விடுகின்றன. ஒன்று மட்டும் தெளிவு, நாம் என்ன செய்தாலும் இயற்கையின்
பேரழிவுகளை தடுக்க முடியாது. கடல்கோளையும், நிலநடுக்கத்தையும் தடுக்கவாமுடியும்? வெள்ளத்தையும், பஞ்சத்தையும் நிறுத்தவா முடியும்?
ஆனால், ஒன்று செய்யலாம்... இவற்றின் பாதிப்புகளை நம்மால் குறைக்க
முடியும். ஆம், மனிதர்களாகிய நாம், எப்பொழுதும் விழிப்புணர்வோடு இருத்தல் அவசியம். இயற்கைகை பேணி காக்க வேண்டும். சிறுவயதிலிருந்தே மாணவர்களுக்குப் பள்ளியில் இயற்கையின் பாதுக்காப்பைப் பேணும் வழிமுறைகளைக் கற்று தருதல் அவசியமாகும். பெற்றோற்களும் தங்களின் பிள்ளைகளுக்குச் சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்கவும், தொற்று நோய்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும் கற்று தர வேண்டும். மேலும், அரசாங்கமும் இதன் முக்கியத்துவத்தை அறிந்து மக்களிடையே அவப்போது விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடத்தப்பட வேண்டும். “ஒரு கை தட்டினால் ஓசை வராது” என்பதற்கு ஏற்ப்ப ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் செயல் பட்டால் கண்டிப்பாக இயற்கை சீற்றங்களிருந்து வரும் பெரும் ஆபத்தைக் குறைக்கலாம். இயற்கையோடு மகிழ்ச்சியாக வாழலாம்.