மதிப்பிற்கு உரிய பாரத பிரதமரின் வழிகாட்டுதலின் படி
கொரோனா வைரசுக்கு எதிராக மாபெரும் போர்
" வரும் ஞாயிறு அன்று இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது
நிமிடம் தீப ஒளி பிராத்தனை " இந்த அன்பு கட்டளை கொரோனா வைரசுக்கு மரண சாசனமாக அமையும் என்பது உறுதி .
ஞாயிறு இரவு ஒன்பது மணிக்கு விருச்சிக் லக்கினம் உதயம்
. அன்று காலை 6.10 மணிக்கு சூரிய உதயம் ஆகையால் இரவு ஒன்பது மணிக்கு சூர்ய ஹோரை செவ்வாய் உபஹோரை ஆரம்பம் ஆகி விடும்.
அந்த குறிப்பிட்ட நேரத்தில் விருச்சிக லக்கினம் விசாக
நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. எண்ணியல் சாஸ்திரத்தில் ஒன்பதாம் என் போர் கிரகமான பூமிகாரகன் செவ்வாயின் ஆளுமைக்கு உள்ளே வருகின்றது . ஒன்பதாம் என் என்பது மறுசுழற்சிக்கு தயார் நிலையை குறிக்கும் என் ஆகும் விசாக நட்சத்திரத்தின் மேன்மையை உணர்த்தும் விதமாக ஸ்ரீ பகவத் கீ தையின் 2.41 வசனம் அமைந்து உள்ளது குண்டலினி சக்தியின் மூலம் விசாக நட்சத்திரம் இருக்கும் விருச்சிக ராசியில் தான் அமைந்து உள்ளது . விசாக நட்சத்திரத்தின் அதிதேவதைகள் தேவர்களின் தலைவர் இந்திரன் மற்றும் தேவ புரோகிதன் அக்னி ( இவர்களின் கூட்டு ஸ்வரூபமான இந்திராக்னியும் இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை தான் ) அக்கினியின் வரியம் ீ தேவசேனாதிபதி ஸ்ரீசுப்புரமணியரும் இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாவர். விசாக விஜயன் ( சக்திகளை ஒன்று திரட்டி மனதை ஒரு முகப்படுத்தி தன் லட்சியத்தை நோக்கி சென்று வெற்றி பெற்றவர் - இது இந்த திருநாமத்திற்கு விளக்கம் ) என்ற திருநாமமும் அவருக்கு உண்டு. நல்ல ஆரம்பம் நல்ல ( வெற்றி) முடிவு என்ற இலக்கை சுட்டி காட்டுகின்றது இந்த விசாக நட்சத்திரம் .
இந்த நட்சத்திரம் ஒன்று கூட்டல் பெருக்குதல் பிரித்தல்
மாற்றுதல் திரட்டுதல் போன்ற இயக்கங்களை வெளிப்படுத்த கூடியது . ஸ்ரீ சிவனார் தன் சக்திகளை ஒன்று திரட்டி நெற்றிகண் வழியாக ஸ்ரீசுப்புரமணியரை உருவாக்கினார்.ஸ்ரீபராசக்தி அவர்கள் தன் சக்திகளை ஒன்றுகூட்டி அதை சக்திவேலாக வெளிப்படுத்தி ஸ்ரீகார்த்திகையருக்கு தந்து அருளினார்.விசாக நட்சத்திரம் தன் இயக்கத்தின் மூலம் வ்யாபன சக்தியை அருளக்கூடியது.வ்யாபன சக்தி என்பது ஒருவரின் இலட்சியங்களை நோக்கி இழுத்து சென்று அதில் வெற்றியும் அடையவைப்பது.ஸ்ரீசுப்ரமணியர் சூரபத்மன் என்கின்ற கொரோனவை வழ்த்தியது ீ இந்த சக்தியின் மேன்மையை உயர்த்துக்கின்றது.விசாகம் என்ற பெயருக்கு பல அர்த்தம் உள்ளது.சாகா என்றால் வேற்றுமை , பல பிரிவுகள் என்று பொருள் , விசாகா என்றால் பிரிவு அற்ற , ஒற்றுமை ,ஒரு முகமாக என்று பொருள் 'விசா'என்றால் நுழைவது 'கா' என்றால் சுவர்க்கம் என்று அர்த்தம் இன்னும் ஒரு அர்த்தம் 'விஸ்'என்றால் விஷம் தேவையற்றது மலம் என்று அர்த்தம் 'அகா' என்றால் வெளிப்படுவது வெளிப்படுத்துவது என்று அர்த்தம். அம்பு எய்பவனின் பிரதான குணமாக விசாகம் போற்ற படுகின்றது. இலக்கு , முடிவு , வெற்றி போன்ற விஷயங்களின் பெட்டகமாக விசாகம் திகழ்கின்றது . மனம் தான் அமிர்தத்தையும் விஷத்தையும் நம்மை பருக வைக்கின்றது . இதற்கு உள்ளே இரண்டும் இருக்கின்றது . இந்த நட்சத்திரத்தில் சந்திரன் நீச்சம் அடைகின்றார் விருச்சிக ராசி ஸ்திர நீர் ராசி . ஒரே இடத்தில நீர் பயன்படுத்தப்படாமல் தேங்கி நின்றாள் மாசு படும் ஆகையால் விசாக நட்சத்திரம் சந்திரனின் மலத்தன்மையை உணர்த்தி , தடை இல்லா இயக்கமே உயர்வை தரும் என்ற மனதின் ஆற்றலின் சூட்சுமத்தை உணர்த்தி மென்மையான ஆன்மிக எழுற்சி நிலைக்கு ஒருவரை எடுத்து செல்வதை குறிக்கிறது.ஸ்ரீ சுப்ராமணியர் ஸ்ரீ சூரபத்மனை பிழந்து மாபெரும் எழுச்சி நிலையில் தன்னுடன் இணைத்து கொண்டார். விருச்சிக் ராசி பொதுவாக குடல் பகுதி , மர்ம ஸ்தானத்தை குறிக்கும் . குண்டலினி சக்தியின் இருப்பிடமாக இந்த ராசி அமைந்து உள்ளது . ஸ்கந்தம் என்றால் உள்ளே இழுத்து மேலே தள்ளுவது எண்று பொருள் .இதை தான் ஸ்ரீ சிவ பெருமாள் செய்து ஸ்ரீ ஸ்கந்த சக்தியை வெளிப்டுத்தினார் . மனத்தை ஒருமுகமாக வைத்து நாம் விரும்பிய இலக்கை அடையும் இயக்கத்தின் பிரதிபலிப்புதான் ஸ்ரீ ஸ்கந்தர்.
விருச்சிக ராசியின் குறியீடு தனக்குள்ளே பலஇரகசியங்களை
வைத்து உள்ளது அதில் விசாக நட்சத்திரத்தின் இயக்கத்தை உணர்த்தும் விதமாகவும் அமைந்து உள்ளது . அதாவது திட்டம் தீட்டப்பட்டு ஒரு இலக்கை நோக்கி செலுத்தப்பட்ட ஒரு சக்தியின் இயக்கத்தின் குறியீடாக இந்த விருச்சிக ராசியின் குறியீடு காட்சி அளிக்கும் . இன்னும் பல இரகசியங்கள் இதில் புதைந்து இருக்கின்றது மாணவர்களே வரும் காலங்களில் இதை பற்றி பார்ப்போம் .
விசாக நட்சத்திரத்தின் வடிவம் குயவன் சக்கரம்
தோரணவாயில்,தேவேந்திரன் மற்றும் தேவசேனாதிபதி அவர்களின் கையில் இருக்கும் வஜ்ராயுததின் ஒத்து இருக்கும்.வஜ்ராயுதம் வெவ்வேறு பரிணாமத்தில் இயங்கிகொண்டு இருக்க கூடிய அக்னியின் சக்தியை ஒன்று திரட்டி வெளிப்படுத்த கூடிய கருவியாகும்.இந்த நேரத்தில் அனைவரும் ஒன்று கூடி விளக்கு ஏற்றுகையில் வஜ்ராயுதத்தின் சக்தி வெளிப்படும்.அன்று சந்திரன் சுக்கிரனின் நட்சத்திரத்தில் இருக்கிறார்.விசாக நட்சத்திரம் துலாராசியையும் விருச்சகராசியும் இணைக்கும் பாலமாக இருக்கிறது ஆகையால் ஸ்ரீமஹாலட்சுமி அருளைப்பெற்று நோய் அகன்று வளமுடன் வாழ அன்று இரவு "தீப ஒளி " வழிபாடு செய்யவேண்டும். குயவனின் சக்கிரம் சுழற்றி அடித்தாலும் அதன் நடுவில் பக்குவப்படுத்தப்பட்ட களிமண்ணை வைத்து பொறுமையாக சக்கிரத்தின் சோழற்சிக்கு உட்புக்கித்தினால் நாம் விரும்பிய உருவம் கிடைக்கும். இங்கே கால்சுழற்சியின் காரணத்தினால் ஏற்பட்ட மாற்றங்களில் இருந்து நாம் விடுபட அனைத்து இயக்கத்தின் அச்சாணியாக செயல்படும்சக்கிரம் மற்றும் அதன் இயக்கும் குயவன் இறைவனிடம் நம்மை சரணாகதி செய்தால் ,நம்மை தூக்கி எரிய கூடிய இந்த கால சுழற்சியிலும் இறைவனின் கைவர்ணத்தினால் நாம் விரும்பிய அருப்புதமான விளைவுகளை ஏற்படுத்தலாம் . இந்த நட்சத்திரத்தின் முக்கிய இயக்கமான ஒன்று கூட்டல் சேர்த்தல் இணைத்தல் போன்றவற்றின் சொரூபமாகவே இதன் அதிதேவதையாக இந்திராகினி [ இந்திரன் +அக்னி ] இருக்கிறார்.ஹோமத்தில் தேவர்களுக்கு அக்னியில் கூட்டு மூலிகைகள் போடபட்டு பிராத்தனை செய்யபடுகிறது.தேவர் கூட்டத்தின் சக்தியாக ஸ்ரீஇந்திரன் இருக்கின்றார் புலன்களின் கூட்டு சக்தியே நான் என்கின்ற அடையாளம் இருக்கிறது.இந்த நான் என்கின்ற இயக்கத்தின் பிரதிப்பளிப்பாகவே தேவேந்திரன் இருக்கின்றார் .
ஸ்ரீ சுப்ராமணியர் சூரபத்மனை அழிக்க படைகளுடன்
சென்று கூட்டாக போர் புரிந்தது அனைவரும் அறிந்ததே விருச்சிக லக்கினத்திற்கு நிதியின் அரசனாக இருக்ககூடிய குரு காலபுருஷ தத்துவத்தில் நீதியின் அரசனாக திகழ்கின்றார் இவர் விருச்சிக லக்கினத்தின் வரிய ீ வரிய ீ ஸ்தானத்தில் நீட்சத்தில் இருக்கிறார்,இது காலபுருஷ தத்துவத்தில் கரும ஸ்தானம் ஆகும் .இந்த நிலை அசுரனாக இருந்த பொழுது சூரபத்மனின் எழுச்சி நிலையை சுட்டிகாட்டுகிறது,சூரபத்மனின் அராஜகத்தில் இருந்து தப்பிக்க தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஸ்ரீ சிவனாரை பிராத்தித்து ஸ்ரீ சுப்ராமணியர் என்கின்ற மகாசக்தியை வெளிபடுத்தினார்களோ அதேபோல் விசாக நட்சத்திரத்தின் கூட்டு சக்தியை கூட்டாக நாம் பயன்படுத்தி இந்த விசாகநட்சத்திரத்தின் இயக்கத்தின் சொவரூபமாக இருக்ககூடிய ஸ்ரீசுப்ரமணியர் என்கின்ற மகாசக்தியை வெளிப்படுத்துவோம்,லக்கினாதிபதி வரிய ீ கிரகமான செவ்வாய் வரிய ீ ஸ்தானத்தில் உச்சமாக இருக்கின்றார் அவரே எதிரிகளை வழ்த்தக்கூடிய ீ ஆறாம் இடத்தின் அதிபதியாக வருகிறார்,இந்த ஆறாம் இடம் காலபுருஷ தத்துவத்தில் ஒன்றாம் இடமாக வருகிறது,இது சூரியன் உச்சம் பெரும் ஸ்தானமாக இருக்கின்றது,வரும் மாதம் சூரியன் உச்சம் அடைகிறார்.இந்த ஸ்தானத்தை உச்ச செவ்வாய் பார்த்துக்கொண்டு இருக்கின்றார். செவ்வாய் கிரகத்தின் அதி தேவதை ஸ்ரீ சுப்ரமணியர் . என் ஒன்பது செவ்வாய்க்கு உரியது . கால புருஷ தத்துவத்தில் ஒன்பதாம் வட்டின் ீ அதிபதியின் நட்சத்திரத்தில் லக்கினம் அமைக்க பட்டு உள்ளது . விருச்சிக லக்கணத்திற்கு ஒன்பதாம் வடு ீ குருவிற்கு உச்ச வடாக ீ அமைந்து உள்ளது . விருச்சிக லக்கணத்திற்கு ஒன்பதிற்கு உரிய சந்திரன் பத்தாம் வட்டில் ீ . காலபுருஷத்துவத்திற்கு ஒன்பதாம் வட்டிற்கு ீ உரிய குரு பத்தாம் வட்டில் ீ .
வெற்றியின் தோரண வாயிலை குறிக்கும் விசாகத்தில்
கூட்டு சேர்வோம் வெற்றியின் நாயகனை வரவழைத்து கொரோனா என்கிற சூரபத்மனை அடக்கி ஆழ்வோம் .