Professional Documents
Culture Documents
Kalvi Oru Sol Katturai
Kalvi Oru Sol Katturai
இறைவன் படைப்பில் ஒரு சிறு அங்கமாக விளங்குவது மானிட இனம். இம்மானிட இனம் சிறப்புற வாழக் கல்வி
ஓர் அற்புத சாதனமாகத் திகழ்கிறது. கல்வித்தாகம் ஒவ்வொருவரின் உயிரோட்டத்திலும் ஊற்றெடுக்க வேண்டிய
ஒன்றாகும். இம்மாபெரும் கல்விச் செல்வமானது அனைவரது வாழ்விற்கும் விடிவெள்ளியாக அமைந்து வருகின்றது
என்றால் மிகையாகாது. கண்களுக்கு நிகராகப் போற்றப்படும் கல்வியைக் கற்பதன்வழி, ஒரு மனிதன் தன் வாழ்வைச்
சீர்படுத்திக் கொண்டு செம்மையாக வாழலாம்.
உயிர் உடலில் இருந்து பிரிந்தாலும் ஒரு மானிடன் வாழ்ந்த வாழ்வை இவ்வுலகம் தொடர்ந்து பேசிக் கொண்டே
இருக்கும். அப்பேச்சு, தூற்றும் வகையில் அமைவதும் போற்றும் வகையில் அமைவதும் ஒருவர் கடைப்பிடித்த
வாழ்க்கை நெறியைப் பொறுத்துள்ளது. இவ்வாழ்க்கை நெறி கல்வியின் மூலமே பெறப்படுகிறது. கல்வியானது
பண்பு நிறைந்த குமுகாயத்தை உருவாக்கும் வல்லமையைக் கொண்டது. கல்விவழி அன்பு, பணிவு, கருணை
போன்ற உயர்ந்த குணங்கள் ஒருவரது ஆழ்மனதில் கலந்துவிடும். அதோடு கல்வி கற்ற ஒரு மானிடனால் நன்மை
தீமைகளைப் பகுத்தறிந்து நடக்க இயலும். இதனால், கல்விமானாகத் திகழும் ஒவ்வொரு மனிதனும் என்றும்
மாசற்றவர்களாகத் திகழ்வர் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
கல்வி என்னும் அமுதச் சுரபியைப் பெறும் ஒவ்வொரு மானிடனும் தனது பொது அறிவை வளர்த்துக் கொள்ள
இயலும் . கல்வி கற்கும் பொழுது நாம் அதன்வழி பல தகவல்களை அறிகின்றோம் . இத்தரணி தோன்றியது முதல்
மனிதன் வளர்ச்சி அடைந்த காலம் வரை உள்ள தகவல்களை நாம் கல்வியின் வழி கற்றறியலாம் .
என்னும் குறளுக்கேற்ப கல்வி கற்கக் கற்க நமது அறிவு முதிர்ச்சி அடைந்து நாம் ஒரு சிறந்த
கல்வி ஒரு சமுத்திரத்தைக் காட்டிலும் பெரியதாகும் . வாழ்க்கை என்ற சிகரத்தை அடைய கல்வி என்ற
தூண்டுகோள் அவசியமாகும் . கல்வி கற்காதவன் உலக மக்களால் தற்குறி என்று கூறப்படுவான் . ஆகவே ,
முழுமையான கல்வி கற்றுச் சிறப்பான வாழ்வின் உன்னத நிலையை அடைவோம் .