You are on page 1of 2

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,

உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.

உம்முடைய இராட்ச்சியம் வருக.

உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,

பூலோகத்திலும் செய்யப்படுவதாக.

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.

எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல,

எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.

எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்.

தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே.


பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்வர் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

அர்ச்சிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக


இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக !

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.

நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும்.

எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும்.

உமது இரக்கம் யார் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களை மோட்சம் கொண்டு


சேர்த்தருளும்.

You might also like