முதலையைக் காப்பாற்றுகிறது. நன்றி மறந்த முதலை எருமையின் காலைப் பிடித்துக்கொண்டு தனக்கு இரையாக்க முயற்சிக்கிறது. அதிர்ஷ்டவசமாக சருகுமான் அதை கவனிக்கிறது. எருமை மரக்கட்டையைத் தூக்கி முதலையைக் காப்பாற்றியதாக சொல்வதை தன்னால் நம்பமுடியவில்லை என அவநம்பிக்கையாக சொல்கிறது சருகுமான். மீண்டும் செய்து காட்டும்படி சொல்கிறது. எருமை மீண்டும் மரக்கட்டையை தூக்கிக்காட்ட அதன் காலை தன் வாயிலிருந்து விடுவிக்கிறது முதலை.எருமை மீண்டும் மரக்கட்டையை தூக்கி முதலையின் மேல் போட்டுவிடும்படி சாங் கன்ச்சில் செய்கைகாட்டுகிறது.சாங் கன்ச்சில் சொன்னதுபோலவே செய்து எருமை தன்னை காப்பாற்றிக் கொள்கிறது.