You are on page 1of 6

“ ஜோன்! ஜோனி!

, ” என்று ஒருமுறைக்குப் பலமுறை ரகு தன் செல்லப்


பிராணியான நாய்க்குட்டியை அழைத்தான்.

ஓடி வந்த நாய்க்குட்டியை அணைத்து முத்தமிட்டான். தன் நாயிடம்


விளையாடிக் கொண்டே இரண்டு வாரத்திற்கு முன்பு நடந்ததை
நினைக்கலானான். இரவு நிலாவின்

வெளிச்சம் கிராமத்துக்கே ஒளி தந்தது. ரவியும் மாலனும் ஆழ்ந்த


தூக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

“ வவ்! வவ்வவ்! ,” என்று இரு மணி நேரம் கத்திக் கொண்டிருந்த


நாய்க்குட்டியின் சத்தம் ரவியின் தூகத்தையும் மாலனின் தூக்கத்தையும்
கெடுத்தது. திடுக்கிட்டு எழுந்த இருவரும்,

“ நாளை இரவுக்குள் இதை ஒரு வழி செய்திடனும், ” என்று


திட்டமிட்டனர்.

எழுந்து காலைக் கடன்களை முடிந்த ரவியும் மாலனும் முதல்


வேளையாக அத்தெருவில் இருந்த நாய்க்குட்டிக்கு உணவை
கிராமத்திலுள்ள கிணறுவரை போட்டுக் கொண்டே சென்றனர். உணவின்
நறுமணத்தில் ஏமார்ந்த நாய்க்குட்டி உணவைச் சாப்பிட்டுக்கொண்டே
கிணற்றை அடைந்தது.

இதுதான் சமயம் என்று எண்ணிய இருவரும் ‘லபக்’ என்று பிடித்தனர்.


தங்களின் வலையின் மாட்டிய நாய்க்குட்டியைப் பார்த்துச் சிரித்தனர்.
‘தொப்’ என்ற ஓசை. நாய்க்குட்டி நீச்சல் தெரியாமல் தத்தளித்துக்
கொண்டிருந்தது. அவர்களோ, “ இன்றோடு தொல்லை ஒழிந்தது,”
என்றனர்.

அப்பக்கமாக வந்த ரகுக்கு சத்தம் செவியில் எட்டியது. “ என்ன சத்தம் ”


என்று மெல்ல சிந்தித்துக் கொண்டே சத்தம் நோக்கிய இடத்திற்கு நடை
போட்டான். ரவியோ, “ரகு எதற்கு இங்கே வருகின்றான்?,” என்று
மாலனிடம் கேள்வி கேட்டான். திரும்பிப் பார்த்து, “ ஐயோ!
பார்க்கிறானே,” என்றுமாலனிடம் பதற்றத்தோடுகூறினான். அருகில்
ஒழிந்தவாறே பார்வையிட்டான் மாலன்.

“குளிருதா! இரு உன்னை வெளியே எடுக்கிறேன்.” என்று கூறியவன்


வாலியை எடுத்து அக்கிணற்றுக்குள் நுழைத்துக் காப்பாற்றினான்.

தனது நன்றியைக் கூற அந்நாய்க்குட்டி ரகுவின் கையை நக்கியது.

வழிக்காட்டிக் கட்டுரை

தாள் 2 பிரிவு பி-யில் கொடுக்கப்படும் படங்களை எப்படி


வகைப்படுத்தலாம்?
அ. தனிப்படம்
இ. தொடர்ப்படம்
இ. முடிவை அனுமானிக்கும் படம்
 

தனிப்படம்

1. காட்சிகளைக் கிரகிக்கும் ஆற்றல்


2. தொடக்கம்
3. கதைக்களம்
4. கதைப்பாத்திரம் – முதன்மை கதைப்பாத்திரம்/
துணைக்கதைப்பாத்திரம்
5. வர்ணனை
6. கதைக்கான திருப்பம்
தொடர்ப்படம்

1. ஒவ்வொரு படத்திலும் உள்ள காட்சிகளைக் கிரகித்தல்


2. கதையோட்டத்தைப் புரிந்துகொள்ளுதல்
3. தொடக்கம் – முதல் படத்தினைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்
4. கதைக்களம்
5. கதைப்பாத்திரம்- படங்களிலுள்ள அனைத்துக் கதைப்பாத்திரங்களும்
அதன் பயன்பாடும்
6. வர்ணனை
7. கதைக்கான முடிவு – கடைசி படமாக இருக்கும்
 

முடிவை அனுமானிக்கும் படம்

1. கதையோட்டத்தை முழுமையாகக் கிரகித்துப் புரிந்துகொள்ளல்


2. கதைக்கான அனைத்து சம்பவங்களையும் கூர்மையாகக் கவனித்தல்
3. முடிவை ஏற்புடையதாக, அதே சமயம் வித்தியாசமாக
அனுமானித்தல்

ஒரு நல்ல வழிகாட்டிக் கட்டுரைக்கு இருக்க வேண்டிய கூறுகள்

அ. முதலில் ஒரு கதை எழுத வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.


ஒரு கதைக்கு இருக்க வேண்டிய கூறுகள் அவற்றில் இருக்க வேண்டும்.

1. தொடக்கம் -திருப்பம் – முடிவு இருக்க வேண்டும்.


2. கதை என்பது ஒரு முக்கிய கதாபாத்திரத்தைச் சுற்றி அமைய வேண்டும்.
3. கதையில் எதிர்மறைக் கதாபாத்திரம்/கதாபாத்திரங்கள் அமைய
வேண்டும்.
4. கதாநாயகத் தன்மை, அவன்/அவள் எதிர்நோக்கும் சவால்கள்
குறிக்கப்பட வேண்டும்.
5. முடிவு என்பது எல்லோரும் எதிர்பார்ப்பதைப் போன்று அமையாமல்
இருப்பது கதைக்கு மேலும் மெருகூட்டும்.
சரி, ஒரு மாதிரி கதையைப் பார்ப்போம்.

கீ ழ்க்காணும் படத்திற்கு ஏற்ப ஒரு கதை எழுதுக.

அ. படத்தின் கருப்பொருள் எது என்பதை அடையாளம் காண்க.


-ஒரு கடத்தல் சம்பவம்.. குழந்தைகளைக் கடத்தல்… காரணம்
கொள்ளைச்சம்பவத்தைப் பார்த்து விட்டார்கள்.
ஆ. முதன்மைக் கதாபாத்திரம்
- மரத்தின் பின்னால் ஒளிந்திருப்பவன்… தன் நண்பர்களைக் காப்பாற்ற
அவன் எடுத்துக் கொள்ளும் முயற்சி
- எதிர்மறைக் கதாபாத்திரம்
- கடத்தல்காரர்கள்
இ. திருப்பம்
- கடத்தல்காரர்கள் பார்த்து விட்டார்களா …… இல்லை
பார்க்கவில்லையா… எவ்வாறு காப்பாற்றப்படுகிறார்கள்….
ஈ. முடிவு
- முடிவில் நன்னெறிக் கூறுகளைப் புகுத்த முயற்சிக்க வேண்டாம்.

தொடக்கம்
-கட்டுரை வகையில் அமைவதைத் தவிர்க்க வேண்டும்.
  மாதிரி :
-ஓர் ஊரில் நான்கு நண்பர்கள் வாழ்ந்து வந்தார்கள்….
-முகிலன் மிகவும் தைரியசாலி.

மாதிரித் தொடக்கம் :
வழக்கத்தைவிட அன்று புறப்பாட நடவடிக்கைகள் தாமதமாக முடிந்தன.
ஆசிரியரிடம் பேச வேண்டியிருந்ததால், தன் நண்பர்களை முதலில்
அனுப்பி விட்டு கபிலன் பிறகு வருவதாக கூறினான்.

You might also like