Professional Documents
Culture Documents
Mass Songs 1
Mass Songs 1
Entrance Song:
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் (2)
அவர் பலியினில் கலந்திட
அவர் ஒளியினில் நடந்திட (2)
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம்
Dhyanam Song:
உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா (2)
எந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண்தணலிலும் மனம் குளிரும் (2)
உந்தன் கண்களின் இமைபோல்
எந்நாளும் என்னைக் காத்திடு என் இறைவா
உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா
Offeratory Song:
பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (2)
சொந்தம் பந்தமுமெல்லாம் நீயே எனச் சொல்லி வந்தேன்
எந்தையும் என் தாயும் நீயன்றோ
நீயே என்னையாளும் மன்னவனன்றோ
பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
Communion Song:
என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது
என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி
மகிழும் வேளையிது (2)
என் தவம் நான் செய்தேன்
என் நன்றி நான் சொல்வேன் (2)
என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது
என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி
மகிழும் வேளையிது
Closing Song:
என்ன சொல்லிப் பாடுவேன்
என்ன சொல்லிப் போற்றுவேன்
எனக்குச் செய்த நன்மை எண்ணியே (2)
என்ன சொல்லிப் பாடியும் என்ன சொல்லிப் போற்றியும்
ஈடு இணை உனக்கு இல்லையே
ஐயா ஈடு இணை உனக்கு இல்லையே
நன்றி தந்தையே நன்றி இயேசுவே வழிநடத்தும் தூய ஆவியே (2)
என்ன சொல்லிப் பாடுவேன்
என்ன சொல்லிப் போற்றுவேன்
எனக்குச் செய்த நன்மை எண்ணியே (2)