Professional Documents
Culture Documents
குறிப்பறிதல் அத்காரம் 110தின
குறிப்பறிதல் அத்காரம் 110தின
இந்த குறளில் வள்ளுவர் கூற வரும் கருத்தானது கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற
சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும் என்பதே.
பார்வையால் வசியம் செய்யாதே என்பதனை நாம் கேட்டிருப்போம், அத்தகைய சக்தியை நமது
கண்கள் கொண்டுள்ளது என்பது இக்குறளின் வழி நிருபிக்கப்பட்டுள்ளது. இதனையே சாலமன்
பாப்பையா நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில்
சரி பாதி அன்று அதற்கு மேலாம் என்று குறிப்பிட்டுள்ளார். காதலர்களில் சொல்லால் பேசவிடினும்
கண்ணால் பேசுவதே அவர்கள் மனதில் இருக்கும் அன்பின் அழகாக திகழ்கிறது.
என்று நாயனார் என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள்
வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும் என்று பொருள்பட உரைத்துள்ளார். பெண்கள்
நாணத்திடன் செய்ல்பட வேண்டும் என்பதற்கு இக்குறள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று
கூறலாம். ஒரு பெண்ணாவல் தன் தலைவனிடத்தில் சற்று வெட்கம் கொண்டிருப்பது அவள் அவன்
மேல் வைத்திருக்கும் அன்பை மட்டும் பிரதிபளிப்பதில்லை மாறாக அவள் அவன்பால்
மறியாதையும் கொண்டுள்ளாள் என்று உணர்த்தும் இதைப்போல் இக்காலத்திலும் பெண்களின் தன்
இயல்பிலிருந்து மாறாமல் தான் இருக்கின்றனர் என்றால் மிகையில்லை. இதனையே கலைஞர்
கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல்
அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது என்று பொருளுரைக்கின்றார்.
என்று பொய்யாமொழிப் புலவர், யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான்
நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள் என்று ஒரு பெண்ணின்
குணாதிசியங்களை எடுத்துரைகிறார். பெண்ணானவல் தன் தலைவனிடத்தில் கூட அவன் கண்
நோக்க வெட்கம் கொள்ளும்படியாக இருக்க வேண்டும் என்கிறார். இன்றளவும் கூட பெண்கள்
தனக்குரியவரிடம் பணிந்து பேசுதலுக்கு இனங்க இக்கூற்று பொருந்தி வரும். இதனையே சாலமன்
பாப்பையா தன்னுடைய விளக்க உரையில் நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப்
பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள் என்பதனை
ஒரு காட்சியான வெளிப்படுத்தியுள்ளார்.