Professional Documents
Culture Documents
Proto Religion (13.08.12)
Proto Religion (13.08.12)
0. முன்னுரை
0.1. பண்பாடு
1
ச. வையாபுரி பிள்ளை, தமிழக மறுமலர்ச்சி, 1989:ப,219.
2
தாமஸ் லெஹ்மன் (Thomas Lehmann) தாமஸ் மால்டன் (Thomas Malten) ஆகியோர் தொகுத்த A
Word Index for Cankam Literature என்னும் நூலில் அறுபத்தொரு (61) இடங்களில் பண்பு என்னும்
சொல் இடம்பெறுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Institute of Asian Studies, 1993: பக். 290 -291
3
தமிழ் லெக்சிகன், 1963: ப. 2454.
4
கலித்தொகை, 1967, 133:3.
32
சொல்லாக நச்சினார்க்கினியர் கருதியிருப்பது இவ்வுரையிலிருந்து தெளிவாகின்றது5.
customs and beliefs, art, way of life and social organization of a particular country or
group’ என்று பொருள் தருகின்றது6.
5
மேலது: 138- ஆம் பாடல் உரை
6
Oxford Advanced Learner’s Dictiarary, 2010: 370
7
இத்தலைப்பின் கீழ் இடம்பெறும் கருத்துகள் பக்தவத்சல பாரதியின் ‘பண்பாட்டு மானிடவியல்' நூலில்
(2003) உள்ள 148 – 152-ஆம் பக்கங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளைத் தழுவி எழுதப்படுகின்றன.
33
மானிடவியல் துறையில் வழங்கும் பல சொற்களைப் போன்றே, ‘பண்பாடு’
என்னும் சொல்லையும் மிகச்சுருக்கமாகவும் தெளிவாகவும் வரையறுத்து
விளக்குவது இயலாததாகின்றது. அதற்குக் காரணம் ‘பண்பாடு’ என்னும் கருத்தாக்கம்
அறிவுசார்ந்த நிலையில் எண்ணற்ற கருத்து வடிவங்களின் (abstractions)
படிநிலைகள் மூலம் வெளிப்படுவதேயாகும். இவ்வகைக் கருத்து வடிவங்களைப்
பின்வரும் படம் ஒன்றின் மூலம் விளக்குகின்றோம்:
34
1 22 1
படம் : 1
1 1
33
படம் : 2
35
(dominant culture). ‘பண்பாடு’ என்பது அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படுவது
(shared) என்றும் கற்றுணரப்படுவது (learned) என்றும் மானிடவியலாளர்கள்
விளக்குகின்றனர்.
36
ஏ. பண்பாடு என்பது அறிவு நம்பிக்கை ஒழுக்க நெறிகள் சட்டம்
வழக்கம் முதலானவற்றையும் மனிதன் சமுதாயத்தின் ஓர்
உறுப்பினனாக இருந்து, அவன் கற்கும் பிறதிறமைகளையும்
பழக்கங்களையும் கொண்டுள்ள ஒருமுழுமைத் தொகுப்பாகும்.
8
Primitive Culture, 2 Vols. (New York, Harper and Row, 1958: 1. மேற்கோள் பக்தவத்சல பாரதியின்
‘பண்பாட்டு மானிடவியல்’ (என்னும் நூலிலிருந்து) 2003: ப. 152.
37
அ. பொருள்சார் கூறுகள் (material components)
ஆ. அறிதல்சார் கூறுகள் (cognitive components)
இ. நெறிகள்சார் கூறுகள் (Normative components)
38
2. சமயத்தின் தோற்றம்
39
எட்வர்ட் பர்னெட் டைலர் என்னும் ஆங்கிலேயே மானிடவியல் அறிஞர்
மெக்ஸிகோ நாட்டின் பழங்குடி மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அவர்களது
பண்பாட்டினை மீட்டுருவாக்கம் செய்து நூல்களாக வெளியிட்டார். அவருடைய
புகழ்பெற்ற ஆய்வு நூல்களுள் ஒன்று ‘தொல்பண்பாடு’ (Primitive Culture, 1871)
என்னும் நூலாகும். இந்நூலில், அவர் சமயத்தின் வளர்ச்சிநிலைகளை மூன்று படிநிலை
(hierarchy) அமைப்புகளாக விவரித்துள்ளார்.
சமயம்
40
இதன் வழியாகச் சமயம் பற்றிய மிகக் குறைந்த - அடிப்படையான -
வரையறையை டைலர் வகுத்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆனால், அவருடைய வரையறை, சமயம் பற்றிய முழுப்பொருண்மையையும்
காட்டவில்லை; மாறாக, ‘ஆவி’ என்றால் என்ன? என்ற மற்றொரு வினாவிற்கு
அக்கோட்பாடு நம்மை இட்டுச் செல்கின்றது.9
9
The ANTHROPOLOGY of RELIGION, 2000: P.15.
41
தடுப்பதற்கு அறிவார்ந்த நிலையில் சிந்திக்காமல், அவர்கள் மந்திரங்களால் தமக்கு
ஏற்படும் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்த முடியுமென்று நம்பினர். அவர்களைப்
பொறுத்தமட்டில் ‘மந்திரம்’ என்பது ஒரு செய்ம்முறை உத்தியாகும் (technique)10.
மந்திரம்
சமயம்
அறிவியல்11
10
Studying Religion Anthropologically, p. 17
11
பக்தவத்சல பாரதி, மானிடவியல் கோட்பாடடுகள், 2005,ப:244.
42
எமிலி தர்கைம் என்னும் பிரெஞ்சு மானிடவியலாளர் ஆஸ்திரேலிய
முதற்குடிமக்களின் (Aborigines) வாழ்க்கையை ஆராய்ந்து, சமய வாழ்க்கையின்
அடிப்படை அமைப்புகள் (The Elementary Forms of the Religious Life, 1915)
என்னும் நூலை எழுதினார். தர்கைம் பார்வையில் ‘சமயம்’ என்பது உலக வாழ்க்கையின்
விவரிப்பு அன்று; அதற்கு மாறாக, அது சமூகத்தைக் குறியீடுகளின் (symbols) மூலம்
வெளிக்கொணரும் ஓர்அமைப்பாகும். சமயம் தனிமனித உணர்வு சார்ந்தது எனச்சிலர்
கருதியதற்கு மாறாக, அவர் அது ஒட்டுமொத்த சமுதாய உணர்வுகளோடு
தொடர்புடையது என்று கருதினார்.
43
தொடர்புகள் தீட்டுக்கும் புனிதத்திற்கும் இடையிலுள்ள
வேறுபாடுகள் ஆகியனவற்றின் இயல்பை எடுத்துக்
காட்டுவனவாக அமைகின்றன12.
(புனிதம்) x (தீட்டு)
12
The ANTHROPOLOGY of RELIGION. op.cit.:p.139.
44
iii. மனித வாழ்க்கையின் இருப்புநிலைக்குத் தேவையான முறையில்
கோட்பாடுகளை உருவாக்கி அவற்றை ஒழுங்கமைவு செய்வனவாக
இக்குறியீடுகள் உள்ளன.
2.5. மாலினோவ்ஸ்கி
45
செயற்பாட்டெல்லைகளை (functional limits) வரையறுக்கின்றது. அச்சத்தோடும்
பயபக்தியோடும் சடங்குகளை (rituals) நிகழ்த்தினால், அவை புனிதமானவையாக
ஆகிவிடுகின்றன என்பது மாலினோவ்ஸ்கியின் கருத்தாகும்14.
14
The ANTHROPOLOGY of RELIGION, op.cit: p. 16
46
தொடரில் பொருள் மாற்றம ஏற்படவில்லை; ஆனால், பாடிய செயல்
அழுத்தமாகக் கூறப்படுகின்றது,
47
ஒரு நிகழ்வின் பொருள், தோற்றம் ஆகியவற்றைப் படைத்துக்
கொள்ளக்கூடிய ஒரு விருப்பமான விளையாடலை (play) மனித மனம்
ஆடிக்கொண்டே இருப்பதாக லெவிஸ்டிராஸ் கருதுகின்றார்15.
15
Analyzing Religion Anthropologicalaly, op.cit. p. 19
16 ?
. The ANTHROPOLOGY of RELIGION, op.cit. :p.157.
48
தமிழர்களின் சமய மரபில் நீர்நிலைகள் (குளம் ஆறு கடல்) புனிதமானவை;
மரங்கள் சிலவற்றில் (கடம்பு ஆல் வேங்கை வாகை போன்ற மரங்கள்) தெய்வங்கள்
தங்கியிருப்பதாகக் கருதப்படுவதால் அவை புனிதமானவைகளாகக்
கருதப்படுகின்றன. தெய்வங்கள் உறைவதாகக் கருதப்படும் சில மலைகள் /
குன்றுகள் (திருப்பரங்குன்றம் வேங்கடம்) புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.
இவை ஒன்றோடொன்று நேரடியான தொடர்புகள் அற்றவை. எனினும், அவை
‘புனிதம்’ என்னும் கருத்துருவின் கீழ் ஒரே நேர்கோட்டில் அமைந்து விடுகின்றன.
இதனைப் பின்வரும் படம் விளக்குகின்றது:
புனிதம்
49
இந்நம்பிக்கையின் தோற்றம் மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்டதாக
இருப்பினும், அது பிரமிக்க வைக்கத் தக்க செயல்களைச் சாதாரண மனிதன்
ஒருவனைச் செய்ய வைக்கின்றது; அதன் மூலம் ‘மனா’வின் ஆற்றல்
வெளிப்படுகின்றது என்பது மெலனீசியர்களின் நம்பிக்கையாகும். ‘மனா’ ஆற்றல்
உலகம் முழுவதிலும் பரவி இருந்தாலும், சில மனிதர்கள் வாயிலாகவும் பொருள்கள்
வாயிலாகவும் அது தன்னை வெளிபடுத்திக் கொள்கின்றது என்கின்றார் மாரட்.
இந்திய மானிடவியல் அறிஞர் டி.என்.மஜுமேதான் (T.N. Majumadhan) ‘மனாவை’
ஒருவகையில் ஒத்த ‘போங்கா’ (Bhonge) என்னும் ஆற்றல் சோட்டா நாகபுரிப்
பகுதியில் வாழும் பழங்குடி மக்களிடம் இருப்பதாகத் தெரிவிக்கின்றார்17.
17
பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், 2003: பக். 499 - 503
50
முன்னோர்களின் ஆவி
அந்தமான் மக்களின் சமயம்
18
The ANTHROPOLOGY of RELIGION, op.cit.: pp.18-19.
51
எதிலிருந்து தொடங்குவது என்பதில் அவர்களிடையில் கருத்து வேறுபாடுகள்
காணப்படுகின்றன. மானிடவியல் அறிஞர் ஒவ்வொருவரும் சமயத்தின் ஏதாவது
ஒரு கூறினை (unit) வலியுறுத்தி, அதனையே ‘சமயம்’ என்று விளக்கவும்
வரையறுக்கவும் முயன்றுள்ளனர் என்பது தெளிவாகின்றது.
52
அவர்களுடைய நோக்கங்கள் யாவும் தம்வாழ்க்கையில் தாம்
எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டங்களில் வெற்றி பெறுவதற்கு, உலக
வாழ்க்கையை இயக்குவதாக அவர்கள் தாம் நம்பிய இயற்கை ஆற்றல்களை
வழிபட்டோ அல்லது அவற்றை மந்திரம் போன்ற வாய்பாடுகளால்
கட்டுப்படுத்தியோ அல்லது சில சடங்குகளைச் செய்து அவற்றை மகிழ்வித்தோ
தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள இயலும் என்பதேயாகும்.
அவற்றுக்காக அவர்கள் மேற்கொண்ட செயல்கள் மற்றும் நம்பிக்கைகளின்
தொகுப்பையே நாம் ‘தமிழர்களின் தொல்சமயம்’ என்கின்றோம். நாம் கருதும்
‘தமிழர்களின் தொல்சமயம்’ புலன்கடந்த உலகம் (meta physical world) பற்றிப்
பேசும் மெய்ப்பொருள் அறிவு அன்று; அதற்கு மாறாக, உலகில் இருப்பதாக
அவர்கள் நம்பிய ஆற்றல்களோடு தொடர்புகொள்வதை - அவ்வாறு
தொடர்புகொள்வதற்காக அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் மேற்கொண்ட
நடத்தைமுறைகளையும் வழிபாடுகளையும் ‘தொல்சமயம்’ குறிக்கின்றது.
53
வலியுறுத்துகின்றன; பாவம் (sin), புண்ணியம் (virtue) பற்றி எடுத்துரைக்கின்றன.
அவை தம்சமயத்தை ஒரு நிறுவனமாக்கித் (institution) தங்கள் சமயக் கொள்கைகளை
விளக்குவதற்கும் பரப்புவதற்கும் விகாரம் (பௌத்த விகாரம்), தேவாலயம் (Church)
மசூதி போன்ற நிறுவனங்களைத் தோற்றுவிக்கின்றன. தத்தம் சமயக்
கொள்கைகளைத் தம்மைப் பின்பற்றும் மக்கள் கடைப்பிடிக்கின்றார்களா?
இல்லையா? என்று கண்காணிக்கின்றன. சமய விதிகளை மீறுவோர் மீது
நடவடிக்கை எடுக்கப்படுகின்றது; அவ்விதிகளை மீறுவோர் அச்சமயக்
குழுவிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
54
திட்டவட்டமாக அறுதியிட்டுக் கூற முடியாததால், இம் மதம் ‘சநாதனம்’
எனப்படுகின்றது; ‘சநாதனம்’ என்பது தொடக்கம் எதுவும் இல்லாதது என்று
பொருள்படும். இந்து சமயத்தைச் சமயம் (religion) என்று சொல்வதைவிட
அதனைச் சில குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் வாழ்க்கை நடைமுறைகளின் (ways
of life) தொகுப்பென்று கூறுவதே பொருத்தமாகும்.
55
1. அவை வாய்மொழி வழக்கில் உள்ளவை; இச்சமயங்கள் வழங்கும்
பண்பாடுகளில் எழுத்தறிவு இருக்குமாயினும், எழுத்து வடிவில்
எழுதப்பட்ட சமயக் கோட்பாட்டுத் தொகுதிகள் இருக்க மாட்டா.
2. அவை இவ்உலக (worldly) வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை.
3. அவை ஒரு மொழியைப் பேசுகின்ற மக்கள் அல்லது இனக்குழு (ethnic
group) எல்லைகளுக்குள் இருப்பவை.
4. அவை உலகச் சமயங்கள் அல்லது பெருஞ்சமயங்களாக வளர்ச்சி
பெறுவதற்கு வேண்டிய அடித்தளங்களைத் தம்முள் கொண்டுள்ளன.
5. தொடக்கநிலைச் சமயம் வழங்கும் பண்பாடுகளில், சமயமும் சமுதாயமும்
ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துக் காண முடியாதபடி இரண்டும்
பின்னிப் பிணைந்துள்ளன; இப்பண்பாடுகளில் புனிதத்திற்கும் தீட்டிற்கும்
தெளிவான வேறுபாடுகள் இல்லை. அதேபோன்று, இப்பண்பாடுகளில்
இயற்கைக்கும் (nature) மீவியல்புக்கும் (super natural) தெளிவான
வேறுபாடுகள் இல்லை19.
பியோனா போவி தரும் விளக்கங்கள் தொல்சமயத்தையும்
பெருஞ்சமயத்தையும் அவற்றின் அடிப்படைகளையொட்டி வேறுபடுத்திக்
காட்டுகின்றன. பெருஞ்சமயத்தைத் தோற்றுவித்தவர் வரலாற்றுக் காலத்தில்
வாழ்ந்தவர்; அவரை நாம் இன்னாரென்று அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
ஆனால், ‘தொல்சமயம்’ தனியொருவரால் தோற்றுவிக்கப்பட்டது அன்று; அது
சமூகம் சார்ந்தது; சமூக வயப்பட்டது. தொல்சமுதாயங்களில் வாழ்ந்த மக்கள்
கைக்கொண்டொழுகிய பண்பாட்டின் ஓர் அலகாக (unit) வரலாற்றின் ஊடே
இயல்பாக அது வளர்ச்சி பெறுவது; அப்பண்பாட்டைக் கைக்கொண்டொழுகும்
மக்கள் இருக்கும்வரை அவர்களுடைய தொல்சமயமும் நிலைத்து நிற்கும்.
19
The ANTHROPOLOGY of RELIGION, op.cit.: p.26.
56
வேறுபட்டுக் காணப்படுகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் பழங்குடி
மக்களின் தொல்சமயங்களில் இடம்பெற்றுள்ள முக்கியமான கூறுகளைப்
பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:
57
பருவமழை பொய்த்து விடுவதுண்டு. அத்தகைய காலத்தில், அவை தம்செழுமையை
இழந்து வறண்ட நிலங்களாகி விடுவதுண்டு; பழந்தமிழ் மக்கள் இவ்வாறு தோன்றும்
நிலவியல்பைப் ‘பாலை’ என்னும் பெயரால் அழைத்தனர். அத்தகைய சூழலில்
அங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்காக ஆநிரை
கவர்வதிலும் வழிச்செல்வோரைத் தாக்கி அவர்களிடமிருந்த பொருள்களைப்
பறிப்பதிலும் ஈடுபட வேண்டியிருந்தது.
58
(தலைநகர்கள்) ஆட்சி செய்த மூவேந்தர்கள் குறுநில மன்னர்கள்
போன்றோர்தாம் வைதிகத்திற்கு ஆதரவாக நின்றனர்.
அவர்களுடைய நேரடியான ஆட்சியின் கீழடங்காத பிற
நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தங்கள் தொன்மையான
வழிபாட்டு முறைகளையே தொடர்ந்து மேற்கொண்டிருந்தனர்
என்பதற்குச் சங்கப் பாடல்களில் சான்றுகள் உள்ளன.
ii. புறநானூற்றுப் பாடல் ஒன்று (335) நடுகல்லைத் தவிர வேறு
தெய்வம் எதுவும் இல்லை என்று பதிவு செய்துள்ளது. நடுகல்
வழிபாடு வைதிகம் சார்ந்த வழிபாடு அன்று. புறப்பாடல்களிலும்
அகப்பாடல்களிலும் நடுகல் வழிபாடு பற்றிய குறிப்புகள் பல
உள்ளன.
59
சடங்குகளும் (திருமணம் குழந்தைப்பேறு) இறப்புச் சடங்குகளும்
புலவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில கூத்துகள்
சடங்குகளாக நிகழ்த்தப்பட்டதையும் தொல்காப்பிய இலக்கணமும்
சங்கப் பாடல்களும் பதிவு செய்துள்ளன. முன்தேர்க்குரவை
பின்தேர்க்குரவை போன்றன போர்ச் சடங்குகளாகும்;
களவேள்வியும் போரோடு தொடர்புடைய சடங்கு நிகழ்ச்சியாகும்.
60
அன்று; மாறாக, போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரர்களின்
உயிர்கள் இறப்புக்குப் பின் சென்று சேரும் - வீரர்கள் தங்கும் -
உலகமாகக் கூறப்பட்டுள்ளது.
61
உலகம் முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் மானிடவியல் கல்வியும்
ஆராய்ச்சியும் பெருமளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளன. மேலைநாட்டு மானிடவியல்
அறிஞர்கள் உலகெங்கினும் வாழும் பழங்குடி மக்கள் வாழும் இடங்களுக்குச்
சென்று அம்மக்களுடைய இனம் மொழி பண்பாடு நாகரிகம் பற்றி ஆராய்ந்து
அறிவார்ந்த நூல்களை எழுதியுள்ளனர்; தொடர்ந்து எழுதியும் வருகின்றனர்.
62
மானிடவியல் பற்றிய நூல்களும் தமிழில் பெருமளவில் வெளிவரவில்லை.
மானிடவியலைத் தமிழில் முதன்முதலில் அறிமுகம் செய்த பெருமையும் பக்தவத்சல
பாரதிக்கே உரியதாகும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது,
தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட வாழ்வியல் களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ள
மானிடவியல் தொடர்பான கட்டுரைகள் அனைத்தையும் அவரே எழுதினார்.
மானிடவியல் பற்றித் தமிழில் முதன்முதலில் அறிமுகமானவை இவருடைய
கட்டுரைகளேயாகும்.
63
Religious Beliefs and Practices of Ancient Tamils சென்னைப் பல்கலைக் கழகத்தில்
மெய்யியல் துறையில் நடைபெற்ற ஓர் அகில இந்தியக் கருத்தரங்கில்
படிக்கப்பட்டுச் செப்பம் செய்யப்பட்டு, இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்
(MHRD) உறுப்பான நாகரிகங்கள் தொடர்பான ஆய்வு மையத்தால் (Centre for
Civilization) 2008-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பின்னர் இது தனிநூலாக
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் (2010) வெளியிடப்பட்டது. இந்நூலிலும்
பழந்தமிழ் மக்களின் சமயம், மானிடவியல் நோக்கில் ஆராயப்படவில்லை.
64
‘குலக்குறி இயலும் மீனவர் வழக்காறுகளும்’ என்னும் நூல்(1996) பண்டைத் தமிழ்ச்
சமூகத்தில் இடம்பெற்றுள்ள குலக்குறி பற்றிய ஆய்வைத் தொட்டுக் காட்டுகின்றது.
அவருடைய மற்றொரு நூலான ‘சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியமும்’
என்னும் நூல் (2010) பழந்தமிழ்ப் பாடல்களை மானிடவியல் பார்வையில்
ஆராய்கின்றன. நா.இராமச்சந்திரனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு
வெளியிடப்பட்டுள்ள ‘பொத்தன் தெய்யம்’ என்னும் நூலிலுள்ள (2011)
கட்டுரைகளும் பழந்தமிழச் சமூகத்தின் வழிபாட்டு மரபுகளுக்கும் நாட்டார்
வழிபாட்டு மரபுகளுக்குமிடையிலுள்ள தொடர்புகளைச் சுட்டிக் காட்டுகின்றன.
சு.வித்தியானந்தனின் ‘தமிழர் சால்பு’ (1985) என்னும் நூலும், கா.சுப்பிரமணியனின்
‘சங்க காலச் சமுதாயம்’ (1982) என்னும் நூலும் பெ.மாதையனின் ‘சங்க கால
இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும்’ (2004) என்னும் நூலும்
கைலாசபதியின் ‘தமிழ் வீரநிலைக் கவிதை’ (2006) என்னும் ஆய்வு நூலும் கா.
சிவத்தம்பியின் ‘பண்டைத் தமிழ்ச் சமூகம்’ (2010) என்னும் நூலும் பழந்தமிழ்
மக்களின் சமயம் பற்றிய சில குறிப்புகளைத் தருகின்றன. புதுவை மொழியியல்
பண்பாடு ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ‘பண்பாட்டியல் நோக்கில்
பண்டைத் தமிழர் சமய மரபுகள்’ என்னும் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு நூல்
(2011) பழந்தமிழர்களின் தொல்சமயம் பற்றிய பல கூறுகளைத் தொட்டுக்
காட்டுகின்றன.
3.6. முடிவுரை
65