You are on page 1of 3

எழுதிகம் பெயர்க்காரணம்:

‘எழுதிங்கள்’ என்ற சொல்லின் திரிபு ‘எழுதிகம்’ எனலாம் ஏழு + திங்கள் =


எழுதிங்கள் ஆகும்.

‘ஏழு’ என்பது எண்ணையும் ‘திங்கள்’ என்பது மாதத்தையும் குறிக்கிறது. இச்சாங்கியம் ஏழு மாதம்
விரதம் இருந்து செய்வதினால் ‘எழுதிங்கள் சாங்கியம்’ எனப்பெயர் பெற்றது எனலாம்.

தற்போது பௌர்ணமி நாளன்று மட்டும் விரதமிருந்து எழுதிகச் சாங்கியம் நிகழ்த்துகின்றனர்.

எழுதிகம் செய்து கொள்ளும் நாள் மட்டும் விரதம் இருப்பதும் நடைமுறையில் காணப்படுகிறது.

எழுதிகச் சாங்கியம் நிகழ்த்துபவர்கள்:

புடவைக்காரர்3, சாங்கியக்காரம்மாள்4 ஆகிய இருவரும் சாங்கியம் கொங்கு நாட்டுப்புறவியல்


செய்ய தகுதிப் பெற்றவர்கள் ஒவ்வொருபிரிவிலும் அந்தப்பிரிவினரே சாங்கியம் செய்கின்றனர்.
இச்சாங்கிய நிகழ்த்துதலில் நாவிதர், ஏகாலி, சக்கிலியர் ஆகியோரும் கவுண்டர்களின்
பங்கேற்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சாங்கியப் பணிகள்
கொடுக்கப்பட்டுள்ளன. நாவிதருக்கு ‘பேழைக் கூடை5 தூக்கும் பணியும், ஏகாலி ‘பந்தம்6 பிடிக்கும்
பணியும், சக்கிலியருக்கு சாங்கியப் பெண்ணிற்குச் செருப்பு அணிவிக்கும் பணியும்
கொடுக்கப்பட்டுள்ளன. இச்சாங்கியம் இவர்களின் துணையோடு ‘பெண்’ணின் தாய் வீட்டில், இரவு
நேரத்தில் நிகழ்த்தப்படுகிறது.

எழுதிகச்சாங்கியம் நிகழ்த்தும் முறை:

ஒரு பெண்ணிற்கு அப்பெண்ணின் தாய்வீட்டார் எழுதிகச் சாங்கியம் செய்ய முடிவு செய்கின்றனர்.

நல்லநாள் அறிந்து இச்செய்தியைப் பெண்ணின் புகுந்தவீட்டிற்குத் தெரிவிக்கின்றனர். தாய்வீட்டார்


சாங்கியப் பெண்ணிற்கும் அவளது குடும்பத்திற்கும் துணிமணிகள் எடுக்கின்றனர். புடவைக்காரர்,
சாங்கியகாரம்மா, நாவிதர், ஏகாலி, சக்கிலியர் ஆகியோருக்கும் வெற்றிலை பாக்கு கொடுத்து இச்
செய்தியை அறிவிக்கின்றனர்.

சாங்கியம் நிகழும் இடத்தில் ‘முகூர்த்தக்கால்” இட்டு பந்தல் போடுகின்றனர்.

அவ்விடத்தை மெழுகிக் கோலம் போட்டு அதற்குப் புற்று மண்ணால் கரைக்கட்டுகின்றனர்


குழவிக்கல், உரல், ‘நுவத்தடி9, கோடாலி போன்றப் பொருட்களைச் சேகரிக்கின்றனர். தாய்
வீட்டிலிருந்து யாரேனும் ஒருவர் பெண் வீட்டிற்குச் சென்று அவரை அழைத்து வருகின்றனர். பெண்
வீடடு
் உறவிளரும், தாய்வீடடு் உறவினரும் சாங்கிய நிகழ்விடத்திற்கு வருகின்றனர்.

வீட்டினுள்ளும் சாங்கியம் நிகழும் பந்தலடியிலும் விளக்கேற்றுகின்றனர். புடவைக்காரர் பந்தலடியில்


விளக்கிற்கருகில் சாணிப் பிள்ளையாருக்கு அருகம்புல் குத்திவைக்கின்றார். அதன் மீது மஞ்சளும்
பூவும் தூவுகின்றனர். சாங்கியக்காரம்மாள் சமைக்கப்பட்ட பச்சரிசிச் சோற்றில் சுண்ணாம்பும்
மஞ்சளும் கலந்து ஒன்பது உருண்டைகளாகப் பிரிக்கின்றார். கம்பு மாவினால் ஆன
கொழுக்கட்டையைத் தயார் செய்கின்றனர். சுருப்பட்டி பதித்து வைத்துத் தினை மாவினை
‘பிரிமனை11 மீது வைக்கின்றனர். நாவிதர் ‘விரிக்கட்டு12 மூட்டையை வீட்டினுள் போடுகின்றார்.
கோடாலிக்குச் சிகப்புத் துணிக் கட்டுகின்றார். உரல், நுவத்தடி, கோடாலி மற்றும்
பாத்திரங்களுக்குத் திருநீறு, சந்தனம், சிகப்பு பொட்டுகளை வைக்கின்றார். புடவைக்காரர் அரசு
இலை, ‘மஞ்சள் கோம்பு” இரண்டையும் மஞ்சள் கலந்த வெள்ளை நூலில் சுட்டுகின்றார். நாவிதர்
ஒவ்வொரு பாத்திரத்திற்கும். ஒவ்வொரு பொருளுக்கும் அரசு இலை மஞ்சள் கொம்பாலாள
கயிற்றைக் கட்டுகின்றார். ஏகாலி ‘பந்தம்’ பிடித்துக்கொண்டிருக்கிறார்.

வீட்டினுள் போடப்பட்டிருக்கும் விரிக்கட்டின் மீது சுமங்கலிப் பெண்ணையும் அவளது தோழியையும்


அமரச்செய்து பின்னர் அவர்களை ‘விரிக்கட்டிலிருந்து’ சாங்கிய நிகழ்விடத்திற்கு அழைத்து
‘முக்காலியில் கிழக்குப் பார்த்து அமரவைக்கின்றனர். புடவைக்காரர் சோற்றில் நெய்கலந்து
பிசைந்து அவர்களுக்குப் பொட்டு வைக்கிறார். கற்பூரம் காட்டிய பிறகு அதைக்கையால் ‘வழித்து’த்
தள்ளிவிடுகிறார். பின்னர் ‘சருவுசட்டி’ யைப் பெண்ணின் தலைக்கு மேல்பிடித்து ஒரு செம்புத்
தண்ணரை ீ மூன்றுமுறை ஊற்றுகின்றார். புடவைக்காரர் செய்ததைப்போல் இரண்டு
சாங்கியக்காரம்மாக்களும் அந்தப் பெண்ணிற்குச் செய்கின்றனர். பின் பெண்ணிற்குச்
சாம்பிராணிக் கரண்டியில் நெய்ப்புகைக் காட்டுகின்றனர். பிறகு மூன்று செஞ்சோற்று
உருண்டைகளைப் புடவைக்காரர் பெண்ணிற்குச் சுற்றிப்போடுகின்றார். நாவிதர் ‘புளியாக்கை” யைப்
பெண்ணின் தலைமேல் பிடிக்க புடவைக்காரர் அது வழியாக நீர் ஊற்றுகின்றார். நீர் ஊற்றியதும்
நாவிதர் புளியாக்கையைப் பெண்ணின் உடல் வழியாக கீழே இறக்குகின்றார். இதே போன்று
இரண்டு சாங்கியக்காரம்மாக்களும் செய்கின்றனர். இறுதியாக நாவிதர் மூன்று
புளியாக்கையையும் பிய்த்துப் போடுகின்றார்.

புடவைக்காரரும், சாங்கியக்காரம்மாக்களும் பெண்ணின் முகத்தில் மஞ்சள் பூசுகின்றனர். பிறகு


பெண்ணின் தலையில் மூன்று செம்புத்தண்ணீர் ஊற்றுகின்றனர். பின்பு அப்பெண் குளித்துவிட்டு
ஏகாலி கொடுத்த பழைய சீலையைக் கட்டிக்கொள்கிறாள். இப்பழைய சீலை ‘வண்ணான் மாத்து’
என அழைக்கப்படுகிறது.

“தோழி” சாங்கியக்காரம்மாளுடன் நுவத்தடி மீது குதிகால் படும்படி நிற்கிறாள். மற்றொரு


சாங்கியகாரம்மா பெண்ணிற்கு சிசுப்பை (குங்குமம்) இடது நெற்றியிலிருந்து வலது நெற்றி வரை
பூசுகின்றார். புடவைக்காரர் பெண்ணின் தொண்டைப் பகுதியில் நெய்விடுகிறார். அது தொப்புளை
நோக்கி வரும்போது சாங்கியகாரம்மா துடைத்து விடுகின்றார். அதேபோன்று முதுகு
தண்டுவடத்தின் மேல் பகுதியில் நெய்விடுகின்றனர். தண்டு வடத்தின் கீழ் பகுதிக்கு வரும்போது
துடைத்து விடுகின்றார்.

பெண் ஒரு குழந்தையையும், தோழி ஒரு குழவிக்கல்லையும் இடுப்பில் வைத்துக்கொண்டு


சாங்கியப் பந்தலைச் சுற்றி வருகின்றனர். மூன்றாவது சுற்றில் பெண் உரலை உதைத்துத் தள்ளிவிட்டு
‘விரிக்கட்டில்! தோழியுடன் அமர்கிறாள். சாங்கியக்காரம்மா இருவரிடமிருந்து குழந்தையையும்,
குழவிக்கல்லையும் பெற்றுக் கொள்கின்றனர். பெண், தோழி, சாங்கியகாரம்மாவில் ஒருவர் ஆகிய
மூவரும் மீண்டும் நுவத்தடியில் அமருகின்றனர். மூவருக்கும் வாழைஇலை போட்டு
கொழுக்கட்டையைப் பரிமாறுகின்றனர் கொழுக்கட்டையை உண்டு விரதம் முடிந்ததும் பெண்
குளிக்கச் செல்கிறாள்.

ஏகாலி விரித்த துணியில் சாங்கியக்காரம்மாவில் ஒருவர் ஒரு செம்புத் தண்ணீர், தேங்காய், பழம்
ஆகியனவற்றை வைத்து முக்காலியில் அமருகின்றார்.தாய் வீடட ் ார் சீர்வரிசைகளை அவர்முன்
வைக்கின்றனர். இவ்வாறு வைக்கப்பட்ட பொருட்களின் பெயர்களை நாவிதரின் மனைவி உரக்கக்
கூறுகின்றார் பெண் சீரவ
் ரிசைகளைப் பெற்றுக் கொள்கின்றாள். பிரிமனையின் மீது கருப்பட்டியைப்
பொதித்து வைத்த தினை மாவுருண்டையை பேழைக் கூடையில் நாவிதர் எடுத்து வைக்கின்றார்.
சிகப்புத் துணி சுற்றிய கோடாரியால் பெண், புடவைக்காரர், சாங்கியகாரம்மாக்கள், நாவிதர் ஆகிய
ஐவர் சேர்ந்து தினைமாவினைத் துண்டாக்குகின்றனர். துண்டான மாவை ‘ஏகாலி’ துணியோடு
எடுத்து வைத்துக் கொள்கின்றார். பெண் தன் கணவன் வீட்டிற்குச் செல்லும் போது சக்கிலியர்
அவருக்குச் செருப்பு அணிவிக்கிறார். தாய் வீடட ் ார் பெண்ணை மீண்டும் அவளது கணவன் வீட்டில்
சேர்கக் ின்றனர். அடுத்தநாள் பெண் வீட்டிலிருந்து கோவிலுக்குச் செல்கின்றனர். இதுவே எழுதிகம்
நடைபெறும் முறையாகும்.

நம்பிக்கைகள்:

எழுதிகச்சாங்கியம் செய்து கொள்ளவில்லை என்றால் குலம் விருத்தியடையாது. எழுதிக நிகழ்வில்


நெய்விடும்போது நேராகவராமல் பக்க வாட்டில் சென்றாலும், தினைமாவில் இருக்கும் கருப்பட்டி
‘வேத்திருந்தாலும்”18 அப்பெண்ணிற்கும், அக்குலத்திற்கும் துன்பம் நேரிடும் என்பது மக்களின்
நம்பிக்கையாகும். மேலும், இச்சாங்கியம் செய்து கொண்ட பெண் குழந்தை
பெற்றுக்கொள்ளக்கூடாது என்றும், குழந்தை பெற இயலாத பெண் இச்சாங்கியம் செய்து
கொள்ளக்கூடாது. என்றும் கருதுகின்றனர்.

ஆய்வுப்பார்வை

எழுதிகச் சாங்கியத்தில் நிகழ்த்தப்படும் உரல் உதைத்தல், தினைமாவுபிளத்தல், குழந்தையைத்


தூக்கிச் சுற்றுதல் போன்ற நிகழ்வில் குறியீட்டுத் தன்மைகள் காணப்படுகின்றன. பிராய்டின்
உளப்பகுப்பாய்வு நோக்கில் உரலும், உலக்கையும் பெண்குறி, ஆண்குறிகளாகவும் இரண்டும்
இணைவது உடலுறவாகவும் கருதப்படுகின்றது. இக்கருத்தின்படி இச்சாங்கியத்தில் உரலை
உதைத்துத் தள்ளுதல் என்பது ஆணும் பெண்ணும் உடலுறவுக்கொள்வதை கட்டுப்படுத்துவதாகக்
கொள்ளலாம்.

தினைமாவினுள் புதைத்து வைக்கப்பட்டுள்ள சுருப்பட்டி பெண்ணின் கருப்பையில் கருவாக வளரும்


குழந்தையின் குறியீடு பேற்றினைத் தடை செய்வதாகக் கொள்ளலாம். இக்கருத்தினை எழுதிகச்
சாங்கியம் செய்து கொண்ட பெண்கள் குழந்தைப்பேறு அடையக் கூடாது என்பது இச்சாங்கியத்தின்
மீதான விதி இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றது.

இப்பெண்களே இச்சமுதாயத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகளை நிகழ்த்தும் தகுதி


கொண்டவர்கள் எனச் சமூகம் இவர்களுக்கு ஒரு தகுதியை வழங்கினாலும் கணவனை
இழந்தவளோ, குழந்தையைப் பெற்றெடுக்காத பெண்ணோ இச்சாங்கியம் செய்து
கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு பெண் கருத்தரிப்பு செய்வதைத் தடைசெய்வதாக உள்ளது.
அதாவது, எழுதிகச் சாங்கியம் என்பது கொங்கு நாட்டுக் கவுண்டர்களின் ஒரு தனிப்பட்ட
வாழ்வியல் சடங்காக இருந்தாலும் அது ஒரு பெண்ணின் குழந்தைப் பேற்றினைத் தடைசெய்வதாக
அமைந்துள்ளது எனலாம் இது ஒரு பெண்ணிற்கு குறிப்பிட்டதொரு சமூகத் தகுதியை
வெளிப்படையாக வழங்குவதன் மூலம் கருத்தடையை மறைமுகமாகப் பொதிந்து வைத்துள்ளது
எனலாம்.

You might also like