Professional Documents
Culture Documents
Sasti Viratham
Sasti Viratham
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி விரதம். ஐப்பசி மாதத்தில் வரும்
கந்த சஷ்டி விழாவின் போதே லட்சக்கணக்கானர்கள் விரதம் இருந்து, முருகனை
வழிபடுவார்கள். ஆனால் கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி மாதந்தோறும் வரும் சஷ்டி
திதிகளிலும் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடலாம். வளர்பிறை திதியில் ஒன்று , தேய்பிறை
திதியில் ஒன்று என மாதத்திற்கு இரண்டு முறை சஷ்டி வருவதுண்டு.
* ஒரு வேளை சாப்பிடாமலோ அல்லது இரண்டு வேளையும் சாப்பிடாமலோ அல்லது பழம் மற்றும்
பால் மட்டும் சாப்பிட்டுக் கொண்டோ விரதம் இருக்கலாம். உடல்நிலையை பொருத்து எந்த
முறையில் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம்.
* மாலையில் வீட்டில் சட்கோண கோலம் அமைத்து அதில் 6 அகல் விளக்குகளில் தீபம் ஏற்ற
வேண்டும். ஆறும் நெய் தீபமாக ஏற்றலாம் அல்லது ஒரு தீபமாவது நெய் தீபம் ஏற்ற வேண்டும்.