செப்பமோடு தூயதமிழ் வழங்கல் வேண்டும்! முந்தைவர லாறறிந்து தெளிதல் வேண்டும்! முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும்! வந்தவர்செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம் னோக்கிநடை யிடல்வேண்டும்! தமிழ்தான் வாழும்!