Professional Documents
Culture Documents
முன்னுரை முத்து
முன்னுரை முத்து
0 முன்னுரை
என்ற பாடல் வரிக்கேற்ப பூவியில் பிறந்திட்ட மனிதர்கள் யாவருமே வெற்றியாளர்கள் தான். ஆக,
உடலுறுப்பு குறைபாடுகளும் மூளை சீர்ககு
் லைவும் அவர்களின் வெற்றிக்கும் திறமைக்கும்
தடையாகிடக்கூடாது. ஒவ்வொரு மனிதனாலும் நாட்டிற்கும் உலகிற்கும் தங்களது பங்கினை வழங்கிட
முடியும். மனிதனின் வெற்றிக்கும் திறமைக்கும், கல்வியறிவும் வாய்ப்பும் முக்கிய கூறாக அமைகிறது.
இதன் காரணத்தாலே, கல்வி அனைத்து சாராருக்கும் சமநிலையில் வேரூன்றி நின்ற யுனஸ்கோ ஐக்கிய
சபை நாடுகளில் உள்ள சிறப்பு தேவை மாண்வர்களை அன்றாட பள்ளியில் சேர்க்க பரிந்துரை செய்தது
(UNESCO,2018). இதன்வழியே உட்சேர்ப்புக் கல்வித் திட்டங்களும் கொள்கைகளும் வேரூன்ற
தொடங்கியது. இக்கல்வித்திட்டத்தின் கருத்துருவானது சிறப்பு தேவைக்குட்பட்ட மாணவர்களும்
பிரதான கல்வி மாணவர்களும் ஒரே வகுப்பில் இணைந்து வேறுபாடுகள் அற்று அரசாங்க
பள்ளிகளிலோ/அரசாங்க உதவி பள்ளிகளிலோ கல்வி பெறுவதேயாகும்.
நோக்கங்கள்
3.3 சக மாணவர்கள்
உட்சேர்ப்புக் கல்வித் திட்டத்தின்படி அனைத்து மாணவர்களும் சமநிலையில் கல்விக் கற்கும்
வாய்ப்பு கிடைக்கிறது. இருப்பினும் உட்சேர்ப்புக் கல்வியின் நோக்கத்திற்கு ஏற்றவாறு சிறப்பு
தேவைக்குட்பட்ட மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க சக மாணவர்கள் அல்லது இயல்பான
மாணவர்களின் செயல்பாடுகள் தடைக்கல்லாக அமைகின்றது. காரணம், இயல்பான மாணவர்கள்
சிறப்புத் தேவைக்குட்பட்ட மாணவர்களின் குறைகளைக் கருதி அவர்களை நண்பர்களாக ஏற்க
மறுக்கின்றனர். இயல்பாகவே, தொடக்க பள்ளி மாணவர்களிடத்தில் தன்னுணர்வு மிகுந்திருக்கும்
என்பது மேனாட்டு அறிஞர் பியாஜேட் கருத்து. ஆசிரியர்கள், சிறப்புத் தேவைக்குட்பட்ட
மாணவர்களின் கற்றலுக்காக அவர்களைக் கூடுதல் கவனிப்புடன் அணுகுவதையும் இயல்பான
மாணவர்கள் மறுக்கின்றனர். சிறப்புத் தேவைக்குட்பட்ட மாணவர்களின் இயலாமையையும்
அவர்களின் குறைபாடுகளையும் ஏளனம் செய்து பள்ளிச்சூழலையே வெறுக்கும் அளவுக்கு
அச்சுறுத்தலை ஏற்படுத்திடுகின்றனர்.
3.4 அரசாங்கம்
உட்சேர்ப்புக் கல்வியை அமலுக்குக் கொண்டு வந்த அரசாங்கம் அதற்கான பங்கினையும்
முழுமையாக மேற்கொண்டால் மட்டுமே அதன் நோக்கத்தை அடைய முடியும். முழுமையான
பயிற்சி, ஆவணங்களின்றி ஆசிரியர்களால் இக்கல்வித் திட்டத்தை முறையாக செயல்படுத்த
இயலவில்லை. அதுமட்டுமின்றி, இத்திட்டத்திற்கான பொருள் வசதியையும் பணவுதவியையும்
இத்திட்டத்தின் வழிநடத்தலுக்காக வழங்கப்படுவதில்லை. இத்திட்டத்திற்காகப் பல பயிற்சி
பட்டறைகளையும் சொற்பொழிவுகளும் நடத்தப்படுவதில்லை. தொடர்ச்சியாக, பள்ளிகளில்
இத்திட்டத்தின் அடைவுநிலையைக் கண்காணிக்கத் தவறுவதால் அதன் சிக்கலையும்
விளைப்பயனையும் அளவிட்டு பகுப்பாய முடியவில்லை. இத்திட்டத்திற்காக, மருத்துவ நிபுணர்கள்,
மனநல மருத்துவர்கள், மாற்றுத் திறனாளிகள் சிலரைத் தேர்ந்தெடுத்து உட்சேர்ப்புக் கல்விக்கென
சொற்பொழிவுகளைப் பள்ளிகளிலும் பொதிவிடங்களிலும் ஏற்பாடுகள் செய்வதில்லை இதனாலே
இதன் முக்கியத்துவமும் சிறப்புத் தேவை மாணவர்களின் தேவைகளையும் நோக்கத்திற்கேற்ற
நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
4.0 முடிவுரை