Professional Documents
Culture Documents
நம் மலேசிய திருநாடு பிற நாட்டைக் காட்டிலும் தனி சிறப்பு கொண்ட நாடாகும்.
ஏனெனில், நம் நாட்டில் மட்டுமே பல்லின மக்கள் வெவ்வேறு கலை
கலாசாரங்களைக் கொண்டிருப்பினும் பிணக்கம் இன்றி இணக்கமாக வாழ்கிறோம்.
பல கலாசாரமும் பண்பாடும் நம் நாட்டில் மட்டுமே காண முடியும். “இன்றிருக்கும்
உயிரிகள் யாவும் எங்கள் தாயின் பிள்ளையே”. இது நம் தாய் நாடு என்பதால்
இந்நாட்டில் வாழும் பிற இனத்தவர்களும் நம் உடன்பிறப்புகளைப்
போன்றவர்களே என்பது நாம் உணர்ந்ததே. ‘ஒற்றுமையில்லாக் குடும்பம்
ஒருமிக்கக் கெடும்’ என்ற பழமொழியானது குடும்பத்திற்கு மட்டுமல்லாது
நாட்டிற்கும் பொருந்தும் என்பதால் வேற்றுமைகளைக் களைந்து பிற
இனத்தவருடன் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையுடனும் வாழ வேண்டும் என்பது அறிந்ததே. ‘ஒன்று பட்டால்
உண்டு வாழ்வு’ என்பதில் எத்துணைப் பெரிய உண்மை பொதிந்துள்ளது என்பதை
உணர்வு பூர்வமாக உணர்வோமே.
இயற்கை அன்னை நமக்கு வழங்கிய மலை, காடு, ஆறு, கடல் போன்றவை நம்மை
வாழ வைக்கின்றன. நம் திருநாடு பல இயற்கை வளங்களைக் கொண்டு எழில்
மிக்க நாடாகத் திகழ்கின்றது. நம் நாடு நாளுக்கு நாள் தொழிற்துறை,
விவசாயத்துறை, கல்வித்துறை என பல துறைகளின் உறுதுணையால் துரித
வளர்ச்சியடைந்து வருகின்றது. இவ்வாறான துறைகளின் வளர்ச்சி இந்நாட்டு
குடிமகன் மட்டுமல்லாது அந்நியர்களையும் தொழிலுக்காக இங்கு ஈர்க்கின்றது.
அந்நியர்களின் வருகையால் இரு நாடுகளுக்கிடையே பண பரிமாற்றம்
ஏற்படுகிறது. பணப் பரிமாற்றத்தால் நமது நாட்டு பொருளாதாரம்
வளர்ச்சியடைகின்றது.
- யஷ்வினா ஜெயகாந்தன்
5 Diamond 2021