எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து துவையல் கறியுடன் ஊட்டு கின்றது?
உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனுன்
மொழியில் பழியை ஏற்றுவ தில்லை தமிழால் தமிழன் தாழ்ந்துபோ னானாம் தமிழ்தான் இவனைத் தலையெடுக் காமல் தரையொடு தரையாய்ச் சிறைப்படச் செய்த்தாம் இப்படி யாஇவன் செப்பித் திரிவது ஒப்பிடும் செய்தியா அப்படிச் சொல்வது
தாயா அருமைச் செயினுக் கெதிராய்த்
தீயாய் மாறித் தீய்க்க முனைவாள் மொழிநம் உணர்வு மொழிநம் உயிர்ப்பு மொழிநம் உரிமை வாழ்வைப் பெறவா முடியும்
மொழிநம் உரிமை காக்கும் பட்டயம்
உரிமை வாழ்வை உலகில் இழந்தவர் பெருமை வாழ்வைப் பெறவா முடியும் மொழிநலம் ஒன்றே இனநலம் காக்கும் மொழிக்காப் பொன்றே இனநலம் காக்கும் மொழிநலம் ஒன்றே இனநலம் காக்கும் மொழிக்காப் பொன்றே இனக்காப் பாகும் தமிழ்இந் நாட்டில் தழைப்பதும் இளைப்பதும் தமிழ்மா ணவர்தம் தங்கக் கைகளில் தமிழைப் படிப்பதே தமிழை வளர்க்கும் இமயச் செயலாம் என்மா ணவரே!