You are on page 1of 6

Mass songs for Feb 3 2024

Entrance Song:
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் (2)
அவர் பலியினில் கலந்திட
அவர் ஒளியினில் நடந்திட (2)
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம்

1. தேடியே தேவன் வருகிறார்


தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மைத் தாங்குவார்
துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் (2)
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் (2)

2. அன்பினால் உலகை ஆளுவார்


ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார்
ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் (2)
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் (2)
அவர் பலியினில் கலந்திட
அவர் ஒளியினில் நடந்திட (2)
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம்

Dhyanam Song:
உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா (2)
எந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண்தணலிலும் மனம் குளிரும் (2)
உந்தன் கண்களின் இமைபோல்
எந்நாளும் என்னைக் காத்திடு என் இறைவா
உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா

1. பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்


மன்னிப்பில் பனிபோல் கரையும் (2)
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும் (2)
உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா

2. வலையினில் விழுகின்ற பறவை


அன்று இழந்தது அழகிய சிறகை (2)
வானதன் அருள் மழை பொழிந்தே
நீ வளர்த்திடு அன்பதன் உறவை (2)

உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை


அரவணைத்திடு இறைவா (2)
எந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண்தணலிலும் மனம் குளிரும் (2)
உந்தன் கண்களின் இமைபோல்
எந்நாளும் என்னைக் காத்திடு என் இறைவா
உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா

Offeratory Song:
பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (2)
சொந்தம் பந்தமுமெல்லாம் நீயே எனச் சொல்லி வந்தேன்
எந்தையும் என் தாயும் நீயன்றோ
நீயே என்னையாளும் மன்னவனன்றோ
பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

1. நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ என்


நிம்மதி இழந்து நின்றேன்
வளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி நான்
அளவில்லா பாவம் செய்தேன்
தனது இன்னுயிரைப் பலியெனத் தந்தவரே
உனக்கு நான் எதையளிப்பேன்
இன்று உனக்கு நான் எனையளித்தேன்
பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

2. வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்


ஒழிந்திட உழைத்திடுவேன்
அமைதியும் நீதியும் அன்பும் அறமும்
நிலைத்திட பணி செய்வேன்
உன்னத தேவனே உமதருட்கருவியாய்
உலகினில் வாழ்ந்திடுவேன் என்றும் உன்னிலே வாழ்ந்திடுவேன்

பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை


உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (2)
சொந்தம் பந்தமுமெல்லாம் நீயே எனச் சொல்லி வந்தேன்
எந்தையும் என் தாயும் நீயன்றோ
நீயே என்னையாளும் மன்னவனன்றோ
பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

Communion Song:
என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது
என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி
மகிழும் வேளையிது (2)
என் தவம் நான் செய்தேன்
என் நன்றி நான் சொல்வேன் (2)
என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது
என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி
மகிழும் வேளையிது

1. பசியால் வாடும் ஏழையின் நிலையில்


பாவி நான் நின்றிருந்தேன்
பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி
அருளமுதை ஈந்தார்
பசியால் வாடும் ஏழையின் நிலையில்
பாவி நான் நின்றிருந்தேன்
பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி
அருளமுதை ஈந்தார்
அருளமுதை ஈந்தார்
என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது
என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி
மகிழும் வேளையிது

2. ஆயிரம் குறைகள் என்னிடம் கண்டும்


அணைத்திடவே வந்தார்
ஆண்டவர் இயேசு அன்பினால் என்னை
மாற்றிடவே வந்தார்
ஆயிரம் குறைகள் என்னிடம் கண்டும்
அணைத்திடவே வந்தார்
ஆண்டவர் இயேசு அன்பினால் என்னை
மாற்றிடவே வந்தார்
மாற்றிடவே வந்தார்

என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது


என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி
மகிழும் வேளையிது (2)
என் தவம் நான் செய்தேன்
என் நன்றி நான் சொல்வேன் (2)
என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது
என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி
மகிழும் வேளையிது

Closing Song:
என்ன சொல்லிப் பாடுவேன்
என்ன சொல்லிப் போற்றுவேன்
எனக்குச் செய்த நன்மை எண்ணியே (2)
என்ன சொல்லிப் பாடியும் என்ன சொல்லிப் போற்றியும்
ஈடு இணை உனக்கு இல்லையே
ஐயா ஈடு இணை உனக்கு இல்லையே
நன்றி தந்தையே நன்றி இயேசுவே வழிநடத்தும் தூய ஆவியே (2)
என்ன சொல்லிப் பாடுவேன்
என்ன சொல்லிப் போற்றுவேன்
எனக்குச் செய்த நன்மை எண்ணியே (2)

1. கண்ணீர் துடைத்ததைச் சொல்லிப் பாடவா


கவலையில் அணைத்ததைச் சொல்லிப் பாடவா
வீழ்ந்தேன் தூக்கியதைச் சொல்லிப் பாடவா
சாய்ந்தேன் தாங்கியதைச் சொல்லிப் பாடவா
நன்றி தந்தையே நன்றி இயேசுவே
வழிநடத்தும் தூய ஆவியே (2)
என்ன சொல்லிப் பாடுவேன்
என்ன சொல்லிப் போற்றுவேன்
எனக்குச் செய்த நன்மை எண்ணியே (2)
என்ன சொல்லிப் பாடியும் என்ன சொல்லிப் போற்றியும்
ஈடு இணை உனக்கு இல்லையே
ஐயா ஈடு இணை உனக்கு இல்லையே

2. வாழ்வு தந்ததைச் சொல்லிப் பாடவா


வளமை நிறைந்ததைச் சொல்லிப் பாடவா
ஊக்கம் தந்ததைச் சொல்லிப் பாடவா
உறுதி செய்ததைச் சொல்லிப் பாடவா
நன்றி தந்தையே நன்றி இயேசுவே வழிநடத்தும் தூய ஆவியே (2)
என்ன சொல்லிப் பாடுவேன்
என்ன சொல்லிப் போற்றுவேன்
எனக்குச் செய்த நன்மை எண்ணியே (2)
என்ன சொல்லிப் பாடியும் என்ன சொல்லிப் போற்றியும்
ஈடு இணை உனக்கு இல்லையே
ஐயா ஈடு இணை உனக்கு இல்லையே
நன்றி தந்தையே நன்றி இயேசுவே வழிநடத்தும் தூய ஆவியே (4)

You might also like