Professional Documents
Culture Documents
வாரம் 2 - தனிகற்கை 3
வாரம் 2 - தனிகற்கை 3
தோழி - உம்முடைய காத்திருப்பு நிச்சயம் வீண் போகாது. விரைவில் தலைவி உன்னிடம் வந்து சேர
இறைவன் துணை புரியட்டும்.
நட்பு
சேர, சோழ, பாண்டியன்: தென்னாட்டை நாங்களே ஆழ்வோம். யார் அந்த பாரி? எங்களிடம் மோதி
வென்றுவிடுவானா? அவனை ஒரு கை பார்த்துவிடுகிறோம்.
கபிலர்: பாரி உங்களைப் போல் இயல்பான மன்னனல்ல. அவர் வள்ளல். மக்களின் மனதில்
நிறைந்துள்ளவர். அவரை நீங்கள் மூவர் மட்டுமல்ல. உலகில் எவர் வந்தாலும் வெல்ல முடியாது.
ஏனெனில் அவரிடம் இருப்பதே அவர் மக்களும் அவர் குடியிருக்கும் இந்த பரம்பு மலையும் தான்.
அவரிடம் இருந்த முன்னூறு ஊர்களையும் மக்களுக்குக் கொடுத்து விட்டார்.
சேர, சோழ, பாண்டியன் சூழ்ச்சி செய்து தன்னைக் கொல்ல போவதை பாரி உணர்ந்தார்.
பாரி: கபிலரே… என் இறுதிக்காலம் நெருங்கி விட்டதை நான் அறிவேன். இதோ என் உயிருக்கு
நிகரான செல்வகுமாரிகளான அங்கவை சங்கவையை என் உயிர் போன பிறகு நீ வளர்த்து ஆளாக்கு.
அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருவது என் உயிர் நண்பரான உங்கள்
பொறுப்பாகும் கபிலரே.