுக்கிட்ட நளினி... சுய உணர்வு வந்தவளாக.... மலங்க
மலங்க விழித்தபடி... புது இடத்துக்கு வந்துவிட்டதை எண்ணி...
சே... அருகில் என்ன நடக்குதுன்னுகூடத் தெரியாம இப்படியா...
யோசனையில் இருக்கணும்? தன்னையே நொந்து
மெல்லக் காரைவிட்டு இறங்கினாள்.
காரைவிட்டு இறங்கிய நளினி, தான் வாழப்போகும் வீட்டை
நாலாபுறமும், கண்களைச் சுழலவிட்டாள்.
மூன்று மாடிகளைக் கொண்ட அந்தத் தரைவீட்டின்
வாயிற்கதவைத் திறந்து கொண்டு, கையில் ஆரத்தித் தட்டுடன்
வேலைக்காரி சுசிலா ஓடி வந்தாள். தாமரை அவன் கையிலிருந்த
ஆரத்தித் தட்டை வாங்கியதுகூடத் தெரியாமல்... கசிலா அப்படியே
நளினியைப் பார்த்தபடி மலைத்து நின்றாள். புதிதாக, அழகுப்
பதுமையாய் உள்ளே நுழைந்த நளினியை, ஆச்சரியமாகப்
பார்த்தபடி, ஒருகணம் சிலையாய் நின்றுவிட்டாள். ஆகா!... என்ன
அழகு, என்ன அழகு, இந்த மகாலட்சுமிய எந்தக் கோயில்ல இருந்து
கடத்திட்டு வந்திருக்காங்க என்று எண்ணத் தொடங்கி விட்டாள்.
பாரதி அவளிடம் என்ன!... இப்படி மலைச்சுப்போய் நிக்கிறே?..."
என்றாள்...
திடுக்கிட்ட சுசிலா... "ஐயா!... இந்த மகாலட்சுமிய எந்தக்
கோயில்ல இருந்து..." என்று முழுமையாகக் கூறுமுன்... "எங்கேயும்
இல்லை. இவுங்கதான் இனிமே இந்த வீட்டு முதலாளி அம்மா. இந்த
வீட்டுல எதுவும் அவங்களுக்குப் பழக்கமில்லை, எது கேட்டாலும்,
பொறுமையா, மரியாதையா சொல்லிக் கொடுக்கணும் என்ன
என்றான்.
"சரிங்க ஐயா..." என்றபடி உள்ளே போகப் போனவளை...
"சரி சரி... முதல்ல எங்க எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வை.
பசி... குடலைப் புடுங்குது...' என்று கூறியவாறு உள்ளே போனான்.
பாரதியின் தங்கை தாமரை, தன் புது அண்ணியை அழைத்துக்
கொண்டு, அவளுக்குரிய அறையைக் காட்டினாள். குளியல்
அறையில் குளிக்கச் சொல்லிவிட்டு, காமாட்சியம்மாள் கொடுத்த

பொழுது புலருமா?..
94.

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


புடவையைக் கையில் கொடுத்து, உடுக்கச் சொன்னாள். அதற்கேற்ற
ஜாக்கெட்டை நளினி அணிந்து கொண்டாள். சாப்பிட லலிதா குரல்
கொடுக்கவே... குளித்த தலையை விரித்துப் போட்டு, நுனியில்
முடிந்து கொண்டாள்.
நிலைக்கண்ணாடியில் முதல் முதலாக அத்தை கொடுத்து
உடுத்தியிருந்த துணியைச் சரி பார்த்தாள்.
நளினிக்கு இது கனவா நனவா என்றே புரியவில்லை. கனவில்
மிதப்பது போலிருந்தது. இத்தனை வசதி படைத்த பாரதிக்கு...
எத்தனையோ பெண்கள் கிடைத்திருப்பார்கள். தான் காதலித்த ஒரே
காரணத்துக்காகத் திருமணமே வேண்டாம் என்றிருந்த பாரதியின்
வைராக்கியமும்? நல்ல மனமும் அவன் நளினியின் மனத்தில் ஒரு
உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மெல்ல நளினி, அறையை விட்டு வெளியே ஹாலுக்கு
வந்தாள். அங்கே என்றுமில்லாத முக மலர்ச்சியுடன் பாரதி...
தங்கைகளுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்.
"அண்ணே... அண்ணி வந்தாச்சு' என்றாள் தாமரை.
குளித்த தலையுடன் எந்தவித அலங்காரமும் இல்லாமல்
இருந்த நளினியைப் பார்த்து பிரமித்தான். ஒரு தேவதை போல்
காட்சியளித்தாள்.
அண்ணே... இவ்வளவு நானா... இப்படி ஒரு பொக்கிஷத்தை
எங்கே மறைச்சு வச்சிருந்தே?... ஐயோ... எங்க அண்ணி இத்தனை
அழகா இருப்பாங்களான்னு மலைச்சுப் போயிட்டேன்." தாமரை
நளினியைப் பார்த்தபடி கூறினாள்.
உடனே சின்னவள்.... "அக்கா! எனக்கே... பொறாமை
யாயிடுச்சின்னா பாத்துக்கோயேன்."
"அடடா!... கொஞ்சம் சும்மா இருங்கடி. இப்பவாவது மனசை
மாத்திக்கிட்டு, கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானேன்னு
சந்தோசப்படுங்க என்றார் அவர்களின் அம்மா.
அதனாலத்தான் அண்ணன், அண்ணியைப் பார்த்த உடனே...
அவங்க சித்தி வீட்டுலக்கூட வச்சிருக்கப் பிடிக்காம, மதுரைவீரன்
பொம்மியைக் கடத்திட்டுப் போனமாதிரி, "இங்க, இவங்களைக்
கடத்திட்டுப் வந்துட்டாரு போலிருக்கு" என்று தாமரை கேலி
செய்தாள்.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


லலிதா விடாமல் "அம்மா! இன்னொரு விஷயம் நடந்ததை
கவனிச்சீங்களா... அவுங்க சித்தி, உங்க வீட்டுப் பெண்ணை, இப்ப
வேணுமின்னாலும் அழைச்சிட்டுப் போங்கன்னு சொன்னாங்களே,
அப்போ... அண்ணி, அண்ணனைப்பார்த்து ஏதோ!... கண்ஜாடை
செஞ்சாங்களே..." அப்பொழுது தாமரை இடைமறித்து,
இதெல்லாம்கூட நீ பாத்தியா? என்று கேட்க "ஆமாக்கா..." என்று
லலிதா ஆமாம்போட...
"அப்போ உடனே, அண்ணன் ஒரு செக் எழுதிக்
குடுத்தாங்களே..."அப்போ எனக்கு பாரதிதாசனாரோட ஒரு
கவிதைதான் நினைவு வந்தது,"
"என்ன... என்ன கவிதை சீக்கிரம் சொல்லு" என்று லலிதாவை
பாரதி அவசரப்படுத்தினான்.
"இரு இரு, சொல்றேன் என்று லலிதா அவளுக்குப் பின்னால்
நின்றிருந்து நளினியின் கையைப் பிடித்து வந்து... "கண்ணின் கடைப்
குமரர்க்கு
பார்வை காதலியர் காட்டி விட்டால், மண்ணில்
மாமலையும் ஓர் கடுகாம்" என்று கவிதையைப் பாடியபடி, பாரதியின்
அருகில், சாப்பாட்டு மேஜையில் உட் க ார வைத் தாள்.
உடனே பாரதி எழுந்து குறும்பைப்பாரு. இரு... இரு...
உள்ள... என்றவனை...
"சரி சரி அண்ணா... அப்படியே உட்கார்ந்துடுங்க. முதல்ல
சாப்பிடுங்க. அப்புறம் அடிக்க வரலாம்!" என்றவாறு சாப்பாட்டுத்
தட்டை... இருவர் முன்னால் வைத்து விழுந்து விழுந்து
உபசரித்தாள். சகோதரிகளின் கேலியும் கிண்டலும் நளினிக்கு...
ஒரே வெட்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது. வாழ்க்கையில்
முதல்முறையாக மகிழ்ச்சி நிறைந்த குடும்பத்தில் தானும்
கலந்திருப்பது நளினிக்குப் பெருமையாகவே இருந்தது.
தட்டிலிருந்த உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
"என்ன அண்ணி... கோழி கொரிச்ச மாதிரி, கொரிச்சுக்கிட்டு
இருக்கிறீங்க. சோத்தை நல்லா அள்ளி சாப்பிடுங்க. என்ன
அண்ணா! பக்கத்துல இருந்துகிட்டு, பேசாம இருக்கிறீங்க நல்லா
கூச்சமில்லாம சாப்பிடச் சொல்லுங்க அண்ணா" என்றாள் தாமரை.

பொழுது புலருமா?...
96

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"ஏண்டி!... ரெண்டு பேரும் சும்மா இருக்க மாட்டீங்க. அவுங்க
சாப்பிடுவாங்க. நீங்க ரெண்டு பேரும் வெளியே வாங்க"ன்னு
அதட்டல் போடவும், தாயுடன் சகோதரிகளும் வாசலுக்கு
வந்துவிட்டனர்.
தனிமையில் விடப்பட்ட இருவரும், சாப்பிடாமலேயே,
சோற்றை அனைந்து கொண்டிருந்தனர்.
பாரதி மெதுவான குரலில், "நளினி!... பாத்தியா!... என்
தங்கச்சிங்க கிண்டல் பண்றதை."
நளினி பதில் சொல்லாமல் தலைகுனிந்தபடி,..."ம்..." என்றாள்.
"சரி... இந்த... இந்த ஒரு பிடி சோத்தை நான் உனக்கு
ஊட்டறேன்'' என்ற பாரதி, நளினியின் வாயில் சோற்றை ஊட்டிவிட,
அந்த நேரம் பார்த்து வேலைக்காரி வந்து விடுகிறாள். வந்தவள்
"ஐயா!... மேடம் ரொம்ப அழகா இருக்காங்க நடிகை மாதிரி" என்று
சொல்லிட்டு ஓடிவிடுகிறாள்.
பாரதி சிரித்து விடுகிறான்.
நளினியும் சேர்ந்து சிரித்து விடுகிறாள். "அப்பப்பா!... நான்
என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்" என்றாள். நளினி சீக்கிரமாக
எழுந்து போக எத்தனித்தபொழுது... நளினியின் கையைப் பிடித்து,
ஊம்... உட்காரு... என்ன அவசரம்... நான் இன்னும் சாப்பிட்டு
முடிக்கலியே. அதுக்குள்ள என்ன அவசரம்னு ஓடுறே?
"இல்ல பாரதி... அம்மா உங்க தங்கச்சிங்க..." என்று
தயங்கினாள்.
"யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க. நீதான் பாத்தியே...
இவ்வளவு நேரமும் கும்மாளம் போட்டுட்டு.... நாசூக்கா ஒதுங்கிப்
போய்ட்டாங்களே. இதுல இருந்து என்ன தெரியுது?... பாரதி...
நளினியைப் பார்த்தான்.
என்ன... தெரியுதாம்..." புரியாததுபோல்... நளினி கேட்டாள்.
"ம்... இப்ப... நீயும் எனக்கு சோறு ஊட்டி விடணுமின்னு
தெரியுது."
"ஆசையைப் பாரு..." என்றபடி நளினி பாரதிக்குத் தன் கையால்
உணவு ஊட்டி விடுகிறாள்.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"சரி... சரி... போதும் எழுந்திருங்க. ம்... தண்ணியைக் குடிங்க"
எள்று டம்ளரை பாரதியிடம் நீட்டுகிறாள்.
அவள் நீட்டிய டம்ளரை கையில் வாங்கிக்கொண்ட பாரதி...
நளினியை மேலும் கீழும் பார்க்கிறான்.
"என்ன... என்னை அப்படியே முழுங்கிடுறது மாதிரி
பார்க்கிறீங்க?"
"நளினி நீ குளிச்ச தலையும், ஆரஞ்சுக்கலரில் அழகான
புடவையும் அதை நீ கட்டி இருக்கிற நேர்த்தியும் அடடா... வர்ணிக்க
வார்த்தையே இல்லை... போ."
"போதுமே... உங்க வர்ணனை. உடனே உங்க கற்பனை
ஓடிடுமே கம்பத்து வாழ்க்கைக்கு."
"என்ன நளினி... நீ இவ்வளவு சாதாரணமாப் பேசுறே?...
நடந்த நிகழ்ச்சி ஒல்வொன்றையும் மறக்க முடியுமா" என்றான்.
உடனே நளினி, "பாரதி... நீங்க என் அழகை ஆராதிக்கிறீங்க.
ஆனா... நான்... உங்க மனசையும் நம்ம உறுதியான காதலையும்
நீங்க என் மேல காட்டுற அன்பையும் அக்கறையையும் முன்னவிட
இப்ப... ரொம்பவே உங்களை நேசிக்கிறேன்."
இன்றைக்கும்... புத்தம் புது மலராய் இருக்கும் நீ... எனக்கு
மட்டுமே சொந்தமின்னு... கடவுளோட கட்டளை தெரியுமா?"
"அப்படியா!... என்றவளிடம்,
"ஆமா!... அப்படியேதான்" என்ற பாரதி; சரி... எல்லாம்
போகட்டும் நளினி... நினைச்சாலே ஆச்சரியாமா இருக்கு...
தெரியுமா? இன்னிக்கு எதிர்பாராம என்னவெல்லாமோ நடந்துடுச்சு,
இல்லியா..." என்றான்.
"அதுலேயும் சித்தி வீட்டுல இருந்த நான்... இன்னிக்கு உங்க
கூட இப்படிப் பேசிக்கிட்டு இருப்பேன்னு நினைக்கவே இல்லை.
எல்லாம் கனவு மாதிரி இருக்குது பாரதி- எள்றான்,
"எப்படி... பாரதி.. என் கண் ஜாடையைப் புரிஞ்சுக்கிட்டு...
அதுக்கு ஏத்த மாதிரி நீங்க நடந்துக்கிட்டீங்களே எப்படி..." என்றாள்
கண்கள் படபடக்க.

பொழுது புலருமா?...
98

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"உங்க சித்தி வீட்டு நிலைமையை... நேத்து நீ சொன்னதுனால,
சரி... நாம குடுக்குற பணம் அவுங்களுக்குக் கொஞ்சம் உதவியாக
இருக்கட்டுமேன்னு நினைச்சுத்தான் குடுத்தேன். அதை உன்
பார்வையிலே கண்டுபிடிச்சுட்டேன். நான் நெனச்சபடியே
உன்னையும் அனுப்பி வச்சுட்டாங்க. அது மட்டுமில்லை; இத்தனை
வருஷமா உன்ன... நல்லபடியா பாத்துக்கிட்டாங்களே...
அதுக்காகவே இப்ப மட்டுமில்ல... எப்ப தேவைப்பட்டாலும்
அவுங்களுக்கு நான் பண உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கேன்."
அவனுடைய இந்தப் பேச்சினால் நெகிழிந்து போன நளினி,
"இத்தனை காலமா, உங்களைப் பார்க்கிறதுக்குத்தான் கடவுள்
என்னை கஷ்டப்படுத்தி இருக்காருன்னு நெனைக்கிறேன், பாரதி
உண்மையிலே, நான் கொடுத்து வச்சவ" என்றாள்.
"ஏன்... நானும்தான் கொடுத்து வச்சவன். ஆமா... எல்லாம்
சரிதான் நம்ம கல்யாணத்தை எப்ப... வச்சுக்கலாம்? சொல்லு...
சொல்லு...''
'பாரதி... என்ன கிண்டலா... உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப்
போறேன்னு நீங்கதான் என்னைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க.
அத... நீங்கதான் சொல்லணும்" என்றாள்.
உன்... சம்மதத்தையும் நான் கேக்க வேணாமா?...''
“என்... சம்மதமா?... எல்லாத்துக்கும் நீங்களே இருக்கும்
போது..."
"என் சம்மதம்னு எதுவுமே இல்ல பாரதி. நீங்க கல்யாணத்தை
எப்ப வச்சுக்கிட்டாலும் எனக்கு சம்மதம்தான். இப்ப கட்டிக்கச்
சொன்னாலும் மறுப்பு சொல்லாம சரிம்பேன்."
உடனே பாரதி "நிஜமாவா..." குறும்பாகக் கேட்டான்.
அவளும் அப்பாவித்தனமாக... "நிஜம்மாத்தான் சொல்றேன்.
இப்பவே... கட்டிக்கிறேன் என்ன சொல்றீங்க..." என்று கழுத்தை
அவன் முன் நீட்டினாள்.
"அப்படியா!... சரி சரி... ''அவள் தளிர்க்கரத்தை பிடித்துத்
தடவியபடி அவள் கழுத்தை... கைகளால் சுற்றிக் கொண்டான்.
உடனே... நளினி... "ஐயோ! பாரதி... போதும்... எந்திரிச்சுப்
போங்க. அம்மா வந்துடப்போறாங்க...' என்று முணங்கினாள்.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"வரட்டுமே.. நாம ரெண்டு பேரும் சந்தோசமா
இருக்கணுமின்னுதான் அவுங்களே எழுந்திருச்சுப் போய் ட்டாங்க."
"அதுக்காக... வரம்பு... மீறலாமா? என்று அவன் பிடியிலிருந்து
விடுபட முயன்றாள்.
"
நான் வரம்பெல்லாம் மீறமாட்டன். கல்யாணத்துக்குப்
பிறகுதாள்... எல்லாமே, தெரியுமா?... இப்ப ஒத்திகைதான்
பார்க்கிறேன்" என்றவன். . அவளை இடுப்போடு அணைத்தபடி...
"எங்கே நீ... எனக்கு எட்டாக்
நினைச்சுக்கிட்டே... காலத்தையும் ஓட்டிட்டேன். போதும்ம...
போதும்... நான் பட்ட வேதனைகளும், சோதனைகளும்
இதுக்குமேலயும். இனி வரப்போற சோதனைகளைத் தாங்கிக்கிற
சக்தி இந்த சின்ன
சொல்லும்போதே முகம் வாடியது.
அவன் வாட்டத்தைப் போக்க எண்ணிய நளினி... 'பாரதி...
என் நிறத்துக்குத் தகுந்த மாதிரி புடவை எடுத்திருங்காங்க... இல்ல..."
பாரதி அவள் தலையை வருடியபடி, "உன் அழகுக்கு
புடவை சாதாரணம்தான், அம்மா இதைவிட
தந்திருக்கலாமேன்னு தோணுது" என்றான் வஞ்சையுடன்.
"பாரதி, நான் என்னிக்குமே ரொம்ப அழகானவளா நெனச்சது
கிடையாது. என்னோட இந்த அழகுங்கிற தங்கம்... பாரதீங்கிற
வைரத்தோட சேர்ந்தபிறகுதான்,
ஆரம்பிச்சேன். புரியுதா?..."
"ம்...ம்... புரியுது... இப்பத்தான் நீ இன்னும்
இருக்கே..."
குனிந்தபோது..
"பாரதி. .நேரமாச்சுப்பா.. இன்னுமா சாப்பிட்டு முடியலை.
சீக்கிரம் வா. கடைக்குப் போகணும்." காமாட்சியின்
நளினி திடுக்கிட்டவளாக.. பதற்றத்துடன் பாரதியிடமிருந்து

விடுவித்துக் கொண்டு
பொழுது

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அத்தியாயம் 13
சே. இப்பக்கூட, நிம்மதியா இருக்க விடமாட்டேங்
கிறாங்களே. முகம் சுளித்த பாரதி... நளினியைத் தொடர்ந்து
அவனும் வெளியே வந்தான். அவன் எப்போ வெளியே...
வருவான் என்று காத்திருந்தவள் போல், வேலைக்காரி... மெதுவான
குரலில் ஐயா!... நீங்க காலையில இருந்து மாத்திரை
சாப்பிடலீங்களே..." என்றாள்.
உடனே அவள் பக்கம் பார்வை யைத் திருப்பிய
"இதப்பாரு... இப்ப எனக்கு மாத்திரையை எடுத்துத் தரவேணாம்.
இன்னிக்கு நான் மாத்திரை சாப்பிடறதா இல்லை. நாளைக்கு நீ
கேக்காமலே நானே மாத்திரையை சாப்பிட்டுக்கிறேன்"னு..
வாசலுக்கு வந்தான்.
அங்கே வெளியே போகத் தயாராயிருந்த அம்மா,
சகோதரிகளிடம் "என்னம்ம!... எங்கேயே போகத்
தயாராயிட்டீங்க போலிருக்கு."
'ஆமாப்பா!... கல்யாணத்துக்கு நகை, துணிமணிங்க
வாங்கணும், நீ வேற ஒரு வாரத்துல கல்யாணமுன்னு கெடு
வச்சிருக்கே. மளமளன்னு கடைக்குப் போற வேலைங்கள
முடிச்சாத்தானே மத்த வேலைங்கள்ல கவனம் செலுத்த முடியும்.
நமக்கு நாளும் நெருக்கடியா இருக்கு பாரு" என்றார்.
"அம்மா... என் கல்யாணத்தை... நம்ம வீடு, நளினி வீடு, இந்த
ரெண்டு குடும்பத்தை வச்சு முடிச்சிடலாமின்னு முடிவு பண்ணி
இருக்கேன். நீங்க என்னடான்னா தடபுடலா செய்யணுமின்னு திட்டம்
வச்சிருக்கீங்க போலிருக்கு."
"என்ன பாரதி இப்படி சொல்லிட்டே... என் மகனுக்கு இத்தனை
வருஷெம் கழிச்சு கல்யாணம் கைகூடி இருக்கு. அதை, நம்ம
நிலைமைக்கு ஏத்தாப்புல, கொஞ்சம் ஆடம்பரமா செய்வோம் என்று
இந்தப் பெத்தவளுக்கு ஆசை இருக்காதா என்ன?''
அம்மா!... இத்தனை வருஷம் கழிச்சு அவ எனக்குக்
கிடைச்சதே பெரிய விஷயம். அதைக் காப்பாத்திக்க
விரும்புகிறேனே தவிர விளம்பரப்படுத்திக்க விரும்பலேம்மா."
பாரதி சொல்லிக் கொண்டிருக்கும்போது... வாசலில் வந்து நின்ற...
நளினியைப் பார்த்து... என்ன நளினி... நான் சொன்னது சரிதானே.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


இதுல உனக்கு ஏதாவது கருத்து இருந்தா தயங்காம சொல்லு.
நிச்சயமா அதுபடி நடப்பேன்" என்றான் பாரதி.
''நீங்க என்ன முடிவெடுத்தாலும் அது சரியாத்தான் இருக்கும்.
எனக்குன்னு எந்த விருப்பு, வெறுப்பும் கிடையாது, உங்க
விருப்பப்படியே நடக்கட்டும் என்றாள்.
எதிர்பாராத நளினியின் இந்தப் பதில், சகோதரிகள்
இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவளைச் சீண்டும்
நோக்கில் லலிதா... "ஏன் அண்ணி... எங்க அண்ணன் எது
சொன்னாலும் சரிங்கிறீங்களே... அப்போ மேலே இருந்து கீழே
விழுந்துடுன்னு சொன்னா விழுந்துடுவீங்களா?..."
உடனே நளினி, "உங்க அண்ணன் சொன்னா, நிச்சயமா
யோசிக்காம உடனே விழுந்துடுவேனாக்கும்..." பெருமையுடன்
கூறினாள்.
"அண்ணே... அண்ணி இப்பவே உன் தலையில ஐஸ் வைக்க
ஆரம்பிச்சுட்டாங்க" - இது தாமரை.
''ஏண்டி!... உங்க அண்ணனை ஓரேயடியா கிண்டல்
பண்ணிக்கிட்டு இருக்கிறீங்களே... சும்மா இருக்க மாட்டீங்களா?...
போங்க.... நேரமாச்சு, வீட்டுக்குக் கிளம்புங்க... நாளைக்கு நீங்க
மட்டுமில்லாம உங்க புருஷன்மார்களையும் அழைச்சிட்டு வாங்க.
என்ன காமாட்சியம்மா உத்தரவு போட்டார்.
''அம்மா! இத்தனை காலமா இல்லாம அண்ணன் முகத்திலே
மகிழ்ச்சியைப் பாக்கிறோம். இன்னிக்கு உள்ள நல்ல மகிழ்ச்சியான
சூழல் நாளைக்கு இருக்குமோ இல்லியோ..."
"அதுக்காக எல்லாத்தையும் இன்னிக்கே பேசி
முடிச்சிடணுமின்னு பாக்கிறியா?... வாலு.. உனக்கு வரவர வாய்
நீளமாப் போச் ச ு" என்று செல் ல மாக அதட்டினான் பாரதி.
"சரி சரி பாரதி... நேரமாச்சு. இவுங்க இ ரண்டு
அவுங்கவுங்க வீட்டில கொண்டு போய் விட்டுடு. இந்தக் கடைக்குப்
போற வேலை முடிஞ்சா... மத்த வேலைங்க முடிஞ்ச மாதிரி..."
என்று கூறி விட்டு சாமி கும்பிடப் போறேன்னு
போய்விட்டார்.
"சரி வாங்க... அம்மா சொன்ன மாதிரி நாளைக்குக்
குடும்பத்தோட வந்துடுங்க. இனிமே... கல்யாணம் முடிஞ்ச
பிறகுதான் நீங்க... உங்க வீட்டுக்குப் போகணும் என்ன... என்றான்.

பொழுது புலருமா?...
102

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


மூத்தவள் தாமரை, "அண்ணா... எங்க வீட்டுக்கு வந்து, சீர்
செஞ்சு... முறைப்படி கல்யாணத்துக்கு எங்களைக்
கூப்பிடணுமிங்கிறதை மறந்துடாதீங்க."
சும்மா இருப்பாளா இனையவள் லலிதா... அவன் பங்குக்கு...
அண்ணா, கல்யாணத்தை சிம்பிளாத்தானே முடிக்கிறோமின்னு,
எங்களுக்கு செய்ய வேண்டியதைச் செய்யாம விட்டுடாதீங்க''
என்றாள்.
"இது நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா?
கல்யாணமானதுல இருந்து இன்னிக்கு தேதி வரைக்கும்...
உங்களுக்கு நான் குறை வச்சிருக்கேனா?... அதது தானா வரும்.
கவலைப்படாம கார்ல ஏறுங்க என்றவன் நளினியிடம், 'நளினி நீ
உன் ரூம்ல போய் இரு. இதோ இவுங்கள விட்டுட்டு கொஞ்ச
நேரத்துல வந்துடறேன்" என்று காரில் ஏறியபடி, சகோதரிகளையும்
ஏற்றிக் கொண்டு அவர்கள் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
இத்தனையையும் கேட்டுக்கிட்டிருந்த நளினிக்கு மிகவும்
ஆச்சரியமாக இருந்தது. சரளமாக அண்ணனிடம் ஜோக் அடிக்கும்
சகோதரிகள், அன்பான தாய், அவர்களுக்கு ஈடுகொடுக்கும்
வகையில்... ஒரு நல்ல அண்ணனாக வாழ்ந்துவரும் அருமையான
என் பாரதி. அப்பப்பா... என்ன அழகான குடும்பம். கடவுளே...
மகிழ்ச்சியை அள்ளித்தூவி இருக்கும் இந்தக் குடும்பம்... இனி
எப்பவும் இப்படியே எந்தக் குறையுமில்லாம விளங்கணும் என்று
மனதிற்குள் வேண்டியபடி உள்ளே வந்தாள். அத்தையின் அறை
மூடி இருந்தது. வேலைக்காரி... ஹாலில் தொலைக்காட்சி பார்த்துக்
கொண்டிருந்தவள், நளினியைக் கண்டதும் டிவியை நிறுத்திவிட்டு,
அடுப்படிக்குப் போய் விடுகிறாள் புது எஜமானியிடம் பேசவும்
பயந்தவளாக.
சுவர்க்கடிகரம் மணி ஏழு என்பதைக் காட்டியது. எப்படி
நேரத்தை ஓட்டுவதென்று யோசனையிலிருந்த நளினி... தன்
பார்வையை மூடியும் மூடாமலும் இருந்த பாரதியின் அறைப்பக்கம்
ஓடவிட்டாள். கதவைத் தள்ளியபடி உள்ளே நுழைந்த நளினி,
அவன். அறையை நோட்டமிட்டாள். பாரதியின்
அறையும் தூய்மையாகக் காணப்பட்டது. அலமாரியின்மேல், நிறைய
பாபி பொம்மைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு பொருள்களும், கலை அம்சத்துடன் மிகவும்

நூர்ஜஹான் சுலைமான்
103

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


நேர்த்தியாக வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. பாரதியின் அறையில்
திரைச்சீலைகன்கூட விலை உயர்ந்ததாக இருந்தது. பெரிய கட்டில்,
நான்கு தலையணைகள், கட்டிலுக்குத் தகுந்த கிங்கோய்ல் (King Koil)
மெத்தைகள், பெட்ஷீட், பேட்பிரஷ்கூட ஓரே கலரில்
அமைந்திருந்தன. லேசான நீலக்கலரில் சுவற்றில் சாயம்
பூசப்பட்டிருந்தது. நளினி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, விளக்கைத்
தட்டி விடுகிறாள். பளிச்சென்ற வெளிச்சம் அறையெங்கும் பரவ,
மெல்லக் கட்டிலில் வந்து அமருகிறாள்.
தலையணை உறைகளில் இரண்டு கிளிகள், கிளையில்
தொங்குவது போன்ற படம், எம்பிராய்டரி போட்டு
தைக்கப்பட்டிருந்தது. தலைமாட்டில் அழகான வேலைப்
பாடுகளுடன் பூச்சாடி இருந்தது. பக்கத்தில் பெரிய மீரா சிலை,
வெள்ளை நிறத்தில் மிக அழகாக இருந்தது. மண் சிலையிலும்
இத்தனை அழகான வேலைப்பாடுகளுடன் இருந்த மீரா சிலையை
நீண்ட நேரம் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
‘மீரா!... நீ... பெரிய மகாராஜாவை மணமுடித்தாலும்...
கண்ணன் மீது கொண்ட பக்தியால், மகாராஜாவுடன் வாழாமல்,
சாவில்கூட தீபமாகி கண்ணனின் இதயத்தில் கலந்தவளாயிற்றே நீ...
நீ மட்டும! நானும் கூடத்தான்... என் பாரதியின் உயிரோடு
கலந்துவிட்டேனடி. இப்ப நான் விடும் மூச்சுகூட என் பாரதியின்
பெயரைத்தான் சொல்லும். புரியுதா?...’
மீரா சிலையுடன் ஒன்றிப் போய் பேசிக் கொண்டிருந்தவள்...
தூக்கம் அவள் கண்களைச் சுழற்ற, அவளையும் அறியாமல்
கட்டிலிலேயே படுத்து உறங்கிவிட்டாள்.
பாரதி வீடு வந்து சேர... இரவு மணி பத்துக்கு மேலாயிடுச்சு.
உடைமாற்ற எண்ணித் தன் அறைக்குள் நுழைந்தவன் ஒருகணம்
அப்படியே.. நின்று விட்டான். அடித்துப் போட்டதுபோல்... நளினி
அசையாமல் படுக்கையில் கிடந்தாள். அசந்து தூங்கிக்
கொண்டிருக்கும் நளினியை எழுப்ப மனமில்லாமல், அவள்
அருகில் அமர்ந்தபடி, பேர்வையை எடுத்து, அவள் உடம்போடு
போர்த்தினான். ‘மீரா... நா...ன்... நளினி... என்... பாரதி...’ என்று,
ஏதேதோ... உளறினாள் ஏதும் புரியாத பாரதி நளினியின் சிவந்த
கரத்தை எடுத்து மெதுவாகத் தடவிக் கொடுத்தான். யாரோ...

பொழுது புலருமா?.
104

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


தொடுவது போன்ற உணர்வு தோன்ற... பயத்தில் மெதுவாகக்
கண்களைத் திறந்து பார்த்த நளினி... அருகில் பாரதியைப்
பார்த்ததும்... வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்... "ஏய் நளினி...
என்ன... நான்தான் பயமில்லாம தூங்கு' என்ற பாரதி... நளினியின்
தோளில் கைவைத்து மறுபடியும் படுக்க வைத்தான்.
கண்களை மூடாமல் விழித்திருந்த நளினியின் பக்கவாட்டில்
இருபுறமும் கைகளை ஊன்றிய பாரதி... நளினியைப் பார்த்தபடி
'ஏய்!.. இப்ப மணி என்ன தெரியுமா? என்றான்.
நளினியின் கண்கள் உடனே சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க...
அது 10.45 என்று காட்டியது.
உடனே நளினி அவசர அவசரமாக அவன் கைகளை அகற்றி
விட்டுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு... “ஐயோ! ... பாரதி...
இவ்வளவுநேரமும் இங்கேயே கட்டில்லயே தூங்கிட்டேனே. நீங்க
எப்ப வந்தீங்க?"
"நானும் இப்பத்தான் வந்தேன். ஏன்... என் கட்டில்ல
தூங்கினா... என்ன தப்புங்கிறேள்?"
"அதெல்லாம் ஒரு தப்புமில்லை. நீங்க சாப்பிட்டீங்களா?..."
"வேலைக்காரி சாப்பாடு போட்டாள். சாப்பிட்டேன்."
"ஐயய்யோ... அம்மா சாப்பிட்டாங்களா?... சே... இதை
எல்லாம் கவனிக்காம நாம்பாட்டுக்குத் தூங்கிட்டேன்'' என்று
தன்னையே நொந்து கொண்டாள்.
'கவலைப்படாதே... சாப்பிடுறதுக்கு அம்மா உன்ளை எழுப்ப
வந்தாங்களாம். நீ அசந்து தூங்கிட்டிருந்தியாம். எழுப்ப மனசு
இல்லாம அவுங்களும் சாப்பிட்டுப் படுத்துட்டாங்களாம்.
இதெல்லாம் நம்ம வேலைக்காரிதான் சொன்னாள்" என்றான்.
நளினி தலையில் அடித்துக் கொண்டாள். "ஐயோ, வந்ததும்
நீங்களாவது எழுப்பி இருக்கக்கூடாதா?..."
"அசதியில தூங்குறவ நல்லா தூங்கட்டுமின்னு எழுப்பலை.
ஆமா... உனக்கென்ன அத்தனை அசதியா? அடிச்சுப் போட்ட
மாதிரி தூங்குறே. அது மட்டுமா?... மீரா... பாரதி... நளினின்னு ஒரே

நூர்ஜஹான் சுலைமான்
105

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


புலம்பல்தான் போ... ஆமா... யாரு அந்த மீரா. தூக்கத்துல புலம்ப
வச்சவ... நளினி வெட்கம் மேலிட... தலைக்கு மேல் இருந்த
பெரிய மீரா சிலையைக் காட்டுகிறாள்.
'சரி, இந்த மீரா தம்புராவை மீட்டியபடி இருக்கிறாளே... இந்த
நளினி...'' குனிந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்துகிறான். குறும்பு
அவன் முகத்திலும் இழையோடியது.
இதைப் புரிந்து கொண்ட நளினி, வேகமாக அவன் கையைத்
தட்டிவிட்டு எழப்போனாள்.
உடனே... பாரதி அவன் கையைப் பிடித்தபடி, ஏய்.. எங்க
ஓடப்பாக்குற... பேசாம இங்கேயே தூங்கு" என்றான் குறும்புடன்.
"ஐயோ!... நான் மாட்டேம்பா. ஆசையைப்பாரு. எல்லாம்
கல்யாணத்துக்கு அப்புறம்தான். விடுங்க அம்மா வந்துடப்
போறாங்க." நளினி திமிறினாள்.
அதெல்லாம் வரமாட்டங்க. இந்நேரம் அவுங்க தூங்கி
சாமமாயிடுச்சி" என்றவன், "அம்மா தாயே! பயப்படாதே. நான்
ஒண்ணும் உன்னைக் கடிச்கத் தின்னுட மாட்டேன். பேசாம
படுங்கிறேன்ல" என்று அதட்டியவன் எரிச்சலுடன்... “சும்மா அம்மா,
அம்மான்னுக்கிட்டு, ஆமா...நீ இன்னும் சாப்பிடலியே...
பசிக்கலியா?..."
"ம்... இல்ல பாரதி. எனக்குப் பசிக்கலை. சாப்பாடு வேணாம்"
என்றாள்.
"அப்படீனன்னா இந்தப் பாலையாவது குடி."
"பாரதி... வேணுமின்னா நானே எடுத்துக்க மாட்டேனா?...
உங்களுக்கு ஏன் வீண் சிரமம். நீங்க இப்படியெல்லாம் பண்றது,
எனக்கு எவ்வளவு சங்கடமா இருக்கு தெரியுமா?" என்றவாறு
தொடர்ந்தாள்...
உலகத்துல உங்களைவிட எனக்கு வேற எதுவுமே வேணாம்
பாரதி. உங்களை விட விலை உயர்ந்தது... இந்த உலகத்தில்
எதுவுமே இல்லை."
"நளினி... எனக்கு நீயும் அப்படித்தான். இதப்பாரு... இங்க நீ
யாருக்கும் எதுக்கும் பயப்படவேணாம். இந்த வீட்டுல உனக்கு
முழுச்சுதந்தரமும் உண்டு என்ன?..."

பொழுது புலருமா?...
106

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"அது போதுமுங்க. உங்கள உங்க மனசப் பத்தி எனக்குத்
தெரியாதா. சரி... இந்த அலமாரி மேல விலை உசந்த, பாபி
பொம்மைகளா குவிச்சு வச்சிருக்கீங்களே... இனிமே இந்த வயசுல
யார் விளையாடப் போறாங்க?"
"ஓ அதுவா... சும்மா இது ஒரு ஹோபின்னு வச்சுக்கோயேன்.
ஏன் குழந்தைமாதிரி... அதான் இப்ப நீ வந்துட்டியே. அதுவும்
இல்லேன்னா... நாளைக்கு நமக்குக் கல்யாணமாகி, குழந்தை
பொறந்தா.... நம்ம குழந்தைங்க விளையாடிட்டுப் போறாங்க."
குறும்புப் புன்னகையுடன் பதிலுரைக்கிறான்.
"அதுக்காகவா இவ்வளவு பொம்மகளைச் சேர்த்து
வச்சிருக்கீங்க. ம்..." எதையே நினைத்து விழுந்து விழுந்து
சிரித்தாள்.
அவள் சிரிப்பின் அழகைப் பார்த்து ரசித்தபடி... பாரதி
"நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்கிறே?...
''இல்லை... நமக்குக் குழந்தை பொறந்து... அந்தக்
குழந்தைக்குப் பத்து வயசாகும்போது, நமக்கு இன்னும் வயசாயிடும்
போங்க. அதை நினைச்சேன், சிரிப்பு வந்துடுச்சு" என்றாள்.
'எனக்கு வயசான பிறகுதானே நீ எனக்குக் கிடைச்சே,"
"இப்பவும் சரி, எப்பவும் சரி, வயசாயிடுச்சேன்னு கணக்கு
தவறாப் போட்டுடாதே. நான் நல்லா தெம்போடுதான் இருக்கேன்.
மனசும் அப்படித்தான். எங்கே... கம்பத்துல மயக்கம் போட்டு
விழுந்தமாதிரி... இப்ப நீ விழுந்து பாரேன். ஒரு ஒத்திகை
பாத்திடுவோம், உன்னை என்னால தூக்கமுடியமா... இல்லையா"
என்று சிரித்தபடி.
"ம்... ஆசைதான்... அப்பத்தானே இல்லாத சில்மிஷம்
பண்ணலாம் பாருங்க" என்று கூறியபடி சிரித்தவள், "நல்லவேளை...
அதுல இருந்து இப்பவரைக்கும்... எனக்கு மயக்கமே வர்றதில்லை.''
உடனே பாரதி "அப்படீன்னு நீ நினைக்கிறே... உன் வயித்துல
என் புள்ள வளரும் போது அப்போ... உனக்கு... வாந்தி, மயக்கம்
எல்லாம் வரும், அப்போ உன்னை தூக்காமலா இருக்கப் போறேன்"
என்றான்.

நூர்ஜஹான் சுலைமான்
107

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


'வர வர... உங்க குறும்பு தாங்கலேப்பா, சின்னப்புள்ளைங்க
மாதிரி நடந்துக்கிறீங்க. சரி... அது போகட்டும். உங்க தங்கைங்க...
என்னைப்பத்தி என்ன சொன்னாங்க...'' என்றாள் ஆவலுடன்.
அவள் ஆர்வத்தைப் புரிந்த கொண்ட பாரதி, விளையாட்டாக
“ம்... சொல்லவ?... சொன்னா கோவிச்சுக்க மாட்டியே, சொல்றேன்.
அதாவது... என்ன அண்ணா இருந்திருந்து... இந்த முப்பத்தஞ்சு
வயதுக் கிழவிதான் உனக்குக் கிடைச்சாளான்னாங்க"
"அப்படியா... சொன்னாங்க, நீங்க மட்டும் குமரன்னு
நினைச்சுட்டாங்க போலிருக்கு" என்றான் பொய்க் கோபத்துடன்.
"ஏய் அதுக்குள்ளே நீ கோபப்பட்டுடாதே. உண்மையைச்
சொன்னா... அண்ணி இவ்வளவு அழகா இருக்கிறாங்க.
உண்மையிலேயே நீ ரொம்ப குடுத்து வச்சிருக்கேன்னாங்க."
"நளினி... நாளையில இருந்து நம்ம வீட்ஒல கல்யாணக் களை
கட்டிடும். இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம்... அப்புறம்
அப்புறம்... நான்..." என்று பாரதி.... சொல்வதற்குள்... இடைமறித்த
நளினி, நான் சொல்றேன்... "அப்புறம் நான் உங்க மனைவி
சரிதானே... என்று முடித்தாள்.
"சரி பாரதி... மணி பன்னிரெண்டாகுது. நீங்க தூங்குங்க. நான்
போறேன்" என்று கட்டிலிலிருந்து எழுந்து கொண்டாள்.
"ஏன் நளினி... என்னைப் பாத்தா உனக்குப் பயமா இருக்குதா?"
'எனக்கா பாரதி, எனக்கு உங்க மேலே பயத்தைவிட
பாசம்தான் என் மனசு நிறைய இருக்கு..." என்று தன் நெஞ்சில்
கைவைத்துக் காட்டுகிறாள்.
"எங்கே காட்டு... எவ்வளவு பாசம்னு நான் பார்க்கிறேன்"
என்று அவன் அருகில் அவன் எழுந்து வந்தான்.
"யப்பா!... ஆளை விடுங்க, நான் ஓடிடுவேன்' என்று நளினி
தான் குடித்த பால் டம்ளரை எடுத்துக்கொண்டு... பாரதியின்
அறையை விட்டு ஓடி விடுகிறாள்.
'அந்த மிச்சப்பாலைக்கூட... எனக்குக் குடுக்காம எடுத்துட்டு
ஓடுறா பாரு..." என்று சிரித்தபடி... பாரதி விளக்கை
அணைத்துவிட்டுக் கட்டிலில் சாய்கிறான்.

பொழுது புலருமா?...
108

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அத்தியாயம் 14
அவன் மனம், அவன் உடல்நிலையை எண்ணிக் கவலை
கொள்கிறது. நல்ல உடல் நலத்துடன் திடகாத்திரமாக
இருக்கும்பொழுது, காதல் கைவிட்டுப் போனது. முதல் அட்டாக்
வந்து இப்பவோ, அப்பவோன்னு ஆன இந்த நேரத்துல எதிர்பாரா
விதமா, நளினியைக் கண்டதும் மீண்டும் காதல் கைகூடி வந்திருக்கு.
இதுதான் விதியின் விளையாட்டுப் போலும்.
இருந்தாலும் என் குடும்ப டாக்டர்கிட்ட என் உடல் நிலையைப்
பரி சோதித்தது மட்டுமில்ல; டாக்டரோட
கேட்டுட்டுத்தான் வந்திருக்கேன். டாக்டர்கூட... இப்ப உங்க உடம்பு
நல்ல திடனாகத்தான் இருக்கு, நீங்க கல்யாணம் பண்றதுல எந்தப்
பிரச்சினையும் இல்லேன்னுதான் சொல்லியிருக்கார். ஆனாலும்
எனக்குள்ள கவலை இப்ப என்னான்னா... எனக்கு நெஞ்சு வலி
இருந்ததே... அதுக்காக நான் மாத்திரை சாப்பிடுறது... முதல்
அட்டாக் ஆகி நான் ஆஸ்பித்திரியில் அட்மிட் ஆனது எதுவுமே
நளினிக்குத் தெரியாது. இதுவரைக்கும் நானும் எதுவும் சொல்லாம
மறைச்சுட்டேன்... பாரதி... நெற்றியைச் சுருக்கியபடி யோசிக்க
ஆரம்பித்தான்.
கல்யாணத்துக்குப் பிறகு என் நோய் பற்றி நளினி
தெரிஞ்சுக்கிட்டு, ஏன் சொல்லாம மறைச்சிட்டீங்கன்னு கேட்டா...
என்ன சொல்றது? நாளைக்கு மனைவியா வரப்போறவள்கிட்ட நான்
மறைச்சது சரியா? வீட்டுல அம்மா தங்கச்சிகளும்கூட, இது விசயமா
மூச்கவிடமாட்டாங்க.
நான் சொல்லப்போற சேதிய; தாங்கிக்கிற மனவலிமை
அவளுக்கு இருக்குமா? வாழ்க்கையில் காலம்பூரா கஷ்டப்பட்டவ.
இனி... வரும் காலமாவது அலளுக்கு வசந்தம் நிறைஞ்சதா
இருக்கட்டுமே. ஆமாம்... நான் எதுவுமே சொல்ல
வேணாம்.
புயல் ஓஞ்ச நிலையில இனிமேலாவது அவள் தென்றலின்
சுகத்தை அனுபவிக் ட் ுமே.பாரதியின் மனம் இப்படியெல்லாம்
அசை போட்டது தானாக அவளுக்கு விஷயம் தெரியவரும்போது,
அப்போது பேசலாம். அதுவரையில் பேசாம இருப்பதுதான் நல்லது.
மன உறுதியுடன் பாரதி ஒரு முடிவுக்கு வந்தான்... கடவுனே... எந்தக்

நுார்ஜஹான் சுலைமான்
109

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


காரணத்துக்காக என்னை அவனோடு இணைச்சு வச்சியே, அது
பொய்யாகிடக்கூடாது, என்னைப் பொறுத்தவரைக்கும் காதல்...
கண்களை உண்மையானத ு; புனிதமானது. ஆமாம் புனிதமானது... தூக்கம்
மெல்ல... மெல்லத் தழுவியது.
இத்தனை காலத்துக்குப் பிறகு அவனையும் அறியாமல்...
நிம்மதியாகத் தூங்கினான் என்றால் அது நளினி வந்த பிறகுதான்.
பாரதி குறட்டைவிட ஆரம்பித்தான். புயலுக்குப்பின் அமைதி வரும்
என்பார்களே அதுபோல் கவலையற்று பாரதி உறங்கினான்.
'ஐயா... ஐயா... நேரமாச்சு. அலுவலகம் போகலியா?...''
வேலைக்காரி சுசிலா... பாரதியின் அறைக்கு வெளியே... நின்றவாறு
குரல் கொடுத்தான், பாரதி பத்துநான் விடுமுறை என்பது,
அவளுக்குத் தெரியாது. பதிலேதும் இல்லாததால் மறுபடியும் குரல்
கொடுத்தாள். ஒருமுறை பாரதி... ராத்திரிபூரா தூங்காமல் விடிந்த
பிறகும் தூங்கியது. பிறகு நேரம் கடந்து எழுந்து, சுசிலா திட்டு
வாங்கியதும் ஞாபகத்துக்கு வந்தது. என்ன இந்த ஐயா... அலுவலகம்
போக எழுந்திருக்காமல், இப்படித் தூங்குறாரே என்று புலம்பிக்
கொண்டிருந்தவள், திடீரென அலாரம் சத்தம் கேட்டதும்... வாரிச்
கருட்டிக்கிட்டு எழுந்த பாரதி... உடனே அலார ஒலியை நிறுத்தி
விட்டு கடிகாரத்தைப் பார்த்தான், மணி 7.30 ஆகி இருந்தது.
வாசலில் நின்று கொண்டிருந்த சுசிலாவைப் பார்த்ததும்...''சுசிலா,
இன்னும் ஓரு வாரத்துக்கு என்னைத் தொந்தரவு படுத்தாதே...
இப்போ நீ போன்னு சொல்லிட்டு... அலாரத்தை மறுபடியும் பத்து
மணிக்கு வைத்துவிட்டு... ''சுசிலா... நளினி எழுந்திருச்
சிட்டாங்களா?...' என்றான்.
'ஐயா... மேடம் குளிச்சிட்டு இருக்காங்க. அவுங்க
ஆறுமணிக்கே எழுந்திருச்சுட்டாங்க ஐயா... என்றதும்,
''சரி... நீ போ'' என்று சொல்லிட்டு... மறுபடியும் போர்வையை
இழுத்து மூடியபடி இன்னிக்கு ஒள்பது மணி வரைக்கும்
தூங்கலாமின்னு கண்களை மூடியபோது... மறுபடியும் சுசிலா...
'ஐயா காப்பி கொண்டு வரட்டுமா? என்றாள். எது எப்படின்னாலும்
அவள் கடமையை 9ழுங்காகச் செய்ய ளை
குறிக்கோளில், அவளை உசுப்பினாள்.
'அடடாடா!... சும்மா தொண தொணக்காம போ... எனக்கு
காப்பி வேணாம். நளினிக்கு என்ன தேவையோ அதை... கவனமா

பொழுது புலருமா?.
110

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


கேட்டுச் செய், என்ன? புது எடம்... அவுங்கள நல்ல கவனிச்சுக்க'
எள்றான்.
மெல்லச் சிரித்தபடி... கதவை மூடிவிட்டு அங்கிருந்து
நகர்ந்தாள். மனதிற்குள்... ஐயா!... இந்த ஐயாவுக்கு என்ன ஆச்சு?
மேடம் என்ன சின்னப்புள்ளயா?... சிங்கப்பூர்ல பிறந்து, வளர்ந்த
அவர்களுக்கு என்ன தெரியாது? புரியலியே, தலையை ஆட்டியபடி
அடுக்களைக்குள் நுழைந்து விடுகிறாள்.
பாரதி படுக்கையில் கிடந்தாலும், அவன் மனம் மட்டும்... எதை
எதையோ எண்ணி அசை போட்டது.
என்ன ஆச்சர்யம்! நானா... இப்படித் தூங்கிட்டேன்?...
அலாரத்தைப் பார்த்தான். பத்து மணிக்கு இன்னும் நேரம் இருக்கு.
அதுவரைக்கும் ஒரு குட்டித் தூக்கம் போடலாமேன்னு கண்களை
மூடியவாறு ஒருக்களித்துப் படுக்கலானான். மூடிய கண்களில்... தன்
முத்துப் பற்கள் வரிசை பிடித்து நிற்க... பாரதியை மோகனப் பார்வை
பார்த்தபடி... பாரதியின் அறைக்கதவைத் திறந்துவிட்டபடி
அப்படியே... நின்று விடுகிறாள்.
மூடிய விழிகளைத் திறந்த பாரதி, வாசலைப் பார்த்தான். கதவு
மூடியபடியே இருந்தது. எல்லாம் மனப் பிரம்மை என்று
நினைத்தவன் கண்களை மூடிக்கொண்டான். உண்மையில் இந்தக்
காலைத் தூக்கம், பாரதிக்குத் தென்றல் தாலாட்டுவது போல்
இருந்தது இத்தனை காலமாக இந்தச் சுகத்தை அனுபவிக்காமல்...
வேலை வேலைன்னு அலைஞ்சிட்டோமேன்னு... இப்பத்தான் பாரதி
முதல் முறையாக வருத்தப்பட்டு உணர்ந்தான். இதற்குள் நளினி...
காலைக்கடன்களை முடிச்சிட்டு ஈரத்தலையுடன்... வெளியே
வந்தாள். தன் சுருண்ட கூந்தலை எடுத்து நுனியில் முடிச்சுப்
போட்டுக்கொண்டாள்.
மஞ்சள் பூசிய முகத்தில் அலட்சியமாக நெற்றியின் முன்புறம்...
அவளின் சுருண்ட முடி.. லோலாக்குப் போல் காற்றில்
ஆடிக்கொண்டிருந்தது... அவளின் அழகுக்கு மேலும்
மெருகூட்டியது.
‘அப்பப்பா!... இப்படிக்கூட அழகா இருப்பாங்களா? ஐயா...
ரொம்பக் குடுத்து வச்சவர். மேடம் மகாலட்சுமி மாதிரி
இருக்காங்க. எல்லாருக்குமா... இப்படி ஒரு அழகான முக லட்சணம்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அமைஞ்சிருக்கு. சிரிப்புல நடிகை கே.ஆர். விஜயவை
மிஞ்சிடுவாங்க போலிருக்கு.’ சுசிலா இப்படி...தனக்குள் எண்ணிக்
கொண்டிருக்கும்போது, நளினி அவள் நினைவுக்கு முற்றுப்புள்ளி
வைப்பவள்போல், ஆமா!... சுசிலா... இன்னிக்கு காலை டிபன்
என்ன?" என்றாள்.
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்... நளினியையே
பார்த்துக்கொண்டிருந்தாள்.
என்ன சுசிலா... என்னையே பாத்துக்கிட்டு இருக்கியே...
தவிர, நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலியே...'' என்றாள்.
அவள் தோளை உலுக்கியவாறு.
கனவு கண்டு எழுந்தவள்போல்... ''என்னம்மா... காலையில
என்ன டிபன்னு கேட்டீங்களா?...''
"ஆமாம்!... என்றாள்.
"வந்து... அம்மா... தோசை, இட்லி, சட்னி, சாம்பார் அப்புறம்
வடை பாயசம்கூட செய்து இருக்கேம்மா" என்று மூச்சு விடாமல்
அடுக்கிக் கொண்டே போனாள்.
“ஐயா இன்னும் எழுந்திருக்கலியா? பெயம்மாவையும்
காணோம்" என்றாள்.
''மேடம், ஐயாவுக்கு ஒரு வாரம் லீவாம். ஒரு வாரத்துக்கு
ஆபிஸுக்கு போக மாட்டாங்களாம்.''
"அதனால் இன்னும் தூங்கிட்டு இருக்காங்களா?..."
“ஆமாங்கம்மா பெரியம்மா டிரைவரை அழைச்சுக்கிட்டு
மார்க்கெட்டுக்குப் போயிருக்காங்க. வந்த பிறகுதான் என்ன
சமையல்னு தெரியும் மேடம்... முதல்ல நீங்க பசியாறறீங்களா?''
என்றாள் பணிவுடன்.
"இல்ல சுசிலா... இப்ப வேணாம். எல்லாரும் வந்ததும் சேர்ந்தே
சாப்பிடலாமே."
"அப்போ இந்தாங்கம்பா... இப்பதான் குளிச்சிட்டு
வந்திருக்கீங்க. முதல்ல சுடச்சுட காப் ப ியக் குடிங்க" மேடம்.
பணிவுடன் சுசிலா கொடுத்த காப்பியை கையில் வாங்கிய நளினி...
மனம் கசிந்து போனாள்.

பொழுது புலருமா?...
112

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


வாழ்க்கை பூரா மத்தவங்களுக்கு வேலைக்காரியா இருந்து
உழைச்சவளுக்கு... இன்னிக்கு ஒரு வேலைக்காரப் பொண்ணு
தன்னிடம் காட்டும் அடக்கமும், அன்பும் நளினியின் மனசை
நெகிழ வச்சுடுச்சு.
சூடான காலைக் காப்பியை குடித்தவாறு சுசில
"உனக்கென்ன வயசு.... எந்த ஊரு? ... கல்யாணம் ஆயிடுச்சா?"
என்று சரமாரியாகக் கேள்விகள் கேட்டாள்.
தன்னைப் பற்றி அக்கறையுடன் நளினி விசாரித்தது
சுசிலாவுக்கு உண்மையிலேயே... நளினியின் மேல்... ஒரு உயர்ந்த
அபிப்பிராயத்தையே ஏற்படுத்திடுச்சு.
"மேடம்!... இதுவரை யாருமே என்னப்பத்தி இவ்வளவு
அக்கறையா விசாரிச்சது இல்லிங்க. என்னோட கதை என்னம்மா
அன்னாடங்காச்சி குடும்பம், குடிசை வாழ்க்கை... வேலைக்குப்
போகாத புருஷன், குடிகாரன், சூதாடி... எளக்கு ரெண்டு
பொட்டபயப் புள்ளைங்கம்மா. ஒன்பது, பத்துன்னு வயசு. மாமனார்,
மாமியார், கொழுந்தன், நாத்தனாருன்னு பெரிய குடும்பம்தாம்மா
ஆனா... அவுங்க கிட்ட எல்லாம்... பணமும் இல்ல... நல்ல
இல்லம்மா, ஊரு ஒரத்தநாடு. எனக்கும் அப்பா, அம்மா, கூடப்
பொறந்தவங்க எல்லாரும் உண்டும்மா, அவுங்க தயவுலதான் நான்
இப்ப சிங்கப்பூர்ல வேலைக்கு வந்திருக்கேன். மூணு வருஷமாச்சு...
"இன்னும் ஓருவருஷத்துல பர்மிட் முடிஞ்சு போயிடும்.
அப்புறம் ஊருக்குப் போயிட வேண்டியதுதான். மேடம்!... இந்த
வீட்டுல எனக்கு எந்தக் குறையுமில்லாம, எல்லாருமே... என்னை
ரொம்ப நல்லாவே கவனிச்சுக்கிறாங்க, அதிலேயும்... நம்ம ஐயா
ரொம்பவே... நல்லவரும்மா" என்று மூச்சுவிடாமல் கூறி முடித்தாள்.
சுிலா, பாரதியைப் பற்றி பேசும்போது நளினி மெல்லப்
புன்னகை புரிந்தாள்.
''மேடம் இன்னொரு விஷயமுங்க. ஐயா!... என் புருஷனைக்
கூட இங்க வரவழைச்சு, வேலை குடுக்குறதா சொன்னாங்க.
உதவாக்கரை புருஷன், ஊருவுட்டு ஊருவந்தாலும், நாய் வாலை
மட்டும் நிமிர்த்த முடியாதுங்க, அத மனசுல வச்சுக்கிட்டு, நான்தான்
கடைசியில வேணாமின்னுட்டேங்க. வாய் பேசிக்கிட்டிருந்தாலும்,
கை பீங்கான் மங்குகளைக் கழுவிக் கொண்டிருந்தது.

நூர்ஜஹான் சுலைமான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


சுசிலா, படிக்காத கிராமத்துப் பொண்ணாக இருந்தாலும்,
அவளின் அறிவான பேச்சு, படிச்சவங்களையும் மிஞ்சிடும்போல்
இருந்தது. பாரதியைப் பார்க்கும் வரையில், நளினிக்கு வாழ்க்கை,
பெரும் சுமையாகத்தானே இருந்தது. இன்னிக்கு நளினி சுகமான
வாழ்க்கையைப் பாரதி மூலமாக அனுபவிக்கப் போகிறாள்.
இது போல் சுசிலாவின் வாழ்க்கையிலும், நிச்சயம்
முளைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. "கவலைப்படாதே
சுசிலா... நிச்சயம் ஒருநாள், உன் கணவர் திருந்துவார். நீயும் நல்லா
இருப்பே" என்று சமாதானம் கூறியவள், 'சுசிலா... இன்னிக்கு
எல்லாருக்கும் நான்தான் சமையல் செய்யப்போறேன். உனக்கு வேற
வேலை இருந்தா போய்ப்பாரு, என்ன" என்றான்.
சுசிலா... ஒரு நிமிஷம் மங்கு கழுவுவதை நிறுத்திட்டு...
மேடம்... உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?..." என்று
ஆச்சரியத்துடன் கேட்டாள்.
"இது என்ன கேள்வி?... பொண்ணாப் பொறந்தவளுக்கு
சமைக்கக்கூடவா தெரியாது" என்று கூறியவள், "சரி... சமையல்
பொருள்களெல்லாம் எங்கெங்கு இருக்குதுனு சொல்லிடு. மத்ததை
நான் பாத்துக்கிறேன்..."
"சரிங்க மேடம்... நீங்க சமையல் செய்யும்போது நான் போய்
ஐயாவோட சட்டைக்கு அயர்ன் போட்டு வச்சிடுறேம்மா..." என்று
சமையலுக்குத் தேவையான பொருள்கள் எங்கெங்கே
இருக்குதுன்னு காட்டினாள். "வேற ஏதாவது தேவைப்பட்டா... ஓரு
குரல் கொடுங்க, ஓடி வந்திடுறேம்மா"ன்னு... சொல்லிட்டு... அந்த
இடத்தை விட்டு நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.
இதைக் கவனித்த நளினி, என்ன சுசிலா!... எங்கிட்ட வேற ஏதாவது
சொல்லணுமா?" என்று கேட்டாள்.
'ம்.. வந்து.. மேடம்!... நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க...
சுசிலா தான் சொல்ல நினைத்ததை சொல்லியே விட்டாள். இதைக்
கேட்டதும் கலகலன்னு சலங்கை ஒலிபோல் சிரித்த நளினி... 'ம்...
எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க.
"இதோ!... இதுதான்... நீங்க சிரிச்சா... உங்க கன்னத்துல குழி
விழுதே... அது... இன்னும் அழகா இருக்குது மேடம். கன்னத்துல...
குழி விழுந்தா... அதிர்ஷ்டம்னு சொல்வாங்க."

பொழுது புலருமா?...
114

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"அப்படியா!... சரி சரி நேரமாச்சு... இப்படியே பேசிக்கிட்டு
இருந்தா... வேலை ஒண்ணும் நடக்காது. அம்மா வர்றதுக்குள்ளே
நான் இந்த வெங்காயம், கிழங்கு எல்லாம் வெட்டி வைக்கிறேன்.
நீ... உன்னோட வேலைய முடிச்சிட்டு வந்துடு" ன்னு
வெளியே கார் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.
''அம்மா மார்க்கெட்டுக்குப் போய்ட்டு வந்தாச்சு மேடம். நான்
போய் கதவைத் திறந்து விடுறேன்"னு... போகப் போனவளை ஒரு
நிமிஷம் இரு என்ற நளினி, அவளைப் பார்த்து 'என்ன இருந்தாலும்
நீ எனக்கு ரொம்பத்தான் ஐஸ் வைக்கிக்றே...'' என்றவாறு சிரித்தாள்.
உடனே... சுசிலா... "இல்லேம்மா உண்மையைத்தான்
சொல்றேன்" சொல்லிவிட்டுப் பதிலுக்குக்கூடக் காத்திராமல்
வாசலுக்கு ஓடினாள்.
தனிமையில் விடப்பட்ட நளினி சுசிலா சொன்னதைப்பற்றி...
எண்ணிப் பார்த்தாள். உலகத்தில் அழகு மட்டும் போதாது.
அதிர்ஷ்டமும் வேண்டும். அவள் வாழ்ந்த வாழ்க்கையில் வாழ்வா,
சாவாங்கிற போராட்டத்தை அதிகம் சந்தித்தவள். ஏதோ
அதிர்ஷ்டம் இருக்கப் போய்த்தான்... கடவுள் புண்ணியத்துல...
பாரதியைக் காணும் பாக்கியத்தையும் பெற்றாள். பூவோடு சேர்ந்த
நாரும் மணக்கும் என்பது போல் இனிவரும் காலங்களை, தன்
காதல் கணவராகப் போகும் பாரதியோடு அவள் சேர்ந்து
வாழப்போவதை யாராலும் தடுக்க முடியாது இப்படித் தன்
மனசோடு... தன் வாழ்க்கையை... உணர்வுக் கல்லில்
உரசிப்பார்த்தபடி இந்த உலகத்தையே மறந்திருந்த நளினி...
சுசிலாவின் குரல்கேட்டு... நிஜ உலகத்துக்கு வந்தாள்.
"மேடம் இன்னிக்கு அம்மா... கோழி வாங்கிட்டு
வந்திருக்காங்க... என்றவள், நளினியிடம் பதிலேதும் வராததால்
மறுபடியும் பக்கத்தில் வந்து குரல் கொடுத்தபிறகே... நளினி தன்
நிலை உணர்ந்தவளாக... என்ன சுசிலா, கூப்பிட்டியா.. என்றாள்.
"சரியாப்போச்சு, உங்களை நான் எத்தனை தடவை
கூப்பிட்டேன் தெரியுமா?... மேடம்."
ஓ... அப்படியா! எதையோ யோசிச்சுக்கிட்டு இருந்தேனா...
நீ கூப்பிட்டது காதுல விழலை" என்று... எப்படியோ சமாளித்தாள்.
மார்க்கெட் சாமான்களை... நளினியிடம் கொடுத்து விட்டு

நூர்ஜஹான் சுலைமான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


போய்
அவசரமாக பாரதியின் துணிகளுக்கு அயர்ன் போடப்
விட்டாள். மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வந்த களைப் பில்...
காமட்சி சோபாவில்... கண்களை மூடியபடி அப்படியே
சாய்ந்துவிட்டார்.
நளினிக்கு சமையலைப்பற்றிச் சொல்லியா கொடுக்கணும்.
காமாட்சி வாங்கிட்டு வந்த கோழியை... அவளுக்குத் தெரிந்த
அளவில் அவள் திறமையைச் சமையலில் காட்ட ஆரம்பித்து
விட்டாள்.
அத்தியாயம் 15

அயர்ன் போட்டு முடித்த சுசிலா... சிறிது நேரத்தி


வந்து நளினிக்கு ஒத்தாசை செய்ய
சமையலறைக்கு
நினைத்தவளுக்கு ஒரே ஆச்சரியம். ''என்னம்மா!... சமையலை ஒத்தாசை
பண்ணலாமோன்னு வந்தா... அதுக்குள்ளே
வகைங்களா!...
முடிச்சிட்டீங்க போலிருக்கு. அடடா!... இத்தனை சமைச்சு
இவ்வளவு வகையையும் எப்படிம்மா.... சீ க க
் ிரம்
முடிச்சீங்க."
கசிலா...
"ஏதோ!... எனக்குத் தெரிஞ்சதை செஞ்சு முடிச்சேன்.
குழம்பை கொஞ்சம் ருசி பார்த்துச் சொல்லேன்."
இல்லேம்மா. குழம்போட மணமே...
"தேவையே
சொல்லுதே... சமையல் பிரமாதம்னு பேசிகொண் ட ிருக்கும்
போதே..." ஹாலில் படுத்திருந்த காமாட் ச ியம் மாள்...
சமையலறைக்குள் நுழைந்து விட்டார்.
'என்ன நளினி, நீ இங்கேயா இருக்கே?... ரூம்ல
இருக்கியோன்னு நினைச்சேன். பசியாறிட்டியா?..."
'இன்னும் இல்லேம்ம...'' என்றாள்.
உடனே சுசிலா... "பெரியம்மா... இன்னிக்கு மேடமே
சமையலை ரொம்ப சீக்கிரமா முடிச்சிட்டாங்க" என்றாள்.
"அப்படியா!... இன்னிக்கு எனக்கு ஒரே மயக்கமா இருந்துச்சு.
அதான் சமையலறைப் பக்கம் எட்டிப் பார்க்கலை. எப்பவும்
நான்தான் சமைப்பேன். சுசிலா எனக்கு ஒத்தாசை பண்ணுவாள்''னு...
பேசிக்கிட்டே... ஒவ்வொரு பானையாகத் திறந்து பார்த்தார்.
கூட
‘பரவாயில்லியே... ஆளும் அழகா இருக்கா சமையல்ல

பொழுது புலருமா?...
116

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


இல்வளவு கெட்டிக்காரியா... இருக்கிறாளே...’ என்ற பெருமிதம்
அவர் முகத்தில் தெரிந்தது.
இதைக் கவனித்த சுசிலா... "அம்மா!... மேடம்... இவ்வளவு
சீக்கிரமா சமைச்சு முடிச்சிட்டாங்க, எத்தனை வகைகள்
பார்த்திங்களா?..."
"சுசிலா... இது ஒண்ணும் பிரமாதமில்லை. எல்லாம்
கைப்பழக்கம்தான். கடையில்... நாலு அடுப்பிலேயும்... நாலு
விதமான குழம்பு கொதிக்கும். எனக்கெல்லாம் மெதுவா... வேலை
செய்யத் தெரியாது" என்றாள். அமைதியாக.
'ம்... சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும்
நாப்பழக்கம்பாங்க. பொம்பளைங்கன்னா இப்படித்தான்
இருக்கணும், சரி... இன்னுமா பாரதி எழுந்திருக்கலை, மதியம்
சாப்பிடற நேரம் ஆயிடுச்சு" என்று சொல்லி வாய்மூடுமுன்,
"அம்மா... நான் அப்பவே எழுந்திருச்சிட்டேன். பசிக்குது...
பசியாற எடுத்து வையுங்க" என்றான் நளினியைப் பார்த்தபடி.
பாரதியைக் கண்டதும், பசியாற தட்டுகளைத் தயார் படுத்திக்
கொண்டிருந்தாள் நளினி...
சுசில ஒவ்வொன்றாக எடுத்து சாப்பாட்டு மேசையில்
வைத்தாள்.
நளினி சுடச்சுட காப்பியை ஆற்றி... சமையலறை வாசலில்
நின்றிருந்த பாரதியிடம் நீட்டினாள். சுருளாக நெற்றியின் முன்புறம்
தொங்கிக் கொண்டிருந்த சுருண்ட முடியை... அலட்சியமாக...
இடதுகையால் பின்னுக்குத் தள்ளினாள்.
ஒருகணம், அந்த அழகிய காட்சி... அவள் மனசைச் சுண்டி
இழுத்தது அவளிடமிருந்து காப்பியை வாங்கிய பாரதி... "இதுதான்
நீ என்னைக் கவனிக்கிற லட்சணமா...?'' என்றான்.
"ஏன்... என்ன ஆச்சு?" என்றாள்.
"இப்ப மணி என்ன? பெட் காப்பி கூட எனக்கு யாரும்
கொடுக்கலை. நான்தான் தூங்கிட்டேன். என்ன எழுப்பக்
கூடாதா?..."
"ஐயோ பாரதி... அப்படி எல்லாம் இல்ல. அசந்து தூங்கிட்டு
இருக்கிற உங்களை எழுப்ப வேணாமின்னுதான்... நான் பேசாம

நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


இருந்தேன்." ஐயே!...தப்பு பண்ணிடோமங்கிற பயமும்
அவளுக்கு இருந்தது.
"சரி சரி... பயந்துடாதே... சும்மா விளையாட்டுக்குத்தான்
சொன்னேன், வேலை ஏதாவது இருந்தா... இனிமே சுசிலா
பார்த்துக்குவா. நீ முதல்ல என்கூட பசியாற வா.. அம்மா!...
காத்துகிட்டு இருக்காங்க..." என்று அவசரப்படுத்தினான்.
மறுபேச்சில்லாமல் நளினி... அவன் பின் தொடர்ந்தாள். ஏனோ
தெரியலை, கல்யாண நாள் நெருங்க... நெருங்க... நளினி பாரதியைப்
பார்க்கக்கூட வெட்கப்பட்டாள்.
டேபிள்முன் பாரதியும் காமாட்சியும் அமர்ந்திருக்க... நளினி
அவர்களுக்குப் பரிமாறினாள்.
"நளினி!... நீயும் உட்கார்ந்து சாப்பிடு, நேரமாச்சு. சோறு
சாப்பிடுற நேரத்துல பசியாற உட்காந்திருக்கோம்..." என்று
நளினியைக் காமாட்சி வற்புறுத்தி உட்கார வைத்தார்.
"பாரதி... உனக்கொரு விஷயம் தெரியுமா?... நளினி சீக்கிரமா
சமையலையும் முடிச்சிட்டாள்ளா... பாத்துக்கோயேன்."
அம்மா!... அது ஒண்ணும் அதிசயமில்லை. அவ சமையல்ல
ரொம்பக் கெட்டிக்காரி..." என்றான்.
நளினியை ஓரக்கண்ணால் பார்த்தபடி கம்... ம்... தெரியுது...
இனிமே உனக்கென்னடா குறைச்சல். நளினி மாதிரி பொண்ணு
உனக்குக் கிடைக்க புண்ணியம் செஞ்சிருக்கணும், நீ இப்படியே...
இருந்திடுவியோன்னு நினைச்சேன். இப்ப அந்தக் கவலை எல்லாம்
எனக்கு இல்லை. உன்னைக் கவனிக்க ஒருத்தி வந்துட்டா, அதுவே
போதும், என் மனசுல உள்ள பாரம் இப்பத்தான் குறைஞ்சிருக்கு."
காமாட்சி அம்மாள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார், நளினி
மறுபடியும் தட்டில் இட்லி போட முனைந்தபோது கைகளால்
போதும்ன்னு தடுத்து விட்ட காமாட்சி... எழுந்து
போனார்.
துண்டால் கையைத் துடைத்தபடி பாரதியிடம் வந்த காமாட்சி
"பாரதி!... கொஞ்ச நேரம் பூஜை அறையில இருக்கேன், உன்
தங்கச்சிங்க வந்ததும் கடைக்குப் போயி... வேண்டியதை
வாங்கிட்டு வந்திடுறோம். சரியா?... காமாட்சி போகுமுன்... பாரதி

பொழுது புலருமா?...
118

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


எழுந்து கையலம்பிவிட்டு... கால்சட்டைப் பையிலிருந்து...
கத்தையாகப் பணத்தை எடுத்துத் தாயாரின் கைகளில் திணித்தான்.
பணத்தை வாங்கிக்கொண்ட காமாட்சி நேராகப் பூஜை
அறைக்குப் போய்விட...
பாரதி... நளினியிடம், "எல்லாம் கவனமாப் பாத்து வாங்கிட்டு
வந்துடுங்க எனக்கு... வெளியே கொஞ்சம் வேலை இருக்கு.
போய்ட்டு சீக்கிரம் வந்துடறேன் என்ன... புரியுதா!..." என்றான்.
நளினி பதிலேதும் சொல்லாமல்,... சாப்பிட்ட கையைக் கழுவியபடி,
பாரதியைப் பார்க்கிறாள். கண்களில் கண்ணீர் கொட்டுகிறது.
உதடுகள் துடிக்க... நளினி பாரதியின் கைகளைக்
கொட்டியாகப் பிடித்தபடி... பாரதி... இந்தப் பட்டுப்போன
மரத்துக்குக்கூட நீர் ஊற்றித் துளிர வச்சிருக்கீங்க. எனக்காக உங்க
வாழ்க்கையையே... தியாகம் பண்ணி இருக்கீங்க. காதலுக்கு இப்படி
ஒரு சக்தி இருக்குதுன்னு உங்க மூலமாகத்தான் நான்
தெரிஞ்சுக்கிட்டேன். இதுக்கெல்லாம் நான் உங்களுக்கு என்ன
கைம்மாறு செய்யப் போறேன்னு... தெரியலை பாரதி."
பாரதியின் கைகளைத் தன் கண்களில் ஒற்றியபடி கண்ணீர் விட்டாள்.
நளினியின் இந்த எதிர்பாராத கண்ணீர்... பாரதியை
நிலைகுலைய வச்சிடுச்சுன்னுதான் சொல்லணும். செய்வதறியாது
திகைத்தவன் ஒரு கணம் மெளனவாக இருந்த பிறகு... மனம் கசிந்து
அழும் நளினியைத் தேற்ற எண்ணியவனாக அவன் கைகளில்...
தன் முகத்தைப் புதைத்தபடி அழுது கொண்டிருந்த அவளின்
முகத்தை நிமிர்த்தி... கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத்
தன் விரல்களால் துடைத்து விட்டபடி... "நளினி!... இதப்பாரு...
இனிமே உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் இந்த
பூமியில விழுந்தாலும் என் மனசு தாங்காது, இனிமேல்... நீ
எதைப்பத்தியும் யோசிக்கக்கூடாது. நீ கண்ணீர் விட்டு அழுதது...
இதுதான் கடைசி முறையா இருக்கணும். நாம அழப் பிறந்தவங்க
இல்ல... ஆளப் பிறந்தவங்க... வாழப் பிறந்தவங்க. புரிஞ்சுக்க...
நம்மைப் பிடிச்சிருந்த பீடை எல்லாம்... ஒழிஞ்சிடுச்சின்னு
நினைச்சிக்க, இனிமேதான் நாம ரெண்டு பேரும் சந்தோசமா வாழப்
போறோம். நிச்சயமா வாழ்வோம். என்னை நம்பு நளினி நான்
சொன்னது சரிதானே... என்றான்.

நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


நளினி பாரதியின் நெஞ்சில் சாய்ந்தவாறு... "பாரதி... உங்க
வீட்டுல உள்ளவங்களும் என்னை அன்பாத்தான் நடத்துறாங்க. மக
பெரிய குடும்பத்துல வாழ்க்கைப்பட்டு... பிரமாதமா வாழப்
போறான்னு... எங்கப்பா கூட இப்ப உயிரோடு இருந்தாருன்ன...
உங்களைக் கையெடுத்துக் கும்பிடாம இருக்கமாட்டாரு...
"பாரதி!... உங்களுக்குன்னு குடுக்கிறதுக்கு என்கிட்ட எதுவுமே
இல்லை, என் உசிரைத்தவிர..." என்று சொல்லும்போதே... அவள்
தொண்டை கரகரத்தது.
பாரதி... அவள் தலையைக் கோதியவாறு... "இப்படியெல்லாம்
நீ பேசலாமா? நீ எப்பவோ... எங்க வீட்டுக்கு வரவேண்டிய
மகாலட்சுமி. உங்கப்பா ஒரு வகையில... எனக்கு நன்மையைத்தான்
செய்திருக்காரு என்னை உங்கப்பாவுக்குப் பிடிக்காததனால்தானே
நான் கம்பத்தை விட்டே வெளியேறினேன். அப்படி...
வெளியேறினதுனாலத்தான்... ரோஷத்தோட... உழைக்க
ஆரம்பிச்சேன். நல்ல நிலைமைக்கும் வந்தேன். ஒருவேளை...
அதே கம்பத்துலேயே இருந்திருந்தா... ஓருவேளை நான்
பைத்தியமாகக்கூட ஆகியிருக்கலாம். கடவுளோட சித்தம் நீ
எனக்குக் காலங்கடந்து கிடைச்சிருக்கே. நீ... எனக்குக் கிடைச்ச
புதையல் நளினி. இனி... எப்பவுமே உன்னைத் தொலைச்சிட
மாட்டேன், இனிமேல் நீதான் எனக்கு எல்லாம், என்னோட பலமும்,
பலகீனமும் நீதான். அதனால் உன் முகத்துல நான் எப்பவும்
சிரிப்பைத்தான் பார்க்கணும். எங்கே... கொஞ்சம் சிரி...
பார்க்கலாம்." நளினியின் முகத்தை... நிமிர்த்தி... ''சிரியேன்...
உன்கிட்ட பணமா கேட்டேன், சிரிக்கத்தானே சொல்றேன்.
எனக்க... "சிரிக்கக்கூடாதா!..." பாரதி கொஞ்சினான்.
"போங்க பாரதி, இப்பவெல்லாம் உங்களைப் பார்க்கவே
எனக்கு வெக்கமா இருக்குது தெரியுமா?"
"ஏன்?... நான் என்ன பூதமா... இல்ல பேயா?..."
"தெரியலியே..."
"அப்போ! நான் பூதம்னு சொல்றியா? அழமுடியுற உன்னால
சிரிக்க முடியாதா? ஆனைப்பாரு."
“வெக்கமா இருக்கே..."

பொழுது புலருமா?...
120

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


குழந்தைத்தனமாகப் பேசும் நளினியின் மழலைப் பேச்சை
பாரதி மிகவும் ரசித்தான். "நளினி!... உன்னோட சுருண்ட கூந்தல்
என் மனசை எப்படி எல்லாம் மயக்குது தெரியுமா....?" பாரதியின்
பிடி இறுகியது. இடைவெளி இல்லா நெருக்கம் அவர்கள் இந்த
உலகத்தில் இல்லை என்று பறை சாற்றியது.
"நளினி!... இயற்கையாகவே நீ எவ்வளவு அழகா இருக்கே
தெரியுமா?..."
நளினி கண்களை மூடியபடி... “அப்படியா" என்றாள்.
"உன்னோட இந்த அழகுதான்... காலம்பூரா எப்பபேர்ப்பட்ட
பொண்ணுகளையும் ஏறெடுத்தும் பார்க்க விடாமல் வச்சிடுச்சு.
உங்கிட்ட உள்ள இந்த மயக்கம், அழகு, குழந்தைத்தனமான பயந்த
சுபாவம், இதெல்லாம்... என்னோட அடிமனசுல... ஆழமாப் பதிஞ்ச
விஷயங்கள். சின்ன வயசிலேயே... இதையெல்லாம் நெனச்சு
நெனச்சு... வாழ்ந்ததுனாலத்தான்... உனக்கு நிகரா வேறு எந்தப்
பொண்ணையுமே என்னால நினைக்க முடியலை. அந்த
நினைப்புக்கு இத்தனை சக்தி இருக்கிறதை... நீ எனக்குக் கிடைச்ச
பிறகுதான்... நானே உணர ஆரம்பித்தேன்."
“ம்... அப்படியா! ...
என்ன... அப்புறம்?... நான் என்ன... வேலை மெனக்கிட்டு...
கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்... என்று அவன் தோளை
உலுக்கினான். இதுதான் சமயமென்று... நளினி மெல்ல அவன்
பிடியிலிருந்து விலகினாள்.
"இப்படி நீ விலகிப்போனா விட்டுடுவேனா7?..." பாரதியின்
முகத்தில் அவன் வயசுக்கில்லாத குறும்பு இழையோடியது.
"அப்பப்பா உடும்புப்பிடி... இரும்பு மனுஷன் மாதிரி பலம்,"
"ஏய்! இரும்பு மனுஷன் மட்டுமில்ல... இரும்பு மனசும் கூட,
அதனாலத்தான் நீ ஒருத்திதான் என் காதலி... மனைவி... நீதான்
எனக்கு சகலமும்னு வாழ்ந்துட்டு இருக்கேன். அதை
மறந்துடாதே..."
"தெரியும்... தெரியும், நான் இல்லேன்னு சொல்லலை, நீங்க...
இப்படி எல்லாம் சில்மிஷம் பண்றதுக்கு இது நேரமில்லேன்னுதான்"
சொன்ளேன்.

நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"ஏன்... இதுக்கெல்லாம் நேரங் காலமா பாக்கமுடியும்.
அறுசுவை உணவை, பக்கத்துல வச்சுக்கிட்டு... அதைச்
சாப்பிடாதீங்கன்னு சொல்றமாதிரி இருக்குணு என்று அவன் இடுப்பைக்
கிள்ளினான்.
ஐயோ!... சும்மா இருங்க" என்று சிணுங்கியவள், "வீட்டுல
அம்மா, வேலைக்காரி எல்லாரும் இருக்கிறாங்க. நாம ஒண்ணும்
தனியா இருக்கலை... பாரதி."
"சரி... சரி... கூடிய சீக்கிரம் என்கிட்ட சிக்காமலா போயிடுவே.
அப்போ! உன்னைப் பார்த்துக்கிறேன்."
"சரி சாமி... எல்லாம் அப்போ பாத்துக்கலாம். இப்ப என்னை
விட்டுடுங்க" என்று சொல்லவும்... வாசலில் கார் வரும் சத்தம்
கேட்கவும் சரியாக இருந்தது. சமையல் அறையிலிருந்து சுசிலா...
வேகமா வெளியே வந்து... "ஐயா... அக்கா வீட்டுல எல்லாரும்
வந்துட்டாங்கன்"னு... வாயிற் கதவைத் திறக்க ஓடினாள். வெட்கம்
மேலிட... நளினியும் தன் அறைக்குப் போய் விடுகிறாள். எதுவும்
நடக்காததுபோல் பாரதியும் சிரித்தபடியே வெளியே வந்தான்.

அத்தியாயம் 16
தாமரையும், லலிதாவும் தங்கள் கணவர் குழந்தைகளுடன்
வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். பாரதியும் அவர்களை
வரவேற்று... சோபாவில் அமரச் செய்தான். குழந்தைகளுடன்
தானும் ஒரு குழந்தையாக அவர்களோடு சேர்ந்து கொண்டான்.
லலிதாவின் கடைசிக் குழந்தை பாரதியிடம், "மாமா!...
உங்களுக்குக் கல்யாணமா?" என்றாள் தன் மழலை மொழியில்.
சரி... எனக்குக் கல்யாணம்னு உன்கிட்ட யார் சொன்னாங்க?"
குழந்தையைப் போல அவனும் பேச ஆரம்பித்தான்.
அவளும் சளைக்காமல், "அம்மாதான் சொன்னாங்க மாமா"
என்று லலிதாவைக் காட்டினாள்.
"அப்படியா! உங்க அம்மா வேற என்னென்ன சொன்னாங்க?
மாமா சாக்லேட் தருவேனாம். நீ மறைக்காம சொல்லுவியாம்" என்று
குழந்தையைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டான். மாமா!...
எனக்கு பாவாடை சட்டை... எல்லாம் தருவீங்களா?"

பொழுது புலருமா...
122

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"அதானே பார்த்தேன். இதெல்லாம் உங்க அம்மாவோட
வேலையா? சரிம்மா, உனக்கு மாமா எல்லாம் வாங்கித் தர்றேன்
என்ன..." என்றான்.
அதற்குள்... தாமரையின் பைபயன்... "மாமா... மாமா...
எனக்கும் துணி வாங்கித் தருவீங்களா?..." என்று பாரதியின்
கழுத்தைக் கட்டிக் கொண்டு... முதுகில் ஊஞ்சல் ஆடினான்.
"சரி சரி... எல்லாருக்கும் வாங்கித் தர்றேன்... என்ன...ணு என்று...
பாரதியின் தோளிலும், மடியிலும் கிடந்த குழந்தைகளை சோபாவில்
உட்கார வைத்தான்.
காலா காலத்தில் பாரதிக்கும், நளினிக்கும் கல்யாணம்
ஆகியிருந்தால்... இன்னிக்கு வீடு இப்படியா இருக்கும்! பிள்ளை
குட்டின்னு வீடே அமளிதுமளிப்படாதா?... சின்ன வயசில் இல்லாத
தைரியம்... இரண்டு பேருக்குமே இப்போ நிறைய இருக்கு. நிச்சயம்
சாதிப்பார்கள். ஆமாம் சாதிப்பார்கள்.
"என்ன அண்ணா!... யோசனை பலமா இருக்கு போலிருக்கு."
தாமரை அவன் சிந்தளையைக் கலைத்தாள்.
ம்... அதெல்லாம் ஒண்ணுமில்லை. கேட்டீங்கல்ல... உங்க
இரண்டு பேர் குழந்தைகளும் பேசினதை? நல்ல ட்ரெயினிங்... ம்...
இப்படித்தான் இருக்கணும், குழந்தைகளுக்கு நல்ல விவரமாத்தான்
சொல்லிக் குடுத்திருக்கீங்க"
"அப்புறம் என்ன... மாமாவுக்குக் கல்யாணம்னா சும்மாவா..."
என்ற லலிதாவின் கேலியும், கிண்டல் பேச்சும் ஆரம்பமாயிடுச்சு.
எப்படியாவது தப்பித்தால் போதுமென எண்ணிய பாரதி...
லலிதாவின் கணவர் ராமுவிடம்... "என்னப்பா ராம்.. இந்த
அறுவையை வச்சு எப்படி சமாளிக்கிறே என்றான்.
ம்... தெரிஞ்சா சரி. உங்க தங்கச்சிதானே. நீங்களே
பாத்துக்கிடுங்க" என்று விளையாட்டாகக் கூறவும்...
"நான் என்ன அறுவையா?... அவருக்கு எதுவுமே...
தெரியாதுன்னு நீங்க எடுத்து விடுறீங்களா? அக்கா... கேட்டியா?
இன்னிக்குக் கப்பல் எந்தப் பக்கம் சாஞ்சிருக்குன்னு பாத்தியா?..."
பாத்தேன்... பாத்தேன்..." என்றதும்...

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


தாமரையின் கணவர் பாலு ... “நானும் பார்த்தேன்...
வருஷத்துக்குப் பிறகு... இன்னிக்குத்தான் உங்க அண்ணனோட
முகத்துல சந்தோஷத்தைப் பார்த்தேன்" என்றதும்... எல்லாரும்
உரக்கச் சிரித்து விட்டனர். அங்கு சிரிப்புக்குப் பஞ்சமில்லாமல்
இருந்தது.
பாரதிக்கு என்ன சொல்வதென்று புரியாமல் அசடு வழிய
நின்றான்.
"ஆமா அண்ணே... எங்க அண்ணி... அம்மா எல்லாம்" என்று
சுற்றுமுற்றும் பார்க்க ஆரம்பித்தான் லலிதா...
"போச்சு.. இரண்டு பேரும் சேர்ந்து... உங்க மனைவிய பாடாப்
படுத்தப் போறாங்க" என்று பாலு கூறவும்;
பாரதி மெல்லச் சிரித்தபடி... "நளினி... எல்லாத்துக்கும்
ஈடுகொடுக்கும் நாணலைப்போல உள்ளவ. அவ்வளவு சீக்கிரம்
ஏமாந்துடவும் மாட்டா; பயப்படவும் மாட்டா. அவளை பாரதி நன்கு
அறிந்ததனால் அவ்வாறு கூறினான்.
“அடடே!.. என்ன நீங்க... இப்பவே... பொண்டாட்டிக்கு
சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க என்று ராமு கேலி
பேசினாள் குழந்தைகள்.. அங்குமிங்கும் ஓடியாடி... வீட்டைக்
கலகலப்பாக்கிக் கொண்டிருந்தனர். ஆண்கள் மூணு
போட்டாபோட்டியிட்டுப் பேசியே... வீட்டை ரெண்டு
படுத்திக்கொண்டிருந்தனர். மூவரும்... வீ ட ே அதிரும் வண் ணம்
சிரிப்பின் சிகரங்களாகி இருந்தனர். எந்த நேரம் கூப்பிட்டாலும்...
ஓடிவரத் தயாராய்... சமையறை வாசலில் எட்டி எட்டிப்
பாத்துக்கிட்டிருந்த சுசிலா... ஐயே!... ஐயா!... இப்படியும்
இருப்பாரா?... என்று எண்ணும் அளவுக்குப் பாரதி வீட்டில்
கல்யாணக்களை கட்டியதன் அறிகுறியாக... அமர்க்களப்பட்டுக்
கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் என்ன பண்ணிக்கிட்டு
இருக்கிறாங்க என்று எண்ணிக் கொண்டிருந்தபோதே... நளினி
அழகுச் சிலையாக அவர்களின் முன் வந்து நின்றாள்.
"என்னங்க... எங்க அண்ணி எப்படி இருக்கிறாங்க,
சொல்லுங்க" என்று லலிதா குரல் கொடுத்தாள். நளினியைப்
பார்த்ததும் ராமுவும், பாலுவும் பிரமிச்சுத்தான் போய்ட்டாங்க.
நளினிக்கு முப்பத்தி ஏழு வயசுன்னு யாராலும் சொல்ல முடியாது.

பொழுது புலருமா?...
124

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


உடல் கட்டுக்குலையாமல், இன்னிக்குப் பூத்த பூப்போல் இருந்தாள்.
கள்ளங்கபடு அறியா முகம், மனச்சுத்தம் எல்லாமாகச் சேர்ந்து
பதினாறு வயசுப் பாவையாய்க் காட்சியளித்தாள்.
இவருக்கு இப்படி ஒரு அழகான பொண்டாட்டியா?...
பாலுவும், ராமுவும் பலவாறு எண்ணியபடி... கம்... மச்சான் நீங்க...
ரொம்பக் குடுத்து வச்சவர்தான்" என்றான் பாலு.
"பின்னே... அதனாலத்தான் இப்படி ஒரு அழகு ஓவியம்
உங்களுக்கு மனைவியா வரப் போகுது" - இது ராமு.
மொத்தத்தில் அத்தனை பேருடைய கண்ணும் நளினியின்
பக்கம்தான் இருந்தது. குழந்தைகளும் நளினியிள் பக்கத்தில் போய்
நின்று தொட்டுத் தொட்டுப் பார்த்து சிரித்தனர்.
காட்சிப்பொருளாய் அங்கு நின்று கொண்டிருந்த நளினிக்கு,
வெட்கம் பிடுங்கித் நின்றது. இதற்கு மேலும் அங்கு நிற்க
முடியாதவளாக - புள்ளிமாளைப் போல... மறுபடியும்... தன்
அறைக்கே ஓடிவிட்டாள்.
"அண்ணி ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவங்க, யார்கிட்டேயும்
அதிகம் பேசமாட்டாங்க என்று... தாமரை நளினிக்குப் பரிந்து
பேசினாள்.
"பின்னே... உங்கள மாதிரியா வாயடிக்கணும், பொண்ணாப்
பொறந்தா... அதிகம் பேசக்கூடாதுன்னு... அவுங்க நல்லா தெரிஞ்சு
வச்சிருக்காங்க" என்று பாலு நளினிக்குத் துதி பாடினான்.
"சும்மா இருப்பானா ராமு... பாலு சொன்னது தான்
நீங்களும் இருக்கிறீங்களே... மத்தவங்கள பேசியே கொல்றதுக்கு"
என்று அவன் பங்குக்குக் குறைபட்டுக் கொண்டான்.
"சரி சரி... போதும், சும்ம நிறுத்துங்க. எங்கள குறை
சொல்லாம உங்களால தூங்க முடியாதே'' என்று லலிதா குறை
கூறினாள்.
"சரி... சண்டை வேணாம். சமாதானமாய் போயிடுவோமே...
என்ற ராமு... "மச்சான் சும்மா சொல்லக்கூடாது. என்ன கம்பீரம்...
அப்பப்பா... இளவரசி மாதிரியே இருக்கிறாங்கு" என்றான்.

நூர்ஜஹான் சுலைமான்
125

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


மொத்தத்துல உங்களுக்குப் பொருத்தமான ஜோடிதான்.
என்ன... நீங்க கொஞ்சம்... மா நிறம். அவுங்க நல்ல சிவப்பு" என்றான்
பாலு.
"திறமா பெரிசு, எல்லாத்துக்கும் மனதுதான் ஒத்துப் போகணும்"
என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் லலிதா.
ஆளுக்காளு நளினியைப் புகழ்ந்து தள்ளினாலும் அவனும்
சாதாரண மனுஷன்தானே, பாரதிக்கு... என்ன சொல்வதென்று
புரியாமல் தலைகுனிந்தபடியே இருந்தான்.
பாரதியின் ரத்த நாளங்கள் ஒவ்வொன்றிலும், நளினியைப்
பற்றிய எண்ணங்கள்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.
இப்பவெல்லாம், பாரதிங்கிற தன் பெயர்கூட அவனுக்கு
ஞாபகத்தில் இருப்பதில்லை. அந்த அளவுக்கு, அவனுடைய
காதல்... நளினிங்கிற ஒரே ஜீவனுடன்... சுத்திக்கிட்டு இருக்குது.
"திருமணம் பதிவு செய்ய இன்னும் ஒரு வாரம்தான் இருக்குது
இல்லியா?... ஹனிமூனுக்கு... எந்த நாட்டுக்குப் போறதா உத்தேசம்?
இந்தியாவுக்கா... இல்ல மேலை நாட்டுக்கா..."
"அண்ணே!... கேக்கிறாங்கள்ல பதில் சொல்லுங்க...“ என்று
லலிதா பாரதியின் காதருகில் வந்து குரல் கொடுக்க...
திடுக்கிட்டு... சுய உணர்வு வந்தவனாக... கம்... என்...ன...
கேட்டீங்க?..." தடுமாறியபடி பாரதி... திருதிருன்னு விழித்தான்.
"சரியாப்போச்சு. அண்ணே! கல்யாணம் முடிஞ்சு...
தேன்நிலவுக்கு எங்க போறதா உத்தேசம்னு கேக்குறாங்க...'' என்று
லலிதா சற்று சத்தமாகவே கேட்டாள்.
"பக்கத்துலத்தான் இருக்கேன். இப்படியா கத்துறது..." என்ற
பாரதி, "நளினிகிட்டத்தான் கேக்கணும், நான் இன்னும் எதுவும்
பிளான் பண்ணலை" என்று பாரதி கூறினான் என்பதைவிட...
அசடுவழிந்தான் என்பதே பொருத்தமாகும்.
"என்ன அண்ணன் நீங்க, அண்ணிய பக்கத்துல வச்சுக்கிட்டே
என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க?..." இது லலிதா.
“என்ன அண்ணா! ,., அண்ணி கிட்ட
பேசுறதில்லையா? ரொம்பக் கரிசனமாகத் தாமரை கேட்டாள்,

பொழுது புலருமா?...
126

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"ஐயோ!... கொஞ்ச நேரம் பேசாம இருக்கிறீங்களா!" என்ற
பாரதி, ''சரி... சரி... உங்க அண்ணிகிட்ட கேட்டபிறகு, கண்டிப்பா
உங்களுக்கு சொல்லிடுறேன். போதுமா?... தாயே இப்ப ஆளை
விடுங்க. மேல போய்... அம்மாவை அழைச்சிக்கிட்டு சீக்கிரமா
கடைக்குப் போய்... வேண்டிய சாமான்களை வாங்கிட்டு வந்து
சேருங்க. என்ன பேசினது போதுமா?... இல்ல இன்னும் ஏதாவது
பேசணுமா?" பாரதி... சகோதரிகளைப் பார்த்துக் கை கூப்பியது...
வேடிக்கையாக இருந்தது.
உடனே தாமரை... “இதுக்கெல்லாமா கும்பிடு போடுவாங்க?
இதுக்கு மேல எதுவும் பேச வேணாம்" என்றவள்... “சரி... லலிதா!...
நீ இங்கேயே இரு. நான் போய் அம்மாவ அழைச்சிட்டு
வந்திடுறேன். நாம வந்த வேலையைக் கவனிப்போம்" என்றவாறு
அம்மாவை அழைத்துவர மாடிக்கு விரைந்தாள்.
அவள் போனதும்... "அப்பப்பா... ஒருவழியா அனுப்பி
வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. எப்படி நீங்க...
இந்த ரெண்டு வாலுங்களையும் சமாளிக்கிறீங்க."
"தெரிஞ்சா சரி..." என்று சிரித்தபடி... முகத்தைத்
திருப்பிக்கொண்டான் பாலு.
நல்ல வேளையாகத் தாமரை அந்த நேரம் சமையல்
அறைக்குப் போயிருந்தாள்.
''ஆனாலும்...ஒன்று சொல்லியே ஆகணும். இப்படி ஒரு
சந்தோசமான முகத்தை... இதுவரை நாங்க பார்த்ததே... இல்லை.
உங்க சந்தோசத்தைப் பாத்துதான் இன்னிக்கு
அவுங்களும்
கொஞ்சம்... ஓவராவே கேலி பண்ணிட்டாங்க."
"சரி... கல்யாணத்துக்குப் பிறகு... இந்த பங்களாவை
வித்துட்டு... வேற பங்களா வாங்குவீங்களா? இல்ல... இந்த
பங்களாவே போதுமின்னு நினைக்கிறீங்களா?" என்ற ராமு...
பாலுவைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.
"ஏன் என்ன சொல்ல வர்றீங்க? இந்த பங்களாவுக்கு என்ன
குறைச்சல்? இந்த செம்பவாங் லேன்ல அமைஞ்சிருக்கிற இந்த
பங்களா... எனக்கு எத்தனை வசதியா இருக்குது தெரியுமா?
போக்குவரத்துக்கு... நிறைய கடைங்க. முக்கியமா... அக்கம்பக்கம்
எந்த தொந்தரவுமில்லை. நல்ல காற்றோட்டமான இடம்.

நூர்ஜஹான் சுலைமான்
127

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


எடுத்த உடனே... சாலைக்கு வந்துடலாம். ஒரு நல்ல முகப்பு, இந்த
பங்களாவுக்கு அமைஞ்சிருக்கு. இந்த பங்களாவுக்கு வந்த புதுசுல
வச்ச இந்த வாழை மரங்கள், ரெண்டு பக்கமும் எத்தனை அழகா
இருக்கு பாருங்க! இந்த ரெண்டு வாழைமரங்களும்தான்... இந்த
பங்களாவுக்கே அழகூட்டுற மாதிரி அமைஞ்சிருக்கு. இந்த ரெண்டு
மரங்களும் அம்மா கையால வச்சது. எனக்கென்னமே.. இந்த
பங்களாவை வித்துட்டு வேற எடத்துக்கு போற எண்ணமே
இல்லை. பார்ப்போம், பின்னால் என்ன நடக்கப் போகுதுன்னு...
கணிக்க முடியாதே" என்றான் பாரதி.
"என்னைக் கேட்டா... நீங்க ரொம்பவே குடுத்து
வச்சவர்னுதான்னு சொல் ல ணும் , காலம் கடந் த ாலும் நீ ங க
் விரும் புன
பொண்ணயே கட்டிக்கப் போறீங்க, இது எல்லாருக்கும்
அமைஞ்சிடாது. எனவே... உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சியான
வாழ்த்துகள். இனிமே... நீங்க தொடங்கப்போற வாழ்க்கை
சந்தோசமா இருக்கணுமின்னு... உங்களுக்காகக் கடவுளை
வேண்டிக்கிறோம்."
"சரி தாமரை... நேரமாச்சு வேலைக்குப் போகணும்; ராத்திரிக்கு
வந்துடுறோம். பாரதியிடம் விடைபெற்று... இருவரும்
எழுந்து
"என்ன சாப்பிடாமப் போறீங்க? நீங்க எல்லாரும்
வருவீங்கன்னு தன் கையால நளினி பாத்துப்பாத்து சமைச்சிருக்கா.
சாப்பிடாமப் போனா... எப்படி? ..." பாரதி
இருவருமே... இரவு வந்து சாப்பிடுவதாகக் கூறிவிட்டு
வெளியேறினர். தாமரை... கணவரை வழியனுப்பிவிட்டு வந்தாள்.
"என்னது... போனவனை இன்னும் காணோம். என்ன அண்ணா
மேலே ரெண்டு பேரும் என்ன பண்றங்க..." சொல்லிக்கிட்டு
இருக்கும் போதே... “லலிதா... இதோ வந்துக்கிட்டே...
இருக்கோம்... அண்ணி வர்றதுக்குத்தான் லேட்டு" என்றாள்.
பாரதி... நளினியிடம் ''சாப்பிடாமலா போறீங்க என்றான்.
"இல்ல பாரதி... எனக்கு இப்பப் பசி இல்லை. வந்து
சாப்பிடுறோம். இன்னிக்கு நாம லேட்டாத்தானே பசியாறினோம்"
சைகை
என்றவள் பாரதியைப் பார்த்து... சாப்பிடச் சொல்லி...
செய்தான், இதைப் பார்த்து விட்ட லலிதா... 'என்ன...

பொழுது புலருமா?...
128

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


நீங்க சுத்த... பழைய பஞ்சங்கமா இருக்கிறீங்களே. இந்தக்
காலத்துலகூட ஒரே வீட்டுல இருந்துகிட்டு... பேசாம
இருக்கிறீங்களே."
"கல்யாணமே ஆகப்போது இன்னும் வெட்கப்பட்டுக்கிட்டு
இருந்தா எப்படி? நல்லா சகஜமா பேசிப்பழகுங்க."- இது தாமரை.
"இதப்பாரு... நீங்க ரெண்டு பேரும்... மாத்தி மாத்தி... லெக்சர்
பண்றது சரியில்லை. நளினி கம்பத்துல ரொம்பக் கட்டுப்பாடா
வளர்ந்தவ. எல்லாரும் ஒரே மாதிரியா இருக்கமாட்டாங்க, சில பேரு
ரொம்ப சீக்கிரமா எல்லார்கிட்டேயும் சகஜமா பழகிட மாட்டாங்க.
உங்க அண்ணியும் அப்படித்தான். போகப்போக எல்லாம்
சரியாயிடும். பாட்டி மாதிரி... நீங்க ரெண்டு பேரும் தொண
தொணத்துக்கிட்டு இருக்காதீங்க, நேரத்தோட போய்ட்டு சீக்கிரமா
வந்துடற வழியைப் பார்ப்போம் கிளம்புங்க... என்று காமாட்சி...
ஒரு பிரசங்கமே செய்து விட்டார்.
பாரதி... தலைகுனிந்து நின்றிருந்த நளினியிடம், "பாத்தியா...
நமக்கு ஒண்ணுமே தெரியாததுமாதிரி, ரெண்டு பாட்டியும்
சொல்லிட்டுப் போறதை. சரி சரி... நீங்க சீக்கிரம போய்ட்டு
வாங்க" என்று அவசரப்படுத்தினான்.
நளினியும் பாரதியை சாப்பிடச்சொல்லிட்டு, விடு
வாசலுக்கு நடையைக் கட்டினாள், அங்கு அவளுக்கு ஒரு அதிர்ச்சி
காத்திருந்ததுன்னுதான் சொல்லணும். திறந்திருந்த கேட்டின் வாசல்
ஓரத்தில் கறுப்பு புல்டோக் நாய் ஒன்று படுத்திருந்தது. இதைச்
சற்றும் எதிர்பாராத குழந்தைகளும் கூச்சல் போட்டனர். நளினி
பயத்தில் ஒரு அடி பின்வாங்கினான். மனசு... படபடன்னு வேகமாக
அடிக்க ஆரம்பித்தது. உங்கள் கத்தலுக்கெல்லாம் நான்
பயப்படமாட்டேன் என்பது போல அந்தக் கறுப்பு நாயும்
அசையாமல் படுத்திருந்தது.
“சுசிலா!... இங்க வா.. வெளியே வாசல்ல ஒரு நாய்
படுத்திருக்கு. சீக்கிரம் வந்து விரட்டிடு. குழந்தைங்க பயப்படுறாங்க
பாரு" என்று காமாட்சி அம்மான் குரல் கொடுத்துவிட்டு காரில் ஏறிக்
கொள்ள, அனைவரையும் சுமந்து கொண்டு கார் குட்டி இந்தியாவை
நோக்கிப் புறப்பட்டது.

நூர்ஜஹான் சுலைமான்
129

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அத்தியாயம் 17
காமாட்சி அம்மாள் கூப்பிடும் குரல் கேட்டது... சுசிலாவிற்கு.
நாயா?... ஏன்.. இங்க வந்து படுத்திருக்கு... சுசிலா வாயிற் கதவைத்
திறக்காமல் உள்ளிருந்தபடியே விரட்டினாள். அது... நகருவதாக
இல்லை... வாளி நிறையத் தண்ணீரை மொண்டுவந்து நாயின் மேல்
ஊற்றப் போனாள்.
அப்போது அங்கு வந்த பாரதி... "சரி... விடு கசிலா. பாவம்...
வாயில்லாத ஜீவன். நோய்... ஏதாவது வந்திருக்குமோ என்னவோ...
வளர்த்தவங்க விரட்டியிருப்பாங்க, பரவயில்லை. நீ...
விரட்டாதே... அது போகிறப்ப போகட்டும். சரி... நீ முதல்ல
எனக்கு... ஒரு டம்ளர் வெந்நீர் கொண்டு வா... மாத்திரை
சாப்பிடணும்" என்றதும்... உடனே சுசிலா வெந்நீர் கொண்டு வந்து
கொடுத்தாள். பாரதி மாத்திரையை எடுத்து விழுங்கி விட்டு... "சரி...
சுசிலா... வீட்டப் பாத்துக்க. நான் கொஞ்ச நேரம்
போய்ட்டு வந்துடறேன். அம்மா கேட்டா சீக்கிரம் வந்துடுவேன்னு
சொல்லிடு" என்றபடி பாரதி காரை எடுக்க சுசிலா கதவைத் திறந்து
விட்டாள்.
கார் வெளியே போனதும்... அந்த புல்டோக் நாயும்... கார்
பின்னாலேயே சிறிதுதூரம் ஓடியது. பிறகு நின்ற இடத்திலேயே
சிறிதுநேரம் குரைத்துக் கொண்டிருந்தது.
இதைக் கவனித்த சுசிலாவுக்குப் பதற்றமாகவே இருந்தது.
என்ன இது... அதிசயமா நாய் விரட்டுதே என்று பலவிதமாக
எண்ணியபடி... மறுபடியும் வாயிற்கதவை மூடிவிட்டு உள்ளே
வந்து... தன் வேலையில் மூழ்கிவிட்டாள்.
கடைக்குப் போனவர்கள் இரவு எட்டு மணியளவில் வீடுவந்து
சேர்ந்தனர். நளினி இரவு சாப்பாட்டுக்குக்கூட வெளியே வராமல்...
தன் அறையிலேயே முடங்கிக்கொண்டாள்.
கட்டிலில் படுத்திருந்த நளினிக்குத் தூக்கம் வரவில்லை. பல
சிந்தனைகள் அவன் மனதைப்போட்டு உருட்டிக் கொண்டிருந்தது.
இந்த முப்பத்தஞ்சு வயசுல நமக்கு மறுமணம். அவள்
தந்தையைப் பற்றி நினைக்கும்போது, ஒருபுறம் வெறுப்பாகக்கூட
இருந்தது. கட்டுப்பாடா வளர்த்தவர். மத்தவங்களை... தரம் பிரிச்சு
பேசத் தெரிந்த தன் அப்பாவுக்குப் பெத்த மகளோட

பொழுது புலருமா?...
130

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


வாழ்க்கையைத் தரம் பார்க்கத் தெரியலியே. ஆடு, மாடுகளைப்
பலியிடுவது போல்... தன்னோட வாழ்க்கையை அநியாயமாகப்
பலியாக்கிட்டாரே. கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிந்து...
தலையணையை ஈரமாக்கி மறுபடியும் புரண்டு படுத்தாள்.
கல்யாணமாகி அஞ்சு வருஷம், கன்னி கழியாமல் புகுந்த
வீட்டில் வேலைக்காரியாய்க் கஷ்டப்பட்டாள். கணவரிடமிருந்து
விடுதலைப் பத்திரத்துடன் விதி அவளை வீதிக்கு விட்டியது.
வீட்டைத்தவிர... வெளி உலகமே அறியாதவன் வயிற்றுப்
பாட்டுக்கு, தாயாரின் மருத்துவச் செலவுக்கு... நான் சம்பளரத்தில்...
சாப்பாட்டுக் கடையோடு ஐக்கியமனாள்.
அழகும், இளமையும் கொண்ட அவளைப் போல
உள்ளங்க... சாப்பாட்டுக் கடையில் வேலை செய்வது
என்பது
சாமான்யமான விஷயமா என்ன?...
எத்தனை காமக்கண்களின் பார்வையிலும், தகாத முறையில்
பழக வந்த காமுகர்களிடமும், குடிகாரக் கும்பலிடமிருந்தும்...
தப்பியிருப்பாள்? இதனாலயே பல கடைகளையும் மாற்றி
இருக்கிறாள்.
பாரதியிடம் அவள் கொண்ட காதல்... உறுதியாக அவள்
அடிமனதில் ஆழமாகப் பதிந்திருந்ததனாலோ என்னவோ... எந்த
தப்பான காரியங்களுக்கும் இடம் கொடுக்காமல்.. ஒரு தடவை
பட்ட சூடே போதும்... சாகுற வரைக்கும் என்று எண்ணி...
வைராக்கியமாக வாழ்ந்து விட்டாள்.
பாரதியைப்
பார்த்துப் பேசிய அந்த நிமிஷமே தான் பட்ட
கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டதாக எண்ணினாள்.
தனக்காகவே வாழ்ந்த பாரதியோடு சேர்ந்து வாழ முடிவெடுத்தான்.
அவள் எடுத்த இந்த முடிவில்... ஒரு சின்ன சலனமும்
இன்றுவரையில் அவள் மனதில் ஏற்பட்டதில்லை.
தலைவலின்னு தூங்க வந்தவள், சிந்தனைச் சுழலில் சிக்கி,
தூக்கம் வராமல் தவித்தாள். கல்யாணம் நெருங்க நெருங்க ஏனோ
அவள் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது திடீர்னு.. நாம்
இறந்துவிடுவோமோங்கிற எண்ணமும் அடிக்கடி அவன் மனசைக்
குடைகிறது மரணபயம் அவளை ஆட்டிப்படைக்கிறது.

நூர்ஜஹான் சுலைமான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


துணிமணி, நகை வாங்கும்போது ஏனோ... அவளுக்கு ஒரு
பிடிப்பும் இல்லாமல் இருந்தது. திடீரென்று ஏன் இந்த மாற்றமென்று
போல
அவளுக்கே புரியவில்லை. சோளக்கொல்லை பொம்மை
இருந்தாள். லலிதாவும் தாமரையும் எத்தனை நல்ல பொண்ணுங்க!
தன் அண்ணனுக்காக எதையும் செய்யக் காத்திருப்பவர்கள்.
அவளுடைய மெளனத்தைப் பார்த்து என்ன நினைத்தார்களே...
சேச்சே... என்ன மடத்தனம் பண்ணிட்டோம். இந்தப் புடவை
பிடிச்சிருக்கா... இந்த நகை பிடிச்சிருக்கான்னு எத்தனை ஆா்வமா?
என்ன
ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்து வாங்கினாங்க. ஆனா, நான்
சொன்னேன்? ‘நீங்களே எல்லாம் பாத்து வாங்கிடுங்கன்’னு
சொல்லிட்டேனே. தப்பா நினைச்சிருப்பாங்களோ? சரி, நாமே
போய் அவுங்களைப் பார்த்து சமாதானமாப் பேசிட்டு
வந்துடுவோம்னு’ எழுந்திருக்கும்போது... லலிதாவே... நளினியைத்
தேடி அவள் அறைக்கு வந்தான்.
"அண்ணி, தலைவலின்னு வந்ததும் படுத்துட்டீங்களே இப்ப
எப்படி இருக்குன்னு கேட்கத்தான் வந்தேன்..." என்று பரிவுடன்
விசாரித்தாள். பரவாயில்லை என்று தலையசைத்தவள், பாரதியையும்
கேட்கத் தவறவில்லை. பாரதி வந்ததும்..சாப்பிட்டு விட்டுப்
படுக்கைக்குப் போய் விட்டதாகக் கூறினாள்.
நீங்க... நல்லா தூங்கட்டும், எழுப்பவேணாமின்னு அண்ணன்
சொல்லிட்டுப் போனாரு, நான்தான் சாப்பிடுறதுக்காக, உங்களை
எழுப்ப வந்தேன். "வாங்க... அண்ணி... சாப்பிட்டு விட்டுப்
படுக்கலாம்" என்றாள்.
ஏனோ.. எனக்குச் சாப்பிடும் மனசு இல்லாமல் இருந்தது.
சுசிலா கொடுத்துட்டுபோன பாலை எனக்குக் கொடுத்துட்டு லலிதா
வெளியேறினாள்.
அவள் போனபிறகு பாலை எடுத்துக் குடித்தபடி இத்தனை
அன்பு முகங்களுக்கிடையில், கடவுள் நமக்கு அமைச்சுக் கெ”டுத்த
கசப்பான
வாழ்க்கையைப் பத்தி யோசிக்காமல், கடந்து போன
நிகழ்ச்சிகளைப் போய் அசைபோட்டுக்கிட்டு இருந்திருக்கோமே...
சே... என்று தன்னையே நொத்து கொண்டவளாகப் போர்வயை
உடலில் போர்த்தியபடி உறங்க ஆரம்பித்தாள். வெளியே
போய்விட்டு வந்த அசதியும் நேரங்கடந்தும் தூக்கம் வராமல்
சிந்தனையில் சிக்கித்தவித்த நளினி எல்லாவற்றையும்

பொழுது புலருமா?...
132

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


ஓரம்கட்டிவிட்டுத் தூங்குவதற்கு முயற்சி செய்து சிறிது
நேரத்திலேயே குறட்டை விட ஆரம்பித்தாள்.
சாப்பிட்டபின் படுக்கைக்கு வந்த பாரதி... தூக்கம்
வராதவனாக... அறையின் ஜன்னல் கதவை விரியத் திறந்து
விட்டான். இரவு நேரக் குளிர்ந்த காற்று... ஜிலு ஜிலுவென்று
வீசிக்கொண்டிருந்தது.
இரவு மணி பத்திருக்கும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை
பார்வையை ஓடவிட்டான். நடைப் பயிற்சிக்குப் போய்விட்டு வந்து
கொண்டிருந்த ஒருசிலரைத்தவிர, சாலையில் ஆள் அரவமே
இல்லை. அவ்வப்போது குடியிருப்பாளர்களின் கார் வந்து போகும்
சத்தத்துடன் காரின் விளக்கொளி மின்மினிப் பூச்சிபோல் பாதையில்
ஒளி வெள்ளத்தை அவ்வப்போது தந்து விட்டுச் சென்றது.
இருள் சூழ்ந்த வானத்தை, அண்ணாந்து பார்த்தான். பழைய
நினைவுகள் லேசாக வந்து போயின. மேகத்திரையில் இலைமறை
காய்மறையாக மறைந்திருந்த நிலவைப் பார்த்தான். அங்கொன்றும்
இங்கொன்றுமாக நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன.
பாரதி மெல்ல நகைத்தபடி,
எட்டாத நிலவே நீ இன்று
என்னைக் கண்டுதானோ...
வெட்கப்பட்டு மறைந்துள்ளாயோ!
பூரண நிலவு என்
பக்கத்திலல்லவே இருக்கிறது.
பொறாமையில் மறைந்திருக்கிறாயோ...
காரின் ஒலி பாரதியின் கவிதை மனத்தை திசை திருப்பியது.
ஆங்காங்கு ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் கிளைகளில்
பறவைகளின் கீச்சிடும் ஒலியும் காதைத் துளைத்தது.
கற்பனையில் மிதந்திருந்த பாரதியின் சிந்தனை திடீரென்று
ஏள் தடைப்பட சலிப்பேற்பட்டு ஜன்ளல் கதவை ஒரு
விட்டுப் படுக்கைக்கு வந்தான்.
கட்டில் மேலிருந்த மீரா சிலை அவன் கண்களை உறுத்த,
அதைக் கையில் எடுத்து... உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அழகுக்காக வாங்கியதுதான் இந்த பக்த மீரா சிலை, ஏனோ இன்று
அந்த சிலை உயிர் பெற்றது போல், அவனுக்குத்
நளினியின் முகத்தோற்றத்தை அதிலே கண்டான். மீரா சிலையை...

நூர்ஜஹான் சுலைமான்
133

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


தலையணைமேல் வைத்தபடி... ‘மீரா! உன் அழகுக்காகவே
வாங்கினேன்; ஆனால், உன் அருமையான காதல் கதையை
இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன். கண்ணளைக்
காதலித்ததற்காகக் கடைசியில் தீபமாய் நீ கண்ணனோடு
ஐக்கியமானவளாம். உன்னைப் போலவே என் நளினியும் என்னோடு
கலந்தவள். என் மூச்சுக் காற்றே என் நளினி என்பதை நீ
அறிவாயா?" கற்பனையில் மிதந்தபடி பாரதி அப்படியே கண்களை
மூடிக்கொண்டன். தூக்கம் அவன் கண்களை முற்றுகையிட...
தலையணை மேலிருந்த மீரா சிலை பாரதியின் கைபட்டுத் தவறித்
தரையில் விழுந்து நொறுங்கியது. பாரதி இதை அறியவில்லை.
விடியற்காலை... ஏழு மணிக்கே யாரோ தட்டி எழுப்புவது
போன்ற உணர்வு மேலிட, திடுக்கிட்டு எழுந்தவன் சுற்றுமுற்றும்
பார்வைவையைச் செலுத்த, தரையைப் பார்த்த பாரதிக்கு
பகீரென்றது மீரா சிலையின் கழுத்து இரண்டு துண்டாகக் கிடந்தது.
தம்புரா பாதியாக உடைந்திருந்தது.
நல்ல கலைநயம் கொண்ட மீரா சிலை உடைஞ்சிடுச்சேன்னு
வருந்தியபடி ஒவ்வொன்றாகத் தரையிலிருந்து பொறுக்கி எடுத்தான்.
சரி ஏதோ தவறி விழுந்துடுச்சு. வேற ஒண்ணு புதுசா வாங்க
வேண்டும் என்று எண்ணியபடி அதைச் சாதாரண விஷயமாக
எடுத்துக் கொண்டு, குப்பைக்கூடையில் போட்டுவிட்டு
குளிப்பதற்காகத் துண்டைத் தோளில் சுற்றியபடி அறையை விட்டு
வெளியே வந்தான்.
நளினி... குளித்துக் காற்றாடி முன் நின்று தலைமுடியைக்
காயவைத்துக் கொண்டிருந்தாள். பாரதியைக் கண்டதும்...
அப்போது பூத்த தாமரைப்பூ இதழி விரித்ததைப்போல்... தனக்கே
உரிய முத்துச்சிரிப்பை உதிர்த்தவளாய்... "என்ன... இவ்வளவு
சீக்கிரமாய் எழுந்திருச்சிட்டீங்க?... ஆபீஸுக்கு லீவு
போட்டிருக்கீங்களே... இன்னும் கொஞ்சநேரம் தூங்கலாமே"
என்றாள்.
"அப்பா... இவ்வளவும் நீதான் பேசுனியா?
"ஏன்... இன்னும் உங்களுக்குச் சந்தேகமாக இருக்கா என்ன?
இல்ல நேத்துபூரா தலைவலின்னு மெளனவிரதம் இருந்துட்டே. சரி
காலையிலேயாவது தரிசனம் பண்ணுவோமேன்னுதான் சீக்கிரமே
எழுந்திருச்சிட்டேன். ஆமா... எங்க அந்த இரண்டு
வானரங்களையும் காணோம்" என்றான்... அங்குமிங்கும் பார்த்தபடி.

பொழுது புலருமா?..
134

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"ஏன்... அப்படி சொல்றீங்க. அவுங்க இரண்டு பேரும்
என்மேல... எவ்வளவு அக்கறை எடுத்திக்கிறாங்க தெரியுமா?"
“அதெல்லாம் சரிதான். வீட்டுல நாலு சின்னக்குழந்தைங்க
இருக்கிற இடமே தெரியலை இதுங்க இரண்டு பேரும் அடிக்கிற
கொட்டம் இருக்குதே அப்பப்பா... தாங்கமுடியலை. ஆமா... நேத்து
வாங்கிட்டு வந்த நகை, புடவை எல்லாம் புடிச்சிருக்கா?"
"நீங்க பாத்தீங்களா?... உங்களுக்குப் புடிச்சிருக்கா?"
"ம்... பார்த்தேன்...$1500 வெள்ளிக்குப் புடவை
எடுத்திருந்தாங்க, காஞ்சிபுரப் பட்டாம். விலை என்னமோ... கம்மியா
இருக்கேன்னு பார்த்தேன். இன்னும் கூடுதல் விலைக்கே புடவை
எடுத்திருக்கலாமோன்னு தோணுது."
"அதென்னங்க காஞ்சிபுரப் பட்டைவிட, வேற பட்டு
இருக்கா?... என்ன!... இந்தப் புடவைகூட அதிக விலைன்னுதான்
சொல்லுவேன். கலர் புடிச்சிருக்கா?"
குழந்தையைப்போல்... அவள் கேட்கும் பாணியை ரசித்தபடி
பதில் கூறிளான். கம்... வெல்வெட் கலர். உன் நிறத்துக்கு சூப்பரா
இருக்கும். புடவையின் கலர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு."
"அப்பாடா! எங்க உங்களுக்குப் புடிக்காம போயிடுமோன்னு
பயந்துகிட்டே இருந்தேன்."
"ஏன்!... உனக்கின்னு எந்த செலக்ஷனும் இல்லியா?
“ஏன் இல்லை... என்னோட.... மிகப்பெரிய செலக்க்ஷனே...
நீங்கதானே."
"ம்... நீ ரொம்பவே பேசக் கத்துக்கிட்டே" என்று சிரித்தான்.
அவனை விடாமல் நளினி... "சரி உங்களுக்கு எதுவும்
வங்கலியா?..."
உன்னோட செலக்க்ஷனே... நானா இருக்கும்போது எதுக்கு...
இன்னொரு செலக்க்ஷன்."
''என்ன பாரதி விளையாடுறீங்களா?... நான் சீரியஸா
கேக்கிறேன். சொல்லுங்க" என்றாள்.
"சரி, என்னென்ன வாங்கணுமின்னு.. நீயும் தானே கூடவந்து
வாங்கித் தரப்போறே. எப்போ போகலாம்? இன்னிக்கு மதியம்
போகலாமா?"

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"அப்பா! உருப்படியா இன்னிக்குத்தான் அண்ணன் ஒரு நல்ல
யோசனை சொல்லியிருக்கு" என்று குறுக்கே ஓடிவந்தாள் லலிதா.
"போச்சுடா... இப்பவும் பேசவிடமாட்டேங்கிறா... என்று
பாரதி விளையாட்டாகத் தலையில் அடித்துக் கொண்டான்.
"அண்ணா! நீ என்னதான் தலையில அடிச்சுக்கிட்டாலும்,
இன்னிக்கு நிச்சயமா நீ அண்ணியைக் கூட்டிக்கிட்டுத்தான்
கடைக்குப் போயாகணும். ஏன்னா, உன் துணிகளைத் தைக்கிறதுக்கு
நான் இல்லை, அதனால பேண்ட் எல்லாம் ரெடிமேட்டுலதான்
எடுத்தாகணும், உனக்கு கலர் பாத்து வாங்கத் தெரியலை. துணைக்கு
முக்கியமா அண்ணிய அழைச்சிட்டுப் போ" என்று சொல்லிவிட்டு
நளினியின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
"ம்... கேட்டியா அவ சொன்னதை. கலர் பாத்து எனக்கு
எடுக்கத் தெரியாதாம். ஏன்னா நான் பச்சைக்குழந்தை பாரு. என்ன
இவ இப்படி வாயடிக்கிறா சே" என்று பாரதி அலுத்துக்கொண்டான்.
"அண்ணா!... நீங்க... இப்படி சந்தோசமா சிரிச்சுப் பேசினதே
இல்லியே... இந்த அஞ்சு நாளாத்தான் உங்க முகத்துல சிரிப்பையே
பாக்கிறோம், எங்க அண்ணனுக்கு கல்யாணம்னு... எங்களுக்கு
சந்தோசமா இருக்காதா?... உன்னோட சந்தோசத்துல நாங்களும்
பங்கெடுத்துக்கிறோம்." தாமரை இப்படிக் கூறினாள்.
"சரி... என்னடா... வக்காலத்துக்கு ஆளைக் காணோமேன்னு
பாத்தேன் வந்துட்டியா... வாம்மா... உன்னோட அபிப்பிரா
யத்தையும் சீக்கிரம் சொல்லிடு நீ சொல்றதைக் கேட்டுத்தான் நான்
பல் விளக்கணும், குளிக்கணும் சீக்கிரம் சீக்கிரம்' என்றான்.
"நான் சொல்ல என்ன அண்ணா இருக்கு. லலிதா
சொன்னதுதான் சரி. அதுக்கு அப்பீலே இல்லை..." என்றாள்.

அத்தியாயம் 18

பாரதி ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள செண்ட் பாயிண்ட் ஷாப்பிங்


செண்டருக்குள் நளினியுடன் நுழைந்தான். பார்த்துப் பார்த்து நளினி
பாரதிக்கு உடைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தாள்.

பொழுது புலருமா?...
136

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


தூய வெள்ளை திறத்தில் (Arman) ஆமானி சட்டை... கறுப்பு
நிற அதே பேர்கொண்ட கால்சட்டை... அதற்கேற்ற கறுப்புநிற (Hugo
Boss) ஹியூகோபோஸ்டை; (Brada) பிராடா சப்பாத்து...
அவனுக்கும், நளினிக்கும் சேர்த்து... வாசனைத் திரவியங்கள்
அலங்காரப் பொருட்கள். ஒருவழியாக ஆர்ச்சர்ட் பகுதியில்...
ஷாப்பிங்கை முடித்த கையோடு.. மறுபடியும் காரை
எடுத்துக்கிட்டு... சிலிகி சாலையிலுள்ள காக் ர ா (Gagra) கடையினுள்
நுழைந்து... வேட்டி, ஜிப்பா இன்னும் சில பொருட்களும்
வாங்கிக்கொண்டு... ரேஸ்கோஸ்ட் ரோட்டிலுள்ள சகுந்தல
ரெஸ்டாரண்ட் சென்றனர்.
பாதிநாள் கடையைச் சுற்றியதால் இருவருக்குமே பசி...
வயிற்றைக் கிள்ளியது, பாரதி பிரியாணி ஆர்டர் செய்ய இருவரும்
சாப்பிட்டனர்.
பிறகு... பாரதி காரை எடுத்துக்கிட்டு பாரதியின் அலுவலகம்
சென்றனர்.
அலுவலகக் கதவைத் திறந்த பாரதி விளக்கைப் போட்டுட்டு...
ஏர்கண்டிஷனைத் திறந்து விட்டான். அவன் வேலைக்கு வராததால்
அவன் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டிய பைல்கள்
வரிசைப்படுத்தப்பட்டு இருந்தன, நளினியை அவன் அமரக்கூடிய
நாற்காலியில் உட்கார வைத்தான். ஏர்கண்டிஷன் குளிர் அறை
முழுக்க வியாபித்திருக்க, உடல் உஷ்ணத்தை விரட்டியது. குடிக்க
ஏதாவது வேணுமான்னு கேட்டுக்கொண்டே... அலுவலக
அறையிலிருந்த சிறிய ஐஸ்பெட்டியைத் திறந்து... அதில் இரண்டு
குளிர்பானத்தை வெளியே எடுத்து வைத்தான்.
நளிளி இருக்கையில் இருந்தவாறே... அலுவலகத்தைச் சுற்றி
ஒரு நோட் டம் விட்டாள். அறை... சற்றுப் பெரியதாக இருந்ததால்...
அங்கு அலமாரியிலிருந்து... நாற்காலி, டேபிள், பைல்கள் என்று
அழக்க - நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தன, டேபிள்மேல் பாரதி...
தாயார், தகப்பனார்... சகோதரிகள் என்று சின்ன வயதில் பிடித்த
போட்டோ இருந்தது.
இதைக் கவனித்த பாரதி... நளினியின் பக்கத்தில் வந்து
“இனிமே... நம்ம இரண்டு பேரோட போட்டேவும் இருக்கும்"
என்றான் பெருமையுடன்.

நூர்ஜஹான் சுலைமான்
137

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


நளினி வெட்கம் மேலிடத் தலையைக் குனிந்து கொண்டாள்.
"என்ன நளினி... எதுவுமே பேசாம இருக்கே."
'இல்லே... எதுவுமே... சொல்லாம... நேரா... ஆபிஸுக்கு
வந்துட்டீங்களே..."
"ஏன்... உனக்குப் பிடிக்கலியா?"
அப்படி இல்ல, பீச்சுக்குக் கூட போயிருக்கலாமே"
"பீச்சுக்குப் போனா... என் மனசுல உள்ளதை ப்ரியா பேச
முடியமான்னு தெரியலை. அதான் இங்க அழைச்சிட்டு
வந்துட்டேன்."
"ஏன்? இந்த ஒரு வாரமாத்தான் நாம நிறையவே
பேசிட்டோமே, இன்னும் என்ன பேசணும்? நளினிக்கு பாரதி
என்ன பேசப் போறானோங்கிற தவிப்பும் இருந்தது.
"நளினி! ... உன்னை சந்திச்ச இரண்டாவது நாளே...
அழைச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். உனக்கும்... சில விருப்பு
வெறுப்புகளும் இருக்கலாம். இதை எல்லாம் யோசிக்காம நான்
உன்னை அழைச்சிட்டு வந்துட்டதாக்கூட நீ நினைக்கலாம், ஆனால்
அதுக்கெல்லாம் நான் சொல்லப்போற ஒரே காரணம், நான் உன்னை
மனசாரக் காதலிச்சதுதான். அரும்புமீசை முளைச்ச அந்த நேரத்துல
என் அடி மனசுல... ஏற்பட்ட அந்தக் காதல்தான்.
“பல வருஷங்களுக்குப் பிறகு... அந்த சாப்பாட்டுக் கடையில
உன்னைப் பார்த்ததும்... உண்மையில் நான் அதிர்ச்சி அடைஞ்சுதான்
போனேன், உன்னை அந்தக் கோலத்துல பார்க்கவா நான் இத்தனை
வருஷம் உயிரோடு இருந்தேன். உன்மேல நான் கொண்ட காதலால்
உன்னைக் கடைசி வரையிலும் என்னோட வச்சிருக்கணும்; உனக்கு
ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்கொடுக்கணும்; இப்ப எனக்குக்
கிடைச்ச ஒரு சந்தர்ப்பத்தை நான் நழுவவிடக் கூடாதுன்னுதான்,
உன்னை நான் உடனடியா அழைச்சிட்டு வந்துட்டேன். என்னைத்
தப்பா நினைக்காதே... நளினி..."
"என்ன பாரதி என்னென்னமோ பேசுறீங்க. அப்படி எதுவும்
நான் உங்களைப்பத்தி தவறா நினைக்கவே இல்லையே.
சொல்லப்போனா நானே விரும்பித்தான் நீங்க கூப்பிட்டதும் உங்க
பின்னால் வந்தேன். ஏன்னா நானும் உங்களைக் காதலிச்சிருக்கேன்
பாரதி; சொல்லப்போனா இதுக்கெல்லாம் நான் தகுதி

பொழுது புலருமா?...
138

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


உடையவனான்னு எளக்குத் தெரியலை." இன்னும் கொஞ்சம்
பேசவிட்டால் அழுது விடுவாள் போலிருந்தது.
"சேச்சே... யார் சொன்னது... உனக்குத் தகுதி இல்லேன்னு?
என் விஷயத்துல என்னை ஆக்ரமிக்கிற எல்லாத் தகுதியும் உனக்கு
இருக்கு. ஆனாலும் ஒரு விஷயத்தை உங்கிட்ட இருந்து
மறைச்சிட்டேன். அதைச் சொல்லத்தான் யாருடைய தொந்தரவும்
இல்லாத இந்த இடத்துக்கு உன்னை... அழைச்சிட்டு வந்திருக்கேன்."
நளினி பாரதியை நேருக்கு நேர் உற்றுப்பார்த்தான். அந்த
முகத்தில் எந்தக் களங்கமும் இருப்பதாக... அவளுக்குத்
தெரியவில்லை. “பாரதி உங்களைப்பத்தி எனக்கு நல்லாவே
தெரியும், மத்தவங்க கஷ்டப்படுறதைப் பார்த்து மனம்
பொறுக்காதவர் நீங்க; வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாம
இருந்த எனக்கு... ஒரு நல்ல வாழ்க்கைக்கு வழி அமைச்சுக்
கொடுத்திருக்கிறீங்க. அப்படிப்பட்ட நீங்க எங்கிட்ட எதை
மறைச்சிருப்பீங்க? எதுவா இருந்தாலும் பரவாயில்லை, எங்கிட்ட
நீங்க எதையோ... சொல்லாம மறைச்சிருந்தா... நிச்சயம் அதுக்கு
ஒரு காரணம் இருக்கும். சத்தியமா சொல்றேன் பாரதி, உங்களை
நான் மனப்பூர்வமா நம்புறேன். நீங்க எதைச் சொன்னாலும்
கவலைப்பட மாட்டேன்; சொல்லாம இருந்தாலும் வருத்தப்பட
மாட்டேன். யாருடைய தொந்தரவும் இல்லாம... இப்பத்தான் நாம
ஒண்ணு சேர்ந்திருக்கிறோம்னு சந்தோஷப்படாம... ஏதேதே...
பேசுறீங்களே..."
நளினி.,, நீ உண்மையாவா சொல்றே?"
"சத்தியமா சொல்றேங்க என்று பாரதியின் தலையில்
அடித்தாள். உடனே பாரதி... எழுந்து அவன் பின்னால் வந்து அவள்
இரு தோள்களையும் பற்றியவாறு...
"அப்படீன்னா... எனக்கு நெஞ்சுவலிங்கிற கொடிய நோய்
இருக்குதுன்னு சொன்னாலும்... நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க
சம்மதிப்பியா?..." கஷ்டப்பட்டு சொல்லவேண்டியதைச் சொன்னான்.
இதை எதிர்பாராத நளினி... மின்சாரத்தில் கைவச்சுதுபோல
ஒரு நிமிடம் அதிர்ந்தாள். தலையைக் குனிந்தபடி எதுவுமே
பேசாமால் இருந்தாள்.

நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அந்த ஒரு நிமிட நேரம்.... ஒரு வருஷத்தைப் போல் துடித்துப்
போனான், ஐயோ... நான் நோயாளின்னு தெரிஞ்சு... என்ன
என்னால்
வெறுத்திடுவாளோ... அவளைப் பிரிஞ்சு இனியும்
இருக்கமுடியுமா? இவ்வளவு நேரமாவா யோசிப் ப ா? கடவுளே
அவள் நல்ல பதில் சொல் ல ணும் பாரதி ஒரு நிமிட
மனப்போராட்டந்தில்... கடைசியில் கடவுளிடம் சரணடைந் த ான்.
சில நிமிடங்களுக்குப் பிறகு... நளினி தன் கண்களைத்
துடைத்துக் கொண்டாள். அவன் தோளைப் பிடித்திருந்த பாரதியின்
கைகளைப் பிடித்து.. தன் முன்னால் வரச் செய்து அவனையே
பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நளினி... இதைத்தவிர உங்கிட்ட நான் வேற எதையுமே
மறைக்கலே முதலிலேயே உங்கிட்ட சொல்லாம இருந்ததுக்கு
என்னை மன்னிச்சிடு நளினி... நீ என்னைப்பத்தி கவலைப்படாம
எம்
சந்தோசமா இருக்கணுமின்னுதான் உங்கிட்ட மறைச்சேன். ஐ
ஸாரி நளினி... ஸாரி..." பாரதியின் நிலைமையைப் பார் க ்க
பரிதாபமாக இருந்தது.
"எதுக்கு மன்னிக்கணும்? நீங்க எந்தத் தவறுமே செய்யலை
பாரதி" நளினி அவன் இரு கைகளையும் கெட்டியாகப் பிடித்தபடி
பேசினாள்.
"நான் கவலைப்படக்கூடாதுன்னுதான் இந்த விஷயத்தை நீங்க
மறைச்சிருக்கிறீங்கன்னு எனக்கு நல்லவே தெரியும். அதே மாதிரி
உங்களுக்கு ஏதாவதுன்னா பாரதி நிச்சயமா என் உசிரையும்
கொடுப்பேன். நீங்க மறைக்கணுமின்னு நெனைச்சா கடைசி
வரையிலும் மறைச்சிருப்பீங்க. இந்த நோய் நான் உங்களைக்
கல்யாணம் பண்ணிய பிறகு உங்களைத் தாக்கி இருந்தா நான்
உங்களை விட்டுப் போயிடுவேனா? சொல்லுங்க... நான் எப்பவும்
சந்தோசமா நல்லா இருக்கணுமின்னு நினைக்கிற ஒரே ஜீவன், இந்த
உலகத்தில் உங்களைத்தவிர வேறு யாருங்க இருக்க முடியும்?"
அவள் பேசப்பேச.. கண்களை மூடி இருந்த பாரதி
பனிச்சரலில் மூழ்கி எழுந்தவன்போல் மனப்புழுக்கம்
குறைந்தவனாக... கண்களைத் திறந்தான். "அப் ப ோ... நளினி...
உனக்கு என்மேல கோபம் இல்லையே..." பாரதி... பரிதாபமாக
நளினியைப் பார்த்தபடி கேட்டான்.

பொழுது புலருமா?...
140

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"ஏன்... இல்ல... உண்மையில், இப்பத்தான் உங்க மேல
எனக்குக் கோபமே வருது..." என்றாள் விளையாட்டாக...
"ஏன்...? சொல்லு... நளினி..."
"பாரதி... உங்களுக்கு என்மேல... முழு நம்பிக்கை இல்லேன்னு
தான் சொல்வேன். இல்லேன்னா... முக்கியமான விஷயத்தை...
இல்வளவு லேட்டா சொல்வீங்கா?"
"அதில்லே நளினி... நான் ஏன் சொல்லலேன்னு... உனக்குத்
தெரியாதா, என்ன... பாரதி... மென்று விழுங்கினான்.
"என்ன, அதில்லைன்னு மழுப்புறீங்க, நமக்குள் எந்த ஒளிவு,
மறைவும் இருக்கக்கூடாதுன்னுதானே என்னோட வாழ்க்கையில்
நடந்ததை எல்லாம் ஒளிக்காமல் சொன்ளேன். நீங்களும்
அப்படித்தானே... இருந்திருக்கணும்..." கோபப்படுபவள் போல்
நடித்தாள்.
"ஐயோ நளினி... கோபப்படாதே, நீ கோபப்பட்டா... நான்
தாங்கமாட்டேன். ஸோரிம்மா... தப்புப் பண்ணிட்டேன்னு,
கன்னத்துல போட்டுக்கவா
"போதும் போதும்" அசடு வழியாதீங்க, என்னோட
வாழ்க்கையில் நடந்த வேதனைகளை... உங்களுடையதா
எடுத்துக்கிட்டு... எனக்கு மிகப்பெரிய வாழ்க்கையைக் கொடுத்தவர்
நீங்க. உங்ககிட்ட எனக்குக் கோபமே வராது... பாரதி... இதெல்லாம்
சும்மா... என்று கூறியபடி கண் சிமிட்டினாள்.
"சரி சரி... நான் உங்ககிட்ட சொல்லணுமின்னு இருந்தேன்.
கடையில, எனக்குப் பிடிச்ச மோதிரம் ஒன்று வாங்கினேன்.
கல்யாண அன்னிக்கு... அதை நானே உங்கள் விரல்ல போடப்
போறேன்.''
"அப்போ நானும் உனக்கு மோதிரம் போடுவேனே."
"தெரியும்... அம்மா வாங்கி இருக்கிறாங்க. அது மட்டுமில்ல...
கை நிறைய காப்பு, நெக்லஸ், காதுக்கு பல ஜோடி தோடுகள்,
மாட்டல்... மோதிரங்கன்னு... நான் நினைக்காத அளவுக்கு
அசத்திட்டாங்க." அவள்... முகத்தில் ஆனந்தம் கூத்தாடியது.
குழந்தையைப்போல், அவள் பேசும் அழகு பாரதிக்கு
மகிழிச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இப்படியே வாழ்க்கை

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


பூரா அவளோடு சேர்ந்து வாழப்போவதை நினைத்ததும் பாரதிக்கு
வானத்தில் பறப்பது போல் இருந்தது, வாழ்ந்த வாழ்க்கையில்
எத்தனையோ சந்தோசங்களை அவன் இழந்திருக்கிறான். வேதனை
அவன் வாழப் பிறந்தது; சோதளை... நிறைய அவன் சந்தித்தது.
துன்பம் தோள்கொடுத்துத் தொடர்ந்து துணையாக வந்தது.
இழந்தது நளினியை மாத்திரம்.
மகிழ்ச்சியாய் இருக்கவேண்டிய இந்த நேரத்தில்... அவன்
சிந்தனை... எங்கெங்கே அலைபாய்ந்து கொண்டிருந்தது.
அவனின் திடீர் மெளனம்... நளினிக்கு என்னவே போலனது
"பாரதி... என்ன எதுவுமே பேசாம, மெளனமாயிட்டீங்க."
''இல்ல... அம்மா எவ்வளவே வாங்கிக் குடுத்ததா
சொன்னியே... முக்கியமான ஓண்ணு வாங்கி இருப்பாங்களே...
வாங்கினாங்களா?
நளினியும் தெரியாதது போல்... "ஆமா!
காலுக்கு ரெண்டு ஜோடி செருப்புர அதுவும்... விலை அதிகம்தான்.''
முகத்தைச் சுளித்தாள்.
இப்ப நான் கேட்டேனா?... எத்தனை செருப்புன்னு?
முக்கியமான பொருள்னு சொன்னா... உன்னை நான், என்னோட
மனைவி... உலகத்துக்கே... அறிவிக்கப்போற... இன்னும்
அலங்காரமா சொல்லப்போனா... உன் சங்குக்கழுத்த
அலங்கரிக்கப் போற... அதிகாரப்பூர்வ லைசன்ஸ்.
தாலிக்கொடி... இப்பவாது புரிஞ்சுதா? இவ்வளவு நீளமான ஒரு
கதை சொல்ல வேண்டியதா இருக்கே" - அலுத்துக் கொண்டான்.
"எப்பவோ புரிஞ்சுடுச்சு பாரதி! பத்து பவுன் தாலியுடள் கூடிய
சயினை அம்மா வாங்கி இருக்காங்க. அதைவிட ஒரு துண்டு
மஞ்சள் கயித்துல தாலி இருந்தாலும் நான் சந்தோசப்
இந்தத் தங்கமெல்லாம் வெறும் அலங்காரப் பூச்சுகள்,
இப்படியெல்லாம் ஆடம்பரமா நம்ம கல்யாணம் நடக்கணும்கிறதுல
எனக்கு உடன்பாடே கிடையாது பாரதி...
நம்ம கல்யாணம் சிக்கனமா, எளிமையா நடந்தா... நான் ரொம்ப
சந்தோசப்படுவேன், ஏழ்மையா இல்லேன்னாலும், எளிமைய
இருக்கணுமின்னு நினைக்கிறேன்" என்று மூச்சு விடாமல் பேசி
நிறுத்தினாள்.

பொழுது புலருமா?.
142

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


“என்ன நளினி, உன் மனசப்பத்தி... நான் அறியாதவனா...?
என்ன நம்ம கல்யாணமே ரிஜிஸ்தர் ஆபிஸ்லதான்
நடக்கப்போகுது.
இவ்வளவு நகை நான் வாங்கச் சொல்லி இருக்கேன்னா... காரணம்
இல்லாமலா சொல்லி இருப்பேன்?"
"அப்படி என்ன... பொல்லாத காரணமாம்?"
"நளினி தங்கத்துல ஒரு வைரத்தைப் பதிச்சா எப்படி எடுப்பா
இருக்குமோ அதுபோல் என் நளினியோட அழகுக்கு இந்த
நகைங்க மேலும் அழகு சேர்க்கட்டுமேன்னுதான். இனிமே என்
நளினி எப்படி ஜொலிக்கப்போறாளுன்னு பார்க்கத்தானே போறே.
நளினி, நீ எப்பவும் நிறைஞ்ச நகைகளோட மகாலட்சுமியாட்டம்
என் வீட்டுல மட்டுமில்ல... எல்லாரோட மனசிலேயும் வலம்வரப்
போறே" என்று அவள் தலையில் முட்டினான்.
"ஆ... அப்பா..." என்று தலையைத் தடவியபடி... "ஆசையைப்
பாரு" என்றாள்.
"நளினி... இந்த ஒரு வாரமும்... உன்கூட எனக்கு ஒவ்வொரு
நாளும் சுகமான ராகங்களா இருக்குது தெரியுமா...?"
"உங்க முகத்தைப் பார்த்தாலே அது தெரியுதே... பாரதி, நீங்க
எனக்குத் தாலி கட்டுற சடங்கை எந்தக் கோயில்ல செய்யறதா
இருக்கிறீங்க என்றாள்.
"ம்... காலையில பதினொரு மணிக்கு ரிஜிஸ்தர்
ஆபீஸ்ல
திருமணம், அப்புறம் மாலை ஆறு மணிக்கு மாரியம்மன் கோயில்ல
கல்யாணம்' என்று தெளிவுபடுத்தினான், "சரி... வேற
ஏதாவது
கேக்கப் போறியா?"என்றான். பக்கத்தில் அமர்ந்திருக்கும்
அவுளை... அப்படியே கட்டி அணைக்க... அவன் கைகள்
துடித்தன.
அவன் பார்வையில் உள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்ட
நளினி... ''வேற எதுவும் எனக்குப் பேசுறதுக்கு இல்லை. ஏற்கெனவே
உங்ககிட்டப் பேசினதுதான் உங்களுக்கு எங்கிட்ட ஏதாவது பேச
வேண்டியது இருக்காள்னு... கேட்டாள்.
பாரதியும் எதுவும் பேசுறதுக்கு இல்லேன்னதும்... அப்படீன்னா
ரொம்ப நேரமாயிடுச்சு, வீட்டுக்குப் போக வேண்டியதுதான்" என்று
எழுந்தாள்.

நூர்ஜஹான் சுலைமான்
143

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


நளினியின் கையைப் பிடித்து இழுத்து "வீட்டுக்குப்
போகணும்தான் அதுக்கு முன்னால இந்த அழகான உதட்டுல
ஒண்ணு குடுத்திட்டாப் போயிடலாம்'' என்ற பாரதி, குறும்புப்
புன்னகையுடன்.
"அம்மாடி, அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்.
இப்ப முதல்ல... நாம வீட்டுக்குக் கிளம்புவோம்" என்று நளினி...
அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக்கொண்டு கதவைத்
திறக்கப் போனாள். பாரதியும் அவன் பேச்சுக்கு மறுப்பேதும்
சொல்லாமல் கிளம்பத் தயாரானாள்.
காரில் அமர்ந்த நளினி... பாரதியின் தோளில் சாய்ந்தபடி...
"பாரதி! நாம துவங்கப் போற வாழ்க்கையில, இனிமே எந்த ஒளிவு
மறைவும் இருக்கக்கூடாது, வயசாயிடுச்சுங்கிற எண்ணமும் நம்ம
மனதுல தோணக்கூடாது. வாழ்க்கையை ரொம்ப சந்தோசமா
அனுபவித்கணும்... கண்களை மூடியிருந்த நளினியின் தலையில்
ஒரு கையும், ஸ்டேரிங்கில் ஒரு கையுமாயிருந்த பாரதி...
''நிச்சயமா, நம்முடைய வாழ்க்கை ரொம்ப சிறப்பாகவே
இருக்கும், அதில் எந்த சந்தேகமும் உனக்கு வேணாம்" என்று உறுதி
கூறினான்.
நளினியின் மனசிலும் இனி... பாரதியைப் பாதுகாக்க
வேண்டிய பெரிய பொறுப்பு அவளுக்கு இருப்பதை உணர்ந்தான்.
எக்காரணம் கொண்டும் அவன் மனம் நோகும்படி நடக்கக்கூடாது.
தான் ஒரு நோயாளி... என்ற எண்ணத்தை அவன் மனசிலிருந்து
துடைத்தொழிக்க வேண்டும்... அதுதான் அவளுக்கு இப்போதைய
தலையாய கடமையாயிருந்தது. மனச்சங்கடங்கள் குறைந்த
நிலையில்... அந்தக் காதலர்களின் கனவு பலிக்குமா?... காலம்தான்
பதில் சொல்ல வேண்டும்.
அத்தியாயம் 19

நாட்கள் ஓடிய வேகம் தெரியவில்லை. நளினி பாரதியின்


வீட்டுக்கு வந்து அதற்குள் இரண்டு வாரம் ஆகப்போகுது.
விடிந்தால் கல்யாணம், வீட்டில் பரபரப்பான கல்யாண வேலைகள்
நடந்து கொண்டிருந்தன. அன்று மதியம் வெளியே போன பாரதி,
மாலை ஆறு மணி அளவில் வீடு வந்து சேர்ந்தான். கூடவே...

பொழுது புலருமா?...
144

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


கையில், ஒரு அழகான மீரா சிலையை வாங்கி வந்து... அதைக்
கையோடு பழைய இடத்திலேயே வைத்துவிட்டான்.
வீட்டில் அமைதி தவழ்ந்து கொண்டிருந்தது. இந்த அளவுக்கா
நம்ம வீடு அமைதியா இருக்கு? அதுவும் லலிதா, தாமரை இருக்கும்
போது. இருக்கவே இருக்காது என்று யோசித்துக் கொண்டிருந்த
போது, வேலைக்காரி சுசிலா பாரதியிடம் டீ கப்பைக் கொண்டு வந்து
நீட்டுகிறாள்.
என்ன சுசிலா... வீட்டுல யாரையும் காணோம் எல்லாரும்
எங்க போயிருக்காங்க?" தேநீரைப் பருகியபடி, பாரதி...
சுசிலாவிடன் கேட்டான்.
"எல்லாரும் தோட்டத்துல இருக்காங்க. மேடத்துக்கு மருதாணி
போட்டுக்கிட்டு இருக்காங்க."
"அப்படியா", சரி... வாசல்ல இருந்த அந்தக் கறுப்பு நாய்,
எங்கிருந்து வந்ததுன்னு தெரியுமா?... அக்கம், பக்கம்
விசாரிச்சியா?"
"இல்லேங்க ஐயா.. சில சமயம் வாசல் ஓரத்துல படுத்துக்
கிடக்குது. பிறகு பார்த்தா.. அது எங்க போயிடுமோ தெரியாதுங்க
மறுபடியும் அது வாசல் பக்கமே வந்து படுத்திடுதுங்க. ஆனா...
அது நம்ம வாசல்ல வந்துதான் படுத்துக் கிடக்குதுங்க!"
"நம்ம சின்னம்மா மதியம் மேடத்தைக் கூட்டிக்கிட்டு, முடி
அலங்காரம் பண்ணப் போயிருந்தாங்க. அப்போ... வாசல்ல
படுத்துக்கிடந்த இந்த நாய் ஓடிவந்து, குரைச்சுக்கிட்டே மேடத்தை
மூணுதரம்... கத்திச் சுத்தி வந்துச்சுங்கய்யா, மேடம், ரொம்பவே
பயந்து போய்ட்டாங்க."
"இப்ப... நான் வாசலைத் திறக்கும்போது கூட
குரைச்சிக்கிட்டுதான் இருந்துச்சு. சரி... சரி. மறுபடியும் அது
போகாம இருந்துதுன்னா, மனித நேய விலங்கு பராமரிப்பு
நிலையத்துக்கு போன் பண்ணி சொல்லிடுவோம்" என்று காலியான
டீ கப்பை... சுசிலாவின் கையில் கொடுத்துவிட்டுப் பாரதி
தன்
அறைக்குப் போனான்.
வெளியில் போய்விட்டு வந்த அலுப்பு... பாரதி படுக்கையில்
படுத்த வண்ணம் நெற்றிமேல் தன் இரு கைகளையும் வைத்தபடி...
சிந்திக்க ஆரம்பித்தான்.

நூர்ஜஹான் சுலைமான்
145

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அன்று அவன் ஆபிஸில் அவளோடு பகிர்ந்து கொண்ட
விஷயங்களை மனதில் ஓடவிட்டான். உண்மையில் அவள்
எத்தனை அபூர்வமானவள், எனக்குள்ள நோயைப் பற்றிக்கூட நான்
கவலைப்படக் கூடாதென்பதற்காக, அதை ஒரு விஷயமாக
எடுத்துக்கொள்ளாமல், எத்தனை பெருந்தன்மையுடன் எனக்கு
ஆதரவாகப் பேசினாள். அவள் என்னோடு... இணைந்திருக்
கையில், நான் ஏன் என் நோயைப் பற்றிக் கவலைப்படணும்?...
நளினியைச் சந்தித்த இந்த இரண்டு வாரமாகத் தன்
வயதையும் மறந்து, இருபத்தைந்து வயது வாலிபனைப்போல், வலம்
வர ஆரம்பித்து விட்டான். இப்பொழுதெல்லாம் தன்னைப் பற்றி
நினைக்கும் பொழுதெல்லாம்... பாரதிக்கே ஆச்சரியமாக இருந்தது.
நானா இப்படி மாறிட்டேன். சோகங்களை... என் மனசிலேயே
வச்சுக்கிட்டு, மத்தவங்ககிட்ட சிரிச்சுப் பேசிக்கிட்டு நடிச்சுக்கிட்டா
இருந்தேன்.
உலக அழகி கிளியோபாட்ரா இந்த உலகத்தையே
ஆட்டிப்படைச்சா; மர்லின் மன்றோ திரை உலகத்தை
மட்டு மில்லாமல், உலகத்திலுள்ள அத்தனை சினிமா
மனத்தையும் தன்னோட வசீகரமான அழகாலும், கவர்ச்சியாலும்
சுண்டி இழுத்தவ. இந்த உலகமே. அழகுக்க மயங்கிக்
இல்லை இல்லை; அழகு மட்டுமல்ல - அதையும் தாண்டி ஏதோ
ஒண்ணு அவகிட்ட புதைஞ்சு கிடக்குது. இல்லேன்னா நளினி
இல்லாம, எனக்கு வாழ்க்கையே இல்லேன்னு இத்தனை காலமா
பிரம்மச்சாரியா இருந்திருப்பேனா? எனக்குப் புரிஞ்சதெல்லாம்
அந்தச் சிறிய வயசுல, அரும்பு மீசை வளர்ந்த காலத்துல அவளின்
வசீகர முகம் தந்த மயக்கமும் கள்ளம் கபடு அறியா அவளின்
குழந்தை மனசும்தான், காதல் வெறியா வேர் பிடிச்சு இருந்திருக்கு.
எத்தனை இடி, புயல், மழைத்கும் அசைஞ்சு கொடுக்காமல்
நாணலைப் போல் வாழ்ந்திருக்கும் இந்தக் காதல், வாழ்க்கைங்கிற
கடல்ல என் காதலையும் புதைச்சு வச்சு வேதனையுடன், என்
காலத்தையும் ஓட்டிக்கிட்டு வந்திருக்கேன்னா, அந்த நம்பிக்கையான
காதல்தான் என் நளினியோட என்னையும் கரை சேர்த்திருக்கு.
ஆமாம்! காதல் உண்மையானது, உயர்வானது, உறுதியானது,
அழகானதும் கூட... ஆமாம் ஆமாம்; பாரதி
தன்னையும் அறியாமல் புலம்பினான்.

பொழுது புலருமா?...
146

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"அண்ணா... என்னது? ஏதேதோ புலம்பிக்கிட்டு இருக்கே?"
லலிதாவின் கணீர்க் குரலால் தன் சிந்தனையிலிருந்து விடுபட்ட
பாரதி... “ம்... ஒன்றுமில்லையே."
"சரிதான், பகல் கனவா?" என்றாள் விடாமல்.
சரி... இவகிட்ட வம்பு பண்ற நிலைமையில் இப்ப நாம இல்லை
என்றறிந்த பாரதி... “வந்து நேரமாச்சா?..." என்று கேட்டபடி நெற்றி
மேல் வச்சிருந்த கையை எடுத்துட்டு சுற்றிலும், தன் பாவையை
மேய விட்டான்.
லலிதாவின் பின்புறம், மறைந்து நின்ற நளினியைக் கன்டதும்
எழுந்த பாரதி... -ஆமா... இப்ப மணி என்ன..." - இப்ப மணி எட்டு
என்று சுவர்க்கடிகாரம், அவன் முகத்துக்கு நேரே காட்டியது.
ஆயினும்... ஏதாவது கேக்கணுமேங்கிறதுக்காக... இதைக்
கேட்டான்.
"சரியாப் போச்சு, விளக்கு வச்சு நாழியகுது அண்ணா.
ஆமா... வரவர என்ன நீங்க... ஒழுங்காக நேரத்துக்குச் சாப்பிடாம,
எதையோ... யோசிச்சிட்டிருக்கிறீங்க போலிருக்கு. விளக்கையும்
போடாம, அப்படி என்னதான் யோசனையோ... தெரியலை போங்க"
என்று லலிதா விளக்கைப் போட்டாள். பளீரென வெளிச்சம் அறை
முழுவதும் பரவி இருந்தது. பாரதியின் பார்வை லலிதாவின்
முதுகுக்குப் பின்னால் மறைந்து நின்ற நளினியில்மேல் படுகிறது.
லலிதாவும் விலகிக் கொள்கிறாள்.
பார்த்தவன் கண் நிலை குத்தி நின்று விடுகிறது. விடிந்தால்...
காதல் மனைவியாகப் போகிற நளினி... அப்சரஸ் போல்
காட்சியளித்தாள்.
"அண்ணா பார்த்தது போதும், அசடு வழியுது" என்றாள்
சிரித்துக் கொண்டே.
"இல்ல... உங்க அண்ணிய அப்படியே மாத்திட்டீங்க
போலிருக்கு."
"சரி... அண்ணிக்கு இந்த அலங்காரம், அழகா இருக்கா
சொல்லுங்க."
"என்னக் கேட்ட இந்த அலங்காரமெல்லாம் இல்லாமலே
உன் அண்ணி ரொம்ப அழகாவே... இருப்பாளாக்கும்."
பெருமையுடன் கூறினாள்.

நூர்ஜஹான் சுலைமான்
147

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


''அண்ணா.... ஓரே... வீட்டுல இருக்கிறதுனால, நீங்க இன்னிக்கு
அண்ணியைப் பார்க்க வேணாமின்னு... அம்மா தடை
விதிச்சிருக்காங்க, அதனால இன்னிக்கு எந்த சேட்டையும்
பண்ணாம, நல்ல பிள்ளையாட்டம் தூங்கிட்டு காலையில் சீக்கிரமே
எழுந்திடுங்க. என்ன சரியா..." என்றாள்.
"ஐயய்யோ... காலையில வரைக்கும்... உங்க அண்ணிகூடப்
பேசாம இருக்கணுமா? இது எனக்குத் தண்டனையா என்ன... என்று
பாரதி கூறவும், வெட்கத்தில் உறைந்து போன நளினி... வெளியே
ஓடிவிட்டாள்.
இதைக் கவனித்த பாரதி... லலிதாவிடம்... “பாத்தியா, நீ
ஏதேதோ சொல்லி அவளை ஓட வச்சுட்டியே" என்றான்.
"அண்ணா, இனிமே நீ காலம் பூரா... அண்ணிய
பாத்துக்கிட்டுத்தானே இருக்கப் போறே. இன்னிக்குக் கொஞ்ச
நேரம் பார்க்கலேன்னா குடியா முழுகிடும். சரி... சரி... வேலைக்காரி
உனக்கு சாப்பாடு எடுத்து வச்சிருக்கா. இன்னும் கனவு கண்டுகிட்டு
இருக்காம சீக்கிரம் வந்து சாப்பிட்டுப் போங்க" என்று தாமரையும்
வந்து குரல் கொடுக்க விரைவாக எழுந்து சென்றான்.
ஏனோ பாரதி சாப்பிட மனமில்லாமல் பாதியுடன் எழுந்து,
கையைக் கழுவிட்டு மறுபடியும் நாற்காலியில் உட்கார்ந்தபடி...
நளினியைப் பற்றிச் சிந்தித்த வண்ணமிருந்தான்.
ஒவ்வொரு சமயமும் அவன் ஒவ்வொரு வடிவத்தில் காட்சி
அளித்திருக்கிறாள். சற்றுமுன் லலிதாவின் முதுகுப்புறம்
மறைந்திருந்தவள் மெல்ல அவள் தலையைக்காட்டியபோது அவள்
கண்கள் பட்ட பாட்டை வர்ணிக்க... நான் ஏன் கவிஞனாகப்
பிறக்கவில்லையென வருத்தப்பட்டான். மேகத்தில் மறைந்து
கொண்ட நிலவு.... மெல்ல எட்டிப்பார்ப்பது போல் இருந்த இந்தக்
காட்சியில் பாரதி... அப்படியே லயித்துப் போனான். கண்கள்
மூடியே இருந்தது.
அந்தநேரம் காமாட்சி அம்மாள். பாரதியிடம் வந்து பாரதி...
"நீ இன்னும் தூங்கலியா? நல்லதாப் போச்சு என்றவர், கையில்
கொண்டு வந்திருந்த இரண்டு மோதிரங்களையும் பாரதியிடம்
காட்ட... மூடிய கண்களில், காட்சிகள் மறைய, பாதி கண்களைத்
திறந்தான். சுற்றிலும் வைரக்கற்கள் பொறிக்கப்பட்டு... இரண்டு

பொழுது புலருமா?..
148

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


பேருடைய பெயரின் முதல் எழுத்து இருந்தது. பார்ப்பதற்கு
அழகாகவே இருந்தது.
அம்மா, எனக்காக நீங்க எது செஞ்சாலும் அது எனக்கு
நிச்சயமா பிடிக்கும்மா. என் வாழ்க்கையில உங்க பேச்சை மீறி
நடந்தது... இந்தக் கல்யாணத்துல மட்டும்தான்; மத்தபடி...
எனக்குன்னு எந்த விருப்பு, வறுப்புமே இல்லை. காலம் பூரா
ஒருத்திக்காகக் காத்திருந்தேன்...கிடைக்க மாட்டான்னுகூட முடிவு
பண்ணினேன், நடைப் பிணமாத்தான் வாழ்ந்தேன். ஒருநாள்... பல
வருஷம் கழிச்சு, குறிஞ்சிப்பூவைப் போல அதிர்ஷ்டவசமா
அவளைப் பார்த்தேன், நம்பிக்கையை இழந்து நின்ன நேரத்துல,
என்னோட வாழ்க்கையில இணைஞ்சுடுறேன்னு... என்னை நம்பி|
வந்துட்ட அவனைவிட இதெல்லாம் பெரிசா எனக்குத
தெரியலேம்மா...
"சம்பிரதாயத்துக்காக... ஏதோ நீங்க ஆசைப்பட்டீங்களேன்னு
இதொல்லாம் வாங்க சம்மதிச்சேன்..இது அத்தனையும் நான்
நளினிக்குப் போட்டுப் பார்க்கத்தான் ஆசைப்பட்டேம்மா."
பாரதி பேசி முடித்ததும்... காமாட்சியம்மான்... பாரதியிடம்
"கல்யாணம் பண்ணாம... கடைசி வரையிலும் காலத்தைக்
கடத்திடுவியோன்னு பயந்துகிட்டிருந்தேன். எப்படியோ நீ மனசுல
நெனச்ச பொண்ணையே கட்டிக்க போறே... இதைவிட ஒரு
தாயக்கு வேறு சந்தோசம் என்ன இருக்கப் போகுது?
“என்னமோ சொல்லு வாங்களே... நதிகள்
பிரிஞ்சு போனாலும் கடைசியில ஒண்ணா கடல்ல வந்துதான்
கலக்கும்னு அதுபோல எப்படியெல்லாமோ கஷ்டப்பட்ட நீங்க
இரண்டு பேரும் மறுபடியும் இணைஞ்சதே கடவுளோட
பிராப்தம்தான். நீங்க ரெண்டு பேரும், ரொம்ப காலத்துக்கு வாழணும்"
என்று கூறிய காமாட்சியம்மாள் பாரதியை வாஞ்சையுடன்
அணைத்துக் கொண்டார், விழி ஓரத்தில் தேங்கி நின்ற கண்ணீரைத்
துடைத்தபடி.
தாயின் பாசமிகுந்த அணைப்பில்... குழந்தையாகிப்போன
பரரதி, பஞ்சு போன்ற தாயின் கைகளைத் தடவியபடி... "இன்னிக்கு
மட்டுமில்ல... என்னிக்கும் உங்க ஆசீர்வாதம் எனக்கு வேணும்மா,"

நூர்ஜஹான் சுலைமான்
149

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"சரி... எது எப்படியோ எனக்கு இல்ல... இந்த வீட்டுக்கு
விளக்கேத்த ஒரு மகாலட்கமியக் கொண்டு வந்து குடுத்துட்டே...
எனக்குப் போதும்... சரி... நளினியோட சித்தி வீட்டுக்குப் போன்
பண்ணி சொன்னியா" என்று காமாட்சியம்மா கேட்க... பாரதியும்
"சொல்லிட்டேம்ம. வீட்டுக்குத்தான் வரச்சொன்னேன். அவுங்க
நேரா கோவிலுக்கு வந்திடுறோம். பிறகு வீட்டுக்கு வர்றதா சொல்லி
இருக்காங்க" என்றான்.
"சரி பாரதி... காலையில சீக்கிரம் எழுந்திருக்கணும்.... இப்பவே
ரொம்ப நேரமாயிடுச்சு. போய்ப் படு" என்று காமாட்சி
வற்புறுத்தவே... பாரதி படுக்கைக்குப் போனான்.
படுக்கையில் படுத்தும், ஏனோ... தூக்கம் வராமல் புரண்டு
கொண்டிருந்தான். அவன் மனம் ஒரு நிலைகொள்ளாமல் தவித்தது.
உள்ளுணர்வு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவதை
உணர்த்திக்கொண்டிருந்தது. எந்த நினைவுகளுக்கும் இடம்
கொடுக்காமல் இருக்க நினைத்தாலும், வாசலில் படுத்திருக்கும்...
அந்தக் கறுப்புநிற புல்டோக் நாய்... அவன் கண்முன் வந்து
பயமுறுத்துவது போல் இருந்தது.
இனி எதையும் நினைகக் கூடாது... எல்லாம் நல்லபடியா
நடந்துகிட்டு இருக்கிற இந்த நேரத்துல கெட்டதைப் பத்தி சிந்திக்கக்
கூடாதுன்னு... பாரதி பெருமுயற்சியுடன் தூங்குவதற்கு
முற்பட்டான்...
அத்தியாயம் 20
காலையில் ஐந்து மணிக்கெல்லாம், லலிதா குழந்தைகளை
எழுப்பிக் குளிப்பாட்டிக் கொண்டிருக்க, காமாட்சி... பரபரப்பாக
சமையலறைக்கு வந்து... "தாமரை... எல்லாம் சீக்கிரம் ஆகட்டும்,
பத்து மணிக்கெல்லாம் நாம் கோயில்ல இருக்கணும். பாரதியையும்
சீக்கிரமா எழுப்பிடுங்க"ன்னு சொல்லிட்டு... வந்த வேகத்திலேயே
பூஜையறைக்குள் நுழைந்து
இதற்கிடையில் பாரதி சத்தமில்லாமல் தாமரையின் பின் நின்று
கொண்டான், "ஏ சுசிலா... காப்பி... ரெடி பண்ணி வை...நான் போய்
அண்ணனை எழுப்பிட்டு வர்றேன். நல்ல நாளும் அதுவுமா இந்த

பொழுது புலருமா?.
150

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அண்ணன்... பொறுப்பில்லாம தூங்குறாரேன்னு திரும்பியவளின்
முன் பாரதி நின்று கொண்டிருக்க. தாமரை கப்சிப்பென்று வாயை
மூடிக்கொண்டாள்.
"தெரியுமே... நீ எழுப்ப வர்றேன்னு சொல்லி வம்பு பண்ணு
வீங்கன்னுதான் நானே எழுந்திருச்சிட்டேன். அ ம்மா
நாளையிலிருந்து என் ஆளு வந்து எழுப்பிடுவாங்க. அதனால
நாளையிலிருந்து நான் உங்களுக்குத் தொந்தரவு குடுக்கமாட்டேன்.
விடுதலை, விடுதலைன்னு நாள்பூரா நல்லா தூங்கிக்கிட்டு
இருப்பேன்" என்றான்.
"என்ன அண்ணா! இப்படியா பூனை மாதிரி சத்தமில்லாம வந்து
நிக்கிறது? கொஞ்ச நேரத்துல பயந்தே போயிட்டேன்."
"ஆமாம்மா... நீ ரொம்பத்தான் பயந்து போய்ட்டே. நீங்க
அடிக்கிற கும்மாளம் பத்தாதா? நான் வேறயா? அப்பப்பா ஒரே
சத்தம். தூங்கவா முடியாது..." பாரதி இப்படிச்சொன்னது
லலிதாவுக்குப் பிடிக்குமா?
உடனே அவள், "அண்ணா! இந்த ஓட்டசாட்ட மெல்லாம்,
இன்னியோட முடிஞ்சுடுச்சு. இது தான் கடைசி,
எப்பவாவது ஒரு நாளைக்குத்தான் வரப்போறோம். அதுக்குள்ள
சலிச்சுக்கிறீங்கனே"ன்னு முகத்தை ஏழு கோணலாகக் காட்டினாள்.
"ஏய்... விளையாட்டுக்குச் சொன்னா... ஏதேதோ...
பேசுறியே... கோபமா?"
"ஐயே அண்ணா... உங்ககிட்ட என்ன கோபம்?
எப்பவும்போல நாங்களும் விளையாட்டுக்குத்தான் பேசினோம்.
அண்ணா... என்னோட ஆசை என்ன தெரியுமா? நீ எப்பவும் இது
மாதிரியே சிரிச்சுக்கிட்டு இருக்கணும், தெரியுதா?"
பாரதி... மெளனமாக இருந்தான். பாரதியிடம் சந்தோசம்
போய் பல வருஷங்களாச்சு, யாரிடமும் எதுவும் அனாவசியமாகப்
பேசுறதும் இல்லை. அதைத்தான் லலிதா இப்படிச்
சுட்டிக்காட்டினாள்.
சரி சரி... நேரமாச்சு... நீங்க போய் முதல்ல குளிங்க, குளியல்
அறை காலியா இருக்கு" என்று விரட்டினாள் தாமரை. மனசுக்குள்
தாமரைக்கு நன்றி கூறிய பாரதி குளியல் அறைக்குள் நுழைந்து...
கதவை மூடிக்கொண்டான்.

நூர்ஜஹான் சுலைமான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"போகும்போது... எங்கே உங்க புருஷன்மார்கள் யாரையும்
காணோம். நேத்தே வரவேண்டியவர்கள் வரலியே..." என்று
கேட்டு வைத்தான்.
"அதெல்லாம் அவுங்க வர்ற நேரத்துல சரியா வந்து
சேர்ந்துடுவாங்க, முதல்ல உங்க வேலைய முடிச்சிட்டு வாங்க
அண்ணா... என்று சலித்துக் கொண்டாள்.
"இந்த வாயாடிக்கிட்ட நளினி எங்கேன்னு கேக்கமுடியுமா?"
இப்படி முணுமுணுத்தபடி... பாரதி தண்ணீர்க் குழாயைத் திறந்தான்.
குளிர்ந்த நீர் உடம்பில் பட்டதும்... குதூகலத்துடன் ஆனந்தமாக
நீராடி முடித்த பாரதி... துண்டால் உடம்பைச் சுற்றிய படி தன்
அறைக்குள் நுழைந்து கொண்டான்.
சுவர்க்கடிகாரத்தின் ஒலி, மணி ஏழு என்பதைக் காட்டியது.
தாமரை, லலிதாவின் கணவர்மார்களும் வந்துவிட, காலை பசியாறும்
வேலைகளும் ஒரு வழியாக முடிந்தது.
நிலைக்கண்ணாடிமுன் பாரதி... தன்னை ஓருமுறை
பார்த்துக்கொண்டான். கறுப்புநிற பேண் ட .
் .. அதுக்கு மேச்சாக முழு
நீளக் கைச் சட்டை... கறுப்புடையும் கட்டிக்கிட்டான். கண்களில்
விலை உயரந்த கண்ணாடியையும் அணிந்து கொண்டான். அங்கும்,
இங்குமாகத் திரும்பியபடி... மறுபடியும் உடைகளைச் சரி செய்து
கொண்டான். ம்... எல்லாம் எடுப்பாத்தான் இருக்கு. என்ன...
அங்கங்கு சில நரைமுடிகள் நீட்டிக்கிட்டு இருந்துச்சு. அதை சீப்பால்
வாரி முடிக்குள் நுழைத்து விட்டாள். நல்ல
சொட்டை விழலை - மெல்ல நகைத்தவாறு, அலங்காரம் நிறைவு
பெற, அறையை விட்டு வெளியே வந்த பாரதி, நேராக அம்மாவைப்
பார்க்க பூஜையறைக்குள் நுழைந்தான்.
அப்பத்தான் பூஜையை முடிச்சிட்டு எழுந்த காமாட்சி... எதிரே
பாரதியைக் கண்டதும்... இது கனவா? நனவா? இது என்னோட
பாரதியா?" என்று மலைத்துப் போனார்.
பாரதி தாயின் காலில் விழுந்து வணங்கி எழுந்தான்.
மகனை ஆசீர்வதித்த காமாட்சி... "பாரதி... இத்தனை நாளா
உன்னோட இந்த அழகை எங்கேயப்பா ஒளிச்சி வச்சிருந்தே... என்
கண்ணே பட்டுடும் போலிருக்கே.. நீ எப்பவும் இப்படியே...
இருக்கணும் பாரதி"ன்னு உச்சிமுகர்ந்தார்.

பொழுது புலருமா?.
152

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


ஆசி வழங்கிய தாயை, அப்படியே அணைத்துக்கொண்ட
பாரதி, காமாட்சியின் தலையை வருடினான், கண்களைச் சிறிதுநேரம்
மூடிய பாரதி... அப்பப்பா! தாயின் அணைப்பு எத்தனை
இதமானது... விடுபட மனமில்லாமல் நின்றவளை.. காமாட்சி
பாரதியிடமிருந்து விலகி, "பாரதி நீ... நூறாயிகக்கு இருக்கணும்பா...
காலங்கடந்து, இன்னிக்கு கைகூடி இருக்கிற... இந்தக் கல்யாணம்...
உனக்கு உன் வாழ்க்கையில, நல்ல மாற்றங்களைக் குடுக்கணும்"
என்று வாழ்த்திய காமட்சியின் கையைப் பிடித்தபடி... பூஜை
அறையைவிட்டு... இருவரும் படிகளில் இறங்கி வந்து
கொண்டிருந்தனர்.
காமாட்சியின் கையைக் கெட்டியாகப் பிடித்தவாறு படிகளில்
இறங்கும் போது இன்னிக்கு என்னமே பாரதிக்கு
இருக்கணும் போல் தோன்றியது. காமாட்சியின் கையைப்
பிடிச்சிக்கிட்டு, சின்ன வயசுல ஊர்ல, கிராமத்துல நடந்து
ஞாபகம் வந்துடுச்சு, கடவுளே... அந்தக் குழந்தையாவே இப்பவும்
இருந்திடக் கூடாதான்னு மனசு கெடந்து தவிக்குது. பாரதிக்கு...
திடீருன்னு இப்படி ஒரு நெனப்பு ஏன் வந்ததுன்னு தெரியலை.
படியை விட்டு இறங்கிய காமாட்சியின் மனசிலேயும், இப்படி
ஒரு எண் ணம் ஓடியது. இத்தனை அழகையும், இவ்வளவு காலமா
ஒளிச்சு வச்சுக்கிட்டு வாழ்ந்திருக்கானே... காதல் ஒரு மனுஷனை
சந்நியாசியாக்கூட ஆக்கிடுமோ? கடவுளே பருவ வயசைக் கடந்து,
பெரிய வயசுல வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகும் இந்த ரெண்டு
ஜீவனையும் நீதான்... நல்லபடியா வாழவைக்கணும்.
என்ன... அண்ணா ! உங்களுக்காக நாங்க
இருக்கோம். சீக்கிரம், சீக்கிரம்... வந்து பசியாறுங்க. இன்னும்
கொஞ்ச நேரத்துல கிளம்பணும்.." லலிதா அவசரப்படுத்தினாள்.
"நளினி பசியாறியாச்சா... எங்கே காணோம்..." என்றதும்...
"அண்ணி பசியாறிட்டாங்க. நீங்கதான் பாக்கி..." என்று
இருவருக்கும் தட்டில் இட்லியை எடுத்து வைத்தாள்.
மாப்பிள்ளைகள் ரெண்டு பேரும், பாரதியிடம் வந்து... நீங்க
வந்ததும் சாப்பிடலாமேன்னேன்... உங்க தங்கச்சிங்க விட்டுடு
வாங்களா. அவசரம், அவசரம்னு... எங்களையும் விடலை. பாவம்...
இன்னிக்குக் கூட உங்க கூட சேர்ந்து
அவுங்களையும் சாப்பிடச் சொல்லிட்டாங்க" என்றான் ராமு.

நூர்ஜஹான் சுலைமான்
153

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


உடளே பாலு.. “மச்சான், உண்மையிலேயே நீங்க எத்தனை
அழகாகவும்... கம்பீரமாகவும் இருக்கிறீங்க தெரியுமா?”
இவ்வளவு காலத்துக்குப்பிறகு... இப்பத்தாள் உங்க முகத்துல
சந்தோஷமே தெரியுது.” இது இராமு.
“மச்சான், இனிமே... நீங்க எப்பவும் இப்படித்தான்
என்ன புரியுதா?” - இது பாலு.
மாறி மாறி இ ருவரும் பேச... பாரதி பதிலேதும்
தோணாமல் விழித்தான். “சரி சரி... அண்ணா ரொம்பவே
பயந்துபோய் இருக்காரு. நீங்க ரெண்டு பேரும் மேலும்
பயமுறுத்தாதீங்க” என்று கூறிய குறும்புக்கார லலிதா... பசியாறி
முடித்த தட்டுகளை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள்
மறைந்தாள்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஆயிற்று... அவரவர் சாப்பாட்டு
வேலை முடிந்ததும்... தாமரையும், லலித.வும் நளினியை
அலங்கரித்து அறையிலிருந்து அழைத்து வந்தனர்.
பட்டுப்புடவையில் பகட்டாக இருந்த நளினியின் அழகை...
வர்ணிக்க வார்த்தைகளே... இல்லை எனலாம். அங்கு அமர்ந்திருந்த
அளைத்துக் கண்களும் அவளைச் சுற்றியே வட்டமிட்டது.
ஒவ்வொருவரின் மனங்களிலும், பலவாறான எண்ணங்கள்...
ஓடிக்கொண்டிருந்தன. மொத்தத்தில் அவன் அழகு... அங்கிருந்த
அனைவரையும் மயக்க... வேலைக்காரிக்குக்கூடப் பொறாமை
யாயிடுச்சு. நளினி குனிந்த தலை நிமிராமல் வந்து... நின்று...
காமாட்சி அம்மாளின் கால்களில் விழுந்து, வணங்கி எழுந்தாள்.
அழகு மருமகளை ஆசீர்வதித்த காமாட்சி... சரி... நல்லநேரம்
முடியுறதுக்குள்ள எல்லாரும் கிளம்புங்க... நேரமாச்சு என்று
அவசரப்படுத்தினார். அனைவரும் வாசலுக்கு வந்தனர்.
வாசலில் அழகாக அலங்கரித்திருந்த பென்ஸ் காரில்... பாரதி,
நளினி, காமாட்சி மூவரும் அமர்ந்திருக்க, ராமு.. காரை ஓட்டினான்.
மற்றவர்கள், இன்னொரு காரில் வந்து கொண்டிருந்தனர். கார்
சாலையைக் கடக்க ஆரம்பித்தது.
என்னதான் பாலுவின் சிவப்புநிற நிஸான் கார்... சாலையில்
வேகமாகப் பறந்து வந்து கொண்டிருந்தாலும், முன்னால் போய்க்
கொண்டிருந்த பென்ஸ் காரை தாண்டமுடியவில்லை. லலிதாவும்.

பொழுது புலருமா?...
154

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


தாமரையும் பாலுவைக் கேலி செய்ய, காருக்குள் சிரிப்பு அ
ஓயவில்லை.
காரில் பாரதியுடன் அமர்ந்திருந்த நளினி வெட்கத்தினால்
மெளனமாகவே இருந்தாள். அவள் சிந்தனை சற்றுமுன் காரைச்
சுற்றி குரைத்துக் கொண்டிருந்த அந்த புல்டோக் நாயைப் பற்றி
நளினி எண்ணிக் கொண்டிருந்தாள். ஏன் இந்த நாய் நம் வீட்டையே
சுற்றிச்சுற்றிக் குரைச்சிக்கிட்டு இருக்குது? இது நல்லதா? கெட்டதா?
விடை புரியாமல் தவித்தாள்.
பாரதிக்கும் இதே எண்ணம்தான். இருந்தும். இன்று அவன்
இருந்த மனநிலையில்... இது பற்றிய சிந்தனைக்கு இடம்
கொடுக்கவில்லை. பதிவு அலுவலக வாசலில் காரை நிறுத்தினான்
ராமு. மூவரும் இறங்கியதும் ராமு காரை எடுத்துக்கிட்டு, கார்
நிற்குமிடம் சென்று விட்டான். நளினியைக் கண்டதும்
சித்தாப்பா, குழந்தைகள் யாவரும் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.
சித்தியைக் கண்டதும் நளினி சந்தேசத்தில் கட்டிப் பிடித்தாள்.
அதற்குள் காரிலிருந்து லலிதா, தாமரை இறங்கியதும் உள்ளே
நுழைவதற்கு முன் ராமுவும், பாலுவும் மாறி மாறி வீடியோவிலும்,
கேமராவிலும் பதிவு செய்தனர்.
ரிஜிஸ்தர் ஆபிஸ் வாசலில் காலை வைத்ததும்... பாரதிக்கு
ஏதே ஒரு உணர்வு. பெரு விரலிலிருந்து நரம்பின் மூலம்
ஊடுருவிக்கொண்டு உச்சிவரையில் போனது. லேசாக நெஞ்சு
வலிக்கிற மாதிரியும் இருந்தது. தன்னுடைய நண்பர்களுக்கு
எத்தனையோ முறை மாப்பிள்ளைத் தோழனாகப் போயிருக்கிறான்.
ஆனால் அப்பொழுது இல்லாத ஒரு உ ணர்வு இப்பொழுது
மின்னலைப்போல் தாக்கியது. இதுக்குத்தானே இத்தனைக் காலம்
காத்திருந்தான்.
நளினிக்கும் நடந்துகிட்டு இருக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியும்
கனவு போலவே இருந்தது. அவ மனசு அவ கிட்டயே
இல்லையெனலாம். சித்தி, பிள்ளைகள்... லலிதா, தாமரை யாவரும்
நளினியை அழைத்து வந்தனர்,
மயில், தோகை விரித்து அசைந்து வர்ற மாதிரி இருந்தது...
அவன் நடந்து வரும் அழகு.

நூர்ஜஹான் சுலைமான்
155

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


பாரதியுடன் ராமுவும், பாலுவும் சேர்ந்து வந்து
கொண்டிருந்தனர். நல்ல நேரத்தில்... பாரதி நளினி ரிஜிஸ்தர் நல்ல
முறையில் நடந்து முடிந்தது.
ரிஜிஸ்தர் முடிந்த கையோடு... ராமுவும், பாலுவும்
அனைவரையும் சகுந்தலா ரெஸ்டாரெண்டிற்கு அழைத்துச் சென்று
விருந்து வைத்தனர். இரவு விருந்துக்கும் சகுந்தலாவில்தான்
ஏற்பாடாகி இருந்தது.
இதற்கிடையில் உடை மாற்றிவர அனைவரும் வீட்டிற்குக்
கிளம்பிக் கொண்டிருந்தனர்.
நளினியிள் குடும்பத்தினரும் நளினியுடன் சென்றனர்.
ஆறு மணிக்குக் கோவிலில் கல்யாணம், மாலை
மணிக்குத்தான் அவர்கள் மறுபடியும் கோவிலுக்கு வரணும்,
பாரதிக்குப் பெருமை பிடிபடவில்லை. கையில் திருமணச்
சான்றிதழ். இனி... கடவுளே நினைத்தாலும் அவர்களைப் பிரிக்க
முடியாது. எதிர்பார்த்ததைவிட... ஒவ்வொரு காரியங்களும்
எல்விதத் தடங்கலும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது.
பாரதிக்குப் பிடிக்குதோ... இல்லையே எல்லாமே புதுமையாக
இருந்தது.
அனைவரும் மாலை ஐந்து மணிக்கு மாரியம்மன் கோவிலுக்கு
வந்தனர். புதுப்புடவையில் நளினி இன்னும் அழகாக இருந்தாள்.
இப்பொழுது பாரதி... வேட்டி ஜிப்பா அணிந்து கொண்டிருந்தான்.
மனம் பலவாறாக அலைக்கழித்தாலும், கோவிலுக்குள்
நுழைந்ததும் மனதில் ஒரு அமைதி பிறப்பதை நளினி உணர்ந்தாள்.
கண்மூடி மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டு.. மனமுருக சாமி
கும்பிட்டாள், வந்திருந்த அனைவரும் சாமி கும்பிட்டபின்...
உறவினர் கூடி நிற்க... புரோகிதர் மந்திரம் சொல்ல... பாரதி...
நளினியின் கழுத்தில் காதல் மனைவிக்குத் தாலி கட்டினான்.
தாலி கட்டி முடித்ததும், பாரதி நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
விரும்பியவளின் கழுத்தில் மூணு முடிச்சு போட எத்தனை காலம்
போராடி இருக்கான்?
பெண், மாப்பிள்ளை ரெண்டு பேரும் தாயார் காலில் விழுந்து
ஆசி பெற்றனர். சித்தி, சித்தப்பாவிடம் ஆசி பெற்றனர்.

பொழுது புலருமா?...
156

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


கோவில் மண்டபத்தில்,.. விருந்துண்டு மகிழ்ந்தனர்.
குடும் பத்தார் அ னைவ ரும்
பிடித்துக் கொண்டனர்.
மனம் நிறைந்த திருவிழா போல் காட்சியளித்த அவ
திருமணம் ,,, வந்திருந்தோருக்கு நிறைவைத் தந்தது
நேரமும் வந்தது
நளி னி சித்தி குடும் பத்தாரி டம்
காலங் கடந்து தனக்கு ஒரு ந ல்ல
பொழுது தன்னைப் பெற்றவர்கள் உயிருடன் இ ல்லையே
வருந்தினாள். கன்னத்தி ல் கண்ணீர் வ
அவன் சித்தி கநளினி நல்ல நாளும் அதுவுமா அழக்கூடாது ,
குணத்துக்கு ஏற்றவர்தான் மாப்பின்னையா வந்து வாய்த்திருக்கார்.
உன்ளாலதாள் உன் சித்திகுடும்பமும் வாழ்ந்துச்சு. இப்பவும் நீதான்
எங் கனை வாழ வ ச்சி ருக் கே
வைக்க மாட்டார். நீ மகராசியா நீண்ட காலத்துக்கு வாழணும்மா* -
சொல்லும்போதே சித்திக்குக் கண்ணீர் குனம் கட்டியது
“இந்தா இதைப்பிடி. ,, இது உன் சித்தியோட சின்ள
ஒரு நகை டப்பாவை நளினியின் கையில் திணித்தார், நளினி| உன்
சித்தியால உளக்கு எதுவும் பெரிசா குடுக்க முடியலை. ஏதோ இந்த
ஏழைச் சித்தியோட சின்ள பரிசு“ என்றதும் தன் சித்தி கமலத்தை
அ ப்படியே தழு விக் கொண்ட
நிளைத்தாலும் கண்ணீர் ஆறாய் ஓடியது.
இசித்தி உங்க அன்பு மட்டும் போதாதா? இதெல்லாம் எதுக்கு
சித்தி*_ நளினியின் கண்ணீரை நிறுத்த முடியவில்லை ,
இருந்த பாரதிக்கு தர்ம சங்கடமாக இருந்தது,
கமலம் அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக, இதப்பாரு.
இனி நீ அழ வே கூட து, சி த்தி
வந்தி ரு க்கேன்னு திறந்து பரேன், எள்றான்.
டப்பாவை திறந்து பார்த்தான்.
அவன் முகம் மலர சித்தியப் பார்த்தான், வெ
நீலமும் கொண்ட கற்கனால் ஆன அழகாள கல்பதித்த இரட்டைக்

நூரஜஹான் சுலைமான்
157

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


காப்புகன். உடனே கமலம் அ தை எடுத்து நளினியின்
அணி
ஏன் சித்தி,,, இல்வனவு விலையுள்னதாவா வாங்கணும்? நம்ம
குடும்பம் இருக்கிற நிலைமையில இது தேவைதாளா?- என்றான்,
-நீ இப்படி சொல்லுவேன்னு எளக்குத் தெரியும், முறைப்படி
இந்தக் கல்யாணம் நம்ம வீட்டிலதாள் நடக்கணும், குடுப்பிளை
இல்லியே, கையாலாகாதவளாப் போய்ட்டேனே. நீ கூட நிளைப்பே'
என் புள்னையா இருந்தா கல்யாணத்தை நம்ம வீட்டுலத”ளே
நடத்தியிருப்பேள்னு எள்ன செய்ய? குடும்பம் வறு
ஓடிக்கிட்டு இருக்கு, வசதியா இருந்திருந்தேளா உன்ளை இப்படியா
விட்டிருப்பேன் ,* கமலம் ,,, நளி
குலுங்கி அழ ஆரம்பித்தான்,
கசித்தி அழாதீ ங்க க ண்
நம்மனையே பாக்கிறாங்க நான் எப்பவுமே.. , உங்கனைத்
நினைக்க மாட்டேன்,
நளினி கமலத்தைச் சமாதானப்படுத்திளான் நளினியின்
கண்களிலும் கண்ணீர் முட்டி நி
“என் அ க்க மக .,, அ
பேசமுடியாமல் புடவைத்தலைப்பால் வாயை மூடிக் கொண்டார்
கஅண்ணி, வாங்க நேரமாச்சு, அத்தே,, . நீங்க எல்லாரும்
வீட்டுக்கு வந்துட்டுத்தான் போகணும்- என்று தாமரை வற்புறுத்தி
எல்லேழரையும் அழைத்துக்கொண்டு சென்ற”ள்
சுசிலா எல்லாருக்கும் முள்பே வீட்டுக்கு வந்து ஆரத்தி தயார்
செய்தி
பொண்ணு மாப்பிள்னை காரிலிருந்து இறங்கியதும், தாமரை
பாரதியும்
ஆரத்தி எடுக்க, ,, வலது காலெஒத்து நளினியும்*
வந்தனர் கேலியும் கிண்டலும் பேசியபடி அனைவரும்
வீட்டிற்குள்னே நுழைந்தனர்,
கமல மும், அவர் கணவ ரும்,
வீட்டையும் அவர்களின் வசதியையும் பார்த்து மலைத்து நின்றனர்'

பொழுது புலருமா?
158

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


... கன்ளங்க ... நம்ம நளினி
கடவுள் அவளுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டி இ
இல்லிங்களா?* என்றாள்
கஆ மாம்மா,.. முத ல்
நிலைக்கலை, இந்த வாழிக்கையாவது அவளுக்கு நெலைச்சு
இருக்கணும், இருக்கும் எம்மக நளினி, புடம் போட்ட தங்கமடி
இந்தக் குழந்த இனிமேலாவது சந்தோசமா இருக்கணும்,
சரி சரி... நேரம ச்சு , காப்பி
கினம்புங்க-ன்னு அவசரப்படுத்திளார், -நாமளும் அவுங்களுக்கு
இடைஞ்சலா இருந்து, நெருக்கடி குடுக்கக்கூடாது என்ன நான்,
சொல்றது* எள்றார் கமலத்தின் கணவர்,
ரொம்ப சரியாச் சொன்ன்னீங்க என்று விடைபெறும்போது,,
தாமரை, வெற்றிலை பாக்குடன் தாம்பூலம் கொடுக்க...மனம் குளிர
வாங்கியபடி கமலம். ,, தன் குடும்பத்தினருடன் விடை
நளினியும் வாசல்வரை வந்து அவர்களை வழியனுப்பி வைத்தாள்
வழியனுப்பும்போது சித்தியின் பிள்ளைகளிடமும்,., நளினி புத்திமதி
சொல்ல மறக்கவில்லை,
வாயிற்கதவை மூடப் போனவள் ஒருகணம் பயந்துட்டாள்ன்னு
தான் சொ ல்ல ணும், சுவரை யொட்டி அந்த
அந்த சமயம்? அ ங்கு வந்த சுசிலா நளினியைப் பார்த்து
மேடம் பயந்துட்டீங்களா? ஒரு வாரமா இந்த நாய் இப்படித்தாம்மா
இங்க வந்து கெடக்குது அது போயிடும், நீங்க வாங்க என்று
அழைத்தான். எதுவும் பேசாமல் நளினி., தன் அறைக்குள் போய்
விட்டான்,

அத்தியாயம் 21

மலையும்? கழுத்துமாகப் பாரதியைப் பார்த்ததும் காமாட்சி


அ ம்மாளுக்கு சந்தோசம் பிடிபட லை, சி
போவு வனைய வனைய வர ஆரம்பித்தார்
தன் ஒரே அண்ணனுக்கு எப்பதான் கல்யாணம் நடக்கப்
போகுதோன்னு... ஏங்கிக்கிட்டிருந்த சகோதரிகளுக்கும்,,, ஏகப்பட்ட
சந்தோசம், அ ண்ணன்? அ ண்ணி ரெண்டு
உடை அணிவித்து...கேமரா, வீடியோவில் படம் எடுத்தனர்

நூந்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


பாரதியின் மகிழ்ச்சிக்கு அனவே இல்லையெனலாம்...
உற்ச கத்தி ல் எப் பவ
துண்டு இன்று தன் கல்யாண சந்தோசத்தில்,: சற்று அதிகமாகவே
சாப்பிட்டு விட்டான், காலையிலிருந்து.,. தூக்கமின்மை... அலைச்சல்
மிகுதியால் பாரதி மிகவும் அசதியாகவே காணப்பட்டாள்,
அலுப்பு தீரக் குளித்து உடைமாற்றிக்கொண்டு படுக்கையில்
சரய்ந்தான், கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் குறைவில்வுல
காலையிலிருந்து நடந்தவற்றை மனம் அசைபோட்டுக்
கொண்டிருந்தது
அதி காலை யி லேயே எழுந்து
அங்கொன்றும், இங்கொன்றுமாகக் குழந்தைகளும் தூங்கி விட்டள,
ராமுவும், பாலுவும் வழியில் படுத்திருந்த குழந்தைகனைத் தூக்கிட்டு
மற்ற அறைகளுக்குச் சென்றனர்.
கமட்சி அம்ம வு ம் படு க்கப்
வேலையைச் சீக்கி ர ம முடிச்சுட்டுப்
தாம ரைு ல லித இருவரும் நளி
கதவை மூடவு ம்,,, சுவ ர்க் கடிகாரத்தி ன்
ஓயவும் சரியாக இருந்தது அறையில் நளினி, ஓரு குட்டித் தூக்கம்
போட்டு எழுந்தாள் இரண்டு நாத்தளாரும்,, அவன் அறைக்குன்
வந்தது,, அவளுக்குப் புரியாமல் இல்லை, தாமரையும், லலிதாவும்
ஆளுக்கு ஒரு வேலையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர் லலிதா
தட்டில் பலகாரங்கனை எடுத்து வைத்து, இன்னொரு தட்டில்
முக்கனிக னையு ம் அடு க்கி வை த்து
அதனுடன் வை த்து , பரதியின்
வைத்தான்.
தாமரை, , காலை யில் கோவிலில் கட்டிய
நளினி கட்டுவதற்கு எடுத்து வைத்தான்,
குளியல் அறைக்குப் போள நளினி குளித்ததும்,
பூத்துவாலையால் தன் முகத்தை ஒத்தி எடுத்தவன்,,, கண்ணாடியில்
தன் முகத்தையும் பார்க்கத் தவறலை, ம்,,, முப்ப த்த
இந்த முகத்துல அப்படி என்ள இருக்குன்னு பாரதி தவமிருந்தாரு
இந்த வயசுல எனக்கு இரண்டாவது முதலிரவு, முதல் கல்யாணத்து
முதலிரவு குடுத்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு... மறுபடியும் ஒரு
முதலிரவு, இது தேவைதானா?

பொழுது புலருமா?.
160

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


ஏன் தேவையில்லை? நாள் சுத்தமான, சுட்டாலும் நிறம் மாறா
வெண் சங்குக்கு ஒப்பாளவன், மாற்றுக்குறையாத தங்கமாக்கும்.
இன்னும் சொல்லப்போனால் கன்னி கழியாத முதிர் கள்னியாக்கும்.
ம்' பே சாம33 இந்த ப ஞ்ச பி
பாரதிக்கு அலங்காரம் அவ்வனவாப் பிடிக்காது, எதுக்கு இந்த வீண்
ஆ ர்ப் ப ட்
என்ள அ ண்ணி. .. குளியல் இள்னுமா
குளிச்சிட்டாதீங்க, உடம்போட இரண்டு குவனை தண்ணிய அன்ளி
ஊத்திட்டு வரவா இல்வனவு நேரம்7 நல்ல நேரம் முடியுறதுக்குன்ன,
வெளியே வாங்க அண்ணி நே ரம
அவசரப் படுத்தி
ஆமாம்மா.., நல்ல நேரத்தை இப்ப நீங்க இரண்டு பேரும்
தானே3 33 பிடிச்சு வச்சிருக்கீங்க , அது ஓடிப்
வந்து ட்டே ன்* என்று மெல்லிய கு
முகத்து டன் வெளியே வந்த நளினி, ,.
எனக்கு இந்த அலங்காரமெல்லாம் தேவையா7*
என்ன அ ண்ணி நீங்க பசுறது
நாங்க முதல் லே யே உங்
போங்கன்னு சொல்லி இருக்கமாட்டோமா- பேசிக்கிட்டே
புடவையைக் கட்டி முடித்தன் தமரை, லலிதபல் எடுத்து வர
சமையலறைக்கு ஓடிளாள்,
அண்ணி9 அததுக்கு முறைன்னு 9ண்ணு இருக்கு,
அது படித்தானே ந மு
கஷ் டப் படுத்தணு மின்னு
களில் மைதீட்டி, த ம ரை அழகு
கறுந்திராட்சை போலக் கண்ணு. ,, அடர்த்தியாள
ம்,,. அப்புறம்“ என்றான் நளினி சிரித்தபடி,
-அண்ணி., , நாள் என்ன கதையா சொல்றேன்7
அதுக்கப்புறம்கிறீங்க
இல்ல தாமரை, ,, சும்மாதாள்- என்றவன் -ஆமா|
அண்ணளோட சத்தத்தையே,., காணோம்* எ ன்று
கேட்டான்.
கலலிதா, ., இப்பத்தான் அ ண்ணாவே
வந்தாள், கண்ண மூடிக்கிட்டு படுத்தி

நூரஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


161 கஎன்ன தூங்கிட்டாரா?, ., அப்ப எதுக்கு நான்
தூக்கத்தைக் கெடுக்கணும், பேசாம நான் இங்கேயே படுக்கிறேனே*
என்றாள்,
“ம்,,, அதெல்லாம் சொன்னா ஆச்சா, ., இந்தாங்க
இந்தப் பால் செம்பை எடுத்துக்கிட்டு நேரத்தோட, அண்ணாவோட
அறைக்குப் போங்க இங்க நீங்க,,, தனியா தூங்கவா இவ்வனவு
நேரம்9 நரங்க தூங்காம முழிச்சிட்டு இருக்கோம்
அண்ணி ,,. விடிஞ்சதும் கதை, கதையா
தெரியுமா? என்றான் குறும்புக்கார லலிதா,
வெ ட்க ம் பிடுங்கித் தி
போனவள் ஒரு அடிகூட எடுத்து வச்சிருக்க மாட்டான்,
கடந்த ஒரு வ ரத்து க்கும் மேல
லைசன்ஸ் இல்லாத திடீர் புல்டோக் நாய் குரைக்க ஆரம்பித்தது
நெஞ்சில் ரத்தம் உறைவது போல் பயந்து போன நளினி9 ஓரு
அடி பின் வங்கதாமரயின் முகத்தைப் பார்த்த ள், பயத்தி
மனம் படபடவென அடித்துக் கொண்டது,
என்ன அ ண்ணி |,,, ப
பண்ணி கருணை இல்லத்துக்கு எடுத்துட்டுப் போகச் சொல்லணும்இ
என்றான், உடனே, லலிதா அவன் பயத்தைப் போக்கும் வண்ணம்
கஅ ண்ணி | பயப்படாம,,. சும் மா
எங்கே , கம்பீரமா புறப்பட்டுப் போங்க பார்க்கலாம்,
சிரித்தன்,
ரொம்பவும் குறும்புதாள் என்ற நளினி.,, மெல்ல ழெல்ல அடி
எடுத்து வை த்த ப டி9
அதற்கு முன் பாரதிக்கு9 திடீரென்று மூச்சுத் திணருவது போல்
இருக்கவே தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவன் சுற்றுமுற்றும்
பா ர்த்த படி ம த்தி
மூச்சை உள்ளுக்கு இழுத்து9 வெளியே விட்டவண்ணம் இருந்தான்.
தி டீ ரள இ டது பக்க
அப்படியே,,, படுக்கையில் படுத்துவிட்டாள், உடம்பில், வியர்வை
வெளியேற ஆரம்பித்தது, அடிக்கடி, ,, முகத்தில் அரும்பி
வியர்வையைத் துண்டால் துடைக்க ஆரம்பித்தான்,

மீழுது புஈயீ...
162

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


இதை யாவும் சாதாரணமாக எடுத்துக்கொண்ட பாரதி, வாய்வுத்
தொல்லை என்று, வாய்வு மாத்திரையை எடுத்து வாயில் போட்டுக்
கொண்டான், ஒரு மட க்கு தண்ணீரையும் எடுத்து
கட் டிலி ல் ஒரு க்களி
ஆழ்ந்துவிட்டான்,
பட்டுவேட்டி பட்டுஜிப்பா உடம்பில் ஜொலிக்க, கொஞ்சநேரம்
கண்க னை மூடிய் படி9 த ன்னு
மளம் ரொம்பவே சஞ்சலப்படல
இந்த மோளநிலையில் எவ்வனவு நேரம் இருந்தானோ,
அவ னுக்கே தெரி யாது , ம
தெரிவது போலிருந்தது
ஊதுபத்தியிள் அசத்தலான நறுமணம் அவன் மூக்கைத்
து னைத்தெடுக்க .., அவள் சிந்தனை தடைபட்டது
பாரதி யின் முகத்தி ல் வினக்கி
கணநேரத்தில் அவன் கண்ணையும் கூச வைத்தது, நாலாபுறமும்
அவன் கண்கனைச் சுழலவிட்டான், அடடே. .. என்ன
பக்கத்துல இனிப்பு, பலகாரம், பூ, பழம்,.. இவ்வனவும் யாருக்கு7,,,,
கடிக ரத்தி ல் மணி யைப்
கண்ணை மூடிக்கொண்டான் நாம கண்ணை மூடிக்கிட்டு
இ ருக்கும் பே து இந்த வ
பண்ணி இருக்குது ங்க என்று எண்ணிக்
அந்நேரம் வெளி யே அந்த நாய் பயங்கரமாகக்
கொண்டிருந்தது , நானைக்கு இந்த நாய்க்கு வழி
பண்ணனு மின்னு எண்ணி
தாமரையின் குரல் கேட் டது , கஅ
இருக்கட்டும் பக்குவமா நடந்து கொன்ளுங்க, என்ள புரியுதா*
அட நீ ஒருத்தி. ,. அவுங்க என்ள சிள்ளபுன்னயா
புரியும், ஏன்னா, நானைக் காலையில அண்ணா, அண்ணி கதைதான்
நம்ம ரெண்டு பேருக்கும் தீனி,*
கசரி சரி, ,. எல்லாம் காலையில பாத்துக்கலாம். முதல்ல
உன்ளே அனுப்புு என்று லலிதா தாமரையிடம் கூறியது, .,
அரவமில்லாத அந்த நேரத்தில் மிகத் தெளிவாகக் கேட்டது

நூரஜஹான் சுலைமான்
163

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


பாரதி மெல்லக் கண்ணைத் திறந்து பாத்துட்டு? உடனே”’ இறுக
மூடிக்கொண்டாள்,
கதவை மூடும் சத்தம் கேட்கவே9 பா ரதி லேச
கண்ணை மட்டும் திறந்து பார்த்தான், கதவோரம் நளினி? குனி”
தலை நிமிராமல்,,, பால் பாத்திரத்தைக் கையில் ஏந்திய வண்ண”
நி ன்றி ருப்பது தெரிந்தது , இதுக்கு
காத்திருந்தான், ஒரு நிமிஷம்9 ரெண்டு நிமிஷம் 33 ம்'’
தங்கதுணு ம்சதிச்சதுணுகட்டி வி ட் டு எ
ப”ரை
நளினியின் பக்கத்தில் வந்து அவன் கையிலிருந்த
வாங்கிளாள், பாரதி,,, எதிர்பாரா சமயம் உடனே நளினி” ப”ரதியிள
காலில் விழுந்து, வணங்கினாள், பால் பாத்திரம் 9ரு கையிலும்’
தூக்கி
நளினியை மறு கயிலும க த்
அழைத்துப்போய் உட்கார வைத்தான்.
மறுபடியும் பரதியின் இதயம் படபட? டிக்க
ஆரம்பித்தது, கை, கால்களும் லேசாக உதறல எடுத?து
காதலித்ததிலிருந்து இப்ப கல்யாணம் செய்து கொண்டது வரையில்9
இருந்த தைரியம் ஏளோ இந்த நிமிடம் பாரதிக்கு இல்லரமல் டுச்
போயி
கட்டிலில் உட்கார்ந்தபடி பாரதியை, விழி மூடாமல் ப””த்து”
கெ
கொண்டிருந்த நளி னி9 கப ல்
எல்வனவு நேரம்தான் பாலை வச்சிக்கிட்டு ஓரே இடத்துல’
நெளி ஞ்சு வ னைஞ் சுகி
என்ன தூக்கமாம்? இன்னிக்காவது கொஞ்சநேரம விழிசசிருககக
கூடாதா?
ரி
ஒருவாறு? த ன் ள சுத
கொண்டு வந்த நீ,,, நேரா,, என் ன ை வந்து எழுப்பக் கூட”த””-
“ம்... ஏன் சல்லமட்டீங்கள் தூங்குறவங்கள் எழுப்பலம்.
தூங் குற ம தி ரி
பேசாம இருந்துட்டேன்,
ம்
கஓ கோ ,,, நீ ம ட்டு
அழைச்சிட்டுப் போகட்டுமேன்னுதானே பேசாம இருந்தே’-
கம்,, ம்,,, சால்லு வீ ங்கனே என்னைப்
கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேக்கத் தெரிஞ்ச உங்களுக்கு
அழைச்சிட்டு போகத் தெரியாதாக்கும்,-

மெழுது புஷயீ. .
164

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


"சரி சரி, இன்னிக்கு நாம ரெண்டு பேருமே... சமாதானமாப்
போயிடுவோமே, வாக்குவாதம் பண்ண, நமக்கு இன்னும் கூட நாள்
நிறைய இருக்கு. அது சரி, பாலைக் கொண்டு வந்ததும் ஆச்சா...
அதை... யார் எடுத்துக் குடிக்கிறதாம்," பாரதி... குறும்பாகப்
பேசினான், உடனே... நளினி எழுந்து... பாலை டம்ளரில் ஊற்றிக்
கொடுத்தாள். அதைகையில் வாங்கியபடி... "என்னமே நாம
ரெண்டு பேரும், முன்ன பின்ன பார்க்காத மாதிரி, பேசாத மாதிரி
நடந்துக்கிறது... எனக்கு என்னமோ நளினி... நடிக்கிற மாதிரிகூட
இருக்குது" என்றான்.
“சம்பிரதாயம்னு ஒண்ணு இருக்குதுல்ல என்ன வயசானாலும்
அதது... பாரம்பர்யத்தோட நடக்கும்போதுதான் அதுல ஒரு அழகு,
ஒரு மதிப்பு தெரியுமா? இது கூட தாமரைதான் சொன்னாள்.
"நான் என்ன சொல்றேன்னா, முதல்ல நாம் இந்தியர்கள். அதை
மறந்துடக்கூடாது."
அப்பா... என்ன போச்சுப் பேசுறே. சம்பிரதாயங்கிறே...
மதிப்புங்கிறே... விட்ட ஒரு லெச்சரே பண்ணிடுவே
போலிருக்கே." சுவாரஸ்யத்தில், டம்ளரை காலி செய்து விட்டான்.
இதைப் பார்த்த நளினி... "இதுக்குத்தான், நான்...
சம்பிரதாயத்தை ஒட்டி வாழணு மின்னு
என்ன இவ... திடீருன்னு, சம்பந்தமில்லாம பேசுறாளேன்னு
திருதிருவென்று விழித்தான்.
"நான் என்ன சொல்றேன்னு புரியலியா?
உதட்டைப் பிதுக்கியபடி புரியலேன்னான்.
"ஐயோ!... புதுசா கல்யாணமானவங்க முதலிரவுல... கணவன்
குடிச்சிட்டு வச்ச மீதிப்பாலை, மனைவி குடிக்கணும்ங்கிறதும்
சம்பிரதாயம்தான். அதைச் சொன்னேள்" என்றாள், பாரதியின்
கையிலிருந்த டம்ளரை வாங்கிக் கொண்டாள்.
சரி... இப்படியே பேசிக்கிட்டிருந்தா பொழுது விடிஞ்சிடும்
தெரியுமா? என்றான். நளினியின் கதை பேசும் கண்களைப்
பார்த்தபடி பாரதி கூறவும்...
நளினியின் முகம் குங்குமமாய்ச் சிவக்க, தலையைக் குனிந்து
கொண்டாள்.

சுலைமான்
நூர்ஜஹான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


நளினி மறுபடியும் கட்டிலில் அமர்ந்து கொள்ள, பாரதி...
அவள் பக்கத்தில் மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டான்.
பாரதியின் கை... நளினியின் தோளை இறுக்கமாக அணைத்துக்
கொண்டது.
"அழகு அழகு... இப்படி ஓரு மயக்குற அழகு... உங்கிட்ட
கொட்டிக்கிடக்கப் போய்த்தான், சின்ன வயசிலே மயங்கி
விழுந்தவன்தான்... இன்னமும் எழுந்திருக்கலை."
நளினி... அவன் நெஞ்சில் தலையை சாய்த்தபடி... "இப்ப
மயக்கம் தெளிஞ்சுட்டுதா இல்லியா?"
"நளினி, நான் சாகுற வரைக்கும் உன்மேல உள்ள மயக்கம்
தெளியக் கூடாதுன்னு நினைக்கிறேன்."
"ஏன்?..."
"ஏன்னா... அது... அப்படித்தான்."
"காரணம் கண்டிப்பா இருக்கணுமே..." நளினி பாரதியைச்
சீண்டுகிறாள்.
“சொல்லாட்டி விடமாட்டே போலிருக்கே... சரி...
சொல்லிடுறேன். இத்தனை அழகும், நிறைஞ்ச குணமும் கடவுள்
எல்லாருக்கும் கொடுத்திட மாட்டாரே. அது உனக்கு மட்டும்தான்
இருக்குன்னு நான் நம்புறேன். நளினி..." ஏனோ...
சொல்லும்போதே... என்றுமில்லாமல் பாரதியின் இதயம் வேகமாகத்
துடிக்க ஆரம்பித்தது.
இதை எதையும் உணராத நளினி... "பாரதி! நீங்க எல்லாருமே
என்னோட அழகைத்தான் ஆராதிக்கிதீங்க. ஆனா... எனக்கு
எப்பவுமே... நீங்கதான் அழகு. எனக்கு வாழ்க்கை குடுத்த தெய்வம்
நீங்க." நளினி... அவன் கையை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக்
கொள்கிறாள். சூடான கண்ணீர் அவன் கையில் உருளுகிறது.
பாரதி பதறிப் போய்விட்டான். நளினி... இனிமேல் உன்
கண்ணுல இருந்து... ஒரு சொட்டுக் கண்ணீரைக்கூட நான்
பார்க்கக்கூடாது, புரியுதா... என்றவன்... எழுந்து... மின்விசையைத்
தட்டிவிட்டு... மின்விசிறியைச் சுழல விட்டான்.

பொழுது புலருமா...
166

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


இதை மின்ளல் வேகத்தில் செய்துவிட்டு, மறுபடியும் கட்டிலில்
வந்து அம ர்ந்து கொண்டான், ப
வ டிப்போயிருந்தது , அவனுக்கிருந்த
மறந்து விட்டு ,,, அவ ன்
தூங் க மல் பேசி க்கொண்டே
மனம் நினைத்தது, இருந்தாலும், ,, மனப்பதற்றம் அதிகமாகி
மூச்சுத்தி ணறலும் ஏற்படுகிறது ,
பாரதி நளினியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான்
-நளினி,,, நீ என்ளை தெய்வமாக்கிட்டா,, நான் உன்னோட,,,
காதலனா.,, ஆகமுடியாது தெரியுமா7-
ஏன்3 ,, முடியாது7 நீங்க கண்ணளாகவும், நான்
இருந்துட்டுப் போறேன்- நளினி கட்டிலின் மேல் நேர்த்தியாக
வைக்கப்பட்டிருந்த மீரா சிலையைப் பார்த்தபடி கூறிளான்,
பரதி... முதல்ல இ ருந்த மீரா சி லைய விட
இருக்கு இல்லே.ு
ம்,,. ஆமாம்மா.,, உன்னமாதிரியே பெரியசிலை- என்றவன்,
என்னோட நளி னிக் கு எது பி
பிடிக்கும் அதளாலதான் அந்தச் சிலை உடைஞ்சு போனதும் இந்தப்
பெரியச் சிலையை,, உளக்காக வாங்கினேன் போதுமா,- அவள்
முகத்தைத் தன் முகத்தோடு சேர்த்து க்
போது மே 33 அசடு வழியுது ,,.*
தடவியவள் துணுக்குற்றாள்,,, முகம் வேர்த்திருந்தது, நளினி
மறுபடியும் 33 அ வன் உடம்பைத் தொட்டுப்
போட்டிருந்த பட்டு ஜிப்பா. ,, தண்ணீரில் நனைந்தது
இருந்தது 3 பதற்றத்துடள் முதல் வேலையாக, ,,
கழற்றி வி ட்ட ன்.
என்ற்ள், அவள் குரலில் நடுக்கம் தெரிந்தது.
பாரதி தன் உடல்நிலையை , அவன் கண்டு
என்பதி ல் கவ ளம க இ
ஒண்ணுமில்லையே,., நாள் சாதாரணமாத்தான் இருக்கேன், ,.
என்றான், எதுவும் தெரியாததுபோல்,
அவன் பதி லில் தி ருப்தி
பேன் ஓடுது,,, ஏர்கண்டிஷன் வருது,, இதெல்லாம் மீறி,, எப்படி
உங்தளு க்கு .,, இப்படி

நூரஜஹான் சுலைமான்
167

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


கம்,.. அ தெல்லாம் ஒண்ணுமில்லை, சும்மா பயம்
பயம். வேற 9க்ஷ்ணுமில்லை , நீ பயப்படாதே* என்று
படு த்தி ட்டு .,. “நளி னி|
இருக்கே,. . தெரியுமா7. ,. உன்னோட இந்த
கோழையாக்கிடுச்சு,
ஆளா| , உறுதியான நம்ம காதல்தான், ,.
ரெண்டு பேரையு ம் கட்டிப்போட்டிரு க்கு
என்றான்,
கதெரி யுது தெரியுது , இப் பவெ
கத்துகிட்டேள்னு தெரியுது* என்றதும்,
எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதாள்,
போதும் போதும். ,. இந்த ரதியக் கட்டிக்கிறதுக்குன்ன
ம ன்மத னு க்கு வயச
கல்யாணமாகி இப்ப நம் குழந்தைங்க எல்லாம் பெரியவர்கன்கி
இருப்பாங்க, நீ பே ட்டிரு க்
அப்பப்பா, ,, எள்னை எந்த
போய்க்கிட்டிருக்கு தெரியுமா,,, உள் உடம் ப ு கலருன் ன ா கலர் ப்வுன்
கலர், நாள் 9ண்ணு சொல்லட்டுமா7*
கம்,,. சொல்லுங்க, ,,ஊ பாரதி படுத்திருக்க, நளினி.
தலையைக் கோதியபடி பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.
கசொன்னா, ,, கோவிக்கக்கூடாது
கோபப்படாதவாறு சொல்லுங்க எள்றான்,
க9ரு வே னை, ,, வந்து
இறந்துபோய்ட்டா, நீ எப் ப வும் இதே மாதிரி மகாலட் ச ுமி மாதிரி
இந்த வீட்டுல நடமாடிக்கிட்டு இருக்கணும்ு எள்றவுடன்,,
நளினி, உடளே, ,. கபாரதி, எள்ள பேச்சுப் பேசுதீங்க,
இல்லேன்னா, இந்த நளினியும் இல்லை, தெரிஞ்சுக்கிடுங்க* என்று
கூறி அழுதுவிட்டான்,
கசடு, அசடு. ,, இதுக்கெல்லாம அழுவாங்க. சும்மா
பேச்சுக்குத்தாளே சொன்ளேன், , நெருப்பு
வெந்துடவாப் போகுது7*

மீழுது புஷமயீ...
168

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


க9ரு பேச்சுக்குக்கூட.,, இது மாதிரி பேசக்கூடாது, தெரியுமா7*
கசரி ,,, சரி,
கசத்தியமா, .,ஜ என்று பாரதியின்முன். ,.
ம், ,, சத்தியமா, ,,* என்று கூறி அவனை
முத்தமிட்டான், நளினி, , மெதுவாக அவன் மார்பில்
சாய்த்துக் கொண்டான், ஏனோ தெரியவில்லை ,
சந்தேகத்துடள். ,. அவன் நெஞ்சில் காதை
உடனே, பாரதி. ., “ம்,,. நம்ம காதலைப்பத்தி ,,,
என்ள சொல்லுது,,. என்றான் சாவகாசமாக.
பாரதி | உண்மையிலே உங்க உடம்புக்கு
எங்கிட்ட மறைக்கிறீங்கனா7 என்று சந்தேகத்துடன் வினவினாள்,
முடிந்தவரை சமாளித்தபடி.., -நளினி,., ஏன்.., இப்படிக் கேக்குறே-
என்று எழுந்து நளினியை ஆரத்தழுவிக் கொண்டான்.
அவள் அணைப்பில் விடுபட மளமில்லாமல்,,, இல்ல,,, பாரதி,
உங்க இதயம் வேகமாகத் துடிக்குதுன்னு தினைக்கிறேன்* என்றாள்,
ஏன், ,. பயமா, , இருக்குதா7
சொல்லிடாதீங்க, உங்க தைரியம் எள்ளான்னு, சின்ள வயசிலேயே
நான், ,, கம்பத்துல பார்த்தவனாக்கும்
பேசும்போதே நளி னி.,, கண நேரம் ,,.
மூழ்கிப் போனான்,
நளினி,, .ணு பாரதி கூப்பிட்டும் பதில் இல்லை, மறுபடியும்
என்ன தூங்கிட்டியா- எள்று அவள் முதுகை ஒரு தரம் தட்டினான்,
கஎன்
களவு கண்டு க லைந்தது போல்,,,
கூப்பிட்டிங்கனா7இ
ம்.,. நீ,,, களவு கண்டுக்கிட்டு இருந்தது தெரியாம
கலைச்சிட்டேனா7*
அதெல்லாம் 9ண்ணுமில்லை, என்ள இருந்தாலும். .,
வாழிக்கை, ,, ஒரு தனி சுவாரஸ்யம்தான், இல்லியா.
ஆமாம் . அது ஒரு தனி உலகம்த ன்,
நௌக்கமுடியாது நளினி.

நூரஜஹான் சுலைமான்
169

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


ஏன்னா,
கஏன்னா, ,, ஏன்ளா. ,, தனக்கு ஏதோ
நடக்கக் கூடாதது நடக்கப்போகுது ., நாள் உன்ளை
பே கப் பே றேளே, ,.*
சொல்லமுடியாமல். ,, தொண்டையில் ஏதோ,
அது .,, என்னது ன்னு சொல்லு
நிறுத்திட்டீங்க7* என்றான்,
தள்னை சுதாரித்து க்கொண்ட பாரதி
எள்றவன் சரி.,. அது போகட்டும் நளினி.., நீ எனக்கு ஓரு சத்தியம்
பண்ணிக் குடுக்கணும்* என்றான்,
ஏள். ,, தி டீருன்னு சத்தி யம்
என்ள தலை போற காரி யம்
செஸல்லுங்க என்றான்,
காலையி ல் ப ர்த்த பாரதி வேறு ,,.
வேறாக இ ருப் பது பே ள்ற
எங்கேயோ 9ளிந்து கொண்டது போள்ற 9ரு உணர்வு, பாரதிக்கு
எள்ன ஆச்சுக்கிறதை அவனால் யூகிக்க முடியவில்லை,
இனி, .. திமிறுவதில் பலனில்லை எள்பதை உணர்ந்த
கபாரதி,,, நீங்க இல்லேன்ளா நானும் செத்துடுவேன்.., எப்படி பாரதி
நான் உங்களுக்கு சத்தியம் பண்ணுவேன், பாரதி,,. என்னை மோசம்
பண்ணிடாதீங்க* என்று அழுதான்,
சீக்கி ரம் நளி னி,,, சத்தி யம்
கால்கன், வெட்டி வெட்டி இழுத்தன
பண்றேன் இருங்க,,, நாள் போய் எல்லாரையும் அழைச்சிட்டு
வந்துடறேன், இதப்பாருங்க பாரதி உங்களுக்கு, ,,
எதுவுமில்லை, கொஞ்சம் அமைதியா இருங்க, ,,
மறு ப டியும் பாரதி ,,, இல்ல
பண்ணிக்கொடு, , இது என்னோட கடைசி ஆசை.
நீ சத்தி யம் பண்ணி க் குடுக்கலேள்னா, .,
அடையாது - எதுவும் நேராதது போல் பாரதி மிகத் தெளிவாகப்
பேசினான்,

மெழுது புலருமா7...
170

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


தெளிவ ன அவ ள் பேச்சி ல்
கபாரதி நீங்க சொன்ளதைக் கண்டிப்பாக செய்வேள், இது சத்
என்றவன்.
பாரதி | இது க்குதானா.
என்னைக் கண்டு பி டிச் சு.,,
ச த்தி யம் பண்ணிக் குடுக்கவா7,,
ஆடம் பரங்களு ம்,., ஐயே ,,,
வாங்கனேன். .,, பாரதி ,,. நம்மனை
தாமரை. ., லலித ,,.* என்று நளினி
அழுதான்,
பாரதி,,. மெல்லச் சிரித்தபடி அவன் உதட்டோடு தன் உதட்டை
இ ணைத்தான். அவ னைக் கட்டி
கையைப் பி டித்து முத்த மிட்ட ன்,
போதும் எனக்கு இது போதும், என்றவன்,, அவள் மடியில்
தன் தலையைச் சாய்த்துக் கொண்டான்,
நளினி, .. நீ,,, நீ,.. என் மனைவி. ,, இது
மன்னிச்சிடு. .,* என்று திணறியவள். ,, தன்
நேசமுன்ன மனைவி, நளினியின் மடியில் உறங்குவதுபோல் தன்
இன்னுயிரை நீத்தான்
20 ஆண்டுக் காதலர்கன் பிரச்சினைகனை எதி
இள்று கண்வன் மளைவியாகியும் ,,, சேர்ந்து
தளக்குப் பிறகு? அவன் சிறப்போடு வாழணுமின்னு சொத்துக்கன்
ம ட்டு ம ல்ல ,,,
வைத்துவிட்டு. .. அவன் செய்து முடிப்பான் என்ற
நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்துவிட்ட பாரதியைப் பார்த்தபடி,,,
பாரதி |.,, 9ண்ணு மட்டும் எளக்குப் புரியலை, நம்ுடைய
இருபது வருஷக் காதல்,, , இருபது வருஷமாக...
எதி ர்கொண்டு, இள்று கணவன் மனைவியாகி சற்றுமுள்
மகிழ்ச்சி நதியில் குளித்த நாம், எந்தப் பலனும் இல்லாமல்
போயிடுச்சே. இத்தனை காலம் வேதனைப்பட்டது என் பாரதியைப்
கெ டு க்கவ பறி 7
சாகணும்ங்கிறது விதியா7 புரியலை பாரதி,,, புரியலை, எனக்கு நீங்க
செய்ய வே ண்டிய தெ ல்ல
அமைதிப்படுத்துங்க, நீங்கதான் எளக்குக் கடவுள்,,, என் மளசை

நூரஜஹான் சுலைமான்

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


அமைதிப்படுத்துங்க... உங்க சத்தியத்தை நான் நிறைவேற்ற...
என்னை அமைதிப்படுத்துங்க பாரதி."
அவளையும் அறியாமல் கத்தினாள்.
"நான் உங்களுக்குக் குடுத்த சத்தியத்தின்படி நடப்பேன்...
வாழ்வேன்... மடிவேன். இது சத்தியம்.
பயந்துபோன காமாட்சியும் சகோதரிகளும் நடுங்கும் அவள்
கைகளைப் பிடித்தபடி... அண்ணி... அண்ணி" என்று கதறினார்கள்.
தாமாட்சியின் மடியில் பாரதி படுத்திருக்க மறுபக்கத்தில் நளினிவுயப்
படுக்க வைத்து... காமாட்சி நளினியை அமைதிப்படுத்தினார்.
நளினி மெல்ல மெல்லத் தன் உணர்வுக்கு வந்தாள்.
கடிகாரத்தின் ஒலி, காலை ஐந்து மணி என்று கட்டியம் கூறியது.
பொழுது புலரச் சற்று நேரமே இருந்தது. பெருத்த மழையும் தூறல்
போட்டது. குரைத்த நாயும். அழுத பூனையும் ஓய்ந்து போனது.
வீட்டில் கூப்பாடு மட்டும் ஓயவில்லை.
காலைப்பொழுதில் கல்யாணம்... பொழுது புலருமுன்பே
காதல் கணவன் இறந்து விட... நளினியிள் வாழ்க்கையில்
வேறு எங்கு நன்டபெற்றிருக்கும்? பாரதி என்ற பெயரில் அவள்
மகிழ்ச்சி காற்றாய்ப் பறக்க, மெல்லப் மெல்லப் பொழுது புலரத்
தொடங்கியது.

பொழுது புலருமா?...
172

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


குறிப்பு

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


குறிப்பு

þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007


þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007
þÿAll rights reserved. ¨Â°Íœ¹¾©Í šÁ²È®¾©Í 2007

You might also like