You are on page 1of 3

கர்வம் கொண்ட ஆடு

அஃது ஒரு அழகிய கிராமம். அக்கிரமாம் மலையடிவாரத்தின் அருகே அமைந்துள்ளது. அதன்


அருகே அழகிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. பச்சைப் பசேல் என்று புற்கள் வளர்ந்திருந்தது.

மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கு ஆடுகளும் மாடுகளும் மேய வரும்.


அங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. உடல் பருத்து, கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக்
கொண்டு நின்றன. அதைப் பார்த்து மற்ற ஆடுகள் பயந்து ஒதுங்கிப் போய்விடும். அதனால் அந்த
முரட்டு ஆட்டுக்கு திமிர் வந்து விட்டது. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு
ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும்.

ஒரு நாள், ஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த
முதலையைப் பார்த்து விட்டு பயந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தது. பயந்து ஓடி
வந்த அந்த ஆடு முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது.

அதைப் பார்த்த முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, “நான் மேய்ந்து கொண்டிருக்கும்
இடத்திற்கு நீ எப்படி வரலாம்” என்று கோபமாகக் கேட்டது. அதற்கு அந்த ஆடு, “அங்கே
முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன்” என்று அமைதியாக
சொன்னது.

முரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டை போட
ஆரம்பித்தது. அந்த ஆடோ சண்டைப் போட விரும்பாமல் சமாதானமாகவே பேசியது. முரட்டு
ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன்
எதிர்த்து நின்று ஆக்ரோஷமாக சண்டையிட்டது.

இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி


உருண்டு போய் ஆற்றில்விழுந்தது.
ஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை
கவ்விக் கொண்டு ஆற்றினுள்ளே சென்று விட்டது.

தானே பெரியவன் என்ற கர்வம் ஏற்பட்டால் இதுதான் கதி.


தேசிய வகை சரஸ்வதி தமிழ்ப்பள்ளி

47000 சுங்கை பூலோ, சிலாங்கூர்.

பெயர் : ரியாஷினி த/பெ மகேஸ்வரன்

வகுப்பு : 2 ரோஜா

தலைப்பு : கர்வம் கொண்ட ஆடு

You might also like