Professional Documents
Culture Documents
1 கொரிந்தியர் problems
1 கொரிந்தியர் problems
மையக்கருத்து
கொரிந்து சபையில் காணப்பட்ட ஒரு சில பிரச்சனைகளையும், அந்தச் சபையைக்
குறித்த நிலைமையையும் அச்சபையினர் பவுலுக்கு அறிவித்தார்கள். (1 கொரி 1:11, 1 கொரி
5:1, 1 கொரி 11:18, 1 கொரி 15:12).இந்தக் காரியங்களுக்குப் பதில் கூறும் விதமாக கிறிஸ்தவ
ஜீவியமும், கிறிஸ்தவ நடத்தையும் பற்றி கடிந்து ஆலோசனை கூறும் பவுல் இந்த
நிருபங்களை கொரிந்து சபைக்கு எழுதுகிறார்.
கொரிந்து சபை
கி.பி.49 ன் பிற்பகுதியில் பவுல் தனது 2 ஆம் பயணத்தில் ஆசியாவின் சபைகளை
பார்வையிட்ட பின்னர் துரோவா, பிலிப்பு, தெசலோனிக்கே, ஏதேன்ஸ், பெராயா வழியாக 50 ல்
கொரிந்து வந்து 18 மாதங்கள் ஊழியம் செய்து சபையை நிறுவினார் (அப் 18:1-18). பவுல்
தனது வழக்கப்படி யூதர்களை நாடினார் (ரோ 1:16) ஆனால், மற்ற இடங்கள் போலவே
ஏளனம் செய்தனர். சுவிசேஷத்தை ஏற்க மறத்து எதிர்த்தனர். எனவே புறஜாதியினரை நாடி
சென்றார் அவர்கள் ஆவலோடு ஏற்றுக் கொண்டனர் (அப் 18:6).
கொரிந்து பட்டணத்தைச் சுற்றிலும் ஏராளமான வணிகஸ்தலங்கள் இருந்தன. அதிக
வியாபாரம் நடைபெற்றது. பொருளாதாரத்தில் சிறந்து விளங்கிற்று. ஐசுவரியம்
பெருகியிருந்ததினால் பாவப்பழக்க வழக்கங்கள் இங்கு பெருகியிருந்தது. இந்தப்
பட்டணத்தில் அப்போஸ்தலர் பவுல் ஒரு சபையை ஸ்தாபித்தார். புறஜாதியாரில் அநேகர்
இந்தச் சபையில் விசுவாசிகளாக இருந்தார்கள்.
கிறிஸ்பு என்பவர் ஜெபலயத்திற்குத் தலைவர். இவர் கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருந்தார். “”ஜெபஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு
என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான்.
கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம்
பெற்றார்கள்’’ (அப் 18:8).
நிருபத்தின் பகுப்பாய்வு
இந்த நிருபத்தின் ஆரம்பத்தில் கொரிந்துவிலுள்ள விசுவாசிகளுக்கு வாழ்த்துதல்
சொல்லுகிறார். அதன்பின்பு அவர்களிடத்தில் காணப்படுகிற குழப்பங்களையும்,
ஒழுங்கீனங்களையும் அவர்களுக்கு விளக்கமாகச் சொல்லுகிறார். அதனிமித்தமாக
அவர்களைக் கடிந்துகொள்கிறார். அவர்கள் மத்தியில் மனத்தாழ்மையும் உண்மையான
அன்பும் காணப்படவேண்டுமென்று அவர்களுக்கு ஆலோசனை சொல்லுகிறார்.
XI. உயிர்த்தெழுதல்கள்
அ. சுவிசேஷத்தின் சுருக்கம் (15: 1-11)
1. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து பவுலின் பிரசங்கம் (15:1-8)
2. ஊழியத்தில் பவுலின் தாழ்மை (15:9-11)
ஆ. வருங்கால உயிர்த்தெழுதல் (15: 12-34)
3. கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம் (15:12-19)
4. கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலின் நிச்சயம் (15:20-22)
5. உயிர்த்தெழுதலின் வரிசை (15:23)
6. உலகத்தின் முடிவு (15:24-28)
7. மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் (15:29)
8. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால் பாடுகளினால் என்ன பிரயோஜனம் (15:30-32)
9. பாவம் செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக் கொண்டு
தெளிந்தவர்களாயிருங்கள் (15:33-34)
இ. உயிர்த்தெழவிருக்கும் சரீரத்தின் தன்மைகள் (15: 35-49)
10. மரித்தோர் எழுந்திருக்கும் விதம் (15:35-38)
11. உயிர்த்தெழுந்த சரீரங்களின் நிலைமை (15:39-44)
12. உயிர்த்தெழுதலின் அவசியம் (15:45-49)
ஈ. உயிர்த்தெழுதலும் மறுரூபமாகுதலும் நடைபெறும் வேகம் (15: 50-58)
13. உயிர்த்தெழுதலின் வேளையும் விதமும் (15:50-57)
14. கர்த்தருக்குள் நாம் படுகிற பிரயாசம் விருதாவாயிராது (15:58)
உ. தர்மப்பணம் (16:1-4)
15. பரிசுத்தவான்களுக்காக சேர்க்கப்படும் தர்மப்பணம் (16:1-4)
கொ ரி ந் தி ய ரு க் கு எ ழு த ப் ப ட் ட இ ர ண் டா ம் க டி த த் தி ல்
தொ கு க க் க ப் ப ட் ட கா ரி ய ங் க ளு ம் ஆ லோ ச னை க ளு ம்
**************************************************************************************************************