You are on page 1of 5

குறிப்பறிதல் அதிகாரம் 110 தின் வழி வள்ளுவப் பேராசான் எடுத்துரைக்கும் செய்திகள்

இன்றளவும் உயிர்ப்பித்துள்ளன என்பதை


குறள்வழி மதிப்பீடு செய்க.

திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.
திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யாமொழிப் புலவர் என்றும்
பல சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும்
முப்பாலையும் அழகாக எடுத்துரைக்கிறது. வாழ்கையின் அனைத்து பகுதிகளையும் எடுத்துரைக்கும்
ஒரு சிறந்த வாழ்வியல் நூலாகும். சாதி, மதம், மொழி, நாடு என்று வேறுபாடு இல்லாமல் மக்கள்
அனைவருக்கும் பொருந்துவதாக உள்ளதால் உலக பொது மறை என்று அழைக்கப்படுகிறது.
தெய்வநூல், பொய்யாமொழி,தமிழ் மறை,முப்பால் என்று வேறு பெயர்களும் உண்டு. திருக்குறளில்
133 அதிகாரமும், அதிகாரத்துக்கு 10 குறளும் மொத்தம் 1330 குறளும் அடங்கியுள்ளது.
ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளையும் ஏழு சீரும் கொண்ட வெண்பாவாகும். இதில்
காமத்துபாலில் குறிப்பறிதல் அதிகாரம் 110 தின் வழி வள்ளுவப் பேராசான் எடுத்துரைக்கும்
செய்திகள் இன்றளவும் உயிர்ப்பித்துள்ளன என்று கூறினால் அது மிகையாகது.

முதலில் குறிப்பறிதல் அதிகாரதில்,

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

எனும் 1091 குறளின் வழி தெய்வப்புலவர் இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது


இருவகைப்பட்ட நோக்கமாகும் மற்றும் அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்,
மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும் என்று உணர்த்துகிறார். அதாவது காதலின் மையூட்டப்பட்ட
கண்களில் காதலன் மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் காதலனுக்கு
துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது. இந்த காலத்திலும் நாம்
இதனை உணரலாம். அதாவது நாம் நேசிப்பவர்கள் தான் நமக்கு கஷ்டத்தைத் தருவார்கள்
ஆனால் அவர்களே அந்தக் கஷ்டத்தைத் தீர்த்துவிடுவார்கள் கஷ்டத்தைத்.

தொடர்ந்து, அதே குறிப்பறிதல் அதிகாரதில்,

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது

எனும் 1092 குறளின் மூலம் பொய்யாமொழிப் புலவர் கண்ணால் என்னை நோக்கிக் களவு
கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்
என்று பாரைசாற்றுகின்றார். அதாவது காதலன் பார்க்காதபோது, அவனைக் களவாக பார்க்கும்
காதலின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம் என மிக அழகாக நமக்கு
தெரிகிறது.

இதயே யாத்தே யாத்தே எனும் பாடலில் நா. முத்துகுமார் அவர்கள்

உயிர் நாடியில் பயிர் செய்கிறாய்

சிறு பார்வையில் எனை நெய்கிறாய்

எனும் பாடல் வரி மூலம் வலியுறுத்தியுள்ளார் இக்காலத்தையோட்டி பார்த்தால் நாம் நேசிப்பவர்கள்


நமக்கு சிறு உதவி செய்தாலும் அது எல்லாத்தையும் விட பெரிதாகும்.

மேலும், இந்த அதிகாரத்தில் வள்ளுவப் பேராசான்,

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்

என்ற 1093 குறளால் என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது
அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும் என்கிறார். அதாவது தலைவன்
பார்க்காதபோது, தலைவி பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல்
அவர்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும் என்பதாகும். இக்காலத்தையோட்டி
பார்த்தால் பெண்கள் இன்றளவு காதலன் அல்லது கணவனை பார்த்து வெட்க்கம் கொள்கிறார்கள்.

பின்பு பெருநாவலர் இந்த அதிகாரத்தில்,

யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்

தானோக்கி மெல்ல நகும்

எனும் 1094 குறளின் வழி யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான்
நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள் என்பதனை அழகாக
கூறுகிறார். அதாவது காதலன் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள்,
காதலன் பார்க்காதபோதோ அவனைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள் என்பதாகும்.
இதயே கலைஞர் நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது
என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை
அறிவிக்கும் குறிப்பல்லவா? என்கிறார்.

இதனை அடுத்து நாயனார் இதே அதிகாரத்தில்,

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்

எனும் 1095 குறளின் மூலம் என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல்,
ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள் என்கிறார். அதாவது
நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல அவனைப் பார்த்துப்
பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள் என்று பொருள்படும். இதயே அவள் என்னை நேராக
உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை
நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள் என்கிறார்.

பின்பு திருவள்ளுவர் இந்த அதிகாரத்தில்,

உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்

எனும் 1096 குறளின் வழி புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும்,
அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும் என்கிறார். அதாவது காதலி
யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது
சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும் என்பதாகும். இதயே கலைஞர் காதலை மறைத்துக்
கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு
கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும் என்றார்.

மேலும் குறிப்பறிதல் அதிகாரதில்,

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன் றுற்றார் குறிப்பு

எனும் 1097 குறளின் வழி தெய்வப்புலவர் கை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல்


பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின்
குறிப்பாகும் என்கிறார். அதாவது கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற
பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள் என்பதாகும். இதயே
கலைஞர் பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும்,
வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம்
காட்டும் குறிப்புகளாகும் என்கிறார்.

மேலும் பெருநாவலர் இந்த அதிகாரத்தில்,

அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்

எனும் 1098 குறளின் வழி யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச்
சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது
என்கிறார். அதாவது யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க,
அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு
குறிப்பு இருப்பது தெரிகிறது என்பதாகும். இதயே கலைஞர் நான் பார்க்கும் போது என் மீது பரிவு
கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய
பொலிவுடன் தோன்றுகிறாள் என்கிறார்.

தொடர்ந்து, அதே குறிப்பறிதல் அதிகாரதில்,

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள

எனும் 1092 குறளின் மூலம் பொய்யாமொழிப் புலவர் புறத்தே அயலார்போல் அன்பில்லாத


பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்
என்கிறார். அதாவதது முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம்
இருக்கும் குணந்தான் என்பதாகும் . இதயே கலைஞர் காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு;
அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப்
பார்த்துக்கொள்வர் என்கிறார்.

இறுதியாக இந்த குறிப்பறிதல் அதிகாரதில்,

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல

எனும் 1092 குறளின் மூலம் திருவள்ளுவர் கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு
செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன என்கிறார். அதாவது
காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு
வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை என்பதாகும். இதயே கலைஞர் ஒத்த அன்புடன்
கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன
என்கிறார்.

You might also like