Professional Documents
Culture Documents
4 Animism
4 Animism
ஆவிவழிபாடு (Animism)
0.முன்னுரை
இயற்கை வழிபாட்டின் அடிப்படையில் சமயம் தோன்றியது என்னும்
மாக்ஸ்முல்லரின் கோட்பாட்டினை மேலே நாம் விளக்கினோம். இயற்கையின்
ஆற்றல்மீது பழங்கால மனிதன் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கை இயற்கை
வழிபாடு உருவாவதற்குக் காரணமாக இருந்தது என்று மாக்ஸ்முல்லர் வாதிட்டார்.
மக்கள் சமூகத்தில் சமயம் என்னும் சிந்தனை முதன்முதலில் தோன்றியிருக்குமாயின்,
அது அவர்கள் இயற்கைப் பொருட்களின் ஆற்றல்மீது கொண்டிருந்த உறுதியான
நம்பிக்கைகளின் அடிப்படையிலே தோன்றியதென்று அவர் நிறுவ முயன்றார்.
பழங்காலத்தில் மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததால், அவர்கள்
மலை காடு ஆறு கடல் மரம் செடிகொடிகள் போன்ற இயற்கைப் பொருட்களில்
தங்கள் கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஓர்உள்ளார்ந்த ஆற்றல் இருப்பதாகக்
கருதி, அவற்றை வழிபட்டனர் என்னும் மாக்ஸ்முல்லரின் கருத்தை நாம் ஏற்றுக்
கொள்வதில் எவ்விதச் சிக்கலும் இல்லை.
ஆனால், இயற்கை வழிபாட்டிலிருந்துதான் சமயம் தோன்றியது என்னும்
அவருடைய கருத்தை ஒரு கோட்பாடாக ஏற்றுக் கொள்வதில் பல தடைகள்
உள்ளன; அவருடைய கருத்தை உறுதி செய்வதற்குப் போதுமான தகுந்த சான்றுகள்
கிட்டாத நிலையில், இயற்கை வழிபாடு என்னும் மாக்ஸ்முல்லரின் கோட்பாடு
மானிடவியல் ஆய்வுகளில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
117
1. ஆவிவழிபாடு
ஆவிவழிபாடு என்னும் தொடர் animism என்னும் ஆங்கிலச் சொல்லின்
தமிழாக்கமாகும். இவ்ஆங்கிலச் சொல்லின் மூலம் ‘anima’ என்னும் இலத்தீன்
மொழிச்சொல் என்பர்; இச்சொல் அம்மொழியில், ‘soul’, ‘life’ என்னும்
பொருள்களைத் தருகின்றது. மக்கள் அல்லாத பிற பொருள்களும் (மலை காடு
போன்ற இயற்கைப் பொருள்களும் விலங்கு பறவை போன்ற உயிரிப்
பொருள்களும்) மக்களைப் போன்றே உயிர்ப்பாற்றல் (life-force) கொண்டவை
என்பதனை இவ்விரு சொற்களும் உணர்த்துகின்றன. மேலும், ‘ஆன்மா’ (soul)
போன்ற பருப்பொருளல்லாத கருத்துகளையும் குறிக்கும் வகையில் இச்சொல்
ஆளப்படுகின்றது. ஆவிவழிபாடு பெருஞ்சமயங்களில் சிலவற்றில்
இடம்பெற்றிருந்தாலும், அது பெரும்பாலும் பழங்குடிப் பண்பாடுகளில்தான்
துலக்கமாகக் காணப்படுகின்றது1.
1
Wikipedia, the free encyclopedia, dated 20.05.2011: p.1.
118
சமயங்கள் அனைத்திலும் ஆவி பற்றிய நம்பிக்கை இடம்பெற்றிருப்பதால், அதனை
ஒருகோட்பாடாக அவர் வலியுறுத்தினார். அவருடைய ஆவிவழிபாட்டுக்
கோட்பாட்டை அவருக்குப்பின் வாழ்ந்து, மானிடவியல் ஆய்வுகளை மேற்கொண்ட
எமிலி தர்கைம், கிளாட் லெவி ஸ்டிராஸ், டிம் இன்கோல்டு (Tim Ingold) போன்றோர்
பின்பற்றினார்கள். எனினும், அண்மைக் காலத்தில் மானிடவியல் ஆய்வை
மேற்கொண்ட நூர் பர்ட் டேவிட் (Nurit Bird David) போன்றோர் டைலருடைய
ஆவிக்கோட்பாட்டைக் குறைபாடுடையது என்றும் காலத்திற்கு ஒவ்வாதது
(outdated) என்றும் திறனாய்வு செய்துள்ளனர்2.
2
Wikipedia, the free encyclopedia, dated 20.05.2011 : p.1.
119
1.1. இயற்கைப் பொருள்களில் ஆவி
பழங்குடி மக்களின் சமய நம்பிக்கையில் ஆவி பற்றிய நம்பிக்கை ஏன்
முதன்மை பெறுகின்றது என்று சிந்தித்த டைலர் அதற்கு ஒருநீண்ட விளக்கத்தை
முன்வைக்கின்றார். தங்களைச் சுற்றிலும் எண்ணற்ற ஆவிகள் இயற்கைப்
பொருள்களில் உறைந்திருப்பதாக நம்பிய தொல்மக்கள் அவற்றின்
செயல்களால்தான், தங்களைச் சுற்றியுள்ள எல்லா நிகழ்வுகளும் நிகழ்கின்றன என்று
நம்பினர். மழை புயல் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் நிகழ்ந்தபோது,
அவை ஏன் நிகழ்கின்றன என்று அவர்களால் அறிவியல் கண்கொண்டு ஆராய்ந்து
விடைகாண முடியவில்லை. அக்கால கட்டத்தில் மனித வாழ்க்கையில் பகுத்தறிவு
போதிய அளவு வளரவில்லை.
120
நம்மால் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றேயாகும். அதாவது, குறிஞ்சிநில மக்கள்
இவ்ஆற்றலை ‘சூர்’ என்று அழைக்க, காடுகளில் இருந்தவர்கள் ‘கடவுள்’ என்றனர்;
மற்றும் சிலர் ‘அணங்கு’ என்றனர்.
121
உள்ளது. இத்தகைய ஆவிகள் பொதுவாக மக்களையும் சிறப்பாகக்
குடும்பத்தாரையும் காக்கும் என்னும் நம்பிக்கையும் தோன்றியது. அதன் காரணமாக
உலகப் பண்பாடுகள் சிலவற்றில் வீர வழிபாடும் முன்னோர் வழிபாடும்
தோன்றியுள்ளன. சில பழங்குடிப் பண்பாடுகளில் இவ்விரண்டு சிந்தனைகளும்
உள்ளன.
எல்லாப் பண்பாடுகளிலும் தீய ஆவிகளும் உள்ளன. தமிழ்மொழியில்
இவற்றைப் ‘பேய்’ என்கிறோம். சங்க இலக்கியங்களில் தீய ஆற்றல்கள் பேய் கழுது
பூதம் என்னும் பெயர்களால் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவை கொடுமையும்
வன்மமும் மிக்கவையாகச் செயல்படுகின்றன என்று புலவர்கள் பாடியுள்ளனர்.
ஆவிக் கோட்பாட்டில் இவை கீழ்நிலையிலுள்ளவையாகும்.
2.1. அணங்கு
சங்க இலக்கியங்களில் ‘அணங்கு’ என்னும் சொல் பெயராகவும்
வினையாகவும் பயன்படுத்தப்படுகின்றது. வினையாக வரும்போது அது வருத்துதல்,
துன்புறுத்தல் என்னும் பொருள்களில் ஆளப்பட்டுள்ளது; அணங்கு
பெயர்ச்சொல்லாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சங்க இலக்கியங்களில் இடம்
பெற்றுள்ளது. அணங்கு என்பது தாக்கும் தெய்வம் என்றும் அது இடம்விட்டு இடம்
பெயர்ந்து இயங்கும் என்றும் பழந்தமிழ் மக்கள் நம்பினர்.
122
குறிஞ்சி நிலத்தலைவன் வேட்டைக்குச் சென்றான்; அவன் அம்பு
குறிதவறியது; மலைக்கு அணங்கு வந்துவிட்டது; அதற்குப் பலி கொடுத்தால்தான்
அதன் சீற்றம் தணியுமென்று கருதிய தலைவன் தன் சுற்றத்தாரோடு அணங்குக்கு
விழா எடுத்து அதற்குச் சாந்தி செய்கின்றான்3. அணங்கு மலையில் இருக்கக்
கூடியதென்றும் அது பலி கேட்கும் இயல்புடையதென்றும் பழந்தமிழ் மக்கள்
நம்பியமை கலித்தொகைப் பாடலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது4.
3
நற்றிணை, 165: 1 – 5
4
கலித்தொகை, 52: 7-10
5
அகநானூறு, 7: 4-5
6
மேலது, 158: 7-11
7
ஐங்குறு நூறு, 23: 4, அகநானூறு, 7: 4-5
8
ஐங்குறு நூறு, 174: 1
9
அகநானூறு, 156: 13 – 15
10
மணங்கமழ் மாதரை மண்ணி அன்ன
அணங்குமெய்ந் நின்ற அமைவரு காட்சி... ழபத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, 1956:
அடிகள் 19 – 20.
11
சீவகசிந்தாமணி, நச்சினார்க்கினியர் உரை, பாடல் எண்: 411
123
…. மணல் மூதூர் அகல்நெடுந் தெருவில்
கூகைச் சேவல் குராஅலொடு ஏறி
ஆரிருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும்
அணங்குகால் கிளரும் மயங்கிரு நடுநாள்….12
என்பது நற்றிணைப் பாடல்கள் அடிகள். அணங்குகளைப் போன்றே
பேய்களும் நள்ளிரவில் இயங்கும் என்பதனை இப்பாடல் பதிவு செய்துள்ளது.
124
மகளிர் உறைகின்றனர்16. கொல்லிமலை உச்சியிலும் சூரர மகளிர் உறைகின்றனர்17.
சூரர மகளிர் உறைவதாகக் கருதப்படும் மலைச்சிகரங்களிலுள்ள சுனைகள்
தெய்வத்தன்மை வாய்ந்தவைஎனப் புலவர்களால் போற்றப்படுகின்றன. ‘கடவுட்சுனை’
(நற்றிணை, 34: 1) என்பது புலவர் வாக்கு.
சூரர மகளிர் உறையும் சுனையாதலால், அந்த இடத்திற்கு வர மக்கள்
அஞ்சுகின்றனர்; அதன் விளைவாக அச்சுனையில் மலரும் பூக்களைப் பறிப்பார்
ஒருவருமில்லை. சுனையில் பூத்த குவளை மலர்களையும் குருதியின் நிறம்போலப்
பூக்கும் செங்காந்தள் மலர்களையும் பறித்து இரண்டையும் கலந்து மாலையாகத்
தொடுத்து அணிந்து கொண்டு சூரர மகளிர் மலைப்பக்கங்களில் வீழும் அருவி
ஓசையின் தாளகதிக்கேற்ப ஆடி மகிழ்கின்றனர் என்று குறுந்தொகைப் பாடல் ஒன்று
பதிவு செய்துள்ளது18.
16
மேலது, 162: 18 – 25
17
மேலது, 162: 18 – 25
18
குறுந்தொகை, 34: 1 – 5
125
கொள்கின்றனர்; கூட்டி முடித்ததம் கொண்டைகளில் சண்பகப் பூக்களைச்
செருகிக் கொண்டு, அதற்குமேல் மருதப் பூக்களை மாலையாகத் தொடுத்துக்
காதுகளில் தொங்கவிட்டுக் கொள்கின்றனர்; அம்மலர் மாலைகளோடு
பிண்டியின் (அசோகு) தளிர்களையும் காதுகளில் செருகிக் கொள்கின்றனர்.
அவை இரண்டும் அவர்களுடைய அழகிய மார்புகளைத் தொடும்
அளவுக்குத் தொங்கிக் கொண்டுள்ளன. மார்பில் சந்தனத்தை அப்பிக்
கொண்டு அக்குழம்பிற்குமேல் கோங்க மரத்தின் அரும்புகளையும் வேங்கை
மரத்தின் பூக்களையும் அப்பிக் கொள்கின்றனர். சோலையிலுள்ள
இளந்தளிர்களைப் பறித்து ஒருவர்மேல் ஒருவர் எறிந்துகொள்டு முருகனின்
சேவல் கொடியை அவர்கள் புகழ்ந்து பாடியாடுகின்றனர்19. \
19
பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, 1956, அடிகள்: 12 – 41
126
அல்லள்; சூர் மகள்’ என வியந்து பாராட்டுகிறான்20. ‘சூர் மகள் பேரழகு
வாய்ந்தவள; இருட்டில் இயங்குபவள்’ எனப்பழந்தமிழ்ச் சமுதாய நம்பிகையையே
புலவர் தன்பாடலில் ஆவணப்படுத்தி உள்ளார்.
127
தன்மையையும் கண்டு வியந்த தலைவி, அத்தழையாடையை அணியவில்லை.
‘அதனை நாம் உடுத்தியிருப்பதை அன்னை காண்பாளாயின், நம்களவு
வெளிப்பட்டுவிடும்; தலைவனிடம் அதனைத் திருப்பிக் கொடுத்துவிடுவோமென்றால்,
அது அவன் காதலைத்தான் ஏற்காததாகிவிடும். என் செய்வது?’ என்று தலைவி
திகைக்கின்றாள்.
128
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர்மலி நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.24
என்பது குறுந்தொகைப் பாடல்.
24
குறுந்தொகை, 105:1-6.
129
2.3. வரையர மகளிர்
சூரர மகளிரைப் போன்று ‘வரையர மகளிர்’ பற்றியும் சங்கப் பாடல்கள்
பதிவு செய்துள்ளன. வரையர மகளிரும் மலைகளில் இயங்கும் இயல்பினை
உடையவர் என்று அப்பாடல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இவர்களை வரையர
மகளிர் என்று வேறுபடுத்திக் கூறுவதற்குரிய காரணங்கள் தெளிவாகப் பாடல்களில்
பதிவு செய்யப்படவில்லை. அச்சம் தருவதை வற்புறுத்தும் வகையில் சூர் / சூர்
மகளிர் / சூரர மகளிர் என்னும் கருத்தாக்கத்தின்படி அவர்கள் தங்கியிருக்கும்
வரையையொட்டி (மலை) ‘வரையர மகளிர்’ என்னும் தொடர் உருவாகியிருத்தல்
கூடும். இவ்வேறுபாடுகளை வட்டார வழக்குகள் (dialects) என்று கொள்வதற்கு
இடமுள்ளது. சூரர மகளிர் பற்றிய குறிப்புகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது,
‘வரையர மகளிர்’ பற்றிய குறிப்புகள் அளவில் குறைந்துள்ளன.
25
அகநானூறு, 342: 10 – 13
26
ஐங்குறுநூறு, 191: 3 – 5.
130
தலைவிக்கு உவமம்கூறும் முகமாக அவளை வரையர மகளிரோடு ஒப்பிட்டுக்
கூறினான் என்று கருதுவது பொருத்தமாகும். மற்றொரு ஐங்குறு நூற்றுப் பாடல்
வரையர மகளிர் கூட்டமாக மலையில் ஆடுகின்றனர் என்னும் செய்தியைப் பதிவு
செய்துள்ளது27.
27
மேலது, 204: 2
28
ஐங்குறுநூறு, 418: 3
29
பரிபாடல், 10: 77-78
30
ஐங்குறுநூறு, 255: 1-2.
131
தீண்டும் மலையில் பந்தாடுகின்றனர் என்று கலித்தொகையும் குறிஞ்சிப் பாட்டும்
பதிவு செய்துள்ளன31.
132
பாடப் பெற்றுள்ளனர். ஒரே நிலத்தில் இயங்குவதாகக் கருதப்பெறும் தெய்வங்களைச்
சூர் / சூரர மகளிர் என்று புலவர்களில் சிலர் பாடுவதும் அவர்களையே வேறு சிலர்
விதந்தெடுத்து ‘வரையர மகளிர்’ என்று குறிப்பதும் வெவ்வேறு வட்டாரங்களில்
வாழ்ந்த புலவர்களின் வட்டார மொழிகளின் தாக்கத்தால் தோன்றியவை என்று
நாம் கருதுகின்றோம். மேலும் ‘நீரர மகளிர்’ என்னும்போது, அது நீரோடு
தொடர்புடைய பெரும்பாலும் மருதம் நெய்தல் நிலங்களின் வழக்காகலாம்.
33
புறநானூறு, 58:6, 309:3, 369:6, 382:14; அகநானூறு, 257:20; பரிபாடல்,15:19.
34
தமிழ் லெக்சிகன், 1936: ப.122
133
மடங்கு > தெம்மடங்கு ஆவது போல வகர ஈறு மகரம் வருமொழியாக வரும்போது
மகரமாக மாறுகின்றது. அரம் + மகளிர் > அரம்மகளிர் என்றாகிறதுஎன விளக்கலாம்.
காலப்போக்கில் மகரம் வீழ்ச்சியுற்று, ‘அரமகளிர்’ என்னும் தொடர் நிலைபெற்றது
எனலாம்.
134
இவை அனைத்தையும் இணைத்துக் காணும்போது சூரர மகளிர் / வரையர மகளிர் /
நீரர மகளிர் என்போர் அவ்வவ் நிலத்திற்குரிய தெய்வங்களுக்குரிய வளமைச்
சடங்குளை நிகழ்த்தும் பெண்பூசாரிகளான மானிடப் பெண்களே ஆவர் என்று
கருதுவதற்கு வாய்ப்புள்ளது.
4.1. பேய்
‘பேய்’ என்னும் சொல்லின் தொன்மையான வடிவம் ‘பேஎ’எனக்
கருதுவதற்கு இடமுள்ளது. அச்சொல்லைப் பதிற்றுப் பத்து ‘பேஎ மமன்ற பிறழ
நோக்கி’ என்று பதிவு செய்துள்ளது35. ‘பேஎம் அமன்ற பிறழ நோக்கி’ என
விரிக்கும்போது ‘பேஎம்’ என்னும்சொல் அச்சத்தைக் குறிக்கும் பொருளில்
பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘பேஎ விழவு’ (பரிபாடல், 5: 14). ‘மன்ற மராஅத்த பேஎ
முதிர் கடவுள்’ (குறுந்தொகை: 87: 1) ‘பெரும்பூ பொறையன் பேஎமுதிர் கொல்லி’
(குறுந்தொகை, 89: 4), ‘பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்து’ (பட்டினப்பாலை:
255), ‘வானியைந்த விருமுந்நீர்ப்/ பேஎநிலைஇய விரும்பெள வத்து’
(மதுரைக்காஞ்சி: 75 - 76) ‘பேஎநீர் வையை’ (பரிபாடல், 7: 84) என்னும் தொடர்களில்
‘பேஎ’ என்னும் சொல் ‘அச்சம்’ என்னும் பொருளைத் தருகின்றது.
35
பதிற்றுப் பத்து, 78:10. (ஔவை துரைசாமிப் பிள்ளை பாடம்). உ.வே.சாமிநாதையர் இத்தொடரைப்
‘பேஎ மன்ற பிறழ நோக்கி’ எனப்பாடம் கொள்கின்றார்.
135
சொற்களும் ‘பேஎ’ என்னும் அடிச்சொல்லின் (base form) மாற்று வடிவங்கள்
(alternant forms) அல்லது வட்டார வழக்குகள் என்பது தெளிவாகும்.
136
போன்று காணப்படும்36. யானைக்காலின் நகங்கள் எவ்வாறு பிளவுபட்டுக்
காணப்படுமோ அதுபோலப் பேயின் கைநகங்களும் விரிந்து காணப்படுகின்றன
(குறுந்தொகை, 180: 1-2). பேயின் நாக்குமேல் நோக்கி எரிகின்ற நெருப்புப்போலச்
சிவந்து காணப்படுகின்றது. அது தன்காதுகளில் செம்மறி ஆடுகளைக் காதணிகளாக
அணிந்து கொள்ளும்; பேயின் கால்கள் நெருக்கமின்றி விரிந்திருக்கும் கவைத்த
கால்கள்; எனவே, பேய்கள் போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கின்ற பிணங்களைத்
தங்கள் கால்களால் தள்ளிக் கொண்டு செல்கின்றன; அதன் காரணமாக அவற்றின்
கால்விரல்கள் குருதியால் சிவந்துள்ளன; காணப்படுகின்றன; பேய்கள்
போர்க்களத்தில் கிடக்கும் பிணங்களைத் தின்று சிரிக்கின்றன (சிறுபாணாற்றுப்படை,
அடிகள் : 196 – 200); பிணங்களின் கொழுப்பு நிறைந்த தசைத்துண்டங்களை
நெருப்பில் சுட்டுத் தின்கின்றன (அகநானூறு, 265: 13 – 15).
36
நற்றிணை, 73: 1 – 4.
37
நற்றிணை, 15: 7 - 8.
137
அஞ்சத் தக்க பேய் ஒன்று இருந்தது; அதற்கு ஊட்டுக் கொடுப்பது மிகவும் அரிய
செயலாகக் கருதப்பட்டது; ஒருவரும் அச்சம் காரணமாக அதற்குப் பலிகொடுக்க
முன்வரவில்லை. மிஞிலி என்னும் வீரன் அப்பேய்க்கு அஞ்சாது ஊட்டுக்
கொடுத்தான் என்று அகநானூறு ஆவணப்படுத்தியுள்ளது. (142: 9 – 11). இப்பாடலில்
இடம்பெற்றுள்ள ‘ஊட்டு’ என்னும் சொல்லை எண்ணுக. அது ‘ஊட்டுதல்’ என்னும்
பொருளுடைய சொல்லாகும். குழந்தைகளுக்கு உணவூட்டுவது போலப் பலியைப்
பேயின் வாயில் ஊட்டுவது ‘ஊட்டு’ ஆகும்.
38
குறுந்தொகை, 263.
138
இசைக்கருவிகளால் இசையெழுப்பிப் பேய்க்குப் பலி கொடுக்கின்றனர். முருக
வழிபாட்டிலும் இத்தகைய சடங்கு நடத்தப்படுகின்றது. எனினும், இக்குறுந்தொகைப்
பாடலில் முருகன் பெயர் வெளிப்படையாகக் குறிக்கப்படவில்லை. தலைவனால்
நுதல் நீவப்பெற்று அவனால் தழுவப்பட்ட தலைவியைப் ‘பேயால்
கொள்ளப்பட்டாள்’ என்று அன்னை கருதுவது தோழிக்கு வருத்தத்தை
அளிக்கின்றதாக இப்பாடல் பதிவு செய்துள்ளது.
இப்பாடலில் இடம் பெற்றுள்ள ‘தோற்றம்’ என்னும் சொல் நோக்கத் தக்கது.
இச்சொல்லுக்குக் குறுந்தொகைப் பாடலுக்கு உரையெழுதிய உ.வே.
சாமிநாதையரும் மு.சண்முகம் பிள்ளையும் ‘வெளிப்படுதல்’ என்று
உரைவரைந்துள்ளனர். அதாவது, இவளை அணங்கிய ‘தலைவன் வெளிப்படுதல்’
என்று விளக்குகின்றனர். ஆனால், மு.இராகவையங்கார்தம் ‘குறுந்தொகை விளக்கம்’
என்னும் உரையில் (1993: ப,356) ‘வேலன் முதலியோரை ஆவேசித்துத்
தோன்றுதலல்லது’, எனச்சரியாக உரைவரைந்துள்ளார். வேலன் ஆவேசித்து ஆடும்
வெறியாட்டமே இப்பாடலில் ‘தோற்றம்’ எனப்படுகின்றது. இன்றும் கேரள
மாநிலத்தின் வடமாவட்டங்களில் வேலன்மாரால் நிகழ்த்தப்படும் சடங்கு ஆடல்
‘தோற்றம்’ என்றே அழைக்கப்படுகின்றது. வெறியாட்டம் நிகழ்த்த்ப்படும்போது,
பெண்ணை அணங்கிய ஆவி அவள் உடலிலிருந்து வேலனால்
வெளியேற்றப்படுவதாக நம்பப்படுகின்றது. ஒருகாலத்தில் முருகனையும் அச்சம்
தரும் தெய்வமாகத் தமிழ் மக்கள் வணங்கினர் என்பதனை இப்பாடல் குறிப்பாகப்
புலப்படுத்துகின்றது.
39
அகநானூறு, 303: 1 – 3.
139
என்பது அகநானூற்றுப் பாடலின் அடிகள்.
140
வீரர்களின் மனைவியர் தம் வீடுகளில் யாழ்முதலிய இசைக்கருவிகளை இயக்கி
இன்னிசை எழுப்புகின்றனர்.; ஆம்பலால் செய்யப்பட்ட குழலை ஊதுகின்றனர்;
மணியை ஒலிக்கின்றனர்; ஐயவி என்னும் வெண்கடுகை வீடு முழுவதும்
தூவுகின்றனர்; நறுமணப் புகையை எழுப்புகின்றனர்; இச்செயலில் தமக்கு உதவுமாறு
தோழியரையும் அவர்கள் வேண்டுகின்றனர்40. இச்சடங்குகளை நிகழ்த்துவதன் மூலம்
பேய்களின் வருகையைத் தடுக்க முடியுமென்று பழந்தமிழ் மக்கள் நம்பியதனையே
இவை காட்டுகின்றன.
40
புறநானூறு, 281
41
மேலது, 296: 1 - 3.
141
மேலே நாம் மேற்கோள்களாகக் காட்டிய புறநானூற்றுப் பாடல்கள் பேய்கள்
புண்பட்ட வீரரை நெருங்காதவாறு இருப்பதற்குத் தொல்சமூகத்தில் செய்யப்பட்ட
சில சடங்குகளைக் கூறுகின்றன. வெண்கடுகைத் தூவினால் பேய்கள் அதனை
ஒவ்வொன்றாக எண்ணத் தொடங்கும்; அவை கடுகுகளை எண்ணி முடிப்பதற்குள்
காயம்பட்டவர் பிழைத்துக் கொள்வர் என்னும் நம்பிக்கை பழந்தமிழ்ச் சமூகத்தில்
இருந்ததனை இப்பாடல்கள் பதிவு செய்துள்ளன. மேலும், இசை எழுப்புவதும்
நறும்புகையைப் புகைப்பதும் உளவியல் அடிப்படையில் காயம்பட்டவர்க்கு
மனஅமைதியைக் கொடுத்து அவர்களைக் குணமாக்கக் கூடியன. இவற்றைத்
தொல்மருத்துவ முறைகள் என்று கூறலாம்.
4.2. கழுது
142
பேய்களைப் போன்ற இயல்புடையதான ‘கழுது’ பற்றியும் சங்க
இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இச்சொல் தொகைநூல் பாடல்களில் பதினாறு
(16) இடங்களில் பதிவாகியுள்ளன. ஆனால் இச்சொல்லின் வேர்ப்பொருள்
விளங்கவில்லை. ‘கழுது’ பேய் என்னும் பொருளில் சங்க இலக்கியங்களில்
ஆளப்பட்டுள்ளது. கழுதுகள் கண்களை இமைப்பதில்லை; ஆனால், அவை
கண்ணிமைத்து நடுங்கும்படி இரவில் மழை பெய்வதாகக் குறுந்தொகைப் பாடல்
ஒன்று பதிவு செய்துள்ளது (குறுந்தொகை, 161:2). ஊரெல்லாம் துஞ்சி உறங்குகின்ற
நள்ளிரவில்தான் கழுதுகள் உலாவத் தொடங்குகின்றன (நற்றிணை, 171: 8 – 9; 258:
1; 122: 14 – 15; 260: 13). ஊர்க்காவலரும் துஞ்சும் நள்ளிரவில் அவை
இயங்குகின்றன (அகநானூறு, 311: 47) என்று புலவர்கள் கழுது பற்றிய
நம்பிக்கைகளைப் பதிவு செய்துள்ளனர்.
4.3. பூதம்
பூத வழிபாடு கர்நாடகாவிலுள்ள தென்கன்னட மாவட்டத்தில் இன்றும்
உள்ளது. தென்திராவிட மொழிகளில் ஒன்றான துளு மொழியைப் பேசும் மக்கள்
இன்று அங்கே வாழ்கின்றனர். பழங்காலத்தில் துளு நாடு தமிழகத்தின் ஒரு
பகுதியாக – எல்லைப்புறப் பகுதியாக இருந்தது; கேரளப் பகுதியில் பேசப்பட்ட
கொடுந்தமிழ், வளர்ச்சி பெற்று மலையாள மொழியாகப் படிமலர்ச்சி பெற்றது
போன்றே, துளு நாட்டிலும் பேசப்பட்ட கொடுந்தமிழ் திரிந்து இன்று
தனிமொழியாகிவிட்டது. அப்பகுதியில் பூத வழிபாடு இன்றும் சிறப்பாக நடைபெற்று
வருகின்றது.
143
பழந்தமிழ் இலக்கியங்களில் பூத வழிபாடு குறித்துச் சில குறிப்புகள் உள்ளன.
கொல்லி மலையிலுள்ள பாவையைப் (கொல்லிப் பாவை) பூதம் உண்டாக்கியதாக
நற்றிணைப் பாடல் ஒன்று பதிவு செய்துள்ளது (நற்றிணை, 19 : 9). வள்ளலாகிய
கழுவுள் என்பானுடைய காமூர் என்னும் ஊரில் பூதம் ஒரு வேங்கை மரத்தைத்
தந்தது என்னும் குறிப்பு உள்ளது:
……………………………வென்வேல்
மாவண் கழுவுள் காமூர் ஆங்கண்
பூதந் தந்த பொரியரை வேங்கை
தண்கமழ் புதுமலர் நாறும்
அஞ்சில் ஓதி ஆய்மடத் தகையே42.
என்பது அகநானூற்றுப் பாடலின் அடிகள்.
42
அகநானூறு, 365: 11-5.
43
‘பூதம் காக்கும் புகலரு கடிநகர்’ – பட்டினப் பாலை:57. நச்சினார்க்கினியர் இவ்வடிக்குப் ‘பூதங்கள்
வாசலிலே காத்திருக்கும் புகலரிய அச்சத்தையுடைய காளி கோட்டம்’ என்று உரை எழுதுகின்றார்.
மூலத்தில் இல்லாத காளி கோட்டத்தை நச்சினார்க்கினியர் இவ்வடிக்குப் பொருளாகக் கொள்வது அவர்
வாழ்ந்த காலச் சூழ்நிலையை (கி.பி. 14 ஆம் நூற்றாண்டு ) ஒட்டியதாகலாம்.
144
….அருந்திறன் மரபிற் பெருஞ்சதுக் கத்தமர்ந்த
வெந்திறற் பூதரைத் தந்திவ ணிறீஇ
ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு………44
எனவரும் பதிக அடிகளிலிருந்து, இளஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர
மன்னன் பேராற்றலுடைய பூதங்களைத் தேவருலகிலிருந்து கொண்டு வந்து
தன்தலைநகரில் நான்கு தெருக்கள் கூடும் சதுக்கத்தில் நிறுவினான் என்று
அறிகின்றோம்.
5. முடிவுரை
சூர் / சூரர மகளிர் / வரையர மகளிர் / நீரர மகளிர் / பேய் / கழுது / பூதம்
பற்றி மேலே நாம் சுருக்கமாக விளக்கினோம். இவை இரண்டு எதிர்
அமைப்புகளுள் (binary structures) அடங்குவனவாக உள்ளன. முதலமைப்பு
இயற்கை சார்ந்தது; அதனுள் சூர் போன்றவை அடங்குகின்றன. அதன் எதிர்
அமைப்பில் பூதம் கழுது பேய் ஆகியன அடங்குகின்றன. பூதம் பேய் போன்றன
மனம் சார்ந்தவை; அவை முன்னதன் எதிரமைப்பாக அமைகின்றன. அதனைப்
பின்வரும் படத்தின் மூலம் விளக்குகின்றோம்:
ஆவி வழிபாடு
145
உலகிலுள்ள தொல்சமூகப் பண்பாடுகளில் ஆவிவழிபாடு இருந்தது
போன்றே, தொல்தமிழ்ப் பண்பாட்டிலும் ஆவிவழிபாடு இருந்தது.
இவ்ஆவிவழிபாட்டிலிருந்தே தமிழ் நாட்டிலும் சமயம் தோன்றியது என்று கருத
இடமுள்ளது. குறிப்பாக, முருக வழிபாடு இவ்வாறு தோன்றியது என்று
எண்ணுவதற்குச் சான்றுகள் பல பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளன.
146
147