You are on page 1of 23

Worship Songs

எனக்காய் ஜீவன் விட்டவரே


என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னை சந்திக்க வந்திடுவாரே
இயேசு போதுமே
இயேசு போதுமே
எந்த நாளிலுமே என் நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே
இயேசு போதுமே
1. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன்செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே
இயேசு போதுமே
இயேசு போதுமே
எந்த நாளிலுமே என் நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே
இயேசு போதுமே
2. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்
இயேசு போதுமே
இயேசு போதுமே
எந்த நாளிலுமே என் நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே
இயேசு போதுமே
3. மனிதர் என்னை கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்
இயேசு போதுமே
இயேசு போதுமே
எந்த நாளிலுமே என் நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே
இயேசு போதுமே
பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே (2)
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்(2)
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை (2)
நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி (2) – கல்வாரியின்
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்(2)
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை (2)
ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்
ஆலய மாக்கியே இப்போ
ஆசீர்வதித்தருளும் (2) – கல்வாரியின்
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்(2)
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை (2)
சுயமென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் சாக
தேவா அருள் செய்குவீர் (2) –
கல்வாரியின்
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்(2)
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை (2)
உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஓசன்னா -4
மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஓசன்னா -4
அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஓசன்னா -4

You might also like