Professional Documents
Culture Documents
மூன்றாம் உலகப் போர் (சுருக்கம் 7 & 8)
மூன்றாம் உலகப் போர் (சுருக்கம் 7 & 8)
போர்
அத்தியாயம் 7 & 8
அத்தியாயம் 7
2
சுருக்கம்
விவசாயக் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களில் படித்த பிள்ளைகளுக்கும் படிக்காத
பெற்றோர்களுக்குமிடையே ஏற்படும் விரிசலும் ஒன்றாகும். விவசாயத்தால் ஏற்படும் துன்பங்கள்
அனைத்தும் தன்னுடன் முடிய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு விவசாயி தன்
பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான். ஆனால், படித்த பிள்ளைகள் பெற்றோர்களை அவமதிக்க
ஆரம்பிக்கின்றனர். அவ்வகையில், கருத்தமாயி - முத்துமணியின் கதையும் இதுவே ஆகும்.
முத்துமணி கருத்தமாயின் மூத்தமகனாவான். முத்துமணி விவரமானவன், திருகுதாளம்
பிடித்தவன், சுயநலவாதி, உடம்பு வளையாதவன் இருப்பினும் புத்தியுடையவன். பொய், திருட்டு
போன்றவற்றில் வல்லவன். முத்துமணியின் திருகுமுருகு ஆறேழு வயதில் சிங்கி விளையாட்டில்
ஆரம்பித்த ஒன்றாகும். இவ்விளையாட்டில் ஒவ்வொரு முறையும் முத்துமணிக்கே வெற்றி
கிட்டும்.
3
சுருக்கம்
ஒருநாள், எழுவனம்பட்டியிலிருந்து சிங்கி விளையாட வந்த ஒருவன் முத்துமணி விளையாட்டில்
செய்யும் சூழ்ச்சியைக் கண்டுபிடித்தான். முன்புபோல் கையில் பணமில்லாததால் வீட்டில் திருட
ஆரம்பித்தான். அம்மா உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தைத் திருடியப்பின் அவ்வுண்டியலை
மணலைக் கொண்டு நிரப்பினான். முத்துமணிக்கு இப்பொழுது பத்துப் பதிமூன்று வயது. ஒரு
நாள், கறிக் கொழம்பு வேண்டுமென்று அம்மாவை நச்சரித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது,
ஈசா ராவுத்தர் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்த விருந்தாளிக்கு விருந்தளிக்க எண்ணினார்
கருத்தமாயி. பணம் போதவில்லை என்பதால் முத்துமணியை அழைத்து கசாப்புக் கடையில்
கடனுக்கு வாங்கி வர பணிப்பார். வாங்கிய கறியுடன் முத்துமணி வீடு திரும்பிக்
கொண்டிருந்தான். கறியைக் கண்டவுடன் நாக்கு ஊறியதால் ஈரல்களைப் பொறுக்கி தின்றான்.
மீதமுள்ள எலும்பையும் சிறிது கறியையும் மட்டும் அம்மாவிடம் கொடுத்தான். அதோடு அவன்
நிறுத்திக்கொள்ளவில்லை. கொழம்பு கொதிக்கும் வேளையிலேயே மீதமுள்ள கறியையும்
முத்துமணி தின்றான். இதுதான் முத்துமணி.
4
சுருக்கம்
5
முத்துமணி
ஏமாற்றும் குணம் உடையவன் சோம்பேறித்தனம்
6
அத்தியாயம் 8
7
சுருக்கம்
முத்துமணி தன் பட்டப்படிப்பை முடித்து விட்டு வேண்டாத ஆட்களோடு சுற்றி திரிந்தது
கருத்தமாயிக்கு வேதனையைத் தந்தது. மகனின் போக்கைக் கண்டித்து, தான் இரண்டு
கடன்பட்டவன் என்றும் வயதான காலத்தில் அவருக்குக் கை கொடுத்து உதவ வேண்டும்
என்றும் முத்துமனியிடம் கூறினார். மகனைத் திட்டியதால் சிட்டம்மா கருத்தமாயியைச்
சாடையாகத் திட்டும் வேளையிலே, முத்துமணி காட்டுயிலாகாவில் வேலை இருப்பதாகவும்
அதற்கு மூன்று இலட்சம் இலஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினான். கருத்தமாயி
அவ்வளவு இலஞ்சப் பணத்துக்கு என்ன செய்வது என்று கேட்ட பொழுது, அவன் தங்கையின்
திருமணத்திற்குச் சேர்த்து வைத்த பணத்தைக் கேட்டான். திகைத்துப் போன கருத்தமாயி
முத்துமணியின் மீது கோபம் கொண்டார். பொக்கப்பாண்டி எனும் 'பொற்கைப் பாண்டியன்'
என்ற மாவட்ட செயலாளரை தாய் தந்தையிடம் வாங்கிய பணத்தோடும் கல்லூரி நண்பன்
ராம்குமாரோடும் பார்க்க சென்றான்.
8
சுருக்கம்
9
சுருக்கம்
10
முத்துமணி
வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி திரிபவன்
சுயநலக்காரன்
11
நன்றி